Freitag, November 29, 2013

ஜெயபாலன் கைது-விடுதலையின் பின்னான புலத்து...

ஜெயபாலன் கைது-விடுதலையின் பின்னான புலத்து அரசியல்-சோபாசக்தியையும் தாண்டிச் சில குறிப்புகள்!


ன்று, தேவையற்ற தேவையெனப் பேசப்படும் ஜெயபாலனது இலங்கை விஜயமும், கைதும் பரவலாகப் பகரப்பட்ட இலங்கை அரச லொபிகளது நையாண்டிச் சேட்டையைத்தாண்டிப் பலருள் இலங்கை அரச "ஜனநாயகம்"குறித்தும், அதைப் பரவாலாகச் சிலாகித்துப் பேசும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கை அரச லொபிகள்-சேவகர்கள்ஆகிய "மாற்றுக் கருத்தாளர்கள்-புரட்சியாளர்கள்" தம் மனிதவிரோதப் பக்கங்களது குரலை மிக நேர்த்தியாக அம்பலப்படுத்தியவொரு செயலாக ஜெயபாலனது கைதின் வழியான இலங்கை அரச நடாத்தை மிகத் தெளிவாகவொரு செய்தியைத் தந்திருந்தது.

அது,பரவலாகத் தனிபட்ட நபர்களது வாழ்வில் எத்தகையவொரு அதிகாரத்தைச் செய்யும் நிலையில் இலங்கை அரச ஜந்திரமும்,கட்சி அரசியலும் செயற்படுகிறதென்பதையும், அதை நேசிக்கும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கை லொபிகளது நடாத்தையும் பரவலாக அம்பலமானது.சாதரணப் போராளிகள் விசயத்தில் தலையீடு செய்யும் குறுக்கு வழித் தமிழ் மாபியாக்களது அரசியல் நடாத்தையானது பல்லாயிரக்கணக்கான போராளிகளை இலங்கை இராணுவம் கொலை செய்யும் ஊக்கத்தைக் கோரியது முள்ளிவாய்க்கால் வரலாற்றில்!.

அதே போன்று,இன்றுவரைச் சிறையில் வாடும் இளைஞர்களது தலை விதிக்கு யார் யாரெல்லாம் காரணமென்பதையும் ஜெயபாலனது கைதின்வழி அறியத் தக்கதாகவே இருக்கிறது.

ஒரு கெடுதியான காலத்துக்குள் தமிழ்ச் சமூகம் மூழ்கியுள்ளது.

இந்தச் சமுதாயமானது எந்தவொரு தர்க்க நியாயத்துக்கும் இடம் கொடுக்க முடியாது தடுக்கப்பட்ட சிந்தனையாலும்-அரசியல் வாழ்வாலும்தன்னைத் தக்க வைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது.அதன்,ஜீவ மரணப் போராட்டத்தைத் தமது எஜமானர்களுக்கொப்பவே தகவமைக்கும் தமிழ் அரசியல்-ஆயுத மாபியாக்கள் அந்த மக்களது குரலாக ஒலிக்கும் எவரையும் விட்டு வைக்காது மேய்வதற்குத் தயாராகும் நடாத்தையாகவே ஜெயபாலன் கைது இன்னொரு செய்தியையும் குறித்து வைத்திருக்கிறது.




இதுள்,ஜெயபாலன் கைதைப் பரிகாசித்து நையாண்டி புரிந்தவர்களான  இந்த இலங்கை அரச லொபிகள்தாம் கிழக்குக்கும்-வடக்குக்கும் வசந்தம் வரவழைக்க மகிந்தாவுக்குப் பின்னால் கூஜாத் தூக்கி அலைவதைப் புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசங்களில் இப்போதெல்லாம் பரவலாக அறியத் தக்கதாகவே இருக்கிறது.

இந்த இலங்கை அரச லொபிகளது எந்த நகர்வும் அறிவார்ந்த மக்கள் பிரிவால் அங்கீகரிக்க முடியாதவொரு இடர் நிறைந்த,முட்டுக்கட்டையிடும் செயலூக்கமாகத் தொடர்கிறது.பாசிச அரசின் கொடிய அடக்குமறையை மிகவும் கீழ் நிலைக்குத் தள்ளிவிட்டுத் தனி நபர்களைக் கொடியவர்களாகவும்-கோமாளிகளாகவும் வர்ணிக்கும் அரசியலை இவர்களுக்கு வழிவகுத்துக்கொடுத்த சூழ்நிலைதாம் என்ன?

இன்று, பொய்மையையும்,கயமையையும் கலந்து அரசியல் செய்யும் ஆயுதக் குழுக்களும்,இலங்கை இனவாத அரசும் அதற்குத்துணையாகியுள்ள புலத்து "மாற்று அரசியல்"மாபியாக் குழுக்களும்  அவைகளின் அரசியல் எதிர்பார்ப்பும் மக்களை,மக்கள் நலனைப் புறந்தள்ளிய நோக்கு நிலையோடு "அரசியல்"செய்கின்றன.

இந்த மக்கள் நலன் மறுத்த குழுக்கள் தமக்குள் முட்டிமோதும் "அரசியல் இலாபத்துக்குள்"மூழ்கிப் பதவி ஆசையால் வெறிகொண்ட கொலைகளைச் செய்தவர்கள் அன்று.இன்றும், அதே கொலைவெறியும்,குறுக்கு வழிப் பலாத்தகார அரசியலும் தனிநபர்கள்மீதான அடக்குமுறையை இவர்களிடம் கோரிக்கொள்வதால் இவர்களது லொபிகளான புலத்து மாயாக்களது மன வக்கிரமே ஜெயபாலன்மீதான நையாண்டியாக சூழ்ச்சிமிக்க பரப்புரையானது.இதை, அப்வப்போது ஆமோதித்த " நபர்கள்-புரட்சிகரப் படைப்பாளிகளென" க் கூறுபவர்கள் செய்த அரசியலானது அப்பட்டமான அயோக்கியத்தனமானது.

கண்ணெதிரகண்டால் கோப்பையை எடுத்து உணவு போடும் இந்தக் கூட்டம், காணதிருக்கும்போது முதுகுக்குப் பின்னால் கத்தியைக் குறிவைத்து வீசிக்கொண்டிருக்கிறது.இது,ஜெயபாலனது கைதின்பின் நமது "மாற்றுக் கருத்து மனிதாபிமானிகள் " செய்த நையாண்டி அரசியலிலும்,இலங்கை அரசுசார் கருத்தூன்றல்களிலுமாக நாம் அனைவரும் உணரத்தக்கவொரு வெளியைத் தொடர்ந்து இனங்காட்டியது.இந்த வெளிக்குள் இயங்குபவர்களைக் குறித்தே நாம் அச்சப்படவேண்டும்.இவர்கள்,நமக்குள்ளேயேதாம் நாமாக நட்பாடுகிறார்கள்-புரட்சி-விடுதலை பேசுகிறார்கள்.இலங்கை அரசின்"ஜனநாயகத்தை"க் குறித்துப் பரவலாகச் சிங்கள மக்களது அக நெறியுள்-மனோபாவத்துள் வைத்து விளக்கி அஃது,தமிழ்ச் சமூகத்தின் அராஜகப் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டவொரு உயர்ந்த பண்பாகப் பேசவும் -இயங்கவும் முனைகின்றனர்.

இவர்கள்,தமிழ் மக்கள் சமுதாயத்தைக் அராஜகவாத-ஜனநாயகப் பண்பறியாக் காட்டுமிராண்டிச் சமுதாயமாகக் காட்டி நிற்கின்றனர்!

தமிழ் மக்கள் மீதான சிங்கள அரச ஒடுக்குமுறையை,அதனால் மக்கள் பட்ட-படும் வலியை,வாழ்வுச் சிக்கலையெல்லாம் புறந்தள்ளும்  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தப் புலம் பெயர்  இலங்கையரசின் லொபிகளால் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய முடியவில்லை.மாறாக, இவர்கள்,அரச-இயக்க வாதக் குழுவாதத்துள் இயங்கியபடி மக்களைக் கருவறுக்கு அரசியற் கருவூலத்தைத் தமது இலக்காகவே வரிந்துகொண்டனர்.இதை,அச்சொட்டாக முன்வைத்த சந்தர்ப்பத்தை கவிஞர் ஜெயபாலனது கைதின் பின்னே நாம் பரவலாகப் புரியும் தருணத்தை இவர்களே நையாண்டி எழுத்துக்களது வழி அராஜக அரசியலை மிக நேர்த்தியாக நகர்த்தினர்.இதைப் புரிய மறுக்கும் ஒவ்வொரு நபரும் இவர்களுக்குடந்தையாகவே இயங்குவதில் துணைபோகின்றார். சோபாசக்தியின் முக நூல் நிலைத் தகவலில் கைதாகி விடுதலையான ஜெயபாலனை நோக்கி "இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?" என நையாண்டிய பேசிய கருத்துப்படம்பிரசுரிமானது.இதைப் பரவலாக அனைவரும் பார்த்திருப்பார்கள்.அதன் அரசியல் என்னவாக இருக்கும்?

இத்தகைய அரசியலானது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கத் தயாராகிறது.ஒருவரது வாழும் உரிமையையே இது தட்டிப் பறிப்பதற்கெடுக்கும் முயற்சியல் நையாண்டித்தனமாகவுரையாடிக் கொண்டு முகதுக்கு நேரே நல்ல "தோழமை"முகமூடி தரித்து நிற்கிறது.

ஒடுக்கப்படும்-ஓடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக்காக- அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது.ஜெயபாலனது கைது குறித்துப் பேசப்பட்ட உரையாடல்கள் இலங்கையின் அரசியல்வறுமையை எடுத்துரைக்கிறது-நமது தோழமைசார்ந்த அக வயக் குறைப்பாட்டு அரசியலைத் தெட்டத் தெளிவாக்கியது.இது,ஒடுக்குமுறைக்கெதிராகக் குரல் கொடுக்காது ஒடுக்கு முறையாளர்களோடு சமரசமாகப் போவதன் அரசியலைப் பல தளத்தில் வைத்துரையாடியது.அங்கே,இயக்க-குழுவாத மாயையும் அதன் விசுவாசத்தின்மீதான தனிநபர்கள்-தலைவர்களது விருப்பின் பயன்வினைகளாக வலம் வந்தனர் புலம் பெயர் கருத்துக் கந்தசாமிகள்-லொபிகள்!

புலம் பெயர்ந்து வாழும் நமக்குள்-மாற்றுக் கருத்து மந்தைகளுக்குள்  எது நடந்தாலும் "தப்பித்தல்" சாத்தியமாகிறது. அல்லது ,ஏலவே "தீர்மானிக்கப்பட்ட"அனுமானங்களுக்காகச் சகிப்புத் தன்மையை(ஜால்றா)மனமுவந்து ஏற்றுக் கொள்கிறது.இது புத்திஜீவிகளிடம் மிகுதியாகக் காணக்கூடியது.ஜெயபாலன் கைது குறித்து கமுக்கமாகவிருந்த நமது "பேராசிரியர்கள்"படைப்பாளிகள் எனப் பெரும் பழைய நண்பர்கள் கூட்டம் புலத்தில் அம்பலப்பட்ட கையோடு அது,இப்போது முகத்துக்கு நேரே தோழமை வலியுரைக்கிறது.இதன் தொடரிற்றாம் சோபாசக்தியும் இணைவுறுவதாக நான்குறித்துரைக்கின்றேன்.

சமூகத்தில் இன்று நிகழும் "வன் கொடுமைகளை" இந்த ஸ்த்தானத்தில் இருக்கும் மனிதவுள்ளத்திடம் ஆப்பு வைத்தும் எடுத்துரைக்க முடியாது.இந்த வன்கொடுமை தவிர்க்க முடியாத "அத்துமீறிய"அறமாகப் பண்பாக எடுத்துரைக்கக் காத்திருக்கும் இந்த மனித மனம்.இலங்கை அரசின் வன் கொடுமைகளை நகைப்புக்கிடமானவொரு உரையாடலாக்கும் சூழலை வைத்தியக்கும் ஒரு கூட்டம் சொல்லும் "தோழமை"என்பது என்ன அர்த்தத்தோடு நமக்குள் இயக்கமுற முனைகிறது?

புலிகளது அராஜக அரசியலை ஒப்பிட்டு ஆளும் "மகிந்த அரசுக்கு- அது செய்யும் மக்கள் நல அபிவிருத்திக்காக -ஜனநாயகச் சூழலுக்காக" எதுவும் செய்யலாம் எனும் ஒரு "மொன்னைப் பேச்சு"அறிவுத்தளத்தைக் காவுகொண்ட பின் இந்தக் கோசங்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் அதிகார வர்க்கமானது தன்னைச் சமுதாயத்தின் அதீதமேய்ப்பானாக சமூகத்தின் உள்ளரங்குக்குள் எதுவிதத் தடையுமின்றி உட்பிரவேசிக்கின்றது.இத்தகைய வாசல் திறந்த பின் இது கட்டமைக்கும் அரசியலானது பாசிசத்தை நோக்கியதாகும். சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் அது சுருட்டி வைத்துக் கொள்கிறது.சமூகத்தின் மிக முக்கியமான மனித வளத்தையே அது தனது காலடியில் கிடத்தி வைக்கும்போது மற்றெல்லாம் இங்கே வெறும் செல்லாக் காசாகிறது.இதுவே,நமது "தோழர்கள்"தம்அன்றாட நடாத்தையில் வைத்துப் புரியத் தக்கது.

இந்தப்  புலத்துத் தாதாக்களுக்குமுன் எந்தப் பெரிய புரிதலும் ஈடு கொடுக்க முடியாது சேடம் இழுக்கிறது.அப்படியொரு நியாயமற்ற பண்பாக வளர்த்தெடுக்கப்பட்ட அவர்களது உரையாடல்கள் யாவும் இலங்கை அரசுக்கு-கட்சி அரசியலுக்கு லொபிகளாக மாற்றப்பட்ட குழுக்களது மலினப்பட்ட புனைவாக எடுக்கப்படாது.மாறாக, இது திட்டமிட்டவொரு அரசியல் பண்பாக நம்மெல்லோரது அகத்திலும் கட்டியமைக்கப்பட்ட கருத்தியல் போராட்டமாக முன்னெழுகிறது.

இதை ஒப்பேற்றுபவர்கள் வெறும் சாதாரண மனித நடவடிக்கையில் ஈடுபடவில்லை மாறாக, ஒரு இனத்தைச் சீரழிக்கும் "கிரிமனல்கள்" எனும் படி சொல்லலாம்.

அந்தளவுக்கு மக்களைத் தமக்கேற்ற முறைமையில் தயார்ப்படுத்தி அவர்களை உளவியல் ரீதியாகவும்,உடல் ரீதியாகவும் வருத்துவதை எந்தத் தளத்திலும் எவரும் நியாயமெனச் சொல்லமுடியாது.இது திட்மிட்ட சதி,மக்களைக் காவுகொள்ளும் மனிதவிரோதச் செயல் முறை.ஜெயபாலனது கைதுக்குப் பின்நாம் தெளிவாக இனங்கண்வுண்மையானது,  புலம் பெயர் இலங்கை அரச-இந்திய அரச லொபிகளது தளமாகவே இந்த "மாற்றுக் கருத்து"தளம் மாற்றப்பட்டு உருவாகியுள்ளது என்பதே!

இதுள், கணிசமான "படைப்பாளிகளிள்,மனிவுரிமைவாதிகள்-பேராசியர்கள்-புரட்சி காரர்கள்"  எனப் பெரும் சதிக் காரர்களே நமக்குள் நாமாக வலம் வருகின்றனர்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
29.11.2013

Dienstag, November 26, 2013

கவிஞர் ஜெயபாலனுக்கு இலங்கையில் வைத்துச் சொல்லப்படும் சேதி!

முள்ளிவாய்க்கால்வரை புலி அழிப்புக்காக பல பத்தாயிரம் மக்களைப் பலி கொண்ட இந்திய நலனாது,உலக-பிராந்திய நலன்களோடிணைந்து உருவாக்கும் கட்சிகள்,குழுக்கள் போரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை மிக நேர்த்தியாகப் பிளவுபடுத்துவதில் குறியாக இருக்கிறது.இதன் உச்சக்கட்டம் புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் ஓராயிரம் குழறுபடிகளை இன்னபிற நடிவடிக்கைகள் ஊடாகச் செய்துவருவதை நாம் சமீபகாலமாக இனங்காணலாம்.


எங்கு நோக்கினும் அந்நிய உளவு முகவர்களின் அணிவகுப்பே நமக்கு முன் நிகழ்கிறது.

இலங்கையின் கட்சிகள்- இயக்கங்களின் எந்தப் பக்கத்தைப் பார்த்தாலும் அவை குரூரம் நிறைந்த பக்கமாகவே தெரிகிறது.இதை மூடி மறைத்தல் இன்னுமின்னும் நம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.

நமது உணர்திறனுக்கு அப்பாற்பட்ட அரசியல் குழி பறிப்புகள் தினமும் நடந்தேறுகிறது.சமீபத்தில் இலங்கை சென்ற கவிஞர் ஜெயபாலனுக்கு நடந்தவை குறித்துப்பலரும், பத்துஞ் சொல்வதில் இலங்கை அரசின் ஜனநாயகவிரோதச் செயற்பாடுகளை நியாயமாக்கமுனைகின்றனர். அரசுவென்பது தனிப்பட்ட வாழ்வில் தலையிடும் பாரிய ஒடுக்குமுறைப் பொறியமைவைக் கொண்டிருப்பதென்பதைத் திட்டமிட்டு மறைப்பதில் அரச லொபிகள் கவனமாக அது சார்ந்தியங்குகின்றனர்.தேனியில் ஜெய பாலன் குறித்த கட்டுரை இந் நோக்கிலேதாம் புரியவேண்டிய வுண்மையை எடுத்துரைக்கிறது.இத்தகைய கட்டுரையின்வழி தனிப்பட்ட கைதுகள் யாவும், அரசியலுக்கு அப்பால் சுய விளம்பரந்தேடலெனும் போக்கில் வைத்துணரப்படவேண்டுமா?

இதுவரை இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைத்திருக்கப்படும் அப்பாவிகளின் அடிப்படை மனிதவுரிமையையே காலிற் போட்டு மிதிக்கும் எண்ணங்களை இலங்கை அரசுக்கேற்ப எழுதிக் குவிக்கும் அரச லொபிகளது காலத்தில் இஃது, தமிழ்பேசும் மக்களது அன்றாட வாழ்வாகப் போய்விட்ட இலங்கை அரசின் அத்துமீறிய கைதுகள்-கடத்தல்கள் யாவும் ஏதோவொரு விதத்தில் அவசியமானதாகக் குறித்துரைக்கப்படுவதை எங்ஙனம் புரிவதென்பதில் உணர்வு மரத்துப் போகிறது.


எனவே,இன்றைய சதி அரசியலைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பது நம்மெல்லோரதும் கடமையே.


"வில்லேருழர் பகை கொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழர் பகை." -குறள்:872, பக்கம்:347


வள்ளுவர் பேனா முனையை எதிர்க்காத அரசியல் சொல்ல,சாணாக்கியன் அதனையும் கடந்து மேலே செல்கிறான்.இவனது தந்தரமே மிகக் குள்ள நரித்தனமானதும்,நயவஞ்சகமானதும்கூட!





சாணாக்கியனின் உலகத்தில் தடுக்கி விழுபவர்கள்கூட ஒரு உளவாளியின்மீதே விழும் அளவுக்கு உளவுப்படைகள் அவசியமென்கிறான் சாணாக்கியன்.


இன்று நமது புலம்பெயர் வாழ்வில் எங்கு நோக்கினும் உளவு அமைப்புகளுக்குத் தொண்டூழியஞ் செய்யவே "இலக்கியச் சந்திப்பு"ச் செய்பவர்களாகவும்," வெள்ளை வேன் படங் காட்டுபவர்களாகவும்" தமிழ் மக்களது துரோகிகள் தமது அரசியலைத் தமிழ்பேசும் மக்களது பெயரில் முன் தள்ளுகிறார்கள்.


இவர்களது எஜமானர்களால் பழிவாங்கப்பட்டுத் தமது உறவுகளைப் பலிகொடுத்தும் தமது வாழ்வை இழந்தும் தடுப்பு முகாமுக்குள்ளும் திறந்தவெளிச் சிறைகளுக்குள்ளும் பரதவிக்கும் தமிழ் மக்களுக்கு இவர்கள் மீளவும், துரோகமிழைத்திட தமக்குள் ஒன்றிணைகிறார்கள்.கவிஞர் ஜெயபாலனின் கைதிலிருந்து பல கூறுகளாக விவாதிக்கும் புலம்பெயர்"மாற்றுச்"சிந்தனையாளர்கள்-மண்ணாங்கட்டிகள் யாவரும் தத்தமது வசதிக்கேற்பவே அரசியல் பேசுகின்றனர்.கைது செய்யப்பட்டவனது மனிதவுரிமை-அடிப்படையுரிமை குறித்துப் பேசுவதில் கிஞ்சித்தும் எண்ணிக்கொள்ளாத மனித மனங்கள் எம்மை அச்சப்படுத்துகின்றன!


மனிதவுரிமைசார்ந்தும்-அடிப்படை உரிமைகள் குறித்தும்பேசுவதைத் திட்டமிட்டுத் தவிர்த்து அன்றியஃதை, வேடிக்கையான கதையாடலாக்கியும் விடுகிறார்கள்.


இதிலிருந்து தமது எஜமானர்களது அரசியலுக்கு வெளியில் மாற்று அரசியல் மையமுறுவதைக் கண்காணிக்கவும்,தடுத்து உடைத்தெறியவும் எதிரிகள் மிக நிதானமாகத் தமக்குள் வலுவடைகிறார்கள்.தத்தமது இருப்புக்கு நிகரானவொரு விசும்பு நிலைகள் உருவாகுவதையெவரும் பொறுத்துக்கொள்ள முடியாது தலைவெட்டும் அரசியலாகக் காட்டிக் கொடுப்புகள்-குழிபறிப்புகள் தொடர்ந்தியங்குகிறது.தமிழ் மக்களது அரசியலே இந்தக் கதியாய்மாற்றப்பட்டபின் பல ஜெயபாலன்களைக் குறித்துக் கைகாட்டப்படும் சூழலைத் தொடர்ந்தியக்குபவர்கள் புலம்பெயர் தளத்தில் பல்வேறு முகங்களோடு அரசியல் பேசுபவர்களாகவே இருக்கின்றனர்.அவர்கள், நமக்குள் முகத்தைப் புதைத்து வைத்தபடி இலங்கை ஒடுக்குமுறை அரசில் அங்கம் வகிக்கின்றார்கள்!


இன்றைய இலங்கை அரசியலில் தமிழ்பேசும் சமுதாயத்தினது தலைவிதியானது கயமைமிக அரசியலுக்குள் சிக்குண்டுள்ளது.இதை இந்திய-இலங்கை அரசியல் நலன்களுக்குள் கட்டுண்டுபோன தமிழ்க்கட்சிகள்-முன்னாள் ஆயுதக்குழுக்களெனச் செவ்வனவேயான திட்டத்துக்குட்பட்ட அடக்குமுறை அரசியலுக்கேற்ற நடாத்தையால் நமக்கு நிரூபித்து வருகிறார்கள்.இங்கே அழிந்துபோன புலிகளது சர்வதேசச் சீமான்களும் அதே பாதையில் நடைபயில இந்தியாவினது இலக்கு மிக விரைவாக எட்டப்பட்டு வருகிறது.

எங்கும்,பொய்யும் அது சார்ந்து கருத்தியில் போரும் தொடர்கிறது!புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகக் கணிசமான வீதத்தில் இத்தகைய பொய்யுரைப்புகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகிறது.ஒரு சாதாரண மனிதனது வாழ்வு,சுக-துக்கம் அவனது-அவளது அகவிருப்புகள் மனிதவுரிமைசார்ந்த அடிப்படையுரிமைக்குட்பட்ட அரசியல் வாழ்வு வரை அனைத்தும் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டு மனித இருத்தலே சாத்தியமற்றவொன்றாய் இலங்கை அரசியல்வாழ்வு நமக்குச் சிறை-கைது-கடத்தல் என்ற பற்பல ஒடுக்குமுறைசார்ந்த வன்முறையாக மேலெழுகிறது.ஜெயபாலனது கைதிலிருந்து இஃது காட்டமாகவுணரத்தக்கது - ஆட்காட்டல்-கை காட்டலது அரசியலின் கொடுமை எப்படியென்பதைப் புரியக் காலத்தில் வாழ்ந்தாக வேண்டும்!.


சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பும், அதன் நிழல் தலைமைகளும் திட்டமிட்டுச் செயலாற்றும் அரசியல் பண்பானது புலத்திலுள்ள அரச எதிர்ப்பாளரைக் குறித்துக் கை காட்டுவதில் ஒரு வியூகமானவொரு நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டே செயற்படுவதை மிக நுணுக்கமாக அறியவேண்டும்.


இவர்களுக்கும் இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையிலான தொடர்புகள் புலம்பெயர் மக்கள்மீதான காயடிப்பு அரசியலெனும் வியூகத்துக்கிணையவே தொடர்கிறது.இவர்கள்தாம்  "வெள்ளை வேன் படத்தை"க் குறித்துப் பரப்புரைகளும்,ஒத்துழைப்புகளும் நல்கி இத்தகைய தந்திரோபாயத்தை மக்களது விடிவுக்கானதென்று விதந்துரைத்தும் வருகின்றனர்.அரசுக்குக் கை காட்டுபவர்களே கவிஞர் ஜெயபாலனின் கைதை எதிர்த்துக் குரல் கொடுப்பதாகவும் வேடம் புனைகின்றனர்.நமக்குள் எதிரிகள் பல வடிவினில் உருவாகியுள்ளனர்.இவர்களை நமக்குள் இனம் காண நமது பழைய நண்பர்கள் எனும் பாசம் விட்டுவிடுவதில்லை!


இது, அடக்குமுறையாளர்களோடு, ஒடுக்கப்படும் மக்களைக் கட்டிப்போடும் அரசியலை ஜனநாயகத்தினும்,எதிர்ப்பரசியலெனும்பெயரில் தொடர்கிறது.நியாயத்துக்காகக் குரல் கொடுப்பதாகவும் கண்கட்டி வித்தைகட்டுகிறது.இதற்கான திட்டமிடப்பட்ட பரப்புரைகளுக்கிசைவாகவே "தீர்மானங்களும்"-உரையாடல்களும்,பயிற்சிப்பட்டறைகளும் கட்டியமைக்கப் படுகின்றனர். இத்தகைய பண்பினது விருத்தியே அரசவொடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்பரசியலைப் பிளந்து குறுகிய இழிநிலைக் குழுக்கட்டல்களாக விரிந்து தனிமனித் தேவைகளை நிறைவேற்றுகிறது.இங்கே,கவிஞர் ஜெயபாலனைக் காலை வாரிவிட்டவொரு குழு மிக வேகமாகவே அரசவொடுக்குமுறையை வெறும் நகைச்சுவையாக்கி ஒனறுமில்லாதவொரு கருத்தாகக் குறுக்குகிறது.அதாவது,பாசிசத்தின் உச்சக்கட்டத்துக்கான முகிழ்ப்புக்களை ஒன்றுமில்லாதவொரு கற்பனையாகக் காட்டுகிறது.


பரந்துபட்ட மக்களின் உயிரோடு விளையாடும் கொடிய யுத்தப் பிரபுக்களை அண்டிப் பிழைக்கமுனையும் ஒருகூட்டம், தம்மைக் குறித்த புனைவில் தாம் மாற்றுக் கருத்துத்தளத்திலிருந்து வந்தவர்களாககச் சொல்லிக்கொண்டு,இலங்கையினது இனப்படுகொலைகளை நியாயப்படுத்துகிறது.இத்தகைய சதிகாரர்களுடுடன் ஒரே மேசையில் உட்காருவதற்கு மேலுங் சிலர் நமக்குள்ளும் இருக்கத்தாம் செய்கிறார்கள்.அவர்கள் உலகத்தில் ஒடுக்கப்படும் மக்களது மறைக்கப்பட்ட செய்திகளையும் தொடர்ந்து கொணர்வதே தமது கடமையென்றும் தம்பட்டம் அடிப்பதில் திருப்திப்பட்டும் இருக்கட்டும்.ஆனால்,முள்ளிவாய்க்காலுக்குப் பின்பான அரசியலது இருப்பே ஒரு சில எதிர்ப்புக் குரல்களதும், மக்கள் சார்ந்த கருத்துக்களிலும் அதுசார்ந்த சில அமுக்க நிகழ்வூக்கத்திலுமே தங்கியுள்ளது.இத்தகையவொரு சூழலில் ஜெயபாலனைக் குறித்து அபாண்டமான கருத்துக்கள் புனைவதென்பதுகூட  தனிப்பட்ட அரசியலை மையப்படுத்தியதென் பதாகவிருக்கு மென்றும் எண்ணத் தோன்றுமா?


நடந்து முடிந்த யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்புக்குள் மையமுற்ற பல்வேறு குழுக்கள்-அமைப்புகள்,தமிழ்நாடு-இந்தியாவரை மையங்கொண்ட சக்திகள் யாவும்  தத்தமது எஜமானர்களைக் காக்கும் கூட்டம் என்பது உலகறித்தவுண்மை! இன்னொரு வகையில்,தமக்கானவொரு கருத்துக் களத்தை  நிறுவுவதில் தமது அதிகாரங்களைக்காத்துக்கொள்வதற்கும் அதன் இரூபத்தில் அந்நிய எஜமானர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தமது நலன்களைக் காக்கவும்வெள்ளை வேன் படங்காட்டி ஒரு வியூகத்தை மெல்ல விரித்துள்ளனர்.


இதன் வாயிலாக அதிகாரமையங்களைத் தமது அரசியல் நட்பு சக்திகளாக்கி இலங்கை மக்களின் முதுகில் குத்தி வேட்டையாட இந்தக் கைக்கூலிக்கூட்டம் பற்பல வடிவங்களில் நம்முன் வருவதென்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.



இத்தகைய மக்கள்விரோதிகளுக்கு அந்நியத் தேசங்களது உளவு நிறுவனங்களே நிதியீடும் செய்து இவர்களைத் தமது நம்பகமான கையாளகவும் பயன்படுத்தித் தமிழ்பேசும் மக்களை மிக நுணுக்கமாகக் கண்காணிக்க முனைகிறது.இதன் தொடராக நமக்குள் கொட்டப்படும் கருத்துகள்,நமது மக்களது விடிவுக்கானதாகவும் பரப்புரை செய்யப்படுகிறது!


இத்தத் தருணத்தைக் குறித்துக் கிஞ்சித்தும் சிந்தனை செய்ய மறுத்திருந்த கவிஞர் ஜெயபாலனுக்கு இலங்கையில் வைத்துச் சொல்லப்படும் சேதி என்னவென்பதை, அவர், உணர்வுபூர்வமாக உள்வாங்கிச் சொல்லப்படும் காலத்தில் இனம் காணத்தக்கவொரு புலம் பெயர் விசமிகளது குழுமம் மேலும் நமக்குள் புலப்படுத்தப்படும் அரசியல் இத்தகையவொரு நெருக்கடியை மேலும் புரிந்துகொள்ளப் பேருதவியாகவிருக்கும்.


என்றபோதும்,இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட கவிஞர் ஜெய பாலனுக்கு மட்டுமல்ல இலங்கை இனவாத அரசால் பல்லாண்டுகளாகச் சந்தேகத்தின் பெயரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளும்-அப்பாவிகளும் விடுதலை செய்யப்படும்வரை நாம் அவர்களுக்காகக் குரல் கொடுப்பது மனித இருத்தலுக்கான தோழமைக் குரலே.



ப.வி.ஸ்ரீரங்கன்

26.11.2013

Sonntag, November 24, 2013

மாவீரர்கள் நினைவஞ்சலி : 2013

"மக்களுக்காப் போராடிச் செத்தவர்களை"  நினைவுகூரும் அறம்-சில கருத்துக்கள்.


"தமிழீழப் போராட்டம்"  - தமிழீழத்துக்கான அரசியல் நியாயப்பாடுகளெல்லாஞ்சேர்ந்து இலங்கையில் மூன்று இலட்சம் தமிழ்பேசும் மக்களையும் அதன்சகோதர மற்ற இனத்தவர்களையும் கொன்று தள்ளியிருக்கிறது.முள்ளிவாய்க்கால்வரை இனப்படுகொலை அரசியலை மிக நுட்பமாக நடாத்திய இலங்கையை ஆண்ட-ஆளுங்கட்சிகள், இந்த அவலத்தைத் தோற்றுவித்த இலங்கை-அந்நிய அளும் வர்க்கத்தின் சேவகர்களாகவிருந்து இவ்வளவு மோசமான மக்கள்விரோத அரசியலுக்கும் சட்டரீதியான நியாயப்பாட்டை இலங்கையின் இறைமைக்குள் வைத்து நிகழ்த்தி முடித்தார்கள்.


இந்த கோரத்தனமான அரசியல் போக்கின் தெரிவிலின்று 2013 இன் இறுதிக்கட்டத்திலும் நாம் செத்த-சாகடிக்கப்பட்ட போராளிகளுக்கு(மாவீரர்) நினைவஞ்சலி செலுத்துவதில் நன்றியறிதலைச் செய்வதிலேயே காலத்தைக் கடத்துகிறோம்.இதுவரையும் தமிழ் மக்களது தலைவிதியை தீர்மானிக்கும் பாத்திரத்தை வகித்தவர்கள் அவர்களது உயிர்-உடமைகளைத் தமக்காக அத்துமீறி அபகரித்தவர்கள்.இவர்களில் கணிசமானோர் இன்னும் உலகம் பூராகவும் பரந்து இயங்கிக்கொண்டே இருக்கின்றனர்.இவர்களிற் கணிசமானோர் ஆளும் மகிந்த அரசின் நிகழ்ச்சி நிரலுக்கும்,மேற்குலக அரசுகளது தேவைக்குமேற்பத் தொடர்ந்து நமது மக்களது வாழ்விலும்-இருப்பிலும் அத்துமீறி அதிகாரத்தைச் செய்பவர்களாகவே இருக்கின்றனர்.


புலிகளது ஆயுதங்களும்,போராளிகளும் அழிக்கப்பட்டிருப்பினும் மேற்சொன்னவர்களிடம் ஆயுதமும்,அதிகாரமும் ஆளும் வர்க்கங்களது தயவின்வழியாகப் பரவலாகப்பட்டிருக்கிறது.அல்லது,இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடான தனியார் துணைப்படைகளாகவே இயக்கப்படுகிறது.இது,பெரும்பாலும் அமெரிக்கப்பாணியிலான இராணுவத் தந்திரோபாய நெறிக்குட்பட்ட சிறிய தேசங்களதும் அதன் ஆளும் வர்க்கத்தினும் வியூகமாகத் தற்போது இயங்க்கமுறுகிறது.இத்துணைப்படைகளது தலைவர்கள் பாராளுமன்றக் கட்சி அரசியலது சட்டரீதியான இருப்பில் பெயர்ப்பலகைக்கட்சியின் தலைவர்களாகவும்-பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது பேரளவிலான அமைச்சகர்ளாகவும்இலங்கையின் போர்க்கால அரசியல்வரலாற்றில் இருந்தே வந்துள்ளார்கள்.இவர்களது இருப்பு முள்ளி வாய்க்காலுக்குப்பின் இன்னமும் இல்லாதாக்கப்படவில்லை!இதன் அர்த்தம் பேரளவிலான ஜனநாயகத்தன்மை இன்னமும் கானல் நீராகவே இத்தேசங்களில் இருக்கிறது.


தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்திலும்,எவரெவரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும், தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.இந்த "யார்-யாரோ"வுக்குள் மேற்சொன்ன அரசியல்-அதிகாரத்துவ முடிச்சுக்களே மிகவும் பலமானவொரு அரசியல் வெளியைத் தகவமைத்துவைத்து தமிழ்பேசும் மக்களதும் மற்றும் பிற சிறுபான்மைச் சமூகங்களதும் சமூக அசைவியக்கத்துள் தாக்கத்தைச் செய்கின்றனர்.இவர்கள் சமூகவளர்ச்சியின் குறுக்கே நின்று மக்களது அனைத்து ஆற்றல்களையும் சிதறடித்து அவர்களை ஆத்மீக ரீதியகப் பலவீனப்படுத்தி வருகின்றனர்.மக்களை அதிகார வர்க்கங்களுக்காகவும்,அவர்களது கட்சிகளது-தலைவர்களது நலன்களுக்காகப் போராடவும்-கலகஞ் செய்யவும் தூண்டி, மக்களது நலனை மெல்ல இல்லாதாக்கிக்கொண்டுள்ளார்கள்.





மக்கள் தமது நலனுக்கான-விடுதலைக்கான அனைத்து அரசியல் பார்வை-போராட்டவுணர்களிலிருந்து ஓரங்கட்டப்பட்டு கட்சிகளதும்-அதிகாரமுடையவர்களதும் நலனுக்கான தொங்கு சதைக் கூட்டமாக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்-உதிரி வர்க்கமாக்கப்பட்டுவருகிறார்கள்.இதைக் கணிப்பிலெடுக்காதவர்கள் 2013 இலும்"போராடிச் செத்தவர்கள்-போராளிகளுக்கு"நினைவஞ்சலி செலுத்தவதை மட்டும் தார்மீகக் கடமையாக உணர வைக்கப்பட்ட அரசியலின் தெரிவில், ஒருவித குற்றுவுணர்வுக்குள் மனமுடக்கமுடையவர்களாகவும் இத்தகைய நினைவஞ்சலியின்மூலம் தமது குற்றத்தைப் போக்கமுடியுமெனவும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.



" நாம் கடந்தகாலத் தவறுகளை நுணுக்கமாக ஆய்ந்து நினைவுப்படுத்தவில்லையானால் அதுவே மாபெரும் பேரிடி.இதுவே,மீளவும், விட்ட தவறுகளைத் தொடர்ந்துஞ் செய்யத் தூண்டுகிறது. "


முள்ளி வாய்க்கால்வரையான "தமிழீழத்துக்கான" ஆயுதப் போராட்டம் எமது மக்களிடமும்,போராடும் போராளிகளிடமும் அந்நியப்பட்டுக்கொண்டே சென்று,இறுதியில் சிங்கள இராணுவத்திடம் படுதோல்வியடைந்து, தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் சிங்கள மற்றும் உலக முலதனத்திடம் காட்டிக்கொடுத்தது.இந்தக்காட்டிக் கொடுத்தலின் பிதாமக்களான  மேல் நிலைத் தலைவர்களே இன்று இன்னொரு வடிவிலான அகிம்சா வாதிகளாகவும் மக்களைத் தமது எஜமானர்களுக்கேற்ப மனோவியல்ரீதியாகப் பலவீனப்படுத்தி அரசியல் செய்பவர்களாகவும், வலம் வருகின்றனர் .


இவர்களது பின்னே இயக்குமுறும் "மக்களுக்காக"  உதவும் அமைப்புகள்,நிறுவனங்கள் யாவும் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட செல்வத்தை வைத்தே அவர்களை மேலும் கையாலாகாத கூட்டமாக்கும் வியூகத்தோடு, இலங்கையிலும்-புலம்பெயர் தளத்திலும் ஒருவிதமான "தேசியக் கோரிக்கைகள்-போராட்டங்கள்"செய்கின்றன.இது,  காலாகாலமாக "மாவீரர் தினம்" செய்யவும், அதன்வழி பெரும் பகுதியான இளைஞர்களைத் தமது பக்கம் தொடர்திழுக்கவும் செய்யப்படும் கண்கட்டி வித்தைகளைப் புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசங்களில் தொடர்ந்து காணத்தக்கதாவிருக்கிறது.



இது, எமை அனைத்துக்கும் அடிமையாக்கிச் சென்றுள்ளது-செல்ல வைக்கிறது!


இந்த அடிமை வாழ்வை மேலும் தீவிரப்படுத்த முனையும் புலம் பெயர் எச்ச சொச்சங்கள் போடும் திரை மறைவு அரசியல், தமிழ்பேசும் மக்களுக்கு "உரிமை"குறித்துப் பேசுகிறது.அதே பழைய பாணியில் கருத்தாடும் நபர்கள், கடந்த காலத்தில் அழியுண்டுபோன போராளிகளை மிக மலினப்படுத்திப் பூசிப்பதால் அவர்களது கொலைகளை தேசத்துக்கான தியாகமாக்கிவிட முடியாது.இந்தக் கொலைகளுக்கான மூலகாரணமான இலங்கைப் பயங்கரவாத அரசைக் கேள்விக்குட்படுத்தாத முறையில் அவர்களோடிணைந்தியங்கும் இவர்கள், மக்களைத் தொடர்ந்து குறுக்குவழியிலான முறைமைகளில் சிந்திக்க வைக்க முனைகின்றனர்.


இதிலிருந்து மீளும் சிந்தனையானது தொடர்ந்தும்"புரட்சி-சோசலிசம்-மார்க்சிசம்" என்ற போர்iவியின்அல்லது முலாத்தின் மூலம் புறந்தள்ளப்பட்டு,அது சமுதாயத்துக்கு ஒவ்வாத சிந்தனையாகத் தொடர்ந்து பரப்புரை செய்யப்பட்டும், இந்தத் தருணம்வரை மக்களிடம் தமது நலனுக்கான சிந்தனை உளவியல்ரீதியாக வெறுக்கத்தக்கவொரு எண்ணமாக மாற்றப்பட்டுவிட்டது.


இந்த வெற்றியிற்றாம் மேற்கூறப்பட்ட அதிகார வட்டம் தமது ஏகபோகமான அரசியலைத் தொடர்ந்து செய்கிறது-மக்களை அதிகார வர்க்கத்துக்கிசைவாக இயங்க வைக்கிறது.ஆதிக்கச் சக்திகளின் முன்னே பலவீனமானவொரு கூட்டமாகவும்,அவர்களது காலில் வீழ்ந்தும்-நம்பியும் கண்ணீர் சொரிந்தும் சோற்றுக்கு அலையுமொரு மக்கள் கூட்டமாக ஆக்கப்பட்டு விட்டனர் மக்கள்!



மேலுமிந்த நிகழ்சிப் போக்கு, நடத்தர வர்க்கப் படிப்பாளிகள்,தொழில்முறைரீதியாகத்  தேர்ந்த துறைசார் உழைப்பாளிகளிடமும்  தமிழ் பேசும் மக்களது முற்போக்கு நகர்வை முடக்குவதற்கானதான வாதங்களில் கருத்துக்களைத் தகவமைத்துக் கொள்கிறது. இதுவரையான எல்லாவிதப் மக்கள் விரோதப்போராட்ட முறைகளும் செய்து பார்த்த இவர்களது போராட்ட வியூகமானது, இறுதியில் சரணடைந்த போராளிகளைக் கொன்று தள்ளிய இலங்கைப் பாசிச அரசின்  ஈனத்தனத்தை,இவர்கள் "தியாகமாக்குவதில்" மேலுஞ் சில்லறைகளைக் கவ்வுவதற்கேற்ப அரசியல் பேசுவது தமிழ் மக்களது ஞபகசக்தியோடு விளையாடுவதே.


மக்களோ எல்லாவற்றையும் விசாரிக்க முனையும்போது, மீளவும், அதே வித்iதாகளோடு புலம்பெயர் ஊடகங்கள் உருவேற்ற முனையாவிடினும்,ஒப்பாரிவைத்துக்கொண்டபடி தம்மீது பச்சோதாபங்கொள்ளும் ஒரு இனத்தின் ஒப்புதலைக் குறிவைப்பது,இலங்கை அரசின் ஆளுங்கட்சிகள் மற்றும் இந்திய நலன்களுக்கான பாதுகாப்பு அரணாகவே மக்களைத் தொடர்ந்து இயக்க முனைகின்றனர்.இதற்கேற்பவே நடத்தர வர்க்கப் "படிப்பானிகளை" மெல்லத் தகவமைத்தும் கொண்டுள்ளர்.



அதிகார வர்க்கத்தோடிணைந்து தமிழ்மக்களை மொட்டையடிக்கும் குவிப்பூக்க விருப்புறுதியானது தமக்கு எதிரான எந்தப் புறநிலை மாற்றத்தையும் இரகசியமானமுறையில் வேவுபார்த்துச் சிதைப்பதில் முன்நிலை வகிக்கிறது!இதை மேற் சொன்ன "தேசிய அரசியலும்" ,அதை ஆட்டுவிப்பவர்களும் தொடர்தே வருகிறார்கள்.தத்தமது இடத்தைத் தக்கவைப்பதில் மிகவும் நிதானமாகவே இந்தக்கூட்டு இருக்கிறது.


இலங்கை அரச வரலாற்றில் முள்ளிவாய்க்காலில்  தமிழர்களை வெற்றிகொண்ட சிங்கள இராணுவ மாயை சிங்கள மக்களைத் தமிழ்பேசும் மக்களுக்கான எஜமான நிலைக்கு உயர்த்தியுள்ளது. இது,இனவாத அரசியலில் பின் தொடரும் பொருளாதார இலக்குகளோடு முற்றிலும் தொடர்புடையதாக மாறியுள்ள நிலையிலும் சிங்கள எஜமான உளவியலானது எந்தவிதப் பண்பு மாற்றத்தையும்கொள்வதற்குச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார இலக்குகள் இடங்கொடுக்கவில்லை. அது,தொடர்ந்து இன மேலாதிக்கத்தைக் கடைப்பிடித்தபடியேதாம் ஆசிய மூலதனத்தோடான தனது உடன்பாடுகளைக் கொண்டியங்குகிறது.


தமிழருக்கான அரசியல் வெறும் சிறுபிள்ளைத்தனமாக விரிகிறது.ஏதோவொரு நாடு-ஏதோவொரு காரணத்துக்காக நம்மை ஆதரித்தால் உடனடியாக மகிழ்ந்து குலாவுகிறோம்.தலை கீழாகத் தாண்டிப் பார்க்கிறோம்.இப்படித்தாம் அதிகார வெறிகொண்ட பாசிச    ஜெயலலிதா கூடச் சமீபத்தில் நமக்கு "ஈழத் தாய்" ஆனார். இது, அரசியல் விய+கமல்ல.நாம் நமது அரசியலை நமது மக்களின் வேதனைகளோடு பரிசோதித்துப் பார்க்கிறோம்.



அதிகாரம்-பணப்பலம்,பதவிக்காகத் தமிழ்த் "தலைவர்கள்"  தத்தமது குறுகிய நலன்களுக்காக முழுமொத்த மக்களினதும் நீண்டகால நலன்களை இழப்பது மிகக் கேவலமான சிந்தனையற்ற சிறுபிள்ளைத்தனமானதாகும்.இது தமிழ்பேசும் மக்களைச் சிங்கள இனவாதப் பயரவாத ஆளும் வர்க்கத்தோடிணைத்து ஒப்பீடு செய்து தமிழர்களே அதிகமானவொடுக்குமுறையாளர்களெனவும் வகுப்பெடுக்கிறது.முன்னாள் வடக்குக் கிழக்கு முதல்வர் வரதாராஜப் பெருமாள் அவர்கள் இதையொரு அரசியலாகவே தொடர்ந்து முன்னெடுக்க, அவர்களது அடிப்பொடிகள் இத்தியாவைப் பகைக்காத அரசியலும் பேசிக்கொண்டே இதைக் கடை விரிக்கின்றனர்.தமிழ் மக்கள் இன்னமும் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருப்பதில் பல தேர்தல்கள் வந்து விலகுகின்றன.இதுதாம் இன்றைய நமது அரசியல்  யாதார்த்தம்.


இத்தகையவொரு அரசியல் போக்கில் போராடிச் செத்தவர்களும்-சரணடைந்து சிங்களப் பயங்கரவாதிகளால் கொல்ப்பட்ட மக்கள்-போராளிகளுக்காவும் நினைவஞ்சலி செலுத்தும் இந்த 2013, 47-48 வாரத்தில் நாம் தியாகத்தை மதிப்பது மட்டுமல்ல அதைச் சிதறடித்த இன்றைய நமக்குள் இருக்கும் புரையோடிப்போன அரசியலையும்,அதிகாரத்துக்கான நோக்கில் இயக்குமுறும் அதிக்கச் சக்திகள்,அவர்களது நிதியாதிக்கம்வரைத் தெளிவாகப் புரிந்துகொள்வதே தியாகத்தை மதித்துக்கொள்ளவும், அதை நினைவுப்படுத்தவுமான தார்மீகவுணர்வை நமக்களிக்கும்.


இதுவல்லாத அனைத்தும், வெறும் சம்பிரதாயச் சடங்கு  நகர்வே. இஃது,ஒடுக்குமுறையாளர்களை எந்தக் கேள்வியுமற்று அங்கீகரப்பதில் போய் முடியும்.



நாம் நிறையச் சிந்திக்க வேண்டும் எதிர்கால அரசியல் உரிமை-வாழ்வு குறித்து!



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி,

24.11.2013.

Donnerstag, Mai 30, 2013

சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலம்

பொதுபல சேனவின் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலம்:

-சில குறிப்புகள்.

" ன்றைய இந் நிலைமையை வெற்றியாகவுருவாக்கிய சிங்கள அரசு இலங்கைச் சிறுபான்மை இனங்களைக் கட்டயாக "இணக்க அரசியலுக்குள்" திணிக்கத்தக்க வன்முறைசார்-மற்றும் வன்முறைசாராக் கருத்தியல் வலுவைக் கொண்டியக்குகிறது.சிறுபான்மை இனங்களுக்கு முன்னுள்ள எந்தத் தெரிவும் தற்கொலைக்கானது.இணக்கமுற்றாலும் அல்லது ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து இலங்கை அரசை எதிர்ப்பதும் தற்கொலையானது.இதைச் சாத்தியப்படுத்தவே புலத்தில் போலிப் புரட்சிகரச் சக்திகளை இலங்கை-இந்தியக் கூட்டு வளர்த்தெடுத்துப் புலி அழிவின் பின் தமக்குள் பல்வேறு வடிவுள் உள்வாங்கிவிட்டு "சமத்துவத்துக்கான" அரசியல்-புரட்சி பேசும் சூழலையும் அதுவே உருவாக்கியுள்ளது!"

புலிவழிச் செல்நெறியூடாக நிகழ்த்தப்பட்டத் "தமிழீழ"ப் போராட்டத்தின் தோல்விக்குப் பின்னான இன்றைய இலங்கையில் கட்சிகள்,அணிகள்-அமைப்புகளது அணித் திரட்சியும் கூடவே, புதிய குட்டி முதலாளிய வர்க்கத்தின் முகிழ்ப்பானதும் அரச பாசிசப் போக்கை மேலும் நிலைப்படுத்தவேண்டிய தருணத்தைச் செல்வ-மற்றும் இயற்கை-மனித வளச் சுரண்டலிலிருந்து தகவமைபதைத் தொடர்ந்து தூண்டுகின்றன.

இன்றைய முரண்பாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்ப்பரசியலானது எப்பவும்போலவே ஆளும் அரசுக்கெதிரான கட்சிகளுக்குப்பின்னும் மற்றும் பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஜனாதிபதி மகிந்தா இராஜபக்ஷ வழி,பிளவுபட்ட இன அடையாளங்கள் வெளிப்பட்டு நிற்கும் புள்ளியில் மேற்குலக-ஆசிய மூலதனத்தின்பின் அணிவகுக்கும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கம், இலங்கையில் ஜனநாயகத்தை மறுத்து நிற்கும் தெரிவில் இலங்கையின் அரசியல் எதிர்காலம் சிறுபான்மை இனங்களை வேட்டையிடப்போகிறதென்பதற்குப் புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் நிலவும் அணிச் சேர்க்கை மற்றும் சாதிய அரசியலும் அதுசார்ந்த எதிர்ப் புரட்சிகரவாதிகளான முன்னாள் இயக்க வாதிகளும்,புலிப்பினாமிகளும் இலங்கையின் ஒடுக்குமுறை அரச ஜந்திரத்தோடு ஒத்த அரசியல் புரிவதுகூட ஏலவே தயாரிக்கப்பட்ட நிகழ்சி நிரலுக்குட்பட்டதாகும்.இது,அபாயகரமான அரசியல் மற்றும், இயக்கப் போக்கை இலங்கையின்  குறை ஜனநாயக விருத்துக்குக்குறுக்கே நின்றாற்றும் இயக்க-கட்சிவாத அரசியலானது இலங்கையின் பெரும்பகுதி மக்களது உரிமைகளுக்கு நிச்சியம் பங்கஞ் செய்தே தத்தமது இருப்பை நிலைப்படுத்திக்கொள்கிறது.



குறிப்பாகச் சிங்கள இனவாதத்தாலும்-ஒடுக்குமுறையாலும் தொடர்ந்து பாதிக்கப்படும் இலங்கைச் சிறுபான்மையினங்கள் தம்மைத் தொடர்ந்து பலியாக்கும் அரசியலைத் தத்தமது தலைவர்களதும்-கட்சியினதும் நலனுக்கான தெரிவின்வழி பெறுகின்றனர்.இதற்கான மாற்றுப் பற்பல முரண்பாடுகளால் பிளவுண்டு சிதைக்கப்பட்ட இன்றைய இருண்ட சூழ்ச்சி அரசியலுள் மேலுஞ் சிதறுண்டு உதிரிகளாக்கப்பட்டுள்ளது என்றே நமது மனவூக்கமும்,உணர்வும்-அறிதிறனுஞ் சுட்டுகிறது. இதன் அறுவடை மெல்லவுணரப்படுந் தருணத்தை நிலத்தில் அணித் திரட்சியாகும் சூழலோடு உணரத்தக்கதே.அதன்மறுவினையாற்றலைப் புலம் பெயர் வாழ் சூழலில் நமக்குள் உய்துணரமுடியும்.

இந்த உளவியலின் பொருட்குவிப்பூக்க அரசியல் மற்றும் அதுசார்ந்த வன்முறைசார்ந்த தந்துரோபாயத்துக்குட்பட்ட இராணுவ ஆதிக்கத்தின் விருத்தியானது, எங்ஙனம் இனிவரும் இலங்கையில் ஜனநாயக நெருக்கடியாக எழும் என்பதே எமது அச்சம்!

இவ்வச்சம் வெறும் கருத்துக் குவியலோ அன்றிக் கற்பனையோ கிடையாது.

இது,சமூக அரசியல் பொருளாதாரத்தின் சில விதிகட்கமைய ஆயப்பட்ட-பரிசோதித்தறியத்தக்கதானவுண்மை என்பதை ஏற்றாலுஞ்சரி இல்லை நீங்கள் விட்டாலுஞ்சரி எம்மை இது, அச்சப்படுத்துகிறதென்பது உண்மை.

இலங்கையில் ஏலவே கட்டியெழுப்பப்பட்ட இனவாத அரசியல் நடாத்தையில் மேலும், இராணுவவாதம் மற்றும் கட்சி-இயக்க ஆதிக்கமானது பாசிசப் போக்கில் , வளர்வுந் தேய்வும் அத் தேசத்தின் பொருளாதார மற்றும் அந்நிய ஆர்வங்களால் நிகழ்ந்து வருபவை.இது,தற்போது இலங்கைச் சமுதாயத்தின் அரசியல்-சமூக உளவியலாகத் தோற்றம் பெறும் இன்னொரு வகையான இனத்துவ அடையாள அரசியலை இனிவரும் காலத்தில் வளர்த்தெடுக்கும்.இதற்கான தோற்று வாயில் இலங்கைச் சிறுபான்மை இனத்தின் இன்றைய அவல அரசியல் பாரிய பங்கை வகிக்கின்றது.இந்நிலையில் ஆசிய மூலதனத்தின் நோக்கம் வெற்றிபெற்றிருப்பினும் சிங்கள அடையாள அரசியலது வரலாற்றைத் தமதாக்க முனையும் ஆளும் வர்க்கத்தின் ஒருபகுதிக்கு இது அசாத்தியமானவொரு வியூகத்தை மெல்ல இராஜபக்ஷவினது வடிவில் தெரிவுகளாக்கும்.இலங்கைச் சிறுபான்மை இனங்களது எந்த ஆதரவையும் உதாசீனப்படுத்துவதற்கான பல தெரிவுகளை இனிவரும் இலங்கைச் சிங்கள மேலாதிக்கக்கனவுகளுக்கு இது, சட்ட ரீதியான யதார்த்த(அரசியல் யாப்பு) நிலைகளைத் தோற்றுவிக்கும்.இதன்வழி,இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் பாரிய அரசியல்-பொருளியல் நெருக்கடியையும் அதுசார்ந்த அடக்கு முறைகளையும் எதிர்கொள்வது உறுதி.பொதுபல சேனவின் உருவாக்கமும்,அரசியலுரையாடலும் அவர்களது அமுக்க அரசியற் செயற்பாடும் மிருகவதைக்காகவுயிர்விடுவதென்ற எல்லைவரையொரு அடையாள எதிர்ப்பு மற்றும், இனவுறுதிப்படுத்தலுக்கானவூக்கத்தின் மூலம் தேசத்தின் உரித்துக் குறிப்பிட்டவொரு இனத்துக்கும், மதத்துக்குமானதென்ற அடையாளப் பலப்படுத்தல் அரசியலாகவுச்சம் பெறுகிறதென்பதை நாம் அவதானித்தாகவேண்டும்.பொதுபல சேனவை வெறும் இனவாத அரசியல் மகுடித்தனமெனவும் அஃது, இராஜபட்ஷவின் தூண்டுதலின் வினையெனவும் குறுக்குவதுகூட ஆபாத்தானது.






இதைச் சற்று விரிவாகப்பார்க்கலாம்.

மகிந்தாவுக்கு எதிரான இலங்கைச் சிறுபான்மை இனங்களது பாரிய எதிர்ப்பு அரசியலது தெரிவில், புலத்துத் தமிழர்களும்,பெரும் பான்மைப் புலிப் பினாமிகளும் மேற்குலக லொபிகளாக மாறியது சிங்களச் சமுதாயத்தின் அடையாள அரசியலை மேலும் வலுப்படுத்தும் என்பதில்:

1: இலங்கைச் சிறுபான்மை இனங்கள் மேலும் பிளவுபட்ட-இணைக்கவே முடியாத, இலங்கைப் பெருந்தேசிய உருவாக்கத்துக்கு எதிரான முட்டுக்கட்டைகள்.

2: தமிழ்பேசும் இலங்கையர்கள்,சிங்களம் பேசும் இலங்கையர்களது தேச இறையாண்மைக்கு எதிரான இயங்கு நிலைகளால் வழிநடாத்தப்படுபவர்கள் எனும் சமூக அச்சத்தைப் பெரும்பாண்மை மக்களிடம் விதைக்கமுனையும் இனவாதிகளுக்கு ஒத்த அரசியல்-சமூக உளவியற்றளத்தை மேலும் விரிவாக்கிக்கொள்ளும்.

3: இலங்கையில் இன்றுவரை சிறுபான்மைச் சமூகங்களைக் கண்காணித்துவரும் சிங்களப் பௌத்தமத மேலாதிக்கம்.மேலும், உறுதுணையாகவிருக்கும் சிங்கள அடையாளத்துடன் பிணையும் மூலதனத்துக்காக, சிறுபான்மை இனங்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ,அவர்களது உரிமைகளைத் தட்டிக்கழிப்பதற்கும் இது உந்து சக்தியாகும்.

4: தமிழ்பேசும் மக்கள் தொடர்ந்தும் தமது அடையாள அரசியலில்"தமீழம்"சார் சமூக உளவிலோடு நெருங்கியே இருப்பதாகவும்,இதன் விளைவாகத் தமிழ்பேசும் மக்களை மேலும் கண்காணிப்பதும் அவர்களது சுயாதீனமான தெரிவுகளை மறுத்து நிற்பதற்கும், இலங்கையில் அவசரகாலச் சட்டம் மற்றும் பிரிவினைவாத அபாயமும் உள்ளதாகச் சுட்டி மேலும் ஒடுக்குமுறைகள் பல வடிவங்களில் நிலைக்க முடியும்.

5: பொதுபல சேனவின் உருவாக்கமும்  பேரினவாதத்துக்கிசைவான அரசியல்-அடையாள எதிர்ப்புப் போராட்டங்களும் இலங்கைச் சிறுபான்மை இனங்களைச் சீண்டி அவர்களது எதிர்ப்பரசியலைக் குறுந்தேசிய வாதமாகச் சிதைத்து, அவர்களது உளவியலைப் புரிவதற்கும்,அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து அரசியல் புரிவதற்குமான பல தெரிவுகளை சிங்கள ஆளும் வர்க்கத்துக்குப்  "புதிய உத்வேகமாக" வழங்கியுள்ளது.

இத் தெரிவுகளது வலையில் வீழ்தப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள், தமது எதிர்ப்பு அரசியலது தெரிவில் நியமான சக்திகளைத் தெரிந்துகொள்ளாதவரை மேலும் தொடரப்போகும் சில சதிகளைப் பார்த்தால்,அஃது, இலங்கையினது இறைமைக்கு அவசியமேயென ஆளும் வர்க்கம் கட்டமைக்கும் அரசியலுக்கு வலுச் சேர்ப்பதில் முடியும்.

இவைகளின்வழி,தமிழ்பேசும் மக்களைப் புலிகளது அழிவுக்குப்பின்பு சோதித்தறியும் ஆசிய மூலதனம் மேலும், தமது மூலதன நகர்வுக்கேற்றவொரு சூழலில் தவிர்க்கமுடியாத சில ஜனநாயக விழுமியத்தினாலான அரசில் முன்னெடுப்பை இனிமேலும் நகர்த்த வாய்ப்பில்லாது போகிறது.

நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் "புலியழிப்பு"யுத்தத்தைப் போற்றும்-சிறப்புச் செய்யும் வெற்றிவாகைக் கொண்டா ட்டத்தின் வழியிலான பெரும்பான்மை இனத்தின் அகவிருப்பும்(வரலாற்றில் துட்டக் கைமுனுவின் இடம்) அதுசார்ந்த பெருமகிழ்வுங்கூடச்  சிறுபான்மை இனங்களது எதிர்பரசியலது மேற்குலகச் சாயல்- தெரிவுகொண்டு,இலங்கையினது "ஒரே" தேசவுருவாக்கத்துக்கு ஆபத்தான உளவியலைக் கொண்டிருக்கிறதென்ற முடிவில் சிங்கள ஆளும்வர்க்கம் தொடர்ந்த-தொடரும் முதன்மையான அடக்கு முறைகளை மேலும் வலுப்படுத்தும்.

இன்றும், தமிழ்பேசும் மக்கள் இணக்கமற்ற பிரிவினைவாத உளப்பாங்கோடு சமூக வாழ்வைக்கொள்வதென்ற உண்மை தெரியப்படுத்தப்பட்டு, இராஜபக்ஷ தமிழ்பேசும் மக்களது மனங்களில் தோல்வியாவது சட்டரீதியான இராணுவ ஒடுக்குமுறையை மேலும் இருப்புக்குள்ளாக்கி விடுகிறது.

ஆக,இராணுவம் மெல்ல முகாம்களுக்குச் செல்வதும்,பரந்தபட்ட தமிழ் மக்களது வரலாற்று மண்ணில் மக்கள் மன்றம் மன்றும் சமூக நிறுவனங்கள் மீளவும், தோன்றியொரு ஜனநாயகச் சூழல் அரும்பி, இயல்பு வாழ்வு வருவது இதன்வழி தடைப்பட முடியும்.பொதுபல சேன இதை நோக்கியே அரசியலைச் செய்வதென்பதில் எமக்கெந்தச் சந்தேகமுமில்லை!

இன்றைய இந்நிலைமையை வெற்றியாகவுருவாக்கிய சிங்கள அரசு இலங்கைச் சிறுபான்மை இனங்களைக் கட்டயாக "இணக்க அரசியலுக்குள்"திணிக்கத்தக்க வன்முறைசார்-மற்றும் வன்முறைசாராக் கருத்தியல் வலுவைக் கொண்டியக்குகிறது.சிறுபான்மை இனங்களுக்கு முன்னுள்ள எந்தத் தெரிவும் தற்கொலைக்கானது.இணக்கமுற்றாலும் அல்லது ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து இலங்கை அரசை எதிர்ப்பதும் தற்கொலையானது.இதைச் சாத்தியப்படுத்தவே புலத்தில் போலிப் புரட்சிகரச் சக்திகளை இலங்கை-இந்தியக்கூட்டு வளர்த்தெடுத்துப் புலி அழிவின் பின் தமக்குள் பல்வேறுவடிவுள் உள்வாங்கிவிட்டு "சமத்துவத்துக்கான" அரசியல்-புரட்சி பேசும் சூழலையும் அதுவே உருவாக்கியுள்ளது!




தமிழ் நிலத்தின் இன்றைய சிங்கள அரச ஆதிக்கமானது கடந்த மூன்று தசாப்த காலமாவிழந்த தனது "அரச ஆதிக்கத்தை"த் தொடர்ந்து தமிழ் மண்ணிற்றகவமைத்து நிலைப்படுத்துவதற்காகவே வியூகத்து,அதற்கமையவே வன்முறைசார் கருத்தியற் கட்டுமானங்களைத் தொடர்ந்து மேல் மட்டமாக வுயர்த்துகிறது. சிங்கள ஆளும் வர்க்கத்தின் அடிக் கட்டுமானமானது சுயாட்சையாகவேனும் ஒரு தேசியத் தெரிவையெடுக்க முடியாதிருக்கும்இலங்கை தழுவியப் பல் தேசியப் பொருளாதாரப் பாச்சலில் குறுக்குவெட்டாய் மேலெழுந்த ஆசிய மூல தனத்தின் இசைவான நட்பார்ந்த கூட்டொத்துழைப்பில் கீழ்காணும் ஆதிக்கத் தகவமைபை அது தொடர்ந்து நிலப்படுத்தவும் முடிகிறது.

அ: தமிழ் பிரதேசங்களில் வலுவான பிரிவினைவாதப் போக்குச்சார்ந்த சமூகவுளவியற்றளம் இன்னமும் அழியவில்லை. எனவே,இராணுவம் இச் சமுதாயத்தை கண்காணித்துப் பிரிவினைவாதப் பயங்கரவாதத்தை இல்லாதாக்க அது மேலும் தமிழ்பேசும் மக்களது மண்ணில் நிலைகொண்டு, அச் சமுகத்தைச் சட்டரீதியாகக் கண்காணிக்கும்.

ஆ: தமிழ்பேசும் மக்களுக்குள் இல்லாதான சிவில் சமூக நிறுவனங்கள் மேலும் உருவாகாதிருப்பதற்கான ஜனநாயகவிரோதச் சட்டங்களின்வழி, அவசர காலச் சட்டம் தொடரும் போக்கில் அரச ஆதிக்கமான அரச ஜந்திரத்தின் வழியிலும், பொருண்மிய வழியிலும்மேலெழும்.

இ: தொடர்ந்தும் இராணுவ விஸ்தரிப்பும், இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பும் சட்டரீதியான அங்கீகாரத்தோடு தமிழ்பேசும் மக்களது மண்ணில் இராணுவச் சர்வதிகாரதைத் தொடர்ந்து நிலைப்படுத்தும்.

இதுவே, இறுதியானதெரிவாகும் நிலையில், தமிழ்பேசும் மக்களது எதிர்காலம் இருள்மயமானது.

எத்தனை கருணா-டக்ளஸ் போன்றவர்கள்"என்ன அபிவிருத்தி-பொருளாதாரவுதவி"செய்து ஏமாற்றிடினும், இலங்கையில் சிறுபான்மை இனங்கள் சிங்கள-இந்திய ஆளும் வர்க்கத்தால் மட்டுமல்லத் தமிழ்க் குட்டி முதலாளிகளாலுங் கூடத் தமது உரிமைகளை இழந்து அழியவே செய்கின்றனர்.

இத்தகைய அரசியல் நகர்வின் விளைவாய்ச் சிறுபான்மை இனங்களது எதிர்காலமானது இருள்மயமானது.குறிப்பாகத் தமிழ்பேசும் மக்களது தலைவிதியே கேள்விக் குறியாகும் என்பதை இங்ஙனம் விளங்கியாகவேண்டும்:


=> தமிழ்ப் பிரேதேசம் தொடர்ந்து இராணுவக் கண்காணிப்புக்குள் இருத்தி வைக்கப்படும்.

=>  சிவில் சமூக மன்றங்களது உருவாக்கம் வருவதற்கான ஜனநாயகச் சூழல் மறுக்கப்படும்.

=> தமிழ்பேசும் மக்கள் தென்னிலங்கையில் தொடர்ந்தும் அச்சத்துக்குரியவர்களாகவே பார்க்கப்படும்-பார்க்க வைக்கும் கருத்தியல் மேலாண்மை பெறும்.

=>  பரந்துபட்ட தமிழ் மக்கள் தொடர்ந்து இராணுவக் கெடுபிடிகளுக்குள் தமது பொருளாதார-அபிவிருத்திகளை இழந்து வருவதைத் தடுக்கும் அரசியல் பலம் இல்லாதாக்கப்படும்.இராணுவத்தின் ஒட்டுக் குழுக்களாகவொரு புதிய தமிழ் மாபியப் பொருளாதாரம் உருவாக்கித் தமிழ்பேசும் மக்களை அனைத்து வழிகளிலும் ஆயுத ரீதியாகச் சுரண்டுவார்கள்.

=> பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஒத்துழைப்பை இவைகளுக்காகப் பெறுவதில், தமிழ் ஆளும் வர்க்கம் சிங்கள ஆளும் வர்க்கத்தோடு மேலும் நெருங்கிக்கொள்ளும்.

=>  பரந்துபட்ட தமிழ் மக்கள் ஆட்சியிலுள்ள தமிழ் தலைமைகளாலேயே திட்டமிடப்பட்டு பழி வாங்கப்படுவர்.

=> இதன் வழியான அரசியல் நடாத்தையில், மகிந்தா தொடர்ந்தும் தேச பக்தனாகவும்,அதியுத்தமமான சிங்களத் தேசியத்தின் குறியீடாகவும் மாற்றப்பட்டு,; தொடர்ந்தும் சிறுபான்மைச் சமூகங்கள் ஒடுக்கப்படும்.

=> மேற்குலகம் தமிழ் மக்களைப் பகடைக்காய்களாக்கிப் பயன்படுத்துவதும்,தமக்கான நலனை இலங்கையில் உறுத்திப்படுத்தவும் புலத்துத் தமிழர்களைப் பயன்படுத்தும்.


இது, தமிழ் பேசும் மக்கள் மத்தியிலுள்ள இராணுவ ஒடுக்குமுறையை மேலும் விரிவாக்கும்.எனவே, சட்ரீதியான அரசியலாகவும் இதை மாற்றும்.இது,"தமிழ் தேசியம்"உயிர்த்திருப்பதற்கும் அதைக் கையிலெடுத்து அரசியல் பிழைப்பை முன்னெடுக்கும் தமிழ் மேட்டுக்குடிக்குமான அறுவடைகளையுஞ் செய்யும்.இதன்வழி ஏமாற்றப்பட்டவர்கள்-படப்போகின்றவர்கள் தமிழ்பேசும் இலங்கையர்களே.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
30.05.2013


P/S: 
 படங்கள் சோனகர்.கொம்,மற்றும் இனியொருவிலிருந்து எடுக்கப்பட்டது.அவர்களுக்கு நன்றி.

Sonntag, Mai 19, 2013

இந்தத் தமிழினம் வாழுமா?

"ஈழத் தமிழனுக்கு" விடுதலை ஒரு கேடா?-தூ!


மிழர்கள் படு மோசமானவர்கள்.உலகத்துள் எப்போதும் ,தமது பிழைப்புக்காக மற்றவர்களது கண்ணீரையும்,தேசவழிப்பையும் நியாயப்படுத்தித் தமது எசமானர்களிடம் தமக்குப் பங்கு கேட்பவர்கள்.

ஈராக்கில் ,இலிபியாவில் ,யுக்கோஸ்லோவியாவில் எத்தனை இலட்சம் மக்களை அமெரிக்க -மேற்குலக ஏகாதிபத்தியங்கள் கொன்றன?

அந்த மக்களது இன்றைய அவலத்தை ,நியாயப்படுத்தும் இந்தத் தமிழர்கள் தமக்கு நியாயம் வேண்டுமெனப் பாசிச ஏகாதிபத்தியவாதிகள் செய்த கொலைகளை நியாயமென அட்டை தூக்கி வீதிக்கு வருவது வேடிக்கையானது.





உலகத்துள்  அமெரிக்க -மேற்குலகப் பாசிச வாதிகளால் அடிமைப்படுத்தப்படும் ஈராக்க, இலிபிய, யுக்கோஸ்லோவிய மக்களையெல்லாம் இந்த ஏகாதிபத்தியத்துக் காட்டிக்கொடுக்கும் தமிழர்கள் ,விடுதலை பெறுவதென்பது பாவமான செயல்!

இவர்கள் ,இந்தப் புவிப்பரப்பில் வாழ்வதே கொடுமையானதென இந்த அட்டைகள் பேசுகின்றன!

இதனாற்றான் இத்தகைய மோசாமான ஏகாதிபத்தியத்துக்கு துணைபோகும் தமிழர்களது அரசியலுக்கும்-போராட்டத்துக்கும் எந்த முற்போக்குத் தேசமும் தலை சாய்ப்பதே இல்லை!

குறிப்பாகக் கியூபா மற்றும் வெனிசூலா , தேசங்கள் கூடத் தமிழர்களது பிழைப்பு வாதத்துக்கெதிராகவே நமது மக்களது அழிப்பைக் கண்டுகொள்ளவில்லை!

பல இலட்சக் கணக்கான மக்களை அரபுத்தேசத்தில் அழித்துவரும் ஏகாதிபத்தியங்கள் ,பொய்யைச் சொல்லி அவர்களது தலைவர்களைக் [Saddam Hussein,Muammar Muhammad Abdassalam Abu Minyar al-Gaddafi,Slobodan Milošević ]கொன்றுபோட்டத்தை நீதியென்று உதாரணப்படுத்தும் தமிழ் அரசியல் பிழைப்புவாதிகளையும் ,அவர்களது பின்னே தலையசைக்கும் புலம்பெயர் இளைய மந்தைக் கூட்டத்தையும்  எந்த அறமும் மன்னிக்கவே மாட்டாது.

இந்தவினம்  ஏகாதிபத்தியங்களது தயவில் பிழைப்புக்காகக் கொலை செய்யவும் ,மற்றைய இனங்களது அழிவைப் பார்த்து மகிழவுமே பழக்கப்பட்டது.

ஆரோக்கியமான-புரட்சிகரமான சமுதாயத்தை இலங்கையில் கட்டியெழுப்புவதையே மேன்மையான நோக்கமாகக் கொண்டு,மக்கள் திரள் எழிச்சியை-இனங்களுக்கிடையிலான தோழமையுடன் கட்டி வழி நடாத்திச் சிங்களச் சியோனிசத்தை வீழ்த்வேண்டிய வரலாற்றுத் தேவையை இந்த மக்களினங்கள் தவறவிடும் துர்ப்பாக்கிய நிலையையும்,பாரிய மனித அவலங்களையும் இத்தகைய ஏகாதிபத்தியங்களுக்குக் கூஜாத் தூக்கும் கயமைத்தனமான அரசியில் ஏற்படுத்தி விடுகிறது.

இதற்கு, எந்த ஆன்மீக - அரசியல் அறமும் ஒரு பொருட்டே இல்லை.

"யாரு செத்தாலும் பறுவாயில்லை அள்ளுவதற்குச் சில்லறைகள் இருந்தால் போதும்"என்று, ஏகாதிபத்தியங்களை அண்டி உலகத்தை வேட்டையாட முனையும் அந்த அழிவுவாதிகளை நியாப்படுத்திப் பிற தேசங்களது இறைமைக்கு ஆப்பு வைக்கும் இந்தத் தமிழினம் வாழுமா?






அழிவார்-அறுப்பார்"தமிழீழ விடுதலை" சொல்லிப் பிழைப்பு வாதிகளாகவும் ,அந்நிய அடியாட்படையாகவும் இருந்தபடி சொந்த மக்களை இலட்சக்கணக்காய் அழித்ததும் இந்தக் கண்ணோட்டத்தாற்றாம்.

தமிழ் மக்களுக்குத் "தமிழீழம்"எடுத்துத் தருகிறோம் எனப்போராடியவர்கள்,இறுதியில் தமிழ் மக்களையே வேட்டையாடிவிட்டு-இலட்சம் மக்களை கொன்று குவித்து,சிங்கள அரச ஆதிகத்துக்கு அடிமையாக்கிவிட்டு,தமிழ் பேசும் மக்களது பாரம்பாரிய பூமியைச் சிங்கள-அந்நிய அரசுகளுக்கு அடிமைப் படுத்திய கையோடு,இன்று அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும், மேற்குலகுக்கும் தமிழ் பேசும் மக்களைத் தொடர்ந்து காட்டிக்கொடுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளது கேவலமான பண மோகமும்-வியாபாரப் புத்தியும் மக்களது உயிரிலிருந்தும்-உழைப்பிலிருந்தும் பெற்ற செல்வங்களைத் தமக்குள் ஏப்பம் விட்டதும் போதாமல்,கருணாவென்றும்-கே.பி.என்றும்,விநாயகன்-நெடியவன் என்றும்மக்களது பணத்துக்காக அடிபட்டுச் சாகும் சந்தர்ப்பத்தில்,அதிகாரம் குறித்துக் கட்டுப்பெட்டித்தனமாக விமர்சிக்கும் உங்களுக்கு விடுதலை ஒரு கேடா?

பிறதேசங்களது அழிவை நியாப்படுத்தும் நீங்கள் ,அழிவதை மற்றவர்களும் நியாப்படுத்தும் தருணங்களை நீங்களே உருவாக்குகிறீர்கள்-நாசமாய்ப்போவார்!

ப.வி.ஶ்ரீரங்கன்
19.05.2013

Sonntag, Mai 12, 2013

ஜேர்மனியப் பாட்டாளிய வர்க்கத்தின் புதல்வன்

ஜேர்மனியப் பாசிசத்திடமிருந்து பல மில்லியன் மக்களை விடுவித்ததும்,பாசிசத்தை ஒட்ட வேரறுத்ததும் சோவியத்தின் செம்படைகளே!அந்த நாள் மே 8 -9.05.1945.

ஜேர்மனியப் பாசிச ஆளும் வர்க்கத்தின் அடியாள் கிட்லரது நாசியப் படைகளது சரணடைவும்-சாவும் பல மில்லியன் மக்களது உயிர் காப்போடு முடித்து வைத்தவர் தோழர் ஸ்டாலின்.

அன்று,தோல்வி கண்ட சில பாசிஸ்ட்டுக்களைக் காத்து, தன்னோடு அழைத்துச் சென்ற அமெரிக்கா இன்று, மிகப் பெரும் பாசிச அரசாக நிலைபெற்று உலகை வேரறுக்கும்போது நம்மிடம் ஒரு சோவியத்து அரசும்-செம்படையும் இல்லை!






இதுவே,உலகத்து மக்களது மீள் தோல்வியாக இருக்கிறது.

எனினும்,மக்கள் மீளச் செம்படைகளாக மேலெழுவர்.

பாசிசத்துக்கெதிரான புரட்சிகர நடவடிக்கைக்கு ஆதாரவாக எழுதப்பட்ட இக் கவிதையைத் தமிழ்ப்படுத்துவதும் ,பாசிசத்தை வீழ்த்தும் அவசியத்துள் பல மில்லியன்கள் மக்கள் கட்டுண்டு போன அன்றைய சூழலைப்போலவே இன்று ,உலகம் ழுமுதும் கிடப்பதைப் புரிவதும் ,புரட்சியின் அவசியம் முன்னெப்போதையும் விடத் தற்போதே அவசியமானதென்றுணருவதும் எனக்குச் சாத்தியமாச்சு.

-ப.வி.ஶ்ரீரங்கன்
09.05.2013


அன்று,செம்படைக்கு நன்றி தெரிவித்து, அவர்களால் காக்கப்பட்டவொரு பாட்டாளியக் கவிஞன் இப்படிக் கவிதை வடித்தான்:


இதயமொப்பிய நன்றி,
சோவியற் செம்படைகளுக்கு...

கிட்லரது பாசிசத்தின் முன்
அடிமையாய்-கட்டாயத்துக்குள்
நிர்பந்திக்கப்பட்டு "வேலை செய்யும்வரை"
உயிர் வாழலாமெனக் கிடந்த நம்மை
அனைத்துக் கஷ்டங்களுக்கும் முகங்கொடுத்து
விடுவித்தவர்கள் எவர்கள்?
அவர்களேதாம் சோவியத்தின் செம்படை வீரர்கள்,
சோவியத்தின் மாவீரர்கள்.
சோவியற் செம்படைகளே,உங்களுக்கு நன்றி,
நீங்களே,சோவியத்தின் மகாப்பெரும்தியாகிகள்!





அனைத்திலும் சிறப்புடையதும்
அழகானதுமான ஜேர்மனியப் பாட்டாளிய வர்க்கத்தின் புதல்வன்
நன்றியென்ற ஒன்றைச் சொல்வதாகவிருந்தால்
யாருக்குச் சொல்ல முனைவான்?
அவன் நன்றியுரைப்பான்
சிந்தப்பட்ட குருதிக்குச் சொந்தமான புதல்வனுக்கே,
அவனே புரட்சியின் புதல்வன்!
செம் புதல்வர்களது குருதியை மறந்திடாதே,
அவர்கள் புரட்சியின் புதல்வர்கள்!



புரட்சி ஒளி வெள்ளத்தால்
உலகம் சூழ்ந்து கிடந்திருக்க-
நாம் அஃதை, ஏலவே உணர்ந்திருந்தோம்:
அனைத்து மகிழ்வுக்காவும் குருதி சிந்தப்பட்டது
இதுவே சோவியத்தின் இதயம்.
சோவியத்து வீரப் புதல்வன் உனக்காகவும்
தன் குருதியைச் சிந்தினான்,
இஃதுதாம் சோவியத்தின் புரட்சி இதயம்!

இதைக் கண்ட நட்ஷத்திரங்கள்
முடிவின்றிப் பிரகாசித்தபடி கீதமிசைகின்றன:
சோவியத் புதல்வன் தன் குருதியால்
உலகைத் தழைக்கை வைத்தான்,
அந்த வீரக் குருதியானது  சோவியத்துக்கே உரியது.
அவன் உலகைச் சமாதானத்துக்கும்,
அமைதிக்கும் உள்ளாக்கினான்
அந்தப் பலத்தை அவனுக்கு அருளியது
சோவியத்தின் பலமான மக்கள் அரசே!


-ஜொஹானெஸ் ஆர்.பெக்கர்

( இவர், ஜேர்மனியில் ஒரு அழுத்தமான குறியீட்டுக் கவிஞரும்,கிழக்கு ஜேர்மனிய முன்னாள் கலை-பண்பாட்டுத்துறை மந்திரியுமாவர்.கூடவே,கிழக்கு ஜேர்மனியின் தேசிய கீதத்தையும் இவரே எழுதினார்.)



    8. Mai - Tag der Befreiung vom Nazi-Faschismus


Dank Euch, Ihr Sowjetsoldaten

Wer hat vollbracht all die Taten
Die uns befreit von der Fron?
Es waren die Sowjetsoldaten,
Die Helden der Sowjetunion.
Dank Euch, Ihr Sowjetsoldaten,
Euch Helden der Sowjetunion!

Wem dankt all das Gute und Schöne
Der deutsche Arbeitersohn?
Er dankt es dem Blut der Söhne,
Der Söhne der Revolution!
Vergeßt nicht das Blut der Söhne,
Der Söhne der Revolution!






Die Welt vom Licht überflutet -
Wir wußten es immer schon:
Für aller Glück hat geblutet
Das Herz der Sowjetunion.
Es hat auch für dich geblutet,
Das Herz der Sowjetunion!

Sterne unendliches Glühen
Lieder singen davon:
Es brachte die Welt zum Blühen
Das Blut der Sowjetunion.
Es brachte der Welt den Frieden
Die Macht der Sowjetunion

Von Johannes R. Becher  [ Johannes Robert Becher (* 22. Mai 1891 in München; † 11. Oktober 1958 in Ost-Berlin) war ein deutscher expressionistischer Dichter und Politiker, Minister für Kultur sowie erster Präsident des Kulturbundes der DDR. Bekannt ist er auch als Verfasser des Textes der Nationalhymne der DDR. http://www.dhm.de/lemo/html/biografien/BecherJohannes/    ]

Samstag, Mai 04, 2013

இலங்கை அரசு, இனவாத அரசென்பது பொய்யானது.

அசோக்கின் கட்டுரையை முன்வைத்து இலங்கை அரசினது புலத்து லொபிகளைப் புரிந்து கொள்ளல் என்பது...

சோக்கினது கட்டுரையில் பேசப்படும் விடையங்கள் குறித்துத் தொடர்ந்து பேசப்படவேண்டும்.இன்றைய பிளவுவாத அரசியலை வகுத்தியங்கும் சிங்கள அரசு மற்றும் இந்தியப் பிராந்திய நலனும் பரவலாகத் "தலித்துவ" அமைப்புகளையும் , பிரதேசவாதப் பிளவு வாதத்தையும் கூர்மைப்படுத்தும் கருத்தியலைப் பிழைப்புவாதிகளது நலனோடிணைத்துக் கருத்துப் பரப்புரை செய்கிறது.

இதன் வழித் தமிழ்பேசும் மக்களைப் பிளப்பதற்காகவே கருணா-பிள்ளையான் குழுவைக் கட்டிக் கிழக்குப் பிரதேச வாதத்தைத் திறம்படச் செய்தன ,இத்தகைய நலன்கள் -அரசுகள்.

இதன் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்ட  பிரான்சுத் தலித்துவது முன்னணியும் அதன்  உறுப்பினர்களும் மற்றும் கிழக்கைப் பிளப்பதில் தனக்கான ஆதாயத்தைக் கண்டடைந்த பிழைப்புவாதியும் ,ஆட்காட்டியுமான ஞானமும் இதன் உச்சக்கட்டமான இயங்கு தளத்தை நமக்குள் நிகழ்த்திக்காட்டினர்.

கிழக்கைப் பிளந்த இந்திய-இலங்கை வியூகம்:

கிழக்கைப் பிளந்த இந்திய-இலங்கை ஆளும் வர்க்கங்கள் ,தமிழ்ப் பிரதேசமெங்கும் ஒட்டுக் குழுக்களை வைத்து மக்களை ஆயுதத்தால் அச்சமூட்டியும், அடிமைப்படுத்தியும் வந்தன.புலிகளது அதே பாணியில் ,இத்தகைய குழுக்கள் மக்களை அச்சமூட்டி அடிமைப்படுத்தியதுமல்லாது சாதிரீதியாகவும்-பிரதேச ரீதியாகவும் பிளந்தனர்.இதன் தொடரில் அராசகம் புரிந்த பிள்ளையானோடு இன்றுவரை கைக் கோற்கும் ஞானம் , பிள்ளையானின் அரசியல் ஆலோசகர் என்பதும் ,அந்த அரசியலுக்குக் கருத்தியல் வலுக்கொடுப்பதென்பதும்,  இலங்கை அரசினது தமிழர்கள்மீதான ஒடுக்குமுறைக்கு ஒத்தோடுவதென்பதும் ,அதன்வழியான அரசியலானது முற்று முழுதாக இந்திய நலனுக்குட்பட்டதென்பதும் நாம் அறிந்ததே.

பிள்ளையானது கட்சியின் உறுப்பினனான ஞானம் தேர்தல் பரப்புரை செய்து, அடவாடித்தனமாக மக்களை வெருட்டிய பிள்ளையானுக்குத் தோழமையானவரென்பதும் ,சட்டபூர்வ ஆலோசகரென்பதும் உரறிந்ததே.

இலங்கை அரசுக்கும் அதன்  இராணுவ ஆதிக்கத்துக்கும் ,தமிழ் மக்கள்மீதான ஒடுக்குமுறைக்கும் உடந்தையாகவே அரசியலை முன்னெடுக்கும் பிள்ளையான்-கருணா மற்றும் கே.பி. ,டக்ளசு போறோரெல்லாம் இலங்கை அரசினது  அரசியல் செல்வாக்குக்குட்பட்டவர்களானாலும் அவர்கள் அனைவரும் இந்திய அரசினது செல்வாக்குக்குட்பட்ட லொபிக் குறுப்புகளே. இங்கே, இவர்களை மெல்ல இயக்கும் வரதராசப் பெருமாளையும் இனங்காட்ட வேண்டும்அசோக் இந்தத் தளத்திலும் இயங்கும் அரசியலைக் குறித்துப் பேச வேண்டும்.இவர்களனைவருமே ஆபத்தானவர்கள்.

சோபாசக்தி போன்றோரை இந்தப்புள்ளியில் புரியவேண்டுமானால் "வரதாசாப் பெருமாளுக்கு ஈழப்போராட்டத்துள் ஆக்க பூர்வமான வரலாறொன்று இருக்கிறது" என்ற சோபாசக்தியின் கருத்திலிருந்து புரியும் அரசியலானது இந்தத்  தளத்தை மேலும் புரிய வைக்கும்.

அன்று ,இந்திய ஆமிகளோடு கப்பலேறிய அரசியலானது தமிழ்பேசும் மக்களது நலனுக்கான தெரிவில்லை!அது,முற்று முழுதாக இந்திய நலன்களை இலங்கைக்குள் திணிக்கும் ஒரு நிகழ்சியாகும்.

இப்போது,அசோக்கைப் புரியும்போது மிகச் சரியாகவே இத்தகைய பிளவு வாதிகளையும் இந்திய  இலங்கைக் கைக்கூலிகளையும்  கணித்துச் சொல்கிறார்.

இந்தச் சதியாளர்கள்தாம் இலங்கைக்கும்-புலத்துக்குமாகப் பறந்து, பறந்து  அரசியல் செய்வதிலிருந்து இலங்கைக்குப் புலத்து மக்களைக் காட்டிக் கொடுப்பதுவரை இவர்களது தெரிவாக இருக்கிறது.இத்தகைய இலங்கை -இந்தியக் கூலிகளைச் சாதரண நபர்களாக்கும் முயற்சியின் தெரிவாகவே இவர்கள் ,இலக்கியம்-சந்திப்புகள் ,கலந்துரையாடலெனச் செய்து மாற்றுக் கருத்துடையவர்களைத் தமக்குள் கிரகிக்கும் போது இது,சதியை மேலும் அரசியற்றளத்தில் வலுவாக்கிறது.இவர்களோடு வாசுதேவன் போன்றவர்கள்கூட  அரசியல்-கலந்துரையாடல் செய்யும்போது எனக்கு வாசுதேவன் பேசும் தேசியம்-புலிவழியான போராட்டம் புரியும் தளமானது பிழைப்புவாதம் மட்டுமல்ல.இதுவும் ,ஒருவகை இந்திய லொபி அரசியலே!

ஒருவகை  லொபி:





இங்கேயிதை மேலும் விரித்துச் சொல்வதானால் முள்ளி வாய்க்காலுக்குப் பின் யாழ்ப்பாணஞ் சென்ற தேவதாசன்-இராகவன்(முன்னாள் புலிகளது இயக்க-மத்திய குழுவின் முன்னணித் தலைவர்)மற்றும், சுகன் போன்றவர்கள் யாழ்பாணத்திலியங்கும் இந்திய-இலங்கை அரசுகள்சார்  குகதாசனின்   தமிழ்த் தொலைக் காட்சியொன்றில் தோன்றித் தமது பேட்டிகளை வாரி வழங்கினர்.அப்போது, யாழ்ப்பாணத்தில் கந்தோரோடையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட வரலாற்று ஆவணமான புத்தர் சிலைகள் குறித்துக் கருத்துச் சொன்ன வரலாற்று மேதை இராகவன்: "இவைகளெல்லாம் உறுதிப்படுத்தும் உண்மைகள், சிங்கள மக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னமே இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான ஆதாரம்" என்றார்.

இதையும் மீறித் தேவதாசனும்,இராகவனும் அழுத்தமாகச் சொன்ன இன்னொரு கருத்தானது"தமிழ்பேசும் மக்கள்,தமிழர்கள்என்ற அடையாளத்தோடு செயற்படாது நாம் அனைவரும் இலங்கையர்கள் என்று ஒற்றுமையாகச் செயற்படவேண்டும்-நாட்டை வளர்க்கவேண்டும்-காக்கவேண்டும்" என்றார்கள்.

இஃது, 2010-11 க்குள் நிகழ்ந்த இலங்கை அரசு-இந்திய வியூகத்தினது தயாரிப்பாகவே அன்று நான் பிரித்துடைத்துச் சொன்ன பதில்.இது குறித்துத் தூண்டிலிலும்,ஜனநாயகத்திலும் நான் பதிவுகளைப் பதிந்தே வைத்திருக்கிறேன்.

இந்தப் பல்வேறுபட்ட இலங்கை இந்திய நலன்களுக்குடந்தையான இத்தகைய பிழைப்புவாதிகளைக் குறித்து அசோக் நேர்மையாகப் பேசுகிறார்.மக்கள் நலன்சார்ந்து தோழர் அசோக் பேசுவது மிகவும் வரலாற்றுத் தேவையானது.
ஏனென்றால் நிர்மலா குழுவின் முக்கிய புள்ளி இராகவன் பேசுவதை மேலும் பாருங்கள் .இலங்கையில் இனவொதுக்கல்-அரசபயங்கரவாதம் அற்ற சூழல் உருவாகிவிட்டதாகவும்  மேலும் வடமாகாணம் தனியே தமிழருக்குரியதல்ல அங்கே சிங்களவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்வதாகவும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களம் பேசும் மக்கள் மீளத் தமது தாயகத்துக்கு வந்தபோது, அவர்களைச் சந்தித்த கையோடு இராகவன் பேட்டி வழங்கியதொரு திசையில்"புதைபொருள் ஆராச்சியின் மூலம் கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த மத அடையாளங்களெல்லாம் வரலாற்று ரீதியாகச் சிங்கள மக்கள் இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான அடையாளங்களென" வேறு வரலாற்று நூல்கள்வழி உண்மையுண்டென இராகவன்  சொன்னபோது எனக்கு உடம்பெல்லாம் ஒரே புல்லாரிப்பு!

முதலியார், செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை போன்றோரது ஆய்வுகளை முன்வைத்து தமிழ்ப் பிரதேசங்களில் கண்டடைந்த பௌத்த மத அடையாளங்களைச் சிங்கள மக்களது வாழ்வின் எச்சமெனக்கொள்ளும் புத்திக்கு வரலாற்றைப் புரிவதில் பேரினவாதத்தின் புகழ்ச்சி அவசியமாக இருக்கிறது இவர்களுக்கு.இந்தச் சந்தர்ப்பவாதமானது காலவோட்டத்தில் தமிழ் மக்களை அரசியலுரிமையற்ற மந்தைக் கூட்டமாக்கும் நரித்தனமான சிங்கள ஆளும் வர்க்கதஇதுக்குத் துணைபோவதே!இது வரலாற்றை மட்டுமா புரட்டும்?-முடிந்தால் சிங்கள இராணுவத்தின் ஒடுக்குமுறைகளைக்கூட  இத்தகைய குழுக்கள் நியாயப்படுத்துவதும் அதன் தளத்தில் இது வேளாளரின் பொய்யென்றும் சிங்கள இனவாத அரசுக்குத் துணைபோவதிலிருந்து தமது இருப்பை உறுதிப்படுத்தும்.

பௌத்தம் என்றால் சிங்களவர்கள்,சிங்களவர்கள் என்றால் பௌத்தம் :

இலங்கையின் வடபிராந்தியத்தில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்ததும்,அவர்களது அடையாளங்களும் பௌத்த மதத்தோடு பிணைந்திருந்ததை எங்கே போய்ச் சொல்ல?

பௌத்தம் என்பது சிங்களவருக்கு மட்டுமே இலங்கையிற் சொந்தமெனக் காணும் தமிழ் வரண்ட மூளைக்குத் தன் முன்னோர் ஆரம்பத்தில் பௌத்தர்களாக,சமணர்களாக வாழ்ந்திருந்தனரென்று அறிய முடியவில்லையென்றால் வாயை மூடி மௌனித்தல் நலமே..ஆனால் இராகவன்-நிர்மலா போன்றவர்களும் இவர்களைப்போலவே பிளவுவாத அரசில் செய்யும் ஊக்கங்கொண்ட மேற் சொன்னவர்கனளும் சந்திக்கும் புள்ளி இலங்கை -இந்திய மற்றும் அந்நிய ஆர்வங்களுக்காகத் தமிழ்பேசும் மக்களைக் காட்டிக்கொடுத்தலோடு இலங்கையின் புரட்சியைக் காயடித்தலென்பதே இதன் அர்த்தம்!

இத்தோடு புலத்துத் தலித்துவக் குழுக்களது போலித்தனமான கோசத்தை நாம் மேலும் பார்ப்போம்.இன்று,இலங்கை பூராகவும் நிலவும்(ஏன் இந்தியா பூராகவும்)சாதியமைப்பு, நடைமுறையிலுள்ள சமூக அமைப்பின் உருவாக்கமல்ல. நிலவும் நவகாலனித்துவ அமைப்பு தனது முழுமை பெறாத முதலாளித்துவ வளர்ச்சிக்கொப்பச் சீர்படுத்திக்கொண்ட(தடுத்தாட்கொண்ட)அல்லது திருத்தி அமைத்துக்கொண்ட இலங்கையின்-இந்தியாவின் கடந்தகால நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் ஒரு ஊக்கமாகவே இந்தச் சாதிய அமைப்பு முறை மேலெழுகிறது.

இதைக் குறுக்கி வாசிக்கத் தள்ளப்பட்ட புலத்துத் தலித்துவக் குழுக்கள் தமது எசமானர்களது நலத்தின் பொருட்டு ,அதையே தனிப்பட்ட வகைமாதிரிக்குள் மொன்னைத் தனமாக விளக்குவதும் கூடவே ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்குக் குறுக்கே நின்று கல்லெறியும் வினையாக மாற்றுகின்றனர்.இது திட்டமிட்ட சதி!

சாதியமைப்பின் நிலைகளையும்,இன்றைய நிலைக்கான காரணத்தையும் ஆய்வதென்பது:





கடந்த 600 ஆண்டு வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டிய தேவையைப் பின் தள்ளிவிட்டு, சமீப வரலாற்றில் 60 ஆண்டு அரச முதலாளியத்தின் கடைக்கோடியில் தமிழ்பேசும் சமுதாயத்தைக் கழுமரத்தில் ஏற்றுவது நியாயமான அறிவுப்போக்கல்ல.ஆனாலும், இவர்கள் அதைத் தெரிந்தே செய்கின்றனர்.இதுதாம் இவர்களுக்கான நிகழ்சி நிரல்.இதை வகைப்படுத்தி இயக்கும் ஒடுக்குமுறையாளர்கள் ,தமது இலக்குத் தமிழ் மக்களைப் பிளப்பதென்பதால் இத்தகைய பிளவை அரசியல் ரீதியாக இயக்கவும் ,அதைச் சட்ட ரீதியாக்கவும் முயலும் கருத்துக்களைக் கட்டுகின்றனர்.அதுவே, ஒருகட்டத்துள் சாதியச் சமூகங்களாக அடையாளப்படுத்தப்பட்டு அது, "சுதேசி அடையாளமாக" க் கருத்தியற்றளத்தில் ஏற்கப்பட்டுச் சலுகைகளை வழங்குவதிலிருந்து அதை நிலைப்படுத்தவும் ,அதன்வழியில் மக்களை ஒரு குடையின் கீழ் அணி திரள்வதைத் தடுப்பதிலும் கவனமாக இருக்கின்றனர்.

தற்போது நிகழும் அணிச்சேர்க்கைகளை உற்று நோக்குபவர்களது புரிதலில் பல உண்மைகள்”தமிழீழப் போராட்டம்”குறித்தும்,தமிழ் மக்களது அரசியல் எதிர்காலம் குறித்தும் ஓரளவு இனங்காணத்தக்க அரசியல் புரிதல்கள் சாத்தியமாகிறது.இன்று,மக்களைப் பல கூறுகளாக இனங்கண்ட புலிவழிக் கருத்தியல் தன்னளவில் இலங்கையில் உடைவு காணுந்தறுவாயில் புலத்தில் பிழைப்புக்கான இருப்பாக இது நிலைப்படுத்த முனையும் அரசியலை இந்த அணிச் சேர்க்கை வற்புறுத்துகிறது.

இனவொடுக்குமுறைக்கெதிரான தேசிய விடுதலைப் போரை பிற்போக்கான வகையில் முன்னெடுத்த இயக்கவாத மாயை தகர்ந்து தவிடுபொடியாகும் தருணம் புலிகளது அழிவோடு சாத்தியமானது. எனினும்,புலிகளது வெற்றிடத்தைக் குறித்துக்கொண்டிருந்த அந்நிய மூலதனம் தனது தேவைக்கேற்ற குழுக்களை அதன் இடத்தில் இருத்துவதே அதன் முதற்பணியாக இப்போதிருப்பதென்பது உண்மையானது. இதை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிப் புறச் சக்திகள் மெல்லத் தமது நலன்களை மையப்படுத்திய அரசியற் கருத்தரங்கங்களையும்,அதுசார்ந்த பொருளாதார ஒத்துழைப்புகளையும் குறித்து வகுப்பெடுக்கச் சந்திப்புகளைச் செய்கிறது.இந்தத் திடீர் அரசியற் கருத்தரங்கங்கள்-பட்டறைகள் யாவும் தமிழ்பேசும் மக்களது உயிரைக்குடித்த இயக்கங்களது முன்னாள்-இன்னாள் உறுப்பினர்கள்-அரசியல் ஆலோசகர்களை வைத்தே நடைபெறுவதைக்கவனித்தால் இதன் உள்ளடக்கம் புரியத் தக்கது.இதிற்றாம் ஞானத்தின்-தேவதாசனின் இராகவனின் ,நிர்மலாவின் பாத்திரங்களைப் புலத்தில் உருவாக்குகிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லவேண்டும்.இலங்கை அரசானது இந்தியாவின் வியூகத்துக்கமைய தனக்காவும் ஒரு லொபிக் குழுவை உருவாக்கிக்கொண்டாலும், அத்தகைய குழுவானது இந்திய ரோவுக்கும் கூசாத் தூக்கும்  சந்தர்ப்பமானது இயக்கங்களது நலனுக்குட்பட்ட அரசியலோடு பொருந்துவது. இதுவே "வேளாளன்-வேளாளன் ,யாழ் மேலாதிக்கம்"எனத் தொண்டை கிழியக் கத்திக்கொள்கிறது.

பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்:

ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடித்திருக்கிறார்கள்.புலிகள் அழிந்த கையோடு அவர்களது உப பிரிவுகள் தனித்தியங்க அனுமதிக்கப்பட்டு,புலிகளது தொடர் இருப்புக்கான பல் முனை நகர்வுகள் ஒழுங்கு படுத்தப்படுகிறது.அந்நிய சக்திகளிடம் கட்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது. இதற்குத் தோதாகவே தலித்துவக் குழுக்களைச் சாதியம் பேச வைத்தும் ,வேளாளரின் ஆதிக்கம் என்றெல்லாம்  வகுப்பெடுத்துத் தமிழ்பேசும் மக்களுக்குள் உட்  பூசல்களைத் தொடர்ந்து வளர்த்துவருகிறது  இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கம்.





இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு,தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது .இது,புதிய இலங்கையின் புரட்சிக்கு எதிரான கூறுகளைக் கொண்டியங்குகிறதென்பதை நாம் மறுக்க முடியாது.இதற்குத் தோதான அரசியலைக் கிழக்கில் பிள்ளையான்-கருணா குழு முன்னெடுக்கும்போது வடக்கில் டக்ளசு சார்ந்து சாதியவாதப் பிளவுகளை நிலைப்படுத்தத் தலித்துவக் குழுக்களைத் தீனிபோட்டு வளர்க்கும் அரசியலானது வடமாகாணத்துள் மக்களைத் தொடர்ந்து பிளவுப்படுத்திக் காலப் போக்கில் பெரும் கலவரங்களைச் சந்திக்க வைக்க முனைகிறது.இது, சிங்கள இனக் கலவரத்துக்கொப்பவும் அல்லது மேலும் பெரிதாகவும் வளர்க்கப்பட்டுச் சிங்கள இனவாதமெல்லாம் வேளாளரின் சாதியவொடுக்குமுறைக்கு நிகரானதல்ல என்றும் , வரலாறுரைக்கப்படலாம். இங்கு, பிரதான முரண்பாடு வேளாளச் சாதிய ஆதிக்கமேவெனும் அரசியல் கருத்தாக்கவும் ,இதுசார்ந்து மெல்ல எழுப்பப்படலாம்.இன்றைய தலித்துவ மற்றும் பிரதேசவாதப் பிளவு வாதமெல்லாம் இதை நோக்கிய நகர்த்தப்படுகிறது.

இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க,பால்-நிறபேதங்களும்,சாதிய-இன,மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல.இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது.ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும்,அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமைiயும் இதற்குள் திணிக்கிறது.இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இந்தப் புரிதலோடு இன்றைய புலம்பெயர் தமிழ்க் குழுமத்தின் அரசியல் நகர்வைப் புரிய முனைந்தால்அந்நியத் தேசங்களது கனவானது தமிழ் மக்களைப் பிரதேச ரீதியாக எங்ஙனம் பிளந்துள்ளதென்றும்,அதன் தொடர்விருத்தியாக முன் தள்ளப்படும் கட்சிகள்-குழுக்களது மாதிரிக் குட்பட்ட அரசியல் அமுக்கமும் புலியினது போராட்டப் பாதையின் எச்சமாக நகர்வதை இனங்காணமுடியும்.

இன்று புலம்பெயர் தளத்தில் ஊடகவன்மமாகவும்-கட்சிகட்டும் பெரிய போர்வினை நுட்பமாகவும் ஒருங்கே தமிழ்மக்களது விடிவு குறித்து வகுப்பெடுக்கின்றனர்.ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஏதோவொரு அரசியல் இருக்கிறது.இது, அவரவர் சார்ந்தியங்கும் தத்துவங்கட்கு அமைய நிகழ்வதில்லை.மாறாக, அவரவர் வர்க்கத் தளத்தைச் சார்ந்து இது மையமானவொரு செயற்பாட்டை நெடுக வற்புறுத்தி வருவதனால்,அதைச் சாதிப்பதில் எழும் சிக்கல்களை முழுமொத்த மாற்றுக் கருத்து நிலைகளுக்கும் பொதுமைப்படுத்தும் நோக்கில், பற்பல எண்ணங்களைப் புனைகின்றார்கள்.இதுள் தனிநபர்சார்ந்த ஒழுக்கம்முதல் அவரவர் சொந்த விவகாரங்களும் மக்கள் நலன் என்ற முலாம் பூசப்பட்டு வெளியுலகுக்கு ஒருவித வன்முறை அரசியலாக வெளிவருகிறது.





இவை நமது மக்களது எதிர்காலவாழ்வு குறித்துப் புதுவகைக் கருத்துக்களைத் தமது எதிர்கால இலங்கை அரச வியூகத்திலிருந்து தொடரும் புதிய தெரிவுகளில், புலம்பெயர் தமிழ்க் குழுக்கள் அரசியல் ரீதியாக அணிதிரள்வது புரட்சியெனப் பரப்புரைக்குள்ளாக்கப்படும் தருணத்தில் பக்கம் பக்கமாகப் புதிய தொடர்கள் ஏதோவொரு மூலையில் இருப்பெடுக்கிறது.

மாற்றுக் கருத்தாளர்களென நம்மை நாம் பிரகடனப்படுத்திய கையோடு,நமக்குள் சிதைவுறம் நமது செயலூக்கம்,இன்று, பெரும்பாலும் நமக்குள் வன்மைத்தைத் தகவமைத்தில் முடிவடைகின்றன.

இவை நமது மக்களது பிரச்சனைகளைச் சொல்லியே தத்தமது எஜமானர்களது தேவைகளைக் கையிலெடுத்துள்ளது.இங்கே, தலித்துக் குழுக்களோ அல்லது கிழக்குப் பிள்ளையான்-ஞானம் மாபியாக்களோ அன்றி இலக்கியச் செம்மல் சோபாசக்தியின் விசமக் கருத்தாடலோ விலக்கல்ல.இது, குறித்து அசோக் பேசுவது ரொம்பச் சுணக்கமென்றாலும் பேசினரென்பது மக்கள் நலன்சார் அரசியலுக்கும் ,அதுசார்ந்து மக்களது உரிமைகளைத்  தூக்கிப்பிடித்து, இலங்கையில் உரிமைகளைப் பல்வேறு தேசியவினங்கள்-சிறுபான்மைச் சமுதாயங்காளக இருந்தபடி வென்றெடுப்பதற்காகவேனும் நாம் மேற்காணும் இலங்கை -இந்திய லொபிகளது பிளவுவாத - மக்கள்விரோத முகங்களைக் குறித்துக் கவனத்தைத் திருப்பியாகவேண்டும்.இதைவிட வேறொரு தெரிவு முள்ளி வாய்க்காலுக்குப்பின் ஒடுக்குமுறையாளர்கள் விட்டு வைக்கவில்லையென்பதும் நாம் தரிசிக்க வேண்டிய யதார்த்தமாகும்.

ப.வி.ஶ்ரீரங்கன்
03.05.2013

Mittwoch, Mai 01, 2013

மேதின ஊர்வலத்துள் நமது தேசிய...

வழமையான கோரிக்கையோடு வழமையாக வந்து, போகும் மே தினம்!


லங்கை-இந்திய அரசுகளோடிணைந்து பிழைப்புவாத அரசியல் செய்யும் எம்.ஆர்.ஸ்டாலின் (ஞானம்),கடந்த 1994 ஆம் ஆண்டு இதே தினத்துள்(01.05.1994) திரு.சபாலிங்கம் அவர்கள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதைக் குறித்து, "19 ஆம் ஆண்டு நினைவு" கூரலெனவொரு குறிப்பை எழுதுகிறார்.

அவமானகரமான அரசியலைப் பிளவு வாத வியூகத்துக்கமையப் பிரதேசஞ் சார்ந்து நகர்த்தும் ஞானம் - விஜி தம்பதியினர் ஒடுக்குமுறையாளர்களது இன்னொரு கூட்டின் அநுதாபிகளாகவும்-அடியாட்களாகவுமிருந்தபடி அன்று, ஒடுக்குமுறையாளர்களால் கொல்லப்பட்ட நண்பர் சபாலிங்கத்துக்கு "இன்று நினைவு கூர்" குறிப்பெழுதுவதுகூட இன்னொரு சதி அரசியலாகவே இருக்கும்.

1994 ஆம் ஆண்டு, அவரது படுகொலைச் சாவு குறித்து நாம் வீடுவீடாகப் போட்ட பிரசுரத்தை எவருமே முன்வந்தெழுதாத- முடியாத சூழலில்,




 இந்தத் துண்டுப்பிரசுரத்தைப் பிரான்சிலிருந்து எழுதியவர் எவரென்று நமக்குத் தெரியுதோ இல்லையோ அதுவும் "நண்பர்கள்" என்ற பொது அவியலில் இன்று, ஞானம் போன்றவர்கள் மேதினத்தின் பெயரால் சபாலிங்கத்துக்கு நினைவு கூரவில்லை.

அதிலிருந்து, இன்னொரு அடையாள வருகையோடு தனது எஜமானர்களுக்கானவொரு அரசியலை மீளக் கைகாட்டும் சூழ்ச்சிக்குள் ஞானம் துணிந்து நகர்த்துவது நாம் காணவேண்டிய புள்ளிதாம்.

இதைத்தாண்டி ,நாம் இன்றைய மேதின ஊர்வலத்துள் நமது தேசிய வாதிகளது கோலத்தைக் கீழே பார்ப்போம்.

இன்றைய தினமும் வழமையானவொரு தொழிலாளர் தினமாகவே சென்றது.வைத்திருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பும் அச்சொட்டாகவே நிகழ்கின்றது.வெஸ்ற்பாலின் மாநிலத்தின் தலைநகர் டுசில்டோர்ப்பில் [ Düsseldorf ]திரண்ட தொழிற்சங்கங்கள்,கட்சிகள் வழமைபோலவே தொண்டை கிழியக் கதறிவிட்டோயும்போது,தொழிங்சங்கங்கள் தொடர்ந்து, பொருளாதார வாதத்தினூடாக இந்த அமைப்பைக் காப்பதில்"வேலைக்கேற்ற ஊதியம்-அடைப்படை ஊதிய நிர்ணயம்,தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள் வழங்கும் நிறுவனங்களை அகற்றுதல்"என்று வழமையாக...

நானும்,இந்தக் கேலிக்குரியதாகப் போன மேதின ஊர்வலத்துள் மார்க்சிய லெனியக் கட்சியூடாக [MLPD]ஏகாதிபத்தியத்தின் யுத்தம்,அவ்கானிஸ்த்தான்-பாகிஸ்தான் குழந்தைகளைக் கொல்லும் வானேவித் தாக்குதலையெல்லாம் அம்பலப்படுத்தியம்,விவாதித்தும் வீடுமீண்டேன்.






சென்றாண்டைப் போலவே இவ்வாண்டும் "தி லிங்க"[Die Linke] கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்,உப தலைவியுமான சாரா வாகன்கினேக்ற் [ Dr.Sahra Wagenknecht] வருகை தந்திருந்தார்.அவரோடு உரையாடியபோது ஜேர்மனிய அரசின் நேட்டோ யுத்த முன்னெடுப்பின் இரட்டை முகத்தைக் குறித்தும் விவாதித்தேன்.கூடவே,நிறையவே விவாதித்தேன்.அரேபியவுலகப் போராட்டங்கள்,பாகிஸ்தானில்-அவ்கானில் வானேவிக்குச் [Drone attacks   ]சாகும் குழந்தைகள் குறித்தும், ஜேர்மனி அவ்கானில் குடிசார் அபிவிருத்தியை முன்னெடுப்பதாகச் சொல்லியபடி தற்போது கொள்முதல் செய்யும் வானேவிக்குக் காரணங் கூறும்போது,"அவ்கானில் வாடகைக்கு அமர்த்திய வானேவிக்கு வருடமொன்றுக்கு 30 மில்லியன்கள் யூரோவை வாடகையாகச் செலுத்துவதால் சொந்தமாக வானேவி வேண்டுவதென்பது" ,முன்பு வானேவியை உபயோகித்ததென்பதுதாம்என்றும், "ஜேர்மன் அவ்கானில் அபிவிருத்திக்கு உதவுவதென்பது "யுத்தமே என்பதைக்குறித்துச் சாராவோடு விவாதித்து அவரிடம் "ஓட்டோக்கிராம் ஒன்றை"[  Autogramm ] எனது  புத்தகத்துள் பொறிக்கச் சொல்லிய நான், எனது தேசத்துப் பிரச்சனை குறித்து எதுவுமே பேசவில்லை.

அது ஏன்?

கீழ்வரும் எனது அநுபவம் மீளவும், இந்தப் பிழைப்புவாதிகளது வியாபாரப் புத்தியால் தமிழ்மக்களது உண்மையான விடிவையே  மறுக்கும் நிலையாச்சே!. இது, வேதனையானது!

இவ்வாண்டிலும் தமிழ்பேசம் மக்களது தேசிய விடுதலைக் குத்தகைக்காரர்களோடு மீளவும், முரண்பட்டேன்.

தற்போது, யாரெவரெனத் தெரியாதிருக்கும் ஒரு புரியாணிக்கடையைத்தாம் தமிழ்பேசும் மக்களது பிரச்சனையை வெகுஜன அரங்கில்பிரச்சாரப்படுத்தும்-தெளிவுப்படுத்தும் அரங்காகக் கட்டிவைத்திருந்தார்கள்,புலிவேடம் கழற்றியப் பணப் புலிகள்.

மேதின ஊர்வலம் இறுதியாக அடையும் தளத்தில் பல்வேறு கழகங்கள்-கட்சிகள்,அமைபுகளென ஒவ்வொரு தேசிய இனங்களும்,தத்தமது விடுதலைக்காக இந்தப் பிரச்சார அரங்கைத் தகவமைத்துத் தம் [ Infostände  ]அடையாளத்தைக் கொட்டையெழுத்தில் எழுதியும்,குறியீடுகளைப் பொருத்தியும்-கட்டியும் அரங்குகளை அமைத்திருந்தார்கள்.அத்தோடங்கு பிரசுரங்களைக் குவித்து வைத்துத் தமது பிரச்சனைகளை அங்கு திரண்ட பல்லாயிரம் மக்களுக்கு விளக்கியும்-தோழமை கோரியும் அரசியலை முன்னெடுக்கும்போது தமிழீழ விடுதலைப் புலிகள் சில பத்துத் தமிழர்களைக் கூடியவரை சின்னஞ்சிறுசுகளை வைத்து மேதின ஊர்வலத்துக்குப்பின் நகரவிட்டுவிட்டுத் தாம் புரியாணிக்கடை போட்டு கொளுத்த வியாரஞ் செய்தனர். இதுதாம் புலிகளது இன்றைய அரசியற் பாதை!





அங்கு , நம் பிரச்சனை சொல்லும் ஒரு துண்டுப்பிரசுரமோ இருக்கவில்லை.அந்தப் புரியாணிக் கடையை எந்த மக்கள்சார்பாய், எவர் பெயராலென்றும் குறிப்பிடாது முண்டமானவொரு பெட்டிக்கடைபோலவே அஃதிருக்க, நான் மிகவும் வேதனையடைந்தேன்!

இந்தப் பிழைப்புவாதத்தை நமது சனத்துக்குள்அம்பலப்படுத்தி ,அவர்களோடு விவாதித்தேன்.

அங்கு மும்மரமாகச் சாப்பாடுகளை விற்றவர்கள் ஒருவரைக்காட்டி"இவர்தாம் புலிகளது பொறுப்பாளர்,இவரிடம் கேள்விகளை-கருத்துக்களைச் சொல்லுங்கள்"என்றார்கள்.

நானும், அந்தக் குறிப்பிட்ட நபரிடம் இதைக் குறித்துக் கேட்டபோது அவரோ "எனக்கு இது குறித்து விவாதிக்க நேரமில்லை.சாப்பாட்டுப் பெட்டிகளை இறக்கவேண்டும்.வானில் இருக்கும் பொதிகளை இறக்க வேண்டும்"என்று நகர்ந்தார்.

என்ன இது?

தமிழ்த் தேசியம் பேசி,மூன்று இலட்சம் மக்களைக் கொன்றவன்கள்,இப்படிப் பிழைப்புவாதிகளை உருவாக்கிவிட்டு,ஒடுக்குமுறையாளரோடு தம்மை ஐக்கியப்படுத்தியபோது இந்த வியாரிகள் நமது பிரச்சனைகளைச் சொல்லும் முகமாக வழங்கப்படும் இந்தத் தினத்தில் கட்டப்படும் பிரசார அரங்கைப் புரியாணிக் கடையாக்கி விட்டார்களே!இது நியாயமா?

இந்த அவமானகரமான நிகழ்விலிருந்து ஒன்றைச் சொல்வேன்:

புலத்துத் தமிழ்பேசும் மக்கள் கட்டாயம் விதேசியப் புலிகளையும்-வியாரப் புலிகளையும் நமது பிரச்சனையிலிருந்து அப்புறப்படுத்தியாகவேண்டும்.

இப்படிப் புரியாணிக்கடைபோடும் வியாபரப் பிழைப்புவாதிகளை அடுத்த நிகழ்வில் எம் மக்களது பெயரால் பிரச்சாரத் தட்டியமைக்க-அரங்கு அமைக்கவென்று  எடுக்கப்படும் இடத்தைப் புராணியாணிக் கடையாக மாற்றும்வியாபாரத் தந்திரத்தை இல்லாதாக்கவேண்டும்.

அத்தகைய நிகழ்வுக்கு, உண்மையாக மக்களுக்காக இயங்கும் பொது மக்களே ஒன்றிணைந்து இத்தகைய ஊர்வலம்-பிரச்சார அரங்கமைத்து[Infostände ] எமது பிரச்சனைகளையும்-எம்மை, ஏமாற்றிய உலக-உள்நாட்டு அரசியலையும்,இலங்கை-இந்தியப் பாசிச அரசுகளையும்,வியாபாரப் புலிகளையும் பிரசுரங்கள்-நேரடி விவாதம்-கருத்துப் பகிர்வின் மூலம்அம்பலப்படுத்தி மக்களது விடுதலைக்கு வழி செய்யவேண்டும்.

புரியாணிக்கடைக்கு சாப்பாடு வாங்க வந்த பிற நாட்டினர்-ஜேர்மனியர்கள் இது எந்த நாட்டு மக்களது அரங்கு-உங்களுக்குப் பிரச்சனை என்னவெனக் கேட்டதைக் குறித்து எதுவுமே பேசாது "ஸ்ரீலங்கா-ஸ்ரீலங்கா" வென்றுவிட்டுப் புரியாணி விக்கும் புலிக்குக் காசில் குறியா அல்லது மக்கள் விடுதலையில் குறியா?

இணையத்தில்,"காணீ பறி போகிறது-ஆமி மக்களை அடிமைப்படுத்துகிறார்கள்,போராளிகள் சாகக் கிடக்கிறார்கள்,அங்கவீனர்களாய்-அடிமையாய் மக்களெனச் சொல்லும்" இந்தப் புலிகள்,பல் தேசிய இன மக்களும்-கட்சிகளும் கூடும் வெகுஜனத் தளத்தில் மொட்டையாய்ப் புராயாணிக் கடைவைத்துக் காசு சேர்க்கும் கபோதிகளாகவே வாழ்கின்றனர்.

இந்த அராஜகக் கள்வர்கள்,தமிழ்பேசும் மக்களை இலட்சக் கணக்காய்க் கொன்று காசு குவித்தபோது அதற்கொரு தலைவன் மற்றும் கொடி வைத்துக்கொண்டும், மக்களது சாவை வைத்தும் அரசியல் வியாபாரஞ் செய்தனர்.இப்போது, அப்பட்டமாய் வியாபாரிகளாக மாறியவர்கள் தமிழ் மக்களது பிரச்சனையில் இனியும் தலை புகுத்தாமல் மெல்ல நகரவேண்டும்.

இல்லையேல், அவர்களை அப்புறப்படுத்தி நேர்மையாக நமது மக்களது பிரச்சனைக்கான அரசியலை நாம் பொறுப்பேர்க்க வேண்டும்.இந்தத் தளத்தில் புலத்த மக்களை வைத்தே இத்தகைய பிழைப்புவாதப் புலிகளை அப்புறப்படுத்தியாகவேண்டும்.இதுதாம் இன்றைய மேதினஞ் சொல்லும் நமக்கான அநுபவம்!


ப.வி.ஸ்ரீரங்கன்
01.05.2013