Dienstag, April 27, 2010

மே:2 ஆம் தேதி:நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்.

பெரும் விளம்பரத்துக்கும்,விளக்கவுரைகளுக்கும் நடுவில் மெலிதான மாற்றுச் சலசலப்பு-சிறு குறிப்பு!



புலம் பெயர் புலித்தலைமை:


ன்னியில் புலியின் இராணுவக் கட்டமைப்பைச் சிதறடித்தவர்கள்,அதற்கு இசைவாக இயங்கியவர்கள் புலம்பெயர்வுப் புலிக்கூட்டத்தின் மேல்மட்டப் பேச்சாளர்கள்-தலைவர்கள்.இவர்கள் பிரபாகரனுக்குக் காடாத்துப் பண்ணினார்களோ இல்லையோ தமிழ்பேசும் இலங்கைவாழ் மக்களுக்குத் தொடர்ந்து காடாத்தி வருகிறார்கள்.இது,கவலைக்குரிய விடையமல்ல-கண்டிக்கப்படவேண்டியது.


இன்றைய புலம்பெயர்வு மக்களது வாழ்சூழலில் தேசத்தைச் சொல்லி-தமிழைச்சொல்லித் தட்டிப்பறிப்பதற்குத் தோதான புலியினது இராணுவவாதப் போராட்டம் இல்லையென்பதால், அதன் மாற்றாகவும், அந்த மாற்றின் தேவையை உணர்த்துவதாகவும், "தேசம் கடந்த தமிழீழ அரசுக்கான"தேர்தல் அதி உச்சமான கோணங்கித்தனமான விளம்பரத்தின்வழி புலம் பெயர் மக்களது புலன்களைப் பேர்த்தெடுப்பதில் சந்தர்ப்பவாதப் புலிகள் உருத்திரகுமாரனின் குரலின்வழி இயங்குகிறார்கள்.



அடிமட்டத்துத் தமிழனுக்கும்,உலகத்தின் எந்த மூலையில் அவன் வாழ்ந்தாலும் அவனது பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும் ஒரே அரசு"நாடுகடந்த தமிழீழ அரசு"எனப் பொய்ப்பரப்புரைகளைச் செய்யும் இந்த விசமத்தனமான புலம்பெயர் புலிப்பணப் பேய்கள், புலித் தளபதிகளையும் உள்ளடக்கி, வரும் மே 18 இல் பிரபாகரனுக்கும் அவரது போராளிகளுக்கும் ஞாபகார்த்தம் வேறு செய்வதற்கான முன் நிபந்தனைகளிலொன்று "நாடுகடந்த அரசு"நிர்மாணிப்பது.அங்கே, அதன் அமைச்சர்கள்,பிரதமர் எனப் பொல்லாத பித்தலாட்டம் மக்களது குரல்வளைகளைத் தறித்துப் பணம் பண்ணும் முக்கிய நோக்கில், மே 18 நாடகம் அரங்குக்குவர ஒரு அரசினது முன்னெடுப்பாக இந்த செயற்பாடு களமிறங்குகிறது.


தட்டிக் கேட்பார் யாருமில்லை:


யாரும் பொதுப்படையான இவர்களது அதிகாரங்களை,ஆதிக்கத்தை,இதன் வாயிலாக எழ முனையும் அந்நியத் தேசங்களுக்கு ஆதரவான கருத்தியல் அராஜத்தைக் கண்டிப்பதாகவில்லை.புலிப் பினாமிகள் தமது கைகளிலுள்ள மக்களது சொத்தைக் காப்பதற்கெடுக்கும் முயற்சியில்"நாடு கடந்த தமிழீழ அரசு"வெனப் பரப்புரை செய்யும் பம்மாத்தையும்,அதற்கான தேர்தல் நாடகத்தையும் குறித்து எந்தப் பெரிய மார்க்சியனும் வாயே திறக்கவில்லை.மாறாகத் தமது விருப்பங்களுக்கேற்ற "தேர்வுகளோடு" கருத்தாடுகிறார்கள்.ஈழத்தை ஆதரிப் போரும்,ஆதரிக்காதோரும் தமிழ் மக்கள் சமூகத்துள் காலாகாலமாக நிலவிய-நிலவும் பண்பாட்டு இடைவெளிக்குள்(Cultural distance)சிக்குண்டுபோய் இலங்கையில் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளில் பண்பாட்டு மௌனத்தை(Cultural silence)கொண்டுள்ளார்கள்.இது எல்லாவித அதிகாரங்களுக்கும் வாய்பேசா மௌனியாக இருந்துவிட்டுத் தமது இருப்பை அசைகின்றபோது(Identity crisis) கிணற்றுக்குள் இருந்து வெளியில் வந்த நபரைப் போல் சமூகத்தை எதிர்கொள்ள முனையும்.இதுவே இலங்கை அரசால் கட்டவிழ்த்து விடப்படும்தேர்தல்மோசடி-கட்சிசார் அராஜகத்தைப் புதிதாக நடைபெறும் செயலாக வர்ணிக்க முனைகிறது.இங்கே, இதன் தோற்றுவாயும் வர்க்க நலனும் திறம்படப் புரியவில்லை! இத்தகைய கருத்தாடல்களேதாம் இன்றைய புலம் பெயர்வு மக்களை மிக வேகமாக வேட்டையாடுகிறது.ஜீ.ரீவீ இதற்காகப் புலம்பெயர்வுப் புலிகளது பணத்தில்(இப்பணம் மக்கள் சொத்து) கணிசமான மக்களை முட்டாளாக்க இயக்கப்படுகிறது.இந்த இடருக்குள் உள்வாங்கப்படும் எமது மக்களது சுய தெரிவு என்ன?



மீளவும்,"மேற்குலக நாடுகளின் தயவில் நமது மக்களுக்குச் சுயநிர்ணயவுரிமை கிடைக்கப்பெறும்.அது,நாடுகடந்த அரசினது மூலம் மேற்குலக நாடுகளை வளைத்துப்போடமுடியும்"எனப் பொய்யுரைக்கும் இந்தப் பணப் புலிகள், தமது இருப்பை நிலைப்படுத்தவும்-பதுக்கிய செல்வத்தைக் காப்பதற்கும்,தொடர்ந்த புலம் பெயர்வுத் தமிழரிடம் பணம் கறக்கவுமாக இந்தச் சோடினையில்"நாடுகடந்த தமிழீழ அரசின்"தேவையை வற்புறுத்திக்கொண்டு கருத்தாடுகிறார்கள்.இதைத் தட்டிக் கேட்பார் யாருமில்லை!


நாடு கடந்த தமிழீழ அரசு:


புலிகளது இராணுவலிமை செய்யாததை இந்த "நாடுகடந்த அரசு"ஜனநாயகவழியில் செய்துமுடிக்குமெனவும் சொல்லப்படுகிறது.இத்தகைய பரப்புரைகளின்பின்னே அணிதிரளும் சக்திகள் பழைய புலிப்பினமிகள்தாம்.குறிப்பாகச் சொல்லத் தேவையில்லை.அதே முகங்கள்-அதே சேட்டைகள்.இப்போது நடைபெறும் வானொலி-தொலைக்காட்சி விவாதங்களும் அதுசார்ந்த அரசியல் காய் நகர்த்தலும் தமிழ்மொழி, இனம்,அரசியல்,சுயநிர்ணயவுரிமை,தமிழ்மக்கள் நலம் சார்ந்த பொருண்மிய வாழ்வை,தமிழ்ப் பண்பாட்டை,வரலாற்றை அனைத்தையும்"நாடுகடந்த தமிழீழ அரசு"காக்கும்-வென்றெடுக்கும்,அரசியல் முன்னெடுப்பாகக் காண்கிறது.இந்தத் தமிழ்ஊடகங்கள் அல்லது விவாதங்கள் நமது வாழ்வுரிமையை எப்போதும் தமது வருவாய்க்காக விற்கத் தயாராகிறது.இது தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கும் ,திராவிட முன்னெடுப்புக்கும் உள்ள அதே நோக்கில் செல்லுகிறது.திராவிட இயக்கங்கள் இன்று சீரழிந்த இயக்கங்களாக மூலதனத்துக்குள் முடங்கிய மாதிரித்தாம் புலிகளும் அவர்கள் பின்னால் வீணியூற்றியபடி அலையும் மேற்குலக அரசுகளது ஏஜென்டுகளும்(சேரன்-உருத்திரகுமார் போன்ற சந்தர்ப்பவாதிகளும் இன்னபிற புலிப் பினாமிகளும்)முடங்கியுள்ளார்கள்.


இதுவரைகாலமும், ஏகத் தலைவரும் அவரது போராளிகளும்-ஆயுதமும் தமிழீழம் பெற்றுத் தந்துவிடுவார்கள்-தந்துவிடுமெனப் பசப்பியவர்கள் இப்போது உருத்திரகுமாரனின் உடும்புப்பிடியான ஜனநாயக வழி"நாடுகடந்த அரசு"தனித் தமிழீழத்தை இலங்கையில் மேற்குலக அரசுகளின் தயவோடு பிரித்துவிடுமெனப் பரப்புரைகள் எங்கும் ஒலிக்க விடுகிறார்கள்.இந்தப் பெரிய சமூக விரோதிகளைத் தட்டிக் கேட்பதற்கோ அல்லது இவர்களது பொய்யான சுரண்டலை அம்பலப்படுத்தவோ எந்தப் பெரிய "புரட்சிக்காரர்கள்"தம் போராட்ட இலக்கும் தீர்மானஞ் செய்வதாகவும் இல்லை!எல்லாம் வல்ல பிரபாகரன் எப்படியும்-எப்போதாவதும் வெளியே வந்துவிடுவாரெனப் புலம்பும் இந்தக் கள்வர் கூட்டத்தை நம்பிக்கிடக்கும் புலன் பெயர்ந்த தமிழர்களும் மே 2 ஆம் தேதி தமது பொன்னான வாக்குகளை அளித்துத் தேசம் கடந்த தமிழீழத் தேசிய அரசை நிர்மாணிக்கப் போகிறார்கள்.



இதன்சூத்திரதாரிகளான மேற்குலக நலன்சார் குழுக்கள்-நபர்கள் அதன் ஜீவனகாலத் தலைவர்களாகவும்-பேச்சாளர்களாகவும் வலம்வந்து, நமது மக்களது குருதியைக் குடித்தே உயிர் வாழ்வார்கள்.காலகாலத்துக்கும் தமிழ் பேசும் மக்களை மடையர்களாக்கி அந்நியத் தேசங்களுக்கு அடிமையாக்கிப் பிழைக்கும் தமிழ் மேட்டுக்குடிக் கல்வியாளர்கள், தம்மைத் தேசியத்தின் தொட்டிலில் கிடத்தியும் அழகு பார்க்கிறார்கள்.


அவர்களது ஏஜென்டுகள் புரட்சி-தேசியம்,புண்ணாக்கு என எல்லாவகைப் புரட்டல்களையும் மக்களைச்சொல்லிச் செய்துவரும்போது"நாடுகடந்த அரசினது"குத்தகைக் காரர்களுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை!எனவே,அவர்கள் தொலைக்காட்சியில்-வானொலியில் சொல்வதே மந்திரமாகும்.அங்கே,உலகத் தமிழர்கள் அனைவருக்கும் விடுதலை வந்துவிடப் போகிறது.முப்பது வருடமாகப் பிரபாகரனுக்குத் தெரியாத மந்திரமெல்லாம் சேரனுக்கும்,உருத்திரகுமாருக்கும் தெரிந்தே இருக்கு.இவர்கள் அப்படியே பிரபாகரனது சாதகத்தையும் சொல்லிவிடலாம்.ஆனால்,அதைமட்டும் சொல்வதற்கு அவர்கள் தயாரில்லை.அங்கேதாம் அவர்களது இருப்பே தங்கியுள்ளது.


தெரிந்துகொள்ள வேண்டி உண்மைகள்:


இந்த மோசமான பேர்வழிகள் இட்டுக்கட்டும் நரித்தனமான நாடகங்கள் பொய்யானவை-புலிகளின் பினாமிகள் மக்களை மேலுஞ் சுரண்ட அனுமதிக்கும் நடவடிக்கை இது.இவர்கள் சொல்வதுபோன்று "நாடு கடந்த தமிழீழ அரசு"என்பது தமிழ்பேசும் மக்களது உரிமையை இலங்கையில் குழிதோண்டிப் புதைப்பதில் மேற்குலகத் தோடிணைந்து மிடுக்காக இயங்கும்.ஏனெனில்,நாம் ஒரு அரச வடிவத்துக்குள் வாழ்ந்த காலங்கள் மலையேறிவிட்டென.இன்றைய காலங்கள் "அரசுகள்"என்ற அமைப்பின் காலமாகும்.நம்மைப் படாதபாடு படுத்தும் "அரசியல்" தனியொரு தேசத்தின் ஆளும் வர்க்கத்தின் தேர்வு இல்லை.அஃது, தேசங்களின் தேர்வுகள்,தெரிவுகள்,திட்டங்களால் உருவாகப்பட்டுள்ளது.இங்கே, நடக்கின்ற "அரசியலானது"தமிழ் மக்களின் எந்த நலனிலும் அக்கறையற்ற படு கேவலமான அரசியலே எல்லாத் தரப்பாலும் முன்னெடுக்கப் படுகிறது.புலம் பெயர் தேசங்களில் நடக்கும் எந்த அரசியல் வினையும் இலங்கையில் வாழும் தமிழருக்கு எப்பவும் உதவப் போவது கிடையாது.இதுவரை அது உதவியதாகவும் வரலாறு இல்லை என்ற உண்மையும் நாம் உணர்ந்ததே!அத்தோடு,புலம்பெயர் புலிகளிடம் குவிந்துள்ள அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் செல்வங்களும் மேற்குலகத் தமிழ் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.

இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல பொய்யுரைப்பின்வழி சேரனும்,உருத்திரகுமாரும் அவர்களது எஜமானப் புலிப்பினாமிகளும் "நாடுகடந்த தமிழீழ அரசு"க்கான தேர்தலில் அதிகப்படியான நேரமெடுத்து விளம்பரஞ் செய்கிறார்கள்-விளக்வுரை செய்கிறார்கள்.இவர்களது இந்த நடாத்தையானது இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு எந்தவகையிலும் உதவவே முடியாது. சேரன்போன்றவர்கள் கடைந்தெடுத்த சமூக விரோதிகள் என்பது நாம் கண்ட வரலாறு.


வன்னியில் மக்களை வேரோடு புரட்டிய புலியின் இராணுவ ஜந்திரம் ,வன்னியில் சிதற, இப்போது, அதன் அரசியல் தலைமையின்வழி இலங்கைவாழ் தமிழர்களை நடாற்றில் தள்ளிவிடுகிறது.ஒவ்வொரு முறையும் மக்களுக்கு யுத்த அழுத்ததையும் குண்டுகளையும் பரிசாக்கியவர்கள் இன்று அந்த மக்களுக்காக எந்த உதவிகளையுஞ் செய்யவே இல்லை.எனினும்,தமது புலி அரசியலின்வழி மேற்குலக அரசுகளது எடுபிடிகளாக இயங்க முனையும் இன்றைய சந்தர்ப்பத்தில் இவர்கள் செய்யும் ஒவ்வொரு நடிவடிக்கையும் இலங்கைத் தமிழர்களது பொதுவாழ்விலும்-தனிப்பட்டவாழ்விலும் பாரிய தாக்கஞ் செய்யவே செய்யும்.


இலங்கைப் பாசிச அரசினது கெடுபிடிகள், பொருளாதார மற்றும் இராணுவவாதச் சிக்கல்களது கிடுக்குப்பிடியாக அந்த மக்களைப் பதம் பார்க்க இவர்களே காரணமானவர்கள்.இதை மறைப்பதற்கான முறைமைகளில்"தமிழ்-தேசியம்-நாடுகடந்த அரசு"எனும் மாய மான்கள் முதன்மையான காரணிகளாக இருக்கும்.இதுவே,இதுவரை சேர்த்த மக்களது நிதிகளைச் சுற்றவும் உதவிக்கொள்ளும். இவற்றினூடாகக் காய் நகர்த்தித் தம் வலுவைத் தக்கவைக்க முற்படும் அதிகார மையங்கள் நம் இனத்தின் விடிவுக்கு வேட்டுவைத்தே இதைச் செய்கிறார்கள்.இது தனது மகளைத் தானே புணரும் அப்பனின் மனப்பாண்மை போன்று நமது அரசியல்-இயக்கவாதிகளிடம் தொடர்ந்து நிலவுகிறது.


புலிகளது பொய்யுரைக்கு மயங்கிய புலம்பெயர் மக்களில் பலர், தத்தமது நோக்கு நிலையிலிருந்து இந்த அதிகார மையங்களின்(நாடுகடந்த அரசு,தேர்தல்-சேரன்,உருத்திரகுமார்) "நன்மை தீமை" என்பவற்றை நோக்குகிறார்கள்.


இலங்கையில் வாழும் தமிழ்பேசும் அப்பாவி மக்கள் எந்தவுரிமையுமின்றி இத்தகைய அதிகாரங்களுக்குள் கட்டுண்டு தமது வாழ்வைத் தொலைத்துவிட்டு மௌனித்துள்ளார்கள்.இந்த இழி நிலையில் மக்கள்தம் உயிரைத்தினம்இராணுவாத இலங்கை அரசபாசிசவொடுக்குமுறைக்கு- அராஜகத்துக்கு இரையாக்க வேண்டியுள்ளது. மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான தேர்தல்களால்-நாடுகடந்த தமிழீழ அரசு நிர்மாணிப்புகளால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.04.2010

Donnerstag, April 22, 2010

லீனா மணிமேகலையின் குரலுக்கு இன்னொரு முகம் உண்டு

லீனா மணிமேகலையும்,அவரது கவிதை மொழியும்-காரணமும்

-சிறு குறிப்பு.

லீனா மணிமேகலை இரண்டு கவிதைகள் மூலம் பெரும் அடிபாட்டுக்குள் கட்டாயமாக முகம் கொடுக்க வேண்டியுள்ளது.இரண்டு வகையான தரப்பினரால் அவர் கவிதைகள் பிய்த்தெறியப்படுகிறது.கூடவே,அவரும் மிக மோசமான பாலியல் நடாத்தையில் பிறழ்வுடையவராகவும் இவ்விவாதங்கள் குறிப்பெழுதுகின்றன.

லீனாவின் கவிதை எவ்வளவுக்கு அவர்களால்"மோசமான"தென விமர்சிக்கப்படுகிறதோ அதேயளவுக்கு அவர்கள் லீனாவின்மீது சுமத்தும் பாலியல்சார்ந்த(விபச்சாரியென அர்த்தப்படும் தொனி)நடாத்தைகள் எமக்குச் சகிக்க முடியவில்லை.

இங்கே,இந்த மகான்களுள் லீனாவின் கவிதைகளில் பாலியல்சார்ந்த சொற்கள் அதிகமாகவும்,வாசிக்க முடியாத கொச்சையான மொழிகள்-தூஷணங்கள் கிடப்பதாக ஒருசாரரும்,மறுசாரர் மார்க்சிசத்தையும்,அதன் மூலவர்களையும் கூடவே தொழிலாள வர்க்கத்தையும் கொச்சைப்படுத்தும் மேட்டுக்குடி வக்கிரம் மலிந்துள்ளதாகவும் குற்றப் பத்திரிகை வாசிக்கின்றனர்.

இந்தச் சமூதாயத்தில்,இதுவரையான அனைத்துச் சமூக நடவடிக்கைகளிலும் கட்டமைத்த புனிதப் பிம்பந்தாண்டி மனிதர்கள் தத்தமது சுயநலத்தோடு காரியமாற்றியுள்ளனர்.இவர்கள் எப்போதும் தமது நியாயவாதங்களை மக்கள் நலனெனக்கொண்டிசம்பி இறுதியில் தமது தேவைகளை மிகக் கறாராகத் தகவமைத்துத் தக்கவைத்துள்ளனர்.இதன் தர்கம் என்னவெனில்,இதுவரையான புரட்சி-விடுதலை குறித்த அனைத்துத் தளத்திலும் இத்தகைய நிலைமைகள்மலிந்தே காணப்படுகின்றன.

மார்க்சையும்,லெனினையுஞ் சொல்லிக்கொண்டு மக்களை உயிரோடு வேட்டையாடுபவர்களும்,அதே மார்க்சையும்,லெனினையும் எதிர்த்தபடி மக்களை வேட்டையாடுபவர்களையும் நாம் காலவெள்ளத்தில் மூழ்கிக் காண்கிறோம்.இங்கே,"உண்மையான"புரட்சிகரக்கட்சி போலி மார்க்சியார்கள்-கட்சி-எதிர் புரட்சிக்காரர்கள் என்று நியாயம் சொல்லும்போது, இத்தகைய நடாத்தைகள் வேறொரு திசையை நோக்கித்தள்ளப்படுகிறது.அத்திசை பெரும் பாலும் பாதிப்புடையவர்களுக்கு நீதி கிடைப்பதற்குப் பதில் அவர்களைக் கணக்கிலெடுக்காத சமூக யதார்த்தத்தை அவர்களது விழிமுன் நிறுத்தி விடுகிறது.

லீனா மணிமேகலை எழுதிய இரண்டு கவிதைகளிலும் பாதிப்புக்குள்ளான பெண்களது குரல் ஒலித்து ஒதுங்குகிறது.



இன்றுவரை இந்தத் தமிழ்ச் சமூகத்தின் சமூக அசைவியக்கமே வெறும் போலித்தனத்துடனும்,கபடத்தனத்தடனும்தாம் இயங்குகிறது.இந்தச் சமூக அமைப்பின் முதலாளியச் சாக்கடையை துப்பரபு செய்வதாகவும்,மாற்றியமைப்பதாகவுஞ்சொன்ன எத்தனையோ கொம்பர்கள் இறுதியில் அந்தச் சமூகத்தையே சாகடித்துத் தமது நலன்களை அறுவடை செய்தார்கள்.

இதற்கு ஐந்தொகை அவசியமற்றது.

புரட்சி,பெண்விடுதலை-திராவிட நாடு கேட்டவர்கள் முதல்பெரியார் சார்ந்து கொடிபிடித்தவர்கள்-ஈழவிடுதலைப் போராட்டஞ் செய்தவர்கள் வரை, எங்ஙனம் மக்கள்-பெண்கள்மீது விரோத அரசியல் செய்தனரென்பது-நாம் அறிந்த-கதைகள் ஏராளம்.சமூகத்தில் எத்தனையோ விரோதப் போக்குகள் ஒவ்வொரு பெயராலும் நிகழ்ந்தே வருகிறது.

பாதிப்புக்குள்ளான பெண்ணினது நிலையிலிருந்து-பழிவாங்கப்பட்ட பெண்ணினது நிலையிலிருந்து புரிந்துகொள்ளத் தக்க இருகவிதைகளை லீனா எழுதியுள்ளார்.இதை லீனா மணிமேகலை எழுதிவிட்டார் என்பதற்காக அதன் உண்மையான நியாயத் தர்க்கம் இல்லாது போக முடியாது.சமூகத்தில் மகான்களையும்,லீனா மணிமேகலை,மற்றும் நம்மைப்போன்றோரையும் இருத்தி வைத்திருப்பது இச் சமுதாய நியாயவாதங்கள்தாம்.எமக்கு நல்ல உதாரணமாக நம்முன் இருப்பது கனகி புராணம்.யாழ்ப்பாணியச் சமூத்தின் இரட்டைத்தன்மையை-ஆணாதிக்க வன்மையை,சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்ணைப்படுத்திய பாடுகளை அறிய கனகி புராணம் நமக்கு நல்ல உதாரணம்.

//நடந்தா ளொரு கன்னி மாராச
கேசரிஇ நாட்டிற் கொங்கைக்
குடந்தா நசையஇ வொயிலா
யது கண்டு கொற்றவருந்
தொடர்ந்தார்; சந்யாசிகள் யோகம்
விட்டார்; சுத்தசைவரெல்லாம்
மடந்தானடைத்துச் சிவ
பூசையும் கட்டிவைத்தனரே.// கனகி புராணம்-3

லீனாவின் புராணம் அதை எவ்விதத்திலும் விஞ்சவில்லை.அதை எழுதியது ஆணாகவும்,இதை எழுதியது பெண்ணாகவும்-அப்பெண் இருபத்தியொராம் நூற்றாண்டில் வாழ்பவளாகவும் இருக்கும்போது யோனிமுடியை பிய்த்துப் போடுவதும் சுலபமாகத்தான் இருக்கும்.

என்னுடைய கேள்வியெல்லாம், பெண் உலகம் பூராகவும் ஏதோவொரு காரணஞ்சொல்லி ஒடுக்கப்படுகிறாள்-பாலியல் ரீதியாகச் சுரண்டப்படுகிறாள்.அதற்கு எந்த நிறமும்-எல்லையும் கிடையாது.சமீபத்தில் திருச்சபைகள் சிறுவர்களையும்-சிறுமிகளையும் பாலியல் வல்லுறவு செய்திருக்கின்ற கடந்தாகாலம் நமக்குமுன் விமர்சனமாகிறது.அங்கே,ஆயிரக்கணக்கில் நடந்த பாலியல் வதைகள் ஜேர்மனியச் சமூகத்தில் இப்போது கிழவிகளாக இருக்கும் அன்றைய குமரிகளது தலைவிதியாக இருந்திருக்கிறது.அவர்கள் தமது வலியைச் சொல்லமுடியாது தவித்தபோது ஒரு கலகக்காரியின் அம்பலப்படுத்தலுக்குப்பின் ஆயிரம் அபலைகள் பாலியற்றுற்பிரயோகம்குறித்த கதைகள் காவி வீதியெங்கும் போர்க்கொடி தூக்குகின்றனர்.இது,பரவலாக நடந்து முடிந்தகதை.ஆனால்,தமிழ்ச் சமூகத்தில் பெண்பாதிப்படைந்தும் தனது வலியைப் பேசாது இருக்கும்போது இந்த லீனா அதுகுறித்துப் பேசும்போது சொல்லடிபடுவது எதனால்?இதுவே,எனது கேள்வி.

எமது சமூகத்தில் புரட்சி பேசியவர்கள்,பெண்விடுதலைக்காகக் குரல்கொடுதவர்கள்,ஈழவிடுதலை செய்தவர்களெனப் பல்லாயிரம் ஆண்கள்,பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டிக்கொண்டனர்.இவர்கள் பேசிய பசப்பு வார்த்தைகளை லீனாவின் குரலுக்குள் இனங்காணத் தவறும் புனிதம் பொய்யானது.

இன்றுங்கூட நண்பனென வீட்டுக்குள்வருபவன் நாளை பொண்டிலையே கடத்திச் செல்பவனாகப் புலப்பெயர்வு வாழ்வில் தினம் ஒரு குடும்பஞ் சிதைந்து போகிறது.குடும்பங்கள் குலைவது முதலாளியத்தைத் தகர்ப்பதற்கென்றும் இவர்கள் சொல்வார்கள்.இலக்கியச் சந்திப்புச் செய்தவர்களில் எத்தனைபேர்கள் இத்தகைய பாலியற் சுரண்டலில் பெண்விடுதலைகண்டனர் என்பதைப் பாதிக்கப்பட்ட பெண்கள் பேசினாற்றாம் நாம் உண்மைகளைக் கண்டடைய முடியும்.அதுவரையும் ஊகம்தாம்.

லீனா கவிதையெனப் பகர்ந்தது பெண்ணின் ஏமாற்றம்தாம்.புரட்சி-விடுதலைபேசியும்,ஆத்மீகம் பேசியும் எத்தனையோ பெண்களைச் சீரழித்து அவர்களது விருப்பின்றி அவர்களைச் சுரண்டியதை புரட்சியால்-விடுதலையால்-இறைவனால் சமப்படுத்தியவர்கள் குறித்து லீனா புனைந்த மொழி அத்தகையவர்களது கயமையைவிடக் குற்றமானதா?

மார்க்சையும்,லெனியையும் சொல்லித்தாம் பலர் பெண்களைப் பாலியற் சரண்டலுக்குள் தள்ளினார்கள்.இந்த முதலாளியச் சமூகமோ பாலியலைப்பண்டமாக்கிப் பெண்களைச் சந்தையில் விற்கும்போது அதை நுகர வக்கற்ற போலித் தோழர்கள்-புரட்சிக்காரர்கள் அப்பாவித் தோழிகளைத் துளைத்தெடுத்தனர்.அவர்களது குரலாக லீனாவின் குரலுக்கு முகம் உண்டு.

எனவே,லீனாவின் குரலுக்குள் இருக்கும் இன்னொரு முகத்தையும் காணத்தவறுது மார்க்சிய-புரட்சிகர அணுகுமுறையாகாது.

லீனா எழுதுகிறார் எப்படியென்று பாருங்கள்:

"நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது
நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
வன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்"

இதில்உண்மைகள் இல்லையா?அல்லது,இந்தவுண்மைகளை லீனா பேசப்படாதா?

தமிழ்ச் சமுதாயத்திடம் மட்டுமல்ல இந்தப் போலித்தனம் விழித்திருப்பது, போப்பாண்டவரே மன்னிப்புக் கேட்கும் நிலைக்காகிய, மேற்குலகத்திடமும் இந்த மூடுதிரை போலித்தனம் விழித்தே இருக்கிறது.அது,மட்டுப்படுத்த விரும்பும் இடங்களில்மட்டுமே, தமிழ்ச் சமூகமும் மற்றைய சமூகங்களும் வேறுபடுகிறது.தமிழ்ச் சமுதாயத்திடம் முற்றுமுழுதாகப் "பெண்மை-தூய்மை" எனக் கொடிகட்டிப்பறக்கும்.ஆனால், அங்கேதாம் பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது அதீதமாக மலிந்து கிடக்கிறது.

பாலியல் பலாத்தகாரம் எப்படி நிகழ்ந்ததெனப் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரிக்கும் நீதீவான்கள் மலிந்த நமது சமூகத்தில் இந்த லீனாவையும் அத்தகைய நிலைகுட்படுத்தும் தருணம் மலியவே செய்யும்.

"யோனி,
ஆண்குறி,
விந்து"

குறித்த ஆய்வுகளைவிட, இவைகளுக்காகப் பலியாக்கப்படும் மனிதமனங்கள்குறித்து யோசிப்பது நன்று.

தமிழ்ச் சமூகத்தில் ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பேச முனைந்தால் அல்லது புரட்சி பேசிப் பாலியல் உறவுசெய்து பின் கைகழுவி விடப்பட்ட பெண்கள் பேசுவதாகவிருந்தால் நிச்சியம் லீனாவின் குரலைவிட மோசமாகவே இருக்கும்.எனவே,லீனாவின் குரலுக்கு இன்னொரு முகம் உண்டு என்பதையும் யோசிக்க வேண்டும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
22.04.2010

Mittwoch, April 07, 2010

மகிந்தாவின் யாழ்ப்பாணச்சூனியம்

(புனைவு)

இடையீடு: 1. இதை வாசிப்பவர்கள் எங்கோவொரு இடத்தில் "தூஷண"வார்த்தைகளைப் பச்சையாய் உணர்வீர்கள்.உண்மையைச் சொல்வது எனது கடமை.விரும்பினால் மேலே செல்லவும்.


Angst in der Nacht

Die Uhr spricht aengstlich mit dem Spinnweb an der Wand,
Am Laden reisst der Wind,
Meine flackernden Kerzen sind
Ganz vertropft und heruntergebrannt,
Kein Wein im Glase mehr,
Schatten in allen Ecken,
Deren lange Finger sich nach mir strecken.

-Hermann HESSE.


இடையீடு:2. முப்பதாண்டு ஈழப் போருக்குப் பின்னே முள்ளிவாய்க்காலில் "ஈழத்துக்கு"அந்தியேட்டி செய்த கையோடு யாழ்ப்பாண இராஜ்சியத்தின் கல்வெட்டு இப்படிச் செதுக்க...


ந்தத் தெருவோரமாகச் சாய்கிறேன்.கரமெதுவும் இல்லை.அம்மாக் கரம் பாலகர்களுக்குமட்டுமே.அன்னைக்குப் பாலகனாகக் காலம் பின்நோக்கிச் செல்ல என் மனத்துக்கு மட்டுமே முடியுமாகையால் நான் மௌனித்து வான் பார்க்க, பிளவுகொண்ட தேசிக்காய் குங்குமம் தரித்து என் விழிமுன்னே நர்த்தனமாட எனது மனைவி சொன்ன வார்த்தை வேலைணைச் சிவராசா சொன்ன சாஸ்த்திரத்தில் என்னை இந்த டிசம்பரில் கொல்லும் காலமாக நர்த்தனமாடுகிறது.

துவண்டு போனது எனது குரலும்,குடியும்.என்னைக் கொல்லும் காலத்தைக் கணித்து வழங்கிய சிவராசா, சேதுராமனைக் கொப்பியடித்து எண்சாஸ்த்திரம் சொன்ன அன்றைய எண்பதுகளின் முன் பகுதி வேலணை பங்களாவடிச் சந்தியில் பலரது செருப்புகள் அவன் முகத்தை முத்தமிட்டுக்கிடக்க, எனது துணைவிக்கு அவனிடம் சாஸ்த்திரம் கேட்பதில் அலாதி பிரியம்.யாழ்ப்பாணத்து ஏதோவொரு முடுக்கில் நான் மௌனித்துக்கிடந்தபடி உழைத்து ஓடாகும்போது எனது போதையில் வீடு கட்சிகட்டி எனக்கு வைத்தியம் பார்க்கிறது.நான் மரணிப்பதில் என் மனையாளுக்கு அதிக பிரியமென நான் எப்போதும் புரிய எனது போதை காலத்தை வழங்கவில்லை.

யாழ்ப்பாணச் சுடலைகள் எங்கும் பேய்,வீதிகள் எங்கும் பேய்,வீடுகளின் நடுவே சவங்கள் உருண்டு கொள்கின்றன.குத்தீட்டியாய் மந்திரக்காரன் தனது குறியில் தேசிக்காயைக் குத்தித் தமிழச்சிகளது முலையில் காண்டம் வாசிக்க யாழ்ப்பாணம் தென்னிலைங்கைப் பெருங்குடிகளுக்கு கழிப்பறை கட்டிக்கொண்டிருக்கிறது.எனக்குக் காண்டம் வாசிக்க எனது பொண்டில் எந்த மந்திரவாதிக்குத் தனது...

"செய்வினை,

சூனியம்,

பில்லி,

காண்டம்,

சாஸ்த்திரம்,

மந்திரம்,

மாயம்"

எல்லாமாக யாழ்ப்பாணியச் சாம்பிராஜ்சியத்தில் பொருள் நிலை வாழ்வு சிறப்பாக...





ஒரு நேர வயிற்றுக்கு உழைக்க வக்கற்ற எனது பொண்டாட்டி என்னைக் காலத்தில் கொல்ல, மெல்ல வலையைப்பின்ன நான் போதையில் பொருள்தேடுகிறேன்!


கொட்டை பெருசு கோவணஞ் சிறிசு: பின் சுருக்கம்1.


"வாடா சுந்தரம்,வா மச்சான்.வந்து மோட்டச் சயிக்கிளை ஸ்ராட் பண்ணு."இவன் சுந்தரத்தை நேற்றுப் பன்னிரெண்டு மணிக்குக் கூட்டுச் சேர்த்தேன்.அவனும் என்னைப்போன்ற பெருங்குடிமகன்.

சூனியத்தையும்,சாஸ்த்திரத்தையும் அவனிடம் சொன்னபோது தன்ர மனைவியும்,மாமியும் இதில நின்று நாட்டியம் ஆடுகிறவை என்றும் சொன்னான்.தன் மனைவியும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு யாரோ போட்ட தவிட்டைத் தின்று கொழுப்பதாகவும் சொன்னான்.

இப்போது யாழ்ப்பாண பெரு இராஜ்சியத்தில் மூத்த குடித் தமிழர்கள் குடிமனைக்குள் கொள்ளிவைக்க எல்லாம் பணத்தைச் சுற்றி வீணியூற்ற நானும் எல்லாமாக மாறி எனது மனைவியிடம்"அது-சவம்"என்றெல்லாம் ஆகிப்போனேன்!எனது இருப்பு அவளுக்குச் சவமென...

போன மாதம் மகிந்தா மாமாவினது "ஒரே தேசம்,ஒரே மக்கள்" அரச பரிபாலத்தில் யாழ்ப்பாணப் பெண்டிர்களுக்கு அரபுத் தேசங்களின் "வேலையெடுப்பு"வேலை வேண்டிக்கொடுக்க முகவர்கள் வந்து கொட்டகை போட்டார்கள்,அந்தக் கொட்டகை வாசலில் வந்து குவிந்த யாழ்ப்பாணியத் தமிழச்சிகள் கிளிநொச்சிவரை கியூவில் நிற்கினம்.அரபுத் தேசத்தில் பணிபுரிந்து தமது செல்வச் செழிப்பை இரட்டிப்பாக்கவென அவர்கள் கனவு விதைத்து...

இப்படியான பொழுதுகளில் நானும் காலத்தைப் பின்நோக்குவதில் அரபுத் தேச "ஆண் குறிகள்"அப்பன்,மகன்,பேரன்,மாமன்,மைத்துனன்,என வீணியகற்றிக்கொண்ட பெருவெளியில் துர்நாற்றத்தோடு அந்தச் சகதி சாக்கடையாக யாழ்ப்பாணத்தை நோக்கி ஓடி வருகிறது.சுனாமியைவிடச் சுரமொழுப்பி உயரும் அந்த அரேபியச் சுக்கிலம் எனது வீட்டின் வாசலில் இன்னொரு கொலைக்களத்தை மெல்ல எனது அனுமதியின்றிச் செய்யத் துடிக்கிறது.

இந்தச் சங்கதியை நான் உணர முடியாதைத்யிட்டு எனது நண்பன் சுந்தரத்தோடு பேசினபோது"போடா புண்டையாண்டி,உன்ர பொண்டிலை என்ன, என்ர பொண்டிலையும்தான் அவன்கள் ஓழ்க்கப் போறான்கள்"எண்டான்.எனக்கு இது,சகஜமாகப் பேசுவதாகப் போச்சு.என்ன நடந்தது?

மானத்தோடு வாழ்ந்த மண் என்று அப்பப்ப நான் பெருமைப்பட்ட காலம் மெல்ல விடைபெற்று இருக்கிறது.எனக்கு இதில"ஆரூ ஓழ்த்தாலென்ன..."எண்ட நிலைமை சவுக்கடியாக இருக்கமாட்டேன் எண்டு சொல்கிறது.

பின்ன,இருக்காதா?

வீட்டு வளவுக்குள்,வீட்டின் ஒரு பகுதியை,மெல்ல விடுதியாக்கி-லொஜ் எனப் போட்டுப்போட்டு பணத்தைச் சம்பாதிக்கத் தென்னிலங்கைச் சிங்களவர்கள் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்க, எனது பொண்டிலுக்கும் சரியான ஆசை அந்தப் பணத்தில்.ஆரெடுத்துக்கொடுத்த ஐடியாவோ அவள் கொண்டை முடிகிறாள் நோட்டுச்சரத்தில் அழகுபார்க்க.

இன்றும்,இன்னொரு முடுக்குவரை சுந்தரத்தின் மோட்டார் சயிக்கிளில் மெல்ல அமர்ந்து இறங்கிக்கொண்டேன்."டேய் மச்சான் இவளிட்ட கசிப்பு மட்டுமில்லை எல்லாம் கிடைக்கும்"எண்டான் அவன்.அந்தத் தெருவுக்கு "வெள்ளான் தெருவென"வெள்ளார் சொல்லுவினம்.

மெல்லக் கடாசிய கசிப்பில் அவளது தொடைக்கு நடவில் உலகத்தின் சரிவு தோன்ற ஆரம்பித்தபோது யாழ்ப்பாணத்தை அசைக்க முடியாதென்று எண்ணிக்கொண்டேன்.

இப்போது,மனைவியும்,அவளது சாஸ்த்திரமும் நர்த்தனம் ஆடியது.

"டிசம்பரில் உனக்குச் சாவு,நீ என்னோடு சேர்ந்திருப்பது பிள்ளையின்ர பலனில் முடியாத காரியம்.நீ பிரிந்து போ"என்கிறாள்.என்ர உயிரில அவளுக்குச் சரியான அக்கறை யாழ்ப்பாணத்து ஆமிக்காரன்கள்போல.விழிமுன்னே விரியும் அவளது ஆசை மெல்லக் குத்தும் கோரப் பற்களாய் அவளது முகம்...

முள்ளி வாய்க்காலில் மௌனித்துக்கொண்ட ஏகத்தலைமையின் பெரிய ஆயுதம் முடித்துவைத்த அதே கதையை இன்னொரு சுற்றில் இப்படி மகிந்தா துவக்கி வைத்துப்போட்டார்.அவர் "தெமிழு" எண்டு ஏசிக்கொள்ள அவரது சிஸ்சியர்கள் அவருக்காகத் "தமிழர்கள் கூட்டத்தில் குழப்புவதாக நாடகம்"போட சிங்களவர்கள் எண்ணிக்கொண்டனரா மகிந்தா தமிழர் எதிரியென? நானறியேன் பராபரமே!அவரது கட்சியே இந்த முறையும் ஆட்சிக்கட்டிலேறுவதென அவர் "தெமிழு"மட்டும் சொல்லவில்லை.என்ர வீட்டு வாசலில் லொட்ஜ்சும் கட்டிக் கொடுக்கிறார்?

எனக்குத் தெரியாது!

இடையீடுகளும்,சுருக்கமும் சந்திக்கும் புள்ளி : 0

சுந்தரம் இப்ப மோட்டச்சயிக்கிளை உருட்டக்கூட முடியாமல் கிடக்கிறான்.நானும் "ஓட்டுவதற்கு" முனைந்து தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறேன்.கசிப்பில சூனியத்தை வெள்ளான் தெருக்காறி மந்திரிக்க எனக்கும் சுந்தரத்துக்கும் அவளது தொடையினது இடையில் தமிழர் தேசியம்புரியத் தொடங்கிறது.இதன் தார்ப்பாரில் நாலா புறமும் குருதி நெடில் மூக்கைத் துளைக்கிறதோ இல்லையோ யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கும் சாஸ்த்திரிகள்,மந்திரவாதிகளது பூஜை நெடில் மூக்கைத் துளைக்கிறது.

என் பொண்டிலது தாவணியில் தொங்கிக்கொண்ட எச்சில் பேய்க்கு "மாமி"என்ற உறவு எனக்கு வேணுமாம்.

அந்த எச்சில் பேயின்ர ஈனவிரக்கமற்ற "செய்வினைகளில்" என்பொண்டிலுக்கு என்னைப் பிரிஞ்சு கிடக்கவேணுமாம்.ஆரோட என்பதுதான் எனக்குத் தெரியாத பிரச்சனை.அவளுக்கு என்ர உயிரில அவ்வளவு பிரியமெண்டும்,தனக்கும் எனக்கும் பிரச்சனை எதுவுமில்லை எண்டும்,நான் என்ர சகோதரங்களை,எப்பவோ செத்துத் தொலைந்த என்ர தாய் தகப்பனை நினைச்சுக் குடிச்சு அழிவதாகவும், என்ர அண்ணாவுக்குப் போன் போட்டுச் சொல்லிப்போட்டாள் என்ர மனைவி.

எனக்கு அவள்மீது சரியான பிரியம் இதை அண்ணா சொன்னபோது.

என்ர குடிக்கு இது காரணமில்லையெண்டு எனக்குத் தெரியும்.அது,மகிந்தாவினது கொடைக்கரத்தின்அருங்கொடை.வீதிக்கு வீதி மதுக்கடையும்,மாதுக்குடைவிரிப்பும் யாழ்ப்பாண மண்ணில் தொடக்கி வைத்த கையோடு நான்,எனக்கே இப்போது மொட்டை அடித்தேன்.

இதோ,இந்தச்சுந்தரம் காறித் துப்புறான்.

"மோட்டச் சயிக்கிளைத் தூக்கி நிறுத்த வக்கில்லை.இதற்குள் கசிப்புக்காறிக்கு தேசியத்தை காட்டப் போனியே"எண்டு கேலிக்கு வினைவிதைக்கிறான்.நான் சாரத்தை எங்கே தொலைத்தேன் எண்டும் தெரியுதில்லை.நல்ல வேளை அவன் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை!

என்ர பொண்டிலின் இன்னொரு சாஸ்த்திரக்காரன் நடராசன் அண்டங்களைக் குடைந்த கண்டவுண்மை நான் என் பிள்ளையினது பலனின் பொருட்டு இவ்வாண்டு டிசம்பரில் என் பொண்டில் சங்கூத மரிப்பதென...

டிசம்பரில் சாகப்போகுற எனக்கு என்ன விருப்பம் இருக்கு எண்டுவேற என்ர மனைவியின்ர நண்பன் கேட்கிறான்."சொல்லு முருகன் உனக்கு ஏதாவது விருப்பம் உண்டா"எண்டபடி ஆட்டிறிச்சியும் காய்சிச் சாரயமும் வேண்டித்தாறான் குடியென...

அவன் நேற்றுச் செய்த இந்த விருப்பு வினை,எனக்கு தூக்குத் தண்டனைக் கைதியின் நிலையை இப்போது உணர்த்துகிறது.

நான் யாருடைய கைதி?

சாஸ்த்திரக்காரரின்,சூனியத்தின்,காலத்தில்,மனைவியின்,மாமியின்-மகிந்தாவின் கைதி?


Fear at the Jaffnas night


the clock speaks fearfully with the spin Web at the wall,
at the shop tears the wind,
my flickering candles
whole dripped and down-burned,
no wine in the glass more,
shade in all corners,
whose long fingers stretch themselves for me.-Hermann Hesse.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.04.2010