Posts mit dem Label கிழக்கியம் werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label கிழக்கியம் werden angezeigt. Alle Posts anzeigen

Freitag, März 25, 2016

இந்திய அமைதிப்படைக்கு நன்றி கூறக் கடமைப்பட்ட ஈழத் தமிழர்கள்

46 ஆவது, இலக்கிய சந்திப்பு : " சனநாயகம் , புரட்சி, தலித்துவம், கிழக்கியம்"- மறு வாசிப்பு!
 
நாளை சனியும் ; ஞாயிறும் [ 26/27.03.2016 ]இருநாட்களாக, பாரிஸ் (இ)லாசப்பலில் ( Paris : La Chapelle ) 46 ஆவது "இலக்கியச் சந்திப்பு" நிகழயிருக்கிறது. வழமைபோலவே மானுடவிரோதிகள் ; சிங்கள அரச கைக்கூலிகள் ;சமூகவிரோதிகள் ;ஒட்டுண்ணிகள் (எந்த வேலைவெட்டிக்கும் போகாது ,ஒடுக்குமுறையாளர்களுக்கு "உடந்தை"யாகயிருந்து அவ்வொடுக்குமுறையாளரது எலும்புத் துண்டில் வாழ்பவர்கள்) செத்துப்போனவர்களைக் கூடத் தமது அற்ப பிழைப்புக்குப் பயன்படுத்துவதில் தயக்கமின்றித் தோழர் பரா அரங்கு ; “தோழர் “ புஸ்பராஜா - "தோழர்" சபாலிங்கம் அரங்கு ;"தோழர்" கலைச் செல்வன் அரங்கு என்ற அரசியலுக்குள் இளையவர்களைக் கட்டிப்போட முனையும் கபட "இலக்கியச் சந்திப்பு" அரசியலானது திட்டமிடப்பட்ட சூழ்ச்சிக்குட்பட்டது.
 
 
இஃது ,புலம்பெயர்ந்த மாற்றுக் கருத்தாளர்கள் அனைவரையும் தமக்குள் செரிக்கமுனையும் தந்திரத்தோடு "தாம் தமிழினத்திலிருந்து அந்நியப்பட்டத்தை" மறைக்க முனையும் சூழ்ச்சியாகும்!
உண்மையாகவும் ;பரந்துபட்ட மக்களது விடுதலைக்காவும் பேரினவாதச் சிங்கள அரசபாசிசத்துக்கு -புலி அராயகத்துக்கு எதிரான தமிழ் மாற்றுக் கருத்தாளர்களது பெயரை இந்தப் பிழைப்புவாதிகள் பயன்படுத்துவதையும் ;அப்பெயர்களை வைத்துத் தம்மையும் ;தமது கடந்தகாலத்தினதும் மற்றும் , இந்நாள் தமிழினவரோத அரசியலை மறைப்பதற்கெடுக்குமிந்த வியூகத்தை நாம் அம்பலப்படுத்த வேண்டும்! ;அதை, இந்தச் சந்திப்பில் கேள்விக்குட்படுத்தி இவர்களை இளஞ் சமுதாயத்திடம் அம்பலப்படுத்தியாக வேண்டும்!
இன்று மீளவும், சிந்தித்துப் பார்க்கிறேன்.கடந்த காலத்தில் நாம் பெருவாரியாக மக்களை அண்மித்த அரசியலையே செய்து வந்திருக்கிறோம்.
 
 
1986 இல் இருந்து நீண்ட இந் நோக்கானது மக்களது இன்னல்களுக்குக் காரணமான இலங்கைப் பாசிச அரசு,இயக்கவாத மாயை மற்றும் புலிகளது மாப்பியாத்தனமான அந்நிய அடியாட்படைச் சேவையென்று ஒரு நிதானமான அரசியற் கருத்தாக்கத்தைக் கண்டடைந்தோம்.
 
 
பல இயக்ககங்கள், இந்தியாவின் தயவில் மக்களை வேட்டையாடிக்கொண்டு புலிகளுக்கு நிகராகவே மக்களையொடுக்கியபோது எதிரியான பாசிசச் சிங்கள அரசு அவர்களைத் தனது உறுப்பாக மாற்றியுங்கொண்டது.
புலிகள் மாறி மாறி வந்த அரசுகளுடன் சமரசம்-பிடிவாதமெனச் செய்துகொண்டு தமது இருப்புக்காகப் போராடியபோது புலத்தில் மிக எளிமையான மனிதர்களாகக் காட்சிப்பட்ட பல நண்பர்கள் மக்களை அண்மித்த அரசியல் செயற்பாட்டுக்குட்பட்டனர்.
 
 
அவர்களுடன், உடன்பாடுகொண்டு"இந்த இலக்கியச் சந்திப்பும்"ஒரு உரையாடலுக்கான மாற்றுத் தளத்தை இயக்கும் கருவியாக நமக்குள் மலர்ந்துகொண்டது.
 
 
ஆக்கதாரர்கள்,சஞ்சிகை வெளியீட்டாளர்களின்றி இலக்கியச் சந்திப்புக்கிடையாது.பீட்டர் ஜெயரெத்தினமோ இல்லைப் பார்த்திபனோ அல்லது அறுவைச் சீனி லோகனோ,சிந்தனைப் பராவோ இதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது.இதைச் சாத்தியமாக்கப் பரவலாகப் பலர் தமது உழைப்பை நல்கினர்.
 
 
 
இப்போதும் தொடர்ந்து யோசித்துக்கொண்டிருக்கும்போது, 2009 முள்ளிவாய்க்காலுக்குபின் இலங்கைக்குச் சென்று மாதக்கணக்காகத் தங்கி ,மகிந்தா அரசுக்கிணக்கமான அரசியலைப் பலர் செய்தனர் ; மகிந்தாவுக்குப் புலிகளை அழித்த சனநாயகக் காவலன் பட்டத்தையும் தேவதாசன் - ஞானம் ; இராகவன் கூட்டணி டான் ரி.வியற்றோன்றி நல்கியது! இதுள்,நிர்மலா ,ஞானம் எனும் எம்.ஆர்.ஸ்டாலின், தேவதாசன், சுகன்,கீரன்,இராகவன்,ரெங்கன்,புளட் ஜெகநாதன்,சிவராசா,சீனி லோகன்,கொன்சன்ஸ்ரையன்,தேசம் குழு போன்றோர் மிகக் கணக்கிடத்தக்க சிங்கள அரச லொபிப் புலம்பெயர் தமிழர்கள்.
 
 
இவர்களோடு, சோபாசக்தி மாதக்கணக்காவும் இந்தியாவில் தங்கி அரசியல் செய்வது கண்கூடு(தற்போது ,இவர்களோடு புதிய கூட்டை முன்வைத்து இயங்கும் தமிழரங்க இரயாகரன் குறித்தும் ஒரு கணிப்பீட்டுக்கு நாம் வரவேண்டும்.மேற்சொன்னவர்கள் இலங்கை,இந்தியாவென்று செல்லும்போது இரயாகரன் இங்கே செல்வதில்லை.அதற்கான முழுக்காரணமும் கட்டன் நசனல் வங்கியின் கோடிக்கணக்கான பணத்தின் கொள்ளையில் பெருந்தொகை பணத்தை வைத்திருக்கும் இரயாவுக்கு இலங்கைக்கு என்றுமே செல்லமுடியாது!இலங்கை சட்டவாதத்துக்குட்பட்டவொரு அரசாகவும்,நியாய தர்மத்துக்குட்பட்ட அரசாகவிருக்கும்வரை. அது,இலங்கைக்குப் பொருந்தாதென்பதால் இரயாகரன் வருங்காலத்தில் கொழும்பில் "புதிய ஜனநாயக மார்க்சிய லெனியக் கட்சி" என்ற பெயர்ப் பலகைக் கட்சியினது நிகழ்வில் பங்கு பெறலாம்.ஆனால்,இரயாகரனோ புலி செத்த அடுத்த, ஆண்டில் புதிய வீடும் கொள்முதல் செய்திருக்கிறார்.ஒரு அச்சகத்துள் கூலியாக வேலைக்கிருக்கும் நண்பருக்கு இலங்கையிலிருந்து நிகழ்வுக்காகப் பெரியவர்களைப், பேராசிரியர்களைச் சீடர்களை அழைக்க முடிகிறது. அவர்களுக்கும்,அவர்கள் சார்ந்த புதிய ஜனநாய மார்க்சிய லெனியக் கட்சிக்குப் பல இலட்சம் நிதியும் வழங்கக் கூடியதாகவிருக்கிறது!எப்படி,இஃதெல்லாம் சாத்தியமாகிறது?ஒரு அச்சகக் கூலிக்கு?).
 
 
இவர்களது அனைத்துச் செயற்பாடுகளும் சிங்கள வல்லாதிக்த்தால் இலங்கையில் ஓடுக்கப்படும் மக்களுக்கான அரசியல் அல்ல!இவர்கள்,அனைவருமே எங்கும் தொடர்ந்து வேலைப் பணியிலிருப்பதாகவோ,ஒரு பொறுப்பான பணியில் வருடக்கணக்காகவிருந்து செயற்பட்டவர்களோ கிடையாது.
ஞானத்தையும்,,தேவதாசனையும்,விட்டு விடலாம். இவர்கள் நேரடியாக ஒடுக்குமுறையாளர்களது சம்பளப் பட்டியலில் இருந்துகொண்டு நம்மையும்,நமது மக்களையும் முட்டாளாக்குபவர்கள்!
 
 
ஆனால்,இத்தகைய குள்ள நரிக் கூட்டமானது புலம்பெயர்ந்து வாழும் தேசத்தில் குருதியாறைத் திறக்குமொரு அரசியலைச் சந்திப்புக்கள்,இலக்கியவுரையாடல்களெனச் செய்யும்போது இவர்களது வீட்டிலும்,மண்டபங்களிலும் தவழ்ந்து குடித்துக் கொட்டமடிக்கும் இளைய தலைமுறைப்"படைப்பாளிகள்"சிந்தனைச் சிற்பிகளுக்கு என்ன வகைமாதிரியான கணிப்பீடுருவாகிறது?
 
 
இவர்கள்,சிங்கள அரசுக்குச் சாமாரஞ் செய்யும் துஷ்டர்களோடும், இந்தியவரசின் உளவு நிறுவன முகவர்களோடும் கூடியுண்டு,குடித்துக் கும்மாளமிடும்போது இவர்களது"மக்கள்"நலக் கருத்தாடல்-அரசியலது உண்மை வடிவமென்ன? ; இந்த 46 ஆவது இயக்கியச் சந்திப்புவரை இவர்கள் செய்த அரசியலது அறுவடை என்ன? ;வடக்கையும் ;கிழக்கையும் அரசியல் ரீதியாகவும் ;சட்டரீதியாவும் பிளந்து தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதவர்களாக்கியதைத் தவிர இவர்கள் செய்த மக்கள் நலம் என்ன? ;மகிந்தா இலங்கையில் சனநாயத்தை மீளக் கொணர்ந்தார் ;அமைதியைக் கொணர்ந்தார் -அவருக்கு நன்றி என்பதன் அரசியல் என்ன?
 
 
தொடர்ந்தும், தொடர்ந்துமிந்தத் தமிழ் மக்கள் விரோதிகளால் இலங்கைச் சிறுபான்மையின மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
 
 
ஒரு புறம் புலி மாபியாக்கள் முள்ளிவாய்க்காலுக்குப் பின்பும் "தேசியம்-தேசியம்"என்று சொல்லிச் சொத்துச் சேர்ப்பதைத் சமீபத்தில் சாத்திரி அவர்கள் அம்பலப்படுத்தியது[ http://sathirir.blogspot.de/2012/12/blog-post.html ]போல் இவர்களும் மக்களுக்கு விரோதமாகவே செயற்படுகின்றனரென்று எவன் உண்மையாகப் பேசுவான்?- இவர்களோடு கூடிக் கூத்தடிக்கும் முன்னாள் புலி விசுவாசத் தம்பிகள் இதற்குத் தயாரா?
 
 
நீங்கள், மக்களை அண்மித்து இயங்கினால் அதை நோக்கிச் செயற்படுங்கள்!
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

Samstag, Mai 04, 2013

இலங்கை அரசு, இனவாத அரசென்பது பொய்யானது.

அசோக்கின் கட்டுரையை முன்வைத்து இலங்கை அரசினது புலத்து லொபிகளைப் புரிந்து கொள்ளல் என்பது...

சோக்கினது கட்டுரையில் பேசப்படும் விடையங்கள் குறித்துத் தொடர்ந்து பேசப்படவேண்டும்.இன்றைய பிளவுவாத அரசியலை வகுத்தியங்கும் சிங்கள அரசு மற்றும் இந்தியப் பிராந்திய நலனும் பரவலாகத் "தலித்துவ" அமைப்புகளையும் , பிரதேசவாதப் பிளவு வாதத்தையும் கூர்மைப்படுத்தும் கருத்தியலைப் பிழைப்புவாதிகளது நலனோடிணைத்துக் கருத்துப் பரப்புரை செய்கிறது.

இதன் வழித் தமிழ்பேசும் மக்களைப் பிளப்பதற்காகவே கருணா-பிள்ளையான் குழுவைக் கட்டிக் கிழக்குப் பிரதேச வாதத்தைத் திறம்படச் செய்தன ,இத்தகைய நலன்கள் -அரசுகள்.

இதன் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்ட  பிரான்சுத் தலித்துவது முன்னணியும் அதன்  உறுப்பினர்களும் மற்றும் கிழக்கைப் பிளப்பதில் தனக்கான ஆதாயத்தைக் கண்டடைந்த பிழைப்புவாதியும் ,ஆட்காட்டியுமான ஞானமும் இதன் உச்சக்கட்டமான இயங்கு தளத்தை நமக்குள் நிகழ்த்திக்காட்டினர்.

கிழக்கைப் பிளந்த இந்திய-இலங்கை வியூகம்:

கிழக்கைப் பிளந்த இந்திய-இலங்கை ஆளும் வர்க்கங்கள் ,தமிழ்ப் பிரதேசமெங்கும் ஒட்டுக் குழுக்களை வைத்து மக்களை ஆயுதத்தால் அச்சமூட்டியும், அடிமைப்படுத்தியும் வந்தன.புலிகளது அதே பாணியில் ,இத்தகைய குழுக்கள் மக்களை அச்சமூட்டி அடிமைப்படுத்தியதுமல்லாது சாதிரீதியாகவும்-பிரதேச ரீதியாகவும் பிளந்தனர்.இதன் தொடரில் அராசகம் புரிந்த பிள்ளையானோடு இன்றுவரை கைக் கோற்கும் ஞானம் , பிள்ளையானின் அரசியல் ஆலோசகர் என்பதும் ,அந்த அரசியலுக்குக் கருத்தியல் வலுக்கொடுப்பதென்பதும்,  இலங்கை அரசினது தமிழர்கள்மீதான ஒடுக்குமுறைக்கு ஒத்தோடுவதென்பதும் ,அதன்வழியான அரசியலானது முற்று முழுதாக இந்திய நலனுக்குட்பட்டதென்பதும் நாம் அறிந்ததே.

பிள்ளையானது கட்சியின் உறுப்பினனான ஞானம் தேர்தல் பரப்புரை செய்து, அடவாடித்தனமாக மக்களை வெருட்டிய பிள்ளையானுக்குத் தோழமையானவரென்பதும் ,சட்டபூர்வ ஆலோசகரென்பதும் உரறிந்ததே.

இலங்கை அரசுக்கும் அதன்  இராணுவ ஆதிக்கத்துக்கும் ,தமிழ் மக்கள்மீதான ஒடுக்குமுறைக்கும் உடந்தையாகவே அரசியலை முன்னெடுக்கும் பிள்ளையான்-கருணா மற்றும் கே.பி. ,டக்ளசு போறோரெல்லாம் இலங்கை அரசினது  அரசியல் செல்வாக்குக்குட்பட்டவர்களானாலும் அவர்கள் அனைவரும் இந்திய அரசினது செல்வாக்குக்குட்பட்ட லொபிக் குறுப்புகளே. இங்கே, இவர்களை மெல்ல இயக்கும் வரதராசப் பெருமாளையும் இனங்காட்ட வேண்டும்அசோக் இந்தத் தளத்திலும் இயங்கும் அரசியலைக் குறித்துப் பேச வேண்டும்.இவர்களனைவருமே ஆபத்தானவர்கள்.

சோபாசக்தி போன்றோரை இந்தப்புள்ளியில் புரியவேண்டுமானால் "வரதாசாப் பெருமாளுக்கு ஈழப்போராட்டத்துள் ஆக்க பூர்வமான வரலாறொன்று இருக்கிறது" என்ற சோபாசக்தியின் கருத்திலிருந்து புரியும் அரசியலானது இந்தத்  தளத்தை மேலும் புரிய வைக்கும்.

அன்று ,இந்திய ஆமிகளோடு கப்பலேறிய அரசியலானது தமிழ்பேசும் மக்களது நலனுக்கான தெரிவில்லை!அது,முற்று முழுதாக இந்திய நலன்களை இலங்கைக்குள் திணிக்கும் ஒரு நிகழ்சியாகும்.

இப்போது,அசோக்கைப் புரியும்போது மிகச் சரியாகவே இத்தகைய பிளவு வாதிகளையும் இந்திய  இலங்கைக் கைக்கூலிகளையும்  கணித்துச் சொல்கிறார்.

இந்தச் சதியாளர்கள்தாம் இலங்கைக்கும்-புலத்துக்குமாகப் பறந்து, பறந்து  அரசியல் செய்வதிலிருந்து இலங்கைக்குப் புலத்து மக்களைக் காட்டிக் கொடுப்பதுவரை இவர்களது தெரிவாக இருக்கிறது.இத்தகைய இலங்கை -இந்தியக் கூலிகளைச் சாதரண நபர்களாக்கும் முயற்சியின் தெரிவாகவே இவர்கள் ,இலக்கியம்-சந்திப்புகள் ,கலந்துரையாடலெனச் செய்து மாற்றுக் கருத்துடையவர்களைத் தமக்குள் கிரகிக்கும் போது இது,சதியை மேலும் அரசியற்றளத்தில் வலுவாக்கிறது.இவர்களோடு வாசுதேவன் போன்றவர்கள்கூட  அரசியல்-கலந்துரையாடல் செய்யும்போது எனக்கு வாசுதேவன் பேசும் தேசியம்-புலிவழியான போராட்டம் புரியும் தளமானது பிழைப்புவாதம் மட்டுமல்ல.இதுவும் ,ஒருவகை இந்திய லொபி அரசியலே!

ஒருவகை  லொபி:





இங்கேயிதை மேலும் விரித்துச் சொல்வதானால் முள்ளி வாய்க்காலுக்குப் பின் யாழ்ப்பாணஞ் சென்ற தேவதாசன்-இராகவன்(முன்னாள் புலிகளது இயக்க-மத்திய குழுவின் முன்னணித் தலைவர்)மற்றும், சுகன் போன்றவர்கள் யாழ்பாணத்திலியங்கும் இந்திய-இலங்கை அரசுகள்சார்  குகதாசனின்   தமிழ்த் தொலைக் காட்சியொன்றில் தோன்றித் தமது பேட்டிகளை வாரி வழங்கினர்.அப்போது, யாழ்ப்பாணத்தில் கந்தோரோடையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட வரலாற்று ஆவணமான புத்தர் சிலைகள் குறித்துக் கருத்துச் சொன்ன வரலாற்று மேதை இராகவன்: "இவைகளெல்லாம் உறுதிப்படுத்தும் உண்மைகள், சிங்கள மக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னமே இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான ஆதாரம்" என்றார்.

இதையும் மீறித் தேவதாசனும்,இராகவனும் அழுத்தமாகச் சொன்ன இன்னொரு கருத்தானது"தமிழ்பேசும் மக்கள்,தமிழர்கள்என்ற அடையாளத்தோடு செயற்படாது நாம் அனைவரும் இலங்கையர்கள் என்று ஒற்றுமையாகச் செயற்படவேண்டும்-நாட்டை வளர்க்கவேண்டும்-காக்கவேண்டும்" என்றார்கள்.

இஃது, 2010-11 க்குள் நிகழ்ந்த இலங்கை அரசு-இந்திய வியூகத்தினது தயாரிப்பாகவே அன்று நான் பிரித்துடைத்துச் சொன்ன பதில்.இது குறித்துத் தூண்டிலிலும்,ஜனநாயகத்திலும் நான் பதிவுகளைப் பதிந்தே வைத்திருக்கிறேன்.

இந்தப் பல்வேறுபட்ட இலங்கை இந்திய நலன்களுக்குடந்தையான இத்தகைய பிழைப்புவாதிகளைக் குறித்து அசோக் நேர்மையாகப் பேசுகிறார்.மக்கள் நலன்சார்ந்து தோழர் அசோக் பேசுவது மிகவும் வரலாற்றுத் தேவையானது.
ஏனென்றால் நிர்மலா குழுவின் முக்கிய புள்ளி இராகவன் பேசுவதை மேலும் பாருங்கள் .இலங்கையில் இனவொதுக்கல்-அரசபயங்கரவாதம் அற்ற சூழல் உருவாகிவிட்டதாகவும்  மேலும் வடமாகாணம் தனியே தமிழருக்குரியதல்ல அங்கே சிங்களவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்வதாகவும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களம் பேசும் மக்கள் மீளத் தமது தாயகத்துக்கு வந்தபோது, அவர்களைச் சந்தித்த கையோடு இராகவன் பேட்டி வழங்கியதொரு திசையில்"புதைபொருள் ஆராச்சியின் மூலம் கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த மத அடையாளங்களெல்லாம் வரலாற்று ரீதியாகச் சிங்கள மக்கள் இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான அடையாளங்களென" வேறு வரலாற்று நூல்கள்வழி உண்மையுண்டென இராகவன்  சொன்னபோது எனக்கு உடம்பெல்லாம் ஒரே புல்லாரிப்பு!

முதலியார், செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை போன்றோரது ஆய்வுகளை முன்வைத்து தமிழ்ப் பிரதேசங்களில் கண்டடைந்த பௌத்த மத அடையாளங்களைச் சிங்கள மக்களது வாழ்வின் எச்சமெனக்கொள்ளும் புத்திக்கு வரலாற்றைப் புரிவதில் பேரினவாதத்தின் புகழ்ச்சி அவசியமாக இருக்கிறது இவர்களுக்கு.இந்தச் சந்தர்ப்பவாதமானது காலவோட்டத்தில் தமிழ் மக்களை அரசியலுரிமையற்ற மந்தைக் கூட்டமாக்கும் நரித்தனமான சிங்கள ஆளும் வர்க்கதஇதுக்குத் துணைபோவதே!இது வரலாற்றை மட்டுமா புரட்டும்?-முடிந்தால் சிங்கள இராணுவத்தின் ஒடுக்குமுறைகளைக்கூட  இத்தகைய குழுக்கள் நியாயப்படுத்துவதும் அதன் தளத்தில் இது வேளாளரின் பொய்யென்றும் சிங்கள இனவாத அரசுக்குத் துணைபோவதிலிருந்து தமது இருப்பை உறுதிப்படுத்தும்.

பௌத்தம் என்றால் சிங்களவர்கள்,சிங்களவர்கள் என்றால் பௌத்தம் :

இலங்கையின் வடபிராந்தியத்தில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்ததும்,அவர்களது அடையாளங்களும் பௌத்த மதத்தோடு பிணைந்திருந்ததை எங்கே போய்ச் சொல்ல?

பௌத்தம் என்பது சிங்களவருக்கு மட்டுமே இலங்கையிற் சொந்தமெனக் காணும் தமிழ் வரண்ட மூளைக்குத் தன் முன்னோர் ஆரம்பத்தில் பௌத்தர்களாக,சமணர்களாக வாழ்ந்திருந்தனரென்று அறிய முடியவில்லையென்றால் வாயை மூடி மௌனித்தல் நலமே..ஆனால் இராகவன்-நிர்மலா போன்றவர்களும் இவர்களைப்போலவே பிளவுவாத அரசில் செய்யும் ஊக்கங்கொண்ட மேற் சொன்னவர்கனளும் சந்திக்கும் புள்ளி இலங்கை -இந்திய மற்றும் அந்நிய ஆர்வங்களுக்காகத் தமிழ்பேசும் மக்களைக் காட்டிக்கொடுத்தலோடு இலங்கையின் புரட்சியைக் காயடித்தலென்பதே இதன் அர்த்தம்!

இத்தோடு புலத்துத் தலித்துவக் குழுக்களது போலித்தனமான கோசத்தை நாம் மேலும் பார்ப்போம்.இன்று,இலங்கை பூராகவும் நிலவும்(ஏன் இந்தியா பூராகவும்)சாதியமைப்பு, நடைமுறையிலுள்ள சமூக அமைப்பின் உருவாக்கமல்ல. நிலவும் நவகாலனித்துவ அமைப்பு தனது முழுமை பெறாத முதலாளித்துவ வளர்ச்சிக்கொப்பச் சீர்படுத்திக்கொண்ட(தடுத்தாட்கொண்ட)அல்லது திருத்தி அமைத்துக்கொண்ட இலங்கையின்-இந்தியாவின் கடந்தகால நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் ஒரு ஊக்கமாகவே இந்தச் சாதிய அமைப்பு முறை மேலெழுகிறது.

இதைக் குறுக்கி வாசிக்கத் தள்ளப்பட்ட புலத்துத் தலித்துவக் குழுக்கள் தமது எசமானர்களது நலத்தின் பொருட்டு ,அதையே தனிப்பட்ட வகைமாதிரிக்குள் மொன்னைத் தனமாக விளக்குவதும் கூடவே ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்குக் குறுக்கே நின்று கல்லெறியும் வினையாக மாற்றுகின்றனர்.இது திட்டமிட்ட சதி!

சாதியமைப்பின் நிலைகளையும்,இன்றைய நிலைக்கான காரணத்தையும் ஆய்வதென்பது:





கடந்த 600 ஆண்டு வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டிய தேவையைப் பின் தள்ளிவிட்டு, சமீப வரலாற்றில் 60 ஆண்டு அரச முதலாளியத்தின் கடைக்கோடியில் தமிழ்பேசும் சமுதாயத்தைக் கழுமரத்தில் ஏற்றுவது நியாயமான அறிவுப்போக்கல்ல.ஆனாலும், இவர்கள் அதைத் தெரிந்தே செய்கின்றனர்.இதுதாம் இவர்களுக்கான நிகழ்சி நிரல்.இதை வகைப்படுத்தி இயக்கும் ஒடுக்குமுறையாளர்கள் ,தமது இலக்குத் தமிழ் மக்களைப் பிளப்பதென்பதால் இத்தகைய பிளவை அரசியல் ரீதியாக இயக்கவும் ,அதைச் சட்ட ரீதியாக்கவும் முயலும் கருத்துக்களைக் கட்டுகின்றனர்.அதுவே, ஒருகட்டத்துள் சாதியச் சமூகங்களாக அடையாளப்படுத்தப்பட்டு அது, "சுதேசி அடையாளமாக" க் கருத்தியற்றளத்தில் ஏற்கப்பட்டுச் சலுகைகளை வழங்குவதிலிருந்து அதை நிலைப்படுத்தவும் ,அதன்வழியில் மக்களை ஒரு குடையின் கீழ் அணி திரள்வதைத் தடுப்பதிலும் கவனமாக இருக்கின்றனர்.

தற்போது நிகழும் அணிச்சேர்க்கைகளை உற்று நோக்குபவர்களது புரிதலில் பல உண்மைகள்”தமிழீழப் போராட்டம்”குறித்தும்,தமிழ் மக்களது அரசியல் எதிர்காலம் குறித்தும் ஓரளவு இனங்காணத்தக்க அரசியல் புரிதல்கள் சாத்தியமாகிறது.இன்று,மக்களைப் பல கூறுகளாக இனங்கண்ட புலிவழிக் கருத்தியல் தன்னளவில் இலங்கையில் உடைவு காணுந்தறுவாயில் புலத்தில் பிழைப்புக்கான இருப்பாக இது நிலைப்படுத்த முனையும் அரசியலை இந்த அணிச் சேர்க்கை வற்புறுத்துகிறது.

இனவொடுக்குமுறைக்கெதிரான தேசிய விடுதலைப் போரை பிற்போக்கான வகையில் முன்னெடுத்த இயக்கவாத மாயை தகர்ந்து தவிடுபொடியாகும் தருணம் புலிகளது அழிவோடு சாத்தியமானது. எனினும்,புலிகளது வெற்றிடத்தைக் குறித்துக்கொண்டிருந்த அந்நிய மூலதனம் தனது தேவைக்கேற்ற குழுக்களை அதன் இடத்தில் இருத்துவதே அதன் முதற்பணியாக இப்போதிருப்பதென்பது உண்மையானது. இதை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிப் புறச் சக்திகள் மெல்லத் தமது நலன்களை மையப்படுத்திய அரசியற் கருத்தரங்கங்களையும்,அதுசார்ந்த பொருளாதார ஒத்துழைப்புகளையும் குறித்து வகுப்பெடுக்கச் சந்திப்புகளைச் செய்கிறது.இந்தத் திடீர் அரசியற் கருத்தரங்கங்கள்-பட்டறைகள் யாவும் தமிழ்பேசும் மக்களது உயிரைக்குடித்த இயக்கங்களது முன்னாள்-இன்னாள் உறுப்பினர்கள்-அரசியல் ஆலோசகர்களை வைத்தே நடைபெறுவதைக்கவனித்தால் இதன் உள்ளடக்கம் புரியத் தக்கது.இதிற்றாம் ஞானத்தின்-தேவதாசனின் இராகவனின் ,நிர்மலாவின் பாத்திரங்களைப் புலத்தில் உருவாக்குகிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லவேண்டும்.இலங்கை அரசானது இந்தியாவின் வியூகத்துக்கமைய தனக்காவும் ஒரு லொபிக் குழுவை உருவாக்கிக்கொண்டாலும், அத்தகைய குழுவானது இந்திய ரோவுக்கும் கூசாத் தூக்கும்  சந்தர்ப்பமானது இயக்கங்களது நலனுக்குட்பட்ட அரசியலோடு பொருந்துவது. இதுவே "வேளாளன்-வேளாளன் ,யாழ் மேலாதிக்கம்"எனத் தொண்டை கிழியக் கத்திக்கொள்கிறது.

பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்:

ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடித்திருக்கிறார்கள்.புலிகள் அழிந்த கையோடு அவர்களது உப பிரிவுகள் தனித்தியங்க அனுமதிக்கப்பட்டு,புலிகளது தொடர் இருப்புக்கான பல் முனை நகர்வுகள் ஒழுங்கு படுத்தப்படுகிறது.அந்நிய சக்திகளிடம் கட்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது. இதற்குத் தோதாகவே தலித்துவக் குழுக்களைச் சாதியம் பேச வைத்தும் ,வேளாளரின் ஆதிக்கம் என்றெல்லாம்  வகுப்பெடுத்துத் தமிழ்பேசும் மக்களுக்குள் உட்  பூசல்களைத் தொடர்ந்து வளர்த்துவருகிறது  இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கம்.





இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு,தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது .இது,புதிய இலங்கையின் புரட்சிக்கு எதிரான கூறுகளைக் கொண்டியங்குகிறதென்பதை நாம் மறுக்க முடியாது.இதற்குத் தோதான அரசியலைக் கிழக்கில் பிள்ளையான்-கருணா குழு முன்னெடுக்கும்போது வடக்கில் டக்ளசு சார்ந்து சாதியவாதப் பிளவுகளை நிலைப்படுத்தத் தலித்துவக் குழுக்களைத் தீனிபோட்டு வளர்க்கும் அரசியலானது வடமாகாணத்துள் மக்களைத் தொடர்ந்து பிளவுப்படுத்திக் காலப் போக்கில் பெரும் கலவரங்களைச் சந்திக்க வைக்க முனைகிறது.இது, சிங்கள இனக் கலவரத்துக்கொப்பவும் அல்லது மேலும் பெரிதாகவும் வளர்க்கப்பட்டுச் சிங்கள இனவாதமெல்லாம் வேளாளரின் சாதியவொடுக்குமுறைக்கு நிகரானதல்ல என்றும் , வரலாறுரைக்கப்படலாம். இங்கு, பிரதான முரண்பாடு வேளாளச் சாதிய ஆதிக்கமேவெனும் அரசியல் கருத்தாக்கவும் ,இதுசார்ந்து மெல்ல எழுப்பப்படலாம்.இன்றைய தலித்துவ மற்றும் பிரதேசவாதப் பிளவு வாதமெல்லாம் இதை நோக்கிய நகர்த்தப்படுகிறது.

இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க,பால்-நிறபேதங்களும்,சாதிய-இன,மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல.இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது.ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும்,அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமைiயும் இதற்குள் திணிக்கிறது.இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இந்தப் புரிதலோடு இன்றைய புலம்பெயர் தமிழ்க் குழுமத்தின் அரசியல் நகர்வைப் புரிய முனைந்தால்அந்நியத் தேசங்களது கனவானது தமிழ் மக்களைப் பிரதேச ரீதியாக எங்ஙனம் பிளந்துள்ளதென்றும்,அதன் தொடர்விருத்தியாக முன் தள்ளப்படும் கட்சிகள்-குழுக்களது மாதிரிக் குட்பட்ட அரசியல் அமுக்கமும் புலியினது போராட்டப் பாதையின் எச்சமாக நகர்வதை இனங்காணமுடியும்.

இன்று புலம்பெயர் தளத்தில் ஊடகவன்மமாகவும்-கட்சிகட்டும் பெரிய போர்வினை நுட்பமாகவும் ஒருங்கே தமிழ்மக்களது விடிவு குறித்து வகுப்பெடுக்கின்றனர்.ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஏதோவொரு அரசியல் இருக்கிறது.இது, அவரவர் சார்ந்தியங்கும் தத்துவங்கட்கு அமைய நிகழ்வதில்லை.மாறாக, அவரவர் வர்க்கத் தளத்தைச் சார்ந்து இது மையமானவொரு செயற்பாட்டை நெடுக வற்புறுத்தி வருவதனால்,அதைச் சாதிப்பதில் எழும் சிக்கல்களை முழுமொத்த மாற்றுக் கருத்து நிலைகளுக்கும் பொதுமைப்படுத்தும் நோக்கில், பற்பல எண்ணங்களைப் புனைகின்றார்கள்.இதுள் தனிநபர்சார்ந்த ஒழுக்கம்முதல் அவரவர் சொந்த விவகாரங்களும் மக்கள் நலன் என்ற முலாம் பூசப்பட்டு வெளியுலகுக்கு ஒருவித வன்முறை அரசியலாக வெளிவருகிறது.





இவை நமது மக்களது எதிர்காலவாழ்வு குறித்துப் புதுவகைக் கருத்துக்களைத் தமது எதிர்கால இலங்கை அரச வியூகத்திலிருந்து தொடரும் புதிய தெரிவுகளில், புலம்பெயர் தமிழ்க் குழுக்கள் அரசியல் ரீதியாக அணிதிரள்வது புரட்சியெனப் பரப்புரைக்குள்ளாக்கப்படும் தருணத்தில் பக்கம் பக்கமாகப் புதிய தொடர்கள் ஏதோவொரு மூலையில் இருப்பெடுக்கிறது.

மாற்றுக் கருத்தாளர்களென நம்மை நாம் பிரகடனப்படுத்திய கையோடு,நமக்குள் சிதைவுறம் நமது செயலூக்கம்,இன்று, பெரும்பாலும் நமக்குள் வன்மைத்தைத் தகவமைத்தில் முடிவடைகின்றன.

இவை நமது மக்களது பிரச்சனைகளைச் சொல்லியே தத்தமது எஜமானர்களது தேவைகளைக் கையிலெடுத்துள்ளது.இங்கே, தலித்துக் குழுக்களோ அல்லது கிழக்குப் பிள்ளையான்-ஞானம் மாபியாக்களோ அன்றி இலக்கியச் செம்மல் சோபாசக்தியின் விசமக் கருத்தாடலோ விலக்கல்ல.இது, குறித்து அசோக் பேசுவது ரொம்பச் சுணக்கமென்றாலும் பேசினரென்பது மக்கள் நலன்சார் அரசியலுக்கும் ,அதுசார்ந்து மக்களது உரிமைகளைத்  தூக்கிப்பிடித்து, இலங்கையில் உரிமைகளைப் பல்வேறு தேசியவினங்கள்-சிறுபான்மைச் சமுதாயங்காளக இருந்தபடி வென்றெடுப்பதற்காகவேனும் நாம் மேற்காணும் இலங்கை -இந்திய லொபிகளது பிளவுவாத - மக்கள்விரோத முகங்களைக் குறித்துக் கவனத்தைத் திருப்பியாகவேண்டும்.இதைவிட வேறொரு தெரிவு முள்ளி வாய்க்காலுக்குப்பின் ஒடுக்குமுறையாளர்கள் விட்டு வைக்கவில்லையென்பதும் நாம் தரிசிக்க வேண்டிய யதார்த்தமாகும்.

ப.வி.ஶ்ரீரங்கன்
03.05.2013

Mittwoch, Mai 01, 2013

மேதின ஊர்வலத்துள் நமது தேசிய...

வழமையான கோரிக்கையோடு வழமையாக வந்து, போகும் மே தினம்!


லங்கை-இந்திய அரசுகளோடிணைந்து பிழைப்புவாத அரசியல் செய்யும் எம்.ஆர்.ஸ்டாலின் (ஞானம்),கடந்த 1994 ஆம் ஆண்டு இதே தினத்துள்(01.05.1994) திரு.சபாலிங்கம் அவர்கள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதைக் குறித்து, "19 ஆம் ஆண்டு நினைவு" கூரலெனவொரு குறிப்பை எழுதுகிறார்.

அவமானகரமான அரசியலைப் பிளவு வாத வியூகத்துக்கமையப் பிரதேசஞ் சார்ந்து நகர்த்தும் ஞானம் - விஜி தம்பதியினர் ஒடுக்குமுறையாளர்களது இன்னொரு கூட்டின் அநுதாபிகளாகவும்-அடியாட்களாகவுமிருந்தபடி அன்று, ஒடுக்குமுறையாளர்களால் கொல்லப்பட்ட நண்பர் சபாலிங்கத்துக்கு "இன்று நினைவு கூர்" குறிப்பெழுதுவதுகூட இன்னொரு சதி அரசியலாகவே இருக்கும்.

1994 ஆம் ஆண்டு, அவரது படுகொலைச் சாவு குறித்து நாம் வீடுவீடாகப் போட்ட பிரசுரத்தை எவருமே முன்வந்தெழுதாத- முடியாத சூழலில்,




 இந்தத் துண்டுப்பிரசுரத்தைப் பிரான்சிலிருந்து எழுதியவர் எவரென்று நமக்குத் தெரியுதோ இல்லையோ அதுவும் "நண்பர்கள்" என்ற பொது அவியலில் இன்று, ஞானம் போன்றவர்கள் மேதினத்தின் பெயரால் சபாலிங்கத்துக்கு நினைவு கூரவில்லை.

அதிலிருந்து, இன்னொரு அடையாள வருகையோடு தனது எஜமானர்களுக்கானவொரு அரசியலை மீளக் கைகாட்டும் சூழ்ச்சிக்குள் ஞானம் துணிந்து நகர்த்துவது நாம் காணவேண்டிய புள்ளிதாம்.

இதைத்தாண்டி ,நாம் இன்றைய மேதின ஊர்வலத்துள் நமது தேசிய வாதிகளது கோலத்தைக் கீழே பார்ப்போம்.

இன்றைய தினமும் வழமையானவொரு தொழிலாளர் தினமாகவே சென்றது.வைத்திருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பும் அச்சொட்டாகவே நிகழ்கின்றது.வெஸ்ற்பாலின் மாநிலத்தின் தலைநகர் டுசில்டோர்ப்பில் [ Düsseldorf ]திரண்ட தொழிற்சங்கங்கள்,கட்சிகள் வழமைபோலவே தொண்டை கிழியக் கதறிவிட்டோயும்போது,தொழிங்சங்கங்கள் தொடர்ந்து, பொருளாதார வாதத்தினூடாக இந்த அமைப்பைக் காப்பதில்"வேலைக்கேற்ற ஊதியம்-அடைப்படை ஊதிய நிர்ணயம்,தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள் வழங்கும் நிறுவனங்களை அகற்றுதல்"என்று வழமையாக...

நானும்,இந்தக் கேலிக்குரியதாகப் போன மேதின ஊர்வலத்துள் மார்க்சிய லெனியக் கட்சியூடாக [MLPD]ஏகாதிபத்தியத்தின் யுத்தம்,அவ்கானிஸ்த்தான்-பாகிஸ்தான் குழந்தைகளைக் கொல்லும் வானேவித் தாக்குதலையெல்லாம் அம்பலப்படுத்தியம்,விவாதித்தும் வீடுமீண்டேன்.






சென்றாண்டைப் போலவே இவ்வாண்டும் "தி லிங்க"[Die Linke] கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்,உப தலைவியுமான சாரா வாகன்கினேக்ற் [ Dr.Sahra Wagenknecht] வருகை தந்திருந்தார்.அவரோடு உரையாடியபோது ஜேர்மனிய அரசின் நேட்டோ யுத்த முன்னெடுப்பின் இரட்டை முகத்தைக் குறித்தும் விவாதித்தேன்.கூடவே,நிறையவே விவாதித்தேன்.அரேபியவுலகப் போராட்டங்கள்,பாகிஸ்தானில்-அவ்கானில் வானேவிக்குச் [Drone attacks   ]சாகும் குழந்தைகள் குறித்தும், ஜேர்மனி அவ்கானில் குடிசார் அபிவிருத்தியை முன்னெடுப்பதாகச் சொல்லியபடி தற்போது கொள்முதல் செய்யும் வானேவிக்குக் காரணங் கூறும்போது,"அவ்கானில் வாடகைக்கு அமர்த்திய வானேவிக்கு வருடமொன்றுக்கு 30 மில்லியன்கள் யூரோவை வாடகையாகச் செலுத்துவதால் சொந்தமாக வானேவி வேண்டுவதென்பது" ,முன்பு வானேவியை உபயோகித்ததென்பதுதாம்என்றும், "ஜேர்மன் அவ்கானில் அபிவிருத்திக்கு உதவுவதென்பது "யுத்தமே என்பதைக்குறித்துச் சாராவோடு விவாதித்து அவரிடம் "ஓட்டோக்கிராம் ஒன்றை"[  Autogramm ] எனது  புத்தகத்துள் பொறிக்கச் சொல்லிய நான், எனது தேசத்துப் பிரச்சனை குறித்து எதுவுமே பேசவில்லை.

அது ஏன்?

கீழ்வரும் எனது அநுபவம் மீளவும், இந்தப் பிழைப்புவாதிகளது வியாபாரப் புத்தியால் தமிழ்மக்களது உண்மையான விடிவையே  மறுக்கும் நிலையாச்சே!. இது, வேதனையானது!

இவ்வாண்டிலும் தமிழ்பேசம் மக்களது தேசிய விடுதலைக் குத்தகைக்காரர்களோடு மீளவும், முரண்பட்டேன்.

தற்போது, யாரெவரெனத் தெரியாதிருக்கும் ஒரு புரியாணிக்கடையைத்தாம் தமிழ்பேசும் மக்களது பிரச்சனையை வெகுஜன அரங்கில்பிரச்சாரப்படுத்தும்-தெளிவுப்படுத்தும் அரங்காகக் கட்டிவைத்திருந்தார்கள்,புலிவேடம் கழற்றியப் பணப் புலிகள்.

மேதின ஊர்வலம் இறுதியாக அடையும் தளத்தில் பல்வேறு கழகங்கள்-கட்சிகள்,அமைபுகளென ஒவ்வொரு தேசிய இனங்களும்,தத்தமது விடுதலைக்காக இந்தப் பிரச்சார அரங்கைத் தகவமைத்துத் தம் [ Infostände  ]அடையாளத்தைக் கொட்டையெழுத்தில் எழுதியும்,குறியீடுகளைப் பொருத்தியும்-கட்டியும் அரங்குகளை அமைத்திருந்தார்கள்.அத்தோடங்கு பிரசுரங்களைக் குவித்து வைத்துத் தமது பிரச்சனைகளை அங்கு திரண்ட பல்லாயிரம் மக்களுக்கு விளக்கியும்-தோழமை கோரியும் அரசியலை முன்னெடுக்கும்போது தமிழீழ விடுதலைப் புலிகள் சில பத்துத் தமிழர்களைக் கூடியவரை சின்னஞ்சிறுசுகளை வைத்து மேதின ஊர்வலத்துக்குப்பின் நகரவிட்டுவிட்டுத் தாம் புரியாணிக்கடை போட்டு கொளுத்த வியாரஞ் செய்தனர். இதுதாம் புலிகளது இன்றைய அரசியற் பாதை!





அங்கு , நம் பிரச்சனை சொல்லும் ஒரு துண்டுப்பிரசுரமோ இருக்கவில்லை.அந்தப் புரியாணிக் கடையை எந்த மக்கள்சார்பாய், எவர் பெயராலென்றும் குறிப்பிடாது முண்டமானவொரு பெட்டிக்கடைபோலவே அஃதிருக்க, நான் மிகவும் வேதனையடைந்தேன்!

இந்தப் பிழைப்புவாதத்தை நமது சனத்துக்குள்அம்பலப்படுத்தி ,அவர்களோடு விவாதித்தேன்.

அங்கு மும்மரமாகச் சாப்பாடுகளை விற்றவர்கள் ஒருவரைக்காட்டி"இவர்தாம் புலிகளது பொறுப்பாளர்,இவரிடம் கேள்விகளை-கருத்துக்களைச் சொல்லுங்கள்"என்றார்கள்.

நானும், அந்தக் குறிப்பிட்ட நபரிடம் இதைக் குறித்துக் கேட்டபோது அவரோ "எனக்கு இது குறித்து விவாதிக்க நேரமில்லை.சாப்பாட்டுப் பெட்டிகளை இறக்கவேண்டும்.வானில் இருக்கும் பொதிகளை இறக்க வேண்டும்"என்று நகர்ந்தார்.

என்ன இது?

தமிழ்த் தேசியம் பேசி,மூன்று இலட்சம் மக்களைக் கொன்றவன்கள்,இப்படிப் பிழைப்புவாதிகளை உருவாக்கிவிட்டு,ஒடுக்குமுறையாளரோடு தம்மை ஐக்கியப்படுத்தியபோது இந்த வியாரிகள் நமது பிரச்சனைகளைச் சொல்லும் முகமாக வழங்கப்படும் இந்தத் தினத்தில் கட்டப்படும் பிரசார அரங்கைப் புரியாணிக் கடையாக்கி விட்டார்களே!இது நியாயமா?

இந்த அவமானகரமான நிகழ்விலிருந்து ஒன்றைச் சொல்வேன்:

புலத்துத் தமிழ்பேசும் மக்கள் கட்டாயம் விதேசியப் புலிகளையும்-வியாரப் புலிகளையும் நமது பிரச்சனையிலிருந்து அப்புறப்படுத்தியாகவேண்டும்.

இப்படிப் புரியாணிக்கடைபோடும் வியாபரப் பிழைப்புவாதிகளை அடுத்த நிகழ்வில் எம் மக்களது பெயரால் பிரச்சாரத் தட்டியமைக்க-அரங்கு அமைக்கவென்று  எடுக்கப்படும் இடத்தைப் புராணியாணிக் கடையாக மாற்றும்வியாபாரத் தந்திரத்தை இல்லாதாக்கவேண்டும்.

அத்தகைய நிகழ்வுக்கு, உண்மையாக மக்களுக்காக இயங்கும் பொது மக்களே ஒன்றிணைந்து இத்தகைய ஊர்வலம்-பிரச்சார அரங்கமைத்து[Infostände ] எமது பிரச்சனைகளையும்-எம்மை, ஏமாற்றிய உலக-உள்நாட்டு அரசியலையும்,இலங்கை-இந்தியப் பாசிச அரசுகளையும்,வியாபாரப் புலிகளையும் பிரசுரங்கள்-நேரடி விவாதம்-கருத்துப் பகிர்வின் மூலம்அம்பலப்படுத்தி மக்களது விடுதலைக்கு வழி செய்யவேண்டும்.

புரியாணிக்கடைக்கு சாப்பாடு வாங்க வந்த பிற நாட்டினர்-ஜேர்மனியர்கள் இது எந்த நாட்டு மக்களது அரங்கு-உங்களுக்குப் பிரச்சனை என்னவெனக் கேட்டதைக் குறித்து எதுவுமே பேசாது "ஸ்ரீலங்கா-ஸ்ரீலங்கா" வென்றுவிட்டுப் புரியாணி விக்கும் புலிக்குக் காசில் குறியா அல்லது மக்கள் விடுதலையில் குறியா?

இணையத்தில்,"காணீ பறி போகிறது-ஆமி மக்களை அடிமைப்படுத்துகிறார்கள்,போராளிகள் சாகக் கிடக்கிறார்கள்,அங்கவீனர்களாய்-அடிமையாய் மக்களெனச் சொல்லும்" இந்தப் புலிகள்,பல் தேசிய இன மக்களும்-கட்சிகளும் கூடும் வெகுஜனத் தளத்தில் மொட்டையாய்ப் புராயாணிக் கடைவைத்துக் காசு சேர்க்கும் கபோதிகளாகவே வாழ்கின்றனர்.

இந்த அராஜகக் கள்வர்கள்,தமிழ்பேசும் மக்களை இலட்சக் கணக்காய்க் கொன்று காசு குவித்தபோது அதற்கொரு தலைவன் மற்றும் கொடி வைத்துக்கொண்டும், மக்களது சாவை வைத்தும் அரசியல் வியாபாரஞ் செய்தனர்.இப்போது, அப்பட்டமாய் வியாபாரிகளாக மாறியவர்கள் தமிழ் மக்களது பிரச்சனையில் இனியும் தலை புகுத்தாமல் மெல்ல நகரவேண்டும்.

இல்லையேல், அவர்களை அப்புறப்படுத்தி நேர்மையாக நமது மக்களது பிரச்சனைக்கான அரசியலை நாம் பொறுப்பேர்க்க வேண்டும்.இந்தத் தளத்தில் புலத்த மக்களை வைத்தே இத்தகைய பிழைப்புவாதப் புலிகளை அப்புறப்படுத்தியாகவேண்டும்.இதுதாம் இன்றைய மேதினஞ் சொல்லும் நமக்கான அநுபவம்!


ப.வி.ஸ்ரீரங்கன்
01.05.2013

Sonntag, Dezember 02, 2012

புலம் பெயர் தமிழரது "புரட்சி,தலித்துவம்,கிழக்கியம்"- மறுவாசிப்பு!

புலம் பெயர் தமிழரது "புரட்சி,தலித்துவம்,கிழக்கியம்"- மறுவாசிப்பு!

ன்று மீளவும், சிந்தித்துப் பார்க்கிறேன்.கடந்த காலத்தில் நாம் பெருவாரியாக மக்களை அண்மித்த அரசியலையே செய்து வந்திருக்கிறோம்.

1986 இல் இருந்து நீண்ட இந் நோக்கானது மக்களது இன்னல்களுக்குக் காரணமான இலங்கைப் பாசிச அரசு,இயக்கவாத மாயை மற்றும் புலிகளது மாப்பியாத்தனமான அந்நிய அடியாட்படைச் சேவையென்று ஒரு நிதானமான அரசியற் கருத்தாக்கத்தைக் கண்டடைந்தோம்.

பல இயக்ககங்கள், இந்தியாவின் தயவில் மக்களை வேட்டையாடிக்கொண்டு புலிகளுக்கு நிகராகவே மக்களையொடுக்கியபோது எதிரியான சிங்களவரசு அவர்களைத் தனது உறுப்பாக மாற்றியுங்கொண்டது.



புலிகள் மாறி மாறி வந்த அரசுகளுடன் சமரசம்-பிடிவாதமெனச் செய்துகொண்டு தமது இருப்புக்காகப் போராடியபோது புலத்தில் மிக எளிமையான மனிதர்களாகக்காட்சிப்பட்ட பல நண்பர்கள் மக்களை அண்மித்த அரசியல் செயற்பாட்டுக்குட்பட்டனர்.

அவர்களுடன், உடன்பாடுகொண்டு"இந்த இலக்கியச் சந்திப்பும்"ஒரு உரையாடலுக்கான மாற்றுத் தளத்தை இயக்கும் கருவியாக நமக்குள் மலர்ந்துகொண்டது.

ஆக்கதாரர்கள்,சஞ்சிகை வெளியீட்டாளர்களின்றி இலக்கியச் சந்திப்புக்கிடையாது.பீட்டர் ஜெயரெத்தினமோ இல்லைப் பார்த்திபனோ அல்லது அறுவைச் சீனி லோகனோ,சிந்தனைப் பராவோ இதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது.இதைச் சாத்தியமாக்கப் பரவலாகப் பலர் தமது உழைப்பை நல்கினர்.இதுள்,எனது ஊரவளான விக்கினா பாக்கியநாதன்கூட முக்கியமாகச் செயற்பட்டவளே.




இப்போது தொடர்ந்து யோசித்துக்கொண்டிருக்கும்போது, இலங்கைக்குச் சென்று மாதக்கணக்காகத் தங்கி ,மகிந்தா அரசுக்கிணக்கமான அரசியலைப் பலர் செய்கின்றனர்.இதுள்,ஞானம் எனும் எம்.ஆர்.ஸ்டாலின்,தேவதாசன்,சுகன்,கீரன்,இராகவன்,ரெங்கன்,புளட் ஜெகநாதன்,சிவராசா,சீனி லோகன்,கொன்சன்ஸ்ரையன்,தேசம் குழு போன்றோர் மிகக் கணக்கிடத்தக்க புலம்பெயர் தமிழர்கள்.

இவர்களோடு, சோபாசக்தி மாதக்கணக்காவும் இந்தியாவில் தங்கி அரசியல் செய்வது கண்கூடு(இரயாகரன் குறித்தும் ஒரு கணிப்பீட்டுக்கு நாம் வரவேண்டும்.மேற்சொன்னவர்கள் இலங்கை,இந்தியாவென்று செல்லும்போது இரயாகரன் இங்கே செல்வதில்லை.அதற்கான முழுக்காரணமும் கட்டன்நசனல் வங்கியின் கோடிக்கணக்கான பணத்தின் கொள்ளையில் பெருந்தொகை பணத்தை வைத்திருக்கும் இரயாவுக்கு இலங்கைக்கு என்றுமே செல்லமுடியாது!இலங்கை சட்டவாதத்துக்குட்பட்டவொரு அரசாகவும்,நியாய தர்மத்துக்குட்பட்ட அரசாகவிருக்கும்வரை. அது,இலங்கைக்குப் பொருந்தாதென்பதால் இரயாகரன் வருங்காலத்தில் கொழும்பில் "புதிய ஜனநாயக மார்க்சிய லெனியக் கட்சி" என்ற பெயர்ப் பலகைக் கட்சியினது நிகழ்வில் பங்கு பெறலாம்.ஆனால்,இரயாகரனோ புலி செத்த அடுத்த, ஆண்டில் புதிய வீடும் கொள்முதல் செய்திருக்கிறார்.ஒரு அச்சகத்துள் கூலியாக வேலைக்கிருக்கும் நண்பருக்கு இலங்கையிலிருந்து நிகழ்வுக்காகப் பெரியவர்களைப்,பேராசிரியர்களைச் சீடர்களை அழைக்க முடிகிறது.அவர்களுக்கும்,அவர்கள் சார்ந்த புதிய ஜனநாய மார்க்சிய லெனியக் கட்சிக்குப் பல இலட்சம் நிதியும் வழங்கக் சுடியதாகவிருக்கிறது!எப்படி,இஃதெல்லாம் சாத்தியமாகிறது?ஒரு அச்சகக் கூலிக்கு?).




அவ்வண்ணம், தம்மைத்தாமே புத்திசீவிகளாக வர்ணிக்கும் சுசீந்திரன்,மு.நித்தியாநந்தன் போன்றவர்களும் ஊரெல்லாம்-உலகெல்லாம் பறந்து நிகழ்வுகளில் உரை செய்கின்றனர்.இந்த அனைத்துச் செயற்பாடுகளும் சிங்கள வல்லாதிக்த்தால் இலங்கையில் ஓடுக்கப்படும் மக்களுக்கான அரசியல் அல்ல!இவர்கள்,அனைவருமே எங்கும் தொடர்ந்து பணியிலிருப்பதாகவோ,ஒரு பொறுப்பான பணியில் வருடக்கணக்காகவிருந்து செயற்பட்டவர்களோ கிடையாது.

சீசீந்திரனுக்கு,அவரைத் தத்தெடுத்த ஜேர்மனிய முது தம்பதினரால் வீடுவளவு இனமாக வந்தது.அந்தத் தம்பதியினர் தமது சொந்த உறுவுகளுக்கே-குழந்தைகளுக்கே அந்த முதிசத்தைக் கொடுக்காது இவருக்கு வழங்கிச் செத்தனர்.அதன் பெறுமதி அண்ணளவாக அரை மில்லியன் யூரோக்களைக் கொண்டது.இந்தச் சுசீந்தரனுக்குச் சொத்து வந்திருப்பினும் அதைப் பராமரிக்கும் செலவெனப் பல நூறு யூரோக்கள் மேலதிகமாகவும்,குடும்பச் செலவெனவும் மாதம் 2000€  யூரோத் தேவையாகவே இருக்கிறது.எந்த வேலை வெட்டியுமற்ற இந்த வெட்டிப் பயல், இந்தப் பணத்தை எவர் மூலம் பெறுகிறார்.?-எனக்கு ஆச்சரியமாகவிருக்கிறது.மொழி பெயர்ப்பாளரென்பது வெறும் குசும்பு!இப்போது எவருக்கும்,எவரும்"முழி" பெயர்க்கலாமே தவிர மொழி பெயர்க்கத் தேவையில்லை!




அண்ணன் நித்தியாநந்தன் தன்னைப் பேராசிரியர்,டாக்டர் என்றழைக்கும்போது உச்சி மகிழ நிகழ்வுகளில் உட்கார்ந்திருக்கிறார்.ஒரு சாதரண விரிவுரையாளன்,எங்கும் டாக்டர் பட்ட ஆய்வைச் செய்து உச்ச தொழிலில் ஈடுபடாத இவருக்குக் கனடாவரை சென்று உரை நிகழ்த்த  எப்படிப் பணம் புரளுகிறது?எங்கே-எந்த நிறுவனத்தில் வேலை புரிகிறார்.மாதக் கணக்கில் இந்தியாவில் தவங் கிடந்து மீண்ட இந்த மனிதருக்கும் வசதிகள் பெருகுகிறது?-எப்படி?

ஞானத்தையும்,சுகனையும்,தேவதாசனையும்,சோபாசக்தியையும் விட்டு விடலாம். இவர்கள் நேரடியாக ஒடுக்குமுறையாளர்களது சம்பளப் பட்டியலில் இருந்துகொண்டு நம்மையும்,நமது மக்களையும் முட்டாளாக்குபவர்கள்!



ஆனால்,இத்தகைய குள்ள நரிக் கூட்டமானது புலம்பெயர்ந்து வாழும் தேசத்தில் குருதியாறைத் திறக்குமொரு அரசியலைச் சந்திப்புக்கள்,இலக்கியவுரையாடல்களெனச் செய்யும்போது இவர்களது வீட்டிலும்,மண்டபங்களிலும் தவழ்ந்து குடித்துக் கொட்டமடிக்கும் இளைய தலைமுறைப்"படைப்பாளிகள்"சிந்தனைச் சிற்பிகளுக்கு என்ன வகைமாதிரியான கணிப்பீடுருவாகிறது?

இவர்கள்,சிங்கள அரசுக்குச் சாமாரஞ் செய்யும் துஷ்டர்களோடும், இந்தியவரசின் உளவு நிறுவன முகவர்களோடும் கூடியுண்டு,குடித்துக் கும்மாளமிடும்போது இவர்களது"மக்கள்"நலக் கருத்தாடல்-அரசியலது உண்மை வடிவமென்ன?


தொடர்ந்தும்,எமது மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

ஒரு புறம் புலி மாபியாக்கள்"தேசியம்-தேசியம்"என்று சொல்லிச் சொத்துச் சேர்ப்பதைத் சமீபத்தில் சாத்திரி என்ற புலிவால் அம்பலப்படுத்தியதுபோல் இவர்களும் மக்களுக்கு விரோதமாகவே செயற்படுகின்றனரென்று  எவன் உண்மையாகப் பேசுவான்?- இவர்களோடு கூடிக் கூத்தடிக்கும் முன்னாள் புலி விசுவாசத் தம்பிகள் இதற்குத் தயாரா?

நீங்கள், மக்களை அண்மித்து இயங்கினால் அதை நோக்கிச் செயற்படுங்கள்!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.12.2012