தத்தமது தேசங்கள் பல்வேறு தேசியவினங்களது சிறைக் கூடமாகவிருப்பதை அவர்கள் மிக நேர்த்தியாகவே அறிவர்.இத்தகையவொரு வியூகத்துள் ஈழமக்களது விடுதலையை அழிப்பதற்கான பல முகாந்திரங்களை ,இத்தகைய தேசங்கள் வகுத்போது நம்பவைத்து -உதவியளித்துப் பிளந்தழித்தெலன வியூகத்தை வகுத்துக்கொண்டன.
இத்தகைய வியூகத்துக்குப் பலியான பல முன்னணி ஈழத்து அமைப்புள் இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கும் ;பிற சிறு தேசிவினங்களும் தீங்கிழைத்துத் தம்மை இந்தியாவின் -சிங்கள அரசின் எடுபிடிகளாக்கின.
சமீபத்தில் ,புலிகளை முள்ளிவாய்க்காலில் பூண்டோடு அழிக்கும் திட்டத்துள் தமிழ்பேசும் இனத்தைப் பல்வேறு மரபார்ந்து பிளவுகளைக் கூர்மைப்படுத்திப் பிளப்பதற்காக -திட்டமிடப்பட்ட பிரதேச -சாதிய வாதங்களையெல்லாம் மேல் நிலைக்குத் தள்ளிக் கூர்மைப்படுத்தும் அமுக்கக் குழுக்களை, இந்திய -இலங்கை அரசுகள் தகவமைத்தபோது அத்தகைய குழுக்களது உறுப்பினர்களாக ;அநுதாபிகளாகவிருந்த புலம்பெயர் "தோழர்கள்"இன்று, நூற்களையும் ;சஞ்சிகை மற்றும் இலக்கியம் சார்ந்தும் வெளியீடுகளைச் செய்கின்றனர்.
அவர்களை, இதுவரை இனங்கண்டவர்கள் சமரசமின்றி இதுவரை எதிர்க்கிறோம்.இது, அவர்களது தனிப்பட்ட வாழ்வு சார்ந்தோ இருத்தல் சார்ந்தோ அல்ல!மாறாக ,அவர்கள் கொண்டிருக்கும் அரசியல் மற்றும் இவர்களது அமுக்கக் குழுவாதமானது இந்திய -இலங்கை அரச லொபிகளாக இவர்களுக்கு அளித்த வரலாற்றுப் பாத்திரத்தையும் ;இதன் விளைவாக இவர்கள் செய்த பாரிய தவறுகளையுமே நாம் எதிர்கிறோம்.
இத்தகைய தவறய் ,இவர்கள் தெரியாது செய்யவில்லை!
மாறாகத் தெரிந்தே -உணர்ந்தே செய்தனர்.
தமிழ் தேசியத்தின் விடுதலை ஒரு சோசலிசச் சமுதாயத்தைக் கட்டியமைக்காதுபோனால் அதன் வெற்றி தமிழ்ச் சமுதாயத்துக்குள் இருக்கும் பல்வேறு மத -சாதிய வேறுபாடுடைய மக்களுக்கு மீளவும் ,சிறைக்கூடமாக இருக்கும் என்பதாலும்;ஈழதேசமானது இவர்களுக்குத் தூக்குமேடையாக மாறும் என்பது பரவலாக இவர்களால் புரியப்பட்டதே.
இத்தகைய ஈழத் தேசிய விடுதலைப் பலவீனமானது புலிகளது எழிச்சியோடு மேல் நிலைக்கு வந்தபோது அதைச் சரியாகப் பயன்படுத்திய நமது எதிரிகளான இந்திய -இலங்கை ஆளும் வர்க்ககங்கள் ,இவர்களது துணையோடுதாம் ஈழமக்களைப் பிரதேசரீதியாக -சாதிரீதியாக மிக ஆழமாகப் பிளந்து, தமது நோக்கதை நிறைவேற்றியது.இது வரலாற்றுண்மை!
இங்கு ,இதுவரை (இந்த) இந்திய -இலங்கைப் புலத்து லொபிகளை எதிர்த்து விவாதித்தவர்கள்கூட த் தற்போது அவர்களது அரசியலை மிக நேர்த்தியாகப் பின் தொடர்கின்றனர்.
இங்கே, தோற்கடிப்பட்டது ஈழதேச விடுதலை மட்டுமல்ல மாறாகத் தென்னாசியச் சிறுபான்மை இனங்களளது விடுதலையுந்தாம்!
ப.வி.ஶ்ரீரங்கன்
27.12.2015
Keine Kommentare:
Kommentar veröffentlichen