Sonntag, Dezember 11, 2011

பேசப்பட வேண்டிய சில மதிப்பீடுகள்.

பசந்தா பேட்டியும்,தமிழரங்கம்-இரயாகரனது கபட அரசியலும்!

-பேசப்பட வேண்டிய சில மதிப்பீடுகள்.

"மிழரங்கம்,புதிய ஜனநாயக மக்கள் முன்னணி,இரயாகரன்" கோஸ்ட்டியின் மிகக் கெடுதலான மக்கள் விரோத அரசியலைப் பேசித்தாம் தீரவேண்டும்.நேபாள மார்சியர்களது பேட்டியை தாம் நேரடியாகப் பெற்று, வெளியிடுவதெனும் தோரணையுள் முகமூடிப் பேட்டிகாண் நபர்களது பெயரில் உலாவரும் இந்தப் பேட்டியானது,குறிப்பிட்ட பசந்தாவால்(தோழர் பசந்தா -பொலிட்பிரோ உறுப்பினர் -ஒன்றிணைந்த நேபாள கம்யூனிஸட் கட்சி (மாவோயிஸ்ட்)) இவர்கட்கு வழங்கப்பட்டதல்ல.

இப் பேட்டி நாடகத்தின் மூலம், சொல்லப்படும் அரசியலானது தொடருகின்ற ஆட்காட்டிச் செயலுக்கு மேலும் புரட்சிகர வேசமிட்டுத் தொடர்வதற்கும்,அறுந்து தொங்கும் புலிப்பினாமி வேசத்தைச் செப்பனிடவும்,இத்தகைய மக்கள்விரோதச் செயற்பாட்டைத் தொடருகின்ற இரயாவினது குழுவாத அரசியலானது எந்த அறத்தின்மீதும் கட்டப்பட்டிருக்க முடியாது.முழுக்க முழுக்க இஃது,கயமைத்தனமான மக்கள்விரோதிகளது செயற்பாடாகவே பார்க்கப்பட முடியும்.

தமது காட்டிக்கொடுக்கும் அரசியல்வரலாற்றில் செய்த அனைத்துக் குலைப்பு அரசியலிலும்,அதன் உச்சமான இந்தப் பேட்டி அரசியலானது தம்மைத் தொடர்ந்து மக்கள்விரோதிகளாகவே நிலைப்படுத்தவும்,தமது எஜமானர்களுக்குத் தொடர்ந்து "இன்போமர்"களாகவே செயற்பட்டுத் தமது இருப்பை நிலைப்படுத்திப் புரட்சி வேசமிட்டுத் தொடர முனையும் சதி அரசியலில், இத்தகைய உலகப் பாட்டாளிய வர்க்கத்தின் ஒரு பகுதியான கட்சியின்-தலைவரின் பேட்டி அவசியமாக இருக்கிறது.இதற்காக இவர்கள் பசந்தாவின் எழுத்துக்களிலிருந்து வெட்டியொட்டிய அவரது கருத்துக்களைத் தமக்காகப் பசந்தாவே பேட்டியளித்துத் தந்ததாகச் சொல்லிப் பிரசுரிப்பதென்பது மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் சந்தர்ப்பவாத -நரித்தனமான செயற்பாடாகும்(பசந்தா இலண்டன் வருகை தந்ததும்,அவரைத் தமிழர்கள் தரப்பில் இனியொரு நாவலன்மட்டுமே சந்தித்திருந்ததென்பதும் நாம் அறிந்துகொண்டவைதாம்).

இவர்களது இந்தப் பேட்டிக் கட்டுரை குறித்து,இனியொரு நாவலன் பசந்தாவுடன் நேரடியாகவுரையாடியபின்,அவரது கருத்தின்படி இது அவரால் அளிக்கப்பட்ட பேட்டியல்லவென உறுதிப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் பரவலாகக் கிடைக்கிறது.இந்த இரயாகரனது"புதிய ஜனநாய மக்கள் முன்னணி-தமிழரங்கம்"புரட்சிகர வேடமிட்டுக் கொள்ளத் தொட்ட இந்த இழிய செயற்பாடானது,இவர்கள் கூறும் மக்கள் நலத்திலிருந்து நோக்கப்படும்போது கிரிமினல் நடாத்தையாகும்.

இத்தகைய நடாத்தையின் மூலம் இவர்கள் கட்டியமைக்கும் அரசியலது தொடரெது?

கடந்தகாலத்துத் தமிழீழ விடுதலைப் போராட்டத்துள் இரயாவினது பாத்திரமென்ன?



புலிப்பினாமி!.

புரட்சிகரச் சக்திகளை அணித்திரட்சியடையவிடாது பிளந்து,ஆட்காட்டி, அழித்தல்,மாற்றுக் குழுக்களை இலங்கை அரசினது கைக் கூலிகளெனப் புலிகளது அரசியலைப் புரட்சிகர வேசமிட்டுச் செய்வதுவரைத் தொடரும் இந்தப் பீடையை எங்ஙனம் விளங்கிக் கொள்வது?

சாளரத்தில் ஏறித் துப்பாக்கி காட்டி அச்சப்படுத்தித் தொடர்ந்த இரயாகரனது புலிமுகமானது புரையோடிப்போன புலிகளது அராஜகத்தின் இன்னொரு வடிவமென்பதை வரலாற்றில் பதிவு செய்வதுவரை எனது முயற்சி தொடரும்.


அராஜவாதிகள் எந்த வேசமிட்டுக்கொண்டாலும் பொய்மையும்,போலித்தனமும் உண்மையினது முன் செல்லாக் காசாகப் பல்லிளிப்பதைத்தவிர, அதற்கு எந்த வலுவும் கிடையாது.என்றபோதும், இந்த உதிரிப்பாட்டாளிய வர்க்கக் குணாம்சமானது,எப்படி வரலாற்றில் செயற்படுமென்பதை நாம் லெனினிடம் கற்றாலும்,இத்தகைய செயற்பாடுகள் மூலமாக இரயாகரன் தொடர்ந்து, நமக்கு அதன் சாத்தியமான எல்லைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

இதை முன்வைத்து:

அரசியல் அறங்குறித்து நிறையப் பேசிக்கொள்ளலாம்,அதிலுங்கூட அப்பட்டமாக மக்களைச் சொல்லியே புரட்சிகரமான அரசியலைப் பேசுவதாகவும்,மக்களுக்காகவே தமது அனைத்து நடவடிக்கைகளும் செயலூக்முறுவதாகவும்,மக்களுக்கு வெளியில் நட்பு-மனிதாபிமானங் கிடையாதென்பதும்,தமிழரங்க-இரயாகரன் குழுவினது வாதமாகும்.புகலிடச் சிந்தனைமையத்தை உருவாக்கிக்கொண்ட சந்தர்ப்பம்வரை இவர்களது அரசியலுக்குள் புலிவழியான அரசியல் அறங்களே அடிப்படையான நோக்கங்களைக் காண்பதற்கு அடிப்படையானதாகவிருந்தது.கடந்த காலத்திலிருந்து(தூண்டில் சஞ்சிகையில் நூறு பூக்கள் மலரட்டும் விவாதத் தொடர்) நான் இரயாகரனது அரசியலை ஒரு இணக்கமான அரசியல் போக்கிலிருந்து விலத்தியே வகைப்படுத்தியவன்!

இரயாகரன் என்பது ஒரு குறியீட்டுப் பெயராக வலுப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்கி, ஒரு தனிமனிதனுக்குட்பட்ட கருத்து நிலையாகக் கட்டபட்ட கருத்துகளுக்குப் பின் பல தலைகள் மறைந்திருப்பதை நான் மூன்றாவது அணிக்குள் வகைப்பட்ட சில தேடல்களிலிருந்து புரிந்துகொண்டபோது,இது புலிகளது பினாமிகளைக்கொண்டவொரு அணியெனவும்,புரட்சிகரச் சக்திகளைத் துப்பாக்கி முனையில் அழிப்பது முடியாதவொரு நிலையில் புலிகள் தமது சக்திக் குட்பட்ட அழிப்பு அரசியலைச் செய்தபடி அதற்கு வெளியில் இந்தத் தமிழரங்கம்-இரயாகரன் கும்பலைத் தமது அழிப்பு அரசியலின் இன்னொருவகை(புரட்சிகரச் சக்திகளாக நடித்து மாற்றுக் கருத்தாளர்களை-புரட்சிகரச் சக்திகளை-வர்க்கவுணர்வுபெற்ற தோழர்களைக் அணைத்துக் குலைத்தல்) உறுப்பாகவே அரசியலைச் செய்யத் தூண்டிக்கொண்டிருந்தது.அதற்கானவொரு மறைமுகமான அநுமதியையும்-கண்காணிப்பையும் புலிகள் கவனித்துச் செய்தபடி இந்த இரயாகரன உருவாக்கிய புலம்பெயர் புரட்சிகர நாடகம் மிகவும் கீழ்மையான அனைத்துப் புலிவழிக் குணங்களுடனும் கட்டியமைக்கப்பட்ட காலத்தில், மக்களுக்காகப் போராடிய சபாலிங்கம்போன்றவர்கள் புலிகளால் கொல்லப்பட்டபோது அதைக் காயடிக்கும் கருத்துக்களால் நீர்த்துப்போக வைக்கும் முனைப்பில் இரயாகரனது புரட்சிக் கட்டுரைகள் பேசவும் முற்பட்டிருந்தன.

முள்ளி வாய்க்காலில் சரணடைந்து, இலங்கைப் பாசிச அரசால் கொல்லப்பட்ட பல புலித் தலைவர்களையும்,பிரபாகரனையும்"சரணடையாது இறுதிவரை போராடி மரணிக்கும் சக்தியாக"வருணித்து அவர்களுக்குப் புரட்சிகர வணக்கம்-தலைசாய்த்தலென இரயாகரன் குழுவாடிய நாடகமானது அவர்களது புலிவிசுவாச அரசியலை மக்களுக்கு அப்பட்டமாகச் சொல்லியது.

இதையும் மீறித் தம்மைப் புரட்சிகரச் சக்தியாக நடாகமாட இரயாகரன் பலதரப்பட்ட வேளைகளில் புலித்தலைவரைச் சாடிய கட்டுரைகளை எழுதிக்கொண்டு,தம்மைப் புரட்சிகர அரசியலின் தொடர்ச்சியாக முன்வைப்பதில் மிகத் தேர்ந்த நாடகத்தைச் செய்துகொண்டது.இது புலிகளது மிகத் தந்திரமான அழிப்பு அரசியலிலிருந்து தொடர்ந்த அரசியலே என்பதை நான் மட்டுமே புலம்பெயர் சூழலில் அதிகம் சொல்லிக்கொண்டேன்.எனது கட்டுரைகளை ஒரு வகைப்படுத்தலுக்குள் உட்படுத்த முனைந்தால் அதுள் பேசப்படும் "புலிப்பினாமிகள்" என்பது இந்தத் தமிழரங்க-இரயாகரன்-புதிய ஜனநாயக மக்கள் முன்னணிக் குழுவுக்குள் நிலைப்படுத்தப்படும்"புரட்சி"வேட அரசியல் என்பதுதாம் உண்மையான அர்த்தமாவது!

சமீபத்தில் அம்பலப்பட்ட(பசந்தா பேட்டிவகை இழி அரசியல்-புதியகலாச்சாரத்தின் இரயாகரனது அரசியல்மீதான விவாதம்-விமர்சனம்-தோழமைத் துறத்தல்,புலித் தலைமையைச் சரணடையாது போரிட்டு மறைந்ததாகப் புனைந்து தலை சாய்த்தல்,புரட்சிகர வேசம்...) இரயாகரன் கோஸ்ட்டியின்புரட்சி- புலிப்பினாமி வேடமானது அவர்களை ஒரு முன்னணியை உருவாக்க வேண்டியவொரு சூழலுக்குள் தள்ளியதன் விளைவே,இந்தப் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தோற்றம்.இவர்கள் புலிகளிடமிருந்தும்,இலங்கையில் மக்களது சொத்தைக் கற்ற நஷனல் வங்கிக்குள்ளிருந்து கொள்ளையிட்ட அன்றைய கோடிக்கணக்கான தொகையின் மூலமாகப் பலம்பொருந்திய நிதிவலுவுடன் தமது அரசியலைத் தொடரும் "தொழில் முறையான முறையில் எழுதித் தள்ளும்" கருத்தாடலை உருவாக்கிக்கொண்டனர்.

இரயாகரன் ஒரு தமிழ் அச்சகத்துள் வேலை பார்ப்பதெனும் போர்வையில், மாற்றுக் கருத்தாளர்களைத் தொடர்ந்து கண்காணித்து, அவர்களது கருத்துக்களை நீர்த்துப்போக வைக்கும் எழுத்துக்களை அவரது தோழமைகளோடிணைந்து தினமும் எழுதும் தொழிலை இந்தப் பொருட்பலத்துடன் செய்யும் இன்றுவரை,அரசியல் அறமென்பது ஒடுக்குமுறையாளர்களுக்குப் பினாமிகளாவிருந்து புரட்சியாளர்களைக் காட்டிக் கொடுப்பது தாமென்பதைச் சரிவரச் செய்து வருகின்றனர்.ஆங்காங்கே, ஒத்தர்களை வைத்து இவர்கள் உருவாக்கிய"புரட்சிகர"வேடமானது ஒருவகையில் இவர்களிடஞ் சிக்கிய மூலதனவலுவால் இன்றுவரை ஒருவித போலித்தனமான அழிப்பு அரசியலைப் புரட்சிகரமாகச் செய்வதில் பல கட்டச் செயற்பாடுகளை(தமிழ்த் தேசிய ஆவணக் சுவடிகள்வரை...) உருவாக்கியுள்ளது.

அம்பலப்பட்டு,அரசியல் அரங்கு நிர்மூலமான வேளைகளில் இவர்கள் நாடகமிடும்"மக்கள் நலன்"என்பது ஒருவித ஆயுதமாக மற்றவர்கள்மீது பாய்ந்து வலுவாகத் தாக்கும்.அறங்கெட்ட இயக்ககங்களது "வரலாறுகளை"பதிவதென்றும்,போராட்ட அநுபவங்கௌன்றும் இவர்கள் செய்யும் அரசியலது தொடர்ச்சி புலிப் பினாமி அரசியலது தொடரென்பதிலிருந்து கடந்த மாதத்தத்தில் தேனியில் மணியம் எழுதும் அநுபவத் தொடரில்(பலர் இதை வாசித்துவருவதால் விபரிக்கத் தேவையில்லை) இவர்கள் புலிப்பினாமிகளாகப் புலம்பெயர் தேசம்வரை தொடர்ந்த ஈனத்தனத்தை, என்.எல்.எப்.ரீ பிளவுக்குழுக்களென விளித்து மக்களுக்குச் சொன்ன செய்தியும் உண்மைமீதான சந்தேகத்தைத் தர முடியாதது.

இப்போது,இன்னும் விரிவாக இவர்களது நாடகங்களை-வேசத்தைச் சொல்வதென்றால், இந்த இரயாகரனால் பலமுறை சொல்லப்பட்ட செய்தியும்,நம்மால் நேரடியாக அநுபவமாகிய இலங்கையர் சங்கத் ஸ்தபகர் இரஞ்சித் கெனாயக்க ஒரு இலங்கை அரச லொபி உறுப்பாகும்.இத்தகைய லொபி அரசியலைப் பலமுறை விமர்சித்த இரயாகரன் சமீபத்தில் மனிதம் இரவியின் முக நூல் நிலைத் தகவலில் அறிமுகஞ் செய்ப்பட்ட இரஞ்சித்தின்நூல் அறிமுக(இது சுவிஸ் நாட்டில் மனிதம் குழுவால் நடாத்தப்பட்டிருக்க முடியும்) நோட்டீசைத் தனது தமிழரங்கத் தட்டியிலும் ஒட்டிப் புரட்சிகர-மாற்று அரசியலைத் தொடர்ந்தார்.இது,தனது கையுக்குள்ளிருந்துதாம் அனைத்தும் தொடர்வதாகவும்,தான் அனைத்தையுங் கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்திக் கண்காணித்துவருவதாகவும்,தனது எஜமானர்களுக்குச் சொல்வதாக இதைக் காண்பிக்மொரு செயலூக்கத்தின் வியூகமாகக் கண்டுகொள்ளலாம்.உண்மையான புரட்சிகரச் சத்தியும்,அதன் செயற்பாடும் எப்படி இருக்கமுடியா தென்பதற்கு இரயாகரனது அனைத்துச் செயற்பாடுகளுமே உதாரணமானதும்,சாட்சியுமாக நம் முன் இருக்கிறது.

இதைப் பசந்தாவின் பேட்டியைக் கட்டியமைத்த போலி பேட்டியிலிருந்தும், தமக்கும் நேபாளப் புரட்சியாளர்களுக்குமான "தோழமை" உறவு இருப்பதாக நடாகமாடும் இந்தப் போலித்தனத்திலிருந்து, இந்த "இரயாகரன் புரட்சி" வினைக்குள்ளே தொடர்ந்து கட்டியமைக்கப்படும் மக்கள்விரோத-காட்டிக் கொடுக்கும் அரசியலையும்,புலிப்பினாமிச் செயற்பாட்டையும் மீளவும் இனம் காட்டுகிறேன்.


ப.வி.ஸ்ரீரங்கன்.
ஜேர்மனி
11.12.2011