Sonntag, Februar 21, 2016

தமிழக -இஸ்லாமிய தவ்ஹீத்ஜமாஅத்-தின் கொல்லத் தூண்டும் உரை!

நமது காலத்து இஸ்லாமிய அடிப்படைவாதம் :


 தமிழக -இஸ்லாமிய தவ்ஹீத்ஜமாஅத்-தின்  கொல்லத் தூண்டும் உரை! ;பிரான்ஸ் வாழ்  தமிழச்சிக்கு விடப்பட்ட மரண அச்சுறத்தல் -சிறு குறிப்பு.

"உத்தம நபிகளது உன்னத  வாழ்கையில் கல்லெறிந்தாயானால் உனக்கு(தமிழச்சிக்கு ) எதிராகக் குண்டுகள் பாயும் " -தவ்ஹீத்ஜமாஅத்

நாம் எந்தவுலகத்துள் வாழ்கிறோம் -காட்டுமிராண்டிகளது சவுதி அரேபியாவிலா அன்றித் திறந்த சனநாயகபூர்வமான இந்தியாவிலா?




ஷரியாவின்-அல்லாவின் பெயரால் கழுத்தறுத்துக் கொல்லப்படும் மனிதர்களின் இருப்பை அழிக்கும் சாத்தான்களுக்கு அல்லா ஒரு கேடா?;நபிகள் ஒரு புனிதப் பண்டமா??;கற்காலக் கபோதிகளுக்கு -அநியாய வாதிகளுக்கு அல்லா -நபி என்பதெல்லாம் மனிதக் கொலைகளுக்கும் -பெண்களை ஒடுக்குவதற்குமான கவசமே தவிரக் கடவுள் நம்பிக்கை அல்ல! !!! இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்வதற்கு இலாயக்கற்ற தமிழ் முசீலீம் அரேபியக் கைக்கூலிகள் -கபோதிகள்-இஸ்லாமியப் பயங்கரவாதிகள்- சல்மான் ருஷ்ட்டியின் மொழியில் சாத்தானின் தூதுவர்கள் இந்த வகை முஸ்லீம்கள்!




உலகம் இறை மூலத்தைக் குறித்து Higgs-Boson ஆய்வுக்குள் நிறுவப்பட்டவுண்மைக்குள்[ Higgs particle ] வந்துவிட்ட 21 ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்கிறோம்.இதுள் மதங்கள் தம்மைப் புதிப்பித்தபடி நிறுவனப்பட்ட அத்திவாரத்தைக் காக்க முனையும் போது பற்பல கருத்துக்களை முன் வைக்கின்றனர்.பிரான்சு (France)வாழ் தமிழ்ப்பெண்ணொருவர், தமிழ்நாட்டு முசுலீம் அடிப்படைவாத அமைப்புகளினோடு விவாதத்திலீடுபட்டபோது அந்த முசுலீம் அடிப்படை வாத அமைப்புகள் ,அத் தமிழ்ப் பெண்ணைச் சுட்டுக்கொல்லப் போவதாக எச்சரிக்கின்றனர்.( வீடியோ இணைப்பு இதோ : https://www.facebook.com/MEDIATNTJ/videos/905042082928204/?permPage=1 ) இன்று அந்தப் பெண் மறைந்துவிட்டதாகச் செய்தி வருகிறது.இது கொலையா -தற்கொலையாவென ஆராட்சி நடக்கும் நிலையில் சனநாயக விழுமியத்தின் நிலை!



"உத்தம நபிகளது உன்னத வாழ்கையில் கல்லெறிந்தாயானால் உனக்கு எதிராகக் குண்டுகள் பாயும் " -தவ்ஹீத்ஜமாஅத்




எனத் அத்தத் தமிழ்ப் பெண்ணை எச்சரிக்கும் பயங்கரவாதியான முசுலீம் அடிப்படைவாதி தவ்ஹீத்ஜமாஅத் -தின் விவாதத்தின் அணுகுமுறை மிகக் காட்டுமிராண்டித்தனமானது.



திறந்த சமுதாயத்தின் இருப்புக்கே சவால்விடும் அவ்கான் தலிபான்களது எச்சரிக்கை போன்றது இஃது!;அது ISIS முசுலீம் -இசுலாமியப் பயங்கரவாதிகளது குரலுக்குச் சொந்தமானது!பயங்கரவாதி தவ்ஹீத்ஜமாஅத் தைப் போன்ற இசுலாமியப் பயங்கரவாதிகளால் ,தமிழகம் நிறையுமானால் நமது திறந்த சமுதாயத்தின் முன்னணிக் குரலான " யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்ற தாரக மந்திரம் பொய்துப் போவது மட்டுமல்ல நாம் கற்கால வாழ்க்கையை அநுபவிக்க வேண்டிய இசுலாமியப் பயங்கரவாதச் ஷரியாச் சட்டக் கொடூரத்துக்குள் மாட்டுப்படுவோம்.



இஸ்லாமியச் சட்டச் ஷரியாவின் மனிதத்தன்மையற்ற கொடிய வரையறுப்புக்கமைய அவள் (பிரஞ்சுத் தமிழ் பெண்)படுகொலை செய்யப் பட்டிருக்கலாம் (அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது சந்தேகமாச்சு- எந்தவுலகத்துள் வாழ்கிறோம்?).



இந்தவுலகத்தில் தினமும் ஆயிரக் கணக்கான மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்.அரசியலின் பெயராலும்,மதத்தின் பெயராலும்-சமூக விரோதத்தின் பெயராலும் பலர் கொல்லப்படுகின்றனர். இதையெழுதும்போது கூட இவ்வுலகத்தின் ஒரு மூலையில் அநியாயமாகவொரு மனிதர் எதன் பெயராலோ கொல்லப்பட்டிருப்பார்.




யுத்தம்-தூக்கு-மருந்தூசியடித்துக் கொலையெனப் பலரூபத்தில் இந்தச்சாவு மனிதருக்கு நேரிடுகிறது.எனவே,மதங்கள்,அரசியல் அதன் ஓழுங்குவெனும் அனைத்து மனிதவிரோத முறைமைகளது பெயராலும் மனிதர்கள் தண்டிக்கப்படுகின்றனர்-கொலை செய்யப்படுகின்றனர். அஃது, எந்தவொரு அரசுக்கும் விதிவிலக்கல்ல!ஆனால், இஸ்லாத்தின்-ஷரியாச் சட்டத்தின் பெயரால் நடாத்தப்படும் அட்டூழியம் மிகப்பெரும் அவஸ்த்தை இவ்வுலகுக்கு-திறந்த சமுதாயத்துக்கு-வரலாற்றுக்கு!



 
தவ்ஹீத்ஜமாஅத்.தின் காட்டுமிராண்டித்தனமான விளக்கத்துக்கமைய[ dar asch-schahada ] விமர்சிப்பதும், நிலவும் ஷரியச் சட்டத்தை நிலைப்படுத்துவதும் தமிழர்கட்குப் புதியதில்லை!இங்கே, ஐரோ இஸ்லாமென [ Euro-Islam ]விரித்துக் கருத்தாடுபவர்களையொட்டியவுரையாடலே [Dr.Bassam Tibi ,Prof.Dr. Tariq Ramadan ]இது.




இந்தவுலகம் ரொம்பக் கொடுமையானது.இஃது, பெரும்பாலும் மெலிந்தவர்களை அனைத்து வடிவிலுஞ் சுரண்டியே கொழுத்துப் போயிருக்கிறது.இந்த மெலிந்தவர்கள் உலகில் பெரும்பகுதியாவிருந்தும் இந்த அதிகார மனிதக் குழுவைச் சிதைத்து தமக்கானவொரு அமைப்பை நிறுவமுடியவில்லை.



இயற்கையில் ஜடப்பொருள்கள்மீதும்,உயிர்களது உடல் வரை நிகழ்த்தப்படும் அரசியலானது பௌதிகவிருத்தலைத் தமது அதிகாரத்துக்குட்படுத்தும் முயற்சியில் இத்தகைய கொடிய"திறந்த சமுதாயத்துக்கு எதிரான"அன்றைய காட்டுமிராண்டிகளது உணர்வுக்கும்,அகவொழுங்குக்கும் அமைய அதிகார மனிதர்கள்அமைத்துக்கொண்டனர்.



எனவேதாம், கி.மு. 1770 களில் பாபிலோனியச் சமுதாயத்துள் கமுராபியின் [Hammurabi]ஆளுமைகளை (https://en.wikipedia.org/wiki/Code_of_Hammurabi )நிலை நாட்டும் தந்திரத்துள்:


"இறைவன்அரசனின் நிழல் அதுபோல் அரசனது நிழல் மனிதர்கள்"என விளக்கப்பட்டது.[ Zu den ersten Gesetzessammlungen gehörte die des König Ur-Nammu aus der Ur-III-Zeit. Die ersten babylonischen Gesetze stammten aus der Zeit des Herrschers Lipit-Ischtar (1934-1924 v. Chr.) ]


இத்தகைய ஒழுங்கை கி.மு. 6 ஆம்நூற்றாண்டில் கிரேக்க சட்டவாதி டிராக்கோன் [ Drakon der Athener‘ um 650 v. Chr. ]மிக நுணுக்கமாகப் பாவித்து( https://en.wikipedia.org/wiki/Draco_%28lawgiver%29 ), இன்றை அரேபியக் காண்டுமிராண்டித்தனத்தின் அன்றைய முளையை ஊன்றினான்.


பின் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு இஸ்லாமோ அதைத் தகவமைத்துக் கொண்டு இன்றுவரை அதை மனிதர்களது உடலில் எழுதிவரும் குறியீடுகளைக் கழுத்து-கை-கால்,மூக்கிழந்த மனிதர்களில் வாசிக்க முடியும்.இதைத்தாம் காட்டுமிராண்டிகளென்றும், நாய்கள், என்றும்,கபோதிகளென்றும் திட்டித் தீர்த்து இந்த குறியீட்டைக் காவும் ஒவ்வொரு மனிதர்மீதும் இரங்கிக்கொள்கிறேன். 



இஸ்லாமிய அடிப்படைவாதம்!




அஃது, எங்கு தோற்றம் பெற்றாலும் அதன் குணவியல்வு ஒரே பொதுக் குணவியல்போடுதாம் இயங்குகிறது.நாம் மிகக் கொடியவர்களது அராஜகத்துக்குள் சிக்குண்டுள்ளோம்.ஒருபுறம் அரசுகளது பயங்கரவாதம் மறுபுறம்,அதே அரசுகளது அடியாட்படைகளது பயங்கரவாதம்( இஸ்லாமிய அடிப்படைவாதிகளான இஸ்லாம் தேசம்,அல் கொய்தா ,தலிபான் இன்னபிற) திறந்த சமுதாயத்தின் ஜனநாயக விழுமியத்தையே அழித்துவிடுமளவுக்குப் பயங்கரவாதிகளது கையோங்கியுள்ளது!என்ன செய்யப் போகிறோம்?



கற்காலத்திற்கூட இவ்வளவு மோசமான இஸ்லாமியக் காட்டுமிரண்டித்தனப் பயங்கரவாதத்தை மனிதவினம் கண்டிருக்கமுடியாது.1500 ஆண்டுகளுக்குப் பின்னான இந்த மதம்அடிமைப்பட்ட மக்களது மீட்பு மதம் என்பதெல்லாம் அடியுண்டுபோய் வருடங்கள் 1300 கடந்துவிட்டது.இஸ்லாம் இப்போது சுன்னி - ஷியா ஆதிக்கத்தினது ஆயுதுமாச்சு.இந்த ஆயுதத்தை அணுக்குண்டுக்கு நிகராகப்படைத்த சூத்திரதாரிகள் மேற்குலகத்தவர்கள். இன்றிஃது, பல நூறு பயங்கரவாதக் குழுக்களாக உலகம் பூராகவும்திறந்த சமுதாயத்துள் ஜனநாயகவிரோதிகளாக இருக்கின்றார்கள். இது மிகக் கொடுமையானது.




பிரான்ஸ் வாழ் தமிழ்அரசியல் செயற்பாட்டாளரை அச்சுறுத்தியத் தமிழ்நாட்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் , அந்தத் தமிழ்த் தோழரைச் சுட்டுக் கொல்வதாக அச்சுறுத்துவது மட்டுமல்ல அவரது மறைவுக்குக்(தலை - மறைவுக்கு?) காரணமாக இருக்கலாமென்ற ஊகம் ஜனநாயத்தின் இன்றைய நிலைக்கேற்பட்ட சாட்சி அல்லவா?இத்தகைய அடிப்படைவாதிகள் இயங்கும் தளம் பொதுப்பரப்பாகும்.இவர்களை இயக்கும் அரசுகள் -அமைப்புகள் கோடிக்கணக்கான நிதிகளை இந்த இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்குக் கொடுத்து, இவர்களைப்பலாதாகாரத்துள் இயங்க அனுமதிக்கும் இன்றைய நிலையில் சாதாரண மக்களது இருப்பு அழிக்கப்பட்டே இஃது தொடர்கிறது! 




இவர்களைச் (இஸ்லாமிய அமைப்புகளை) சட்டரீதியாகக் கண்காணிக்க வேண்டும்.இஸ்லாமிய இனத்தின் இவ்வொரு சமூகக் கட்டுக்குள்ளும் இவர்கள் புகுந்துவிட்டனர்!இவர்களால் சாதரணமான அப்பாவி முஸ்லீங்கள் படப்போகும் பாடு பெரும்பாடாகவிருக்கும்.எனினும், சட்டதுக்குமுன் இவர்கள் கண்காணிக்கப்படாதிருக்கவேண்டுமானால் இந்தச் சாரண முஸ்லீம்கள் தம்மை, அடிப்படைவாத அமைப்புகளிலிருந்து தாமே விலத்தியாக வேண்டும்.இதுவே தாம்,இவர்கள் திறந்த சமூதாயத்துக்குள் இணைந்து வாழும்தமது தகமையை வெளிப்படுத்தும் முதல் ஜனநாயக விழுமியமாகும்.
"தவ்ஹீத்ஜமாஅத் விவாதத்தின் அணுகுமுறை மிகத் தவறு. " இத்தகைய அதி தீவிரவாத வலதுசாரிய மரபுவாதிகளை [ ultra-conservative-fundamentalist ] சனநாயகயச் சக்திகள் கண்டிப்பது மட்டும்போதாது.இவர்கள் பொதுச் சுதந்திரத்துக்கும் ;திறந்த சமுதாயத்துக்கும் எதிரான சக்திகள்.இவர்களைச் சட்டம் கவனிக்கவேண்டும்.இந்தியா எவ்வளவுதாம் விமர்சிக்கப்பட்டாலும் ஒரு சனநாயகச் சட்டவாத அரசு.அதுவே இத்தகைய அடிப்படைவாதிகளைக் கவனித்தாகவேண்டும்.



"குண்டுகள் பாயும் என்பது" பயங்கரவாதமாகும்.



இதற்கும் ISIS பயங்கரவாதிகளு க்கும் தொடர்புகள் இருக்கலாம்.தவ்ஹீத்ஜமாஅத் அத்தகைய பயங்கரவாதிகளது அடியாளாகக் கூட இருக்க வாய்புண்டு.இல்லையேல் "குண்டுகள் பாயும்" என்று திறந்த சமுதாயத்துக்கு எச்சரிக்கைவிட முடியாது!இது ஆபத்தான சூழல்! இசுலாமிய அமைப்புகளை -முசிலீம் சமூக அசைவியகத்தைச் சட்டரீதியாகக் கண்காணிக்க வேண்டும்!இசுலாமிய அடிப்படைவாதமானது ஏகாதிபத்தியங்களது தயவிலேதாம் உயிர்வாழ்கிறது.அது இந்தியாவை அண்மித்து வருகிறதென்பதற்கு இந்த தவ்ஹீத்ஜமாஅத் ஒரு உதாரணமாகும்.இவர்களேதாம் திறந்த சமுதாயத்தினது எதிரிகள் [The Open Society And Its Enemies] .இந்தியாவின் தடா ச் சட்டம் (India’s Black Laws – UAPA, TADA & POTA ) இத்தகைய பயங்கரவாதிகளதற்றாம் நியாயமுறுகிறது!


ப.வி.ஶ்ரீரங்கன்
21.02.2016

Keine Kommentare: