Samstag, Oktober 02, 2010

தேசம்-தமிழரங்கம் போன்ற குழுக்களிடம் ...

"மாற்றுக் கருத்தாளர்களென"ச் சொன்ன நம்மில்பலர் புரட்சி செய்வதென்று கட்சிகள் கட்டினர்.அவை காலத்துக்கு முந்தியது.குழுவாதத்தில் நிலைக்க முடியாததெனச் சொன்னோம்.

தத்தமது இருப்புக்கான தெரிவுகளில் குழுக்கட்டல் தோன்றியது.

இக் குழுக்களால் முன் தள்ளப்பட்டொவ்வொரு இணையத் தளங்களும் தமக்கான தெரிவுகளில் அரசியலை முன்னெடுக்கின்றன.

அவையாவும் அப்பாவித் தமிழ் மக்கள் நலனை முதன்மைப்படுத்திக்கொண்டன.அந்த நலன்களை அடையும் வழிகளைக் காணாது அற்பத் தனமாகத் தமது விருப்புக்காக அவற்றைப் பாவனைசெய்வதில் இத்தைகய இணையத் தளங்கள் முந்திக்கொண்டன.

சமீபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு "இவரைத்தாம்" துணைவேந்தராக்கவேண்டுமென அறுதியிட்டு மனிப்புளேஷன் (Psychological manipulation)செய்யத் தேசம் நெற் கட்டுரை-ஆய்வு,பாலியற் புலானாய்வெனச் செய்து, Prof.Dr.இரத்தின ஜீவன் கூலுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறது நட்ஷத்திரன் செவ்விந்தியன் மூலம்.

தமிழரங்கம் படுபிசியாகத் தீபச் செல்வனெனும் "பாரிய" தமிழ்ப் படையாளியை-கவிஞரை புலிகளது விதேசியத்தில் உரைப்பதென்று தமது புலிச் சேவையின் தொடரை மறைத்துக் கட்டும் தொடரில் நாவலன்-குகநாதன் சமாச்சாரத்தில் ஆருக்கு ஆப்பு வைக்க முனைந்ததோ அந்த ஆப்பில் தமது பிடரிக்கு ஆப்பு வைத்திருக்கிறது.

ம.க.இ.க தமிழரங்கத்தின் மீதான தமது விமர்சனத்தை வினவுவில் போடுவதற்குள் அது இனியொரு தளத்தில் மீள் பதிவேற்றப்படுகிறது!

தமிழ்பேசும் மக்களுக்குத் தனிநாடு-விடுதலைப் பாடம் நடாத்துபவர்களில் கணிசமானவர்கள் இந்தவூடகங்களில் ஏதாவதொரு கட்டுரையையேனும் படித்திருக்க முடியும்.

அப்பட்டமான சுய நலங்களை முதன்மைப்படுத்தும் தேசம்-தமிழரங்கம் போன்ற குழுக்களிடம் இந்த மக்கள் நலன் வேறு சிக்கெடுக்கும்படியாக...

அவர்களே தமக்குத்தோதான சிக்கல்களைத் தொடர்ந்து கையிலெடுத்து நமக்கு விளக்கம் தருகிறார்கள்.

இந்தச் சூழலில் ம.க.இ.க.தமிழ்நாட்டில் நிகழ்ந்த குகநாதன் மேட்டரில் இரயாகரனது "தீர்ப்பு"க்கு மறுப்புரை எழுதுகிறது.நியாயமாக நாவலன்மீதான சேறடிப்பை எதிர்த்து எழுதப்பட்டாலும் பகிரங்கமான விவாதத்தைத் தொடரும்படி கேட்பதில் அதன் வலுவான நம்பிக்கை தெரிகிறது.இந்த நம்பிக்கையானது இனியொருவின்மீதானதும்,சபா நாவலன்மீதானதென்றுமில்லாது உண்மைகளை எவரும் புதைக்க முடியாதென இரயாகரனுக்கு உணர்த்துவதாகவே எடுக்க முடியும்.

ஒருவரையொருவர் சேறடித்து இல்லாமற் செய்யும் நடாத்தையில் இத்தகைய குழுவாதம் மலிந்திருந்தபோது, ம.க.இ.க.வின் வருகையும் அதன் பகிரங்க வேண்டுகோளும் விவாதிக்கத்தக்க பொதுவரங்கில் நாவலன்போன்ற மார்க்சியர்கள்மீதான அவதூறாகச் சுட்டிக்காட்டப்ட்டு,இரயாகரனது "அம்பலப்படுத்தல்"பொய்த்துப் போகுமிடத்தில் தமிழரங்கத்தின் அரசியல் புரியத் தக்கதான எனது மதிப்பீட்டை மேலும் வலுப்படுத்தும்.

அவ்வண்ணம் நாவலன் குற்றமுடையவரென்று நிருபிக்கப்பட்டால், இரயாகரன் நாவலன்மீது முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டும் நியாயமானதென்றும் இரயாகரனது குழுவாத்துக்கு அது அவசியமான இருப்பையும் கொடுக்கும்.எனவே,தொடர்ந்து தமிழரங்கம் மீதான எனது விமர்சனமானது அவர்களது அரசியல்மூலத்தின்ஆதிக்கத் தெரிவுகளைக் கேள்விக்குட்படுத்துவது.

அவர்களோடு நாம் இணைந்து உருவாக்க முனைந்த "புகலிடச் சிந்தனை மையம்" திடீரெனக் கட்சியாக மாறவேண்டுமென்ற இரயாவினது சுயவிருப்பில் அஃதிப்போது,"புதிய ஜனநாயக மக்கள் முன்னணி"யாக மாறிய தெரிவில் நடந்தேறும் அதீதகக் குழிதோண்டலில் எவர் வீழ்ந்து மாள்வாரோ அவர்களது அரசியல் மட்டுமல்ல இதுவரையான தமிழ்ச் சூழலதும் "புரட்சி"க் காவடியும் சிதைந்து சின்னாபின்னமாகும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.10.2010

Sonntag, September 05, 2010

நல்லூர்த் திருவிழாவும்,துப்பாக்கி விற்பனையும்.

நல்லூர்த் திருவிழாவும்,துப்பாக்கி விற்பனையும்.


"லைவர்"உரை நிகழ்த்துகிறார்.அவரது தலைவரான மிகந்தா மாத்தையாவோ நல்லூர்த் திருவிழாவில் பெரிய-பெரிய துப்பாக்கி(எஸ்.எல்.ஆர் போன்ற அமைப்புடன்) பிளாஸ்றிக்கில் விற்றுக் கொண்டிருக்கிறார்.இந்தத் துப்பாக்கிகளை யாழ்ப்பாண மக்கள் பரவலாக வேண்டிக்கொண்டிருக்கினமாம்.

தென்னிலங்கைச் "சகோதரர்கள்"இந்தத் துப்பாக்கி வியாபாரதை மிகப் பரவலாகத் திருவிழாவில் செய்கின்றனர்.யாழ்ப்பாணப் பெரிசுகளிலிருந்து,சிறுசுகள்வரை துப்பாக்கி வேண்டுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்-வேண்டித் தள்ளுகிறார்கள்!


இது குறித்து இந்தத் தலைவர் ஏதாவது தனது மக்களுக்குக் குறிப் புணர்த்தினரா?எல்லாம் தெரிந்த டக்ளஸ் மாத்தையாவுக்கு இந்தப் புலம் தெரியாதா என்ன?அவரும் தொடர்ந்து தனது மக்களைக் காட்டிக் கொடுக்கலாம்.

ஒரு போராட்டத்துக்குள்ளிருந்த மக்கள் சமுதாயம்,இனவொடுக்குமுறைக்கெதிரான ஆழ்மன அழுத்ததிலிருந்து இன்னும்விடுபடாத சமுதாயம் இத்தகைய துப்பாக்கித் தாகத்தை இயக்கவாத மாயையிலிருந்து விளையாட்டுத் துப்பாக்கியாக நுகரும்போது அஃதே ஆழ்மனவிருப்பாகக் கணிக்கப்படும்.

மகிந்தாவின் அரசுக்கு மிகச் சாதகமான கருத்தொன்று வைக்கப்படப்போகிற அபாயம் இந்தத் துப்பாக்கி விற்பனைக்கூடாக முன்வைக்கப்படப் போகிறது.

யுத்தத்துக்குப் பின்பான யாழ்ப்பாண மக்களது மனங்களை-சமூக உளவியலை அளக்கும் இந்த விளையாட்டுத் துப்பாக்கி விற்கும் நாடகத்தில் சாகடிக்கப்படும் சிவில் உரிமைகள் குறித்து எதிர்காலம் பேசும்.

யாழ்ப்பாண மக்கள் இன்னும் துப்பாக்கியை மறப்பதற்கில்லை.அவர்களது மனங்களில் எண்ணக் கருவாக இருக்கும் துப்பாக்கிமீதான காதல் அழிவதற்கு இன்னும் பல வருடம் எடுக்கும் என ஆய்வாளர்கள் சொல்வர்.

பிறகென்ன?

இராணுவ ரீதியான கண்காணிப்பும்,இராணுவக் கெடுபிடியும் தொடர்ந்து நிலைப்படுத்தப்படும்.

இந்த விளையாட்டுத்துப்பாக்கி விற்பவர்கள் வெறும் வியாபாரிகள் அல்ல.அவர்கள் எமது மக்களது மனங்களை அளவிடுகிறார்கள்.அரசினது சமூக ஆய்வாளர்களும்,அவர்களது பணியாளருமெனப் பலர் இதுள் இயங்குகிறார்கள்.

பாவம்பிடித்த நமது மக்களோ அப்பாவித்தனமாகப் பற்பல துப்பாக்கிகளை வேண்டித் தமது தாகத்தைத் தணிக்க அடுத்த இராணுவ நெருக்குவாரம் தொடரலாம்.

தமிழ் பேசும் மக்களைத் தொடர்ந்து கண்காணிப்பது,அவர்களது எண்ணங்களை அறிவது-ஆய்வதெனச் ஸ்ரீலங்கா அரசு மிக வேகமாகக் காய் நகர்த்துகிறது.துப்பாக்கி வேண்டும் குடும்பங்கள் கண்காணிக்கப்படுவர்.

எல்லாம் அவன் செயல்-இன்ஷா அல்லா!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
05.09.2010

Mittwoch, August 04, 2010

மெய்நிகரது மேன்மை

விடுதலையெனுங் கருத்தால்
விடு பேயர்களாக்கப்பட்ட தமிழினம்


சிவசேகரம் குறித்துத் தமிழரங்கத்தில்-இனியொருவில்பின்னூட்டு இடுபவர்கள்- கருத்தாடுபவர்கள் மிக நீண்ட புலியினது அரசியற் பாத்திரத்தை மிக இலகுவான தெரிவுகளோடு விவாதிக்கின்றனர். விட்டால்,புலியை ஸ்ரீரங்கனா அழித்ததெனக் குதர்க்கஞ் செய்கின்றனர்.இதுவரையான புலிவழித் தேசியப் போராட்டமானது தகவமைத்த அரசியலானது ஒரு தலைமுறையையே பாழடித்துக்கொண்டது மட்டுமல்ல அத்தத் தலைமுறையில் எஞ்சியவர்களையே"காயடித்து"தன் முனைப்புடைய நபர்களாக்கி விட்டுள்ளது.

தமிழ்பேசும் சமூகத்தின் இருப்பே இல்லாதாக்கிய இந்தப் போராட்டத்துள் இதுவரையான அழிவு,சமூகசீவியச் சீர்குலைவு குறித்து எந்த மதிப்பீடும்-பொறுப்புணர்வுமற்ற வாசகப் பாரம்பரியம் நமது சமூதாயத்தினது பாரம்பரியமாகத் தொடர்கிறது.குண்டி மண்ணைத் தட்டிச் செல்வதுபோல் மக்களது அழிவு-இழி நிலை குறித்து இயங்குகின்றனர்.எங்கே-எப்படி நமது மக்கள் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்,அவர்களைக் காட்டிக்கொடுத்து அழித்தவர்களே மீளத் தம்மைத் தகவமைத்து மக்களது "விடிவுக்கு"அரசியல் செய்வதாக இந்திய-இலங்கைப் பாசிசத்தோடு கைகோர்க்கும்போது,அதை அப்படியே கிடப்பில் போட்டபடி நமக்கு அரசியலுரைக்கும் அதே புலி மனதுக்கு, இந்தப் பாசிசத்தின் எச்சங்கள் குறித்து எந்தக் கவனமும் இருக்க முடியாதுதாம்.நாமும் அதற்காக அவர்களது நிலையிலிருந்து ஒரு சமூகத்தை நோக்க முடியுமா?
புலியை எவர்கள் அழித்தார்கள்-தோற்கடித்தார்களென ஓராயிரம் முறைகள்தமிழரங்கத்தில் சொல்லப்பட்டதை மீளப் படித்துத் தொலையுங்கோ. புலியைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி,அவர்களது அழிவு யுத்தத்தை"ஆக்க யுத்தமாக"க் கருத்திட்டவர்களும்,அதற்குச் சிந்தாந்த வலுக்கொடுத்தவர்களும் மிகவும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.அவர்கள் எமது மக்களது அனைத்து வாழ்வாதாரத்தையுஞ் சிதைத்தபோது,அதை மௌனித்து மக்களை மொட்டையடிக்க விட்டவர்கள் இதே வகைத் தண்டனைக்குட்பட்டவர்களில்லை!ஆனால்,இத்தகைய சந்தர்ப்பவாதிகள்(சிவசேகரம் போன்ற புரட்டுக் கவிஞர்கள்-மார்க்சியர்கள்) அரசியல் நீக்கஞ் செய்யப்பட வேண்டியவர்கள்.

புரட்சிகரக் கட்சியெனப் பெயர் சூடுவதால்மட்டும் அக்கட்சியும் அதன் உபயக்காரர்கள்-உறுபினர்கள் புரட்சிகரமாகச் சமூகத்தை அணுகுவதாகவும்,செய்யவேண்டிய சூழலில் செய்ய வேண்டியதைச் செய்ததாகவும் அர்த்தமாக முடியாது.
இது,சிவசேகரத்துக்கு,சிவத்தம்பிக்கு,சண்முகரெத்தினத்துக்கு- இன்னுமேன், அனைத்துப் பல்கலைக்கழகப்"பேராசிரியர்கள்-விரிவுரையாளர்கள்"அனைவருக்கும் பொருத்திப் பார்க்கத் தக்க அரசியலைப் புலிகளிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது.

இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்தில்,தம்மைக் "கல்வியாளர்கள்-பேராசிரியர்கள்"எனத் தம்பட்டம் அடித்தவர்களும்-அடிக்காதவர்களும் இணையும் பாதை தமிழ் பேசும் மக்களது உரிமையெனும் ஒரு முட்டுச் சந்தியில். இதைக் குறித்தான தேடலோடு அணுகியுள்ள ஒவ்வொரு அரசியல் நகர்விலும், புலியினது ஆதிக்கத்துக்குட்பட்ட அரசியல் நடாத்தையே தமிழ்பேசும் மக்களது உரிமை போராட்டத்தில் மையமுற்று முழுத் தேசியவின ஒடுக்குமுறைகளுக்கெதிரான வினாக்களைப் புலியிடம் தேடவேண்டிய நிலையில், புலிகளது அந்நியச் சேவை-அடியாட் பாத்திரத்தை புரிந்தவர்கள்- புரியாது நடித்துப் புலிக்கு அங்கீகாரத்தை-சித்தாந்த வலுவைக் கொடுத்திருக்கின்றனர்.

இங்கே,புரட்சிகரச் செயற்பாட்டோடு தன்னை இனங்காட்டும் சிவசேகரம் எந்தத் தர்மத்தின் அடிப்படையில் புலிகளது அழிவுப் போருக்கு எதிர்ப்பிடாது அல்லது மக்களிடம் உண்மையினை எடுத்துச் சொல்ல முடியாது மௌனித்தார் என்பதை வெறும் தனிநபர் செயற்பாட்டால் அளவிடமுடியாது.

சிவசேகரம் தன்னை இனங்காட்டும் கட்சியுடன் சேர்த்து, அவரை அணுகுவதில் எமது கருத்துக்கள் இருக்கிறது.தனிப்பட்ட சிவசேகரம் எப்போதோ காணாது போய்த் "தமிழ்த்தேசிய" அரசியலுக்கு முன்னால் தவிடுபொடியாகிக் கிடந்தார். அவருக்கு, அவரது தொழிலினது அழுத்தம்-அச்சம் சமூக ஆவேசத்தை அப்போது கொடுக்காதிருந்திருக்கலாம். இது,தனிநபர் பாதுகாப்புணர்வின் ஒரு அங்கமாகவும்-கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத அரசியலின் தொடர்ச்சியாவும் இருக்கலாம். என்றபோதும்,சிவசேகரம் தற்போதைய சூழலில் "புலி செய்த போராட்டத்தை விமர்சித்துப் புலியினது போராட்டம் அழிவுப் போராட்டமென்றும்,அது அந்நியச் சேவையில் மக்களைப் பலிக்கடாவாக்கிறதென்றும் உண்மையை மக்களிடம் எடுத்தியம்பிப் புலியினது ஆட்பிடிப்பு"குழந்தைக் கடத்தல்"அரசியலை அம்பலப்படுத்தியவர்களைச் சாடுவதில்" கவனமுற்ற சிவசேகரம்- ஏன், அன்று புலிக்குமுன் மௌனித்தார்?(இங்கே,மறுபக்கமென்ற அவரது பத்தி எழுத்துக்களுக்குட்கூட புலியினது விதேசியப் போராட்டங்குறித்தும்-புலியினது பாசிசச் சேட்டை-கொலை அரசியல் குறித்தும் எதையுமே இனங்காணமுடியாது!மக்கள் புலிகளிடம் அனைத்து ஆதாரத்தையுங் பறிகொடுத்தபடி, ஒரு புறம் புலிப் பாசிசத்திடமும்,மறுபுறும், பெருங்கொடிய இனவாத அரசிடம் தமது அனைத்துவுரிமைகiயும் இழந்து கொத்தடிமைகளாக இருந்தபோது இவர்கள் மெளனித்துக் கிடந்தனர்.)

இந்தச் சந்தர்ப்பத்தை ஒழுங்காக இனங்கண்ட புலியினது பினாமிச் சிந்தனையாளர்கள்,குறிப்பாக, எஸ்.கே.விக்கினேஸ்வரன்,சேரன் போன்ற கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் புலிகளது போராட்டத்தை தேசிய விடுதலைப் போரெனச் சொல்லி,அதற்கான பாரிய சித்தாந்த வலுவைக் கொடுத்தனர்.

இவர்களது இந்தச் சிந்தாந்த வலுவானது புலிகளது பாசிசத்தை மேலும் தமிழ்ச் சமுதாயமெங்கும் வலுவாகப் பத்திப்படர வைத்தது அன்றும்-இன்றும்!அனைத்துமே-புலிசெய்த அனைத்துமே தமிழ்த் தேசிய விடுதலையின் அங்கமாக இனங்காட்டினர். இதில் விக்கியினது பங்கு மிக அதிகமாக இருந்தது. விக்கினேஸ்வரன்-சேரன் குழுவானது புரட்சிகரமான சிந்தனைப் போக்கைச் சிதைத்து நிர்மூலமாக்கியதற்கான எல்லா நியாயமும் சிவசேகரத்துத் தெரிந்தே இருந்தது. எனினும்,இந்த மனிதர் மௌனித்து அங்கீகரித்தார்.

இப்போது,தங்களுக்கும் புலிகளது பாசிசச் சிந்தாந்தப் போக்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையெனச் சேரனும் அவரது மைத்துனருமான விக்கியும் எல்லாக் கோவில்களிலும் கற்பூரம் அணைத்துச் சத்தியஞ் செய்கின்றனர்.அதே, நோய்தாம் சிவசேகரத்துக்கும்.இதில்,என்ன மாற்றமென்றால்-சிவசேகரம் புரட்சியெனப் பிதற்றியபடி, "அன்று புலிக்கும்-அரச பாசிசத்துக்கும் எதிராகப் போராடிய முகாமை வலிந்து சாடியபடி"தனக்கு இருப்புத் தேடுவது. இதுவொரு வகையில் பண்பாட்டுச் சேட்டைதாம்.

இதை அம்பலமாக்குவதென்பதும் மக்களைச் சார்ந்தியங்கும் சக்திகளது கடமையே!

மௌனித்தவர்கள், முன் வைத்து இயங்கும் அரசியலை விமர்சிப்பதென்பது அந்தச் சிவசேகரத்தின் தனிநபர் நடாத்தையை அல்ல. சிவசேகரம் உருவாக்க முனையும் அரசியல்-கட்சிசார் அரசியலின் நியாயவாதமானது காலவதியானது. அதற்கு எவ்விதத்திலும் தமிழ்பேசும் மக்களது விடுதலை-அரசியலுரிமை பற்றிப் பேசும் அருகதை -திறன் கிடையவே கிடையாது. ஏனெனில்,இலட்சக்கணக்கான மக்களைப் பலியெடுத்தபடி தமிழ்ச் சமூதாயத்தையே ஒட்ட மொட்டையடித்த புலிப்பாசிசத்தின் தொடர்ச்சியைக் குறித்து இன்னும் எந்த மன்னிப்போ-பொறுப்போ எடுக்காத கயவர்களான மேற் சொன்ன புலிப் பினாமிகள் குறித்து இன்னும் மௌனிக்கும் இக் கயமைமிகு சிவசேகரம் கோஷ்டி,புலிகளை அன்றிலிருந்த அம்பலப்படுத்திய தளத்தை நஞ்சுத்தனமாகவும்-விஷமத்தனமாகவும் விமர்சிப்பதென்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். இன்றைய அந்நியச் சேவையில் போட்டிபோடும் புலிகளது பினாமிகள்-முகாங்களை இயங்க அனுமதித்துவிட்டு,மயிரைப் பிடுங்கும் கிண்டலும் -நஞ்சு வைக்கும் குள்ள அரசியலையுந் தொடரும் சிவசேகரம் மக்களுக்கான அரசியலைத் தட்டிக்கழிப்பதன் தொடர்ச்சியாகவே இது தொடர்கிறது.

அன்று,"மரபு மார்க்சியர்கள்"புலிக்குத் தாரைவார்த்துக் கையளித்த அனைத்துவகைச் சந்தர்ப்பவாதமும் இன்று, அந்த மக்களைப் பலியெடுத்து ஓயந்துபோனதும் மீளத் தகவமைக்கும் சந்தர்ப்வாதப்"புரட்சி"க் கோசத்தையும் அதன்வழி தம்மை முன்வைத்து அரசியல் பேச முனையும் கெடுதியான நோக்கையும் எவரும் மௌனித்து ஏற்க வேண்டியதில்லை!

இன்றைய சூழலில் எவர் மக்களைப் பற்றி நின்றும், புலியினது பாசிசச் சேட்டையை அன்று அம்பலப்படுத்திப் புலியிடமிருந்த கொடும் வதைகள் பெற்றார்களோ, அவர்களேதாம் மக்களோடு இனியும் அரசியல் செய்வதற்கும்-போராடுவதற்கும் அருகதையுடையவர்கள்! சந்தர்ப்ப வாதிகளும்-சதிகாரர்களும் இனியும் எமது மக்களை மொட்டையடிக்க விடுவதற்கு இது, புலிப் பாசிசத்தின் காலமல்ல. மாறாக, இது,மகிந்தா குடும்பத்துப் பாசிசச் சர்வதிகாரக்காலம். இங்கே,இலங்கையில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சிறுபான்மை இனங்களுடன் கைகோர்த்து, அவர்களது விடுதலைக்கான புரட்சிகரப் பாதையையும்-கட்சியையும் உருவாக்கும் பொறுப்பு அந்த மக்களிடம் இருக்கிறதென்பதும்,அதையொட்டி அவர்களைத் தகவமைப்பது புலிப்பாசிசத்துக்கும்-சிங்கள இனக்வொடுக்குமுறைகளுக்கும் எதிராகத் தமது ஆயுள்வரை போராடியவர்களுக்கே உண்டு.

சந்தர்ப்பவாத அரசியலைப் புரட்சியின் பெயர்கொண்டழைக்கும் சிவசேகரம்போன்ற கடைந்தெடுத்த மக்கள் எதிரிகளுக்கு எந்த அருகதையுமில்லை - மக்கள்,புரட்சி குறித்துப் பேசுவதற்கு!
இவர்கள் தகவமைப்பது மீளவுமொரு சந்தர்ப்பவாத அரசியலுக்குள் மக்களைத் தள்ளிப் இலங்கைக்கான ஐக்கிய மக்கள் புரட்சியைக் காயடிப்பதற்க்கே!
இந்தவுண்மையை நாம் இனங்கண்டதன் பயனாகவே,மேற்சொன்ன முகாங்களை,அவர்களது சந்தர்ப்பவாத-சதி அரசியலை அம்பலமாக்குகிறோம்.இது,மீளவும் ஒரு விக்கி-சேரன் கூட்டு நமது மக்களுக்குத் தேசிய விடுதலை-புரட்சி பேசிப் புலிகளது எச்சங்களை மக்களுக்குள் திணிக்காதிருப்பதற்கே!இதை உணரும் எல்லாச் சந்தர்ப்பத்திலும் சிவசேகரம்போன்றவர்கள் சந்தர்ப்பவாத அரசியலோடு மக்கள் கவனத்தைத் திசை திருப்பிச் சதிகாரர்களை நமக்குள் ஊன்றுகிறார்கள்.இது,தமிழ்த் தேசிய அரசியலது அறுவடையிலிருந்து நமது மக்களை மீண்டெழ முடியாதவாறு அந்தச் சேற்றுக்குள் மக்களை மூழ்கடித்துத் தம்மைத் தகவமைக்கும் சதி அரசியலோடு சம்பந்தப்பட்டது.

சிவசேகரமும்,அவரது அனுதாபத்துக்குட்பட்ட புதிய ஜனநாயகக் கட்சியும் இதுவரை மக்களுக்கும் புலிக்குமிடையிலான அரசியலையும்,அதன் வழியாக விளைந்த சமுதாயச் சீர்குலைவையுங் குறித்து எந்த மதிப்பீடும் செய்யவுமில்லை,அதற்கெதிரான சித்தாந்தப் போராட்டத்தையும், அதன் வழியில் மக்களைப் புரட்சிகரமாக அணிதிரட்டும் தந்திரோபாயமுமின்றிச் சப்பைக் கட்டும் பாராளுமன்றச் சகதிக்குள் கிடந்து பிற்போக்கு அரசியலைத் தொடருகிறது. இது,ஒரு வகையில் எஞ்சிய புலிகளுக்குப் புரவலர்களாக இருக்கும் மேற்சொன்ன புலிப் பினாமிகளை மீளப் புனரமைக்கும் அரசியலின் வியூகமென்பது எனது பணிவான கருத்து.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
04.08.2010

Montag, August 02, 2010

இனியொரு திசையில்சிவசேகரம்கவிமழை பொழிய...

இனியொரு திசையில்சிவசேகரம்கவிமழை பொழிய...

"முற்றத்து வாழை குலையீன
முத்தனும் பெண்டிலுங் கூத்தாட"



னியொரு இணையத்தின் அரசியல்இளித்த வாயர்களுக்கானதா, இல்லை,மக்களது அவலத்தைப் போக்குவதற்கானதாவென நான் எனக்குள் புரிய முனைகிறேன்.எல்லாம், சிவசேகரம் அவர்களது கவிமழைப் பொழிவினது காரணகாரியத் தொடர்ச்சியின் வினைதாம்.

இன்றைய காலத்தில் எவரது கருத்தையும் "எங்கேயும்" தடை செய்ய முடியாது!இவ்வளவு வளர்ச்சியடைத்த தகவற் தொழிற்நுட்பப் புரட்சியில் கரையொதுங்கியுள்ள இன்றைய தகவற் பரிமாற்றத்தைப் புரியாதவர்கள், புரட்சியை கட்டி வளர்ப்பதென்பது எந்தவுலகத்திலிருந்தென்றுதாம் எனக்குப் புரியவில்லை!

சிவசேகரம் கவிதை எழுதுவார்.அது,எல்லோருக்கும் தொப்பியை அளவாகத் தைத்து மெல்ல நயவஞ்சகத்தோடு விஷம் பருக்கும்.இது, நடக்கும் தருணம் "புரட்சி"யின் பெயரால்.இப்போது,"புரட்சி" பேசுபவர்கள் அனைவரும், மற்றவர்கள் மந்தைத் தெருவில் நாலு மந்தைகளை மேய்ப்பதென்ற தோரணத்தில்"மார்க்சியம்"படிப் பிக்கின்றனர்.

காலந்தாம்!

இந்தவுலகத்தின் திசைவெளிகளெல்லாம் ஏதோவொரு புனைவுக்கும்-நிஷத்துக்கும் இடையில் காட்சிப்படுத்தும் நிஷம், எங்கோ ஒரு "அறிவாளியின்"வீட்டுக் கோடியில் அடை காப்பதாக இவர்கள் கருதுவதாகவிருந்தால் அஃது, நிஷமாகவே காலக் கொடுமைதாம்.

விஷமக் கருத்துக்களை கட்டிக் கவிதையெனக் கோர்க்கும் சிவசேகரத்திடம் நிஷமாகவே புரட்சி குறித்த எந்த மதிப்பீடும் இருப்பதற்கில்லை!அப்படி இருந்திருப்பின் புலியினது பாசிசச் சேட்டைக்கெதிராகப் பாரிய மக்கள்திரள் போராட்டத்தை இலங்கையில் நடாத்திக் காட்டியிருக்க முடியாதுபோயினுங் குறைந்தபட்சம் புலிகளது அழிவு யுத்தத்தை நேர்மையாக அம்பலப்படுத்தியிருக்க முடியும்.தன்னந்தனியர்களாக நாம் அம்பலப் படுத்தியபோது தலையைப் புதைத்துத் தமிழ்த்தேசியப்பால் குடித்தவர்கள், இப்போது, புரட்சிபேசி மற்றவர்களைச் சீண்டுகிறார்கள்.இவர்களெல்லாம் நீதியாகச் செயற்பட்டிருந்தால் தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு அழிவைப் புலிப் பாசித்தின் வழி சந்தித்திருக்க முடியாது!



மக்களைப் புலிகளும்,சிங்கள ஆளும் வர்க்கமும் மொட்டையடிக்கப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இன்று, புரட்சிக் கோசமெனப் புலம்பும்"கவிதை" தனிநபர்வாதமாக மற்றவர்களுக்கு "ஒழுங்கு"கற்பிக்கிறது!புலிகளது அராஜகத்தின்வழி, கேடுகெட்ட பாசிசம் கோலாச்சியத்திற்கு இந்த மனிதர்கள் எங்ஙனம் காரியம்-ஒத்திசைவாகவிருந்தார்களென நாம் பல் நூறு கட்டுரை எழுதியுள்ளோம்.என்றபோதும்,இன்றைய "புரட்சிகர-மார்க்சிய"ப் புதிய புரவலர்கள் கட்டியமைக்க முனையும் கருத்துக்களோ அவர்களது பின் தங்கிய புரிதலை நன்றாகவே நமக்குப் புரியவைக்கிறது. எல்லாக் காலத்துக்கும் அடிப்படையான புரிதல் பொருந்திவிடுவதாக இவர்கள் புசத்துகிறார்கள்.

புலிப்பாசிசத்தின்"(வி)தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு" மார்க்சியத்தின்வழி மரபுரீதியாகக் கருத்துச் சொல்லிக்கொண்டு மௌனித்திருந்த இந்த மகான்களெல்லாம் இப்போது கிணற்றுக்குள்ளிருந்து வெள்ளமேற வெளியல் வந்த தவளைகளாகக் கத்திக் கொள்கின்றனர்.அத்தக் கத்தலைப் புரட்சியின் தெரிவில்"புரட்சி" இலக்கியமெனப் புரட்டும் சிவசேகரம் தனது கடந்த கால மௌனத்தைக் குறித்துக் கிஞ்சித்தும் எந்த வருத்தத்தையுஞ் சொன்னதாக வரலாறில்லை!

பாசிசம் கோலாச்சியது எதன் பெயரால்?எவரது துணையோடு தமிழ்த் தரகு முதலாளிகள் இலட்சக் கணக்கான மக்களைக் கொன்று குவித்தார்கள்? எவரது மௌனம் புலிகளுக்கு விதேசியச் சிந்தாந்தப் பலம் கொடுத்தது?

இன்று, இத்தனை இலட்சம் மக்களது வாழ்வை வேட்டையாட ஒத்துழைத்த இந்த நரிகளெல்லாம்"புரட்சி-புரட்சி"என ஊளையிடுகின்றன. இது, குறித்து விமர்சனம்-எதிர்வினையாற்றும்போது நேசமிகு அஷோக்கோ அதை வெளியிட முடியாது தவிர்த்துத் தனது கரசேவையை ஒழுங்குற நடாத்துகிறார்.

இதெல்லாம் "புரட்சிக்காரர்களுக்கு" உரிய கோலந்தாம்!நாமும் கடந்த கால் நூற்றாண்டாக இந்தப் "புரட்சிக் காரர்களை"ப் பார்த்தே வருகிறோம்-இணைவதும்,பிரிவதுமாக...

இயக்க வாத மாயை,அந்நியச் சேவை-அடியாட் பாத்திரமென எல்லா வகைத் துரோகத்தையும் ஒழுங்குற நமது மக்களது தலையிற் சுமத்தி,அவர்களது வாழ்வை நாசமாக்க"அவர்களுக்கு விடுதலை"வகுப்பெடுத்த இந்தக் கடைந்தெடுத்த கபோதிகள்தாம் தம்மையும் "பேராசிரியர்கள்-புரட்சிக்காரர்கள்"எனப்பசப்பு மொழி பேசுகிறார்கள்! என்றோ நமது மக்களது உரிமைகளை அந்நியர்களுக்கு ஏலம்விட்ட இத்தகைய மனிதர்கள் இன்றும்"புரட்சி" பேசுவதும்,கட்சி கட்டுவதும்,மக்களை ஏய்த்து அரசியல் செய்வதென்ற திசையில்தம்மைத் தகவமைத்துக்கொண்டதன் பயனென இவர்களே தமது நடத்தையின் மூலம் நமக்குரைக்கின்றனர்!

புலிப்பாசிசத்தின் தோல்வியில்,படிப்பினைகளைச் செய்து, மக்களது அரசியலைப் பேச வக்கற்ற இத்தக் கோமாளிகளுக்கு "மார்க்சியம்" குறித்தென்ன மதிப்பீடு இருக்கிறது? புதிய உலகவொழுங்கமைப்பின் இன்றைய புரட்சிகர நிலவரங்கள் என்ன? பாட்டாளிய வர்க்கத்தின் இன்றைய வர்க்கவுணர்வினது தீர்மானகரமான இருப்பு என்ன? புதிய தலைமுறையை நோக்கிய புரிதலில் எத்தகைய மனித மாதிரிகளை இனங்காண்கின்றனர்?தொழிற்சாலைக்கும் மூலதன இயகத்துக்கிடையில், உற்பத்திச் சக்திகளுக்கும்,உறவுக்கும் இடையிலான இன்றைய பண்பு என்ன?இது குறித்து எந்தப் புரிதலை தமிழ்ச் சூழலில் முன்வைத்திருக்கிறீர்கள்? இன்றையவுற்பத்தியில் பங்குறும் பல்கலைக்கழகங்களுக்கும் பாட்டாளிய வர்க்கப் பண்புக்குமிடையிலான முரண்பாடென்ன? இது குறித்தெல்லாம் புரிதலற்றவர்கள் எதிர்காலப் "புரட்சி" குறித்து வகுப்பெடுக்கின்றனர்.அதையும், அதே பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கருத்து நிலைகளோடு...

இவர்களிடம்,எதிர்வினையாற்றும்போது,அதை மறைத்து மதிலமைக்க முடியுமெனக் கருதும் கருந்துளைகளுக்கு"ஈர்ப்புச் சக்தியினது சுழற்சிக் கணம்"எத்தகைவொரு நிலையில் எத்தகைய எதிர்த் தாக்குதலைத் தருமெனப் புரிவதுகூடப் பொருந்தாத தருணந்தாம். இல்லையென்றால், எதிர்வினைகளை-பின்னூட்டங்களை வெளியிட்டு,ஆரோக்கியமானவொரு உரையாடலைக் கட்டியமைத்திருப்பார்கள்.

இவர்களது தெரிவில், கடந்தகால இயக்கவாதக் கொள்கை வழியான பரிதலே மேன்மையான கோட்பாடாகவிருக்கலாம்.இல்லையென்றால் அங்காலவொருவன் கட்சி கட்டுகிறான்.இங்காலவொருவன் தெரிந்தெடுத்த கருத்துக்களை வைத்து அரசியலமைக்கின்றான். இவர்கள் மார்க்சியமெனக் கத்தும் மந்தைக் கருத்துகளோ மார்க்சியத்தின் அரிச்சுவடியையே கற்காத இவர்களது மேதமையை வெளிப்படுத்துகிறது!

என்ன மேதைமை!

போங்க சிவசேகரரே-போங்க அஷோக்கு யோகன் கண்ண முத்துப் புரட்சித்தோழரே! புதுமையாய் ஏதாவது வழியில் கருத்துக்கு மதிலிட முனையுங்கோ...


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.08.2010


இட்ட பின்னூட்டமும்,சிவசேகரத்தின் கவிதையும்:


"இருந்த இடத்து வேலையென்றால் எங்க வீட்டு அவரையுங் கூப்பிடுங்கோ..."

சிவசேகரம் அவர்களது இக் கவிதையை

மீள-மீளப் படித்துப் பார்த்தேன்.அவர், போடுகின்ற இக்கோலத்தை அவரது கடந்தகாலச் செயற்பாட்டை வைத்து அளவிடும்போது,புலிகள் பலமாக இருந்து, தமிழ்ச் சமூகத்தின் அனைத்து வளங்களையும் துஷ்பிரயோகஞ் செய்து, மனிதவுயிர்களுக்கு எல்லையில்லாத் தொல்லைகள் கொடுத்தபோது இவர் என்ன செய்தார்(?),எப்படிப் போராடினாரென எனக்குள் கேள்விகள் எழும்போது,பேராசிரியர்கள் புலியினது அழிப்புப் போருக்குத் தேசியக் குஞ்சம் தயாரித்துக் கட்டி அழகு பார்த்த உண்மையை மறக்கமுடியாதிருக்கு! ஒரு கொடிய பாசிசத்தின் முன் மௌனித்துக்கிடப்பதென்பது அந்தப் பாசிசத்துக்கு உடந்தையாகவே இருக்கிறது.


இப்போது,சிவசேகரம் அவர்கள் பரவலாக வாய் திறக்கின்றார்.இஃது,அழகானது!புரட்சி குறித்து நிறைய வகுப்பெடுக்கிறார்,அதுவும் தப்பு இல்லை!என்றபோதும்,இவர் போட்டுத் தாக்கும் தளமிருக்கே அது இறுதிவரைப் புலிப் பாசிசத்துக்கும்-இலங்கையினது இனச் சுத்திகரிப்புக்கும் எதிராகப் போராடியிருக்கிறது.இதை, மறுத்துவிட்டு எந்த மடையனும் இப்போது புரட்சியுரைக்க முடியாது!


புலிகளது கொடிய அழுத்தங்களையும்-கொலைவெறித் தாக்குதலையும் மீறிப் புலி பாசிசத்தை அம்பலப்படுத்தி,அவர்களது அழிவு யுத்தத்துக்கு எதிராகப் போராடிய வரலாறு மிக இலகுவாக நிராகரிக்கக் கூடியதல்ல!இதை, மௌனித்து இருந்தவர்கள்-புலிகளது போராட்டத்தில் தேசியவொடுக்குமுறைக்கெதிரான கூறுகள் இருப்பதால்-அதைத் தூக்கித் தாலாட்டியபடி, புலிகள் செய்த அனைத்து மனிதவிரோதப் போக்கையுங் கண்டுங்காணாதிருந்த நம்ம "பேராசிரிய!ப்பெருந்தகைகள் இப்போது புரட்சிக் கொடியுயர்த்துவதற்கு முன்னிலையில் நிற்கும்போது,இவர்தம் செயற்பாட்டின்மீது பெருத்த சந்தேகங்கொள்கிறேன்!


ஒரு கட்டத்தில்- 2000 க்கு பின்பான காலத்துள், முற்று முழுதாகப் புலிக்கு எந்த எதிர்ப்பையுமே செய்யாதவர்கள், மௌனித்துப் புலிகளது கொடியவொடுக்கு முறைகளுக்கு அங்கீகாரஞ் செய்தவர்கள்.இப்போது,இத்தகைய பெருந்தகைகள் மக்களரங்கு வருகிறார்கள்.அவர்கள், தமது கடந்தகாலக் "காய் அடிப்பு "அரசியலுக்குப் புது விளக்கமுரைத்துப் புரட்சிப் பாடல் கட்டும்போது "இவர்களது" கொடிய மௌனத்தின் விளைவு, இன்றைய நிலைக்கு எங்ஙனம் களமமைத்ததெனப் புரட்டியெடுத்துப் பதிலுரைப்பது எமக்கொன்றும் கடினமான பணியல்ல!ஆனபோதும்,இவர்களை எண்ணும்போது-எனக்கு ஐயன் ஸ்ரையினது புகழ்வாய்ந்த வாசகமே ஞாபகத்துக்கு வருகிறது.


>>Die Welt ist viel zu gefaehrlich,um darin zu leben-nicht wegen der Menschen,die Boeses tun,sondern wegen der Menschen,die daneben stehen und sie gewaehren lassen.<<

-Albert EINSTEIN


"இவ்வுலகமானது ரொம்ப அபாயகரமானது, அதற்குள் வாழ்வதற்கு-இந்நிலை மனிதர்களாலோ, போக்கிரிகளாலோ அல்ல,மாறாக,மனிதர்கள் இவைகளுக்கு அருகினிலிருந்து அவர்களை அநுமதித்து விடுவதாலேயே."

-அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி 02.08.10


புரட்சிக்கான மெய்நிகர் கொமிசார்

-சி.சிவசேகரம்

எங்கள் மெய்நிகர் கொமிசார் இவ்வுலகு
எவ்வாறு உருவாகி இவ்வாறாய் எவ்வாறு
ஆனதெனவும்― அதை
எவ்வாறாய் மாற்றல் ஏற்குமெனவும் அறிவர்
அதை
அவ்வாறாய் மாற்றல் எவ்வாறெனவும்
எதையும் எங்கே எப்போது எவ்விதம்
மாற்றலாம் எனவும்
எல்லாரும் அறியுமாறு எவருக்கும் ஏவவும்
மாற்றற்குரிய
பொருள் இடங் காலம் விதம் என அனைத்தையும்
வேண்டிய போது வேண்டியவாறு மாற்றவும்
பொறுப்பும் அதிகாரமும் உரிமையும் கடமையும்
பிறவும் உடையர்
ஆதலின்
பிறர் எவ்வாறு இவ்வுலகை மாற்றலாம் என
அவர் தனது
சாய்மனைக் கதிரையிற் சாய்ந்து சுவரை நோக்கியும்
படுக்கையிற் கிடந்து முகட்டை நோக்கியும்
உருளு நாற்காலியில் அமர்ந்து திரையை நோக்கியும்
ஆணைகள் பிறப்பிப்பர்
அவர் எதுவுமே செய்யாரென்பதுடன்
எவர் இவ்வுலகை மாற்றுவர் எனவும் அறியார்
ஆயினும் இவ்வுலகை
மாற்றத் தகாதோர் எவரென
அவர் அறுதியாயும் உறுதியாயும் இறுதியாயும்
அறிவர் ஆதலின்
அனைவரும் அறிமின்―
அவரை மீறி உலகை மாற்ற முனையும் எவரையும்
அவர் என்றென்றுங் கண்காணித்துச்
சாய்மனைக் கதிரையிலும்
படுக்கையிலும்
உருளு நாற்காலியிலுமிருந்து
கண்டன அறிக்கைகளைப் பிறப்பித்தவாறே
இறுதி வரையிலும் இருப்பர்

http://inioru.com/?p=15700

Dienstag, Juni 22, 2010

இலங்கை மக்களது அரசியல் தெரிவுகுறித்து...

இலங்கை மக்களது அரசியல் தெரிவுகுறித்து...


"தமிழ்ச்சமுதாயமும் தனது மதிப்பீடுகளை இன்றைய நோக்கு நிலையிலிருந்து மீளுருவாகஞ்செய்யாதுபோனால் அதன் இருப்பானது மிக மிகப் பலவீனமான நிலையையெய்துவிடும்.இன்றைய நமது சூழலானது மிகவும் கெடுதியான பொருளியல் நலனே முக்கியம் பெற்ற அதிர்வான சமூக சீவியத்தைக் கொண்டிருக்கும் காலமாகும்."



ன்றைய காலம் பரந்துபட்ட தமிழ்பேசும் இலங்கை மக்களது நலனில் அக்கறையற்ற காலம்.எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள்,போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை.கடந்த கால அழிவுகுறித்து எந்த மதீப் பீடும் இல்லை! இதற்குள்புலம்பெயர் தமிழருள் புதுப்புதுக் கட்சிகள்,புரட்சிகரப்பாட்டும்,மக்களை அணிதிரட்டுவதுமெனக் கொட்டியபடி...


நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது மக்களின் நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள்,அதே இயக்க-கட்சிவாத மாயையில் நீந்தியபடி!இது எதற்கானது-எவருக்கானது?

அரச-புலி, வன்னியுத்த்துக்குப் பின்னான இன்றைய அரசியல் போக்குகளில்,புலம்பெயர் மக்கள் மத்தியில் உந்தித் தள்ளப்படும் பற்பல அரசியலை ஏதோவொரு காரணத்துக்காக,ஒவ்வொருவரும் திட்டமிட்டு முன்னெடுப்பதில் தம்மை முன்னிலைப்படுத்துகிறார்கள். இதுள், இலங்கையில் தமது வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துத் தினமும் செத்துமடியும் மக்களது நலன் எதுவென்பதில் நமக்குக் குழப்பமாக இருக்கிறதா? அப்படி இருப்பதில் தவறில்லை. காரணம்:"நமக்குள்தாம் எதிரிகள் இருக்கிறார்கள்-வெளியில் இல்லை"என்பதால் இது முற்றிலும் ஒரு குழப்பகரமான சூழல்தாம்.


இங்கே,தொடர்-தொடராகச் செய்திகளை-பேட்டிகளை அள்ளிவரும் ஊடகங்கள் தத்தமது வரும்படியோடு மிகவும் கவனமாகவொரு அரசியலை "நமது மக்களுக்காக"க் காவி வருகிறார்கள்.அழியும் மக்களது வாழ்விலிருந்து விரிவுறும் பண வரும்படிக்கான-பதவிகளுக்கான அரசியல் தெரிவு,மீளவும், நமது மக்களது விடுதலைக்கு வேட்டு வைப்பதில் புலிகளது பாணி அரசியலே தெரிவாக்குகிறது.இது,சுயநிர்ணயவுரிமையெனக் கத்திக்கொண்டே கடைவிரிக்கும் "புரட்சிகரக் குரல்",போலித்தனமாக, மக்களது விடுதலை-நலன் குறித்துக் குத்தகைக்கு எடுத்து கட்டுரை வாசிக்கிறது-இணையத்தில் போட்டியிட்டுப் புரட்சி பேசுகிறது!

இலங்கையில், மக்கள் தனிநபர் பயங்கரவாதத்துக்குள்தாம் சீவிப்பதாகச் சொல்லும் அரசியலானது அந்தத் தனிநபர் பயங்கரவாதக்கூறினுளொன்றான தமது பக்கத்தைப் புரட்சியென வரையறை செய்வதில் கவனமாக இருக்கின்றது.

இலங்கையின் அனைத்து அரசியல் நகர்வும், இலங்கை மக்களது சமூகசீவியத்துள் மாறிவரும் பொருளாதாரச் சூழலில், தனிநபர் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்படும் உடனடி அரசியலானது வெறும் கிறுக்குத்தனமான அரசியலைப் பின்னணியாகக் கொண்டியங்குகிறது.அத்தகையவொரு அரசியலை வகுத்து இயக்கிவரும் அந்நிய நலன்சார் அரசியலொடுக்குமுறையின் ஒருவடிவமாகவெழும் இப்போக்கை, அதன் பின்புலத்தை மறைத்து, முதன்மைப்படுத்தலானது எதன் தயவின் தொடர்ச்சியென நாம் பார்ப்பது அவசியமாகும்.மிகத் தெளிவான அவர்களது வரையறை இன்றுவரையும் தொடர்கதையாக நீள்வதும்,மக்களின் எந்த உரிமையையும் "ஈழவிடுதலை-சுயநிர்ணயம்-புரட்சி"சொல்லி ஆயுத முனையில் பறிப்பதும் நாம் காணும் வரலாறாகவே இருக்கிறது.இவர்களே, வன்னியில் மக்களைத் தமது தேவைக்கேற்றபடி இலங்கை அரசிடம் பலியிட்டுவருபவர்கள் என்பதை நாம் மறந்துவிடமுடியாது.

ஒன்றுக்கொன்று மிக வியாபாரத்தனமாகக் கருத்துக்கூறும் இன்றைய அமைப்பாகும் அரசியற்றொடர்ச்சி மிக மோசமானவொரு பின்னணியைக்கொண்டியங்க முடியும். புதுப்புது விளக்கங்கள்-சித்தாந்தங்கள் சொல்லப் பலர் முழுநேரத் தொழிலாகப் பரப்புரை செய்துகொள்ளலாம்.எனினும்,மக்களுக்கும்,அவர்களது உயிர்த்திருப்புக்கும் குழிப்பறிப்பதில் "புரட்சி-கட்சி"யெனக் கத்தி" தனிநபர் பயங்கரவாதமாகக் குறுக்கப்படும் தமிழ் மக்கள்மீதான அந்நிய-அரசியல்ஒடுக்குமுறை வடிவங்களை முடிச்சுப் போடுவதில் கணிசமான மக்கள் அழிந்துபோனதையும் குறிக்கத்தவறுவது நியாயமாகிறதா?

ஆகணும்!

அப்படிப் பார்ப்பதே புலியழிவுக்குப் பின்னான போராட்டத்தின் தவறுகள்-குழிபறிப்புகள்-பலியிடப்பட்ட மக்களது பெறுமானம் குறித்துத் தொடராகப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாகும்.

"தமிழீழத்தின்" நீட்சி இப்போது சுயநிர்ணயவேடமாகிறது-"புரட்சிகர" அமைப்பாகிறது!.இலங்கை அரசுக்குத் தமிழ்பேசும் மக்களது உரிமைக்குரல் எப்படிப் பயங்கரவாதமாகிறதோ அதே வண்ணத்தில்தாம் இதுவும் தமிழ்பேசும் மக்களது காதுகளில் பூச் சுற்றுகிறது?

எமது விடுதலையென்பது புலிகளின் பாணியிலான போராட்டத்தால் சிதைக்கப்பட்டபோது அதைக் குறித்து அழுது வடிந்தவர்களோ அந்த வலியின் தொடர்ச்சியில் அதே புலிப்பாணி அமைப்பாவதைத் தொடரும் அபத்தம் "புரட்சியின்" முகமூடியோடு புதிய விளக்கம்பகர்வதில் அத்துமீறிய கருத்தியில் வன்முறையைத் தொடர்கிறது.இது,சாபக்கேடான அதே இயக்கவாத மாயையின் இன்னொரு வடிவமாகும்.சமூக வளர்ச்சியென்பதைச் சிதிலமாக்கி மந்தமடைய வைத்தார்கள் இந்த இயக்கவாதத் தொடர்ச்சியின் வருகையில் மக்களது இதுவரையான வாழ்வியிற்றேவைகளைக் கணக்கெடுப்பது புரட்சியின் பயனுறு நிலைப் பண்புக்கானதாகவிருப்பின் அதன் ஆணிவேர் மக்கள் சமூகத்தைத்தாண்டி இன்னொரு தளத்தில் வேர் அரும்புகிறதென்பதைக் குறித்துரைக்க வேண்டியதில்லை.இன்றோவிது,கடந்தகால அதே இயக்கவாத மாயயைத் தொடர்வதில் அதே பாணி அரசியலைப் புலம்பெயர் தளத்தில் புலிகளதுதெரிவில் பலர் பற்பல வடிவத்தில் உருவாக்கி வருகிறார்கள்.இந்த அரசியல் எவரையும் விட்டுவைக்க மறுக்கிறது.

பற்பல ரூபங்களில் இஃது, அரசியல் முனைப்பைக் கொண்டிருப்பினும் இதன் தளம் பாசிசமே.இஃது,எஞ்சிய புலத்துப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் இன்னொரு சக்தி உருவாவதை மிகக் கவனமாகத்தடுக்கப் "புரட்சிகர" அரசியலைக் கைலெடுத்து வைத்திருக்கிறது.கூடவே,மிகவும் கறாராக ஜனநாயக வேடந்தரித்து மாற்றுக் கருத்துச் சூழலைப் பூண்டோடு அழிப்பதில் புலிகளாகத் தமது இருப்பை நிறுவுகிறது.அனைத்தையும்"புரட்சி"என்ற சொல்லாடலாகத் தொடர்வதில் அதன் சாயம் வெளுத்துப்போவதைத் தள்ளிவைக்க முனைகிறது. இன்றைக்குப் புலிகளெனும்அடியாட் பாத்திரத்தின்இருப்பைக் குறிவைத்து நகர்த்தப்படும் அரசியலானது இலங்கைமீதான மேற்குலகத்தின் அபிலாசைகளில் பிரதிபலிக்கத்தக்கதாகும்.

மறுபுறுமோ, சீன-இந்தியத் தரகு முதலாளித்துவ வர்க்கமானது இன்றைய இலங்கை நிலைமைகளைக் உன்னிப்பாக உணரத் தலைப்பட்டதன் அடுத்த கட்டமாகக் காய்களை நகர்த்துகிறது,புலிகளாலும் மற்றும் இயக்கங்களாலும்-ஸ்ரீலங்கா அரசாலும் வஞ்சிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வை திசை திருப்புவதற்காகவும்,தொடர்ந்தும் இந்தியத் தேசத்தில் சார்ந்தியங்கும் எண்ணவோட்டத்தை முனைப்புற வைக்கவும் பற்பல செயல்களில் இன்றைய புலம்பெயர் மாற்றுக் கருத்துச் சூழல் அமிழ்ந்துள்ளது. இதற்கான முன் தயாரிப்பாக அது புலம்பெயர் மக்களைப்பலவாறாகப் பயன்படுத்துகிறது. அதிலொன்று,இன்றைய "புரட்சி-கட்சி"அமைப்பாவதென்ற தொடரில் மையங்கொள்கிறது! இதுள்,மேற்குலகத்தின் அரசியல் அபிலாசைகள் மேலும் பல முகங்களை நமக்குள் இனம் காட்டும்போது,அங்கே,வினைப் பயன் தொடராக இயக்கவாதம் மீளத் தலையெடுப்பதில் இந்திய-மேற்குலக அரசியல் உந்ததலுக்கு இருவேறு முகமில்லை.அதன் பாத்திரம் ஒன்றுடனொன்று உறவுடையது.மொழிவாரியாகவும்,இனவாரியாகவும் பிளவடைந்த இந்தத் தேசமக்கள்,காலனித்துவக் கொடுங் கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் துன்பமானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு.நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே, அந்நியர்களும் நம்மை-நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்குப் பட்டுடுத்திப் பாய்விரிப்பதென்பது மிகவும் கவலைக்கிடமானது.இதற்கு பெயர் "புரட்சியை நோக்கி அமைப்பாவது-மக்களை அணித்திரட்ட(...)"என்ற வாய்ப்பாடு இதுவரை இயக்கவாத மாயையின் தொடராகவே மேலெழுகிறது.மக்களை நடைபிணமாகப் பார்த்த அன்றைய இயக்கங்களின் அதே பாணிக் கருத்துக்களை மேலும்"புரட்சி-அமைப்பாவது-மக்களை அணிதிரட்ட"என்ற வர்ணமுலாம் பூசுவதால் கடந்தகாலத் தவறுகள் மறைந்துவிட முடியாது.

நமது சமுதாயத்தின்"தேசியவிடுதலை"ப்போராட்ட வரலாற்றில் கட்சி-அமைப்பு அரசியலே மறுபரிசீலனைக்குட்பட வேண்டியது.அது,குறித்துரைக்கும் போராட்டச் செல் நெறியே பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, வருடக்கணக்காக அதன் அறுவடைகள் குறித்து அலச வேண்டிய சூழலில் திடீர் கட்சி ஆரம்பித்தலென்பது மக்களைச் சுத்த முட்டாள்களாக்குவது.எமது மக்களை நம்பாத அரசியற் கொள்கைகள்-தலைமைகள் அந்நிய நாடுகளில் இருந்தபடி, புரட்சிக்குப் புதுப்புது விளக்கங்களை அள்ளி வீசுகின்றனர்.

புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழும் தமிழ்பேசும் இலங்கை மக்களது அரசியல் வாழ்வில்-சமூகப்பிரக்ஜையில் சமுதாய ஆவேசமாகிக் கொண்டேயிருக்கும் "இனவொதுக்கலுக்கு"எதிரான தமிழ்த் தேசிய அபிலாசையானது எந்தத் தடயமுமின்றித் தனது பங்களிப்பைத் தேசியப் போராட்டச் சவாலாக விதந்துரைப்பது இன்றைய நெருக்கடிமிக்க வன்னியுத்தத்துக்குப் பின்பான சூழலில் சாத்தியமாகமுடியும்.இதைக் கணித்து உள்வாங்கும் ஆதிக்கச் சக்திகள் பழைய இயக்கத் தொடர்ச்சிகளை மெல்ல உசுப்பேற்றித் தமது சேவகர்களாக்குவதில் "புரட்சி-கட்சி"எனக் மண் குதிரில் நின்று புலம்ப வைக்கிறது, நமது "தோழர்களை" இன்று!! இந்த மண்குதிர் நம்புவதற்கேற்ற படிமங்களைப் புரட்சிகர மொழிவுகளுடாகச் சொல்லும்போது ஒரு சிலர் மயங்கவும் முடியும். எனினும்,இது ஆபத்தான விளைவுகளின் நடுவே பரிதாபகரமாக மக்களை மேலும் முட்டாளாக்குவதற்கு மக்கள் முட்டாள்கள் அல்ல!

இலங்கை மக்கள் தமக்குள் இருக்கும் அரசியல் கயர்வகளை இனங்கண்டு,அவர்களது அரசியலை மறுக்காதவரையும் எவரும் புரட்சிகரச் சக்தியாகத் தம்மை இனங்காட்டி நம்மை ஏமாற்றித் தமது தரகு வேலையைச் செவ்வனவே செய்வார்கள்.இதுவே,நமது மக்களது விடுதலைக்கு முட்டுக்கட்டையான அரசியலாகவும் மீளவும் கொலைகளைச் செய்யும் இயக்கவாதமாகவும் நகர்கிறதுக்குக் கட்டியம் கூறுகிறது.



ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

22.06.10

Donnerstag, Juni 03, 2010

வினவு,மற்றும் தளங்களில் லீனாவின்எழுத்துக்கான...

போராட்டமென்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல.


(வினவு,மற்றும் தளங்களில் லீனாவின்எழுத்துக்கான ஆதரவு-எதிர்க்கருத்தாடல்கள் தொடக்கிவரும் கதையாடல்கள் குறித்து விளங்க முற்படுதல்)


ர்க்கப் போராட்டமென்பதும், ஒவ்வொரு வர்க்கமும் தனது வர்க்கத் தளத்திலிருந்தபடி அதைச் சிதையவிடாது பாதுகாக்கும் சிந்தனை-கருத்துக்களை விதைப்பதில் ஆர்வமாகவும்-பாதுகாப்பு வியூகத்திலும் முழு நாளையுஞ் செலவு செய்தே வருகிறது.


லீனா மணிமேகலையது படைப்புச்சார்ந்து வினவுத் தளத்தில் எழுந்த அனைத்துவகைக் கருத்துக்களையுஞ் சொல்வதோ அன்றி அது நோக்கி நகருவதோ சாத்தியமில்லை.எனினும்,குறிப்பட்ட வட்டத்தில்புரட்சிகர-எதிர் நடவடிக்கையென சுற்றமுனையுந் தருணங்களில் அனைத்தையும் குத்தகையெடுப்பதன் தொடர் நிகழ்வாக மாறும் மனித சுதந்தர மறுப்பில்,அவற்றை நோக்கிச் செல்வது சாத்தியமே.ஏனெனில்,போராட்டமென்பது தற்செயல் நிகழ்வல்ல.அது,பல் முனைகளில் தினமும் இயங்குவது.


இன்று பேசத்தக்க பிரச்சனைகள் இரண்டு.அவை, நவ காலனித்துவத்துக்குப்பின்பான தமிழ்ச் சமூச நகர்வுக்குள் நிகழ்பவை.


ஒன்று,தமிழ்ச்சமூகத்தில் காலகாலமாக நிறுவனப்பட்ட பெண்சார்ந்த மதிப்பீடு-முரண்பாடு,மற்றது, பல்தேசியக் கம்பனிகளது தெரிவில் புதிய மூலதன இயக்கத்தில்சிதைந்த தமிழ்பேசும் மக்களது சமூகவாழ்வு.இதுள், இப்போது நான் முனைவது பெண்சார் மதிப்பீடு அல்லது, முன் தீர்ப்புக் குறித்த விவாதப்போக்கு என்பதன் நகர்வில் என்வரையான புரிதல் அல்லது உரையாடலென...

உடமை வர்க்கம் தனது அதிகாரத்தின்வழியே சிந்திக்க முனையும் சிக்கலில், தமது இருத்தலைக் குறிவைத்துச் சிந்திப்பது.இதனிடம் எந்தத் திருத்தமும் நடைபெறுவதற்கான சூழலை அவர்களது வாழ்நிலை(சமீபத்தில் ஜேர்மனிய ஜனாதிபதி கோஸ்ற் கோலர் மக்களிடம் உண்மையொன்றைப் போட்டுடைத்தார்.அவ்கானில் ஜேர்மனியத் துருப்புக்கள் வர்த்தகக் காரணங்களுக்காவும் களத்தில் நிற்பதாகவும்,பொருளாதார ஆர்வங்களது நலனும் சம்பந்தப்பட்டதெனச் சொன்ன மறுநிமிடம் அவர் பதவி விலக வேண்டி வந்ததை ஞாபகப்படுத்தும்போது இந்த அதிகாரங்களது வர்க்கச் சார்பு எதுவரையென்பது புரியும்) வழங்காது.சமூக வாழ்நிலையே மனித உணர்வுகளைத் தீர்மானிக்கிறது.என்பதன் நியாயக் கூற்றின்வழி எவன்(ள்) சிந்திக்கிறான்(ள்) என்பதைவிட,ஒவ்வொருவரும் பூச்சுற்றும், "விடுதலை,சுயநிர்ணயவுரிமை,புரட்சி"என்பது குறித்துச் சாமானிய மக்கள் இனிப் புரிந்தாகவேண்டும்!நாம் வர்க்க சமுதாயத்தில் வர்க்க அதிகாரங்களுக்குள் வாழ்கிறோம்.இங்கே,மனிதர்களது தேவைகள் உடமை சார்ந்தும் அதிகாரங்களைக் கடைப் பிடிக்கிறது.இது, பொதுவான மனிதர்களுக்கானவொரு அதிகாரத்தை மானுட நோக்குக்காகக் கடைப்பிடிப்பதில்லையென்பது உண்மையானது. இது பொருட்காப்பு-அதிகரிப்பு,சந்தையாக்கல்-மறுவுற்பத்தி எனத் தனது அதிகாரத்தைக் கட்டியுள்ளது.

இந் நிலையில்,பெண்ணடிமைப் போராட்டம் எப்போதும் பொருளாதாரத்தோடு பின்னப்பட்டுள்ளது.பெண்களின் அன்றாட வாழ்வுக்கான அடிப்படை உழைப்பை நிலைப்படுத்தும்போது "இத்தகைய பெண்மதிப்பீடு உடைவதற்கான வாய்யுண்டு என்பவர்கள்" கயவர்கள். பண்பாட்டுமாற்றத்தைக்கொண்டியங்கும் பொருளாதாரவுறவுகள் மெத்தனமாக மொழித்தார்ப்பார் குறித்து மௌனிக்கிறது.இது பற்பல தளங்களில் நிறுவனப்பட்ட தொடர்ச்சியை வற்புறுத்துகிறது.அதை உடைப்பதற்கு லீனா மணிமேகலையது கவிதையுலகு தமிழ்ச் சமூகத்தில் சில வினைகளையாற்றுவதை மறுப்பதென்பது சரியானவொரு பார்வையாகாது.


சமுதாயத்தை மாற்றத்துடிக்கும் முயற்சியிலுள்ளவர்கள் வானத்திலிருந்து நேரடியாகப் புவியுள் குதிக்கவில்லையென்பது உண்மைதானே?இதை லீனாவினது திசையில் பொருத்துவதில் என்ன தவறுள்ளது?


கயவர்கள் இந்தவுலகத்துள் மதவாதிகளாகவும்,போலிப் புரட்டற் "புரட்சி" பேசுபவர்களாகவும்,தேசியவெறியர்களாகவும்,இனவாதிகளாகவும்,அப்பட்டமான கொடிய சுரண்டற்காரர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆக,இந்தச் சமுதாயத்தில் நிலவும் அனைத்துப் பரிணாமமும் எல்லோரிடத்திலும் உள.

இஃது,வெவ்வேவாறான சூழ்நிலைகளுக்கிணங்க உணர்வினது உந்ததுதலால் உருவங்கொண்டு வெளிப்படும்.அஃதே,ஒருவரை அளக்கும் அளவுகோலாக இருக்கமுடியாது.ஏனெனில், நாம் இயக்கத்திலிருக்கிறோம்(இஃது அமைப்பைச் சொல்லவில்லை. மாறாக, காரண காரிய-இயக்க விதிக்கமைய என்பதாக விரிவுறும்).எனவே,நம்மிடம் இருக்கும் அனைத்தும் யதார்த்தமாகச் சமூகத்துள் இருப்பவை-நிலவுவை.இதிலிருந்து மீண்டு,நாம் காணும் ("கற்பனையுள் வடிக்கப்பட்ட மனிதர்")அந்தத் மனித நிலை உருவாகுவதற்கு நீண்ட காலம் நமக்குள் போராட்டம் நிகழுகிறது.

இதற்குள் நமது ஆயுள் முடியலாம்.

We learn to accept ourselves,when we are accepted by others the way we are.

இதற்கு மேல் நீங்களோ நானே எவ்வளவு முனைந்தும் எமது நிலையைத் தாண்டிவிடத் தருணங்களில்லை.

நாம் வாழும் நிலை அத்தகையது.


எம்மினத்துள் ஊடுருவியுள்ள கருத்தியல் ஆதிக்கமானது அதிகாரத்துவங்களின் வழி தோன்றியது.இது காலாகாலமாகப் பெண்களை அடிமைத்தனத்துள் இருத்திவைக்கும் பண்பைத் தன்னகத்தே கொண்டியங்குகிறது.இது,புரட்சியைச் சொல்லிப் பெண்ணினது சுதந்திரத்தைக் குறிவைக்கிறது.தாம் காணும் "மாதிரிப் பெண்ணை"உருவாக்குவதற்கு முனைகிறது.பெண்சார் சிந்தனையைத் தமது நோக்கிற்கிணங்கப் புரிய முனைகிறது. தேர்வே இல்லாது, ஒவ்வொருவரும் எடுத்துப்போடுவதிலுள்ள "மேற்கோள்கள்"அவர்களுக்கேற்பட்ட அநுபவம்"விடுதலை"என்ற ஒன்றின் முதுகினிலிருந்தே சவாரிவிடுவதால் அது,புரட்சியாக இருந்தாலென்ன அல்லது,எதிர்ப் "புரட்சியாக"இருந்தாலென்ன,அந்தந்தக் கருத்துக்களுக்குப் புலப்பட்ட தன்னிலைகள்-தெரிவுகள் குறித்து நிலவுகின்ற பொருளாதாரக் கட்டமைவின் இன்றைய சிதைவிலிருந்து மீண்டுவரும் எல்லா வதைகளையும் குறித்தும் இப்போதைக்கு பெண்விடுதலை நிமித்தம் பேசிக் கொள்ளலாந்தாம்.இதன் அபத்தமான புரிதல் வினவுத் தளத்தில் அதிகமான வாசகர்களது கருத்திலிருந்து புரிந்துணரத்தக்கதாகவேயிருக்கிறது. பற்பல ஆணாதிக்க உடலானது தத்தமது குடும்ப"ப் பெண்ணினது தோளில் அமாந்தபடி கொண்டையில் பூவைப்பதில் புரட்சிகர நியாயங்களை அடுக்குவது சரியாகாது.

இன்று, லீனாக் குறித்தான புரிதலானது நடுத்தர வர்கத்துக்கேயுரிய இறுமாப்பும்-ஆதிக்க வாதமும் நிறைந்த கூட்டுக் கலைவையான உளவியலாகும்.இதை எந்தத் தத்துவத்துடனும் ஒப்பு நோக்க முடியாது.இஃது,பேசுவது புரட்சியும் இல்லை-பெண்விடுதலையுமில்லை.இத்தகை விவாதங்களின் பாரிய அரசியலூக்கம் ஒழுங்கமைந்த பொருளாதாரப் பலத்துடனும்,புரட்சிகரமான நகர்வுக்கும் எதிரான இயங்குதிசையில் தகவமைக்கப்பட்டு உருவாகிறது.ஒடுக்குமுறைகள் நிலைபெறுகின்ற எந்தவொரு சூழலிலும் பன்முகத்தன்மையிலான வகைப்பட்ட ஒவ்வொரு நிகழ்வுறூக்கத்திலும் நான் என்பது விலத்திப்போவதை உணர்வதில் பெண்நிலைசார் கருத்துக்களது தெரிவில் லீனாவினது கவிதைகளுக்கான சில குறியீடுகள் உண்டாகிறது.அதை மறுப்பதில் எந்தப் புரட்சி பெண் நிலையில் மாற்றத்தைப் பண்ணிவிடும்?

இத்தகைய களவாணிப்பேர்வழிகளைப் புரிவதான தருணத்தைச் சொல்வதாகவிருந்தால்" சமுதாயவாரியான பொதுப் புரிதலென்பது கெட்டிதட்டிய குட்டிப் பூர்சுவா எண்ணங்களால் நிரம்பி வழியும் இந்த உளவியலோடு வாழ்பவர்கள் தமக்கேயுரிய இறுமாப்போடு உலகைத் தமக்குள் தகவமைக்கின்றனர்"எனப்பகர முடியும்."இத்தகையது"என்ற நுண்ணிய வித்தியாசத்தை உய்துணரத்தக்க மனதுடைய "அறிதலில்"தமிழ்ப்பண்பாட்டு சமூகத்தன்மையின் விருத்தியானது எந்தெந்தத் திசைகளில் மனிதவாழ்வைச் சிக்கலிட்டுள்ளதென்பதைக் குறித்தான சிந்தனை வெளியில் மட்டுப்படுத்தப்பட்ட பெண்நிலைசார் புரிதலென்பது சம்பந்தப்பட்டவர்தம் புரிதலேயொழிய அஃது, சமூகத்தில் இயங்கும் பெண்நிலை குறித்தான பெண்களது எதிர் செயற்பாட்டினது(லீனாவினது கவிதைகள்வகைப்பட்ட சொல்லாடல்கள்) குற்றமில்லை.

இதற்கேற்ற சுதந்திரத்தை இவ்வமைப்பு வழங்கும்போது இதன் சமூக யதார்த்தம் தனிநபர்வாதமாக மாற்றப்படுகிறது.அதன் உச்சம்தாம் தற்போதைய லீனாமணிமேகலைப் பிரச்சனையிலும் மையங்கொள்கிறது!

இஃது, தனது ஆயுதமாக வசை பாடுதலையும்,பழிபோடுதலையும் ஒரு உளவியல் யுத்தமாகக்கொண்டு புரட்சி-பெண்விடுதலை வழிபாட்டை முன்நிறுத்தி கூப்பாடுபோடும்.அதையே அதீதத் தேவையாகவும் வலியுறுத்தும்.இதை ஏற்காத தளத்தை எப்படியும்.உடைப்பதில் அது கண்ணும் கருத்துமாகக் காரியமாற்றும்-போலிப் புரட்சிபேசும்!

எனவே, நாம் மிகவுமொரு கொடிய ஆதிக்கக் கருத்துக்குள் முடங்கியுள்ளோம்.நமது சிந்தனா முறை மிக மிகத் தனிநபர் வாதக் கண்ணோட்டமாக விருத்தியுறுகிறது.இதிலிருந்து எந்தச் செம்மையான செல்நெறியும் வெற்றி கொள்ள முடியாதுள்ளது!

இதுவொரு இருண்ட காலத்தை நமக்கு வழங்கிவிடுகிறது.

இந்த கருத்தியற் போரானது பல தளங்களிலும் முன்னெடுக்கப் படுகிறது.பத்திரிகை-செய்தித் துறை,வானொலி-வானொளி,கல்வித்துறை மற்றும் இணையத்தளமென இது விரிந்து கிடக்கிறது.சிந்தனை மதிலொன்றை உடைப்பதற்கான எல்லாவகைக் கனவுகளிலும் மார்க்சியம் குறித்த வர்க்கப்போராட்ட நெறியாண்மை கேள்விக்குட்படுத்தப்பட்டு வருவதில் கடந்த நூற்றாண்டு ஐரோப்பியச் சிந்தானமுறைமையில் அகப்பட்ட அனைவரையும் முன்தள்ளிப்பார்த்த இன்றைய"திறந்த சமூகத்தில்"லீனா மணிமேகலைக்கான தார்மீக-எதிர் நியாயங் குறித்துப் பேசுவதன் தொடரில் பல தளங்கள் முனைவுறுவது எதன் தெரிவின் நிபந்தனையென்பதே இங்கு முக்கியமானது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
03.06.10

Donnerstag, Mai 27, 2010

ஜீ.ரீ.வி(GTV) ஊடக தர்மமும்:கருத்தின்பால் காரணந் தேடுதல்!

நாடு கடத்தப்பட்ட தமிழீழமும்,
ஜீ.ரீ.வி(GTV) ஊடக தர்மமும்:

கருத்தின்பால் காரணந் தேடுதல்!



வீழ்த்தப்பட்ட பிரபாகரனும்,கற்பனைத் தமிழீழமும் சுடுகாட்டுக்குப் போயினும் புலத்தப் புரட்சிப் புலிகளோ, புதுப் புதுத் தொனிகளில் ஊடகங்களை ஆக்கிரமித்தும்,காட்சிவழிக் கருத்தாடல்களின் துணையுடன் மக்களை முட்டாளாக்குவதில் இந்தப்புலத்துப் பினாமிப் புலிகளது தவிப்போ பெருந்தொல்லையாகும்.மக்களிடம் கொள்ளையடித்த செல்வத்தின் துணையுடன் அதே மக்களை மேலும் மொட்டையடிப்பதில்"ஆரு உண்மையான புரட்சிக்காரர்கள் " எனப் பூச்சுத்தும் இந்த மோசடிப் பேர்வழிகளைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பதும் ஒருபகுதியான ஜனநாயகப் போராட்டம்தாம்.மக்களிடம் சேர்த்த பணம் எவரிடம் போய்ச் சேர்ந்ததெனப் பூச் சுற்றப்போகும் இந்தத் தொலைக்காட்சி,நாளை அப்பணம் கே.பி. என்ற கேடியிடம் போனதாகவும் கூறமுடியும்.இது,ஒரு தொடர் கதையாக மாறமுடியும்.இருப்பினும் நாம் வேறு திசைகளை நோக்கிச் செல்ல வேண்டும்.அது,அவசியமானது.


"வெளிச்சமென்றும்,அரசியல் ஆய்வு" எனவும் GTV கொட்டும் கருத்துக்களைக் குறித்து மிக நேர்த்தியாக அணுகவேண்டியுள்ளது. இணையத்தில் எழுதும் எழுத்துக்களைவிட இலவசமாகப் புலம்பெயர் தமிழர்களது வீட்டுக்குள் பிரேமும்,ஜெகனும் அத்துமீறி வந்து கொட்டும் புலிவழி இனவாதக்கருத்துக்களோ, பன்மடங்கு மோசமான விளைவுகளை இலங்கைவாழ் தமிழ்மக்களுக்குக் காலப்போக்கில் ஏற்படுத்தப்போகிறது.


ஒரு புறம் புலிகளது உறுப்புக்களான புரட்சிப்படைகள்,மறுபுறம் தேசிய விடுதலைக்கு, மீளப் புதுவிலக்கணந்தரும் புலிப்பினாமி ஊடகயுத்தமென இன்றைய சூழல் மிகக் கெடுதியாக நகர்கிறது.இவற்றுக்கு மத்தியில் புதிய"படைப்பாளிகள்" புலிகளது கொலை அரசியலில் நீந்திய தமது கடந்தகாலத்தை மறுத்து, வலம் வருவதற்கேற்ற தயாரிப்புகளில்... கடந்த பல வருடங்களாக வலையுலகில் மனிதநேயத்துக்காக நாம் தட்டந்தனியனாகப் போராடியபோது அதை எதிர்த்த பல புலிக்கேடிகள் இப்போது, "படைப்பாளிகள்-புரட்சிகரப் போராளிகளாக" வலம் வர, நாம் சந்தர்ப்பவாதிகளைத் தோலுரிக்க அடுத்த வலம் வருவதும் அவசியமே!சாகவில்லை!சந்தர்ப்பவாதிகளை-சதிகாரர்களை-புரட்சி பேசிப் புலிக்கு லிங்குகொடுத்தவர்களை,புரட்சிகரக் கட்சிக்கு ஆள் சேர்க்கும் அந்நியச் சேவகர்களை, நாம் தோலுரித்து மக்கள் முன் நிறுத்துவதே இப்போதைய அரசியல் தேவை.அதைச் செய்யாதிருப்பது அரசியல் தற்கொலையே!


சந்தர்ப்பவாதமே உலகினில் அதிக கேடு விளைவிப்பது!


அஃது,இப்போது கடந்தகாலப் புலி விசுவாசிகளது உயிர் வாழ்வாக இருக்கலாம்.ஆனால்,நாம் இவர்களது அன்றைய மக்கள்விரோத இயக்கவாதக் கருத்துக்களை-கொலை அரசியலை ஊக்குவித்த மனவியாதிகளை மறக்க முடியுமா நண்பர்களே?


கேடுகெட்ட"படைப்பு"வாதிகளே கேளுங்கள்!


மே 18 எனத் தொடர்ந்த புலியினது மிச்சசொச்சத்தை எதிர்த்தும்,ஆதரித்தும் கருத்தாடும் அதர்ம அரசியல் போக்கில் வந்து குதித்துவிழும் முத்தான பரப்புரைகளது தெரிவில் புரட்சிக்குப் புதுவிளக்கமிடும் புதிய யுகத்தில் புலியினது இருப்பு இன்னுஞ் சிதறவில்லையென்பதும்,அதன் அந்நியச் சேவை தொடர்கிறதென்பதும் மறுத்தொதுக்க முடியாத புரிதற்பாடாகும்.இதையுங் கேளுங்கள்!!


எவன்(ள்)எந்தெந்தத் திசையில் புலிக்கான தளத்தை மீளத் தகவமைத்துப் புலிகளது எஜமானர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனரென்பதை மிக இலகுவாகப் புரிந்துவிட முடியாது.இலங்கை அரசினது புதிய தெரிவுகளாக முன்னெடுக்கப்படும் இராணுவக்கெடுபிடிகளது நகர்வுக்கு வலுச் சேர்ப்பதில் ஆதாயமடையமுனையும் புலத்துப் புலிப் பினாமிகள் மக்களது அவலங்களை வைத்துப் பிழைக்கமுனையும் அரசியலானது புரட்சியின் பெயரால் இனி நம்மை முட்டாளாக்குமானால் அதை அனுமதித்த குற்றத்திற்காக நாம் மக்களைக் குறித்துப் பேசுவதே வீணாகவேண்டும்!

ஒவ்வொரு குழுவும்,அடுத்த குழுவுக்குத் தெரியாதபடி புலிகளது எஜமானர்களால் வளர்த்துவிடப்பட்டுள்ளது.இத்தகைய குழுக்கள் தத்தமக்கு "நியாயமான" வகைகளில் புரட்சி-விடுதலை குறித்துப் பேசுகின்றன.இவர்களில், எவரும் மக்கள் சக்தியெனப் பேசுவதற்கும்,தம்மை முதன்மைப்படுத்துவதற்கும் ஏற்ற தருணங்களைப் பற்றிக்கொண்டு மற்றவர்களை எதிர்க்கின்றனர்.இவர்கள் அனைவரும் ஒரு தளத்தின் பல்வேறு பிரிவுகளாக வளர்க்கப்பட்டு வழி நடாத்தப்படுகின்றனரெனப் பெரிதும் நம்பலாம்.இதை உரைத்துப் பார்க்க ஜீ.ரீ.வீயினது கருத்துக்கட்டும் வியூகத்தில் நம்மைக்கொஞ்சம் இணைக்கும்போது மெல்லப் புரிந்துகொள்ளும் ஆற்றலை இனங்காணமுடியும்.அவ்வண்ணமே, புரட்சிக்காரர்களது இணைய-வலை ஊடகங்களுமென நம்பலாம்.


இப்போது,திருடனே ஊரினது காவற்காரனாக வலம் வருகிறான்-திருடியினது கைகளில் ஊர்க் கோவிலது சாவி...இப்படித்தாம்,புலம்பெயர் புரட்சிக்கார வேஷமும்,போராட்ட வியூகமும்.இதற்குள்தாம் எத்தனை கோலம்-எத்தனை கோட்டம்?



புலத்துப் புலிப்பினாமிப் புரட்சிக்காரர்களது இந்த வகை அரசியல், எம்மினத்தை இன்னும் அரசியல் அநாதையாக்கும் சூழ்ச்சிமிக்கப் பயங்கரவாதச் செயற்பாடாக விரிந்து முழு இலங்கையையும் ஒரு பெரும் இனவாதத் தீக்குள் சிக்க வைக்கும் கபட அரசியலாகும்.இதனால், மக்கள்சார் அரசியல் வகைப்பட்ட எந்த முன்னெடுப்பும் பின் தள்ளப்பட்டு,ஆயுதக் கலாச்சாரத்தில் மூழ்கிவிட்டர்வகள் தம்மையும் தமது இருப்பையும் தக்க வைப்பதற்கான இனவாத அரசியலையும்,அதுசார்ந்த கருத்தியல்போரையும் தொடக்கி நமது மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் அழித்துவர மீளத் திட்டமிடுகின்றனர்.பிரபாகரனுக்கு நிகரான இன்னொரு பிரபாகரன் வருவதை நாம் அனுமதிக்கப் போகின்றோமா?இல்லை,இலங்கையில் சிங்கள-புலிப்போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்துள் சிவில் சமூக உருவாக்கத்துக்கான முன்னெடுப்புகளை முடுக்கிவிடுவதற்கான அம்பலப்படுத்தல் அரசியலில் துடிப்பாக இயங்கப் போகிறோமா?


தீர்மானிக்கவேண்டும்-இதை,இப்போதே தீர்மானித்து இயங்கவேண்டும்!வேடதாரிகளை-புரட்சி,விடுதலை பேசும் கயவர்களை இனங்காண்பதே இன்றைய அதியவசியமான தேவை!


இப்போது,இந்த நயவஞ்சகர்களால் புரட்சிகரமான போக்குகள் மிகவும் பலவீனமாக்கப்பட்டு, மக்கள் ஐக்கியம் பாழடிக்கப்படுகிறது.இஃது, தமிழர்களின் அனைத்துத் தார்மீக உரிமைகளையும் இல்லாதாக்கி வருகிறது.எது எப்படி நடைபெற வேண்டுமோ, அஃது, அப்படி முன்னெடுக்கப்படும் அரசியில் வியூகத்தைக் கொண்டியங்கும் புலிகளது உறுப்புகள் தமக்குள் மோதிக்கொள்ளும் பொருள்வழிப்பட்ட முரண்பாடுகளைக்கிடப்பில்போட்டபடி அரசியல் இருப்பைப் புரட்சியின்பெயரால் தொடரமுனையும் கேடுமிக்க அரசியலை நாம் புரிந்துகொண்டுள்ளோமா?


இக் கேள்வி அவசியமானது.நாம்,இதைப் புரிந்துள்ளோமா-இனங்கண்டுள்ளோமா?எவருக்கெவர் "மக்கள் சக்தி"லேபிள் ஒட்டுவது?புலிக்கு வக்காலத்துவேண்டும் புலியுறுப்புகளுக்கும், புரட்சிக்கும் என்னடா தொடர்பு?புரட்சியென்பது மே 18 நயவஞ்சகர்களது முற்றத்து மரமா?அல்லது, அவர்களது கோவணத்துள் சுருங்கும் உலகமா?


இத்தகைய நபர்கள்-குழுக்கள்சார் அந்நிய எஜமானர்களுக்கேற்ற இயக்க-கட்சி நலன்கள் மக்களின் இருப்பைச் சூறையாடுகிறது.அது மனிதத் தன்மையே இல்லாத பயங்கரப் பாசிசத்தை இலங்கைத் தீவில் மீளக்கட்டியமைக்கப் பாடுபடுகிறது.இதற்கேற்றபடி மே 18 இன் தொடர்புகள் விரிந்து மேவுகிறது.அதைக் கொண்டியக்கும் தளங்கள் புதியபல தொடர்ச்சிகளை மிக விரைவாக இயங்கக் கோருகிறது.இந்தப் புதை சேற்றில் இறங்க நம்மை அனுமதிக்கும் ஒவ்வொரு கணமும், நாம், எமது மக்களது உயிரைப் பறிப்பதில் பங்களித்தவர்களாவோம்!இங்கே, மானுடவுரிமை,ஜனநாய மரபு யாவும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு,கட்சி-இயக்க ஆதிக்கம் வன்முறைசார்ந்த அதிகாரமாக நிறுவப்படுகிறது.இந்த வன்முறைசார் அதிகாரமானது எந்தத் திசைவழியை மக்களின் விடுதலைக்கு வழங்குகிறதென்றால்-மக்களின் விடுதலையென்பது குறிப்பிட்ட அதிகார வர்க்கத்தின் நலன்களைக் காக்கும் திசைவழியையே மக்களின் விடுதலையாக மக்கள் குழுமத்தில் சமூக எண்ணமாக விதைக்கிறது.இது மிகக் கொடுமையான மக்கள் விரோதமாகும்.மேலும் பிறிதொரு பாதையில் மக்களின் அனைத்து வளங்களையும்(ஆன்ம-உடல் மற்றும் பொருள்)தமது இருப்புக்கு இசைவாகத் திருடிக் கொள்கிறது.இதைத்தாம்,இந்தக் கேடுகெட்ட புலிவழிப் புரட்சிக்காரர்கள் எமக்குப் புரட்சியெனப் பூச் சுற்றுகிறார்கள்-மக்கள் நலக் கோரிக்கை-அரசியல் என்றும் புனைகிறார்கள்.


நாடு கடந்த தமிழீழ அரசு,மே 18 இயக்க அரசியல் வியூகம்,தேசியவிடுதலைக்கான மீள் போராட்ட வடிவங்களெனப் பிரகடனப்படுத்தப்படும் ஒவ்வொரு திசைவழியும் புலத்துப் பினாமிப் புலிகளுக்கு வரும்படியை உயர்த்தலாம்.இந்த வரும்படியை அவர்கள் தமது அந்நிய எஜமானர்களிடமிருந்தும்,நமது மக்களது உண்மையான பங்களிப்பிலிருந்தும் பெற்றுக்கொள்வர்.ஆனால், இந்த வகை அரசியலை தமிழீழத்துக்கான இறுதி இலட்சியமாக விதந்துரைக்கும் பரப்புரைகள் மக்கள் வெளிக்குள் விதைக்கப்படும்போது,இது பாரிய பின்னடைவை இலங்கையின் ஜனநாயக முன்னெடுப்புகளுக்கு வழங்கும்.இத்தகையவொரு சூழலில் இலங்கை அரசியல் நகர்வு நிச்சியம் தமிழ் பேசும் மக்களின் அனைத்துவகைவுரிமைப் போராட்டத்தையும் சிதறிடித்து, தமிழ் மக்களைப் புதிய வகையில் ஓடுக்கும் சட்டரீதியான யாப்புகள் இலங்கைச் சிங்கள அரசால் எய்யப்பட்டு,தமிழ் மக்களின் தலையில் தீயை அள்ளிக் கொட்டும்.இங்கே, பயன் பெறுவது முன்னாள் ஆயுதக் காட்டுமிராண்டிகளின் தலைவர்களும்-மாபியாக் கும்பல்களுமே என்பது உண்மையானது.இதற்கு, வக்காலத்து வேண்டுவதே ஜீ.ரீ.வி யினது(GTV) வேலையாக இருக்கிறது.இவர்களைப் புலம்பெயர்வாழ் மக்கள் நிராகரிப்பதென்பது, தெருமுனையில்வைத்து இவர்களை அம்பலப்படுத்துவதிலிருந்து ஆரம்பிக்கிறது.


இதைச் செய்தாக வேண்டும்!யாரு செய்வது?; "புதிய படைப்பாளிகளா" அல்லது, "புரட்சிக்காரர்களா" என்பதே சர்ச்சை!ஏனெனில்,இவர்கள் யாவரும் ஏதோவொரு வகையில் புலிப்பினாமிகளதும்,அந்நியத் தேசங்களதும் சேவகர்களாகவே இருக்கின்றனர்!இதை உய்துணர வேண்டாமா?



இலங்கையில் புலிகளின் ஆயதப்படைகளது அழிவுக்குப் பின்பான இன்றைய சூழலில் மக்கள் தமது பிரச்சனைகளுக்கான போராட்டத்தைத் தமது இருப்புக்கான போராட்டத்தோடு இணைத்து,ஜனநாயக ரீதியாக வீதிகளுக்கு இறங்கியாக வேண்டும்.இங்கே, இன,மத பேதங்கள் கடந்து மக்களின் கரங்கள் கோர்வைப்படுவது அவசியம்.இந்த நிலைமை உருவாகாதவரை பாசிச அதிகாரங்களை வீழ்த்த முடியாது.மக்களை அணிதிரட்டிப் போராட வைக்கும் சக்தி மக்களின் நலனில் அக்கறையுடைய குடிசார் அமைப்புகளிடமே தேங்கிக்கிடக்கிறது.அத்தகைய அமைப்புகள் வலுப்பெறுவதைத் தடுப்பதில் புலத்துப் புலிப்பினாமிகளும் அவர்களது எஜமான மேற்குலக அந்நிய தேசங்களும் மிகவும் துடிப்பாக இயங்குகின்றன.


பல பத்தாயிரம் உயிருண்ட ஈழக் கோசம் தமிழர் விரோதிகளுக்கு உவகையானது-அது பதவிக்கும் பகட்டுக்கும் வால்பிடிக்கும் புலிகளது எடுபிடிகளுக்குத் தேசவிடுதலைக்கான தெரிவு.இதை வைத்து மக்களை மீள மொட்டையடிக்கும் கும்பல்களோ மக்கள் புரட்சிகரமாக இயங்குவதை-சிந்திப்பதைத் தடுப்பதற்குத் தாமே புரட்சிகரச் சக்தியாக மாறுவேசம் போடுகின்றனர்.இதுகுறித்த புரிதல் நம்மிடம் மிக அற்பமாகவே இருக்கிறது.இவர்களை எங்ஙனமும் இலகுவில் இனங் கண்டுவிட முடியாது.இன்றைய இலங்கையின் பொருளாதார முன்னெடுப்புகள் யாவும் அந்நிய மூலதனத்தின் வரவுகளோடு தம் மக்களின் அதீத உழைப்பைச் சுரண்டி ஏப்பமிடும் பொருளாதார நகர்வாகவே இருக்கிறது.இலங்கையின் முழுமொத்தச் சமூக உற்பத்தியும் அந்நியர்களின் தயவில்(கடனுதவி மற்றும் அந்நியத் தனியார் நிதி மூலதனம்) உயிர்வாழும் தகமையுடைதாகவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது.


புலியை அழித்த பின் எழும் எந்தப் போராட்டமும் புலிகளது பாத்திரத்தில் அவர்களது எஜமானர்களது நலனுக்கேற்றவாறேதாம் நமது நாட்டில் நடைபெறும்!


இலங்கையிலென்ன,உலகின் எந்த மூலையிலும் எழும் எந்தப் போராட்ட வியூகங்களும் வெளிநாட்டுச் சக்திகளாலேயே தீர்மானிக்கப்பட்டு யுத்தமாக விரிவடைவதை நாம் எல்லோரும் ஓரளவேனும் நம்பித்தாம் ஆகணும்.


இந்தவுண்மை மிகவும் நேர்மையான அரசியல் அறிவினூடாகவே புரிந்துகொள்ளத் தக்கதாகும்.இங்கே எந்த முட்டுக்கட்டையுமின்றி (இயக்க வாத-தமிழ்த் தேசியவாத மாயைகள் மற்றும் முஸ்லீம் தேசிய வாத- தலித்துவ வாதங்கள்) வர்க்கச் சமுதாயத்தின் வர்க்க அரசியலைப் புரிந்துகொள்ளும் அறிவே, இலங்கையின் இன்றைய இனப் பிரச்சனையுள் அந்நிய சக்திகளின் மிகவும் கீழ்த்தரமான யுத்த மேலாதிக்கத்தைப் புரிய முடியும்.இத்தகைய பார்வையின்றி நாம் வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லும்.இந்த வர்க்கப் பார்வையை அந்நிய மேலாதிக்க சக்திகளது கைக்கூலிகளே இப்போது மும்மரமாக முன்வைக்கும் தமிழ்ச் சூழலில், எவர் புரட்சிகர அணியின் தொடர்ச்சியென எவரும் இலகுவில் புரியமுடியாது!இதுதாம்,நமது முதற் தோல்வி.இதன்வழி தொடரும் அனைத்துவகை அரசியல் வாதங்களும் நமது குருதியில் மீளத் தம்மை முன்னிறுத்தும் அரசியல் சூழ்ச்சியோடு நம்மை அண்மிக்கின்றன.இதை முறியடிப்பது அவசியமான பணி.புலியினது ஆயுதப்பலத்தோடு இருந்த அதே பாசிசச் சூழல் ,அவர்கள் அழிந்தபின்பும் அவர்களது எஜமானர்களால் நம்மீது நிறுவப்படுகிறது.அப்போது, புலிப்பாசிசம்;இப்போது, புரட்சியின் வடிவிலான கருத்தியல்-மற்றும் உளவியற் பாசிசம் மேலோங்குகிறது.


நாடு கடந்த தமிழீழ அரசு,அதன் செயற்பாடு மற்றும் ஈழத்துக்கான குரல் என்பதெல்லாம் பிரபாகரனது பாத்திரத்தை நிறுவமுனையும் பாதாளவுலக மாபியாகளது அரசிலாகவே இருக்கிறது.இது ஒருவகையில் தற்பெருமை கொள்ளுமொரு பழையபாணி அரசியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமுதாயத்திடம் மீளவும் தோற்றி வைத்துத் தனிநபர் மீதான அதீத நம்பிக்கையையும்,தலைமை வழிபாட்டையும் இன்னும் அதிகமாகத் தூண்டும்.இத்தகைய ஒரு சமூக உளவியலை எமது எதிரிகள் விரும்பியே நமக்குள் விதைக்கவும், அதை வளர்த்தெடுக்கவும் தீராத மனவிருப்போடு செயலாற்றுகிறார்கள். இவையெல்லாம், புதிய வடிவிலான நச்சு அரசியலாகும்.இதை உருத்திரகுமாரிடமிருந்து கற்க முடியாது-சேரனிடமிருந்து செரிக்க முடியாது!அதை, நாம்தாம் சுய தேடுதலின்வழி புரிந்தாகவேண்டும். இதைவிட்டுவிட்டு,மே 18 இயக்கத்தின் திசையில் கொடிபிடிக்க முனையும் எந்தக் கபோதிகளினது கூற்றிலிருந்தும் நாம் எதிர்கால அரசியல் வாழ்வைக் கற்கமுடியாதென்பதை உணர்வுபூர்வமாக விளங்க முனையவேண்டும்.


இந்தப் புரிதலைச் சிதைப்பதில் புலிப்பினாமிகளது ஊடகமான ஜீ.ரீ.விக்கு(GTV) அதிக அக்கறையுண்டு.அந்தத் தொலைக்காட்சியினது இருப்பில் இன்னொரு சதி பின்னப்படுகிறது.அதை வாந்தியெடுத்தும்-எதிர்த்தும் புலிகளது புரட்சிகரவுறுப்புகள் புரட்சி சொல்லித் தமக்குள் எம்மை உள்வாங்க முனையும் சதி அரசியல், புலிகளை மீளவொரு சக்தியாக-புரட்சிகர அணியாக இனங்காட்டப்போகிறது.இது,அபாயகரமான எதிர்புரட்சிகர அணியாக நமக்குள் மலரும்போது அதைப் புரட்சிகரச் சக்தியாகத் தூக்கி நிறுத்த நமக்குள் ஆயிரம் பேர்வழிகள் வலம்வருவர்-பற்பல தளங்களிலிருந்து.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.05.2010

Freitag, Mai 14, 2010

தமிழீழம் தொலைத்த நாடுகடந்த தமிழீழ அரசு

வரும் ,மே 18 மீளாத் துயில் எழுப்புவதற்கு முன்...



"உச்சரிக்கப்படும் நிகழ்வொன்றில் ஊஞ்சலிடும் மூச்சு
உயிர்மத்தின் நிலைப்பில் இதயத்தைத் தேடும் வளி
ஒப்பாரிக்கு உணர்வென்ற முகமூடி
அருவத்துள் இடிப்பதற்கு நம்பிக்கை என்றொரு பாத்திரம்


ஓலத்தில் கிழிபடக் காலத்தின் முனைப்பு
மாமிசத்தின் பிராண்டடிலில் கற்பிதம்
தேசமாய் மொழியாய்க் கலையாய்
காயிழந்தேன் தமிழுக்காக..."




ன்று 13.10.2010 , ஜீரி வீ(G TV) செய்தித் தொகுப்பாளர் நரேன் முன்னாள் புலி எம்.பி. சிவாஜீலிங்கத்திடம் பிரபாகரன்தாயார் பார்வதி அம்மாள் குறித்துப் பேட்டி எடுக்கிறார்.


பிரபாகரனது தாயார் பார்வதி அம்மாள் குறித்துப் பெரிய மனிதாபிமானிகளாக நடிக்கும் இந்த கேடுகெட்ட நரிகள், பார்வதி அம்மாளின் புதல்வன் "பாசிஸ்ட்" பிரபாகரனால் பழிவாங்கப்பட்ட எத்தனை பார்வதி அம்மாக்களையும்,அவர்களது வலிகளையும் கடந்த காலத்தில் பேசினார்கள்?


என்ன பெரிய மனிதாபிமானம் இந்த ப் பார்வதி அம்மாள் குறித்து...


எனக்குப் புரியவில்லை!


தேசமில்லாத தேசியம்:


தேசியத்தைச் சொல்லியோ அல்லது சுயநிர்ணயத்தைச் சொல்லியோ மீளவும் ,புலிப்பாணி அரசியலைப் புலிகளது அழிவில் தொடர விரும்பும் சமூகவிரோதிகளை நாம் இனங்கண்டாக வேண்டும்.இவர்கள், புரட்சிகரமான அரசியல் முலாம் பூசிப் புலிகளது மறுவடிவாமாக நமது மக்களுக்குள் ஊடுருவ முனைவது கண்டிப்பாக இனங்கண்டு முறியடிக்கப்படவேண்டும்.இல்லையேல் மீளவும் புலிப்பாணி அரசியலுக்காக மக்கள் செத்தாகவேண்டும்.





வன்னிப் புலிப் பாசிஸ்ட்டுக்கள் செய்த கொடுமைகளை, அங்கு வாழ்த மக்கள் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.நான் சுவிட்ஸ்லாந்தில் நின்றபோது சந்தித்த "பார்வதி அம்மாள்" சொன்ன திடுக்கிடும் தகவல்: "பிரபாகரன் ஒரு சொறியன்-சர்வதிகாரி மட்டுமல்ல ஒரு மனநோயாளியுங்கூடவென்பது" அந்தத் தாய்கூறிய பொன்வரிகள்.


கேடுகெட்ட புலிகளது பாசிச நடாத்தை, சொந்த மக்களையே வதைத்தெடுத்தது.இந்த இலட்சணத்தில் அவனது தாய் பார்வதிக்கு மனிதாபிமானம் கேட்கும் புலிக்கயவர்களைக் கண்டிக்க எந்த நாய்க்கும் வலுவில்லை!இந்த நாய்கள் வன்னி அவலம் குறித்து எழுதும் எழுத்தாளர்களது கட்டுரையைப்படித்துவிட்டு மொழியிழந்து வாழும்போதும் நடிகைகளது வனப்பில் மயங்கத்தாம் செய்கின்றனர்.தமிழ்நாடு சென்று ரம்பாவைக் கல்யாணஞ்செய்யும் புலிப் பினாமிகள் இப்போது புலிகளுக்குப் பொன்னாடை போர்த்த"மே-18"வருவதற்குக் காத்திருக்கிறார்கள்!


இத்தகைய துரோகிகள்தாம் இப்போது பிரபாகரனென்ற கொடுங்கோன்மை மிக்க சர்வதிகாரிக்கும்,அவனது அடியாட்களுக்கும் நினைந்துருக விழாவெடுப்பதில்,தமிழீழ மக்களுக்கான உரிமை என்று புலம்புகின்றார்கள்.அவர்களை என்ன பெயர் சொல்லி அழைப்பது?


இக்காலத்தில் அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு,தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது.


எனினும்,புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தில் பினாமிப் புலிகளாக உலாவும் தமிழ் மக்களது பிணம் தின்னிகளான இந்த முகமூடி மனிதர்கள், இப்போது, பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள். நம்மை-நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை இந்தப் புலியழிப்பு யுத்த்தில் குறியாகக்கொண்டியங்கியுள்ளார்கள்.


தமிழீழம் தொலைத்த நாடுகடந்த தமிழீழ அரசு:


புலிகளைக் காட்டிக் கொடுத்த நரிகள் "நாடுகடந்த தமிழீழ அரசுக்கான"தேர்தலை நடாத்திய கையோடு, மே 18, 2010க்கு இன்னொரு ரவுண்டு வருவதற்கான முன்னெடுப்புகளில் மும்மரமாகச் செயற்படுகின்றனர்.அழுகுரல்களினூடாகப் பணம் பண்ணப் பிணம் செய்தவர்கள், இப்போது பிணமானவர்களது வரலாறு பகிர்ந்து பணம் பண்ணப் பல முயற்சியில்...




புலன் பெயர்ந்த, புலம் பெயர்ந்து வாழும் தமிழ் வறுமைப்பட்ட ஜடங்கள் இன்னும் தாம் கற்றுக் குட்டிகள்தாமெனப் பகரும் செயற்பாட்டில் தமது வாரிசுகளைக் களம் இறக்கித் தம்மையும் சீரழித்துத் தமது வருங்காலச் சந்ததியையும் சீரழித்துச் சின்னாபின்னமாக்கி...


மாண்டுபோன தலைவரையும்,அவர்பின்னாலும்-முன்னாலும் யாருக்காகவோ செத்தவர்களை நினைந்துருகுவதால், ஒரு சமுதாயம் விடுதலை பெற்றுவிடுமென ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது.


தடார் புடாலென"மாவீரர்"தாலாட்டும்,துதிப்பும் மீளத் தலையெடுக்கிறது.ஆனால்,தாம் தோற்றுப் போனதும்,தமது தலைவர் சரணாகிச் செத்ததையும் குறித்து எந்தவொரு ஆய்வும்-விமர்சனமும் செய்து,திருத்திக்கொள்ள இவர்களால் முடியவில்லை.கேடுகெட்ட தமிழ் வியாபாரப் புத்தியுடைய சமூகக் கிரிமனல்கள் இப்போது எங்கும்" தமிழீழ அரசு,நாடுகடந்த தமிழீழ அரசு"வெனப் புலம்பியபடி புலம் பெயர் சமூகத்தின் முதுகில் குத்தியபடி...இதற்கு ஏற்றபடி"பேராசிரியர்கள்"எனும் போர்வையில் உலாவும் சேரன்,உருத்திருகுமார் போன்ற பொறுக்கிகளும் சித்தாந்த வலுக்கொடுத்து தமது குடும்பங்களுக்குச் சொத்துச் சேர்த்தபடி?...




இன்றைய GTV யின் கருத்துப் பகர்வுக்கமைய,நிலவுகின்ற அனைத்துத் துயரமும் சிங்கள இனத்தின் இனவாதத்தால் நிகழ்வதாகச் சாமானிய மக்கள் நம்புவதற்குத் தயாராகிறார்கள்.மாவீரர்களுக்கு விழாவெடுப்பதால் வீரமுடைய தமிழ் மக்கள் என்றோ விடுதலை பெறுவதாகவும் மீளவும் மொழியப்படலாம்.ஆனால்,உலகத்தின் இன்றைய தெரிவில் இலங்கையின் அனைத்து அரசியல் நிலைமைகளும் மாறிவிட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. இலங்கையின் இன்றைய முரண்பாடுகள் கட்சி-சட்டவாக்கம்,பாராளுமன்றம்,இராணுவ ஆதிக்கம் எனப் பார்க்கப்படுகிறது.இவைகளைத் தாண்டிச் சிந்திப்பதற்கு நமது சிந்தனைக் கருவறையில் மாற்றுப்பார்வைகள்-உலகப் பொருளாதாரவுறகள் குறித்துக் கருவூலம் கருக்கட்ட முடியாதுள்ளது,இந்த ஜீ.ரிவீ (GTV)ஜெர்னலிசத்தால்!


இலங்கையின் அரசியலை, இலங்கையிலுள்ள சிங்களவர்களுக்குள்ளும்,அவர்களது இனவாதக் கொக்கரிப்புக்குள்ளும் அடக்கிவிட"சிங்களத் தேசம்"என்று அடைமொழியைப் இடைவிடாது பயன்படுத்துவதில், தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு விடிவுதேடுவதாகப் பசப்புரைப்பதில் தமிழ் அரசியல் வியூகம் தனது இருப்பை நிலைப்படுத்துகிறது.இதை ஜீ.ரிவி போன்ற புலிகளது பினாமி ஊடகம் தொடர்ந்து வாந்தியெடுக்கிறது.


மறுபுறமோ,புலியழிப்பென்ற போர்வையில் தமிழர் தேசியவிடுதலையையே அழித்தெறிந்த இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து,இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த்த பிற தமிழ்குழுக்கள்-கட்சிகள், இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக எமக்கு முன் விரிகிறது!



இதை எங்ஙனம் முறியடிப்பது?:



1: புலிகளது அரசியல் நடாத்தையை விமர்சனத்துக்குள்ளாக்குவது,



2:புலிகள் கூறிய தமிழீழத்தை மீள் பிரிசீலிப்பது,



3:தமிழீழம் என்பதன் பொய்மைக்குள் பலியெடுக்கப்பட்ட மக்களையும்,அவர்களது இழப்புகளையும் குறித்து மிக நீண்ட அரசியல் விவாதத்தைத் தொடர்வது,


4: தமிழீழம் எனும் பொய்க் கோசத்துக்கு எதிரான அரசியல் தீர்வை முன்னெடுக்கும் முகமாக ஜனநாயகச் சக்திகளை ஒன்றிணைப்பது,அழிக்கப்பட்ட வாழ்வாதாரங்களை இலங்கைப் பூர்ச்சுவா அரச சட்டவரைவுக்கொப்பக் கட்டியெழுப்புவது,அதன்வழி சிங்களப்பாட்டாளியவர்க்கத்தோடு இணைந்து பொருளாதாரவாதப் போர்களோடு சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை இணைப்பது,



5:இலங்கை தழுவிய புரட்சிக்கான முன் நிபந்தனைகளை உருவாக்கும் முகமாகச் சிங்களப் பாட்டாளிய வர்க்கத்தை அணுகுவதும்,புரட்சிகரக்கட்சிக்கான பணிகளை அவர்களோடு இசைந்து ஆற்றுவதும்,அந்நியச் சக்திகளது பொருளாதார இலக்குகளுக்கு எதிரான போராடாட்டங்களைச் சிங்களப்பாட்டாளிய வர்க்கத்தோடு இணைந்து உள்ளக-மற்றும், வெளியக அரசுகளுக்கு எதிராகக் கட்டியமைப்பதும் உடனடித் தேவைகளாகும்.


இவை உடனடித்தேவையாகத் தமிழ்ச் சமுதாயத்தில் இருப்பினும்,


அ): நாம் இலங்கையில் வாழும் மற்றைய சிறுபான்மை இனங்களான மலையத் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லீம் மக்களோடான உறவை மேலும் வலுப்படுத்தும் முகமாக அவர்களது அரசியில் கோரிக்கைகளை எமது வரலாற்று முரண்பாடுகளோடு உள்வாங்குவதும், அதன் முதல் தெரிவாக அவர்களது அரசியல் அபிலாசைகளை எமது அரசியல் அபிலேசைகளோடு இணைத்துக் கை கோற்பதும் அவசியமாகிறது.


இ): இதன் தொடராக முதலில் நாம் புரிந்துகொள்ள முனைவது இதுகாலவரையான புலிகளது தமிழீழப்போராட்டதை அரசியல்ரீதியாக விளங்க முற்படுவதும் , அதை எங்ஙனம் புலிகள் தவறான அரசியல் தெரிவினூடாக முன்னெடுத்துக் "கொலைக்கள அரசியலை" நமக்குள் திணித்தார்கள் என்பதே அவசியமான அரசியலை முன் தள்ளுகிறது.


இது குறித்து இப்போது மெல்லக்கசியும் எழுத்துக்களை மிக நுணுக்கமாக அணுகுவது,அதன் சமூக உளவியலைத் தறுவாகக் கற்பது(இதன் அர்த்தம் இதுவரை புலிக்காக வக்காலத்து வாங்கிய பொதுபுத்தி மக்களது அழிவில் எடுக்கும் அரசியல் நகர்வு என்பதாகும்(இந்தப் பொது புத்தி சகல மட்டத்திலும் வெகுஜன அரசியல் மற்றும் வர்க்க நலன் என்றாக விரியும்.) ).


இதை மறுத்து இயங்க முனையும் புலிகளது அரசியல்நீட்சி தமிழர்களுக்கு உரிமை வழங்க வேண்டுமென இந்தியா வாந்தியெடுப்பதாக நமக்குச் செய்தி சொல்லும் ஊடகங்கள் இலங்கை அரச நிதியோடு தமது கடமையைச் செய்யும்போது,இன்னொரு புறம் உலக ஆதிக்க சக்திகளது தயவில் இயங்கும் குள்ள நரிகள் நமக்குப் புரட்சிப் பாடம் நடாத்துகின்றன.


இந்தக் கோலத்தில் தமிழ் மக்களது அரசியல் வாழ்வோ படு பாதளாத்தில்.என்ன செய்ய முடியும்?


புலத்துப் புலிப் பினாமிகளது வலை:


புலித்தலைமையை நயவஞ்சகமாகக் காட்டிக்கொடுத்து அழித்த புலத்துப்புலித்தலைமையின் அரசியல், மக்களின் அபிலாசைகளின் வாயிலாக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்களிடம் திரட்டப்பட்ட செல்வங்களைக் கைகயகப்படுத்தியபடி புதியஅதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் பாரிய அதிகாரச் சுவையை, நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள்(நாடுகடந்த தமிழீழ அரசு) மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது என்றவுண்மை புரியப்பட வேண்டும்!


தமிழ் மக்களை ஒட்ட மொட்டையடித்துச் சுற்றிய புலம்பெயர் புலித் தேசியவாதமதனது ஈவிரக்கமற்ற படுகொலை அரசியலூடே படுபாதகமான துரோகத்தைத் தியாகமாக்க முனையும் இன்றைய நிலையில், நாம் மிகக் கெடுதியான புலத்துப் புலிப்பினாமிகளின் பரப்புரைக்கு இரையாகுவதா இல்லை அதை மீறித் தமிழ்பேசும் மக்களது அரசியல் விழிப்புணர்வைத் தொடர்ந்து விருத்தியாக்கிப் புலிவழித் தேசியத்தை மறுத்துப் புதிஜனநாயகப் புரட்சியை இலங்கையில் தொடர்ந்து நடாத்துவதா என்பதைப் புலிகளது தவறுகளிலிருந்து கற்பதா என்று பாரிய நெருக்கடிக்குள் தமிழ்ச் சமுதாயம் மட்டுமல்ல முழு இலங்கைவாழ் இனங்களும் எதிர் கொள்கின்றன இன்று.


புலிகளது அழிவுக்குப் பின்பான இன்றைய காலத்தில் "புரட்சி-ஜனநாயகம்"என்பதெல்லாம் ஆளும் வர்க்கத்துக்குச் சேவை செய்யும் நரிகளது மந்திரமாக இருக்கிறது.இதைத் தோலுரித்துக் காட்டவேண்டிய சூழல் நெருங்குகிறது.எனினும்,காலம் அதற்கான தகவமைப்பைச் செய்யுமென நம்புகிறேன்.நமது மக்களது குருதியில் ஆதாயமடையும் புலத்துப் புலி அரசியல் தரகர்களைக்கடந்து-அந்நியச் சக்திகளைக் கடந்து, நாம் புரட்சிகரப்பணியைச் செய்தேயாகவேண்டும்.மக்களது விடிவுக்காக அவர்களே புரட்சிகரமாக அணிதிரளவேண்டிய இன்றைய சூழலில்,நாம் மேலும் எமது காரியத்தைத் தொடர்கிறோமா?


எமக்குள் முட்டிமோதிச் சுருங்கிய நாமோ நமது கைகளில் விலங்குகளை நாமே தயாரித்துப் பூட்டியுள்ளோம்.


இன்னும் விபரமாகச் சொல்வதானால், இயக்கவாத மாயை கடந்தும்,தத்தம் தலைவர் துதியைக் கடந்தும்,தமிழ்பேசும் மக்களுக்குத் துரோகமிழைக்காது, அவர்களது தோளோடு தோள் சேர்ந்து இலங்கையில் சுயநிர்ணயவுரிமையைப் பெறுவதற்கும், அதனூடாக இலங்கை தழுவிய சோசலிசத்தைக் கட்டியமைக்கவும் பாடுபடத் தக்க வியூகம், குழுவாதம் கடந்து நாம் ஒருமையுறும் தருணத்தில் மட்டுமே வாய்க்கும்.


இல்லையேல்,மே 18க்கு ஓலமிட்டுப் பணம் பண்ணும் புலத்துப் புலிப் பினாமிகள் தமது அரசியலைத் தொடரப் புரட்சிகரப் பாட்டும் தமது எடுபிடிகளது வழியில் சொல்ல, நாம் அவர்களையும் நம்பி ஏமாந்து அனைத்தையும் இழந்து,எமக்குள்ளே குட்டுப்பட்டு குடி கலைந்து...


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
14.05.2010

Dienstag, April 27, 2010

மே:2 ஆம் தேதி:நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்.

பெரும் விளம்பரத்துக்கும்,விளக்கவுரைகளுக்கும் நடுவில் மெலிதான மாற்றுச் சலசலப்பு-சிறு குறிப்பு!



புலம் பெயர் புலித்தலைமை:


ன்னியில் புலியின் இராணுவக் கட்டமைப்பைச் சிதறடித்தவர்கள்,அதற்கு இசைவாக இயங்கியவர்கள் புலம்பெயர்வுப் புலிக்கூட்டத்தின் மேல்மட்டப் பேச்சாளர்கள்-தலைவர்கள்.இவர்கள் பிரபாகரனுக்குக் காடாத்துப் பண்ணினார்களோ இல்லையோ தமிழ்பேசும் இலங்கைவாழ் மக்களுக்குத் தொடர்ந்து காடாத்தி வருகிறார்கள்.இது,கவலைக்குரிய விடையமல்ல-கண்டிக்கப்படவேண்டியது.


இன்றைய புலம்பெயர்வு மக்களது வாழ்சூழலில் தேசத்தைச் சொல்லி-தமிழைச்சொல்லித் தட்டிப்பறிப்பதற்குத் தோதான புலியினது இராணுவவாதப் போராட்டம் இல்லையென்பதால், அதன் மாற்றாகவும், அந்த மாற்றின் தேவையை உணர்த்துவதாகவும், "தேசம் கடந்த தமிழீழ அரசுக்கான"தேர்தல் அதி உச்சமான கோணங்கித்தனமான விளம்பரத்தின்வழி புலம் பெயர் மக்களது புலன்களைப் பேர்த்தெடுப்பதில் சந்தர்ப்பவாதப் புலிகள் உருத்திரகுமாரனின் குரலின்வழி இயங்குகிறார்கள்.



அடிமட்டத்துத் தமிழனுக்கும்,உலகத்தின் எந்த மூலையில் அவன் வாழ்ந்தாலும் அவனது பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும் ஒரே அரசு"நாடுகடந்த தமிழீழ அரசு"எனப் பொய்ப்பரப்புரைகளைச் செய்யும் இந்த விசமத்தனமான புலம்பெயர் புலிப்பணப் பேய்கள், புலித் தளபதிகளையும் உள்ளடக்கி, வரும் மே 18 இல் பிரபாகரனுக்கும் அவரது போராளிகளுக்கும் ஞாபகார்த்தம் வேறு செய்வதற்கான முன் நிபந்தனைகளிலொன்று "நாடுகடந்த அரசு"நிர்மாணிப்பது.அங்கே, அதன் அமைச்சர்கள்,பிரதமர் எனப் பொல்லாத பித்தலாட்டம் மக்களது குரல்வளைகளைத் தறித்துப் பணம் பண்ணும் முக்கிய நோக்கில், மே 18 நாடகம் அரங்குக்குவர ஒரு அரசினது முன்னெடுப்பாக இந்த செயற்பாடு களமிறங்குகிறது.


தட்டிக் கேட்பார் யாருமில்லை:


யாரும் பொதுப்படையான இவர்களது அதிகாரங்களை,ஆதிக்கத்தை,இதன் வாயிலாக எழ முனையும் அந்நியத் தேசங்களுக்கு ஆதரவான கருத்தியல் அராஜத்தைக் கண்டிப்பதாகவில்லை.புலிப் பினாமிகள் தமது கைகளிலுள்ள மக்களது சொத்தைக் காப்பதற்கெடுக்கும் முயற்சியில்"நாடு கடந்த தமிழீழ அரசு"வெனப் பரப்புரை செய்யும் பம்மாத்தையும்,அதற்கான தேர்தல் நாடகத்தையும் குறித்து எந்தப் பெரிய மார்க்சியனும் வாயே திறக்கவில்லை.மாறாகத் தமது விருப்பங்களுக்கேற்ற "தேர்வுகளோடு" கருத்தாடுகிறார்கள்.ஈழத்தை ஆதரிப் போரும்,ஆதரிக்காதோரும் தமிழ் மக்கள் சமூகத்துள் காலாகாலமாக நிலவிய-நிலவும் பண்பாட்டு இடைவெளிக்குள்(Cultural distance)சிக்குண்டுபோய் இலங்கையில் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளில் பண்பாட்டு மௌனத்தை(Cultural silence)கொண்டுள்ளார்கள்.இது எல்லாவித அதிகாரங்களுக்கும் வாய்பேசா மௌனியாக இருந்துவிட்டுத் தமது இருப்பை அசைகின்றபோது(Identity crisis) கிணற்றுக்குள் இருந்து வெளியில் வந்த நபரைப் போல் சமூகத்தை எதிர்கொள்ள முனையும்.இதுவே இலங்கை அரசால் கட்டவிழ்த்து விடப்படும்தேர்தல்மோசடி-கட்சிசார் அராஜகத்தைப் புதிதாக நடைபெறும் செயலாக வர்ணிக்க முனைகிறது.இங்கே, இதன் தோற்றுவாயும் வர்க்க நலனும் திறம்படப் புரியவில்லை! இத்தகைய கருத்தாடல்களேதாம் இன்றைய புலம் பெயர்வு மக்களை மிக வேகமாக வேட்டையாடுகிறது.ஜீ.ரீவீ இதற்காகப் புலம்பெயர்வுப் புலிகளது பணத்தில்(இப்பணம் மக்கள் சொத்து) கணிசமான மக்களை முட்டாளாக்க இயக்கப்படுகிறது.இந்த இடருக்குள் உள்வாங்கப்படும் எமது மக்களது சுய தெரிவு என்ன?



மீளவும்,"மேற்குலக நாடுகளின் தயவில் நமது மக்களுக்குச் சுயநிர்ணயவுரிமை கிடைக்கப்பெறும்.அது,நாடுகடந்த அரசினது மூலம் மேற்குலக நாடுகளை வளைத்துப்போடமுடியும்"எனப் பொய்யுரைக்கும் இந்தப் பணப் புலிகள், தமது இருப்பை நிலைப்படுத்தவும்-பதுக்கிய செல்வத்தைக் காப்பதற்கும்,தொடர்ந்த புலம் பெயர்வுத் தமிழரிடம் பணம் கறக்கவுமாக இந்தச் சோடினையில்"நாடுகடந்த தமிழீழ அரசின்"தேவையை வற்புறுத்திக்கொண்டு கருத்தாடுகிறார்கள்.இதைத் தட்டிக் கேட்பார் யாருமில்லை!


நாடு கடந்த தமிழீழ அரசு:


புலிகளது இராணுவலிமை செய்யாததை இந்த "நாடுகடந்த அரசு"ஜனநாயகவழியில் செய்துமுடிக்குமெனவும் சொல்லப்படுகிறது.இத்தகைய பரப்புரைகளின்பின்னே அணிதிரளும் சக்திகள் பழைய புலிப்பினமிகள்தாம்.குறிப்பாகச் சொல்லத் தேவையில்லை.அதே முகங்கள்-அதே சேட்டைகள்.இப்போது நடைபெறும் வானொலி-தொலைக்காட்சி விவாதங்களும் அதுசார்ந்த அரசியல் காய் நகர்த்தலும் தமிழ்மொழி, இனம்,அரசியல்,சுயநிர்ணயவுரிமை,தமிழ்மக்கள் நலம் சார்ந்த பொருண்மிய வாழ்வை,தமிழ்ப் பண்பாட்டை,வரலாற்றை அனைத்தையும்"நாடுகடந்த தமிழீழ அரசு"காக்கும்-வென்றெடுக்கும்,அரசியல் முன்னெடுப்பாகக் காண்கிறது.இந்தத் தமிழ்ஊடகங்கள் அல்லது விவாதங்கள் நமது வாழ்வுரிமையை எப்போதும் தமது வருவாய்க்காக விற்கத் தயாராகிறது.இது தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கும் ,திராவிட முன்னெடுப்புக்கும் உள்ள அதே நோக்கில் செல்லுகிறது.திராவிட இயக்கங்கள் இன்று சீரழிந்த இயக்கங்களாக மூலதனத்துக்குள் முடங்கிய மாதிரித்தாம் புலிகளும் அவர்கள் பின்னால் வீணியூற்றியபடி அலையும் மேற்குலக அரசுகளது ஏஜென்டுகளும்(சேரன்-உருத்திரகுமார் போன்ற சந்தர்ப்பவாதிகளும் இன்னபிற புலிப் பினாமிகளும்)முடங்கியுள்ளார்கள்.


இதுவரைகாலமும், ஏகத் தலைவரும் அவரது போராளிகளும்-ஆயுதமும் தமிழீழம் பெற்றுத் தந்துவிடுவார்கள்-தந்துவிடுமெனப் பசப்பியவர்கள் இப்போது உருத்திரகுமாரனின் உடும்புப்பிடியான ஜனநாயக வழி"நாடுகடந்த அரசு"தனித் தமிழீழத்தை இலங்கையில் மேற்குலக அரசுகளின் தயவோடு பிரித்துவிடுமெனப் பரப்புரைகள் எங்கும் ஒலிக்க விடுகிறார்கள்.இந்தப் பெரிய சமூக விரோதிகளைத் தட்டிக் கேட்பதற்கோ அல்லது இவர்களது பொய்யான சுரண்டலை அம்பலப்படுத்தவோ எந்தப் பெரிய "புரட்சிக்காரர்கள்"தம் போராட்ட இலக்கும் தீர்மானஞ் செய்வதாகவும் இல்லை!எல்லாம் வல்ல பிரபாகரன் எப்படியும்-எப்போதாவதும் வெளியே வந்துவிடுவாரெனப் புலம்பும் இந்தக் கள்வர் கூட்டத்தை நம்பிக்கிடக்கும் புலன் பெயர்ந்த தமிழர்களும் மே 2 ஆம் தேதி தமது பொன்னான வாக்குகளை அளித்துத் தேசம் கடந்த தமிழீழத் தேசிய அரசை நிர்மாணிக்கப் போகிறார்கள்.



இதன்சூத்திரதாரிகளான மேற்குலக நலன்சார் குழுக்கள்-நபர்கள் அதன் ஜீவனகாலத் தலைவர்களாகவும்-பேச்சாளர்களாகவும் வலம்வந்து, நமது மக்களது குருதியைக் குடித்தே உயிர் வாழ்வார்கள்.காலகாலத்துக்கும் தமிழ் பேசும் மக்களை மடையர்களாக்கி அந்நியத் தேசங்களுக்கு அடிமையாக்கிப் பிழைக்கும் தமிழ் மேட்டுக்குடிக் கல்வியாளர்கள், தம்மைத் தேசியத்தின் தொட்டிலில் கிடத்தியும் அழகு பார்க்கிறார்கள்.


அவர்களது ஏஜென்டுகள் புரட்சி-தேசியம்,புண்ணாக்கு என எல்லாவகைப் புரட்டல்களையும் மக்களைச்சொல்லிச் செய்துவரும்போது"நாடுகடந்த அரசினது"குத்தகைக் காரர்களுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை!எனவே,அவர்கள் தொலைக்காட்சியில்-வானொலியில் சொல்வதே மந்திரமாகும்.அங்கே,உலகத் தமிழர்கள் அனைவருக்கும் விடுதலை வந்துவிடப் போகிறது.முப்பது வருடமாகப் பிரபாகரனுக்குத் தெரியாத மந்திரமெல்லாம் சேரனுக்கும்,உருத்திரகுமாருக்கும் தெரிந்தே இருக்கு.இவர்கள் அப்படியே பிரபாகரனது சாதகத்தையும் சொல்லிவிடலாம்.ஆனால்,அதைமட்டும் சொல்வதற்கு அவர்கள் தயாரில்லை.அங்கேதாம் அவர்களது இருப்பே தங்கியுள்ளது.


தெரிந்துகொள்ள வேண்டி உண்மைகள்:


இந்த மோசமான பேர்வழிகள் இட்டுக்கட்டும் நரித்தனமான நாடகங்கள் பொய்யானவை-புலிகளின் பினாமிகள் மக்களை மேலுஞ் சுரண்ட அனுமதிக்கும் நடவடிக்கை இது.இவர்கள் சொல்வதுபோன்று "நாடு கடந்த தமிழீழ அரசு"என்பது தமிழ்பேசும் மக்களது உரிமையை இலங்கையில் குழிதோண்டிப் புதைப்பதில் மேற்குலகத் தோடிணைந்து மிடுக்காக இயங்கும்.ஏனெனில்,நாம் ஒரு அரச வடிவத்துக்குள் வாழ்ந்த காலங்கள் மலையேறிவிட்டென.இன்றைய காலங்கள் "அரசுகள்"என்ற அமைப்பின் காலமாகும்.நம்மைப் படாதபாடு படுத்தும் "அரசியல்" தனியொரு தேசத்தின் ஆளும் வர்க்கத்தின் தேர்வு இல்லை.அஃது, தேசங்களின் தேர்வுகள்,தெரிவுகள்,திட்டங்களால் உருவாகப்பட்டுள்ளது.இங்கே, நடக்கின்ற "அரசியலானது"தமிழ் மக்களின் எந்த நலனிலும் அக்கறையற்ற படு கேவலமான அரசியலே எல்லாத் தரப்பாலும் முன்னெடுக்கப் படுகிறது.புலம் பெயர் தேசங்களில் நடக்கும் எந்த அரசியல் வினையும் இலங்கையில் வாழும் தமிழருக்கு எப்பவும் உதவப் போவது கிடையாது.இதுவரை அது உதவியதாகவும் வரலாறு இல்லை என்ற உண்மையும் நாம் உணர்ந்ததே!அத்தோடு,புலம்பெயர் புலிகளிடம் குவிந்துள்ள அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் செல்வங்களும் மேற்குலகத் தமிழ் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.

இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல பொய்யுரைப்பின்வழி சேரனும்,உருத்திரகுமாரும் அவர்களது எஜமானப் புலிப்பினாமிகளும் "நாடுகடந்த தமிழீழ அரசு"க்கான தேர்தலில் அதிகப்படியான நேரமெடுத்து விளம்பரஞ் செய்கிறார்கள்-விளக்வுரை செய்கிறார்கள்.இவர்களது இந்த நடாத்தையானது இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு எந்தவகையிலும் உதவவே முடியாது. சேரன்போன்றவர்கள் கடைந்தெடுத்த சமூக விரோதிகள் என்பது நாம் கண்ட வரலாறு.


வன்னியில் மக்களை வேரோடு புரட்டிய புலியின் இராணுவ ஜந்திரம் ,வன்னியில் சிதற, இப்போது, அதன் அரசியல் தலைமையின்வழி இலங்கைவாழ் தமிழர்களை நடாற்றில் தள்ளிவிடுகிறது.ஒவ்வொரு முறையும் மக்களுக்கு யுத்த அழுத்ததையும் குண்டுகளையும் பரிசாக்கியவர்கள் இன்று அந்த மக்களுக்காக எந்த உதவிகளையுஞ் செய்யவே இல்லை.எனினும்,தமது புலி அரசியலின்வழி மேற்குலக அரசுகளது எடுபிடிகளாக இயங்க முனையும் இன்றைய சந்தர்ப்பத்தில் இவர்கள் செய்யும் ஒவ்வொரு நடிவடிக்கையும் இலங்கைத் தமிழர்களது பொதுவாழ்விலும்-தனிப்பட்டவாழ்விலும் பாரிய தாக்கஞ் செய்யவே செய்யும்.


இலங்கைப் பாசிச அரசினது கெடுபிடிகள், பொருளாதார மற்றும் இராணுவவாதச் சிக்கல்களது கிடுக்குப்பிடியாக அந்த மக்களைப் பதம் பார்க்க இவர்களே காரணமானவர்கள்.இதை மறைப்பதற்கான முறைமைகளில்"தமிழ்-தேசியம்-நாடுகடந்த அரசு"எனும் மாய மான்கள் முதன்மையான காரணிகளாக இருக்கும்.இதுவே,இதுவரை சேர்த்த மக்களது நிதிகளைச் சுற்றவும் உதவிக்கொள்ளும். இவற்றினூடாகக் காய் நகர்த்தித் தம் வலுவைத் தக்கவைக்க முற்படும் அதிகார மையங்கள் நம் இனத்தின் விடிவுக்கு வேட்டுவைத்தே இதைச் செய்கிறார்கள்.இது தனது மகளைத் தானே புணரும் அப்பனின் மனப்பாண்மை போன்று நமது அரசியல்-இயக்கவாதிகளிடம் தொடர்ந்து நிலவுகிறது.


புலிகளது பொய்யுரைக்கு மயங்கிய புலம்பெயர் மக்களில் பலர், தத்தமது நோக்கு நிலையிலிருந்து இந்த அதிகார மையங்களின்(நாடுகடந்த அரசு,தேர்தல்-சேரன்,உருத்திரகுமார்) "நன்மை தீமை" என்பவற்றை நோக்குகிறார்கள்.


இலங்கையில் வாழும் தமிழ்பேசும் அப்பாவி மக்கள் எந்தவுரிமையுமின்றி இத்தகைய அதிகாரங்களுக்குள் கட்டுண்டு தமது வாழ்வைத் தொலைத்துவிட்டு மௌனித்துள்ளார்கள்.இந்த இழி நிலையில் மக்கள்தம் உயிரைத்தினம்இராணுவாத இலங்கை அரசபாசிசவொடுக்குமுறைக்கு- அராஜகத்துக்கு இரையாக்க வேண்டியுள்ளது. மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான தேர்தல்களால்-நாடுகடந்த தமிழீழ அரசு நிர்மாணிப்புகளால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.04.2010

Donnerstag, April 22, 2010

லீனா மணிமேகலையின் குரலுக்கு இன்னொரு முகம் உண்டு

லீனா மணிமேகலையும்,அவரது கவிதை மொழியும்-காரணமும்

-சிறு குறிப்பு.

லீனா மணிமேகலை இரண்டு கவிதைகள் மூலம் பெரும் அடிபாட்டுக்குள் கட்டாயமாக முகம் கொடுக்க வேண்டியுள்ளது.இரண்டு வகையான தரப்பினரால் அவர் கவிதைகள் பிய்த்தெறியப்படுகிறது.கூடவே,அவரும் மிக மோசமான பாலியல் நடாத்தையில் பிறழ்வுடையவராகவும் இவ்விவாதங்கள் குறிப்பெழுதுகின்றன.

லீனாவின் கவிதை எவ்வளவுக்கு அவர்களால்"மோசமான"தென விமர்சிக்கப்படுகிறதோ அதேயளவுக்கு அவர்கள் லீனாவின்மீது சுமத்தும் பாலியல்சார்ந்த(விபச்சாரியென அர்த்தப்படும் தொனி)நடாத்தைகள் எமக்குச் சகிக்க முடியவில்லை.

இங்கே,இந்த மகான்களுள் லீனாவின் கவிதைகளில் பாலியல்சார்ந்த சொற்கள் அதிகமாகவும்,வாசிக்க முடியாத கொச்சையான மொழிகள்-தூஷணங்கள் கிடப்பதாக ஒருசாரரும்,மறுசாரர் மார்க்சிசத்தையும்,அதன் மூலவர்களையும் கூடவே தொழிலாள வர்க்கத்தையும் கொச்சைப்படுத்தும் மேட்டுக்குடி வக்கிரம் மலிந்துள்ளதாகவும் குற்றப் பத்திரிகை வாசிக்கின்றனர்.

இந்தச் சமூதாயத்தில்,இதுவரையான அனைத்துச் சமூக நடவடிக்கைகளிலும் கட்டமைத்த புனிதப் பிம்பந்தாண்டி மனிதர்கள் தத்தமது சுயநலத்தோடு காரியமாற்றியுள்ளனர்.இவர்கள் எப்போதும் தமது நியாயவாதங்களை மக்கள் நலனெனக்கொண்டிசம்பி இறுதியில் தமது தேவைகளை மிகக் கறாராகத் தகவமைத்துத் தக்கவைத்துள்ளனர்.இதன் தர்கம் என்னவெனில்,இதுவரையான புரட்சி-விடுதலை குறித்த அனைத்துத் தளத்திலும் இத்தகைய நிலைமைகள்மலிந்தே காணப்படுகின்றன.

மார்க்சையும்,லெனினையுஞ் சொல்லிக்கொண்டு மக்களை உயிரோடு வேட்டையாடுபவர்களும்,அதே மார்க்சையும்,லெனினையும் எதிர்த்தபடி மக்களை வேட்டையாடுபவர்களையும் நாம் காலவெள்ளத்தில் மூழ்கிக் காண்கிறோம்.இங்கே,"உண்மையான"புரட்சிகரக்கட்சி போலி மார்க்சியார்கள்-கட்சி-எதிர் புரட்சிக்காரர்கள் என்று நியாயம் சொல்லும்போது, இத்தகைய நடாத்தைகள் வேறொரு திசையை நோக்கித்தள்ளப்படுகிறது.அத்திசை பெரும் பாலும் பாதிப்புடையவர்களுக்கு நீதி கிடைப்பதற்குப் பதில் அவர்களைக் கணக்கிலெடுக்காத சமூக யதார்த்தத்தை அவர்களது விழிமுன் நிறுத்தி விடுகிறது.

லீனா மணிமேகலை எழுதிய இரண்டு கவிதைகளிலும் பாதிப்புக்குள்ளான பெண்களது குரல் ஒலித்து ஒதுங்குகிறது.



இன்றுவரை இந்தத் தமிழ்ச் சமூகத்தின் சமூக அசைவியக்கமே வெறும் போலித்தனத்துடனும்,கபடத்தனத்தடனும்தாம் இயங்குகிறது.இந்தச் சமூக அமைப்பின் முதலாளியச் சாக்கடையை துப்பரபு செய்வதாகவும்,மாற்றியமைப்பதாகவுஞ்சொன்ன எத்தனையோ கொம்பர்கள் இறுதியில் அந்தச் சமூகத்தையே சாகடித்துத் தமது நலன்களை அறுவடை செய்தார்கள்.

இதற்கு ஐந்தொகை அவசியமற்றது.

புரட்சி,பெண்விடுதலை-திராவிட நாடு கேட்டவர்கள் முதல்பெரியார் சார்ந்து கொடிபிடித்தவர்கள்-ஈழவிடுதலைப் போராட்டஞ் செய்தவர்கள் வரை, எங்ஙனம் மக்கள்-பெண்கள்மீது விரோத அரசியல் செய்தனரென்பது-நாம் அறிந்த-கதைகள் ஏராளம்.சமூகத்தில் எத்தனையோ விரோதப் போக்குகள் ஒவ்வொரு பெயராலும் நிகழ்ந்தே வருகிறது.

பாதிப்புக்குள்ளான பெண்ணினது நிலையிலிருந்து-பழிவாங்கப்பட்ட பெண்ணினது நிலையிலிருந்து புரிந்துகொள்ளத் தக்க இருகவிதைகளை லீனா எழுதியுள்ளார்.இதை லீனா மணிமேகலை எழுதிவிட்டார் என்பதற்காக அதன் உண்மையான நியாயத் தர்க்கம் இல்லாது போக முடியாது.சமூகத்தில் மகான்களையும்,லீனா மணிமேகலை,மற்றும் நம்மைப்போன்றோரையும் இருத்தி வைத்திருப்பது இச் சமுதாய நியாயவாதங்கள்தாம்.எமக்கு நல்ல உதாரணமாக நம்முன் இருப்பது கனகி புராணம்.யாழ்ப்பாணியச் சமூத்தின் இரட்டைத்தன்மையை-ஆணாதிக்க வன்மையை,சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்ணைப்படுத்திய பாடுகளை அறிய கனகி புராணம் நமக்கு நல்ல உதாரணம்.

//நடந்தா ளொரு கன்னி மாராச
கேசரிஇ நாட்டிற் கொங்கைக்
குடந்தா நசையஇ வொயிலா
யது கண்டு கொற்றவருந்
தொடர்ந்தார்; சந்யாசிகள் யோகம்
விட்டார்; சுத்தசைவரெல்லாம்
மடந்தானடைத்துச் சிவ
பூசையும் கட்டிவைத்தனரே.// கனகி புராணம்-3

லீனாவின் புராணம் அதை எவ்விதத்திலும் விஞ்சவில்லை.அதை எழுதியது ஆணாகவும்,இதை எழுதியது பெண்ணாகவும்-அப்பெண் இருபத்தியொராம் நூற்றாண்டில் வாழ்பவளாகவும் இருக்கும்போது யோனிமுடியை பிய்த்துப் போடுவதும் சுலபமாகத்தான் இருக்கும்.

என்னுடைய கேள்வியெல்லாம், பெண் உலகம் பூராகவும் ஏதோவொரு காரணஞ்சொல்லி ஒடுக்கப்படுகிறாள்-பாலியல் ரீதியாகச் சுரண்டப்படுகிறாள்.அதற்கு எந்த நிறமும்-எல்லையும் கிடையாது.சமீபத்தில் திருச்சபைகள் சிறுவர்களையும்-சிறுமிகளையும் பாலியல் வல்லுறவு செய்திருக்கின்ற கடந்தாகாலம் நமக்குமுன் விமர்சனமாகிறது.அங்கே,ஆயிரக்கணக்கில் நடந்த பாலியல் வதைகள் ஜேர்மனியச் சமூகத்தில் இப்போது கிழவிகளாக இருக்கும் அன்றைய குமரிகளது தலைவிதியாக இருந்திருக்கிறது.அவர்கள் தமது வலியைச் சொல்லமுடியாது தவித்தபோது ஒரு கலகக்காரியின் அம்பலப்படுத்தலுக்குப்பின் ஆயிரம் அபலைகள் பாலியற்றுற்பிரயோகம்குறித்த கதைகள் காவி வீதியெங்கும் போர்க்கொடி தூக்குகின்றனர்.இது,பரவலாக நடந்து முடிந்தகதை.ஆனால்,தமிழ்ச் சமூகத்தில் பெண்பாதிப்படைந்தும் தனது வலியைப் பேசாது இருக்கும்போது இந்த லீனா அதுகுறித்துப் பேசும்போது சொல்லடிபடுவது எதனால்?இதுவே,எனது கேள்வி.

எமது சமூகத்தில் புரட்சி பேசியவர்கள்,பெண்விடுதலைக்காகக் குரல்கொடுதவர்கள்,ஈழவிடுதலை செய்தவர்களெனப் பல்லாயிரம் ஆண்கள்,பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டிக்கொண்டனர்.இவர்கள் பேசிய பசப்பு வார்த்தைகளை லீனாவின் குரலுக்குள் இனங்காணத் தவறும் புனிதம் பொய்யானது.

இன்றுங்கூட நண்பனென வீட்டுக்குள்வருபவன் நாளை பொண்டிலையே கடத்திச் செல்பவனாகப் புலப்பெயர்வு வாழ்வில் தினம் ஒரு குடும்பஞ் சிதைந்து போகிறது.குடும்பங்கள் குலைவது முதலாளியத்தைத் தகர்ப்பதற்கென்றும் இவர்கள் சொல்வார்கள்.இலக்கியச் சந்திப்புச் செய்தவர்களில் எத்தனைபேர்கள் இத்தகைய பாலியற் சுரண்டலில் பெண்விடுதலைகண்டனர் என்பதைப் பாதிக்கப்பட்ட பெண்கள் பேசினாற்றாம் நாம் உண்மைகளைக் கண்டடைய முடியும்.அதுவரையும் ஊகம்தாம்.

லீனா கவிதையெனப் பகர்ந்தது பெண்ணின் ஏமாற்றம்தாம்.புரட்சி-விடுதலைபேசியும்,ஆத்மீகம் பேசியும் எத்தனையோ பெண்களைச் சீரழித்து அவர்களது விருப்பின்றி அவர்களைச் சுரண்டியதை புரட்சியால்-விடுதலையால்-இறைவனால் சமப்படுத்தியவர்கள் குறித்து லீனா புனைந்த மொழி அத்தகையவர்களது கயமையைவிடக் குற்றமானதா?

மார்க்சையும்,லெனியையும் சொல்லித்தாம் பலர் பெண்களைப் பாலியற் சரண்டலுக்குள் தள்ளினார்கள்.இந்த முதலாளியச் சமூகமோ பாலியலைப்பண்டமாக்கிப் பெண்களைச் சந்தையில் விற்கும்போது அதை நுகர வக்கற்ற போலித் தோழர்கள்-புரட்சிக்காரர்கள் அப்பாவித் தோழிகளைத் துளைத்தெடுத்தனர்.அவர்களது குரலாக லீனாவின் குரலுக்கு முகம் உண்டு.

எனவே,லீனாவின் குரலுக்குள் இருக்கும் இன்னொரு முகத்தையும் காணத்தவறுது மார்க்சிய-புரட்சிகர அணுகுமுறையாகாது.

லீனா எழுதுகிறார் எப்படியென்று பாருங்கள்:

"நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது
நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
வன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்"

இதில்உண்மைகள் இல்லையா?அல்லது,இந்தவுண்மைகளை லீனா பேசப்படாதா?

தமிழ்ச் சமுதாயத்திடம் மட்டுமல்ல இந்தப் போலித்தனம் விழித்திருப்பது, போப்பாண்டவரே மன்னிப்புக் கேட்கும் நிலைக்காகிய, மேற்குலகத்திடமும் இந்த மூடுதிரை போலித்தனம் விழித்தே இருக்கிறது.அது,மட்டுப்படுத்த விரும்பும் இடங்களில்மட்டுமே, தமிழ்ச் சமூகமும் மற்றைய சமூகங்களும் வேறுபடுகிறது.தமிழ்ச் சமுதாயத்திடம் முற்றுமுழுதாகப் "பெண்மை-தூய்மை" எனக் கொடிகட்டிப்பறக்கும்.ஆனால், அங்கேதாம் பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது அதீதமாக மலிந்து கிடக்கிறது.

பாலியல் பலாத்தகாரம் எப்படி நிகழ்ந்ததெனப் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரிக்கும் நீதீவான்கள் மலிந்த நமது சமூகத்தில் இந்த லீனாவையும் அத்தகைய நிலைகுட்படுத்தும் தருணம் மலியவே செய்யும்.

"யோனி,
ஆண்குறி,
விந்து"

குறித்த ஆய்வுகளைவிட, இவைகளுக்காகப் பலியாக்கப்படும் மனிதமனங்கள்குறித்து யோசிப்பது நன்று.

தமிழ்ச் சமூகத்தில் ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பேச முனைந்தால் அல்லது புரட்சி பேசிப் பாலியல் உறவுசெய்து பின் கைகழுவி விடப்பட்ட பெண்கள் பேசுவதாகவிருந்தால் நிச்சியம் லீனாவின் குரலைவிட மோசமாகவே இருக்கும்.எனவே,லீனாவின் குரலுக்கு இன்னொரு முகம் உண்டு என்பதையும் யோசிக்க வேண்டும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
22.04.2010

Mittwoch, April 07, 2010

மகிந்தாவின் யாழ்ப்பாணச்சூனியம்

(புனைவு)

இடையீடு: 1. இதை வாசிப்பவர்கள் எங்கோவொரு இடத்தில் "தூஷண"வார்த்தைகளைப் பச்சையாய் உணர்வீர்கள்.உண்மையைச் சொல்வது எனது கடமை.விரும்பினால் மேலே செல்லவும்.


Angst in der Nacht

Die Uhr spricht aengstlich mit dem Spinnweb an der Wand,
Am Laden reisst der Wind,
Meine flackernden Kerzen sind
Ganz vertropft und heruntergebrannt,
Kein Wein im Glase mehr,
Schatten in allen Ecken,
Deren lange Finger sich nach mir strecken.

-Hermann HESSE.


இடையீடு:2. முப்பதாண்டு ஈழப் போருக்குப் பின்னே முள்ளிவாய்க்காலில் "ஈழத்துக்கு"அந்தியேட்டி செய்த கையோடு யாழ்ப்பாண இராஜ்சியத்தின் கல்வெட்டு இப்படிச் செதுக்க...


ந்தத் தெருவோரமாகச் சாய்கிறேன்.கரமெதுவும் இல்லை.அம்மாக் கரம் பாலகர்களுக்குமட்டுமே.அன்னைக்குப் பாலகனாகக் காலம் பின்நோக்கிச் செல்ல என் மனத்துக்கு மட்டுமே முடியுமாகையால் நான் மௌனித்து வான் பார்க்க, பிளவுகொண்ட தேசிக்காய் குங்குமம் தரித்து என் விழிமுன்னே நர்த்தனமாட எனது மனைவி சொன்ன வார்த்தை வேலைணைச் சிவராசா சொன்ன சாஸ்த்திரத்தில் என்னை இந்த டிசம்பரில் கொல்லும் காலமாக நர்த்தனமாடுகிறது.

துவண்டு போனது எனது குரலும்,குடியும்.என்னைக் கொல்லும் காலத்தைக் கணித்து வழங்கிய சிவராசா, சேதுராமனைக் கொப்பியடித்து எண்சாஸ்த்திரம் சொன்ன அன்றைய எண்பதுகளின் முன் பகுதி வேலணை பங்களாவடிச் சந்தியில் பலரது செருப்புகள் அவன் முகத்தை முத்தமிட்டுக்கிடக்க, எனது துணைவிக்கு அவனிடம் சாஸ்த்திரம் கேட்பதில் அலாதி பிரியம்.யாழ்ப்பாணத்து ஏதோவொரு முடுக்கில் நான் மௌனித்துக்கிடந்தபடி உழைத்து ஓடாகும்போது எனது போதையில் வீடு கட்சிகட்டி எனக்கு வைத்தியம் பார்க்கிறது.நான் மரணிப்பதில் என் மனையாளுக்கு அதிக பிரியமென நான் எப்போதும் புரிய எனது போதை காலத்தை வழங்கவில்லை.

யாழ்ப்பாணச் சுடலைகள் எங்கும் பேய்,வீதிகள் எங்கும் பேய்,வீடுகளின் நடுவே சவங்கள் உருண்டு கொள்கின்றன.குத்தீட்டியாய் மந்திரக்காரன் தனது குறியில் தேசிக்காயைக் குத்தித் தமிழச்சிகளது முலையில் காண்டம் வாசிக்க யாழ்ப்பாணம் தென்னிலைங்கைப் பெருங்குடிகளுக்கு கழிப்பறை கட்டிக்கொண்டிருக்கிறது.எனக்குக் காண்டம் வாசிக்க எனது பொண்டில் எந்த மந்திரவாதிக்குத் தனது...

"செய்வினை,

சூனியம்,

பில்லி,

காண்டம்,

சாஸ்த்திரம்,

மந்திரம்,

மாயம்"

எல்லாமாக யாழ்ப்பாணியச் சாம்பிராஜ்சியத்தில் பொருள் நிலை வாழ்வு சிறப்பாக...





ஒரு நேர வயிற்றுக்கு உழைக்க வக்கற்ற எனது பொண்டாட்டி என்னைக் காலத்தில் கொல்ல, மெல்ல வலையைப்பின்ன நான் போதையில் பொருள்தேடுகிறேன்!


கொட்டை பெருசு கோவணஞ் சிறிசு: பின் சுருக்கம்1.


"வாடா சுந்தரம்,வா மச்சான்.வந்து மோட்டச் சயிக்கிளை ஸ்ராட் பண்ணு."இவன் சுந்தரத்தை நேற்றுப் பன்னிரெண்டு மணிக்குக் கூட்டுச் சேர்த்தேன்.அவனும் என்னைப்போன்ற பெருங்குடிமகன்.

சூனியத்தையும்,சாஸ்த்திரத்தையும் அவனிடம் சொன்னபோது தன்ர மனைவியும்,மாமியும் இதில நின்று நாட்டியம் ஆடுகிறவை என்றும் சொன்னான்.தன் மனைவியும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு யாரோ போட்ட தவிட்டைத் தின்று கொழுப்பதாகவும் சொன்னான்.

இப்போது யாழ்ப்பாண பெரு இராஜ்சியத்தில் மூத்த குடித் தமிழர்கள் குடிமனைக்குள் கொள்ளிவைக்க எல்லாம் பணத்தைச் சுற்றி வீணியூற்ற நானும் எல்லாமாக மாறி எனது மனைவியிடம்"அது-சவம்"என்றெல்லாம் ஆகிப்போனேன்!எனது இருப்பு அவளுக்குச் சவமென...

போன மாதம் மகிந்தா மாமாவினது "ஒரே தேசம்,ஒரே மக்கள்" அரச பரிபாலத்தில் யாழ்ப்பாணப் பெண்டிர்களுக்கு அரபுத் தேசங்களின் "வேலையெடுப்பு"வேலை வேண்டிக்கொடுக்க முகவர்கள் வந்து கொட்டகை போட்டார்கள்,அந்தக் கொட்டகை வாசலில் வந்து குவிந்த யாழ்ப்பாணியத் தமிழச்சிகள் கிளிநொச்சிவரை கியூவில் நிற்கினம்.அரபுத் தேசத்தில் பணிபுரிந்து தமது செல்வச் செழிப்பை இரட்டிப்பாக்கவென அவர்கள் கனவு விதைத்து...

இப்படியான பொழுதுகளில் நானும் காலத்தைப் பின்நோக்குவதில் அரபுத் தேச "ஆண் குறிகள்"அப்பன்,மகன்,பேரன்,மாமன்,மைத்துனன்,என வீணியகற்றிக்கொண்ட பெருவெளியில் துர்நாற்றத்தோடு அந்தச் சகதி சாக்கடையாக யாழ்ப்பாணத்தை நோக்கி ஓடி வருகிறது.சுனாமியைவிடச் சுரமொழுப்பி உயரும் அந்த அரேபியச் சுக்கிலம் எனது வீட்டின் வாசலில் இன்னொரு கொலைக்களத்தை மெல்ல எனது அனுமதியின்றிச் செய்யத் துடிக்கிறது.

இந்தச் சங்கதியை நான் உணர முடியாதைத்யிட்டு எனது நண்பன் சுந்தரத்தோடு பேசினபோது"போடா புண்டையாண்டி,உன்ர பொண்டிலை என்ன, என்ர பொண்டிலையும்தான் அவன்கள் ஓழ்க்கப் போறான்கள்"எண்டான்.எனக்கு இது,சகஜமாகப் பேசுவதாகப் போச்சு.என்ன நடந்தது?

மானத்தோடு வாழ்ந்த மண் என்று அப்பப்ப நான் பெருமைப்பட்ட காலம் மெல்ல விடைபெற்று இருக்கிறது.எனக்கு இதில"ஆரூ ஓழ்த்தாலென்ன..."எண்ட நிலைமை சவுக்கடியாக இருக்கமாட்டேன் எண்டு சொல்கிறது.

பின்ன,இருக்காதா?

வீட்டு வளவுக்குள்,வீட்டின் ஒரு பகுதியை,மெல்ல விடுதியாக்கி-லொஜ் எனப் போட்டுப்போட்டு பணத்தைச் சம்பாதிக்கத் தென்னிலங்கைச் சிங்களவர்கள் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்க, எனது பொண்டிலுக்கும் சரியான ஆசை அந்தப் பணத்தில்.ஆரெடுத்துக்கொடுத்த ஐடியாவோ அவள் கொண்டை முடிகிறாள் நோட்டுச்சரத்தில் அழகுபார்க்க.

இன்றும்,இன்னொரு முடுக்குவரை சுந்தரத்தின் மோட்டார் சயிக்கிளில் மெல்ல அமர்ந்து இறங்கிக்கொண்டேன்."டேய் மச்சான் இவளிட்ட கசிப்பு மட்டுமில்லை எல்லாம் கிடைக்கும்"எண்டான் அவன்.அந்தத் தெருவுக்கு "வெள்ளான் தெருவென"வெள்ளார் சொல்லுவினம்.

மெல்லக் கடாசிய கசிப்பில் அவளது தொடைக்கு நடவில் உலகத்தின் சரிவு தோன்ற ஆரம்பித்தபோது யாழ்ப்பாணத்தை அசைக்க முடியாதென்று எண்ணிக்கொண்டேன்.

இப்போது,மனைவியும்,அவளது சாஸ்த்திரமும் நர்த்தனம் ஆடியது.

"டிசம்பரில் உனக்குச் சாவு,நீ என்னோடு சேர்ந்திருப்பது பிள்ளையின்ர பலனில் முடியாத காரியம்.நீ பிரிந்து போ"என்கிறாள்.என்ர உயிரில அவளுக்குச் சரியான அக்கறை யாழ்ப்பாணத்து ஆமிக்காரன்கள்போல.விழிமுன்னே விரியும் அவளது ஆசை மெல்லக் குத்தும் கோரப் பற்களாய் அவளது முகம்...

முள்ளி வாய்க்காலில் மௌனித்துக்கொண்ட ஏகத்தலைமையின் பெரிய ஆயுதம் முடித்துவைத்த அதே கதையை இன்னொரு சுற்றில் இப்படி மகிந்தா துவக்கி வைத்துப்போட்டார்.அவர் "தெமிழு" எண்டு ஏசிக்கொள்ள அவரது சிஸ்சியர்கள் அவருக்காகத் "தமிழர்கள் கூட்டத்தில் குழப்புவதாக நாடகம்"போட சிங்களவர்கள் எண்ணிக்கொண்டனரா மகிந்தா தமிழர் எதிரியென? நானறியேன் பராபரமே!அவரது கட்சியே இந்த முறையும் ஆட்சிக்கட்டிலேறுவதென அவர் "தெமிழு"மட்டும் சொல்லவில்லை.என்ர வீட்டு வாசலில் லொட்ஜ்சும் கட்டிக் கொடுக்கிறார்?

எனக்குத் தெரியாது!

இடையீடுகளும்,சுருக்கமும் சந்திக்கும் புள்ளி : 0

சுந்தரம் இப்ப மோட்டச்சயிக்கிளை உருட்டக்கூட முடியாமல் கிடக்கிறான்.நானும் "ஓட்டுவதற்கு" முனைந்து தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறேன்.கசிப்பில சூனியத்தை வெள்ளான் தெருக்காறி மந்திரிக்க எனக்கும் சுந்தரத்துக்கும் அவளது தொடையினது இடையில் தமிழர் தேசியம்புரியத் தொடங்கிறது.இதன் தார்ப்பாரில் நாலா புறமும் குருதி நெடில் மூக்கைத் துளைக்கிறதோ இல்லையோ யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கும் சாஸ்த்திரிகள்,மந்திரவாதிகளது பூஜை நெடில் மூக்கைத் துளைக்கிறது.

என் பொண்டிலது தாவணியில் தொங்கிக்கொண்ட எச்சில் பேய்க்கு "மாமி"என்ற உறவு எனக்கு வேணுமாம்.

அந்த எச்சில் பேயின்ர ஈனவிரக்கமற்ற "செய்வினைகளில்" என்பொண்டிலுக்கு என்னைப் பிரிஞ்சு கிடக்கவேணுமாம்.ஆரோட என்பதுதான் எனக்குத் தெரியாத பிரச்சனை.அவளுக்கு என்ர உயிரில அவ்வளவு பிரியமெண்டும்,தனக்கும் எனக்கும் பிரச்சனை எதுவுமில்லை எண்டும்,நான் என்ர சகோதரங்களை,எப்பவோ செத்துத் தொலைந்த என்ர தாய் தகப்பனை நினைச்சுக் குடிச்சு அழிவதாகவும், என்ர அண்ணாவுக்குப் போன் போட்டுச் சொல்லிப்போட்டாள் என்ர மனைவி.

எனக்கு அவள்மீது சரியான பிரியம் இதை அண்ணா சொன்னபோது.

என்ர குடிக்கு இது காரணமில்லையெண்டு எனக்குத் தெரியும்.அது,மகிந்தாவினது கொடைக்கரத்தின்அருங்கொடை.வீதிக்கு வீதி மதுக்கடையும்,மாதுக்குடைவிரிப்பும் யாழ்ப்பாண மண்ணில் தொடக்கி வைத்த கையோடு நான்,எனக்கே இப்போது மொட்டை அடித்தேன்.

இதோ,இந்தச்சுந்தரம் காறித் துப்புறான்.

"மோட்டச் சயிக்கிளைத் தூக்கி நிறுத்த வக்கில்லை.இதற்குள் கசிப்புக்காறிக்கு தேசியத்தை காட்டப் போனியே"எண்டு கேலிக்கு வினைவிதைக்கிறான்.நான் சாரத்தை எங்கே தொலைத்தேன் எண்டும் தெரியுதில்லை.நல்ல வேளை அவன் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை!

என்ர பொண்டிலின் இன்னொரு சாஸ்த்திரக்காரன் நடராசன் அண்டங்களைக் குடைந்த கண்டவுண்மை நான் என் பிள்ளையினது பலனின் பொருட்டு இவ்வாண்டு டிசம்பரில் என் பொண்டில் சங்கூத மரிப்பதென...

டிசம்பரில் சாகப்போகுற எனக்கு என்ன விருப்பம் இருக்கு எண்டுவேற என்ர மனைவியின்ர நண்பன் கேட்கிறான்."சொல்லு முருகன் உனக்கு ஏதாவது விருப்பம் உண்டா"எண்டபடி ஆட்டிறிச்சியும் காய்சிச் சாரயமும் வேண்டித்தாறான் குடியென...

அவன் நேற்றுச் செய்த இந்த விருப்பு வினை,எனக்கு தூக்குத் தண்டனைக் கைதியின் நிலையை இப்போது உணர்த்துகிறது.

நான் யாருடைய கைதி?

சாஸ்த்திரக்காரரின்,சூனியத்தின்,காலத்தில்,மனைவியின்,மாமியின்-மகிந்தாவின் கைதி?


Fear at the Jaffnas night


the clock speaks fearfully with the spin Web at the wall,
at the shop tears the wind,
my flickering candles
whole dripped and down-burned,
no wine in the glass more,
shade in all corners,
whose long fingers stretch themselves for me.-Hermann Hesse.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.04.2010