Sonntag, Dezember 02, 2012

புலம் பெயர் தமிழரது "புரட்சி,தலித்துவம்,கிழக்கியம்"- மறுவாசிப்பு!

புலம் பெயர் தமிழரது "புரட்சி,தலித்துவம்,கிழக்கியம்"- மறுவாசிப்பு!

ன்று மீளவும், சிந்தித்துப் பார்க்கிறேன்.கடந்த காலத்தில் நாம் பெருவாரியாக மக்களை அண்மித்த அரசியலையே செய்து வந்திருக்கிறோம்.

1986 இல் இருந்து நீண்ட இந் நோக்கானது மக்களது இன்னல்களுக்குக் காரணமான இலங்கைப் பாசிச அரசு,இயக்கவாத மாயை மற்றும் புலிகளது மாப்பியாத்தனமான அந்நிய அடியாட்படைச் சேவையென்று ஒரு நிதானமான அரசியற் கருத்தாக்கத்தைக் கண்டடைந்தோம்.

பல இயக்ககங்கள், இந்தியாவின் தயவில் மக்களை வேட்டையாடிக்கொண்டு புலிகளுக்கு நிகராகவே மக்களையொடுக்கியபோது எதிரியான சிங்களவரசு அவர்களைத் தனது உறுப்பாக மாற்றியுங்கொண்டது.



புலிகள் மாறி மாறி வந்த அரசுகளுடன் சமரசம்-பிடிவாதமெனச் செய்துகொண்டு தமது இருப்புக்காகப் போராடியபோது புலத்தில் மிக எளிமையான மனிதர்களாகக்காட்சிப்பட்ட பல நண்பர்கள் மக்களை அண்மித்த அரசியல் செயற்பாட்டுக்குட்பட்டனர்.

அவர்களுடன், உடன்பாடுகொண்டு"இந்த இலக்கியச் சந்திப்பும்"ஒரு உரையாடலுக்கான மாற்றுத் தளத்தை இயக்கும் கருவியாக நமக்குள் மலர்ந்துகொண்டது.

ஆக்கதாரர்கள்,சஞ்சிகை வெளியீட்டாளர்களின்றி இலக்கியச் சந்திப்புக்கிடையாது.பீட்டர் ஜெயரெத்தினமோ இல்லைப் பார்த்திபனோ அல்லது அறுவைச் சீனி லோகனோ,சிந்தனைப் பராவோ இதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது.இதைச் சாத்தியமாக்கப் பரவலாகப் பலர் தமது உழைப்பை நல்கினர்.இதுள்,எனது ஊரவளான விக்கினா பாக்கியநாதன்கூட முக்கியமாகச் செயற்பட்டவளே.




இப்போது தொடர்ந்து யோசித்துக்கொண்டிருக்கும்போது, இலங்கைக்குச் சென்று மாதக்கணக்காகத் தங்கி ,மகிந்தா அரசுக்கிணக்கமான அரசியலைப் பலர் செய்கின்றனர்.இதுள்,ஞானம் எனும் எம்.ஆர்.ஸ்டாலின்,தேவதாசன்,சுகன்,கீரன்,இராகவன்,ரெங்கன்,புளட் ஜெகநாதன்,சிவராசா,சீனி லோகன்,கொன்சன்ஸ்ரையன்,தேசம் குழு போன்றோர் மிகக் கணக்கிடத்தக்க புலம்பெயர் தமிழர்கள்.

இவர்களோடு, சோபாசக்தி மாதக்கணக்காவும் இந்தியாவில் தங்கி அரசியல் செய்வது கண்கூடு(இரயாகரன் குறித்தும் ஒரு கணிப்பீட்டுக்கு நாம் வரவேண்டும்.மேற்சொன்னவர்கள் இலங்கை,இந்தியாவென்று செல்லும்போது இரயாகரன் இங்கே செல்வதில்லை.அதற்கான முழுக்காரணமும் கட்டன்நசனல் வங்கியின் கோடிக்கணக்கான பணத்தின் கொள்ளையில் பெருந்தொகை பணத்தை வைத்திருக்கும் இரயாவுக்கு இலங்கைக்கு என்றுமே செல்லமுடியாது!இலங்கை சட்டவாதத்துக்குட்பட்டவொரு அரசாகவும்,நியாய தர்மத்துக்குட்பட்ட அரசாகவிருக்கும்வரை. அது,இலங்கைக்குப் பொருந்தாதென்பதால் இரயாகரன் வருங்காலத்தில் கொழும்பில் "புதிய ஜனநாயக மார்க்சிய லெனியக் கட்சி" என்ற பெயர்ப் பலகைக் கட்சியினது நிகழ்வில் பங்கு பெறலாம்.ஆனால்,இரயாகரனோ புலி செத்த அடுத்த, ஆண்டில் புதிய வீடும் கொள்முதல் செய்திருக்கிறார்.ஒரு அச்சகத்துள் கூலியாக வேலைக்கிருக்கும் நண்பருக்கு இலங்கையிலிருந்து நிகழ்வுக்காகப் பெரியவர்களைப்,பேராசிரியர்களைச் சீடர்களை அழைக்க முடிகிறது.அவர்களுக்கும்,அவர்கள் சார்ந்த புதிய ஜனநாய மார்க்சிய லெனியக் கட்சிக்குப் பல இலட்சம் நிதியும் வழங்கக் சுடியதாகவிருக்கிறது!எப்படி,இஃதெல்லாம் சாத்தியமாகிறது?ஒரு அச்சகக் கூலிக்கு?).




அவ்வண்ணம், தம்மைத்தாமே புத்திசீவிகளாக வர்ணிக்கும் சுசீந்திரன்,மு.நித்தியாநந்தன் போன்றவர்களும் ஊரெல்லாம்-உலகெல்லாம் பறந்து நிகழ்வுகளில் உரை செய்கின்றனர்.இந்த அனைத்துச் செயற்பாடுகளும் சிங்கள வல்லாதிக்த்தால் இலங்கையில் ஓடுக்கப்படும் மக்களுக்கான அரசியல் அல்ல!இவர்கள்,அனைவருமே எங்கும் தொடர்ந்து பணியிலிருப்பதாகவோ,ஒரு பொறுப்பான பணியில் வருடக்கணக்காகவிருந்து செயற்பட்டவர்களோ கிடையாது.

சீசீந்திரனுக்கு,அவரைத் தத்தெடுத்த ஜேர்மனிய முது தம்பதினரால் வீடுவளவு இனமாக வந்தது.அந்தத் தம்பதியினர் தமது சொந்த உறுவுகளுக்கே-குழந்தைகளுக்கே அந்த முதிசத்தைக் கொடுக்காது இவருக்கு வழங்கிச் செத்தனர்.அதன் பெறுமதி அண்ணளவாக அரை மில்லியன் யூரோக்களைக் கொண்டது.இந்தச் சுசீந்தரனுக்குச் சொத்து வந்திருப்பினும் அதைப் பராமரிக்கும் செலவெனப் பல நூறு யூரோக்கள் மேலதிகமாகவும்,குடும்பச் செலவெனவும் மாதம் 2000€  யூரோத் தேவையாகவே இருக்கிறது.எந்த வேலை வெட்டியுமற்ற இந்த வெட்டிப் பயல், இந்தப் பணத்தை எவர் மூலம் பெறுகிறார்.?-எனக்கு ஆச்சரியமாகவிருக்கிறது.மொழி பெயர்ப்பாளரென்பது வெறும் குசும்பு!இப்போது எவருக்கும்,எவரும்"முழி" பெயர்க்கலாமே தவிர மொழி பெயர்க்கத் தேவையில்லை!




அண்ணன் நித்தியாநந்தன் தன்னைப் பேராசிரியர்,டாக்டர் என்றழைக்கும்போது உச்சி மகிழ நிகழ்வுகளில் உட்கார்ந்திருக்கிறார்.ஒரு சாதரண விரிவுரையாளன்,எங்கும் டாக்டர் பட்ட ஆய்வைச் செய்து உச்ச தொழிலில் ஈடுபடாத இவருக்குக் கனடாவரை சென்று உரை நிகழ்த்த  எப்படிப் பணம் புரளுகிறது?எங்கே-எந்த நிறுவனத்தில் வேலை புரிகிறார்.மாதக் கணக்கில் இந்தியாவில் தவங் கிடந்து மீண்ட இந்த மனிதருக்கும் வசதிகள் பெருகுகிறது?-எப்படி?

ஞானத்தையும்,சுகனையும்,தேவதாசனையும்,சோபாசக்தியையும் விட்டு விடலாம். இவர்கள் நேரடியாக ஒடுக்குமுறையாளர்களது சம்பளப் பட்டியலில் இருந்துகொண்டு நம்மையும்,நமது மக்களையும் முட்டாளாக்குபவர்கள்!



ஆனால்,இத்தகைய குள்ள நரிக் கூட்டமானது புலம்பெயர்ந்து வாழும் தேசத்தில் குருதியாறைத் திறக்குமொரு அரசியலைச் சந்திப்புக்கள்,இலக்கியவுரையாடல்களெனச் செய்யும்போது இவர்களது வீட்டிலும்,மண்டபங்களிலும் தவழ்ந்து குடித்துக் கொட்டமடிக்கும் இளைய தலைமுறைப்"படைப்பாளிகள்"சிந்தனைச் சிற்பிகளுக்கு என்ன வகைமாதிரியான கணிப்பீடுருவாகிறது?

இவர்கள்,சிங்கள அரசுக்குச் சாமாரஞ் செய்யும் துஷ்டர்களோடும், இந்தியவரசின் உளவு நிறுவன முகவர்களோடும் கூடியுண்டு,குடித்துக் கும்மாளமிடும்போது இவர்களது"மக்கள்"நலக் கருத்தாடல்-அரசியலது உண்மை வடிவமென்ன?


தொடர்ந்தும்,எமது மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

ஒரு புறம் புலி மாபியாக்கள்"தேசியம்-தேசியம்"என்று சொல்லிச் சொத்துச் சேர்ப்பதைத் சமீபத்தில் சாத்திரி என்ற புலிவால் அம்பலப்படுத்தியதுபோல் இவர்களும் மக்களுக்கு விரோதமாகவே செயற்படுகின்றனரென்று  எவன் உண்மையாகப் பேசுவான்?- இவர்களோடு கூடிக் கூத்தடிக்கும் முன்னாள் புலி விசுவாசத் தம்பிகள் இதற்குத் தயாரா?

நீங்கள், மக்களை அண்மித்து இயங்கினால் அதை நோக்கிச் செயற்படுங்கள்!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.12.2012

Keine Kommentare: