Sonntag, Februar 28, 2016

"பற நாயே", விரிந்துரைக்கும் அரசியல்.


 
 இதுவொரு வடூ ; அரசியல் வடு:மூன்று இலட்சம் மக்களது அழிவுக்குக் காரணமான வடூ ! ; பல்லாயிரம் போராளிகளது அழிவுக்குக் காரணமான இந்தியாவின் இந்தச் சதி தற்போது , தமிழ்பேசும் மக்களது உலகு தழுவிய அவர்களது உறவுத் தொடர்ச்சியை -நட்பை ;தோழமையை அழித்து வருகிறது.
 
 
சிங்களப் பேரினவாதவொடுக்குமுறைக்கெதிரான தமிழ்த் தேசியவினத்தின் விடுதலைப் போராட்டத்தைப் பிளந்தொடுக்குவதிற் சிங்களப் பேரினவாதத்துக்குத் துணையாக நின்றது இந்திய அரசு.இந்தியாவானது தனக்குள் இலங்கையைக் கட்டிப்போடுவதில் மட்டுமேதாம் தமிழ்த் தேசியவிடுதலையைப் பயன்படுத்திக்கொண்டது.
 

இந்தத் தெரிவில் தமிழ் பேசும் ஈழ மக்களைப் பல்வேறு பரிணாமத்துள் பிளந்தொடுக்குவதில் இந்தியா வெற்றியீட்டியது.பிரதேசரீதியாகவும் ; சாதி -மத ரீதியாகவும் ;யாழ்ப்பாண மேலாதிக்கம் என்ற கருத்தியல் ரீதியாகவும் தமிழ்பேசும் மக்களைத் திட்டமிட்டுப் பிளந்தது.இதுள் ,தலித்துவ வாதமும் அதன் அரசியல் நீட்சியும் திட்டமிடப்பட்ட இந்தியாவினது அரசியலாகும்.இந்த அரசியலானது தமிழ் பேசும் மக்களுக்குள் மீளவும் ,சாதிய வேரையும் அதன் தொடர்ச்சியையும் கூராக்கியது.முள்ளிவாய்க்கால்வரை இந்த அரசியலானது தமிழ்தேசிய விடுதலைக்கெதிரான அனைத்து நடவடிக்கையிலும் இயங்கியபடி, தற்போது "யாழ்பாண மேலாதிக்கம் "என்று உயிர் வாழ்கிறது - தலித்துவக் குழுக்கள்.
 
இத்தகைய பிளவுவாத இந்திய வியூகத்துக்குப் பின்னான ஈழ மக்களது மனங்களில் பிரதேசவாதம் ;சாதியவெறி குரூரமாகக் கனன்றபடி(நெருப்பு :கனல்தல் போன்று) ஒருவரையொருவர் வஞ்சந் தீர்க்கும் நிலைக்குத் தள்ளியுள்ளதன் பலனை நாம் இன்றுணருகிறோம்.
 

தமிழ் மக்களது விடுதலையைத் தோற்க்கடிப்பதற்குத் தலித்துவக் குழுக்கள் ,இலங்கை அரசுக்குச் சனநாயக வேடங்கட்டிக் கூத்தாடின.இதுள் ,புலம் பெயர்ந்த தலித்துவ மேம்பாட்டு முன்னணி மிக நேர்த்தியாக இந்திய -இலங்கை அரசுகளாற் திட்டமிட்டு - வழிகாட்டலுடன் இயக்கப்பட்டது.
 

இவர்கள் (தலித்துவக் குழுக்கள்)தொடர்ந்து தமிழ் மக்களது விடுதலைக்குக் குறுக்கே நின்றார்கள் -நிற்கின்றார்கள்!
 

இங்கு, தோல்விகண்டது தமிழ்த் தேசிய விடுதலை மட்டுமல்ல ; மக்களது ஐக்கியமும் கூடவே, நொருக்கப்பட்டது ; சிங்களப் பேரினவாதத்துக்கெதிரான எதிர்ப்பு அரசியலும் ,அதன்வழியான அரசியற்போராட்டமும் தோற்டிக்கப்பட்டது.
 

இதுவொரு வடூ ; அரசியல் வடு:மூன்று இலட்சம் மக்களது அழிவுக்குக் காரணமான வடூ ! ; பல்லாயிரம் போராளிகளது அழிவுக்குக் காரணமான இந்தியாவின் இந்தச் சதி தற்போது , தமிழ்பேசும் மக்களது உலகு தழுவிய அவர்களது உறவுத் தொடர்ச்சியை -நட்பை ;தோழமையை அழித்து வருகிறது.
 
இதன் கூறுதாம் , இன்று இராமசாமி துரைரெத்தினம் அவர்களது வாயால் " ஈழத்தமிழர்களை அழித்த தமிழ்நாட்டு ரவிக்குமார்போன்ற நாய்களே பொத்தடா வாயை " என்றும் , "என்னைப்பற்றிக் கதைக்க என்னடா அருகதை இருக்கு உனக்கு ; பற நாயே! " என்றும் இந்தியா எதிர்பார்த்த அரசியல் நமக்குள் பிளவுகளை வலுப்படுத்திக்கொண்டு நம்மை நடுத்தெருவில் அரசியலற்ற அநாதைகளாக உலாவவிட்டு வேடிக்கை பார்க்கிறது.
 

நாம் பிளவுண்டுபோனோம்.பிளவுக்குக் காரணமானவர்கள் மீளவொரு ஆட்டத்துக்குத் தயாராகும்போது நமது ஆவேசமெல்லாம் மீளவும் ,"பற நாயே "என்று கனன்று வருவது "ஏவியவர்களை விட்டு அம்புகளை நோவது" மாதிரித்தாம்.
 

இரவிக்குமார் தலித்துவக் குழுக்களது அரசியலுக்கு வலுச் சேர்த்தவெரென்பது உண்மை.அவரை, இந்திய வியூக அரசியலுக்கு வெளியில் வைக்கும் அரசியல்கூட இந்தப் " பற நாயே"க்குப் பிறகு வலுக்கும் .அதுகூடவொரு அரசியல்தாம்.நாம் இந்தியப் பிளவுவாத அரசியல் வியூகத்தாற் தொடர்ந்து பழிவாங்கப்படுவது திட்டமிடப்பட்ட அரசியல் நெருக்கடியாகும்.
 

ப.வி.ஶ்ரீரங்கன்
28.02.2016

Keine Kommentare: