Posts mit dem Label படைப்பாற்றல் werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label படைப்பாற்றல் werden angezeigt. Alle Posts anzeigen

Sonntag, August 30, 2015

சாகித்யன் சுரேந்திரா : 16 வயதுத் தமிழ் மாணவனின் சாதனை.

சாகித்யன் சுரேந்திரா : 16 வயதுத் தமிழ் மாணவனின் சாதனை.

என்னை அசைத்துக் கொண்டிருக்கும் கேள்வி : இந்த் தமிழ்ச் சிறுவனால் "இது" எப்படிச் சாத்தியமாச்சு?
இந்தக் கேள்வி தொடர்ந்து என்னைக் குடைந்துகொண்டேயிருக்கிறது!;இந்தச் சிறுவனைப் பல தடவைகள் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.அவன் இத்தகைய சாதனையைச் செய்தானென அவனைக் குறித்து எவரும் பேசவில்லை!அவனோடு நீண்ட உரையாடலைச் செய்திருக்க வேண்டிய எனது இப்போது தொடரும் ஆவலை அன்று நான் கொண்டிருந்தால் அவனோடு நிறைய உரையாடியிருக்கலாம்.



13 வயதில் >> Flug - 747: Eine atemberaubende Entführungsgeschichte [ விமனம் -747 ,அதிர்ச்சி தரும் ஒரு கடத்தற் கதை ]<< எனும் புனைவை எழுதியிருப்பதாகவும் ,தற்போது அவனது 16வது வயதில் >> Ein Sprung durch Raum und Zeit[ காலம்;வெளி ஊடாகவொரு பாச்சல் ]
என்ற வானவியற் பௌதிக நூலையும் வெளியிட்டிருப்பதாகவும் அறிந்தேன்.அவனது இரு நூற்களையும் இன்று Amazon வழி  வேண்டினேன்.



எனது நண்பரான சுரேந்திரா, யேர்மனிய நகரமான நூரன்பேர்க்கில் கடந்த 30 ஆண்டுகளாக வாழ்பவர்.அவர்தம் புதல்வனே இந்தச் சாகித்யன் சுரேந்திரா[ http://www.amazon.de/Sagithjan-Surendra/e/B00LYAWE7C/ref=dp_byline_cont_book_1 ] என்ற சிறுவன் இந் நூற்களின் ஆசிரியன் என்று அறிந்தபோது பிரமிப்பு எனக்குள்  பரவிக்கொண்டேயிருக்கிறது.

இளம் விஞ்ஞானியை நமது உறவுகள் வட்டம் எப்படி இனங்காட்டுகிறது-அணுகுகிறதென்ற கேள்வியை ஒருபக்கம் வைத்துவிட்டு,அவனது இவ்வுலகம் குறித்த அநுபவம் ; அறிதற்புலம் குறித்தே எனக்குள் கேள்விகள் வட்டமிடுகின்றன.Einstein குறித்துரைத்து உலகமே மண்டையைப் போட்டு உடைத்துவரும் Relativitätstheorie யைப் புரிந்துகொள்வது  பௌதிகத்தைப் புரிவதன் அடிப்படையென இவன் தனது முகவுரையில் குறித்துரைக்கும்போது ஆச்சரியம் பல மடங்காகிறது.கூடவே Werner Karl Heisenberg க்கையும் அவன் குறிப்புணர்த்தி Quantenmechanik வரை விபரிக்கும்போது [ இணையப் பரிச்சார்த்த வாசிப்பு ]இதுவொரு சிறுவனது மனதுக்கு அப்பாலானது என்று தோன்றுகிறது.இவனது ஆழுமை எங்ஙனம் இருக்கின்றது?இவனால் சாத்தியமாக்கப்பட்ட " காலம் -வெளி "வழியான பாச்சல் எத்தகையது? அமசோனில் [ Amazon ]வேண்டிய அவனது நூற்கள் எனது கைக்கு வந்து,நான் அதை முழுமையாக வாசிக்கும் வரை எனது கேள்விக்கு விடையில்லை.

நான் தற்போது Quantenmechanik கை விரித்துரைத்த Schrödinger வழி நிறைந்த முரண்பாட்டோடு அவரது பூனையாக [ Bei Schrödingers Katze handelt es sich um ein Gedankenexperiment  ] எனது அறைக்குள் மூழ்கிக் கிடக்கிறேன். என்றபோதும் , மிகவும் பெருமையோடு சாகித்யன் சுரேந்திராவின் சாதனையை உள்வாங்கக் காத்திருக்கிறேன்.

ப.வி.ஶ்ரீரங்கன்
வூப்பெற்றால்
29.08.2015

பிற்குறிப்பு : அவனது நூற்களை Amazon வழியாகப் பெற:

http://www.amazon.de/Ein-Sprung-durch-Raum-Zeit/dp/1502912031/ref=la_B00LYAWE7C_1_1?s=books&ie=UTF8&qid=1440882557&sr=1-1

http://www.amazon.de/Flug-747-Eine-atemberaubende-Entf%C3%BChrungsgeschichte/dp/1500453811/ref=pd_sim_14_1?ie=UTF8&refRID=0JZ5GY5562A5PSPAYG1F




Donnerstag, Februar 25, 2010

புரியப்படும் ஒவ்வொரு வெளியும் அடையாளமின்றி தனித்துவிடப்படுகிறது.

புள்ளிகளும்,புரிதற்பாடுகளும்.


ரு புள்ளியிலிருந்து ஆரம்பித்த இடத்தைக் குதறியபடி அழித்தவிடத்தில் அதுவே உயிர்ப்புக்கான இன்னொரு புள்ளியாகிறது. இந்தப் புள்ளிகளின் தோற்றத்தில் துளியளவும் ஆர்வமின்றி கருத்தின்மீதான கவனத்தைக் குவிப்பதில் ஆர்வங்கொள்ளும் நிலையில், மையப்படுத்தப்பட்ட சூழலின்பாலான எண்ணங்கள் மீதான ஒத்தோடல்-எதிர்த்தோடல்கள் சம்பந்தமான குறிப்பைத் தருவதென்பதால் நேர்கோட்டு விளக்கங்கொள்ளும் எவரையும் தள்ளிவைத்துவிட்டு இனிமேலும் தொடரலாம்.

உறவுகள்.சமூகவாழ்வு
உணர்வுகள்-ஆன்மீக நிலை
வளர்ப்பு முறை-அகவுலகம்
சூழல்-புறவுலகம்
சடங்கு மனித நிலை-புனைவுசார் உலகம்
பொருள் வாழ்வு-குவிப்புறுதியூக்கம்
மனித நிகழ்வு-படைப்பாற்றல்
புள்ளிகள்-இருப்பு


இன்று,பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் காலத்தில் புதிய தெரிவுகளோடு மனித உருவாக்கம் நிகழ்வது குறித்து, நான் அதிகஞ் சிந்திப்பதுண்டு.

இத்தகைய தருணங்களினது மனிதர்களின் மனமென்பது மென்மைத்தன்வகையான விருத்தியின்பால் புனிதத்தினது தூதுவர்களாகின்ற நிலையைப் பின் நவீனச் சமுதயங்களாக ஏற்றுக் கொள்ளபட்ட இன்றைய மனித நடத்தையில் தங்களது கருத்தின் மெய்நிலைகள் தொடர்கின்ற தொனிப்பை அவதானிக்கிறேன்.

தாய்மையின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும் மைந்தன் அவளது மூலத்தை அறியமுனைகிறான்.தான் பலரிடம் பெறும் "இன்ப"த்தைக் குறித்து மௌனித்தபடி தாயைப் புணர்வதில் எவனது இருப்பையோ உறுதிப்படுத்த எவனோ முனைவதில் எதிர்பால்வினைக்கு இலாடன் கொண்டு திரிபவன் தன்னைத் தொலைத்துவிட்ட அடுத்தவன்,அடுத்தவள் முலையில் எவனது பற்தடமுண்டென மோதித் திரிகிறான்...

மனிதர்கள் தமது பாதயைத் தொடர்ந்து தெரிந்துகொள்கிறார்கள்.

உள்ளொளியின் குரலை மேலும் தனித்துவமானதென்பதாகத் தொடர்ந்து, அதற்கானவொரு பாதையைத் தெரிகிறார்கள்.நேர்மையைச் செல்லுபடியாக்கும் செயலூக்கத்தில் முயற்சிகளைத் தொடருகிறார்கள்.அதற்கும் எல்லை இன்னொரு தலைப்பட்சமாக"நியாயப்படுத்தலில்"வந்து விடுகிறது.

இந்தப் பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் முக்கியமான கோரிக்கைகள் சுயதெரிவோடு தன்னிலைகளைப் பெருக்குவதன் வாயிலாக அங்கீகரித்தலென்பதை இன்னொரு புறவயமான காரணிகளிடமிருந்து பெறுவதிலும்பார்க்க அகவயமான உள்ளொளியோடு சங்கமித்து அதன் அங்கீகாரத்தைப் பெறுதலென்ற போக்கு இன்றைய மேற்குலகில் காரசாரமாக இடம்பெறும் உரையாடல்.

தன்னிலை அங்கீகரித்தலோடான தேடுதலும் கண்டடைதலும் என்பது சுயபெறுமானங் குறித்த பிரச்சனையாக மனவெளியில் மனிதர்களை அலைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்வதே சிறப்பானதென்பது ஹாபர்மாசினது முடிவு.துளியளவும் எனக்கு முரணில்லாத வெளியைத் திறந்து வைத்து நானே பரிபாலிக்கும் அந்த வெளியின் தெரிவில் நான் தொலைந்துபோகும் கணத்தில் அழிக்கப்படும் புள்ளி எங்கே என்பதே எனது பிரச்சனை!

இதன் ஆரம்பம் புனிதம் என்ற பிம்பத்தில் தனது சுய தெரிவை உரைப்பதற்கெடுக்கும் முயற்சியில் மனிதர்கள் மீளவும் சடங்குச் சங்கதிக்குள் சென்று நித்தியத்தின் மகிமையைத் தேடுவதற்காகவும்-மதத் தாயகமொன்றை உருவாக்கி விடுவதில் தமது நிறைவுகளை தேடுவதாக உணர்வதில் இந்தப் புள்ளிக்கு என்ன வேலை?

புரியப்படும் ஒவ்வொரு வெளியும் அடையாளமின்றி தனித்துவிடப்படுகிறது.

இந்த வெளிகளை மரணப்பொறிவைத்து உறிஞ்சும் கருந்துளைகள் உறவுகளெனும் உருவங்கொண்டிருப்பதால் பதில்வினைமறுக்கும் எதிரீற்புவகைப்பட்ட புறப்பொருள் தொடர்பாடற்பாடுடைய நிறங்களது ஈற்பின் நடுவே நான் சஞ்சலம் அடைகிறேன்.எனக்குள் வெளிப்படும் "இன்மை"என்னைக் கொல்வதற்கு முன் பிறந்ததென்பதில் எனக்கான இருப்பு நீண்ட தூரம் துரத்தியடிக்கப்படும்போது எனது அடையாளம் மறுப்புக்குள்ளாக்கப்படுமென நம்பும் எனது பித்தாலாட்டுத்துள் இது முரண்நகை ஆகிறது.

இந்த நிலைகளை கடப்பதில் "அங்கீகிரிப்புக்களை"வலியுறுத்துவதென்பது ஒரே நேர்கோட்டுப்பாதையாகச் சமுதாயத்தில் அதன் அடித்தளத்தில் நிலவும் பொருள்வாழ்விலிருந்து முற்றுமுழுதாகத் துண்டித்துச் சென்றுகொண்டிருப்பதாக எண்ண முடியவில்லை.இத்தகைய தன்னிலைகளின் பின்னே படியெடுக்கப்படும் ஒரு "பொது நிலை"மீளவும் அந்தத் தன்னிலைகளைக் குறித்துக் குழப்பகரமான மறுத்தல்களைச் செய்வதை நான் பார்க்கின்றேன்.

என்னைப் புறந்தள்ளிச் செல்லும் காலத்தில் நான் வாழ்ந்தேன் இல்லை!காலத்தைத் தொலைத்துவிட்டு வாழும் ஏதோவொரு தடத்திலிருந்து எனது ஈனக் குரல் உறவுகளை நோக்கி பாசக்குரலெறிவதென்பது முடியாதிருப்பினும் முடிந்தவொரு புள்ளியை மீள அழித்துக் கீறமுனைவதில் எனது இருப்புக்கு நானே கட்டியம் கூறுகிறேன்.

துரத்தியடிக்கப்படும் எனது சுயம் எங்கோவொரு தொலைவில் மூச்சிறைக்கத் தனக்கான அடையாளத்தை அழித்துக்கொண்டிருக்க...

தம்பி,அண்ணா,அக்கா,தங்கை என ஏதோவொரு புள்ளிகள் தன்னிலைகளாக எனக்குள் அங்கீகரிக்கக் கோருவதில் நான் முழுமையுறுவதாக எண்ணும்போதே அவை தகர்கின்றன.தாய்மையின் "கற்பு"பரிசோதனைக்கூடமாக முடியுமா?அந்தப் பரிசோதனையில் பட்டம்பெற முனையும் தனயன்களோ ஆரம்பக் கல்வியின் அரிச்சுவடியையே அறிந்துகொள்ள முடியாத தற்கொலைத் தன்னிலைகளாக இருத்திய தமது வெளிகளை நெருங்க மறுக்கும் தருணங்களில் இவர்களுக்கான"தெரிவுகள்"என்ன?


தேசம் என்பது"தாய்மை"என்ற பொருளில் அவள் எப்போதோ "கற்பு"அழித்த பெண்மையுள் போதர்கர்களான "ஆண்மை"யின்நெடிய அடிவாரத்துள் மெலினப்பட்ட குரல்களாக உருக்கலைக்கும் சந்தர்ப்பம் தற்செயலானதில்லை!நிலைத்திருக்கமுனையும்"ஆண்"தன்மை எத்தனை வன்மத்தையும் தனது குறியினது மத்தியில் துயிலுரிக்கும் பெண்மை துடித்துக்கொண்டிருக்கும் வெளிகளுக்குள் நானும் கருவுற்றதென்பதில் எனக்கான இருப்பு நியாயம் அடைகிறது.இது,புனையப்பட்ட உலகத்துள் "அங்கீகாரத்தை"வலியுறுத்தும்போது தனது மேன்மைகளை அவற்றுள் இனங்காணுவதில் சுயதிருப்த்தி அடைகிறது.

இங்கே,அடையாளம் என்பது என்ன?

பொருண்மிய மேம் பாடென்பது எந்தப் புள்ளியையும் விட்டு வைக்காதாவொரு வெளியுள் எனது "அங்கீகாரம்"என்பதே அபத்தம்.

அபத்தப் பரிசோதனையுள் எவரது மூலத்தை எவர் தேடுவதென்பதில் அரிய புள்ளி என்பது புனைவுகளது எச்சமாக இருப்பதையும்,கற்பனையுள் நிலைத்திருக்கும் வடிவ மனித முனைப்புத் தனக்கான அடையாளமாக மற்றவர்களது அல்லது தனது எதிரீற்புப் புறவிருப்பின்பால் தற்கொலையை-பலியை ஊக்குவிக்கிறது.

இது என்ன புள்ளி?

வெளிகளை விரியவிடலாம்.வெளிகள் வெளிகளாக இருப்பதால்.இருப்பை அழித்துவிடு.அவை புனைவை வலியுறுத்துவதால்.எந்தத் தன்னிலைகளையும் அவை மறுக்கும் என்பது எனது இருப்பின் நடுவே நான் அனுபவமாக்கிய அடையாளம்.

என்னைக் கொல்,உன்னைக்கொல்.எதற்கும் நடுகல் வைப்பதில் உன்னை முன் தெரிவாக்கும்போது நீ உனக்கான சவக்குழியை நீயாகவே தோண்டுவதில் உனது சுயத்தை எனக்குச் சொல்கிறாய்.

நீயே ஒரு கட்டத்தில் எனது உடன் பிறந்தவன் என்பதும் எவ்வளவு கொடுமை!

நான் அழித்த புள்ளியுள் மறுதலையாகத் தோன்றும் இன்னொரு புள்ளியை அழிப்பதில் எனக்கு எந்தவிருப்பும் இல்லை.ஏனெனில், அதுவே இன்னொருதரம் தன்னை அழித்து மீளக் காத்திருக்கு.

புள்ளி.

ப.வி.ஸ்ரீரங்கன்

26.02.2010

(கீரிமலையில் கரையும் எனது புள்ளிக்காக).