Sonntag, April 03, 2016

இலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...

இலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே ;இந்தவுண்மையச் சொல்வதும் அசியமில்லையா?

 யோசித்துப் பார்க்கிறேன்.இலங்கையிற் சிறுபான்மை இனங்களது அரசியலை ; இயக்க -கட்சிகளது கட்சிவாத அணுகு முறைகளைக் குறித்து நிறையவும் பேசியாகிவிட்டது.இனங்களுக்கிடையிலான முதலாளிய நகர்வு -வளர்ச்சிகள் ;முரண்பாடுகள் வரலாற்றுரீதியான ஐதீகங்களது பண்பாட்டுணர்வோடு அத்தகைய முரண்பாடுகள் கூர்மைப்படுத்தப்பட்ட விதம் ,ஒவ்வொரு அந்நியத் தேசங்களதும் இலங்கைமீதான அவைகளது அரசியல் ;பொருளாதாரப் புவிகோள நலன்களது தெரிவிற் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடிப்பதிற் சிங்களப் பேரினவாதத்துக்கெதிரான சிறுபான்மை இனங்களது எதிர்ப்பரசியற் போராட்டமாக மேலெழுந்தன. இந்த நலன்கள் யாவும் தத்தமது வசதிக்கேற்ப கொலனித்துவத்துக்குப் பின்பான இலங்கையிற் கூர்மையடைந்தன.

கொலனித்துவ அரசியல் அமைப்பும் ,அதைச்சார்ந்த இலங்கை அரச சட்டவாக்கமும் பேரினவாதத்தின் அலகுகளாக மாற்றப்பட்டபின் இலங்கை ஆளும்வர்க்கமானது தனது முரண்பாடுகளை பலவழிகளினும் திசைதிருப்புந் தந்திரவாதத்தோடு அணுகிய அரசியலுள் ,பலியாக்கப்பட்ட சிறுபான்மை இனங்களது உரிமைகள் இறுதியில் அந்தச் சிறுபான்மை இனங்களையெந்த அரசியலுரிமையுமற்ற இனக் குழுக்களாக இலங்கையில் குறுக்கின.இதன் பலாபலன் என்ன?

"தமிழீழப் போராட்டமென வெடித்த இந்தப் பாகுபாட்ட அரசியலுள் குருதிகுடித்த அந்நியத் தேசங்கள் நம்மையும் ,நமது நியாயமான அரசியற் போராட்டங்களையும் பிரிவினைவாதத் தீயிற் கொளுத்தின.


இந்த அணுகுமுறையானது இலங்கையிற் சிறுபான்மை இனங்களது அனைத்து வாழ்வியல் மதிப்பீடுகளையுந் தலைகீழாக்கின.போராட்டம் ஒன்றே ,அனைத்துக்குமான தீர்வாகக் கட்டியமைக்கப்பட்ட சமூகவுளவியலானது இறுதியிற் பல்லாயிரம் இளைஞர்களை வேட்டையாடியது.ஒருவரையொருவர் கொன்று தள்ளியபோது அதைத் தேசத்தின் விடிவுக்கான களையெடுப்பாகப் புலிவழியிலான போராட்டச் செல்நெறி நமக்கு வகுப்பெடுத்தது. இன்றிந்த அரசியலானது எதனால் மேலெழுந்ததோ அதன் அனைத்து வரலாறும் மூடி மறைக்கப்பட்டுப் பயங்கரவாத அரசியலாச்சு.

சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையானது கொலனித்துவத்துக்குப் பின்பான வரலாற்றுள் ,காலத்துக் காலம் சிறுபான்மை இனங்களை வேட்டையாடிக் குருதி குடிப்பதில் மிக நுணக்கமாகத் தனது வன்முறை யந்திரத்தைப் பயன்படுத்தியது. இதன் தெரிவிலுருவாகிய இராணுவவாத ஆட்சி முறைகள் [ Martial law ] தொடர்ந்து சிறுபான்மை இனங்களைப் பிளந்து நகர்த்தும் அரசியலுள் ,இலங்கை அரசின் ஆதிக்கத்தை இனவாத வியூகத்தோடுத் தமிழ் - முசீலீம் ;மலையக மக்களது ஐதீக நிலப்பரப்பில் தொடர்ந்து நிறுவுகிறது.அதன் விளைவின்று இந்தச் சிறுபான்மை இனங்கள் யாவும் அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டவொரு இனங்களாக இலங்கையுள் இருத்தி வைக்கப்படுகின்றனர்.



அன்று,இத்தகைய பேரினவாதவொடுக்குமுறைக்கெதிராகவெழுந்த அரசியலுக்கு -போராட்டத்துக்கு மக்கள் பரவலாகத் தமது உயிரை -உடமையைத் தாரவார்த்தபோது ,இதுவரை கிட்டத்தட்ட மூன்று இலட்சம் மக்கள் கொல்லப்பட்டும் ; சிறுபான்மை இனங்களது வாழும் வலையம் [ Lebensraum ]சிதைக்கப்பட்டும் ;உடமைகள் சூறையாடப்பட்டும் ;நிலங்கள் சிங்கள வன்முறை யந்திரத்தால் அபகரிக்கப்பட்டும் [ Invasion of Eelam ]அவை, இராணுக் குடிப் பரம்பலாகச் (Military occupation )சிங்கள அரச ஆதிக்கத்தால் தற்போது நிலை நிறுத்தப்பட்ட இலங்கைச் சட்டவாக்கத்துள் [ laws of war ] உயர் பாதுகாப்பு வலயங்களாயின.

பல்லாயிரக்கணக்கான இராணுவத்தால் சுற்றி வளைக்கப் பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்களது மண்ணானது சகல சமூக அசைவியக்கத்தையும் இராணுவஞ்சார்ந்த இயக்குமுறும் நிலைக்குள்[ Occupation ] பலியிடவேண்டிய நிலையின் நிமித்தம் அவர்களது பொருளாதார வாழ்வானது இராணுவத் தரகுக் குட்டி முதலாளியமாகத் தற்போது மாற்றமடைந்துள்ளது.

இராணுவமே சகலதையும் தீர்மானிக்கும் அலகாக மேலெழுந்த அதன் நலனுக்கேற்ற [ Between Government of Sri Lanka, Sinhala armed forces, and industrial support they obtain from the commercial sector in political approval for research, development, production]பொருளாதார நகர்வை அது சிறுபான்மை இனங்கள்மீது திணித்த வரலாறுதாம் முள்ளிவாய்க்காலுக்கு பின் நிகழ்ந்துள்ளது.

இந்த இலட்சணத்துள் நாம் போராட வேண்டிய நோக்கம் ;அதன் முறைமைகள் ;நெறிமுறைகள் யாவும் சிதைக்கப்பட்டு இராணுவத்துக்குச் சேவை செய்யுமொரு உறுப்பாகச் சிறுபான்மை இனங்களது வாழ்வியல் மதிப்பீடுகள் உருவாகிவிட்டென. இராணுவத்தை ஆதரித்து அவர்களைத் தாயாபண்ணிப் பிழைப்பு நடாத்தும் இந்தவினங்களது பொருள்வாழ்வானது மேலும் இனவாத அரச ஆதிக்கத்தை தனக்குள் உள்வாங்கிக்கொண்டே அதனொரு சேவைத் துறையாக( security contractors ) இந்த இனங்களை மாற்றிய அரசியலானது வருங்காலுத்துள் சிங்கள இனத்தினது பூமியில் இவர்கள் வேலைக்காக வந்தவொரு கூட்டமாகச் சொல்லி வைக்கும். 

முள்ளி வாய்க்கால்வரை இனப்படுகொலை செய்துவந்த சிங்கள அரசானது சிறுபான்மை இனங்களது பூமியிலெழுந்த அனைத்து அழிவுக்கும் பொறுப்பானது !

அது ,இத்தகைய அழிவுக்கும் இந்த அரசியலுக்குப் பொறுப்பும் அது சார்ந்த தார்மீக அரசியலறத்தையும் ஏற்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்புத் திட்டமிடப்பட்ட வியூகங்களால் (பிரதேசவாதம் கூர்மைப்படுத்தப்படுவது ;சாதியவாதம் கூர்மைப்படுத்தப்படுவது ;யாழ்ப்பாணிய மேலாத்திக்கம் ;கிழக்கு மேலாதிக்கம் என்ற கூர்மைப்படுத்தல் ) இல்லாதாக்கப்படுகிறது.



குறிப்பாகத் தமிழ்பேசும் மக்கள் இன்று போராட வேண்டிய இலக்குத் திட்டமிடப்பட்ட இந்த வியூகத்தால் [ Politische Ablenkungsmanöver ] தலைகீழாகத் திசை திருப்பப்பட்டுள்ளது. சிங்களப் பேரினவாத இராணுவ ஆக்கிரமிப்பு ;மக்களைத் துரத்தியடித்த அவர்களது வாழும் வலயங்களைப் புதிய தெரிவுகளுக்டாகச் சந்தைப் பண்டமாக்கிக் கையகப்படுத்தும் சிங்கள ஆளும் வர்க்கமானது, தனது பலமான அடியாட் படையாகக் கட்டி வளர்த்த சிங்கள இராணுவத்துக்கு இந்தப் பண்டங்களைத் தொடர்ந்து சொந்தமாக இலங்கையில் ,பாதுகாப்பு வலயம் என்ற சட்ட வாக்கத்தை [The High Security Zones (HSZ) : Prevention of Terrorism Act (PTA) ]ஆயுதமாக்கி வைத்திருக்கிறது.

நாம் போராட வேண்டிய யதார்த்த இலக்குத் திட்டமிட்டு நம்மைப் பயன்படுத்தியே இல்லாதாக்கிவரும் அரசியலுக்கு "வேளாளியம் ;யாழ்மேலாதிக்கம் சாதியவாதம் ;தலித்துவ அரசியல் ;பிரதேசவாத நகர்வுகள் நல்லவொருவூக்கத்தைத் தொடர்ந்தளிக்கிறது.

இவற்றை அரசியற்றளத்துள் மிக மூர்க்கமாக முன்னெடுக்குஞ் சக்திகள் இதுவரை ,இலங்கையின் இராணுவாத அரச ஆதிக்கத்தைக் [ Invasion of Eelam ]குறித்தோ அன்றி அதன் ஆக்கிரமிப்பு ; தரகு இராணுவக் குட்டி முதலாளிய நகர்வுகள் குறித்தோ பேசியது கிடையாது.

இலங்கையிற் சிறுபான்மை இனங்களைத் தற்போது பூரணமாக வேட்டையாடும் இலங்கை -இந்தியாவின் ஆயுதமானது சிங்கள இராணுவத்தின் கையிலுள்ள உலோக ஆயுதங்களல்ல .மாறாக, இந்தப் பிளவுவாத ;நரித்தனமான திசை திருப்பம் [ Ablenkungsmanöver ] அரசியலே என்பதை மீளவுஞ் சொல்லி வைப்போம்.

ப.வி.ஶ்ரீரங்கன்
03.04.2016

Samstag, März 26, 2016

சம்பூர் அணு மின்னாலைக் கட்டுமானக் கையறு நிலை

ஜப்பான்:அணுமின்னாலை அனர்த்தமும், சம்பூர் அணு மின்னாலைக் கட்டுமானக் கையறு நிலையும் -சில குறிப்புகள்.

சம்பூர் அணுமின் நிலையமானது இலங்கை போன்ற வளர் முக நாடுகளுக்கு மிக அவசியமானது? ;அவ்வணுமின்நிலையத்துள் நகர்த்தப்படும் "ஒரு கல்லினால் இரு மாங்காய் வீழ்த்தும்" அரசியல் என்ன?அது குறித்தொரு நீண்ட அரசியல் -பொருளியற் பர்வை அவசியமானது.தமிழ்பேசும் மக்களது தலைவிதியை இஃது தொடர்ந்து மாற்றும்.இதன் வாயிலானவொரு வியூகம் பூகோளா ரீதியாக இந்திய -இலங்கை ஆளும் வர்க்கத்து நலனுக்கு மிக அண்மையில் இருக்கிறது.நமக்கிஃது ,மிக நீண்ட தூரத்துள் நமது விடுதலையைத் தள்ளிப் போடுகிறதென்பதை உணர்ந்துகொள்வோம்! ;இஃது , எப்படியென்பதை இறுதியிற் பார்ப்போம்.முதலில் ,பூக்கோஷீமா (Fukushima )விலிருந்து தொடங்குவதே மிகப் பொருத்தமானது.

பூக்கோஷீமா (Fukushima )அணு மின் ஆலை அணுவனர்த்தம்(11. März 2011 )புவியதிர்வுக்குப்பின்பு "ரீஆக்ரரை"க் (Reaktor)குளிர்மைப்படுத்தும் செயலூக்கக் கலைவுக்குப்பின்[Das Kühlungssystem im Reaktor] அதிர்ந்து வெடித்திருக்கிறது. அணுக்கழிவு தரும் தொல்லை பெரு வணிகத்தின் மிகையுற்பத்தி தந்த பரிசுவெனச் சொல்வதில் எனக்கு ,எந்தக் கூச்சமும் இல்லை!




அணுப் பயன்பாடானது மனிதப் பண்பாட்டைப் பூண்டோடு அழிப்பதில் முடியுமென்பதைப் பல விஞ்ஞானிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.எனது அறிவுக்கெட்டியவரை அதன் அனைத்து அழிவுகளையும் முன்னேறிய விளக்கங்களிலிருந்து தேடிக் கற்றிருக்கிறேன்.இந்தப் புரிதலிருந்து அன்றைய[11. März 2011 ] ஜப்பானது அழிவுகளை நோக்குவதில் சிக்கலேதும் இல்லை!மேற்குலக ஊடகங்கள் நிமிடத்துக்கு நிமிடம் தந்த விளக்கங்கள்-ஆய்வுகள் யாவும் ஏலவே பலரால் படிக்கப்பட்டது.குறிப்பாகப் பசுமைக் கட்சிகளால்.

ஐரோப்பியப் பசுமைக் கட்சிகள் அணுவினது பயன்பாட்டிலிருந்தே முளைவிட்டவை.இவர்கள் அன்றைய ஜப்பானது இயற்கை அனர்த்தம்,மற்றும் அதன் தாக்கத்துள் சிக்கிய அணுவாலை அனர்த்தம் குறித்துப் பேசின.மிக முன்னேறிய தேசமான ஜப்பானது கையாலாகத்தனம் விஞ்ஞானத்தின் வரையறுக்கப்பட்ட எல்லையை எமக்குப் படம் பிடித்துக் காட்டியது.

ஐரோப்பிய அரசுகள் தமது முற்றத்திலுள்ள அணுவாலைகளை மேலும் வலுப்படுத்தக் கண்கண்டிவித்தைகளை இப்போது தொடர்ந்து செய்கின்றன.ஜேர்மனிய அதிர்பர் அங்கேலா மேர்க்கெல் வீடியோக் கமராமுன் நன்றாக நடிக்கத் தொடங்கி இன்று வருடம் 5 ஆகிறது.

"விஞ்ஞானிகளே,எக்ஸ்பேர்ட்டுக்களே(விற்பனர்களே),அணுவாலைகளைச் சிறப்பாகக் கண்காணியுங்கள்!" என்பதோடு அவரது நடிப்புச் சரியாகிவிட்டது!;மக்களது உயிரோ புற்று நோய்க்கு முன் கதிரியக்க அச்சமாக...

அதி பகாசூரக் கொன்சேர்ன்கள் [Energieversorgungsunternehmen]சக்திவள வணிகத்தில் மக்களையே வேட்டையாடுவதென்பதில்லை! அவர்கள் ( Energiekonzerns)முழு இயற்கையையும் உலகம் பூராகவும் திருடுகிறார்கள். இன்றைய வர்த்தகவுலகமானது யுத்தத்தால் செய்யும் கொடுமை ஒரு புறமாகவைத்து விவாதிக்கும்போது,இந்த, அவர்களது உற்பத்திப் பொறிமுறையின் மனித விரோதப்போக்கே இனிவரும் காலங்களில் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கவேண்டும்.

அதி முன்னேறிய தொழில் நுட்ப வல்லரசான ஜப்பானது இயற்கை அனர்த்த-அணுவனர்த்த அழிவுகளை மேற்குலகமும்,முன்னேறிய முதலாளிய அரசுகளும் பெரும் பிரிசீலனைக்கு உட்படுத்த முனைகின்றன. இதிலிருந்தும், இதுபோன்ற தமது முற்றத்தில் விடியும் அனர்த்தங்களிலிருந்தும் தம் அமைப்பை எங்ஙனம் காப்பதென ஆய்வுகளை முடுக்கியுள்ளனர்.மக்கள் சாவு அவர்களுக்கான பொருட்ட அல்ல.

மேற்கு ஜேர்மனிக்கு இயற்கை அழிவு-புவியதிர்வு குறித்த கவலையின்றித் தமது அணுவாலைமீது "எதிரிகள்"விமானத்தால் மோதிச் சேதங்களை உருவாக்குவது குறித்த ஆய்வே முக்கியமானதாகவிருக்கிறது.செப்ரெம்பர் 11 இக்குப் பின் இந்தமாதிரியே ஜேர்மனி சிந்திக்கிறது. முற்பகல் செய்தவர்கள் பிற்பகல் விடிவையே குறித்துக் கனாக் காண்கின்றனர்.

ஜப்பானியப் பேரரசு தாம் பேய் அரசுதாமெனச் சொல்லவுஞ் செயற்படவும் முடியாத திண்டாட்டுத்துள் அணுவினது அனர்த்தத்துக்குமுன் கட்டுண்டுபோய் இன்றுஞ் செத்துக் கிடக்கின்றது.எந்த மூளையும் எதுவுஞ் செய்ய முடியாது.இதுவோதாம் செனோர்நோபியில் 26.04.1986 இல் நடந்த ( Die Nuklearkatastrophe von Tschernobyl : 26.April 1986 in Block 4 des Kernkraftwerks Tschernobyl nahe der ukrainischen Stadt Prypjat. ) அணுவனர்த்தத்தின் கதையும்.




ஒரு அணுவனர்த்தத்தின் -பேரிடியின் பின்னான கதிரியக்க மாற்றத்தின் சூழலே அதி பயங்கரமானது.மழைப் பொழிவு அதிகமாகும் சூழலொன்றில் அணுவியக்கம் தரையிலே மையமுறும்.காற்றில் கலக்கும் கதிரலையானது எங்கோ ஊசாலடிச் சென்றுவிடினும் தரையிற்றங்கும் அணுக்கதிர் பல வருடங்களுக்குப் பாடாய்ப்படுத்தும் விபத்து நடந்தேறிய ,வலைய மக்களை.இந்த அழிவுகள் வந்து சேரும் முறைமைகளை நாம் பல முனைகளில் அறியலாம்.இந்தியத் துணைக்கண்ட அணுவாலைகள் குறித்த கட்டுரையொன்றில் முன் பே பேசவும் முற்பட்டேன்!

இந்தியத் துணைக்கண்டமும் அணுவும்:

இந்தியாவானது அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் பலபத்து அணுமின்னாலைகளை நிறுவிவிடும்.அதன் வளர்ச்சியும்,பொருளுற்பத்தியும் சீனாவுக்கு நிகராக உயரும் சாத்தியமுண்டு.இந்தத் தேவையின் பொருட்டு வளர்ந்துவரும் இந்தியாவானது எந்த நிலையிலும் சூழற் பாதுகாப்புணர்வுடன் நடந்துகொள்ள வாய்ப்பில்லை.அதன் பொருளாதாரச் சார்பானது அமெரிக்க ஆதிக்கத்தின் பக்கம் இருக்கும்போது இந்தச் சூழலியற்றேவைகளை ஒருபோதும் இந்தியா மதிக்காது.பண்டைய வாழ்வு அதற்கினிக் கைகூடாது[இதுவேதாம் இலங்கை போன்ற வளர்ந்துவரும் தேசத்துக்கும் ;முதலாளியத்தை எட்டமுனையும் சிறுதேசங்களுக்கும் பொருந்தும்.சம்பூர் அணு மின்நிலையம் இந்தப் போக்கின் விருத்தயே!].

இந்தியத் துணைக் கண்டத்தின் அணுமின்சாரத்திட்டமானது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது!இதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

1):வளர்ந்துவரும் சூழலியல் விஞ்ஞானமானது நமது உயிர்வாழ்வின் அவசியத்துக்கு இப் புவிப்பரப்பானது அணுமின்சாரத்தை நிராகரித்த உற்பத்தித் திறனோடு எதிர்காலத்தை எதிர்கொள்வதே சாலச் சிறந்ததாகக் காண்கிறது.இதன் பொருட்டுப் பற்பல மேற்குலக நாடுகள் 2030 ஆண்டுகளுக்குள் தமது அனைத்து அணுமின் நிலையங்களையும் படிப்படியாக மூடிவிடும் திட்டத்தோடு மாற்று வழிகளைக் காணும்போது இந்தியாவோ அணுமின் திட்டத்தை வலுவாகச் செயற்படுத்தத் தயாராகிறது!.

2):இந்தியா அணுமூலமாகத் தயாரிக்கும் மின்சாரத்தை மிகவும் இலாபகரமாகப் பெறமுடியாது.இதற்கான தகுதி அதற்குக் கிடையாது.அதாவது அமெரிக்காவுடன் அதன் ஒப்பந்தம் [ The 123 Agreement signed between the United States of America and the Republic of India is known as the U.S.–India Civil Nuclear Agreement or Indo-US nuclear deal. The framework for this agreement was a July 18, 2005 ]இத்தகுதியை அதனிடமிருந்து பறித்துவிடும்.மின்சாரம் போதியளவு பெற்றுவிடலாம்.ஆனால், அணுக் கழிவுகளே (Plutonium, Pu, 94 )மிகப் பெரும் செலவை இந்தியாவுக்கு -இலங்கைக்கு வழங்கி அதன் உட்கட்டமைப்பைச் சிதறிடிக்கும்.இது மிகவும் நிதானமான அமெரிக்காவின் சதிவலை.இந்திய -இலங்கை ஆளும் வர்க்கமானது தமது வருவாயை மட்டுமல்ல அந்நிய சக்திகளோடிணைந்து இந்திய -இலங்கைக் கனிவளங்களையும் சூறையாடிப் பெருவங்கிகளில் பதுக்குவதற்குத் தயாராகிறார்கள்.


இதன்படி அந்த வர்க்கம் எந்த முன் நிபந்தனையுமின்றி அமெரிக்காவோடு கூட்டிணைவதில் மும்மரமாகச் செயற்படுவார்கள்.இவை மிகமுக்கியமான உதாரணங்களாகும் இந்தியத் தரகு முதலாளிய ஆட்சியாளர்களின் ஈனத்தனத்தை அறிவதற்கு.
ஏனெனில், அணுமின்சாரமானது மிகவும் ஆபத்தானது.அது புவிப்பரப்பு எதிரானது!ஏன் உயிரினங்கள் அனைத்துக்குமே எதிரானது.இதை எங்ஙனம் நிறுத்தமுடியுமென மானுட வர்க்கஞ் சிந்தித்து அதற்காகப் போராடி வரும்போது இந்தியா -இலங்கை மிகச் சிறுபிள்ளைத்தனமாகக் காரியமாற்றுகின்றன.இலங்கையில் தொடர்ந்து அணுமின்சார ஆலைகள் நிறுவப்படும்.அதன் உற்பத்திக்கேற்ற வலுவுள்ள ஐந்துக்கு மேற்பட்ட ஆலைகள் இனிவரும் ஆண்டுகளில் நிறுவப்படும்.

அணுக்கழிவுகளின் [ Plutonium, Pu, 94 ( 239Pu ) ] இறுதிப் பராமரிப்பு ஒரு இலட்சம் வருடங்களுக்கு:


 

இன்றைய மூன்றாமுலக அரசியல் வாதிகள் அதிகமாகக் கற்றவர்களோ அல்லது மனித நேயமிக்கவர்களோ கிடையாது.இவர்கள் ஆளும் பூர்ச்சுவா வர்கத்தின் வெறும் அடியாட்கள்-மாபியாக்கள்!இவர்களிடம் பணம் சேர்க்கும் அவாவுடைய மனதிருக்கு,ஆனால் மக்களின் எந்தத் தேவைகளையும் பற்றிய துளியளவு அறிவும் கிடையாது.இதனாற்றான் அநேகமான அரசியல்வாதிகள் அணுமின்சாரத்தை எதிர்ப்பதில்லை.மாறாக அவற்றை மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான முக்கிய கருவியாகக் கணக்குப் பண்ணுகிறார்கள்.இங்கு நமது சம்பந்தனது நிலையும் இதுவே! ;அவர் 50 ஆண்டுகள் பின் தங்கிய அணுவிஞ்ஞானப் புரிதலைக்கூட அறியாதவொரு சட்டவாத எம்.பி. -எதிர்க்கட்சித் தலைவர்.

அணுமின்சாரத்தின் இறுதிக்கழிவு வடிவமானது புளோட்டோனியமாகும்( 239Pu ). இந்தப் புளோட்டோனியத்துக்கு பலவகைத் தரப்படுத்தற் காலமுண்டு.


 

அந்தவகையில் அதன் அரைதரக் ( Half-life (t1⁄2) )காலமானாது 24.000.வருடங்களாகும்.இதன் அர்த்தம் என்னதென்றால்முதற் பகுதி24.000 ஆண்டுகளுக்கு நடைபெறும் கதிர்வீச்சு பின்பும் 24.000.ஆண்டுகளுக்கு கதிரியக்கமாக நடக்கும்- அடுத்த அரைக் காலத்திலும் கதிரியக்கம் நடைபெறும்,அதன்பின்பு இது ஒரு இலட்சம் வருடங்களுக்குத் தொடர்கதையென்று கதிரியக்கம் பற்றிய அறிவு குறித்துரைக்கிறது. இந்தக் கேடுவிளையும் அபாயமான சாமான்[ 239Pu ] மிகவும் பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருக்கவேண்டும். இந்தியாவல் -இலங்கையால் இது சாத்தியமில்லை.அதாவது என்னென்ன வடிவங்களில் இது காக்கப்படுவேண்டுமென்றால்:






1):கதிர்வீச்சை தடுப்பதற்கான முறைமைகளைத் தவிர்காதிருக்கவேண்டும்.
2):யுத்தத்தால் பாதிப்படைவதைத் தடுத்தாகவேண்டும்.
3):வெள்ளப் பெருக்கிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
4):பயங்கரவாதத் தாக்குதிலிலிருந்து பாதுகாக்கப்படுவேண்டும்.
5):பலாத்தகாரத்துக்குள்ளாகப்படுவதைத் தடுத்தாகவேண்டும்.
6):ஊழலிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
7):கீழ்த்தரமாகப் பயன்படுத்தலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
8):நிர்வாகக் கவனக்குறையிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
9): ஞாபக மறதியிலிருந்து தவறேற்படுவதைத் தடுத்தாகவேண்டும்.




இப்படிப் பல்வகைக் கடப்பாடோடு இந்த உயிர்கொல்லியைப் பாதுகாத்தாகவேண்டும்.அதாவது கண்ணுக்குள் எண்ணையை ஊற்றிக்கொண்டே பாதுகாத்தாகவேண்டும்.இந்த வகைப் பாதுகாப்போடு எந்த நாட்டிலுமுள்ள பகுதிகளும் இல்லை!

மேற்குலக வளர்ச்சியடைந்த நாடுகளே இந்தப் பாதுகாப்பு வியூகத்துக்காகத் திண்டாடும்போது இந்தியா -இலங்கைபற்றிச் சொல்லவே தேவையில்லை!இந்த நேரக்குண்டானதை[ Zeitbombe ]யெங்குமே பாதுகாத்துவிட முடியாது.இதன் கதிரியகத்தை எந்த விஞ்ஞானமும் கட்டுப்படுத்திட முடியாது.இலட்சம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டியதை,எந்தக் கொம்பரும் மலிவாகச் செய்துவிட முடியாது.பலகோடிக்கணக்கான மக்கள் வரிச் செல்வத்தை இது வேட்டையாடிவிடுகிறது.

Zusammenhang zwischen Halbwertszeit und spezifischer 
Aktivität Isotop Halbwertszeit spezifische Aktivität 
 
131I  8 Tage  4.600.000.000.000 Bq/mg
137Cs 30 Jahre 3.300.000.000 Bq/mg
239Pu 24.110 Jahre 2.307.900 Bq/mg
235U 703.800.000 Jahre 80 Bq/mg
238U 4.468.000.000 Jahre 12 Bq/mg
232Th 14.050.000.000 Jahre 4 Bq/mg
 
 
இதைப் பாதுகாக்கப் பயன்படும் செலவானது அந்த நாட்டின்
மொத்தவுற்பத்தியில் பல பங்கைச் சூறையாடும்.
இந்தப் புளோட்டோனியம் [Plutonium, Pu, 94 ]
நமது புவியையும், உயிர்களையும் கொன்று இல்லாதாக்கி வருகிறது.
இன்றைய உற்பத்தி முறைமையின் சக்திவளாதாரம் எங்ஙனம்
மனிதவலத்தை ஏற்படுத்துகிறது?-இதையும் சற்று நோக்குவோம்.

இன்றைய சக்திவள ஆதாரத்தில் மனித வாழ்வு:

-ஒவ்வொரு செக்கனுக்கும் ஒருவர் பட்டுணி கிடக்கிறார்.

- ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 கெக்டர் காடு அழிக்கப்படுகிறது

-நாளொன்றுக்கு 80 வகைத் தாவரங்கள் அழிந்தே போகிறது.

-ஒவ்வொரு கிழமையும் 50 கோடித் தொன்கள் கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் கொட்டுகிறோம்.

-ஒவ்வொரு மாதமும் பாலைவனத்தில் 5 இலட்சம் கெக்டரை விஸ்தரித்துப் பெருக்கிவிடுகிறோம்.

-ஒவ்வொராண்டும் ஓசான் பாதுகாப்புறையில் 1 வீதம் மெலிதாக்கி வருகிறோம்.

இந்த மனித வாழ்வு எங்கே செல்கிறது?

எதை நோக்கி முதலாளியம் மனித வாழ்வை நகர்த்துகிறது?:

நாம் பிறக்கிறோம்,கற்கிறோம் வேலைக்குச்செல்கிறோம்,மணமுடித்துக் குழந்தைகள் பெறுகிறோம்!எங்களில் எத்தனை பேர்கள் நமது சூழலின் தூய்மை-மாசு பற்றிய உணர்வோடு வாழ்கிறோம்?எத்தனை பேர்கள் தத்தம் நாட்டின் அரசியல் பொருளாதாரச் சூழல் நெருக்கடியை உணர்வுபூர்வமாக உள்வாங்கி அதை நிவர்த்தி செய்வதற்கான அழுத்தங்களை முன்வைக்கின்றோம்?

இன்றைய சூழலல் நெருக்கடியான மிக உண்மையானது.கடுமையானது!இந்த நெருக்கடியை தீர்த்தாகவேண்டும்.அங்ஙனம் தீர்க்கப்படாதுபோனால் புவிப்பரப்பில் இன்னும் ஓரிரு நூற்றாண்டில் உயர் வாழ்தல் Plutonium, Pu, 94 ஆல் சாத்தியமின்றிப்போவது உண்மையாகும்.நச்சுக் கிருமிகளினதும்,விஷச்செடிகளினதும் இருப்பே சாத்தியப்படலாம்.இத்தகைய எதிர்காலத்தை எதிர்கொள்ளவா நாம் மாடாய் உழைக்கிறோம்,குழந்தைகளைப் பெறுகின்றோம்?

எமது உற்பத்தி முறைகளுக்கும்,சக்திவள நுகர்வுக்கும் எந்தப் பொறுப்பும் சுமத்தாமால் வெறுமனவே இலாப வேட்கையுடன் தொடர்ந்தாற்றும் மனித இடைச்செயலானது, நம் தலைமுறையையே நோய்வாய்ப்படுத்தியுள்ளதை எத்துணை மதிப்பீடுகளுக்குள் நாம் உட்படுத்தி ஆய்ந்திருக்கிறோம்?

சமுதாயத்தின் முழுமொத்த மக்களும் ஆரோக்கியமற்ற மனிதர்களாகவும்,ஏதோவொரு குறைபாடுடைய சிசுவாகக் கருவில் உருவாகும் புதிய மனிதவுயிருக்கு யார் பொறுப்பாளிகள்?நமது வாழ்கை முழுதும் பெரும் குற்றவாளிகளாக மாறிவரும் இந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு நடாத்தும் "நம் கூட்டுழைப்பு" நம்மையடிமைப்படுத்தும் இன்றைய காலத்தில் வாழ்வின் அர்த்தம் என்ன?

சூனியத்துள் விழுந்துகிடக்கும் ஒரு ஊதாரிக்கூட்டமாக மாறியுள்ள தலைமுறைக்கு எதிர்காலத்தையும்,சூழலையும் அது சார்ந்த உயிர் வாழ்வையும்,மனித இடைச் செயலையும் பற்றிய மதிப்பீடுகளா முதன்மை பெறுகிறது?

"நாவிலுள்ள எச்சிலை விரலில் தொட்டு எங்கோ பூசுவென்று "சேட்"பண்ணும்போது எழுதுகின்ற கூட்டமாக மாறியுள்ள இந்தத் தலைமுறைதாம்" நமது அடுத்த கட்டத்தை நகர்த்தப் போகிறது!நினைக்கவே தலை சுற்றுகிறது.எங்கே போகின்றது நமது தலை முறைகள்?

இந்தத் தலை முறையின் பின்னாலுள்ள உற்பத்தி-இலாப வேட்கையின் சூத்திரதாரிககளான இந்த முதலாளிப் பிசாசுகள் இப்போது குளோபல் வர்த்தகத்தின்மூலம் புவிப்பரப்பின் அனைத்துப் பாகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தபின், நமது சூழல் அனைத்து வடிவங்களிலும் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது!

இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தச் சூழல் பொறுத்துக் கொள்ளும்?

அது பொறுமையுடையதாக நாம் காணவில்லை!உலகெங்கும் புவி அதிர்வுற்றுப் பற்பல அழிவுகளையும்,வளிமண்டலத்தில் பலகோடி நோய்க் கிருமிகளையும் அது இயல்பாகமாற்றித் தந்துகொண்டேயிருக்கு. இன்றைய சிகா வைரஸ் (Das Zika-Virus ) மற்றும் "எச்5 என்1"வைரஸ்[ Influenza A/H5N1 ] அடுத்த பத்தாண்டுகளில் நம்மில் பலரைக் கொல்லப்போகிறது.இதை எந்தக் கொம்பரும் தடுத்துவிட முடியாது.அவரது எந்த மருந்தும் அதைத் தடுக்கும் ஆற்றலையும் பெறமுடியாது.இதுதாம் இன்றைய முதலாளிய உற்பத்திப் பொருளாதாரத்தின் மகத்தான பரிசு.இந்த நோயை வழங்கியது மனித இடைச்செயலேயன்றிச் சூழலல்ல!

எந்தப் பொறுப்புணர்வுமற்ற இந்தவுலகத்தின் அதிகார வர்க்கமானது முழுவுலகத்தையும் பாழாக்கிய பின் இன்னும் அணுவைக்கொண்டு இலாபமீட்டிவரும் பாரிய திட்டங்களோடு காரியமாற்றுகிறது.இந்த அணுவே இன்னுமொரு தலைமுறைக்கு-நூற்றாண்டுக்குமேல் உற்பத்திக்குக் கிடையாதுபோகும் சூழலில், அதன் கழிவுகளை நமது ஆயிரம் தலைமுறை கண்ணும் கருத்துமாகக் கட்டிக் காத்தாகவேண்டும்.இதை இந்த முதலாளியப் பொருளாதாரம் நமது தலைமுறைகளுக்குச் சுமத்தும்போது நாம் வாளாதிருக்கின்றோம்.

இன்றைய யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு!

யுரேனியத்தின் கச்சாவிருப்பு இன்னுமொரு தலைமுறைக்குச் செல்லமுடியாது.ஆகக்கூடிய அதன் வளம் இன்னும் எண்பது அல்லது நூறு வருஷங்களே.





இந்த அணுமின்,மற்றும் அணுச் செயற்பாடுகளை இந்த எல்லையிலிருந்து பார்க்குமொரு விஞ்ஞானிக்கு அதன் மாற்றைப் பற்றிய தெளிவு தெரிந்தேயிருக்கு.அந்த விஞ்ஞானி மனித இனத்தைக் காப்பதற்காக இன்றே மாற்றுச் சக்தி வளத்தைப் பயன் படுத்தும்படி கோரிக்கை செய்யும்போது(பேராசிரியர் எரிக் பீல் மற்றும் பொல்கர் பிறேயஸ்ரெட்:"தாவரத்திலிருந்து சக்தி" எனும் நூலின் ஆசியர்கள்), நமது இந்திய பேரரசோ அன்றி இலங்கை அரசோ அவற்றை உதாசீனம் செய்து அமெரிக்காவோடு அடிமை ஒப்பந்தம் போடுகிறது(புதிய ஜனநாயகம்-ஏப்பிரல்2006).

என்னைப் பொருத்தவரை நமது பொருளாதாரமானத்து சூழலிருந்து திருடுவதை நிறுத்தாதவரை மனிதவினத்துக்கு எந்த விமோசனமுமில்லை.இதற்காகவேனும் இந்தப் பொருளாதாரமானது தேவைக்கேற்ற உற்பத்தியை அனுமதிக்கும் ஷோசலிசச் சமுதாயமாக மாற்றப்பட்டே தீரணும்.

அவுஸ்ரேலியாவிலும்,தென் ஆஜென்டீனாவிலும் பெற்றோர்கள் தமது குழந்தைகளை 13 நிமிடங்களே வெய்யிற் காலத்தில் வெளியில் அனுமதிப்பது நடக்கின்றது.இதற்கு மிஞ்சினால் தோற் புற்று நோயை அந்தக் குழந்தைகள் எதிர்கொள்வதில் முடியும்.புவியின் தென்துருவத்தில் மெலிதாகிப்போன ஓசான் பாதுகாப்பு உறை இன்று புற்று நோயைப் பரிசாக வழங்குகிறது!இன்னும் சில வருடங்களில் புவியின் வடதுருவத்திலும் ஓசான் ஓட்டை பெரிதாகி எல்லோருக்கும் இதைப் பொதுவாக்கிவிடும்.வருடமொன்றிக்கு அவுஸ்ரோலியாவில் 140.000. பேர்கள் தோற் புற்று நோய்க்கு உள்ளாகி வருகிறார்கள்.சுவாசப்பை மற்றும் கண்,தொண்டை,மூக்குப் பகுதிகளில் கண்ட கண்ட நோய்கள் வந்து தொலைக்கிறது.

200 வருடங்களுக்கு முன் இமானுவேல் கன்ட் எனும் தத்துவவாதி சொன்னார்:"இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல மாறக மனிதர்களின் குற்றமே"அதாவது மனிதரின் இடைச் செயலே என்றான்
இயற்கை குறித்து மனிதர்கள் எந்தத் திசைவழியில் சிந்திக்கிறார்களென்பதைப் பல பத்துத் தத்துவ ஞானிகள் பதறியடித்துப் பாடங்கள் சொல்லியாச்சு.எனினும் நமது இன்றைய பொருளாதாரப்போக்குகள் அதன் வாயிலாகவெழும் போராட்டங்கள் குவிப்புறுதிச் சமுதாயத்தின் சில பத்து நிறுவனங்களுக்கான பொருள் வளத்தை மேம்படுத்துவதற்காக, சூழல் மற்றும் ஜீவராசிகளுக்கெதிரான யுத்தமாக நடக்கின்றன.இதைச் செயற்கரிய வியூகமாச் செய்து முடிக்கும் இன்றைய விஞ்ஞானம் அணுக்குண்டுகளால் தமது போரியற் சமநிலையை அடைவதற்கு விரும்புகின்றன!


இயற்கையின் வளங்கள் புவிப்பரப்பில் வாழும் அனைத்து ஜீவராசிகளினதும் பொதுச் சொத்தாகும்!இது தனிப்பட்டவொரு நாட்டுக்கோ அல்லது சில நிறுவனங்களுக்கோ உரித்தாக யாரும் பட்டயம் எழுதிக் கொடுத்ததாக எந்த விபரமும் இல்லை.இந்தச் சூழலின் அதீத பொருட்குவிப்பானது மனித வளத்தைமட்டுமல்ல புவிப்பரப்பின் அனைத்துக் கொடைகளையும் உதாசீனப்படுத்தி ஓரிரு ஆதிக்க நாடுகளினது பரம்பரைச் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.

அதீதத் தேவைகள், மனித உயிராதாரமாக இருக்கும்போது-பல நாடுகளுக்கு உணவும் ,சுத்தமான குடி நீரே அதீத் தேவையாகும்!ஆனால் பொருளுற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளுக்கோ கனிவளத்தைக் கட்டுப்படுத்தித் தமதாக்கும் அவசியமே அதீதத் தேவையாகிறது.இந்த இருவகைப் போராட்டங்களுக்குள் சிக்கித் தவிக்கும் உழைப்பாள வர்க்கமானது தமது உயிர்வாழும் சாத்தியத்தை வெறும் உடலுழைப்பை நல்குவதில் உறுதிப்படுத்துதில் முனைப்பாக இருக்கும்படி அனைத்துச் செயற்பாடுகளும் பூர்ச்சுவா அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுச் சட்டமாக்கப்பட்டிருக்கு.

ஆனால் இந்த இயற்கையோடு மிக நெருங்கி உயிர்வாழும் சாத்தியத்தை இல்லாதாக்கும் பாரிய செயற்திட்டத்தைச் செயற்படுத்துமொரு காட்டுமிராண்டி வர்க்கமாக இன்றைய "கொன்சேர்ன்களின் பங்காளிகள்" மனிதர்களை ,உயிரினங்களை,இயற்கையைச் சுரண்டுவதை முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுயையென்ற நெறிமுயைக்குள் எல்லாவற்றையுமே நாசஞ் செய்வதில் வலுவுடைய விஞ்ஞானத் தொழில் நுட்பங்களாக விரிந்து கிடக்கும், அதீதப் பூர்ச்சுவாக்கள் இன்றுரையும் மதங்களின் பெயரால் ,இனங்களின் பெயரால்,மக்களையும் மற்றெல்லாவற்றையும் அடக்கி வைத்துள்ளார்கள்.இதை எந்தவொரு பொது நிறுவனமும் எதிர்த்துப் போராடாத வகைகளில் மதவாதப் புனைவுகள் மக்கள் விரோத மதவாதிகளால் மிக நுட்பமாகச் செயற்படுத்தப்பட்டு,இந்தப் பூர்ச்சுவா வர்க்கம் காக்கப்படுகிறது.

எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து,ஒவ்வொராண்டும் மிகையான வருமானத்தையும்,அதீத இலாபத்தையும் உறுதிப்படுத்தியே செயலாகவிரிகிறது.இன்றைய தொழில் நிறுவனங்கள் போடும் முகமூடியானது சூழற்பாதுகாப்பு என்ற பெரு முகமூடியாக நம்முன் விரிந்து கிடக்கிறது.ஆனால் இந்த முகமூடி தமது எதிர்கால வளத்தேவைகளை மட்டுப்படுத்தும் சூழலியளர்கiளின் காதுகளில் பூச்சுற்றும் வேலையென்பதை பல விஞ்ஞானிகள் ஏலவே கூறியுள்ளார்கள்.

புவிப்பரப்பானது சில பெரும் தொழிற்கழகங்களின் சொத்துரிமையாக இன்றைய சிலபூ ர்ச்சுவா அரசுகளால் முடிவெடுத்துக் காரியமாற்றப்படுகிறது.இந்தச் சந்தர்ப்பத்தில் உழைப்பாள வர்க்கம்மானது வாளாதிருக்கும்படி அவர்களின் அனைத்து நலன்களும் பறிக்கப்படுகிறது.இழப்பதற்கரிய சொத்தாக மாற்றப்பட்ட அடிமை உடலுழைப்பு ,இன்று உயிர்வாழ்வதற்கு அவசியமாக மாற்றப்பட்டுள்ளது.இதனால் வாளாமை நமக்கு எல்லா விஷயத்திலும் தொடர்கிறது.

நாம் எந்தத் திசையிலும் அணித்திரட்சி கொள்ளத்தக்க சூழலில்லை.இன்றைய உலகப் போராட்டங்கள் பூர்ச்சுவா வர்க்கத்தைச் செயலிழக்க வைப்பதற்கானதல்ல.அவை இந்த வர்க்கத்தோடு சமரசஞ் செய்வதில் ஒவ்வொரு பொழுதும் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்தே தனது உயிர்வாழ்தலைச் செய்கிறது.இதுவே புரட்சிகரப் போராட்டமல்ல.சூழலைப் பாதுகாப்பதும்,தொழிலாளர் விடுதலையும் ஒரே தளத்துக்கு வரும் பெரும் போராட்டத் தேவையாகும்.இந்தத் தேவையில் எந்தவொன்றையும் எவரும் மறுத்தொதுக்க முடியாது.இதுவே மனித சுதந்திரத்துக்கான போராட்டமாகும்!சுதந்திரம் மனிதருக்கு மட்டுமானதல்ல மாறாகப் புவிப்பரப்பிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்,சூழலுக்கும் இது பொதுவாகும்.சூழலை விடுவிப்பதும்,மனிதர்களை விடுவிப்பதும் வெவ்வேறானதல்ல!

அதாவது ,இன்றைய சுதந்திரம் எனும் அர்த்தமானது மார்க்ஸ் கம்யுனிச அறிக்கையில் கூறியபடி: >>Unter Freiheitversteht man innerhalb der jetzigen buergerlichen Produktionsverhaeltnisse den freien Handel ,den freien Kauf und verkauf.<<(Manifest der Kommunistischen Partei:seite.11) "இன்றைய உற்பத்தி நிலைமைக்குள் மனிதர்கள் புரிந்துகொள்ளும் சுதந்திரம் எனும் அர்த்தம், திறந்த வர்த்தகத்தில் சுதந்திரமான கொள்வனவு,விற்பனையே!"இதற்கு மேலாக நமது காலத்துச் சுதந்திரமென்பது வெறும் அர்த்தமிழந்த பூர்ச்சுவாக்களின் நரித்தனமான மனிதவிரோதத் தொழிற்சங்கங்களுமெனலாம்!இவையே இன்றைய பொருளாதார வாதத்துக்குள் புரட்சிகரப் பாட்டாளிய வர்க்கத்தின் உணர்வைத் தள்ளி கையாலாகாத கூட்டமாக்கியுள்ளார்கள்.

இந்த ஈனத்தனத்திலிருந்து விடபட முனையும் தொழிலாள வர்க்கத்துக்கு விசுவாசமானவொரு புரட்சிகரக் கட்சியெங்கும் நிலவுவதாகவில்லை. கூலியுழைப்பென்ற ஒரு அடிமைத்தனமில்லை யென்றால் பெரும் மூலதனமுமில்லாது போகும்!அப்படி இல்லதுபோகும் மூலதனத்தால் மக்களுக்கு உயிர்வாழத்தக்கவொரு சூழலும், அதைக் காத்து நலனடையும் ஒரு சமூகக்கட்டுமானம் உருவாகும்.இதை முன்வைத்து நடைபெறாத எந்த் திசை வழியும் இறுதியில் பூர்ச்சுவா வர்க்கத்துக்குள் ஐக்கியமாவதே வரலாறாக விரிவது நமது காலத்தில் அடிக்கடி நிகழும் ஒரு போராட்ட வடிவமாக இருக்கிறது.

இறுதியாக :
 ஏலவே சொன்ன சம்பூர் அணுமின் நிலையமானது   இலங்கை போன்ற வளர் முக நாடுகளுக்கு மிக அவசியமானது?   ;அவ்வணுமின் நிலையத்துள் நகர்த்தப்படும்   "ஒரு கல்லினால் இரு மாங்காய் வீழ்த்தும்"  அரசியல் என்ன? 
என்பதன் அரசியலைப் பார்ப்போம் !
 
 
 
 


இலங்கையானது ஒரு வளர்முன நாடாகும்.அஃது இலங்கை மக்களது நல்வாழ்வுக்காக -தொழில் வளர்ச்சிக்காக -ஒழுங்கமைந்த சந்தை வளர்ச்சிக்காகப் போராடும் தேசம்.அதன் பொருளாதாரச் சந்தை வளர்ச்சி ,இன்னும் முடிந்தபாடிலில்லை!




அத்தேசமானது பல்லாண்டுகளுக்கு “இப்போருள் “ சிக்கியுள்ளது ;முழுமையான முதலாளித்துவ வளர்ச்சியானது இலங்கைக்கு அடுத்த 200 ஆண்டுகள்வரை தொடரும்.

இதன் பொருளானது, அத்தேசமானது தவிர்க்கமுடியாது தனது சக்திவளத் தேவையை இத்தகைய அணு மின்னாலைகளது உருவாக்கத்தினால் மட்டுமேதாம் சாத்தியப்படுத்த முடியும்.அதற்கு வேறொரு மாற்று வழி தற்கொலைக்கொப்பானது.

இதைச் சாத்தியமாக்கப் பல சம்பூர்கள் இலங்கைக்கு அவசியமே!இங்கே இஃதொரு கல்! மற்றது, இந்த அணுமின்னாலை உருவாகும் பிராந்தியமானது தமிழ் நிலப்பரப்பின் இதயத்திலென்பதை நாம் மறுக்கவோ அன்றி மறைக்கவோ கூடாது!இதை எந்த அரசியல்வாதியும் வெளிப்படையாகவுணரவில்லை!

தமிழர்களது இனப் பிரச்சனையும் ;இனவாத இலங்கை அரசின் போக்குகளும் இன்னும் முற்றுப் பெறவில்லை!2009 வரை இலங்கையில் "பயங்கரவாத" த் தாக்குல்களும் ;யுத்தமும் தேசவுடமைகள் -பொதுச் சொத்துக்கள் அழிப்புகளும் நிகழ்ந்து கொண்டது.அதன் தாக்கம் ;அரசியல் இன்னுந் தொடர்கதையாகவே இருக்கிறது!

இலங்கை போன்ற கலவரப் பூமியில் அணுமின்னாலை ஒருபோதும் உகந்ததல்ல!; இதை இந்திய ஆளும் வர்க்கம் நன்றாகவே உணர்ந்துள்ளது.
இலங்கை அரசானாது அணுமின்னாலையை மேற்சொன்ன விதிமுறைகளுக்கமையப் பாதுகாப்பதைத் தனது இராணுயந்திரத்தின் நிரந்த ஆக்கிரமிப்பிலும் ;இந்திய உளவு நிறுவனத்தின் பாதுகாப்பிலுந்தாம் சம்பூர் அணுமின்னாலையைப் பாதுகாக்க முடியுமென்பது நிதர்சனமானவுண்மை ! ; இதன் தெரிவில் திரிகோணமலைப் பிரதேசம் முற்றுமுழுதான ஆக்கிரமிப்புக்குள் ;இராணுவப் பாதுகாப்பு வலையத்துள் இருத்தப்படும்.

இது சுமார் 100 ஆண்டுகளுக்குத் தொடர்கதையாகும்.இங்கே , இந்தியாவுக்குத் திரிகோணமலையைப் பட்டயம் எழுதிக் கொடுத்தாகவேண்டும். இதுதாம் இரண்டாவது கல்!எனவே, தமிழர்களது பாரம்பரிய பூமி என்பது ,இனிச் செல்லாக் காசாகும்!; இதொஃரு வகையில் புதிய பாணியிலான நில ஆக்கரமிப்புத் தேசத்தின் வளர்ச்சியை முன் நிறுத்தி - இதற்கு , இலங்கையில் உருவாகும் அணுமின்னாலைகள் நல்லவொரு அரசியல் வியூகமாகும்.இதுவே, அணுமின்னாலையின் அரசியலும் அதன் உருவாக்கத்தின் அசுர வேகத்தின் உள் நோக்கமுமாகும்!

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

Freitag, März 25, 2016

இந்திய அமைதிப்படைக்கு நன்றி கூறக் கடமைப்பட்ட ஈழத் தமிழர்கள்

46 ஆவது, இலக்கிய சந்திப்பு : " சனநாயகம் , புரட்சி, தலித்துவம், கிழக்கியம்"- மறு வாசிப்பு!
 
நாளை சனியும் ; ஞாயிறும் [ 26/27.03.2016 ]இருநாட்களாக, பாரிஸ் (இ)லாசப்பலில் ( Paris : La Chapelle ) 46 ஆவது "இலக்கியச் சந்திப்பு" நிகழயிருக்கிறது. வழமைபோலவே மானுடவிரோதிகள் ; சிங்கள அரச கைக்கூலிகள் ;சமூகவிரோதிகள் ;ஒட்டுண்ணிகள் (எந்த வேலைவெட்டிக்கும் போகாது ,ஒடுக்குமுறையாளர்களுக்கு "உடந்தை"யாகயிருந்து அவ்வொடுக்குமுறையாளரது எலும்புத் துண்டில் வாழ்பவர்கள்) செத்துப்போனவர்களைக் கூடத் தமது அற்ப பிழைப்புக்குப் பயன்படுத்துவதில் தயக்கமின்றித் தோழர் பரா அரங்கு ; “தோழர் “ புஸ்பராஜா - "தோழர்" சபாலிங்கம் அரங்கு ;"தோழர்" கலைச் செல்வன் அரங்கு என்ற அரசியலுக்குள் இளையவர்களைக் கட்டிப்போட முனையும் கபட "இலக்கியச் சந்திப்பு" அரசியலானது திட்டமிடப்பட்ட சூழ்ச்சிக்குட்பட்டது.
 
 
இஃது ,புலம்பெயர்ந்த மாற்றுக் கருத்தாளர்கள் அனைவரையும் தமக்குள் செரிக்கமுனையும் தந்திரத்தோடு "தாம் தமிழினத்திலிருந்து அந்நியப்பட்டத்தை" மறைக்க முனையும் சூழ்ச்சியாகும்!
உண்மையாகவும் ;பரந்துபட்ட மக்களது விடுதலைக்காவும் பேரினவாதச் சிங்கள அரசபாசிசத்துக்கு -புலி அராயகத்துக்கு எதிரான தமிழ் மாற்றுக் கருத்தாளர்களது பெயரை இந்தப் பிழைப்புவாதிகள் பயன்படுத்துவதையும் ;அப்பெயர்களை வைத்துத் தம்மையும் ;தமது கடந்தகாலத்தினதும் மற்றும் , இந்நாள் தமிழினவரோத அரசியலை மறைப்பதற்கெடுக்குமிந்த வியூகத்தை நாம் அம்பலப்படுத்த வேண்டும்! ;அதை, இந்தச் சந்திப்பில் கேள்விக்குட்படுத்தி இவர்களை இளஞ் சமுதாயத்திடம் அம்பலப்படுத்தியாக வேண்டும்!
இன்று மீளவும், சிந்தித்துப் பார்க்கிறேன்.கடந்த காலத்தில் நாம் பெருவாரியாக மக்களை அண்மித்த அரசியலையே செய்து வந்திருக்கிறோம்.
 
 
1986 இல் இருந்து நீண்ட இந் நோக்கானது மக்களது இன்னல்களுக்குக் காரணமான இலங்கைப் பாசிச அரசு,இயக்கவாத மாயை மற்றும் புலிகளது மாப்பியாத்தனமான அந்நிய அடியாட்படைச் சேவையென்று ஒரு நிதானமான அரசியற் கருத்தாக்கத்தைக் கண்டடைந்தோம்.
 
 
பல இயக்ககங்கள், இந்தியாவின் தயவில் மக்களை வேட்டையாடிக்கொண்டு புலிகளுக்கு நிகராகவே மக்களையொடுக்கியபோது எதிரியான பாசிசச் சிங்கள அரசு அவர்களைத் தனது உறுப்பாக மாற்றியுங்கொண்டது.
புலிகள் மாறி மாறி வந்த அரசுகளுடன் சமரசம்-பிடிவாதமெனச் செய்துகொண்டு தமது இருப்புக்காகப் போராடியபோது புலத்தில் மிக எளிமையான மனிதர்களாகக் காட்சிப்பட்ட பல நண்பர்கள் மக்களை அண்மித்த அரசியல் செயற்பாட்டுக்குட்பட்டனர்.
 
 
அவர்களுடன், உடன்பாடுகொண்டு"இந்த இலக்கியச் சந்திப்பும்"ஒரு உரையாடலுக்கான மாற்றுத் தளத்தை இயக்கும் கருவியாக நமக்குள் மலர்ந்துகொண்டது.
 
 
ஆக்கதாரர்கள்,சஞ்சிகை வெளியீட்டாளர்களின்றி இலக்கியச் சந்திப்புக்கிடையாது.பீட்டர் ஜெயரெத்தினமோ இல்லைப் பார்த்திபனோ அல்லது அறுவைச் சீனி லோகனோ,சிந்தனைப் பராவோ இதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது.இதைச் சாத்தியமாக்கப் பரவலாகப் பலர் தமது உழைப்பை நல்கினர்.
 
 
 
இப்போதும் தொடர்ந்து யோசித்துக்கொண்டிருக்கும்போது, 2009 முள்ளிவாய்க்காலுக்குபின் இலங்கைக்குச் சென்று மாதக்கணக்காகத் தங்கி ,மகிந்தா அரசுக்கிணக்கமான அரசியலைப் பலர் செய்தனர் ; மகிந்தாவுக்குப் புலிகளை அழித்த சனநாயகக் காவலன் பட்டத்தையும் தேவதாசன் - ஞானம் ; இராகவன் கூட்டணி டான் ரி.வியற்றோன்றி நல்கியது! இதுள்,நிர்மலா ,ஞானம் எனும் எம்.ஆர்.ஸ்டாலின், தேவதாசன், சுகன்,கீரன்,இராகவன்,ரெங்கன்,புளட் ஜெகநாதன்,சிவராசா,சீனி லோகன்,கொன்சன்ஸ்ரையன்,தேசம் குழு போன்றோர் மிகக் கணக்கிடத்தக்க சிங்கள அரச லொபிப் புலம்பெயர் தமிழர்கள்.
 
 
இவர்களோடு, சோபாசக்தி மாதக்கணக்காவும் இந்தியாவில் தங்கி அரசியல் செய்வது கண்கூடு(தற்போது ,இவர்களோடு புதிய கூட்டை முன்வைத்து இயங்கும் தமிழரங்க இரயாகரன் குறித்தும் ஒரு கணிப்பீட்டுக்கு நாம் வரவேண்டும்.மேற்சொன்னவர்கள் இலங்கை,இந்தியாவென்று செல்லும்போது இரயாகரன் இங்கே செல்வதில்லை.அதற்கான முழுக்காரணமும் கட்டன் நசனல் வங்கியின் கோடிக்கணக்கான பணத்தின் கொள்ளையில் பெருந்தொகை பணத்தை வைத்திருக்கும் இரயாவுக்கு இலங்கைக்கு என்றுமே செல்லமுடியாது!இலங்கை சட்டவாதத்துக்குட்பட்டவொரு அரசாகவும்,நியாய தர்மத்துக்குட்பட்ட அரசாகவிருக்கும்வரை. அது,இலங்கைக்குப் பொருந்தாதென்பதால் இரயாகரன் வருங்காலத்தில் கொழும்பில் "புதிய ஜனநாயக மார்க்சிய லெனியக் கட்சி" என்ற பெயர்ப் பலகைக் கட்சியினது நிகழ்வில் பங்கு பெறலாம்.ஆனால்,இரயாகரனோ புலி செத்த அடுத்த, ஆண்டில் புதிய வீடும் கொள்முதல் செய்திருக்கிறார்.ஒரு அச்சகத்துள் கூலியாக வேலைக்கிருக்கும் நண்பருக்கு இலங்கையிலிருந்து நிகழ்வுக்காகப் பெரியவர்களைப், பேராசிரியர்களைச் சீடர்களை அழைக்க முடிகிறது. அவர்களுக்கும்,அவர்கள் சார்ந்த புதிய ஜனநாய மார்க்சிய லெனியக் கட்சிக்குப் பல இலட்சம் நிதியும் வழங்கக் கூடியதாகவிருக்கிறது!எப்படி,இஃதெல்லாம் சாத்தியமாகிறது?ஒரு அச்சகக் கூலிக்கு?).
 
 
இவர்களது அனைத்துச் செயற்பாடுகளும் சிங்கள வல்லாதிக்த்தால் இலங்கையில் ஓடுக்கப்படும் மக்களுக்கான அரசியல் அல்ல!இவர்கள்,அனைவருமே எங்கும் தொடர்ந்து வேலைப் பணியிலிருப்பதாகவோ,ஒரு பொறுப்பான பணியில் வருடக்கணக்காகவிருந்து செயற்பட்டவர்களோ கிடையாது.
ஞானத்தையும்,,தேவதாசனையும்,விட்டு விடலாம். இவர்கள் நேரடியாக ஒடுக்குமுறையாளர்களது சம்பளப் பட்டியலில் இருந்துகொண்டு நம்மையும்,நமது மக்களையும் முட்டாளாக்குபவர்கள்!
 
 
ஆனால்,இத்தகைய குள்ள நரிக் கூட்டமானது புலம்பெயர்ந்து வாழும் தேசத்தில் குருதியாறைத் திறக்குமொரு அரசியலைச் சந்திப்புக்கள்,இலக்கியவுரையாடல்களெனச் செய்யும்போது இவர்களது வீட்டிலும்,மண்டபங்களிலும் தவழ்ந்து குடித்துக் கொட்டமடிக்கும் இளைய தலைமுறைப்"படைப்பாளிகள்"சிந்தனைச் சிற்பிகளுக்கு என்ன வகைமாதிரியான கணிப்பீடுருவாகிறது?
 
 
இவர்கள்,சிங்கள அரசுக்குச் சாமாரஞ் செய்யும் துஷ்டர்களோடும், இந்தியவரசின் உளவு நிறுவன முகவர்களோடும் கூடியுண்டு,குடித்துக் கும்மாளமிடும்போது இவர்களது"மக்கள்"நலக் கருத்தாடல்-அரசியலது உண்மை வடிவமென்ன? ; இந்த 46 ஆவது இயக்கியச் சந்திப்புவரை இவர்கள் செய்த அரசியலது அறுவடை என்ன? ;வடக்கையும் ;கிழக்கையும் அரசியல் ரீதியாகவும் ;சட்டரீதியாவும் பிளந்து தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதவர்களாக்கியதைத் தவிர இவர்கள் செய்த மக்கள் நலம் என்ன? ;மகிந்தா இலங்கையில் சனநாயத்தை மீளக் கொணர்ந்தார் ;அமைதியைக் கொணர்ந்தார் -அவருக்கு நன்றி என்பதன் அரசியல் என்ன?
 
 
தொடர்ந்தும், தொடர்ந்துமிந்தத் தமிழ் மக்கள் விரோதிகளால் இலங்கைச் சிறுபான்மையின மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
 
 
ஒரு புறம் புலி மாபியாக்கள் முள்ளிவாய்க்காலுக்குப் பின்பும் "தேசியம்-தேசியம்"என்று சொல்லிச் சொத்துச் சேர்ப்பதைத் சமீபத்தில் சாத்திரி அவர்கள் அம்பலப்படுத்தியது[ http://sathirir.blogspot.de/2012/12/blog-post.html ]போல் இவர்களும் மக்களுக்கு விரோதமாகவே செயற்படுகின்றனரென்று எவன் உண்மையாகப் பேசுவான்?- இவர்களோடு கூடிக் கூத்தடிக்கும் முன்னாள் புலி விசுவாசத் தம்பிகள் இதற்குத் தயாரா?
 
 
நீங்கள், மக்களை அண்மித்து இயங்கினால் அதை நோக்கிச் செயற்படுங்கள்!
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

Sonntag, Februar 28, 2016

"பற நாயே", விரிந்துரைக்கும் அரசியல்.


 
 இதுவொரு வடூ ; அரசியல் வடு:மூன்று இலட்சம் மக்களது அழிவுக்குக் காரணமான வடூ ! ; பல்லாயிரம் போராளிகளது அழிவுக்குக் காரணமான இந்தியாவின் இந்தச் சதி தற்போது , தமிழ்பேசும் மக்களது உலகு தழுவிய அவர்களது உறவுத் தொடர்ச்சியை -நட்பை ;தோழமையை அழித்து வருகிறது.
 
 
சிங்களப் பேரினவாதவொடுக்குமுறைக்கெதிரான தமிழ்த் தேசியவினத்தின் விடுதலைப் போராட்டத்தைப் பிளந்தொடுக்குவதிற் சிங்களப் பேரினவாதத்துக்குத் துணையாக நின்றது இந்திய அரசு.இந்தியாவானது தனக்குள் இலங்கையைக் கட்டிப்போடுவதில் மட்டுமேதாம் தமிழ்த் தேசியவிடுதலையைப் பயன்படுத்திக்கொண்டது.
 

இந்தத் தெரிவில் தமிழ் பேசும் ஈழ மக்களைப் பல்வேறு பரிணாமத்துள் பிளந்தொடுக்குவதில் இந்தியா வெற்றியீட்டியது.பிரதேசரீதியாகவும் ; சாதி -மத ரீதியாகவும் ;யாழ்ப்பாண மேலாதிக்கம் என்ற கருத்தியல் ரீதியாகவும் தமிழ்பேசும் மக்களைத் திட்டமிட்டுப் பிளந்தது.இதுள் ,தலித்துவ வாதமும் அதன் அரசியல் நீட்சியும் திட்டமிடப்பட்ட இந்தியாவினது அரசியலாகும்.இந்த அரசியலானது தமிழ் பேசும் மக்களுக்குள் மீளவும் ,சாதிய வேரையும் அதன் தொடர்ச்சியையும் கூராக்கியது.முள்ளிவாய்க்கால்வரை இந்த அரசியலானது தமிழ்தேசிய விடுதலைக்கெதிரான அனைத்து நடவடிக்கையிலும் இயங்கியபடி, தற்போது "யாழ்பாண மேலாதிக்கம் "என்று உயிர் வாழ்கிறது - தலித்துவக் குழுக்கள்.
 
இத்தகைய பிளவுவாத இந்திய வியூகத்துக்குப் பின்னான ஈழ மக்களது மனங்களில் பிரதேசவாதம் ;சாதியவெறி குரூரமாகக் கனன்றபடி(நெருப்பு :கனல்தல் போன்று) ஒருவரையொருவர் வஞ்சந் தீர்க்கும் நிலைக்குத் தள்ளியுள்ளதன் பலனை நாம் இன்றுணருகிறோம்.
 

தமிழ் மக்களது விடுதலையைத் தோற்க்கடிப்பதற்குத் தலித்துவக் குழுக்கள் ,இலங்கை அரசுக்குச் சனநாயக வேடங்கட்டிக் கூத்தாடின.இதுள் ,புலம் பெயர்ந்த தலித்துவ மேம்பாட்டு முன்னணி மிக நேர்த்தியாக இந்திய -இலங்கை அரசுகளாற் திட்டமிட்டு - வழிகாட்டலுடன் இயக்கப்பட்டது.
 

இவர்கள் (தலித்துவக் குழுக்கள்)தொடர்ந்து தமிழ் மக்களது விடுதலைக்குக் குறுக்கே நின்றார்கள் -நிற்கின்றார்கள்!
 

இங்கு, தோல்விகண்டது தமிழ்த் தேசிய விடுதலை மட்டுமல்ல ; மக்களது ஐக்கியமும் கூடவே, நொருக்கப்பட்டது ; சிங்களப் பேரினவாதத்துக்கெதிரான எதிர்ப்பு அரசியலும் ,அதன்வழியான அரசியற்போராட்டமும் தோற்டிக்கப்பட்டது.
 

இதுவொரு வடூ ; அரசியல் வடு:மூன்று இலட்சம் மக்களது அழிவுக்குக் காரணமான வடூ ! ; பல்லாயிரம் போராளிகளது அழிவுக்குக் காரணமான இந்தியாவின் இந்தச் சதி தற்போது , தமிழ்பேசும் மக்களது உலகு தழுவிய அவர்களது உறவுத் தொடர்ச்சியை -நட்பை ;தோழமையை அழித்து வருகிறது.
 
இதன் கூறுதாம் , இன்று இராமசாமி துரைரெத்தினம் அவர்களது வாயால் " ஈழத்தமிழர்களை அழித்த தமிழ்நாட்டு ரவிக்குமார்போன்ற நாய்களே பொத்தடா வாயை " என்றும் , "என்னைப்பற்றிக் கதைக்க என்னடா அருகதை இருக்கு உனக்கு ; பற நாயே! " என்றும் இந்தியா எதிர்பார்த்த அரசியல் நமக்குள் பிளவுகளை வலுப்படுத்திக்கொண்டு நம்மை நடுத்தெருவில் அரசியலற்ற அநாதைகளாக உலாவவிட்டு வேடிக்கை பார்க்கிறது.
 

நாம் பிளவுண்டுபோனோம்.பிளவுக்குக் காரணமானவர்கள் மீளவொரு ஆட்டத்துக்குத் தயாராகும்போது நமது ஆவேசமெல்லாம் மீளவும் ,"பற நாயே "என்று கனன்று வருவது "ஏவியவர்களை விட்டு அம்புகளை நோவது" மாதிரித்தாம்.
 

இரவிக்குமார் தலித்துவக் குழுக்களது அரசியலுக்கு வலுச் சேர்த்தவெரென்பது உண்மை.அவரை, இந்திய வியூக அரசியலுக்கு வெளியில் வைக்கும் அரசியல்கூட இந்தப் " பற நாயே"க்குப் பிறகு வலுக்கும் .அதுகூடவொரு அரசியல்தாம்.நாம் இந்தியப் பிளவுவாத அரசியல் வியூகத்தாற் தொடர்ந்து பழிவாங்கப்படுவது திட்டமிடப்பட்ட அரசியல் நெருக்கடியாகும்.
 

ப.வி.ஶ்ரீரங்கன்
28.02.2016

Sonntag, Februar 21, 2016

தமிழக -இஸ்லாமிய தவ்ஹீத்ஜமாஅத்-தின் கொல்லத் தூண்டும் உரை!

நமது காலத்து இஸ்லாமிய அடிப்படைவாதம் :


 தமிழக -இஸ்லாமிய தவ்ஹீத்ஜமாஅத்-தின்  கொல்லத் தூண்டும் உரை! ;பிரான்ஸ் வாழ்  தமிழச்சிக்கு விடப்பட்ட மரண அச்சுறத்தல் -சிறு குறிப்பு.

"உத்தம நபிகளது உன்னத  வாழ்கையில் கல்லெறிந்தாயானால் உனக்கு(தமிழச்சிக்கு ) எதிராகக் குண்டுகள் பாயும் " -தவ்ஹீத்ஜமாஅத்

நாம் எந்தவுலகத்துள் வாழ்கிறோம் -காட்டுமிராண்டிகளது சவுதி அரேபியாவிலா அன்றித் திறந்த சனநாயகபூர்வமான இந்தியாவிலா?




ஷரியாவின்-அல்லாவின் பெயரால் கழுத்தறுத்துக் கொல்லப்படும் மனிதர்களின் இருப்பை அழிக்கும் சாத்தான்களுக்கு அல்லா ஒரு கேடா?;நபிகள் ஒரு புனிதப் பண்டமா??;கற்காலக் கபோதிகளுக்கு -அநியாய வாதிகளுக்கு அல்லா -நபி என்பதெல்லாம் மனிதக் கொலைகளுக்கும் -பெண்களை ஒடுக்குவதற்குமான கவசமே தவிரக் கடவுள் நம்பிக்கை அல்ல! !!! இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்வதற்கு இலாயக்கற்ற தமிழ் முசீலீம் அரேபியக் கைக்கூலிகள் -கபோதிகள்-இஸ்லாமியப் பயங்கரவாதிகள்- சல்மான் ருஷ்ட்டியின் மொழியில் சாத்தானின் தூதுவர்கள் இந்த வகை முஸ்லீம்கள்!




உலகம் இறை மூலத்தைக் குறித்து Higgs-Boson ஆய்வுக்குள் நிறுவப்பட்டவுண்மைக்குள்[ Higgs particle ] வந்துவிட்ட 21 ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்கிறோம்.இதுள் மதங்கள் தம்மைப் புதிப்பித்தபடி நிறுவனப்பட்ட அத்திவாரத்தைக் காக்க முனையும் போது பற்பல கருத்துக்களை முன் வைக்கின்றனர்.பிரான்சு (France)வாழ் தமிழ்ப்பெண்ணொருவர், தமிழ்நாட்டு முசுலீம் அடிப்படைவாத அமைப்புகளினோடு விவாதத்திலீடுபட்டபோது அந்த முசுலீம் அடிப்படை வாத அமைப்புகள் ,அத் தமிழ்ப் பெண்ணைச் சுட்டுக்கொல்லப் போவதாக எச்சரிக்கின்றனர்.( வீடியோ இணைப்பு இதோ : https://www.facebook.com/MEDIATNTJ/videos/905042082928204/?permPage=1 ) இன்று அந்தப் பெண் மறைந்துவிட்டதாகச் செய்தி வருகிறது.இது கொலையா -தற்கொலையாவென ஆராட்சி நடக்கும் நிலையில் சனநாயக விழுமியத்தின் நிலை!



"உத்தம நபிகளது உன்னத வாழ்கையில் கல்லெறிந்தாயானால் உனக்கு எதிராகக் குண்டுகள் பாயும் " -தவ்ஹீத்ஜமாஅத்




எனத் அத்தத் தமிழ்ப் பெண்ணை எச்சரிக்கும் பயங்கரவாதியான முசுலீம் அடிப்படைவாதி தவ்ஹீத்ஜமாஅத் -தின் விவாதத்தின் அணுகுமுறை மிகக் காட்டுமிராண்டித்தனமானது.



திறந்த சமுதாயத்தின் இருப்புக்கே சவால்விடும் அவ்கான் தலிபான்களது எச்சரிக்கை போன்றது இஃது!;அது ISIS முசுலீம் -இசுலாமியப் பயங்கரவாதிகளது குரலுக்குச் சொந்தமானது!பயங்கரவாதி தவ்ஹீத்ஜமாஅத் தைப் போன்ற இசுலாமியப் பயங்கரவாதிகளால் ,தமிழகம் நிறையுமானால் நமது திறந்த சமுதாயத்தின் முன்னணிக் குரலான " யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்ற தாரக மந்திரம் பொய்துப் போவது மட்டுமல்ல நாம் கற்கால வாழ்க்கையை அநுபவிக்க வேண்டிய இசுலாமியப் பயங்கரவாதச் ஷரியாச் சட்டக் கொடூரத்துக்குள் மாட்டுப்படுவோம்.



இஸ்லாமியச் சட்டச் ஷரியாவின் மனிதத்தன்மையற்ற கொடிய வரையறுப்புக்கமைய அவள் (பிரஞ்சுத் தமிழ் பெண்)படுகொலை செய்யப் பட்டிருக்கலாம் (அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது சந்தேகமாச்சு- எந்தவுலகத்துள் வாழ்கிறோம்?).



இந்தவுலகத்தில் தினமும் ஆயிரக் கணக்கான மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்.அரசியலின் பெயராலும்,மதத்தின் பெயராலும்-சமூக விரோதத்தின் பெயராலும் பலர் கொல்லப்படுகின்றனர். இதையெழுதும்போது கூட இவ்வுலகத்தின் ஒரு மூலையில் அநியாயமாகவொரு மனிதர் எதன் பெயராலோ கொல்லப்பட்டிருப்பார்.




யுத்தம்-தூக்கு-மருந்தூசியடித்துக் கொலையெனப் பலரூபத்தில் இந்தச்சாவு மனிதருக்கு நேரிடுகிறது.எனவே,மதங்கள்,அரசியல் அதன் ஓழுங்குவெனும் அனைத்து மனிதவிரோத முறைமைகளது பெயராலும் மனிதர்கள் தண்டிக்கப்படுகின்றனர்-கொலை செய்யப்படுகின்றனர். அஃது, எந்தவொரு அரசுக்கும் விதிவிலக்கல்ல!ஆனால், இஸ்லாத்தின்-ஷரியாச் சட்டத்தின் பெயரால் நடாத்தப்படும் அட்டூழியம் மிகப்பெரும் அவஸ்த்தை இவ்வுலகுக்கு-திறந்த சமுதாயத்துக்கு-வரலாற்றுக்கு!



 
தவ்ஹீத்ஜமாஅத்.தின் காட்டுமிராண்டித்தனமான விளக்கத்துக்கமைய[ dar asch-schahada ] விமர்சிப்பதும், நிலவும் ஷரியச் சட்டத்தை நிலைப்படுத்துவதும் தமிழர்கட்குப் புதியதில்லை!இங்கே, ஐரோ இஸ்லாமென [ Euro-Islam ]விரித்துக் கருத்தாடுபவர்களையொட்டியவுரையாடலே [Dr.Bassam Tibi ,Prof.Dr. Tariq Ramadan ]இது.




இந்தவுலகம் ரொம்பக் கொடுமையானது.இஃது, பெரும்பாலும் மெலிந்தவர்களை அனைத்து வடிவிலுஞ் சுரண்டியே கொழுத்துப் போயிருக்கிறது.இந்த மெலிந்தவர்கள் உலகில் பெரும்பகுதியாவிருந்தும் இந்த அதிகார மனிதக் குழுவைச் சிதைத்து தமக்கானவொரு அமைப்பை நிறுவமுடியவில்லை.



இயற்கையில் ஜடப்பொருள்கள்மீதும்,உயிர்களது உடல் வரை நிகழ்த்தப்படும் அரசியலானது பௌதிகவிருத்தலைத் தமது அதிகாரத்துக்குட்படுத்தும் முயற்சியில் இத்தகைய கொடிய"திறந்த சமுதாயத்துக்கு எதிரான"அன்றைய காட்டுமிராண்டிகளது உணர்வுக்கும்,அகவொழுங்குக்கும் அமைய அதிகார மனிதர்கள்அமைத்துக்கொண்டனர்.



எனவேதாம், கி.மு. 1770 களில் பாபிலோனியச் சமுதாயத்துள் கமுராபியின் [Hammurabi]ஆளுமைகளை (https://en.wikipedia.org/wiki/Code_of_Hammurabi )நிலை நாட்டும் தந்திரத்துள்:


"இறைவன்அரசனின் நிழல் அதுபோல் அரசனது நிழல் மனிதர்கள்"என விளக்கப்பட்டது.[ Zu den ersten Gesetzessammlungen gehörte die des König Ur-Nammu aus der Ur-III-Zeit. Die ersten babylonischen Gesetze stammten aus der Zeit des Herrschers Lipit-Ischtar (1934-1924 v. Chr.) ]


இத்தகைய ஒழுங்கை கி.மு. 6 ஆம்நூற்றாண்டில் கிரேக்க சட்டவாதி டிராக்கோன் [ Drakon der Athener‘ um 650 v. Chr. ]மிக நுணுக்கமாகப் பாவித்து( https://en.wikipedia.org/wiki/Draco_%28lawgiver%29 ), இன்றை அரேபியக் காண்டுமிராண்டித்தனத்தின் அன்றைய முளையை ஊன்றினான்.


பின் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு இஸ்லாமோ அதைத் தகவமைத்துக் கொண்டு இன்றுவரை அதை மனிதர்களது உடலில் எழுதிவரும் குறியீடுகளைக் கழுத்து-கை-கால்,மூக்கிழந்த மனிதர்களில் வாசிக்க முடியும்.இதைத்தாம் காட்டுமிராண்டிகளென்றும், நாய்கள், என்றும்,கபோதிகளென்றும் திட்டித் தீர்த்து இந்த குறியீட்டைக் காவும் ஒவ்வொரு மனிதர்மீதும் இரங்கிக்கொள்கிறேன். 



இஸ்லாமிய அடிப்படைவாதம்!




அஃது, எங்கு தோற்றம் பெற்றாலும் அதன் குணவியல்வு ஒரே பொதுக் குணவியல்போடுதாம் இயங்குகிறது.நாம் மிகக் கொடியவர்களது அராஜகத்துக்குள் சிக்குண்டுள்ளோம்.ஒருபுறம் அரசுகளது பயங்கரவாதம் மறுபுறம்,அதே அரசுகளது அடியாட்படைகளது பயங்கரவாதம்( இஸ்லாமிய அடிப்படைவாதிகளான இஸ்லாம் தேசம்,அல் கொய்தா ,தலிபான் இன்னபிற) திறந்த சமுதாயத்தின் ஜனநாயக விழுமியத்தையே அழித்துவிடுமளவுக்குப் பயங்கரவாதிகளது கையோங்கியுள்ளது!என்ன செய்யப் போகிறோம்?



கற்காலத்திற்கூட இவ்வளவு மோசமான இஸ்லாமியக் காட்டுமிரண்டித்தனப் பயங்கரவாதத்தை மனிதவினம் கண்டிருக்கமுடியாது.1500 ஆண்டுகளுக்குப் பின்னான இந்த மதம்அடிமைப்பட்ட மக்களது மீட்பு மதம் என்பதெல்லாம் அடியுண்டுபோய் வருடங்கள் 1300 கடந்துவிட்டது.இஸ்லாம் இப்போது சுன்னி - ஷியா ஆதிக்கத்தினது ஆயுதுமாச்சு.இந்த ஆயுதத்தை அணுக்குண்டுக்கு நிகராகப்படைத்த சூத்திரதாரிகள் மேற்குலகத்தவர்கள். இன்றிஃது, பல நூறு பயங்கரவாதக் குழுக்களாக உலகம் பூராகவும்திறந்த சமுதாயத்துள் ஜனநாயகவிரோதிகளாக இருக்கின்றார்கள். இது மிகக் கொடுமையானது.




பிரான்ஸ் வாழ் தமிழ்அரசியல் செயற்பாட்டாளரை அச்சுறுத்தியத் தமிழ்நாட்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் , அந்தத் தமிழ்த் தோழரைச் சுட்டுக் கொல்வதாக அச்சுறுத்துவது மட்டுமல்ல அவரது மறைவுக்குக்(தலை - மறைவுக்கு?) காரணமாக இருக்கலாமென்ற ஊகம் ஜனநாயத்தின் இன்றைய நிலைக்கேற்பட்ட சாட்சி அல்லவா?இத்தகைய அடிப்படைவாதிகள் இயங்கும் தளம் பொதுப்பரப்பாகும்.இவர்களை இயக்கும் அரசுகள் -அமைப்புகள் கோடிக்கணக்கான நிதிகளை இந்த இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்குக் கொடுத்து, இவர்களைப்பலாதாகாரத்துள் இயங்க அனுமதிக்கும் இன்றைய நிலையில் சாதாரண மக்களது இருப்பு அழிக்கப்பட்டே இஃது தொடர்கிறது! 




இவர்களைச் (இஸ்லாமிய அமைப்புகளை) சட்டரீதியாகக் கண்காணிக்க வேண்டும்.இஸ்லாமிய இனத்தின் இவ்வொரு சமூகக் கட்டுக்குள்ளும் இவர்கள் புகுந்துவிட்டனர்!இவர்களால் சாதரணமான அப்பாவி முஸ்லீங்கள் படப்போகும் பாடு பெரும்பாடாகவிருக்கும்.எனினும், சட்டதுக்குமுன் இவர்கள் கண்காணிக்கப்படாதிருக்கவேண்டுமானால் இந்தச் சாரண முஸ்லீம்கள் தம்மை, அடிப்படைவாத அமைப்புகளிலிருந்து தாமே விலத்தியாக வேண்டும்.இதுவே தாம்,இவர்கள் திறந்த சமூதாயத்துக்குள் இணைந்து வாழும்தமது தகமையை வெளிப்படுத்தும் முதல் ஜனநாயக விழுமியமாகும்.
"தவ்ஹீத்ஜமாஅத் விவாதத்தின் அணுகுமுறை மிகத் தவறு. " இத்தகைய அதி தீவிரவாத வலதுசாரிய மரபுவாதிகளை [ ultra-conservative-fundamentalist ] சனநாயகயச் சக்திகள் கண்டிப்பது மட்டும்போதாது.இவர்கள் பொதுச் சுதந்திரத்துக்கும் ;திறந்த சமுதாயத்துக்கும் எதிரான சக்திகள்.இவர்களைச் சட்டம் கவனிக்கவேண்டும்.இந்தியா எவ்வளவுதாம் விமர்சிக்கப்பட்டாலும் ஒரு சனநாயகச் சட்டவாத அரசு.அதுவே இத்தகைய அடிப்படைவாதிகளைக் கவனித்தாகவேண்டும்.



"குண்டுகள் பாயும் என்பது" பயங்கரவாதமாகும்.



இதற்கும் ISIS பயங்கரவாதிகளு க்கும் தொடர்புகள் இருக்கலாம்.தவ்ஹீத்ஜமாஅத் அத்தகைய பயங்கரவாதிகளது அடியாளாகக் கூட இருக்க வாய்புண்டு.இல்லையேல் "குண்டுகள் பாயும்" என்று திறந்த சமுதாயத்துக்கு எச்சரிக்கைவிட முடியாது!இது ஆபத்தான சூழல்! இசுலாமிய அமைப்புகளை -முசிலீம் சமூக அசைவியகத்தைச் சட்டரீதியாகக் கண்காணிக்க வேண்டும்!இசுலாமிய அடிப்படைவாதமானது ஏகாதிபத்தியங்களது தயவிலேதாம் உயிர்வாழ்கிறது.அது இந்தியாவை அண்மித்து வருகிறதென்பதற்கு இந்த தவ்ஹீத்ஜமாஅத் ஒரு உதாரணமாகும்.இவர்களேதாம் திறந்த சமுதாயத்தினது எதிரிகள் [The Open Society And Its Enemies] .இந்தியாவின் தடா ச் சட்டம் (India’s Black Laws – UAPA, TADA & POTA ) இத்தகைய பயங்கரவாதிகளதற்றாம் நியாயமுறுகிறது!


ப.வி.ஶ்ரீரங்கன்
21.02.2016

Samstag, Februar 20, 2016

குஷ்பூ'வுக்குப் பின்னான கவர்ச்சியுள் நாயன்தாரா!...


புவிப்பரப்பெங்குந் தினமும்,பொழுதும் அகதிகள் பெருக்கமும், பட்டுணியும், மரணவோலமும்,நோயும் நொடியும் மனித வரலாற்றில் ஒரு செயலூக்கமிக்க நிகழ்வாக மாறி வருகிறது.இன்றைய  சிரியா மக்களது இடர்ப் பெயர்வு-இது ஒருபுறத்தே இங்ஙனம் நிகழும்போது,மறுபுறமோ இந்த நிகழ்வால் அரசியல் இலாபமடையும் ஐரோப்பிய ஓட்டுக்கட்சிகள், வலதுசாரிய-இனவாதக் கட்சிகள் யாவும் இந்த அகதிகளை மனித சமநிலையிலிருந்து துண்டித்து விடுவதிலும்,துரத்தியடிப்பதிலும் மும்மரமாகச் செயற்படும்போது, அதைவைத்து மக்களின் மனங்களைத் தம் பக்கம் இழுத்துக் கட்சிகளுக்கு ஆள்பிடிக்கும் வேலையில் இந்த ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் ஊடகங்கள் செற்படுகின்றன.இதனால் சாதரண மக்களிடமிருந்து நாளாந்தம் அந்நியப்படும் நாம் சமூகக் கூட்டு மனப்பான்மையை இழந்தும்,இந்தத் தேசத்தின் பூர்வீகக் குடிகளோடு கலந்தும், இணைந்தும் வாழமுடிவதில்லை.ஆனால் இத் தேசங்கள் அதை முன் வைத்தே [sozialen Integration -Emile Durkheim ]இன்றைய அரேபியப் புலம் பெயர் மக்களை வேட்டையாடுகின்றனரென்பதை[ mechanische Solidarität  ] நம்மில் பலா அறிவர்!


இது மனிதப் பண்பாட்டிற்கு மிகவும் முரணானது.வளர்ச்சியடைந்த நாடுகளில் மக்கள் தமது வலுவுக்குள் உட்பட்ட செயலூக்கத்தை கண்டிப்பாக இந்த ஐரோப்பிய உற்பத்திச் சக்திகளுக்கு வழங்கியாகவேண்டும்.இத்தகைய செயலூக்கத்தை மிகுதியாக வழங்கிவரும் அகதிகளின் அதீத உழைப்பானது மூன்றாந்தரமாக மறைக்கப்பட்டு,அவர்கள் பூர்வீகக் குடிகளின் வரிப்பணத்தை தின்று ஏப்பம் விடுபவர்களாக இந்த உடகங்கள், அரசியல் வாதிகள் கருத்துக்களைத் தமது மக்களிடம் பரப்புகிறார்கள்.இங்கே சமூகக் கூட்டுணர்வின்றிக்கிடக்கும் [ Kultureller Identität ]ஒரு பகுதி மக்களை தம்மால் தாங்கிக் கொள்ளப்படுவதாகச் சொல்லுப்படும் பொய்,புரட்டை இந்தப் பூர்வீகக் குடிகள் நம்பி விடுவதாலும் சமுதாயத்தில் ஒரு கொதி நிலையைத் தூண்டிவிடும் அரசியல் அமுக்கத்தை ஐரோப்பிய ஆளும் வர்க்கம் தோற்றுவித்துத் தமது பொருளாதார முரண்பாட்டைத் திசை திருப்பித் தம் ஆட்சியை நீடிக்கிறார்கள்.வட  ஆபிரிக்க -அரேபிய  மக்களது இடம் பெயர்வு இத்தகைய வியூகத்தை மேலுந் தீவிரப்படுத்தியுள்ளது!




இத்தகைய நீடிப்பில் ஆட்சியாளர்கள் தவிர்க்கமுடியாது அகதிகளுக்கான அனைத்து எதிர் நடவடிக்கைகளையும் ஒரு அட்டவணைக்குள் திணிப்பதுபோன்று(...Durch Kategorisierugen...z.B."Kriminalität von Nordafrikaner ,die Auslaender","die Schein Asylanten"...usw.)"வட ஆபிரிக்கக் கிரிமினல்கள் " ; " வெளிநாட்டார்கள் " ; " போலி  அகதிகள்"என்று அட்டவணையிடுதல் கருத்தியலாக வளர்தெடுக்கப்பட்டு,மக்கள் சமூகத்தில் அதுவே அந்நிய எதிர்ப்புச் சமூக உளவியலாக ஊன்றப்படுகிறது.இது மனிதாபிமானத்தையும்,ஜனநாயக அடிப்படைப் பெறுமானத்தையும் மிகவும் பலவீனப்படுத்தி,மக்களிடம் ஒருவித சாத்வீக இனவாதமாகவும்;("passiver"Rassismus)வளர்த்து விடுகிறார்கள்.இத்தகைய சாத்வீக இனவாதமானது அடிப்படையில் செயலூக்க இனவாதிகளுக்கு("aktiver"Rassismus) பெரும் உந்துதலையும்,பொருட்பலத்தையும் மற்றும் தார்மீக வலுவை,ஆட்படையையும் கூட்டிவருகிறது.ஏலவே காலனித்துவப் பார்வையுடைய ஐரோப்பிய மனோபாவமானது மிக விரைவாக இனவாதத் தீயில் விழுந்தவிடுகிறது.இங்கு யேர்மனியில் இஃது Alternative für Deutschland: AfD என்றும் ;பிரான்சில் இது Front National என்றும் தீவிரமாக வளர்ந்து ஆட்சியைக் கைப்பற்றும் பாசிச  அபாயமாக நீண்டு கிடக்கிறது!

இதன்பலாபலனே ஆயிரம் தடவைகள் அகதிகளுக்கான சட்ட மாற்றங்களையும்,புதிய சட்ட வகுப்புக்களையும் அரசியல் ரீதியாகச் செய்யும் நிலைக்கு இந்த மக்களின் ஒப்புதல் மிக இலகுவாகக் கிடைக்கிறது.இன்றிருக்கும் ஐரோப்பியச் சந்தைப் பொருளாதாரத்தின் நிலையானது மிகவும் கொடிய மனித விரோதச் சட்டங்களை இயற்றுவதிலும்,தமது மூலதனத்தைப் பெருக்குவதற்கும்-அதைக்காப்பதற்குமாக வெறிகொண்டலைகிறது.இதற்கு முரண்பாடாக ஐரோப்பியத் தொழிலாளர்களினதும்,அகதிகளினதும் ஒன்றிணைவு இவர்களுக்குக் குறுக்கே கோடுகிழிக்க முனைவதால் இந்தச் சாத்வீக இனவாதம் மேன் மேலும் வளர்தெடுக்கப்படுகிறது.இது தொழிலாளர்களின் முரண்பாட்டையொடுக்கும் ஐரோப்பாவின் புதிய குடிசார் சட்டவுருவாக்கத்துக்கு முதற்கல்லை எடுத்துப்போட்டபோது மக்களால் எந்த எதிர்ப்பும் வராது காத்திருக்கிறது.இந்தப் "பொது ஐரோப்பியச் சட்டம்;"(Europaeischen Verfassung und Grundgesetz)ஐரோப்பிய மக்களின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் மட்டுப்படுத்தி அவர்களை வெறும் நுகர்வோர் ஆக்கும் சட்டம் என்பதையுணர்ந்த ஓட்டுக்கட்சிகள்,அதை மறைப்பதற்காக இந்தச் சாத்வீக இனவாதத்தை பரப்பி வந்தார்கள்-வருகிறார்கள்.இது சியாவினது குடிகளது இடப்பெயர்வோடு மேலும் உச்சம் பெறுகிறது. Mediterranean Sea யில் ஐரோப்பியக் கடற்படை அகதிகனைச் சாட்டிப் புவிகோள நலனை அறுவடை செய்கிறது இன்று!இதன் தொடர்ச்சியுள் ,சிரியாவின் அழிவுக்கு வழிவகுக்கும் அமெரிக்க -ஐரோப்பியப் படை நகர்வு  அணுயுத்தாற் மக்களைக் கொன்றுதாம் ஒதுங்கும் -ஓயும்!;அது இருசியாவின் மண்ணில் மீளவும் பலரைக் கொல்லும் அரசியல்.

 கீரோசீமா -நாகசாகி[Hiroshima and Nagasaki  ]:

அணு குண்டைத் தயாரிப்பதற்கான யுரேனியம் -Uran-235 (யுரேனியம் -235, வெடிப்புச்சக்தி பிளப்பு மூலமானது!(Explosionsenergie aus der spaltug von Uran -235 oder Plutonium-239)இதனாலான குண்டு கீரோசீமாவின் மீது கொட்டப்பட்டுப் பரிசோதித்த அமெரிக்கா( On August 6 the U.S. dropped a uranium gun-type atomic bomb (Little Boy) on Hiroshima. American President Harry S. Truman called for Japan's surrender 16 hours later.  ) மற்றும் விஞ்ஞானிகளான கிரிமனல்கள் ஓப்பன்கைமர்,சினைடர்(goldene Liste) பயங்கரவாதிகளால் உலக அணுவல்லரசானது.) புளுட்:டோனியம் -Plutonium- 239(இந்த மூலகத்தால் வெடிக்க வைக்கப்பட்ட குண்டு நாகசாகிமீது விழுந்து[ The atomic explosion over Nagasaki at 11:02 a.m., August 9, 1945  ] வெடித்தது.இதையும் அமெரிக்கா பரீசீலித்துக் கொண்டது.கீராசீமாவில் யுரேனியம் -235 உம் ,நாகசாகியில் புளுட்டோனியம்-239 உம் குண்டுகளாக வெடிக்க வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.)போன்றதைப் பெற்று அணுக்குண்டைத் தயாரித்துவிட ஈரான் முயல்கிறதாம் -கதைவிடுகிறது மேற்குலகம்!


இதைத் தடுத்துவிட "சனநாயக் விழுமியம் " நிறைந்த அமெரிக்காவும் -ஐரோப்பியக் கூட்டமைப்பும் முயல்கின்றதாம். (1939 இல் கோதாரி பிடித்த நீல் போரும்(Niels Henrik David Bohr  ),ஜோன் ஆர்ச்சிபெல் வீலரும் (John Archibald Wheeler )அணுப்பிளப்புத் தியரியை [ The Rutherford–Bohr model of the hydrogen atom (Z = 1) or a hydrogen-like ion (Z > 1), where the negatively charged electron confined to an atomic shell encircles a small, positively charged atomic nucleus and where an electron jump between orbits is accompanied by an emitted or absorbed amount of electromagnetic energy (hν). ] விளங்க முற்படும்போது, ஓப்பன்கைமரும் அவனது கூட்டாளிகளும் அணுக்குண்டைத் தயாரித்துக் கொடுக்கும் வேலையில் அமெரிக்க அரசோடு முனைந்தான்.




கீரோசீமாவிலும்,நாகசாகியிலும் பல்லாயிரம் மக்களைக் கொன்று பரிசீலிக்கப்பட்ட அணுக் குண்டுகளால் வேதனையடைந்த திரு.வீலர் சொல்கிறார்:"நான் அதை மீளத் திரும்பிப் பார்ப்பேனானால்-அதாவது நானும் போரும் இணைந்து உருவாக்கிய அணுப்பிளப்புத் தரவுகளை-எனக்குள் நான் கவலை கொள்கிறேன்."ஓப்பன் கைமர் கூறுகிறான்:"யுத்தம் செய்யும் உலகுக்கு அணுக்குண்டு புதிய ஆயுதமாக ஆயுதக்கிடங்குக்குள் இருக்கும்,அல்லது ஆயுதக்கிடங்கிலிருந்து நாடுகள் யுத்தத்துக்குத் தயாராவார்கள்,அப்போது லோஸ் அலாமோஸ் எனும் பெயரும் கீரோசீமாவின் சபிப்பும் மனித கணங்களுக்குள் வரும்."-லோஸ் அலோமாஸ் விஞ்ஞானிகள் சந்திப்பின்(16.10.1945) உரை.)

பொருளாதாரத்தடை? :


கடந்த காலத்தில் சதாமின் ஈராக்குக்கு வழங்கப்பட்ட பொருளாதாரத் தண்டனை ஐந்து இலட்சம் பாலகர்களைப் பாடையில் அனுப்பியது.வைத்தியர்களின் விழிகள்முன்னே நோய்க்கிருமி தாக்கிய பாலகர்கள் சிறிது சிறிதாகச் செத்து மடிந்தார்கள்.இக் குழந்தைகளுக்கு "அன்ரிபாற்றிக்"(எதிர்ப்பு நுண்கிருமி : Antibiotics or antibacterials )கொடுப்பதற்கு ஒரு துளியும் ஈராக்கில் இருக்கவில்லை.

இப்போதும் , இதை நினைக்கத் தலை சுற்றுகிறது.

தற்போது ;இருசியாவுக்குப் பொருளாதாரத்தடை (The sanctions )!

இன்றைய ஆளும் வர்க்கங்கள் தத்தமது முரண்பாடுகளையும் யுத்தச் சம நிலைகளையும் அணுவால் சம நிலைப்படுத்த முனைகின்றன.உலகிலுள்ள மனிதர்கள்தம் நலன்களை மையப்படுத்திய எந்த நோக்கு நிலையும் நிதி மூலதனத்துக்கும் அதன் இலாபத்துக்கும் கிடையாது.அங்கே யுத்தங்களே மனிதர்களைக் கொல்வதற்கான கருவியாகப் பயன்படுகின்றன.இவை முற்றுமுழுதாகப் முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறையின் அடிப்படையான தேவையாக இருக்கிறது.

எதற்காக இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டார்கள்?

இவ்வளவு பெருந்தொகையாக மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக மாறியது எதற்காக?

எல்லாம் கனிவளத்தின் "பாதுகாப்பு-எடுத்தல்-சொந்தமாக்கிக்கொள்ளல்-தடங்கலற்ற கடற்பாதை."என்று மூலப்பொருள்களுக்கான தொடர் வினைகளே இவ்யுத்தத்துக்குக் காரணமாக இருக்கிறது.இங்கே சிரியாவுக்குள் வந்திறங்கவிருக்கும் தத்தமது இராணுவத்துக்கான செலவுகளுக்கே அகதிகளை வருத்தி உழைக்க வைக்கும் அரசியலை எவரும் புரியவே இல்லை!ஆனால் பெயரென்னவோ மீள்கட்டுமானத்துக்கான அகதிகள் பயிற்றுவிப்பு.

ஆதிக்கவாதிகள் தமது நலன்களை மெல்ல இத்தகைய வார்த்தைகளுக்கூடாகவே வெளிப்படுத்தி விடுகிறார்கள்.
மக்கள் தொடர்ந்து யுத்தங்களால் தமது வாழ்வைப் பறிகொடுப்பதும்,அதை மீளப் பெறுவதற்கும்,உயிர்வாழும் உத்தரவாதத்துக்கும் சதா அகதி முகாங்களில் தவமிருப்பதும் இன்றைக்கு அன்றாட,இயல்பு நிலையாக மாற்றப்பட்டுள்ளது.

தொடரரும் சிரிய யுத்தம் மற்றும் இருசியாவுக்கெதிரான பொருளாதாரத் தாக்குதல்-யுத்தம் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொள்ளப் போகிறது.கூடவே பல இலட்சம் மக்கள் அகதியாகி உள்நாட்டிலும் வெளி நாடுகளிலுமாக அவதிப்படப் போகிறார்கள்; ஐரோப்பாவில் 60 வீதமான மக்கள் அழிவின் விளிம்பில் நிற்கிறார்கள்.இதன் சூத்திரதாரி அமெரிக்கா!

அண்மைய எண்ணைக்கான யுத்தமும்,போர்த்துக்கீசிய கொலனித்துவச் சுரண்டல் போரும் அங்கோலா((Angola)என்ற எண்ணை மற்றும் வைரம் நிறைந்த நாட்டைச் சுடுகாடாக்கியுள்ளது.1992-1994 இருவருடமாக நடந்த யுத்தில்மட்டும் மூன்று இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.சிறார் இராணுவம், மிதிவெடிப்பலி, அகதிகள்,அவநம்பிக்கை,மற்றும் எல்லா வகைச் சமூக விரோதங்களும் மலிந்த இந்த அங்கோலாவில் ஒருவர்கூட யுத்தத்தைத் தவிர வேறெதையும் வித்தியாசமாக அநுபவிக்கவில்லை.இது போர்த்துக்கீசிய கொலித்துவத்தின் முடிவுவரைத் தொடர்ந்தது.இப்போதும் அந்த நாட்டுக்கு இதே கதைதாம்.

இங்கு நடந்த யுத்தங்களெல்லாம்(1961 இல் காலனித்துவ வாதிகளுக்கு எதிரான யுத்தமும் சேர்க்கப்பட வேண்டும்.ஏனெனில் பல் வகை காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்கள் தோன்றி அவை தமக்குள் அடிபட்டுக் கொண்டதும் வெளி நாடுகளுக்காகவே- அங்கோலா மக்களுக்கான விடுதலைக்கல்ல.) எண்ணைக் கச்சாப் பொருளான மசகு எண்ணைக்கும்,வைரத்துக்குமானதாகும்.

எவரொருவர் யுத்தத்தின் கொடுமையை உணரவேண்டுமானால் அங்கோலாவைப் பார்க்கவேண்டும்!

வீதியல் செல்லும்போது ஒவ்வொரு நான்காவது மனிதரும் ஒற்றைக்காலுடன் அல்லது கையுடன் நடப்பதைப் பார்க்கலாம்.குண்டு துளைக்காத சுவர்களோ கிடையாது.இப்படி முழுமொத்தத் தேசமும் மதிவெடிகளால் விதைக்கப்பட்டு,மனித நடமாட்டத்துக்கு உதவாத மண்ணாக அங்கோலா மாற்றப்பட்டுவிட்டுது.அதையேதாம் 21 ஆம் நூற்றாண்டில் ;ஈராக் -இலிபியா மற்றும் அவ்கானித்தான் -சிரியா என நாம் காண்கிறோம்.

இது யாரால்?

இதே ஐரோப்பிய தொழிற்சாலைகளால் ;பெரு வங்கிகளால் ;நிதி நிறுவனங்களால் ;எண்ணைக் கொம்பனிகளால் நடாத்தப்பட்ட சிறுயுத்தங்கள் தற்போது உலக மகா யுத்தத்துன்குள் நுழைகிறது - பல முறை!





90களில் அமெரிக்க உளவுப்படையானது அங்கோலாவின் எதிர் புரட்சிப்படைகளுக்குப் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை வழங்கிப் போலிச் சோஷலிச இராணுவத்துக்கெதிராகப் போராட வைத்தது.MPLA-அரசு எதிர்த்துப்போராடி அனைத்தையும் அடக்க முடியவில்லை.இறுதியாக ஐ.நா.வின் கூற்றுப்படி மூன்றாவது யுத்தத்துக்குக் காரணமானது யுனிற்ரா.எல்லாமாக அங்கோலா தனது மக்களை அகதியாகக் கண்டது.

இதுவரை இருபது இலட்சம் அகதிகள் உலகம் பூராகவும் இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.நாடு மதி வெடிகளால் நிரம்பி வழிகிறது.சிறார்களின் கைகளில் பழைய குண்டுகள் விளையாட்டுப் பொருளாகக்கிடக்கிறது.தனிமையில் சற்று நடந்தால் மிதிவெடி வெடித்து மக்களைப் பலிகொள்கிறது.உள்நாட்டில் பல இலட்சம் மக்கள் அகதியாகிப் பட்டுணியுடன் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.இதே கதை மீள 21 ஆம் நூற்றாண்டில் ஈராக்கில் ;இலிபியாவில்  மற்றும் அவ்கானில் -சிரியாவில் தொடர்கதையாகிறது.

இவை ,அனைத்துக்கும் அந்நிய ஆர்வங்களின் யுத்தமே காரணமாகிறது.

கொங்கோ:

அமெரிக்க,ஐரோப்பிய மற்றும் சீனாவின் வேட்டைக்காடாகிய கொங்கோ என்ற கனிவளமிக்க இந்த ஆபிரிக்கத் தேசத்தில் இதுவரை 35 இலட்சம்(இலங்கைத் தமிழர்களின் மொத்தச் சனத்தொகை.)மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்!சிறு இனக்குழுக்களுக்குள் பற்பல போராட்டங்கள்.ஒவ்வொரு பகுதிகளையும் ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரான்ஸ்,ஜேர்மனி,அமெரிக்கா,என்று கூறுபோட்டு ஆளுகின்றன.பெயருக்கு ஒரு கபிலா கொங்கோ ஜனாதிபதி.கண்துடைப்புத் தேர்தல்,ஐ.நா.துருப்புகள்...என்னவொரு வேட்டைக்காடு இந்தக் கொங்கோ! கேக்கைப் பங்கிட்டதுபோன்று ஒவ்வொரு ஐரோப்பியத் தொழிற்கழகங்களும் அந்தத் தேசத்தைப் பங்கிட்டுவிட்டென.இதற்கு ஐ.நா.ஒரு சடங்கு நிகழ்த்தி ஐ.நா.துருப்புகள் என்ற போர்வையில் ஒவ்வொரு நாடும் தத்தமது தேவைக்கேற்ற கனிவளங்களைத் தோண்டியெடுத்துத் தமது நாடுகளுக்குப் பத்திரமாக அனுப்பியபடி.தொடர்ந்து கனிவளம் மிக்க பகுதிகளைத் தத்தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நாய் அடிபாடு.


இந்தத் தேசத்துக்கு எல்லையும் இல்லை.மக்கள் தொகை பற்றிய சரியான தகவலும் இல்லை.கிட்டத்தட்ட ஐந்து கோடிப் பேர்கள் வாழ்வதாகக் கொள்ளலாம்.உகண்டா,ருவண்டா என்று வேறு இத்தேசத்தில் கனிவளங்களைத் திருடித் தமது அமெரிக்க எஜமான்களுக்குத் தள்ளியபடி. கேமா((Hema)லெண்டு(Lendu) இனக் குழுக்கள் கிழக்குக் கொங்கோவில் ஒருவரையொருவர் விழுங்கியபடி...பேய்கமேன்( Mambuti-Pygmaen) என்ற இனக்குழு மனிதர்களைப் பிடித்து உண்பதும் இந்தத்தேசத்து மனிதர்களிடம் இடம்பெறுவதுண்டு.இந்த மம்புட்டி-பேய்மேன்களின் இருதயம் இற்றுறிப்(Ituri-Region) பகுதியிலுள்ள காடுகளைப்பற்றிச் சிந்தித்து துடிப்பதுமட்மல்ல.மாறாக பெரும் சக்தியையும் மற்ற மனிதர்களுக்கு வழங்குவதாக நம்பப்பட்டு,இந்த இனக்குழுவை வேட்டையாடி,அவர்களின் இதயத்தை உண்டு உருசிப்பதும் நிகழ்கிறது.இத்தகைய மூட நம்பிக்கையோடு கொங்கோ.


அவ்வளவு பின் தங்கிய மனிதக் குழுக்கள் இங்கேதாம் வாழ்கிறார்கள்!


"...Der Osten Kongo ist wahrscheinlich der schlimmste Platz auf Erden fuer Fraun."-bedrohte Voelker.seite:15.


"கொங்கோவின் கிழக்குப் பகுதியானது பெரும்பாலும் பெண்களுக்கு ஆபத்தான பகுதியாகும் இப்புவிப்பரப்பில்."அச்சுறுத்தப்படும் மக்கள்.பக்கம்:15.

அதாவது கொங்கோவின் கிழக்கு மாகணத்தில் எண்பது வீதமான பெண்கள் பாலியற் பலாத்தகாரத்துக்குட்படுத்தப்பட்டு,பால்வினை நோய்களினால் சாகும் நிலையிலுள்ளார்கள்.உதாரணத்துக்கு: பெம்பாசின்;"Mouvement de la Libe´ration du Congo" போராளிகள் கடந்த 29.10.2002 ஆம் ஆண்டு 65 பெண்களையும்,சிறுமிகளையும் வல்லுறுக்குட்படுத்தினார்கள்.117 மனிதர்களைக் கொன்றார்கள்.(அதே நூல்.)இது தொடர்கதை.

இந்த நிலையில் மக்கள் பெரும் அவலத்துள் வாழ,ஐரோப்பிய-அமெரிக்க வல்லூறுகள் வளத்தைத் திருடியபடி.

கொங்கோவின் கனிவளம்தாம் இந்தத் தேசத்தின் அழிவுக்கும் காரணமாகிறது.

யுரேனியம்,

தங்கம்,

வைரம்,

கொல்ரன் எனும் கைத் தொலைபேசி உருவாகத்துக்குரிய மூலப்பொருள்.


பெற்றோலுக்கான மசகு எண்ணை.


கடந்த  காலத்துள் ஜேர்மனி 560 துருப்புகளை ஐ.நா.துருப்பெனும் போர்வையில் கொங்கோவுக்கு அனுப்பித் தனது கம்பனி(Bayer-Tochter H.C) நிலைகொண்டிருக்கும் கனிவளப்பகுதியைக் காத்து வருகிறது.பெயரென்வோ தேர்தலைக் கண்காணிக்க-பாதுகாப்பு வழங்க,என்றபடி...தற்போதும் அதே கதையுடன் சிரியாவுக்குள்  வான் வழியாக நுழைகிறது யேர்மனியத் துருப்புகள்.சிறு தேசங்களது சுயாதீனம் என்பதைப் பெரும் நிதி மூலதனப் பிசாசுகள் ஒரு பொருட்டாகவெ எடுக்கவில்லையென்பதற்கு நேற்று நடந்த சிரியாவின் சுயாதீனத்துக்கான இருசியப் பிரேரணை  யு.என்.ஓ ' வில்  அமெரிக்க -பிரான்சுக் கூட்டணியால் (  http://sputniknews.com/middleeast/20160220/1035070804/west-slams-russian-peace-resolution.html   ) தோற்கடிக்கப்பட்டது நல்லவொரு உதாரணம்.



ப.வி.ஸ்ரீரங்கன்