Sonntag, Februar 28, 2016

"பற நாயே", விரிந்துரைக்கும் அரசியல்.


 
 இதுவொரு வடூ ; அரசியல் வடு:மூன்று இலட்சம் மக்களது அழிவுக்குக் காரணமான வடூ ! ; பல்லாயிரம் போராளிகளது அழிவுக்குக் காரணமான இந்தியாவின் இந்தச் சதி தற்போது , தமிழ்பேசும் மக்களது உலகு தழுவிய அவர்களது உறவுத் தொடர்ச்சியை -நட்பை ;தோழமையை அழித்து வருகிறது.
 
 
சிங்களப் பேரினவாதவொடுக்குமுறைக்கெதிரான தமிழ்த் தேசியவினத்தின் விடுதலைப் போராட்டத்தைப் பிளந்தொடுக்குவதிற் சிங்களப் பேரினவாதத்துக்குத் துணையாக நின்றது இந்திய அரசு.இந்தியாவானது தனக்குள் இலங்கையைக் கட்டிப்போடுவதில் மட்டுமேதாம் தமிழ்த் தேசியவிடுதலையைப் பயன்படுத்திக்கொண்டது.
 

இந்தத் தெரிவில் தமிழ் பேசும் ஈழ மக்களைப் பல்வேறு பரிணாமத்துள் பிளந்தொடுக்குவதில் இந்தியா வெற்றியீட்டியது.பிரதேசரீதியாகவும் ; சாதி -மத ரீதியாகவும் ;யாழ்ப்பாண மேலாதிக்கம் என்ற கருத்தியல் ரீதியாகவும் தமிழ்பேசும் மக்களைத் திட்டமிட்டுப் பிளந்தது.இதுள் ,தலித்துவ வாதமும் அதன் அரசியல் நீட்சியும் திட்டமிடப்பட்ட இந்தியாவினது அரசியலாகும்.இந்த அரசியலானது தமிழ் பேசும் மக்களுக்குள் மீளவும் ,சாதிய வேரையும் அதன் தொடர்ச்சியையும் கூராக்கியது.முள்ளிவாய்க்கால்வரை இந்த அரசியலானது தமிழ்தேசிய விடுதலைக்கெதிரான அனைத்து நடவடிக்கையிலும் இயங்கியபடி, தற்போது "யாழ்பாண மேலாதிக்கம் "என்று உயிர் வாழ்கிறது - தலித்துவக் குழுக்கள்.
 
இத்தகைய பிளவுவாத இந்திய வியூகத்துக்குப் பின்னான ஈழ மக்களது மனங்களில் பிரதேசவாதம் ;சாதியவெறி குரூரமாகக் கனன்றபடி(நெருப்பு :கனல்தல் போன்று) ஒருவரையொருவர் வஞ்சந் தீர்க்கும் நிலைக்குத் தள்ளியுள்ளதன் பலனை நாம் இன்றுணருகிறோம்.
 

தமிழ் மக்களது விடுதலையைத் தோற்க்கடிப்பதற்குத் தலித்துவக் குழுக்கள் ,இலங்கை அரசுக்குச் சனநாயக வேடங்கட்டிக் கூத்தாடின.இதுள் ,புலம் பெயர்ந்த தலித்துவ மேம்பாட்டு முன்னணி மிக நேர்த்தியாக இந்திய -இலங்கை அரசுகளாற் திட்டமிட்டு - வழிகாட்டலுடன் இயக்கப்பட்டது.
 

இவர்கள் (தலித்துவக் குழுக்கள்)தொடர்ந்து தமிழ் மக்களது விடுதலைக்குக் குறுக்கே நின்றார்கள் -நிற்கின்றார்கள்!
 

இங்கு, தோல்விகண்டது தமிழ்த் தேசிய விடுதலை மட்டுமல்ல ; மக்களது ஐக்கியமும் கூடவே, நொருக்கப்பட்டது ; சிங்களப் பேரினவாதத்துக்கெதிரான எதிர்ப்பு அரசியலும் ,அதன்வழியான அரசியற்போராட்டமும் தோற்டிக்கப்பட்டது.
 

இதுவொரு வடூ ; அரசியல் வடு:மூன்று இலட்சம் மக்களது அழிவுக்குக் காரணமான வடூ ! ; பல்லாயிரம் போராளிகளது அழிவுக்குக் காரணமான இந்தியாவின் இந்தச் சதி தற்போது , தமிழ்பேசும் மக்களது உலகு தழுவிய அவர்களது உறவுத் தொடர்ச்சியை -நட்பை ;தோழமையை அழித்து வருகிறது.
 
இதன் கூறுதாம் , இன்று இராமசாமி துரைரெத்தினம் அவர்களது வாயால் " ஈழத்தமிழர்களை அழித்த தமிழ்நாட்டு ரவிக்குமார்போன்ற நாய்களே பொத்தடா வாயை " என்றும் , "என்னைப்பற்றிக் கதைக்க என்னடா அருகதை இருக்கு உனக்கு ; பற நாயே! " என்றும் இந்தியா எதிர்பார்த்த அரசியல் நமக்குள் பிளவுகளை வலுப்படுத்திக்கொண்டு நம்மை நடுத்தெருவில் அரசியலற்ற அநாதைகளாக உலாவவிட்டு வேடிக்கை பார்க்கிறது.
 

நாம் பிளவுண்டுபோனோம்.பிளவுக்குக் காரணமானவர்கள் மீளவொரு ஆட்டத்துக்குத் தயாராகும்போது நமது ஆவேசமெல்லாம் மீளவும் ,"பற நாயே "என்று கனன்று வருவது "ஏவியவர்களை விட்டு அம்புகளை நோவது" மாதிரித்தாம்.
 

இரவிக்குமார் தலித்துவக் குழுக்களது அரசியலுக்கு வலுச் சேர்த்தவெரென்பது உண்மை.அவரை, இந்திய வியூக அரசியலுக்கு வெளியில் வைக்கும் அரசியல்கூட இந்தப் " பற நாயே"க்குப் பிறகு வலுக்கும் .அதுகூடவொரு அரசியல்தாம்.நாம் இந்தியப் பிளவுவாத அரசியல் வியூகத்தாற் தொடர்ந்து பழிவாங்கப்படுவது திட்டமிடப்பட்ட அரசியல் நெருக்கடியாகும்.
 

ப.வி.ஶ்ரீரங்கன்
28.02.2016

Sonntag, Februar 21, 2016

தமிழக -இஸ்லாமிய தவ்ஹீத்ஜமாஅத்-தின் கொல்லத் தூண்டும் உரை!

நமது காலத்து இஸ்லாமிய அடிப்படைவாதம் :


 தமிழக -இஸ்லாமிய தவ்ஹீத்ஜமாஅத்-தின்  கொல்லத் தூண்டும் உரை! ;பிரான்ஸ் வாழ்  தமிழச்சிக்கு விடப்பட்ட மரண அச்சுறத்தல் -சிறு குறிப்பு.

"உத்தம நபிகளது உன்னத  வாழ்கையில் கல்லெறிந்தாயானால் உனக்கு(தமிழச்சிக்கு ) எதிராகக் குண்டுகள் பாயும் " -தவ்ஹீத்ஜமாஅத்

நாம் எந்தவுலகத்துள் வாழ்கிறோம் -காட்டுமிராண்டிகளது சவுதி அரேபியாவிலா அன்றித் திறந்த சனநாயகபூர்வமான இந்தியாவிலா?




ஷரியாவின்-அல்லாவின் பெயரால் கழுத்தறுத்துக் கொல்லப்படும் மனிதர்களின் இருப்பை அழிக்கும் சாத்தான்களுக்கு அல்லா ஒரு கேடா?;நபிகள் ஒரு புனிதப் பண்டமா??;கற்காலக் கபோதிகளுக்கு -அநியாய வாதிகளுக்கு அல்லா -நபி என்பதெல்லாம் மனிதக் கொலைகளுக்கும் -பெண்களை ஒடுக்குவதற்குமான கவசமே தவிரக் கடவுள் நம்பிக்கை அல்ல! !!! இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்வதற்கு இலாயக்கற்ற தமிழ் முசீலீம் அரேபியக் கைக்கூலிகள் -கபோதிகள்-இஸ்லாமியப் பயங்கரவாதிகள்- சல்மான் ருஷ்ட்டியின் மொழியில் சாத்தானின் தூதுவர்கள் இந்த வகை முஸ்லீம்கள்!




உலகம் இறை மூலத்தைக் குறித்து Higgs-Boson ஆய்வுக்குள் நிறுவப்பட்டவுண்மைக்குள்[ Higgs particle ] வந்துவிட்ட 21 ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்கிறோம்.இதுள் மதங்கள் தம்மைப் புதிப்பித்தபடி நிறுவனப்பட்ட அத்திவாரத்தைக் காக்க முனையும் போது பற்பல கருத்துக்களை முன் வைக்கின்றனர்.பிரான்சு (France)வாழ் தமிழ்ப்பெண்ணொருவர், தமிழ்நாட்டு முசுலீம் அடிப்படைவாத அமைப்புகளினோடு விவாதத்திலீடுபட்டபோது அந்த முசுலீம் அடிப்படை வாத அமைப்புகள் ,அத் தமிழ்ப் பெண்ணைச் சுட்டுக்கொல்லப் போவதாக எச்சரிக்கின்றனர்.( வீடியோ இணைப்பு இதோ : https://www.facebook.com/MEDIATNTJ/videos/905042082928204/?permPage=1 ) இன்று அந்தப் பெண் மறைந்துவிட்டதாகச் செய்தி வருகிறது.இது கொலையா -தற்கொலையாவென ஆராட்சி நடக்கும் நிலையில் சனநாயக விழுமியத்தின் நிலை!



"உத்தம நபிகளது உன்னத வாழ்கையில் கல்லெறிந்தாயானால் உனக்கு எதிராகக் குண்டுகள் பாயும் " -தவ்ஹீத்ஜமாஅத்




எனத் அத்தத் தமிழ்ப் பெண்ணை எச்சரிக்கும் பயங்கரவாதியான முசுலீம் அடிப்படைவாதி தவ்ஹீத்ஜமாஅத் -தின் விவாதத்தின் அணுகுமுறை மிகக் காட்டுமிராண்டித்தனமானது.



திறந்த சமுதாயத்தின் இருப்புக்கே சவால்விடும் அவ்கான் தலிபான்களது எச்சரிக்கை போன்றது இஃது!;அது ISIS முசுலீம் -இசுலாமியப் பயங்கரவாதிகளது குரலுக்குச் சொந்தமானது!பயங்கரவாதி தவ்ஹீத்ஜமாஅத் தைப் போன்ற இசுலாமியப் பயங்கரவாதிகளால் ,தமிழகம் நிறையுமானால் நமது திறந்த சமுதாயத்தின் முன்னணிக் குரலான " யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்ற தாரக மந்திரம் பொய்துப் போவது மட்டுமல்ல நாம் கற்கால வாழ்க்கையை அநுபவிக்க வேண்டிய இசுலாமியப் பயங்கரவாதச் ஷரியாச் சட்டக் கொடூரத்துக்குள் மாட்டுப்படுவோம்.



இஸ்லாமியச் சட்டச் ஷரியாவின் மனிதத்தன்மையற்ற கொடிய வரையறுப்புக்கமைய அவள் (பிரஞ்சுத் தமிழ் பெண்)படுகொலை செய்யப் பட்டிருக்கலாம் (அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது சந்தேகமாச்சு- எந்தவுலகத்துள் வாழ்கிறோம்?).



இந்தவுலகத்தில் தினமும் ஆயிரக் கணக்கான மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்.அரசியலின் பெயராலும்,மதத்தின் பெயராலும்-சமூக விரோதத்தின் பெயராலும் பலர் கொல்லப்படுகின்றனர். இதையெழுதும்போது கூட இவ்வுலகத்தின் ஒரு மூலையில் அநியாயமாகவொரு மனிதர் எதன் பெயராலோ கொல்லப்பட்டிருப்பார்.




யுத்தம்-தூக்கு-மருந்தூசியடித்துக் கொலையெனப் பலரூபத்தில் இந்தச்சாவு மனிதருக்கு நேரிடுகிறது.எனவே,மதங்கள்,அரசியல் அதன் ஓழுங்குவெனும் அனைத்து மனிதவிரோத முறைமைகளது பெயராலும் மனிதர்கள் தண்டிக்கப்படுகின்றனர்-கொலை செய்யப்படுகின்றனர். அஃது, எந்தவொரு அரசுக்கும் விதிவிலக்கல்ல!ஆனால், இஸ்லாத்தின்-ஷரியாச் சட்டத்தின் பெயரால் நடாத்தப்படும் அட்டூழியம் மிகப்பெரும் அவஸ்த்தை இவ்வுலகுக்கு-திறந்த சமுதாயத்துக்கு-வரலாற்றுக்கு!



 
தவ்ஹீத்ஜமாஅத்.தின் காட்டுமிராண்டித்தனமான விளக்கத்துக்கமைய[ dar asch-schahada ] விமர்சிப்பதும், நிலவும் ஷரியச் சட்டத்தை நிலைப்படுத்துவதும் தமிழர்கட்குப் புதியதில்லை!இங்கே, ஐரோ இஸ்லாமென [ Euro-Islam ]விரித்துக் கருத்தாடுபவர்களையொட்டியவுரையாடலே [Dr.Bassam Tibi ,Prof.Dr. Tariq Ramadan ]இது.




இந்தவுலகம் ரொம்பக் கொடுமையானது.இஃது, பெரும்பாலும் மெலிந்தவர்களை அனைத்து வடிவிலுஞ் சுரண்டியே கொழுத்துப் போயிருக்கிறது.இந்த மெலிந்தவர்கள் உலகில் பெரும்பகுதியாவிருந்தும் இந்த அதிகார மனிதக் குழுவைச் சிதைத்து தமக்கானவொரு அமைப்பை நிறுவமுடியவில்லை.



இயற்கையில் ஜடப்பொருள்கள்மீதும்,உயிர்களது உடல் வரை நிகழ்த்தப்படும் அரசியலானது பௌதிகவிருத்தலைத் தமது அதிகாரத்துக்குட்படுத்தும் முயற்சியில் இத்தகைய கொடிய"திறந்த சமுதாயத்துக்கு எதிரான"அன்றைய காட்டுமிராண்டிகளது உணர்வுக்கும்,அகவொழுங்குக்கும் அமைய அதிகார மனிதர்கள்அமைத்துக்கொண்டனர்.



எனவேதாம், கி.மு. 1770 களில் பாபிலோனியச் சமுதாயத்துள் கமுராபியின் [Hammurabi]ஆளுமைகளை (https://en.wikipedia.org/wiki/Code_of_Hammurabi )நிலை நாட்டும் தந்திரத்துள்:


"இறைவன்அரசனின் நிழல் அதுபோல் அரசனது நிழல் மனிதர்கள்"என விளக்கப்பட்டது.[ Zu den ersten Gesetzessammlungen gehörte die des König Ur-Nammu aus der Ur-III-Zeit. Die ersten babylonischen Gesetze stammten aus der Zeit des Herrschers Lipit-Ischtar (1934-1924 v. Chr.) ]


இத்தகைய ஒழுங்கை கி.மு. 6 ஆம்நூற்றாண்டில் கிரேக்க சட்டவாதி டிராக்கோன் [ Drakon der Athener‘ um 650 v. Chr. ]மிக நுணுக்கமாகப் பாவித்து( https://en.wikipedia.org/wiki/Draco_%28lawgiver%29 ), இன்றை அரேபியக் காண்டுமிராண்டித்தனத்தின் அன்றைய முளையை ஊன்றினான்.


பின் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு இஸ்லாமோ அதைத் தகவமைத்துக் கொண்டு இன்றுவரை அதை மனிதர்களது உடலில் எழுதிவரும் குறியீடுகளைக் கழுத்து-கை-கால்,மூக்கிழந்த மனிதர்களில் வாசிக்க முடியும்.இதைத்தாம் காட்டுமிராண்டிகளென்றும், நாய்கள், என்றும்,கபோதிகளென்றும் திட்டித் தீர்த்து இந்த குறியீட்டைக் காவும் ஒவ்வொரு மனிதர்மீதும் இரங்கிக்கொள்கிறேன். 



இஸ்லாமிய அடிப்படைவாதம்!




அஃது, எங்கு தோற்றம் பெற்றாலும் அதன் குணவியல்வு ஒரே பொதுக் குணவியல்போடுதாம் இயங்குகிறது.நாம் மிகக் கொடியவர்களது அராஜகத்துக்குள் சிக்குண்டுள்ளோம்.ஒருபுறம் அரசுகளது பயங்கரவாதம் மறுபுறம்,அதே அரசுகளது அடியாட்படைகளது பயங்கரவாதம்( இஸ்லாமிய அடிப்படைவாதிகளான இஸ்லாம் தேசம்,அல் கொய்தா ,தலிபான் இன்னபிற) திறந்த சமுதாயத்தின் ஜனநாயக விழுமியத்தையே அழித்துவிடுமளவுக்குப் பயங்கரவாதிகளது கையோங்கியுள்ளது!என்ன செய்யப் போகிறோம்?



கற்காலத்திற்கூட இவ்வளவு மோசமான இஸ்லாமியக் காட்டுமிரண்டித்தனப் பயங்கரவாதத்தை மனிதவினம் கண்டிருக்கமுடியாது.1500 ஆண்டுகளுக்குப் பின்னான இந்த மதம்அடிமைப்பட்ட மக்களது மீட்பு மதம் என்பதெல்லாம் அடியுண்டுபோய் வருடங்கள் 1300 கடந்துவிட்டது.இஸ்லாம் இப்போது சுன்னி - ஷியா ஆதிக்கத்தினது ஆயுதுமாச்சு.இந்த ஆயுதத்தை அணுக்குண்டுக்கு நிகராகப்படைத்த சூத்திரதாரிகள் மேற்குலகத்தவர்கள். இன்றிஃது, பல நூறு பயங்கரவாதக் குழுக்களாக உலகம் பூராகவும்திறந்த சமுதாயத்துள் ஜனநாயகவிரோதிகளாக இருக்கின்றார்கள். இது மிகக் கொடுமையானது.




பிரான்ஸ் வாழ் தமிழ்அரசியல் செயற்பாட்டாளரை அச்சுறுத்தியத் தமிழ்நாட்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் , அந்தத் தமிழ்த் தோழரைச் சுட்டுக் கொல்வதாக அச்சுறுத்துவது மட்டுமல்ல அவரது மறைவுக்குக்(தலை - மறைவுக்கு?) காரணமாக இருக்கலாமென்ற ஊகம் ஜனநாயத்தின் இன்றைய நிலைக்கேற்பட்ட சாட்சி அல்லவா?இத்தகைய அடிப்படைவாதிகள் இயங்கும் தளம் பொதுப்பரப்பாகும்.இவர்களை இயக்கும் அரசுகள் -அமைப்புகள் கோடிக்கணக்கான நிதிகளை இந்த இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்குக் கொடுத்து, இவர்களைப்பலாதாகாரத்துள் இயங்க அனுமதிக்கும் இன்றைய நிலையில் சாதாரண மக்களது இருப்பு அழிக்கப்பட்டே இஃது தொடர்கிறது! 




இவர்களைச் (இஸ்லாமிய அமைப்புகளை) சட்டரீதியாகக் கண்காணிக்க வேண்டும்.இஸ்லாமிய இனத்தின் இவ்வொரு சமூகக் கட்டுக்குள்ளும் இவர்கள் புகுந்துவிட்டனர்!இவர்களால் சாதரணமான அப்பாவி முஸ்லீங்கள் படப்போகும் பாடு பெரும்பாடாகவிருக்கும்.எனினும், சட்டதுக்குமுன் இவர்கள் கண்காணிக்கப்படாதிருக்கவேண்டுமானால் இந்தச் சாரண முஸ்லீம்கள் தம்மை, அடிப்படைவாத அமைப்புகளிலிருந்து தாமே விலத்தியாக வேண்டும்.இதுவே தாம்,இவர்கள் திறந்த சமூதாயத்துக்குள் இணைந்து வாழும்தமது தகமையை வெளிப்படுத்தும் முதல் ஜனநாயக விழுமியமாகும்.
"தவ்ஹீத்ஜமாஅத் விவாதத்தின் அணுகுமுறை மிகத் தவறு. " இத்தகைய அதி தீவிரவாத வலதுசாரிய மரபுவாதிகளை [ ultra-conservative-fundamentalist ] சனநாயகயச் சக்திகள் கண்டிப்பது மட்டும்போதாது.இவர்கள் பொதுச் சுதந்திரத்துக்கும் ;திறந்த சமுதாயத்துக்கும் எதிரான சக்திகள்.இவர்களைச் சட்டம் கவனிக்கவேண்டும்.இந்தியா எவ்வளவுதாம் விமர்சிக்கப்பட்டாலும் ஒரு சனநாயகச் சட்டவாத அரசு.அதுவே இத்தகைய அடிப்படைவாதிகளைக் கவனித்தாகவேண்டும்.



"குண்டுகள் பாயும் என்பது" பயங்கரவாதமாகும்.



இதற்கும் ISIS பயங்கரவாதிகளு க்கும் தொடர்புகள் இருக்கலாம்.தவ்ஹீத்ஜமாஅத் அத்தகைய பயங்கரவாதிகளது அடியாளாகக் கூட இருக்க வாய்புண்டு.இல்லையேல் "குண்டுகள் பாயும்" என்று திறந்த சமுதாயத்துக்கு எச்சரிக்கைவிட முடியாது!இது ஆபத்தான சூழல்! இசுலாமிய அமைப்புகளை -முசிலீம் சமூக அசைவியகத்தைச் சட்டரீதியாகக் கண்காணிக்க வேண்டும்!இசுலாமிய அடிப்படைவாதமானது ஏகாதிபத்தியங்களது தயவிலேதாம் உயிர்வாழ்கிறது.அது இந்தியாவை அண்மித்து வருகிறதென்பதற்கு இந்த தவ்ஹீத்ஜமாஅத் ஒரு உதாரணமாகும்.இவர்களேதாம் திறந்த சமுதாயத்தினது எதிரிகள் [The Open Society And Its Enemies] .இந்தியாவின் தடா ச் சட்டம் (India’s Black Laws – UAPA, TADA & POTA ) இத்தகைய பயங்கரவாதிகளதற்றாம் நியாயமுறுகிறது!


ப.வி.ஶ்ரீரங்கன்
21.02.2016

Samstag, Februar 20, 2016

குஷ்பூ'வுக்குப் பின்னான கவர்ச்சியுள் நாயன்தாரா!...


புவிப்பரப்பெங்குந் தினமும்,பொழுதும் அகதிகள் பெருக்கமும், பட்டுணியும், மரணவோலமும்,நோயும் நொடியும் மனித வரலாற்றில் ஒரு செயலூக்கமிக்க நிகழ்வாக மாறி வருகிறது.இன்றைய  சிரியா மக்களது இடர்ப் பெயர்வு-இது ஒருபுறத்தே இங்ஙனம் நிகழும்போது,மறுபுறமோ இந்த நிகழ்வால் அரசியல் இலாபமடையும் ஐரோப்பிய ஓட்டுக்கட்சிகள், வலதுசாரிய-இனவாதக் கட்சிகள் யாவும் இந்த அகதிகளை மனித சமநிலையிலிருந்து துண்டித்து விடுவதிலும்,துரத்தியடிப்பதிலும் மும்மரமாகச் செயற்படும்போது, அதைவைத்து மக்களின் மனங்களைத் தம் பக்கம் இழுத்துக் கட்சிகளுக்கு ஆள்பிடிக்கும் வேலையில் இந்த ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் ஊடகங்கள் செற்படுகின்றன.இதனால் சாதரண மக்களிடமிருந்து நாளாந்தம் அந்நியப்படும் நாம் சமூகக் கூட்டு மனப்பான்மையை இழந்தும்,இந்தத் தேசத்தின் பூர்வீகக் குடிகளோடு கலந்தும், இணைந்தும் வாழமுடிவதில்லை.ஆனால் இத் தேசங்கள் அதை முன் வைத்தே [sozialen Integration -Emile Durkheim ]இன்றைய அரேபியப் புலம் பெயர் மக்களை வேட்டையாடுகின்றனரென்பதை[ mechanische Solidarität  ] நம்மில் பலா அறிவர்!


இது மனிதப் பண்பாட்டிற்கு மிகவும் முரணானது.வளர்ச்சியடைந்த நாடுகளில் மக்கள் தமது வலுவுக்குள் உட்பட்ட செயலூக்கத்தை கண்டிப்பாக இந்த ஐரோப்பிய உற்பத்திச் சக்திகளுக்கு வழங்கியாகவேண்டும்.இத்தகைய செயலூக்கத்தை மிகுதியாக வழங்கிவரும் அகதிகளின் அதீத உழைப்பானது மூன்றாந்தரமாக மறைக்கப்பட்டு,அவர்கள் பூர்வீகக் குடிகளின் வரிப்பணத்தை தின்று ஏப்பம் விடுபவர்களாக இந்த உடகங்கள், அரசியல் வாதிகள் கருத்துக்களைத் தமது மக்களிடம் பரப்புகிறார்கள்.இங்கே சமூகக் கூட்டுணர்வின்றிக்கிடக்கும் [ Kultureller Identität ]ஒரு பகுதி மக்களை தம்மால் தாங்கிக் கொள்ளப்படுவதாகச் சொல்லுப்படும் பொய்,புரட்டை இந்தப் பூர்வீகக் குடிகள் நம்பி விடுவதாலும் சமுதாயத்தில் ஒரு கொதி நிலையைத் தூண்டிவிடும் அரசியல் அமுக்கத்தை ஐரோப்பிய ஆளும் வர்க்கம் தோற்றுவித்துத் தமது பொருளாதார முரண்பாட்டைத் திசை திருப்பித் தம் ஆட்சியை நீடிக்கிறார்கள்.வட  ஆபிரிக்க -அரேபிய  மக்களது இடம் பெயர்வு இத்தகைய வியூகத்தை மேலுந் தீவிரப்படுத்தியுள்ளது!




இத்தகைய நீடிப்பில் ஆட்சியாளர்கள் தவிர்க்கமுடியாது அகதிகளுக்கான அனைத்து எதிர் நடவடிக்கைகளையும் ஒரு அட்டவணைக்குள் திணிப்பதுபோன்று(...Durch Kategorisierugen...z.B."Kriminalität von Nordafrikaner ,die Auslaender","die Schein Asylanten"...usw.)"வட ஆபிரிக்கக் கிரிமினல்கள் " ; " வெளிநாட்டார்கள் " ; " போலி  அகதிகள்"என்று அட்டவணையிடுதல் கருத்தியலாக வளர்தெடுக்கப்பட்டு,மக்கள் சமூகத்தில் அதுவே அந்நிய எதிர்ப்புச் சமூக உளவியலாக ஊன்றப்படுகிறது.இது மனிதாபிமானத்தையும்,ஜனநாயக அடிப்படைப் பெறுமானத்தையும் மிகவும் பலவீனப்படுத்தி,மக்களிடம் ஒருவித சாத்வீக இனவாதமாகவும்;("passiver"Rassismus)வளர்த்து விடுகிறார்கள்.இத்தகைய சாத்வீக இனவாதமானது அடிப்படையில் செயலூக்க இனவாதிகளுக்கு("aktiver"Rassismus) பெரும் உந்துதலையும்,பொருட்பலத்தையும் மற்றும் தார்மீக வலுவை,ஆட்படையையும் கூட்டிவருகிறது.ஏலவே காலனித்துவப் பார்வையுடைய ஐரோப்பிய மனோபாவமானது மிக விரைவாக இனவாதத் தீயில் விழுந்தவிடுகிறது.இங்கு யேர்மனியில் இஃது Alternative für Deutschland: AfD என்றும் ;பிரான்சில் இது Front National என்றும் தீவிரமாக வளர்ந்து ஆட்சியைக் கைப்பற்றும் பாசிச  அபாயமாக நீண்டு கிடக்கிறது!

இதன்பலாபலனே ஆயிரம் தடவைகள் அகதிகளுக்கான சட்ட மாற்றங்களையும்,புதிய சட்ட வகுப்புக்களையும் அரசியல் ரீதியாகச் செய்யும் நிலைக்கு இந்த மக்களின் ஒப்புதல் மிக இலகுவாகக் கிடைக்கிறது.இன்றிருக்கும் ஐரோப்பியச் சந்தைப் பொருளாதாரத்தின் நிலையானது மிகவும் கொடிய மனித விரோதச் சட்டங்களை இயற்றுவதிலும்,தமது மூலதனத்தைப் பெருக்குவதற்கும்-அதைக்காப்பதற்குமாக வெறிகொண்டலைகிறது.இதற்கு முரண்பாடாக ஐரோப்பியத் தொழிலாளர்களினதும்,அகதிகளினதும் ஒன்றிணைவு இவர்களுக்குக் குறுக்கே கோடுகிழிக்க முனைவதால் இந்தச் சாத்வீக இனவாதம் மேன் மேலும் வளர்தெடுக்கப்படுகிறது.இது தொழிலாளர்களின் முரண்பாட்டையொடுக்கும் ஐரோப்பாவின் புதிய குடிசார் சட்டவுருவாக்கத்துக்கு முதற்கல்லை எடுத்துப்போட்டபோது மக்களால் எந்த எதிர்ப்பும் வராது காத்திருக்கிறது.இந்தப் "பொது ஐரோப்பியச் சட்டம்;"(Europaeischen Verfassung und Grundgesetz)ஐரோப்பிய மக்களின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் மட்டுப்படுத்தி அவர்களை வெறும் நுகர்வோர் ஆக்கும் சட்டம் என்பதையுணர்ந்த ஓட்டுக்கட்சிகள்,அதை மறைப்பதற்காக இந்தச் சாத்வீக இனவாதத்தை பரப்பி வந்தார்கள்-வருகிறார்கள்.இது சியாவினது குடிகளது இடப்பெயர்வோடு மேலும் உச்சம் பெறுகிறது. Mediterranean Sea யில் ஐரோப்பியக் கடற்படை அகதிகனைச் சாட்டிப் புவிகோள நலனை அறுவடை செய்கிறது இன்று!இதன் தொடர்ச்சியுள் ,சிரியாவின் அழிவுக்கு வழிவகுக்கும் அமெரிக்க -ஐரோப்பியப் படை நகர்வு  அணுயுத்தாற் மக்களைக் கொன்றுதாம் ஒதுங்கும் -ஓயும்!;அது இருசியாவின் மண்ணில் மீளவும் பலரைக் கொல்லும் அரசியல்.

 கீரோசீமா -நாகசாகி[Hiroshima and Nagasaki  ]:

அணு குண்டைத் தயாரிப்பதற்கான யுரேனியம் -Uran-235 (யுரேனியம் -235, வெடிப்புச்சக்தி பிளப்பு மூலமானது!(Explosionsenergie aus der spaltug von Uran -235 oder Plutonium-239)இதனாலான குண்டு கீரோசீமாவின் மீது கொட்டப்பட்டுப் பரிசோதித்த அமெரிக்கா( On August 6 the U.S. dropped a uranium gun-type atomic bomb (Little Boy) on Hiroshima. American President Harry S. Truman called for Japan's surrender 16 hours later.  ) மற்றும் விஞ்ஞானிகளான கிரிமனல்கள் ஓப்பன்கைமர்,சினைடர்(goldene Liste) பயங்கரவாதிகளால் உலக அணுவல்லரசானது.) புளுட்:டோனியம் -Plutonium- 239(இந்த மூலகத்தால் வெடிக்க வைக்கப்பட்ட குண்டு நாகசாகிமீது விழுந்து[ The atomic explosion over Nagasaki at 11:02 a.m., August 9, 1945  ] வெடித்தது.இதையும் அமெரிக்கா பரீசீலித்துக் கொண்டது.கீராசீமாவில் யுரேனியம் -235 உம் ,நாகசாகியில் புளுட்டோனியம்-239 உம் குண்டுகளாக வெடிக்க வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.)போன்றதைப் பெற்று அணுக்குண்டைத் தயாரித்துவிட ஈரான் முயல்கிறதாம் -கதைவிடுகிறது மேற்குலகம்!


இதைத் தடுத்துவிட "சனநாயக் விழுமியம் " நிறைந்த அமெரிக்காவும் -ஐரோப்பியக் கூட்டமைப்பும் முயல்கின்றதாம். (1939 இல் கோதாரி பிடித்த நீல் போரும்(Niels Henrik David Bohr  ),ஜோன் ஆர்ச்சிபெல் வீலரும் (John Archibald Wheeler )அணுப்பிளப்புத் தியரியை [ The Rutherford–Bohr model of the hydrogen atom (Z = 1) or a hydrogen-like ion (Z > 1), where the negatively charged electron confined to an atomic shell encircles a small, positively charged atomic nucleus and where an electron jump between orbits is accompanied by an emitted or absorbed amount of electromagnetic energy (hν). ] விளங்க முற்படும்போது, ஓப்பன்கைமரும் அவனது கூட்டாளிகளும் அணுக்குண்டைத் தயாரித்துக் கொடுக்கும் வேலையில் அமெரிக்க அரசோடு முனைந்தான்.




கீரோசீமாவிலும்,நாகசாகியிலும் பல்லாயிரம் மக்களைக் கொன்று பரிசீலிக்கப்பட்ட அணுக் குண்டுகளால் வேதனையடைந்த திரு.வீலர் சொல்கிறார்:"நான் அதை மீளத் திரும்பிப் பார்ப்பேனானால்-அதாவது நானும் போரும் இணைந்து உருவாக்கிய அணுப்பிளப்புத் தரவுகளை-எனக்குள் நான் கவலை கொள்கிறேன்."ஓப்பன் கைமர் கூறுகிறான்:"யுத்தம் செய்யும் உலகுக்கு அணுக்குண்டு புதிய ஆயுதமாக ஆயுதக்கிடங்குக்குள் இருக்கும்,அல்லது ஆயுதக்கிடங்கிலிருந்து நாடுகள் யுத்தத்துக்குத் தயாராவார்கள்,அப்போது லோஸ் அலாமோஸ் எனும் பெயரும் கீரோசீமாவின் சபிப்பும் மனித கணங்களுக்குள் வரும்."-லோஸ் அலோமாஸ் விஞ்ஞானிகள் சந்திப்பின்(16.10.1945) உரை.)

பொருளாதாரத்தடை? :


கடந்த காலத்தில் சதாமின் ஈராக்குக்கு வழங்கப்பட்ட பொருளாதாரத் தண்டனை ஐந்து இலட்சம் பாலகர்களைப் பாடையில் அனுப்பியது.வைத்தியர்களின் விழிகள்முன்னே நோய்க்கிருமி தாக்கிய பாலகர்கள் சிறிது சிறிதாகச் செத்து மடிந்தார்கள்.இக் குழந்தைகளுக்கு "அன்ரிபாற்றிக்"(எதிர்ப்பு நுண்கிருமி : Antibiotics or antibacterials )கொடுப்பதற்கு ஒரு துளியும் ஈராக்கில் இருக்கவில்லை.

இப்போதும் , இதை நினைக்கத் தலை சுற்றுகிறது.

தற்போது ;இருசியாவுக்குப் பொருளாதாரத்தடை (The sanctions )!

இன்றைய ஆளும் வர்க்கங்கள் தத்தமது முரண்பாடுகளையும் யுத்தச் சம நிலைகளையும் அணுவால் சம நிலைப்படுத்த முனைகின்றன.உலகிலுள்ள மனிதர்கள்தம் நலன்களை மையப்படுத்திய எந்த நோக்கு நிலையும் நிதி மூலதனத்துக்கும் அதன் இலாபத்துக்கும் கிடையாது.அங்கே யுத்தங்களே மனிதர்களைக் கொல்வதற்கான கருவியாகப் பயன்படுகின்றன.இவை முற்றுமுழுதாகப் முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறையின் அடிப்படையான தேவையாக இருக்கிறது.

எதற்காக இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டார்கள்?

இவ்வளவு பெருந்தொகையாக மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக மாறியது எதற்காக?

எல்லாம் கனிவளத்தின் "பாதுகாப்பு-எடுத்தல்-சொந்தமாக்கிக்கொள்ளல்-தடங்கலற்ற கடற்பாதை."என்று மூலப்பொருள்களுக்கான தொடர் வினைகளே இவ்யுத்தத்துக்குக் காரணமாக இருக்கிறது.இங்கே சிரியாவுக்குள் வந்திறங்கவிருக்கும் தத்தமது இராணுவத்துக்கான செலவுகளுக்கே அகதிகளை வருத்தி உழைக்க வைக்கும் அரசியலை எவரும் புரியவே இல்லை!ஆனால் பெயரென்னவோ மீள்கட்டுமானத்துக்கான அகதிகள் பயிற்றுவிப்பு.

ஆதிக்கவாதிகள் தமது நலன்களை மெல்ல இத்தகைய வார்த்தைகளுக்கூடாகவே வெளிப்படுத்தி விடுகிறார்கள்.
மக்கள் தொடர்ந்து யுத்தங்களால் தமது வாழ்வைப் பறிகொடுப்பதும்,அதை மீளப் பெறுவதற்கும்,உயிர்வாழும் உத்தரவாதத்துக்கும் சதா அகதி முகாங்களில் தவமிருப்பதும் இன்றைக்கு அன்றாட,இயல்பு நிலையாக மாற்றப்பட்டுள்ளது.

தொடரரும் சிரிய யுத்தம் மற்றும் இருசியாவுக்கெதிரான பொருளாதாரத் தாக்குதல்-யுத்தம் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொள்ளப் போகிறது.கூடவே பல இலட்சம் மக்கள் அகதியாகி உள்நாட்டிலும் வெளி நாடுகளிலுமாக அவதிப்படப் போகிறார்கள்; ஐரோப்பாவில் 60 வீதமான மக்கள் அழிவின் விளிம்பில் நிற்கிறார்கள்.இதன் சூத்திரதாரி அமெரிக்கா!

அண்மைய எண்ணைக்கான யுத்தமும்,போர்த்துக்கீசிய கொலனித்துவச் சுரண்டல் போரும் அங்கோலா((Angola)என்ற எண்ணை மற்றும் வைரம் நிறைந்த நாட்டைச் சுடுகாடாக்கியுள்ளது.1992-1994 இருவருடமாக நடந்த யுத்தில்மட்டும் மூன்று இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.சிறார் இராணுவம், மிதிவெடிப்பலி, அகதிகள்,அவநம்பிக்கை,மற்றும் எல்லா வகைச் சமூக விரோதங்களும் மலிந்த இந்த அங்கோலாவில் ஒருவர்கூட யுத்தத்தைத் தவிர வேறெதையும் வித்தியாசமாக அநுபவிக்கவில்லை.இது போர்த்துக்கீசிய கொலித்துவத்தின் முடிவுவரைத் தொடர்ந்தது.இப்போதும் அந்த நாட்டுக்கு இதே கதைதாம்.

இங்கு நடந்த யுத்தங்களெல்லாம்(1961 இல் காலனித்துவ வாதிகளுக்கு எதிரான யுத்தமும் சேர்க்கப்பட வேண்டும்.ஏனெனில் பல் வகை காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்கள் தோன்றி அவை தமக்குள் அடிபட்டுக் கொண்டதும் வெளி நாடுகளுக்காகவே- அங்கோலா மக்களுக்கான விடுதலைக்கல்ல.) எண்ணைக் கச்சாப் பொருளான மசகு எண்ணைக்கும்,வைரத்துக்குமானதாகும்.

எவரொருவர் யுத்தத்தின் கொடுமையை உணரவேண்டுமானால் அங்கோலாவைப் பார்க்கவேண்டும்!

வீதியல் செல்லும்போது ஒவ்வொரு நான்காவது மனிதரும் ஒற்றைக்காலுடன் அல்லது கையுடன் நடப்பதைப் பார்க்கலாம்.குண்டு துளைக்காத சுவர்களோ கிடையாது.இப்படி முழுமொத்தத் தேசமும் மதிவெடிகளால் விதைக்கப்பட்டு,மனித நடமாட்டத்துக்கு உதவாத மண்ணாக அங்கோலா மாற்றப்பட்டுவிட்டுது.அதையேதாம் 21 ஆம் நூற்றாண்டில் ;ஈராக் -இலிபியா மற்றும் அவ்கானித்தான் -சிரியா என நாம் காண்கிறோம்.

இது யாரால்?

இதே ஐரோப்பிய தொழிற்சாலைகளால் ;பெரு வங்கிகளால் ;நிதி நிறுவனங்களால் ;எண்ணைக் கொம்பனிகளால் நடாத்தப்பட்ட சிறுயுத்தங்கள் தற்போது உலக மகா யுத்தத்துன்குள் நுழைகிறது - பல முறை!





90களில் அமெரிக்க உளவுப்படையானது அங்கோலாவின் எதிர் புரட்சிப்படைகளுக்குப் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை வழங்கிப் போலிச் சோஷலிச இராணுவத்துக்கெதிராகப் போராட வைத்தது.MPLA-அரசு எதிர்த்துப்போராடி அனைத்தையும் அடக்க முடியவில்லை.இறுதியாக ஐ.நா.வின் கூற்றுப்படி மூன்றாவது யுத்தத்துக்குக் காரணமானது யுனிற்ரா.எல்லாமாக அங்கோலா தனது மக்களை அகதியாகக் கண்டது.

இதுவரை இருபது இலட்சம் அகதிகள் உலகம் பூராகவும் இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.நாடு மதி வெடிகளால் நிரம்பி வழிகிறது.சிறார்களின் கைகளில் பழைய குண்டுகள் விளையாட்டுப் பொருளாகக்கிடக்கிறது.தனிமையில் சற்று நடந்தால் மிதிவெடி வெடித்து மக்களைப் பலிகொள்கிறது.உள்நாட்டில் பல இலட்சம் மக்கள் அகதியாகிப் பட்டுணியுடன் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.இதே கதை மீள 21 ஆம் நூற்றாண்டில் ஈராக்கில் ;இலிபியாவில்  மற்றும் அவ்கானில் -சிரியாவில் தொடர்கதையாகிறது.

இவை ,அனைத்துக்கும் அந்நிய ஆர்வங்களின் யுத்தமே காரணமாகிறது.

கொங்கோ:

அமெரிக்க,ஐரோப்பிய மற்றும் சீனாவின் வேட்டைக்காடாகிய கொங்கோ என்ற கனிவளமிக்க இந்த ஆபிரிக்கத் தேசத்தில் இதுவரை 35 இலட்சம்(இலங்கைத் தமிழர்களின் மொத்தச் சனத்தொகை.)மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்!சிறு இனக்குழுக்களுக்குள் பற்பல போராட்டங்கள்.ஒவ்வொரு பகுதிகளையும் ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரான்ஸ்,ஜேர்மனி,அமெரிக்கா,என்று கூறுபோட்டு ஆளுகின்றன.பெயருக்கு ஒரு கபிலா கொங்கோ ஜனாதிபதி.கண்துடைப்புத் தேர்தல்,ஐ.நா.துருப்புகள்...என்னவொரு வேட்டைக்காடு இந்தக் கொங்கோ! கேக்கைப் பங்கிட்டதுபோன்று ஒவ்வொரு ஐரோப்பியத் தொழிற்கழகங்களும் அந்தத் தேசத்தைப் பங்கிட்டுவிட்டென.இதற்கு ஐ.நா.ஒரு சடங்கு நிகழ்த்தி ஐ.நா.துருப்புகள் என்ற போர்வையில் ஒவ்வொரு நாடும் தத்தமது தேவைக்கேற்ற கனிவளங்களைத் தோண்டியெடுத்துத் தமது நாடுகளுக்குப் பத்திரமாக அனுப்பியபடி.தொடர்ந்து கனிவளம் மிக்க பகுதிகளைத் தத்தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நாய் அடிபாடு.


இந்தத் தேசத்துக்கு எல்லையும் இல்லை.மக்கள் தொகை பற்றிய சரியான தகவலும் இல்லை.கிட்டத்தட்ட ஐந்து கோடிப் பேர்கள் வாழ்வதாகக் கொள்ளலாம்.உகண்டா,ருவண்டா என்று வேறு இத்தேசத்தில் கனிவளங்களைத் திருடித் தமது அமெரிக்க எஜமான்களுக்குத் தள்ளியபடி. கேமா((Hema)லெண்டு(Lendu) இனக் குழுக்கள் கிழக்குக் கொங்கோவில் ஒருவரையொருவர் விழுங்கியபடி...பேய்கமேன்( Mambuti-Pygmaen) என்ற இனக்குழு மனிதர்களைப் பிடித்து உண்பதும் இந்தத்தேசத்து மனிதர்களிடம் இடம்பெறுவதுண்டு.இந்த மம்புட்டி-பேய்மேன்களின் இருதயம் இற்றுறிப்(Ituri-Region) பகுதியிலுள்ள காடுகளைப்பற்றிச் சிந்தித்து துடிப்பதுமட்மல்ல.மாறாக பெரும் சக்தியையும் மற்ற மனிதர்களுக்கு வழங்குவதாக நம்பப்பட்டு,இந்த இனக்குழுவை வேட்டையாடி,அவர்களின் இதயத்தை உண்டு உருசிப்பதும் நிகழ்கிறது.இத்தகைய மூட நம்பிக்கையோடு கொங்கோ.


அவ்வளவு பின் தங்கிய மனிதக் குழுக்கள் இங்கேதாம் வாழ்கிறார்கள்!


"...Der Osten Kongo ist wahrscheinlich der schlimmste Platz auf Erden fuer Fraun."-bedrohte Voelker.seite:15.


"கொங்கோவின் கிழக்குப் பகுதியானது பெரும்பாலும் பெண்களுக்கு ஆபத்தான பகுதியாகும் இப்புவிப்பரப்பில்."அச்சுறுத்தப்படும் மக்கள்.பக்கம்:15.

அதாவது கொங்கோவின் கிழக்கு மாகணத்தில் எண்பது வீதமான பெண்கள் பாலியற் பலாத்தகாரத்துக்குட்படுத்தப்பட்டு,பால்வினை நோய்களினால் சாகும் நிலையிலுள்ளார்கள்.உதாரணத்துக்கு: பெம்பாசின்;"Mouvement de la Libe´ration du Congo" போராளிகள் கடந்த 29.10.2002 ஆம் ஆண்டு 65 பெண்களையும்,சிறுமிகளையும் வல்லுறுக்குட்படுத்தினார்கள்.117 மனிதர்களைக் கொன்றார்கள்.(அதே நூல்.)இது தொடர்கதை.

இந்த நிலையில் மக்கள் பெரும் அவலத்துள் வாழ,ஐரோப்பிய-அமெரிக்க வல்லூறுகள் வளத்தைத் திருடியபடி.

கொங்கோவின் கனிவளம்தாம் இந்தத் தேசத்தின் அழிவுக்கும் காரணமாகிறது.

யுரேனியம்,

தங்கம்,

வைரம்,

கொல்ரன் எனும் கைத் தொலைபேசி உருவாகத்துக்குரிய மூலப்பொருள்.


பெற்றோலுக்கான மசகு எண்ணை.


கடந்த  காலத்துள் ஜேர்மனி 560 துருப்புகளை ஐ.நா.துருப்பெனும் போர்வையில் கொங்கோவுக்கு அனுப்பித் தனது கம்பனி(Bayer-Tochter H.C) நிலைகொண்டிருக்கும் கனிவளப்பகுதியைக் காத்து வருகிறது.பெயரென்வோ தேர்தலைக் கண்காணிக்க-பாதுகாப்பு வழங்க,என்றபடி...தற்போதும் அதே கதையுடன் சிரியாவுக்குள்  வான் வழியாக நுழைகிறது யேர்மனியத் துருப்புகள்.சிறு தேசங்களது சுயாதீனம் என்பதைப் பெரும் நிதி மூலதனப் பிசாசுகள் ஒரு பொருட்டாகவெ எடுக்கவில்லையென்பதற்கு நேற்று நடந்த சிரியாவின் சுயாதீனத்துக்கான இருசியப் பிரேரணை  யு.என்.ஓ ' வில்  அமெரிக்க -பிரான்சுக் கூட்டணியால் (  http://sputniknews.com/middleeast/20160220/1035070804/west-slams-russian-peace-resolution.html   ) தோற்கடிக்கப்பட்டது நல்லவொரு உதாரணம்.



ப.வி.ஸ்ரீரங்கன்