ரீ.பி.சீ.இரமாராஜனும்
ஈழத்தமிழரின் இதயக்கனிகள்!
இன்றைய உலகத்தில் இனவிடுதலைப் போராட்டத் தரணங்களின் குறிப்பிட்ட இனங்களுக்கிடையிலான அரசியலென்பது குறிப்பிட்டவொரு தேசத்தின் ஆட்சி,அதிகாரத்துக்குள் நிலவும் முரண்பாடுகளோடு முட்டிமோதி எழுவதல்ல.காலனித்துவத்துக்குப் பின்பான நவ காலனித்துவக் காலக்கட்டத்திலும் இன்றைய ஏகபோக முதலாளித்துவத்தின் அதீத ஏகாதிபத்திய அரசியல் எத்தனிப்பாலும் ஒரு இனமோ அல்லது தேசமோ அரசுகள் எனும் கூட்டுத் தேசங்களின் நலன்களின் விளைவுகளுக்குள் மிக இலகுவாக உள்வாங்கப்பட்டு,அத் தேசங்களின் பொருளாதார ஆர்வங்களின் மூலதனக் குவிப்புக்கேற்றபடியே கட்டுப்படுத்தப்படுகின்றன.இன்று ஏகபோகப் பெருங்கம்பனிகளின் பொருளாதார முன்னெடுப்புகள் வெறுமனவே சந்தையை நோக்கியதாக இருக்கவில்லை.மாறாக, மூலவளங்களை தேடுகின்ற மிக மூர்க்கமான போட்டி யுத்த முனைப்போடு தேசங்களை நவீன அடிமைத் திட்டவாக்கத்துள் கையகப்படுத்துவதில் பாரிய மனிதவிரோதமான அரசியலை முன்னெடுக்கின்றன.இவையே தத்தமது தேசப் பொருளாதாரக் கேந்திர முக்கியத்துவத்தை நோக்கிய ஆர்வங்களின் வழி தோன்றிய வியூகத்தைப் போராடும் தேசத்தில் இனங்களுக்கிடையிலான "தீர்வாக"ஒப்பந்தம் போடுகின்றன(இலங்கை-இந்திய ஒப்பந்தம் மற்றும்,இலங்கைச் சிங்கள இராணுவச் சிப்பாய் ஒருவன் இராஜீவ்காந்தியை பிடரியில் அடித்துப் படுகொலை செய்ய முற்பட்டதையும் கண்முன் கொண்டுவாருங்கள்!அந்த இராணுவச் சிப்பாயின்பின் எவர் நின்றார்கள் என்பதும்,தமிழ்நாட்டில் இராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுக்கு எவர் பின்னாலிருந்து காய் நகர்த்தினார்கள் என்பதும் வெறும் புலி எதிர்ப்பில் மறைக்கப்பட்டு வருகிறது.இத்தகைய அரசியலுக்கு வலுச் சேர்க்கும் சோவுக்குப் பின்னாலும் நிற்கின்ற வலுக்கரத்தை இனங்காணாத விடுபேயர்கள்களா புலம் பெயர்ந்தவர்கள் திரு இராமராஜன்?அங்கே,நிலையெடுத்த அரசியலுக்கும்"மகாத்மா"காந்தி,சஞ்சாய் காந்தி,இந்திராகாந்திபோன்ற பாசிஸ்ட்டுக்களைப் பலிகொண்ட அரசியலுக்கும் மிக நேர்த்தியான அரசியல் இலக்கொன்றுண்டு.அது இந்திய-உலக ஆளும் வர்க்கங்களின் இணைவோடான நலன்களுடன் சம்பத்தப்பட்டிருக்கிறது.தமிழ்நாட்டில் இருக்கும் சோவுக்கும் வெள்ளை மாளிகை நலனுக்கும் தொடர்பு இருக்கிறது.இப்படித்தாம் எல்லாம்).
யுத்தங்கள்-புதிய புதிய பாணிகளில்:
சமீபகாலத்தில் நாம் பற்பல யுத்தங்களைப் பார்த்துவிட்டோம்.மேற்குலக-அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் அத்துமீறிய பெரும் யுத்தங்களை இந்த உலகம் பார்த்திருக்கிறது-பார்க்கிறது!இத்தகைய யுத்தத்தின் மூலமாகத் தேசங்களின் இறைமைகளை அழித்துவரும் ஏகாதிபத்தியங்கள் வெறுமனவே மூலவளத்தைப் பெறுவதற்காவோ அன்றி அவற்றைத் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவோ விரும்புவதில்லை.இன்றைய உலகப் பொருளாதாரப்போக்கு மிகவும் பின் தங்கிய இனவாதச் செயற்பாட்டுக்குள் தனது நவீன இலக்குகளை எட்டி வருகிறது.இத்தகைய அதிகெடுதியான அரசியல் உலகத்தில் வாழும் பெரும்பான்மையான வெள்ளையினமற்ற மக்களையும் அவர்களின் இருப்பையும் அழித்துவிடுவதற்காச் செய்யப்படும் பற்பல வியூகத்தை நாம் இனம் காணுகிறோம்.இது,மாறிவரும் பூமியின் தட்ப வெப்பநிலை மாற்றத்துக்கும் அதன் விளைவால் சூழல் பெரிதும் மாற்றம் அடைவதால் பூமியின் பெரும் பகுதி பாலைவனமாகவும்,கடலினுள் மூழ்குவதாகவும் ஒரு பெரும் அழிவு மெல்ல நெருங்குகிறது.இது, ஒருவகையில் இன்றைய மேற்குலக நவீனத்துவத்துக்குள் மீளவும் இனவாதச் சேற்றை உற்பத்தியாக்கி அதனை உடலெங்கும் பூசியபடி மனிதாபிமானம் பேசுவதற்கு அவர்களை உலகின் முன் நிறுத்துகிறது.இங்கே ஈழத்துக்கான போராட்டத்தில் இலங்கையில் யுத்தமற்ற பேச்சு வார்த்தையாக இருப்பதற்கு இராமாராஜன் விரும்பினாலும் இவரது எஜமானர்கள் விரும்பார்.வானொலியில் யுத்தத்தை ஆதரிப்பவருக்கு இடமில்லை எனும் இராமாராஜனுக்கு இந்தியாவெனும் தேசம் காஸ்மீரில்,நாகலாந்தில் ஏன் முழுத்தேசத்திலும் இலங்கையிலும் செய்யும் யுத்தம் புரியாமல் இருக்கும்?எனினும்,நாம் இதைக் கடந்து வேறுதிசை நோக்கிச் செல்வோம்.
(மக்கள் விரோதிகளான பார்ப்பனர்களுள் மோடி_சோ கூட்டு இது)
சூழலை மாசுபடுத்திய முதலாளித்துவ உற்பத்தி முறைமைகளும்,அதன் வாயிலான அதன் சுற்றோட்டப் பொறிமுறைகளும் வேண்டிநிற்கும் கனிவளத்தேவை பூமியின்மீதான இடைச்செயலை மிகவேகமாக்கிய தரணத்தில் முதலாளித்துவம் இடைவிடாது இயற்கையையும் உயிரினத்தையும் திருடுகிறது.இத்தகைய திருட்டின் விளைவாகச் சில கொன்சேர்ன்கள் உலகத்தின் எண்பது வீதாமான செல்வத்தை வெறும் பத்தாயிரம் பெரும் கொள்ளைக்காரரிடம் கையளித்த நிலையில், இயற்கை தன் வளங்களைத் தொடர்ந்து பறிகொடுக்கிறது.இது,ஆப்பிரிக்காவை மனிதர்கள் வாழத்தகுதியற்ற கண்டமாக மாற்றிவருகிறது.இதன் தாக்கம் தினமும் கப்பல் கப்பலாக மக்கள் மேற்குலகை நோக்கிய இடப்பெயர்வை அவர்கள் முன் நிறுத்தியுள்ளது.இத்தகைய சூழலை மிக இலகுவாக இனம் கண்ட மேற்குலகம் புதிதாகச் சூழல்பாதுகாப்பு வேசமிட்டுத் தமது வலையத்துள்-ஐரோப்பாவுக்குள் கருப்பின மக்கள் பெருகுவதைத் தடுப்பதற்கான தற்காலிகச் செயற்பாடாகச் சூழல்பாதுகாப்புப் பேசியபடி நிதி ஒதுக்குகிறது.இங்கே, ஆபிரிக்காவைத் தொடர்ந்து திருடுவதற்காகவும் அத்தகைய நிலையில் மெல்ல அந்தக் கண்டத்தில் வாழும் மனிதர்களை அழிப்பதற்கான வியூகத்தையும் கொண்டியங்கி வருகிறது.இத்தகைய முரண்பாட்டை இனம் கண்ட மனிதாபிமானமிக்க இடதுசாரியக் கருத்தியற் சாய்வுடைய விஞ்ஞானிகள் இதை அம்பலப்படுத்தி வருகிறார்கள்.வருடத்தில் ஐம்பது புதிய அணுமின் நிலையங்களைத் திறக்கும் முதலாளியத் தேவையானது மக்களின் சூழல் பாதுகாப்பை வலியுறுத்துகிறது!இங்கே,பொருளாதார முரண்பாடுகள் இனவாதத்தோடு முட்டிமோதி உலகின் பெரும் பகுதி மக்களைப் பூண்டோடு அழிக்கும் அரசியலாக(யுத்தம்,பட்டுணிச் சாவு,இனம் காணமுடியாது நோய்க் கிருமிகளின் செயற்கையான உருவாக்கம்-பெருக்கம்,நோய்க் கிருமிகளுக்கான தடுப்பு மருந்துக் கட்டுப்பாடுகள்,வர்த்தகக் காப்பு இன்னும் எத்தனையோ கொடுமை) விரியும்போது,இந்த அரசியலை முன்னெடுக்கும் தேசங்களின் அரசியல் வாதிகள் யுத்தம்பற்றியும்,இனவிடுதலை பற்றியும் தமக்கிசைவான பொருளாதார இலக்குகளுக்கூடாகக் கருத்துக்கட்டுகிறது.இங்கே,இராமராஜனின் வானொலி வந்தடைந்திருக்கும் அரசியலின் இடம் துக்ளக் சோவின் இடமென்பதை நேற்றைய வானொலிச் செவ்வியில் அந்த வானொலி நேயர்கள் இனம் காணலாம்.நாம் அன்றே இதை அம்பலப்படுத்தினோம்.
மக்கள் விரோதிகளும் அவர்களின் அடிவருடிகளும்:
மக்கள் விரோதிகளிடம்(இந்திய,அமெரிக்க மற்றும் மேற்குலக உளவு நிறுவனங்கள் மற்றும் அத்தகைய தேசங்களின் அரசுகளோடு) உறுவுற்ற அனைத்து ஈழவிடுதலை இயக்கங்களும் இறுதியில் மக்களைப் போட்டுத் தள்ளினார்கள்!புலிகளோ எத்தகைய மக்கள் விரோதிகளுடனும் தம்மை இனம் காட்டியவர்கள்.இத்தகைய புலிகளைச் சொல்லி அரசியல் விடும் இராமாராஜன், அதே மக்கள் விரோதிகளைத் தமது உறுவுகளாக்கியபடி மக்கள் நலன்,ஜனநாயகம் பேசுவதில் எந்தத் தவறுமில்லை!ஏனெனில்,இராமாராஜனோ ஈழத்து இயக்கங்களின் மனித விரோத அரசியலை இந்திய நலனுக்காகவும்,தனது குடும்ப நலனுக்காகவும் நடாத்திவரும் ஒரு கொலையாளியாகும்.இந்த மனிதரின் அரசியலானது மக்களின் விடுதலையோடு சம்பந்தப்பட்டதல்ல என்பதற்கு இன்றைய இலங்கைக்குள் நிலவும் இனமுரண்பாட்டில் அவரது கபடத்தனமான அரசியல்நிலைப்பாடு கற்றுக் கொடுக்கவில்லை.மாறாக, இந்த நபரின் கடந்தகாலக் கள்ளக்கூட்டுக்களே நமக்குச் சான்று பகரும். இங்கோ, அரசியல் என்பது தமது வளங்களை அடைய முனையும் தனிபட்ட நலன்களாகக் குறுகுகிறது.
இது, சோ இராமசாமியிடம் நமது மக்களின் விடுதலைக்கான தீர்வைத் தேடுகிறது?
(ரீ.பீ.சீ. அதிபர் இராமராஜன்:இந்திய-இலங்கை நலன்களின் மொத்தவுருவம்)
இல்லை!
ரீ.பீ.சீ.யின் மிக மோசமான செயற்பாடுகளால் அத்தோடு அரசியல் செய்ய முற்பட்டவர்கள் அனைவரும் அவ்வானொலியை விட்டுக் கழன்றுள்ள நிலையில் இந்திய நிலையை-அதன் நலன்களைச் சார்ந்த ஈழத்துக்கான-தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வாக முன்னெடுக்கப்படும்-இலங்கை மக்கள் அனைவருக்கும் விரோதமான அரசியலைப் புலம் பெயர்ந்த மக்களுக்குள் நியாயப்படுத்தும் இந்திய வியூகம் துக்ளக் சோவை இராமராஜனுக்குக் குருவாக்கி விடுகிறது.இனிவரும் காலங்கள் மிகக் கெடுதியானது.நேரடியாகவே மிக மோசமான மக்கள்விரோத இந்தியாவின் உளவு முகவர்களால் வழிநடாத்தப்படும் இந்த ரீ.பீ.சீ.வானொலியானது தமிழ் பேசும் மக்களை மிக கேவலமாக ஏமாற்றும் அரசியலை முன்னெடுக்கும் சந்தர்ப்பங்கள்தாம் இனியுண்டு.இவ் வானொலியோடு இன்றுவரை இணைந்திருக்கும் சிவலிங்கத்தின் நிலையே மிக வருந்தத் தக்கது.எனினும்,சிவலிங்கம் தனது கருத்துக்களைப் பலமாக இந்திய நலனோடு இணைத்தபடி அதை நமது மக்களின் ஜனநாயகக் கோரிக்கையாக முன் வைப்பார்-வைத்து வருகிறார்.இது,நமது மக்களை மேலும் அடிமைப்படுத்தும் செயற்பாடானது.இலங்கை மக்களின் உண்மையான விடுதலைக்கு உழைப்பவராகச் சிவலிங்கம் தன்னைப் பிரகடனப்படுத்தி வருபவர்.ஆனால்,நடைமுறையில் மக்கள்விரோதிகளோடிணைந்து மக்களுக்காகக் குரல் கொடுப்பதென்பது சாரம்சத்தில் மக்கள் விரோதிகளை மக்களிடம் நியாய வாதிகளாக்கும் முயற்சியே!எனவே,சிவலிங்கத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
இன்றைய இந்தியாவானது தனது தரகு முதலாளிய நகர்விலிருந்து இன்னும் ஒருபடி மேலெழுந்து உலக ஏகாதிபத்திய கம்பனிகளை நேரடியாக இந்தியாவுக்குள் உள்வாங்கி அவர்களின் தயவோடு இந்தியத் துணைக்கண்டத்தை ஒட்டச் சுரண்டுவதற்கு முனைகிறது.இத்தகைய இலக்கு நிறைந்த மக்கள் விரோத அரசியலுக்கு தேசிய எழுச்சிகள்,இனவிடுதலைப் போராட்டங்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறதாக இந்திய ஆளும் வர்க்கம் உணரத் தலைப்படுவதில் அதன் அரசியல் பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பாவை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.ஆனால்,இந்தியத் தரகு முதலாளியத்தோடு கைகோர்த்த மேற்குலகப் பகாசூரக்கம்பனிகள் தமக்குத் தோதான சிறுசிறு இனங்கள் வாழும் கனிவளமுடைய நாடுகளைப் பிரித்து,அவர்களின் தேசத்தைத் தனித் தேசமாகப் பிரகடனப்படுத்தி அத் தேசங்களைத் தமது கம்பனிகளின் மூலவளதேவையைப் பூர்த்தி செய்யும் முகவர்களாக்கவே விரும்புகிறது.இது,உலகத்தை மறுபங்கீடு செய்வதிலுள்ள சிக்கலான அரசியலை இனவிடுதலைப் போராட்டத்தோடு பொருத்தி இலாபத்தை அடைய முற்படும் ஒரு வியூகமாக மேற்குலக அரசியல் நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் துக்ளக் சோ இராமசாமி தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்குச் சமஷ்டி ஆட்சிமுறையூடாகத் தீர்வுகாண முடியுமாகத் திரும்பத் திரும்பத் திருட்டை நியாப்படுத்துவதில் இந்தியாவின் இலக்கை எட்ட முனைகிறார்.ஒரு மக்கள் விரோதி நமக்குள் ஜனநாயகவாதியாகக் காட்டப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இராமராஜனின் மக்கள் விரோத அரசியலை சோவினது குரலோடு கேட்கக்கூடியதாக இருந்தது.
தமிழ்நாட்டு ஆதரவு:
தமிழ் நாட்டிலுள்ள கருணாநிதியின் ஆட்சியானது புலிகளுக்கு மறைமுகமாகக் காரியமாற்றுவதாகக் கயிறுவிடும் சோவின் நோக்கம் பார்ப்பனப் பனியா நலன்களோடு பிணைவுற்றது.சோவினது பாப்பனச் சாதிய விசுவாசமானது பாசிச ஜெயலலிதாவுக்கு அரசியல் குருவாக இருந்து தமிழ்நாட்டை மொட்டையடித்துத் தனது தலைக்கு ஏற்றமாதிரியாக்கியதுபோதாதென்று நமது மக்களையும் அந்தவொரு நிலைக்குள் தள்ள முனையும் அரசியல் தொண்டு மிகக் கெடுதியானதாக இருக்கும்.பாப்பனனின் பாரிய கெடுதி இங்ஙனம் விரிகிறது.இது சாணாக்கியனின் வழி வந்த தந்திரமாகும்.அன்று,"அனல் வாதம் புனல் வாதம்"என்று செய்து நம்மை அழித்த அதே பார்ப்பான் இன்று சமஷ்டி என்றும் இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்றும் நம்மை அழிக்க முனைகிறான்.அதற்கு இராமராஜன் என்றவொரு தமிழன் ஏஜென்டாக இருக்கிறான்.இத்தகைய அரசியலைத்தானே இதுவரைப் புலிகளும் செய்கிறார்கள்? பிறகு உனக்கும் புலிகளுக்குமென்ன முரண்பாடு?பங்கு பிரிப்பதிலா?மக்களின் குழந்தைகள் பிழையான தலைமையின் கீழ்த்திரண்டு தமிழ்பேசும் மக்களின் உரிமைக்காகச் சாகிறார்கள்.இதுவரை இலட்சம் மக்கள் மரித்துவிட்டார்கள்.அவர்களின் பிணங்கள்மீது நின்று அரசியல் செய்யும் புலித் தலைமையும் உலக-இந்தியத் தேசங்களும் ஒன்றை மிக இலாவகமாக விளங்கியுள்ளார்கள்.அது,மக்களைத் தொடர்ந்து ஏமாற்ற முடியாதென்பதே!அதற்காகவே புதிய புதிய வியூகங்கள் கருத்தின் வாயிலாக முன் வைக்கப்படுகிறது!ஆனால்,இதிலிருந்து நாம் நமது மக்களின் போராளிக் குழந்தைகளையும் அவர்களது தியாகத்தையும் எமது மக்களின் விடிவுக்காகவே பயன்படுத்த முனைவோம்.அங்கே,மக்களோடு மக்களாக இணையும் ஒரு அரசியற்றலைமை புலிகள் அமைப்பைப் புரட்சிகரமாக மாற்றும்-மக்களின் உரிமையை வென்றெடுக்கும் என்று நம்பியே இதுவரை கருத்து வைக்கிறோம்.
இராஜீவ் காந்தியைத் தமிழ்நாட்டில் கொன்றதன் பின்பு ஈழத் தமிழ் மக்களுக்கான தார்மீக ஆதரவு இல்லை என்று சொல்லும் அரசியல் சகுனி சோவோ தனது வாயால் இக்கொலையின் இந்திய ஆளும் வர்க்கத்தின் பங்கை-நோக்கை-இலக்கைத் தெளிவாக்கிவிடுகிறார்.இந்தியாவில் எந்த மாநிலத்திலும் "இந்தியா"என்றவொரு பாசிசத் தேசிய வெறி மிக மோசமாக இந்திய மக்களினங்களுக்குள் கட்டி வளர்க்கப்பட்டது.இதைத் திட்டமிட்டுச் செய்த இந்திய ஆளும் வர்க்கமானது தனது அரசியல்-பொருளாதார நோக்கங்களை மிக இலகுவாக அடைவதற்காக இதை ஆயுதமாக்கி வருவதை நாம் இலகுவாகக் காணமுடியும்.இந்தியா செய்யும் அனைத்து மக்கள் விரோத அரசியல் நகர்வையும் தேசப் பாதுகாப்பாக நியாயப்படுத்தி வருவது.இது எல்லா முதலாளிய நாடுகளிலும் நடக்கும் கதையே.ஆனால்,இந்திய ஆளும் வர்க்கம் இலங்கைத் தேசத்துள் ஒடுக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் விடுதலைக்கு உந்து சக்தியாக இருக்கும் இன்னொரு தமிழ்த் தேசிய இனமான தமிழ்நாட்டு மக்களின் தார்மீக ஆதரவு ஈழத்தை விடுவித்துவிடுமென்று அஞ்சியது.அங்கே அதன் இலக்குத் தமது பிரதமரை இழந்தாவது இதைத் தடுத்துவிடவேண்டுமென்றாக இருந்தது.முதலாளிகள் தமது இலாபத்துக்காகத் தத்தமது சொந்த மனைவிமாரையே இன்னொருவரோடு உறவுறவைத்துக் காரியமாற்றுபவர்கள்.இதையே இராஜீவ் காந்தியினதும் மற்றும் முன்னைய இந்தியத் தலைவர்களின் கொலைகளிலும் செய்தது.தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கித் தேசிய வெறியூட்ட இராஜீவ் என்ற பாசிஸ்ட்டைப் பலியெடுத்தது.இதை மூடிமறைக்கும் அரசியலுக்குப் பலியான புலிகளை நாம் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயத்துக்கே எதிரானவர்கள் என்றோம்.இப்போது,இந்தியாவின் அரசியலுக்கு ஆப்பு அடித்துவரும் புலிகளின் கீழ்மட்டப் போராளிகளை அழிக்கும் நரித்தனமான அரசியலை சோவும் இராமராஜனும் ஜனநாயக முன்னெடுப்பாகச் சொல்லவில்லை.அதைச் சொல்ல முன் தள்ளப்படும் இந்த ஏவல் நாய்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் பாதந்தாங்கிகள்.இதைப் புரியாதவர்களா புலம் பெயர்ந்த தமிழ் மக்கள்?
வானொலிக் கருத்தாடல்:
கருத்தாடலென்று வானொலியில் தோன்றும் சிவலிங்கமும்,இராமராஜனும் முன்வைக்கும் கருத்துக்களோ மிக மோசமான ஒடுக்குமுறையாளர்களின் குரலாகவே இருக்கிறது!25 ஆண்டுகளாகத் தொடரும் புலிகளின் போராட்டத்தால் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படவில்லை.அவர்களால் இனப்பிரச்சனைக்கான தீர்வை எட்ட முடியவில்லை.எனவே, விட்டுவிலகலாமென்கிறார் சிவலிங்கம்.இங்கே, தமிழ் பேசும் மக்களின் பிரச்சனை பாராளுமன்றத்துக்குள்ளோ அல்லது அரசியல் வாதிகளின் கவட்டுக்குள்ளோ இல்லை.அது வெளியில்தாம் இருக்கிறது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இதுவரை தனது மக்களையே ஒடுக்கும் அரசாக இருக்கும் நிலையில் அதன் அனைத்து நடவடிக்கையும் தன் பின்னால் இருக்கும் ஆளும் வர்க்கத்தின் நலனையே பிரதிபலிக்கும்.இங்கே "தீர்வு"என்பதைத் தீர்மானிப்பவர்களே ஒடுக்கு முறையாளர்களாக இருக்கும்போது எங்ஙனம் தீர்வை எட்டுவது?ஆக,ஒடுக்கப்படும் மக்கள் தம்மைத்தாம் விடுவிக்க வேண்டுமே ஒழிய மாறாகப் பாராளுமன்றமோ அல்லது அரசியல் கட்சிகளோ அல்ல!நமது மக்களின் விடுதலையோடு மரண விளையாட்டைத் தொடக்கிய இந்தியாவோ இப்போது சமஷ்டிக்குள் தனது கொலைக் கரத்தை மறைக்க முனைகிறது.அதையும் சிவலிங்கம் மக்கள் நலனாகவும்,ஜனநாயக முன்னெடுப்பாகவுஞ் சொல்லி நமது மக்களைத் தொடர்ந்து அந்நியச் சக்திகளுக்கு அடிமையாக்கும் அரசியலோடு இணைகிறார்.வெல்லட்டும் அவரது நோக்கு.அப்போதாவது நாம் இவரைப் புரிவதற்கு வரலாற்றில் நல்ல பாடங்கள் கிடைக்கும்.சோவும்,இராமராஜனும் ஏலவே தாம் ஒடுக்குமுறையாளர்களின் ஏவல் நாய்கள்தாமென்று தமது வால் ஆட்டல்களால் நமக்குப் புரிய வைத்தவர்கள்.சிவலிங்கமோ முற்போக்கு முலாம் பூசியபடி நம்மை முட்டாளாக்கி வருபவர்,கூடவே தன்னையும் முட்டாளாக்கியபடி!
ரீ.பீ.சீ.யில் கருத்தாடும் நேயர்களிடம் புலிகளை அமெரிக்கா தடை செய்தது,புலி உறுப்பினர்கள் அமெரிக்கச் சிறைகளில் இருப்பதாகவும் எனவே புலிகள் பயங்கர வாதிகள்தாம் என்கிறார் இராமராஜன்.ஆக,அமெரிக்கா நியாயமான நாடென்கிற நோக்கத்தோடு இருக்கும் இராமாராஜன் உலகப் பெரும் பயங்கர வாதியை நியாப்படுத்தும்போது தானும் அதே பயங்கரவாதியாகவே இருக்கிறார்.இவர் சுவிஸ்சர்லாந்தில் சிறையில் அடைக்கப்பட்டவராச்சே அதை மறந்துவிட்டாரா?ஆக,இவரும் பயங்கரவாதியாக இருந்ததால்தாம் சுவிசும் இரை உள்ளே தள்ளியிருக்கிறதென்று நாம் எடுக்கலாம்.சோவையும் போதாக் குறைக்குத் தோழமையாக்கிய ஜனநாயக வாதியான இராமராஜன் தமிழ்பேசும் மக்களின் இதயக்கனியாகத் தன்னையும் தனது இந்திய உளவு முகர்வர்களையும் கட்டியமைக்கும் கருத்தியல் தளமானது இந்தியப் பிராந்தியத்தில் நம்மை அநாதைகளாக்கும் அரசியலோடு கைகோர்க்கிறது.இதற்குச் சிவலிங்கம் தனது அறிவைப் பயன்படுத்திக் காத்து வருவது மக்கள் விரோதமே!
ப.வி.ஸ்ரீரங்கன்
19.01.2008