tag:blogger.com,1999:blog-30441113.post9207458968689407157..comments2023-10-29T15:39:40.815+01:00Comments on ஜனநாயகம்: தேவதாசன் இனவாதப் பொது பல சேன ஞானசாகரா "தேரோ"வுடன்... P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-30441113.post-82888144545746658472014-06-22T16:18:10.018+02:002014-06-22T16:18:10.018+02:00இரவி,நீங்கள் சொல்வதெல்லாஞ்சரி.ஆனால் ,இக் கருத்தும்...இரவி,நீங்கள் சொல்வதெல்லாஞ்சரி.ஆனால் ,இக் கருத்தும் -கவனிப்பும் இலங்கைத் தலித் மேம்பாட்டு முன்னிணியினருக்குப் பெரிதும் பொருந்திவிட முடியாது.வேண்டுமானால் , சோபாசக்திக்குப் பொருத்திவிடலாம்.<br />ஆனால் ,தேவதாசனை முன் தள்ளி நகர்த்தப்படும் தலித்தரசியலானது மிகவும் வியூகத்துக்குட்பட்டதென்பதில் நான் ஒருபோதும் சறுக்கமாட்டேன்.<br /><br />இதுள் ,தேவதாசனைப் பலிக்கடாவாக்கியவர்களது பெரும் பட்டியலே என்னிடம் இருக்கிறது.இவர்கள் ,இலங்கை அரசின் லொபிக் குழுக்களாகத் தம்மை உயர்த்திக்கொண்ட சந்தர்ப்பம் தற்செயலானதல்ல.அதற்கான தெளிவான வரலாற்று அரசியல் -அபிலாசைகளுண்டு.உங்களது கருத்தோடு இதுள் மட்டும் ஒத்துப் போக முடியவில்லை இரவி.P.V.Sri Ranganhttps://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30441113.post-21472304457606341962014-06-22T10:30:02.322+02:002014-06-22T10:30:02.322+02:00முஸ்லிம் மக்கள் மீதான இன்றைய பௌத்த பேரினவாத தாக்கு...முஸ்லிம் மக்கள் மீதான இன்றைய பௌத்த பேரினவாத தாக்குதலுக்கு தமிழர்களை முடிஞ்சுகாட்டும் வேலையில் சிலர் முகநூல் வழியெடுப்பதை அவதானித்தேன். சிறுபான்மையினங்களை தமக்கிடையே மோதவைக்கும் இலங்கை அரசின் சூழ்ச்சியை இவர்கள் இலகுபடுத்த முனைவது விசனம் மிக்கது. குறித்த புகைப்படம் இவ்வாறாக அணுகப்படும் நிலை இருந்தது. அதனால் வரும் பாதிப்பு தமிழ், முஸ்லிம் மக்கள் சார்ந்தது என்ற அளவில் அந்தப் படம் பற்றி எனது குறிப்பை எழுதினேன். அதில் எந்த நியாயப்படுத்தலும் இல்லை.<br /><br />அந்தப் படத்திலிருந்த தேவதாசன், யோகரணட்ணம், அசுரா பற்றிய குறிப்புத்தான் அது. இது ஞானம் சம்பந்தப்பட்டதல்ல. ஞானம் திட்டமிட்டே வரையறுத்துச் செயற்பட்ட அரசியலுக்கு இவர்களது எதிர்மறுப்பு கலக அரசியலில் தாராளமாகவே வெளி இருக்கிறது. அவர்கள் தம்மை கவனப்படுத்துகிற அரசியல் தடாலடிகளுக்கு வெள்ளாள எதிர்ப்பு, தமிழ்த் தேசியத்துக்கு எதிராக நிற்பது, போர்நிறுத்தத்துக்கு எதிராக நிற்பது, சுயநிர்ணய உரிமைக்கு எதிராக நிற்பது, இலங்கை இராணுவத்துக்கு சான்றிதழ் வழங்குவது, ராசபக்சவுக்கு நன்றி தெரிவிப்பது... என மறுத்தோடிக் காட்டும் வேலையில் ஈடுபட்டனர். அவர்கள் மூன்று கால் முயல்களையே வளர்த்தார்கள்.<br /><br />இதை நான் அப்பாவித்தனம் எனவோ, வஞ்சகமற்றுச் செயற்பட்டார்கள் எனவோ வரையறுக்க வரவில்லை. இது மோசமான அரசியல் தவறு. ஆனால் அடிப்படையில் பொதுபல சேனா ஞானசாரருடன் முஸ்லிம் மக்களுக்கு எதிரான சதிவேலையில் ஈடுபட்டார்களா என கண்டுபிடிக்கத் துடிக்கும் அவதிப்பாடுகளை நான் மறுக்கிறேன். (அதையே கோமாளித்தனமானது எனக் குறிப்பிட்டேன்.) அதனால் அடிப்படையில் அவர்கள் பற்றிய எனது மதிப்பீட்டை எழுதியிருக்கிறேன். அவர்களுடனான அரசியல் முரண்களை நான் இந்த மதிப்பீடுகளை மறைத்துக்கொண்டு பேசத் தயாரில்லை. <br /><br />சிங்கள பேரினவாதம், பௌத்த மேலாதிக்கம், இனவழிப்பு என்பதையெல்லாம் அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. புலிகளின் கீழணியில் இருந்தவர்களைக்கூட போராளிகள், பெண்போராளிகள் என சுட்ட அவர்களுக்கு மிக நீண்ட காலம் பிடித்தது. புலியை கடாசுமளவிற்கு இந்த (புலி) எதிர்ப்பயங்கரவாதத்தை உருவாக்கிய அரச பயங்கரவாதம் பற்றி அவர்கள் பேசியது இல்லை. இதனால் இவர்கள் அரச ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகினார்கள். <br /><br />அந்தக் குற்றச்சாட்டை அல்லது விமர்சனத்தை அவர்கள் தமது நடைமுறை மூலமோ எழுத்து ரீதியாகத்தன்னும் எதிர்கொள்வதில்லை. எதையெடுத்தாலும் அவதூறு என்ற ஒற்றைச் சொல்லால் எதிர்கொள்வதே அவர்களது பாரம்பரியம். அரச பயங்கரவாதம் சார்ந்த மிக வெளிப்படையான கருத்துகள் அவர்களிடமிருந்து வந்ததில்லை. அவர்களிடமிருக்கும் கருத்தியல் ஆயுதம் வெள்ளாளர், யாழ் மேலாதிக்கவாதி, யாழ்ப்பாணத்தான், தமிழ்த் தேசியவாதி என்பவைதான். எடுத்ததுக்கெல்லாம் இந்த பொல்லோடு வருவது அவர்களது வழமை என்பதால் இந்தத் தாக்குதலிலிருந்து தப்ப அவர்களுடனான உரையாடலுக்கான வாசல்களால் நடந்துபோவதைக்கூட பலர் தவிர்த்தனர். இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடத்துவதை எதிர்த்து வைக்கப்பட்ட அரசியல் காரணங்களை அரசியல் வாதங்களினூடு எதிர்கொள்வதற்குப் பதிலாக, அதை எதிர்ப்பவர்கள் வெள்ளாளர்கள், தமிழ்த் தேசியவாதிகள் என பொல்லோடுதான் ஓடிவந்தார்கள்.<br /><br />அரசை ஆதரிக்கும் (ஒத்தோடும்) அதில் பங்குகொள்ளும் ஞானத்தின் அரசியலுக்கும் இவர்களது அரசியல் பலவீனங்களுக்குள் இடம் இருக்கிறது. அரசை எதிர்க்கும் சோபாசக்தியின் அரசியலுக்கும் அதற்குள் இடம் இருக்கிறது. இந்த முரண்நிலை மோதலாகவன்றி விமர்சனங்களாகவன்றி, சமரசமாகவும் கேலிபேசி அரசியல் முரண்பாடுகளை கடந்து செல்வதாகவும், கூட்டாக தண்ணியடிச்சு அரசியல் சொதப்பலை செய்வதாகவும் காலம் போக்கிடும் ஒரு சந்திப்பு மையமாக இவர்களின் வெளி நகர்கிறது. இதை நான் அப்பாவித்தனமாக குறிப்பிடவில்லை. அரசியல் குறைபாடாகவே வரையறுக்கிறேன். <br /><br />யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் மீளக் குடியேறுவதில் அரசைப் பார்த்து விரல் நீட்டுவதற்குப் பதிலாக, தமிழ் மக்களின் மனநிலையை குற்றஞ்சாட்டி அறிக்கை விட்டு கையெழுத்துகளை விதைத்தார்கள். அவை இன்று முஸ்லிம் மக்கள் மீது இறங்கும் பேரினவாத இடியை எதிர்த்து இதுவரை முளைக்கவேயில்லை. அவர்களின் அரசியல் வெளியின் சனநாயகச் செழிப்பு அவ்வாறுதான் உள்ளது. அவர்கள் அதை கேள்விகேட்டாக வேண்டும் என்பதை இந்த புகைப்பட விவகாரம் ஒரு செய்தியாக அவர்களிடத்தில் எடுத்துச் சென்றிருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம். <br /><br />- raviAnonymousnoreply@blogger.com