Samstag, Dezember 29, 2007

புறாக் கதைவிடும் T.B.C இராமராஜன்!

புறாக் கதைவிடும் இராமராஜனும்,ரீ.பீ.சியும்.


க்களின் குருதியில் கத்தை கத்தையாகப் பணம் பண்ணும் இந்தியக் கைக்கூலிக்குச் சமாதானப் புறாவைக் குறித்து கனவு வருகிறது.பேர்ளின் ஜெயசிங்கம் வீட்டிலிருந்து புறப்பட்ட புறா ரீ.பீ.சீ.வானொலியை எட்டிப் பார்த்துவிட்டுத் தொடர்ந்து ஜேர்மனிலே புலம் பெயர் தமிழர்களின் வீடுகளின் சமாதான மனங்களைக் கண்டு,ஸ்ரீலங்ங்காவின்"சமாதான விரும்பியான"சனாதிபதியைச் சந்திந்து உரையாடியபோது,அவர் கூறிய"நான் சமாதானத்துக்கு எதிரானவன் இல்லை"என்றவுடன் ஆனந்தப்பட்டு வன்னிக்குச் செல்கிறதாம்.அங்கே, ஏ-9 பாதையைத் திறந்தால் சமாதானம் வந்துவிடுமென்ற கதையால் மனம் முடங்கி மீள ரீ.பீ.சி.யை எட்டிப் பார்த்துவிட்டுத் தனது தாய்வீடான பேர்ளின் ஜெயசிங்கம் வீட்டையே போய்விட்டதாம்.ஏலவே, இயக்கங்களுக்கும்(புலி உட்பட்ட) இந்திய அரசுக்கும் இடையிலான பேரங்கள் மற்றும் தரகு வேலையில் நல்ல அனுபவமுள்ள இராமராஜனுக்கு அதைக் குறித்தானவொரு இன்னொரு கனவு இப்படிப் புறாமீது ஏறுகிறது!

ஆக,பேர்ளின் ஜெயசிங்கம் ஒரு சமாதான விரும்பியாக இனம் காட்டப்படும் அரசியலில் அவரது இப்போதைய என்.ஜீ.ஓ.சார்ப்பு நடத்தையால் உருவாகிறது.
ஜேர்மனிய அரசு சாராதவென்ற அரசுசார்பு நிறுவனங்கள் ஜெயசிங்கத்துக்கு ஊடாகச் செயற்படும் அரசியல், இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிச்சையிட்டுத் தத்தமது காரியங்களை ஆற்றுவதாக இருக்கிறது.இதே நாடுகளின் ஆயுதங்கள்தான் நமது மக்களின் தலையில் குண்டுகளையும் பொழிகின்றன!இப்படிப் பொழிந்து அந்த மக்களை ஊனமாக்கிவிட்டு அவர்களுக்கு ஊனிடம் இவர்களின் பொருளாதார மற்றும் ஆர்வங்கள்தான் என்ன?அத்தகைய ஆர்வங்களை இத்தகைய நடத்தைகள் மூலம் அவர்கள் பெறுவதற்கு ஜெயசிங்கம்போன்றோர்கள் துரும்புகள்.


பராவின் மரண வீட்டிற்கு வந்து அரசியல் செய்த ரீ.பீ.சீ. இராமராஜனுக்கு தங்குமிடத்தைச் செய்திருப்பார் ஜெயசிங்கம்.அவருக்கு ஒரு பப்பா மரத்தைப் புறாவினது கதையூடாக வளர்த்த இராமராஜன் அப்பாவி மக்களின்-தமிழர்களின் சில அரசியல் கோரிக்கைகளை"ஏ-9"பாதையாகக் குறுக்கித் தனது வம்புத்தனமான அரசியலை இந்தியப் பாதந்தாங்கிக் காரியமாக்கும்போது அதையும் சில மண்டை கழண்ட ரீ.பீ.சீ.வானொலி இரசிகர்கள் ஏற்றுக் கதை விடுகிறார்கள்!


அப்பா இராமராஜா நீ,செய்யும் அரசியல் உனக்கே கத்தைகத்தையாகப் பணம்போடும் ஒரு நிலையில், நீ தமிழ் பேசும் மக்களுக்கு நீதியான அரசியலாக்க முனைவது உனது வளத்தை மேன்மேலும் வளர்த்தெடுக்கவா ராசா?


முன்னாள் ஈரோஸ் தோழர் ஜெயசிங்கம் இன்னாள் எடுபிடி ஏகாதிபத்தியத்துக்கு.


இவரது ஆலோசனைகள் தம்பி இராமராஜனுக்குக் கைகொடுத்தபோது,செஞ்சோற்றுக்கடனாகப் புறாவிடும் கதை வளர்கிறது.அண்ணர் ஜெயசிங்கத்தின் அதிரடி ஆலோசனைகளின் விளைவாக இன்று, சமதானப் புறாவிடும் இத் தூதர்கள் நாளை புறாவுக்குப் பதிலாகக் குண்டுகள் தாங்கிய இரும்புப் புறாக்களை நமது தேசமெங்கும் அனுப்புவதற்கான இன்னொரு அரசியலைப் புலிகளைச் சாட்டி அனுப்பலாம்.எல்லாம் ஜனநாயத்துக்காத்தானாம்.


அப்பாவித் தமிழ்மக்கள் சிங்களக் கொடுங்கோலன் மகிந்தாவாலும் அவனது வான் தாக்குதலாலும் நாளும் கொல்லப்படும்போது அதை நியாயப்படுத்திப் "புலிப் பயங்கரவாதிகள்" கொல்லப்பட்டதாககக் கதை திரிக்கும் இந்த இராமராஜன், இப்போது"ஏ-9"நெடுஞ்சாலைக் கதையைவிட்டுப் புலியின் வரி வசூலிப்பைச் சொல்கிறார்கள்.தாங்கள் தத்தமது நலனுக்காக அப்பாவி மக்களின் தலைகளில் குண்டைப் போட்டபடி ஜனநாயகக் கதைவிடுவதைப் போலவே,இப்போது புறாக் கதைவிட்டு இலங்கைப் பாசிச அரசின் வன்கொடுமை அரசியல் நகர்வை நியாயப்படுத்தி வருவது மிகக் கயமையானது.இவர்கள் எவ்வளவு காலத்துக்குத்தான் நம்மை ஏமாற்றுவார்கள்?


இராமராஜனின் வானொலிக்கு வகுப்பெடுப்பதை
ஜெயசிங்கமோ அல்லது சிவலிங்கமோ செய்யவில்லை!



இவர்களைப் பயன்படுத்திப் புலம் பெயர் தமிழ் பேசும் மக்களுக்குள் மெல்ல ஊடுருவும் இந்த இந்திய-இலங்கைக் கைக்கூலிக்கு வகுப்பெடுப்பவர்கள் இந்திய உளவுத் துறையென்பதை நாம் மிகவும் ஆதாரத்தோடே கூறுகிறோம்.இந்த அரசியல் குழிபறிப்பில் இராமராஜன் போன்றவர்கள் இணைந்தியங்கும் அரசியல் எஜமானக் கட்டளைகளைச் செம்மையுறச் செய்வதாகவே இருக்கிறது.இதற்காக இவர்கள் பெறும் மில்லியன்கள் எமது மக்களின் எதிர்காலத்தையே இருட்டாக்கிவிடுகிறது.இத்தகைய அரசியலை முன்னெடுத்த அன்றைய தமிழ் ஓட்டுக் கட்சிகளின் பரிணாமமாக இவர்கள் நம் முன் வளர்ந்து விருட்ஷமாக நிற்கிறார்கள்.இவர்களை வேரோடு சாய்க்காமல்(கொல்வதல்ல) நாம் நமது மக்களுக்கான நியாயமான போராட்டத்தைச் செய்ய முடியாது!


தமிழ்பேசும் மக்களுக்கு இவ்வளவு துரோகத்தனத்தைச் செய்யும் இந்த வானொலி, தங்கு தடையின்றி எந்தவிடத்துக்கும் தன்னை முன்னிலைப்படுத்திக் காரியமாற்ற முனையும்போது இந்த வானொலியை அம்பலப்படுத்தி நிராகரிக்க முடியாத கபோதிகளாக நம்மில் பலர் இருக்கிறார்கள்.இவர்களில் பலர் "மக்கள் எக்கேடுகெட்டாலும் பறுவாயில்லைத் தமது இயக்க நலன்சார்ந்த நலன் உறுதிப்பட்டால் சரி என்றியங்கும் புலிகளைப் போலவே" செயற்படுகிறார்கள்.இவர்கள் மக்களின் உரிமைகளையும்,அவர்களது அழிவையும் தமக்குப் பதவி-பணம் பெறும் மூலாதாரமாகக் காணும் அரசியலாக விரித்துச் செல்லும்போது,இவன்(ள்)களுக்கும் ஆனந்தசங்கரி போன்ற மிகப் பிரபலமான இந்திய அடிவருடிகளுக்கும் சாரம்சத்தில் மிக நெருங்கிய உறவு இருக்கிறது.அந்தவுறவு அவர்களது அரசியலின் தொடர்வினைமட்டுமல்ல.மாறாக,மக்களின் உரிமைகளை-அவர்களின் துயரைத் தமது அரசியலுக்காகப் பயன் படுத்துவதைக் குறித்துச் சொல்கிறோம்.


மெல்லப் புலம்பெயர் தமிழர்களை முட்டாள்களாக்கி வரும் இன்றைய புலியெதிர்ப்புக் கும்பல்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று தம்மை முன்னிலைப் படுத்தும் அரசியலையும் மரண வீடுகள் தொடக்கம் மற்றெல்லா நிகழ்வுகளிலும் ஆற்றி வருகிறார்கள்.அன்று, ரொக்ஸ்சிய வாதிகளை(நான்காம் அகிலம்) இலக்கியச் சந்திப்புக்குள்ளேயே நுழையவிடாதவர்கள் இன்றோ இந்திய உளவுத்துறையைத் தாரளமாகக் கதவைத் திறந்து கைலாகு கொடுத்து வரவேற்பதன் நோக்கம் என்ன? இந்த இந்திய உளவுக் கைக்கூலிகள் நம்மோடு உறவாடி நம்மைக் கருவறுப்பதற்காகவா அல்லது அவர்களினூடாக இலங்கையில் பதவி பெறுவதற்காகவா?

இப்போது ரீ.பீ.சீ.ஊடாகக் காரியமாற்றித் தமது வளத்தை மேம்படுத்த,பதவிகளைப்பெற முனைவதற்கு ஒரு பிடி வேண்டும்.அந்தப் பிடிக்கு மக்கள் மத்தியில் செயற்பாடுடையவர்களாகக் காட்டி,மக்களை ஏமாற்றிக் கொள்வதற்குத் தலித்துகளுக்காக T.B.C குரல் கொடுப்பதும் ஒருவழியாகவே இருக்கிறது.


இன்று நாம் செய்யும் அரசியலானது இலட்சம் மக்களைப் புதைகுழிக்குள் அனுப்பிவிட்டுள்ளது.


இனித்தொடரும் இந்த வகையான குழிப்பறிப்புக்கள் நம்மை நிரந்தரமாக நாடோடிகளாக்கும் தந்திரத்தோடு நகருமானாலும் அத்தகைய நிலைமையைத் தடுத்து நிறுத்துவதற்காக நாம் புலிகளைமட்டுமல்ல இந்த வேடதாரிகள் எல்லோரையும் அம்பலப்படுத்தி மக்களைக் காப்பதும்,நமது ஜீவாதாரவுரிமையான சுயநிர்ணயத்தை நோக்கிப் புதிய வகையான முன்னெடுப்பைச் செய்வதற்கு எம்மைத் தயார்ப்படுத்துவது அவசியம்.இத்தகைய செயற்கரிய காரியத்தை இன்றைக்குப் புலம் பெயர் சமுதாயத்திலுள்ள நம்மைப்போன்ற கிழடுகள் அல்ல முன்னெடுக்க முடியும்.இன்றைய இளைய தலைமுறையே இதைச் செய்யும் தகமையுடையவர்கள்.இவர்களைக் காத்து வழிப்படுத்தும் கடப்பாடே நம்மிடம் உள்ளது.



பிற்குறிப்பு:


அன்பு வாசகர்களே,இதுவே இவ்வாண்டுக்கான இறுதிக் கட்டுரையுமாகும்.
மலரப்போகும் புத்தாண்டு உலகில் அமைதியையும்,சமாதானத்தையும் தரும்
எந்த உறுதியையும் உலகப் பொருளாதார நலன்கள் குறித்துரைக்கவில்லை!
எனினும்,குறைந்தபட்சமாவது உலகத்தின் அப்பாவி மக்கள்
உயிர்தப்பி வாழவேண்டுமென்ற நோக்கோடும்,
உங்கள் எல்லோருக்கும் நிறைவான சம்பவங்கள் நேரவும்,
குறைவில்லா ஆரோக்கியம் கிடைக்கவும் என் வாழ்த்து!


மேலும், புதிய ஆண்டில் சந்திப்போம்.


ப.வி.ஸ்ரீரங்கன்


29.12.2007

Mittwoch, Dezember 26, 2007

தைப்பொங்கல்!

ஒரு செம்பு சுடு தண்ணீர்.



மார்கழி மாதம் எனக்கு மனதுக்கேற்ற மாதமாகவே என்றும் இருந்து வருகிறது.ஊரிலிருந்துபோதும்சரி,இந்த அகதிய வாழ்வுக்காக ஜேர்மனிக்கு போடர்தாண்டி வந்தபின்புஞ்சரி எனக்கெப்பவும் மார்கழிமீதான விருப்பு பன்மடங்காகிச் சென்றுகொண்டேயிருக்கு.சின்ன வயது, அம்மாவின் சேலைத் தலைப்போடு ஒன்றித் திரிந்தபோதெல்லாம் மார்கழியில் வரும் திருவெம்பாவைச் சங்கொலியும்,அதிகாலைத் தேவாரமும் என்னைத் தாலாட்டியிருக்கிறது.விடியலில் எழும்பித் திருநீறு வேண்டுவதற்காகத் திருவெம்பாவை பஜனைக்கூட்டத்தை நோக்கி ஓடுவோம்.எனது தம்பி மார்களும் நானுமாக இந்த மார்கழி மீது அளவுகடந்த பாசத்தை வைத்திருக்கிறோம்.இந்தப் பாசம் வரும் தைப் பொங்கலை நோக்கியே இருந்திருக்கிறது.


தைப்பொங்கல்!


இந்தப் பொங்கலில் எங்கள் புளியங்கூடல் சந்தி மிகவும் களைகட்டிச் சிரித்து நிற்கும்.கனகசபை மாமாவின் கடையில் மான்மார்க் வட்டப்பெட்டி வெடியும்,வாணங்களும் ஒரு பெரிய அலங்காரமாக அடுகப்பட்டிருக்கும்.பொங்கல் பானைகளெல்லாம் குவிந்திருக்கும்.ஊரே பொலிவுற்றுக் கிடக்கும்.அம்மா புதிய அடுப்புக் கல்லை மண்ணில் செய்து காயவைத்திருப்பார்.அப்பர் பொங்கலுக்காவே எங்களுக்கு உண்டியல் போடுவதற்கு நிறையக் காசுகள் தருவார்.நாங்கள் வெடிகள் வேண்டுவதற்காகவே உண்டியலிடுவோம்.பொங்கலுக்கு முந்திய இரவில் விடப்படும் வாணத்துக்காகவே நாங்கள் கனவுகளைக் காணத் தொடங்குவோம்.இப்படிப் பொங்கலுக்கான ஒரு புதியவுணர்ச்சி எங்களுக்குப் புதுவுலகாக எங்கள் கிராமத்தை மாற்றுவது வழமை.



ஊரெல்லாம்கூடிப் பொங்குகிற இந்தவொரு நிகழ்வு மார்கழி மாதத்தை மனதுக்கு விரும்பியவொரு மாதமாகவே எனக்குப் பழக்கப்படுத்தியது.இந்த மார்கழியில் ஜேர்மனியும் இவ்வளவு குதகலாகமாகி சிறுப்புற்றுக் கிடக்கிறது.நத்தார் பண்டிகையோடு இந்த நாடே பூரித்துக்கிடக்கிறது.தேங்கிக்கிடந்த சந்தையெல்லாம் பெருநீர் கண்டு உடைபடும் கண்மாய்க் கரையைப்போல் உடைப்பெடுத்து நுகர்வோரால் நிறைந்து வழிகிறது. இந்த வூப்பெற்றால் பெருநகரின் அங்காடிகள் நிறைந்த பகுதியில் மெல்ல நடந்து கொள்ளும்போது ஊரின் ஞாபகம் உள்ளத்தைத் தாக்கியது.மெல்லச் சிந்தும் விழி நீர் அந்த மண்ணைச் சுற்றியே தொடரும் உணர்வின் ஒரு குறிப்பாய் நிலத்தில் வீழ்ந்து வெடிக்கிறது.மௌனித்திருப்பதற்கான எந்த மந்திரமும் என்னிடமில்லை.இப்பேதெல்லாம் தேசத்தின் கதை எப்படியோ போய்விட்டது!


எங்கள் ஊரின் மாரி மழையில் தோட்டம் துரவெல்லாம் மூடுண்டு போவதும்.பயிர் அழிவதும் அப்பப்ப நடப்பது.இந்த மாரிகாலத்து மார்கழியில் ஊர் பெருக்கெடுத்து ஓடும்.நீர் வடிந்தோடுவதற்கு அப்போதெல்லாம் பாரிய மதவுகள் குறைந்த எங்கள் கிராமத்தில் வெள்ளம் பல நாட்கள் தேங்கி நிற்கும்.வீதியைப் பிளந்து நீரை மறுபக்கம் ஓட வெருட்டுவார்கள் ஊர் பெரியவர்கள்.எங்களுக்கு கடலிலிருந்து வெள்ளத்தோடு அள்ளுப்பட்டுவரும் மீன் குஞ்சுகளைப் பிடிப்பதில் ஆர்வம் அதிகம்.நாங்கள் இப்படி நீராடி மகிழ்ந்த ஒரு வருஷம் 1970.அப்போது எங்கள் ஊருக்கு வாந்திபேதி வருத்தம் வந்து தொலைய,ஊரெல்லாம் பதட்டம்.கோலரா நோய் பரவியதாகப் பறையடித்துச் சொன்னார் நல்லான்.எங்கள் ஊரில் அப்போதெல்லாம் இப்படித்தான் செய்திகள் ஊருக்கு வரும்.நல்லான் அப்பு கிராமச் சங்கத்தில் உறுப்பினர்.அவர்தான் எப்பவும் எங்களுரின் செய்தித் தொடர்பாளர்.எங்களுக்குச் சந்தோசம் கரை புரண்டோடியது.எங்கள் பள்ளிக்கூடத்துக்கு காலவரையற்ற மூடுவிழா.


ஒவ்வொரு பகலிலும் பாடசாலைக்குள் வைத்தியர்களும்,பொலிசும் இருப்பார்கள்.அவர்கள் மருந்து கொடுப்பதும் ஜீப் ஓடுவதாகவும் இருப்பார்கள்.


ஒரு நாள் காலை நான் வீட்டிலிருந்து ரோட்டுக்கருகிலிருந்த பாடசாலை நோக்கி நடந்தேன்.


ஜீப்பையும்,ஊசிபோடும் ஆட்களையும் வேடிக்கை பார்ப்பதற்கு ஆர்வமாகி இருந்தது.என்னைக் கண்ட துப்பாக்கிதாங்கிய பொலிசார் இருவர்"தம்பி இங்கே வாங்க"என்றார்கள்.என்னையழைத்தவரின் தமிழ் கொச்சையாக இருந்தது.அவர் என்னிடம் "தம்பி உணு வத்துறு கொண்டு வாறீங்களா"என்றார்.மற்றவர் சுடுதண்ணி என்றார்.எனக்குச் சிங்களம் கொஞ்சம் தெரியும்.எனது தந்தையார்.பலாங்கொடையில் கடை வைத்திருந்தவர்.அவரது கடை 1967 இல் நட்டத்தில் போக ஊரில் சிறு விவசாயி ஆகியிருந்தார்.அப்பரின் மடியில் தூங்கும்போதெல்லாம் அப்பர் பலாங்கொடைக் கதைகளையும்,சிங்களத்தில் தானங்களையும், சிறு சிறு சொற்களையும் சொல்லித் தருவார்."உணு வத்துறுவும்"நான் அறிந்த வார்த்தைகளில் ஒன்றாய் இருந்தது.



இப்போதெல்லாம் யோசிக்கிறேன்.அன்றைக்குப் பொலிசைக் கண்டு பயம் கொள்ளவில்லை.அவர்களிடமிருந்த துப்பாக்கியும் அச்சம் தரவில்லை.எனக்கு அதன் உருப்படி பார்ப்பதற்கு ஆசையாய் இருந்தது.அம்மாவிடம் "சுடுதண்ணியாம் பொலிசுக்காரன்கள்"என்று சொல்லிக் கொண்டே துப்பாக்கி பற்றிய கேள்விகளைத் தொடுத்தேன்.அம்மா சுடுதண்ணியை அடுப்பில் வைத்து விட்டுச் செம்பைத் தேசிக்காய்த் தோலால் சாம்பல் சேர்த்து மினுக்கினார்.கூடவே சொன்னார்.துவக்கு ஆட்களைச் சுடும்.துவக்கு வைச்சிருக்கிறவர் ஒருத்தருக்கும் பயப்பட மாட்டார்.கள்ளர்கள் வீட்டுப்பக்கம் வரமாட்டார்கள் என்றும் சொன்னார்.


அன்று அம்மா சொன்னதன் அர்த்தம் பின்னாளில் அதைத் தாங்கியபோது புரிந்தது.துப்பாக்கி இருக்கும்போதும்,ஊருக்குள் உலாவரும்போதும் ஊரிலிருக்கும் எல்லோரும் எனக்கு மீன் குஞ்சுகள் போலவும்,காலுக்குள் நெளியும் மண் புழுப்போலவுமே தெரிந்தது.


அன்றைய சுடுதண்ணிக்குப் பின்னால் ஒரு சின்னப்பொறி உள்ளத்தில் கிடக்கிறது.அந்தப் பொறி இன்றுவரையும் இனிக்கிறது.


பொலிஸ்காரர்களில் அழகாய்த் தமிழ் பேசியவர் தமிழராகத்தான் இருக்கவேணும்.அவர் "டேய் அதைத் தொடதே!"என்று என்னை உறுக்கினார்.மற்றவர் கொச்சைத் தமிழ்பேசினாலும் மரியாதையாய் அன்று உரையாடியுள்ளார்.இன்றும் அதை உணரத்தக்கதாகவே இருக்கிறது."தம்பி வாருங்கள்",துவக்கைத் தொடாதீர்கள்!"என்றார்.எனினும் துவக்கைத் தொடுவதற்கு அநுமதித்தார்.பின்பு ஐம்பது சதத்தைத் தந்து,"அதோ அந்தக் கடையில் போய் ஐம்பது சதத்துக்கு சொக்லேட் வேண்டிக் கொண்டு வாங்கோ" என்றார்.


எங்கள் வீட்டுத் தெருவில் ஒரேயொரு பெட்டிக்கடைதான் இருக்கிறது.அது இராமனின் கடை.ரொம்ப ரொம்ப இருமியபடியேதான் அவர் கடை நடத்தியது இன்றும் ஞாபகம்.நாங்கள் இராமரின் கடையில்தான் பொரியுருண்டைவேண்டுவது,தோடம்பழ இனிப்பு வேண்டுவது.அம்மாவிடம் வேண்டும் ஐந்துசதமும்,பத்துச் சதமும்தான் இராமருக்கு வருமானம்.அப்பப்ப அவரிடம் அழி இரப்பர்,பென்சில்,இரட்டை றூள் கொப்பி,சிலேற்றுப் பென்சிகளையும் வேண்டுவோம்.இப்படிப் புதுக் கொப்பி,பென்சில்,அழி இரப்பர்களை வேண்டும்போது பள்ளிக்குப்போவது விருப்பமாக இருக்கும்.புத்தம் புது அழி இரப்பரை மோந்து,அதன் வாசத்திலொரு மகிழ்ச்சி எனக்கு வருவதையும் நான் அநுபவித்திருக்கிறேன்.கொஞ்சக் காலத்தில் அந்த இரப்பர் என் காற்சட்டைப் பையில் இருக்கும்.


இன்றைக்கு இந்த மண்ணில் இத்தனைகாலம் வாழ்ந்த மனிதர்களின் சுவடே காணக்கிடைப்பதில்லையாம்.எல்லோரும் இறந்தும்,இடம் பெயர்ந்தும் நாடோடிகளாகவும் தொலைந்து போய்யுள்ளார்கள்.போனவர்கள் போனவர்களாகவே இருக்கப் புதுப்புதுத் தலைகள் இந்தத் தீவுக்குள் கிடக்கும் மிச்சசொச்ச செல்வங்களைத் திருடிக்கொண்டிருக்க காலம் போகிறது.


நான் வீட்டில் கிறிஸ்மஸ் மரம் வைத்தேன்.சோடினைகளைச் செய்தார்கள் சின்னவர்கள்.மரத்துக்கடியில் பரிசுப்பொருள்கள் வருமென்பது அவர்களின் கனவு.இந்தப் பண்டிகைகள் மனதுக்கு மகிழ்வைத் தந்திருந்தாலும் இறை நம்பிக்கையென்பது வேறு வகையானது.இந்தப் பொழுது இரம்மியமானதாக இருக்கலாம்.உலகத்தின் பலபாகத்தில் குருதிசிந்தப் பசியுறும் மானுடம் நோய்கும் நொடிக்கும் மரித்த காலம்போய், யுத்தத்தால் அழிவுற்றுச் செல்கிறது.தத்தம் வீடுகளில் பண்டிகைகளைக் கொண்டாடும் இவர்களது விருப்பம், தொடரும் யுத்த முனைப்புகளால் சிதறடிக்கப்படுவதும்,விருப்பத்தையுணரும் உடலும் உயிரையிழக்க நமக்கு எந்த மாதமும் காலப் போக்கில் மகிழ்வைத் தருவதற்கில்லாமல் போகலாம்.


இராமர் இரண்டு கையும் நிறையச் சொக்லேட்டுக்கள் தந்தார்.


கைகள் நிறைந்த சொக்லேட்டுக்களோடு அந்தப் பொலிஸ்காரரை அண்மித்து, அவரிடம் அவற்றை ஒப்படைக்க முனைந்தேன்.அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்:"எல்லாம் தம்பிக்குத்தான்"என்று, மழலைத் தமிழில் சொல்லிச் சிரித்தார்.எனக்கு மகிழ்ச்சி கரை புரண்டோடியது.தமிழ் பொலிஸ்காரர் "டேய்" என்றார் நான் வீடு நோக்கி நடக்க முனையும் போது, செம்பைத் தந்து, இன்னொரு செம்பு சுடுதண்ணீர் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.நான் காற்சட்டைப் பைகள் இரண்டிலும் சொக்லேட்டுகளைத் திணித்துச் செம்பை வாங்கினேன்.அவர் எனக்குச் சொக்கா தரவில்லை.இது எனக்கு எட்டுவயதில் அநுபவமானது.இரண்டு பொலிக்காரர்கள்.இருவரிடமும் இரண்டு வகை மனதிருந்திருக்கும்.இப்பவும் இந்த மகிழ்வை எனது குழந்தைகள் நான் கொடுக்கும் சில்லறைகளில் மகிழ்வார்கள்.ஆனால் மீன் குஞ்சுகளையும்,மாரித் தவக்கைகளையும் வெள்ளத்தில் மிதந்து கொண்டு நாம் கண்ட ஆனந்தம் இவர்களுக்கிருப்பதற்கில்லை.


குண்டுகள் வெடிக்கத் தலையில் கைவைத்துக் கொட்டும் குருதியைத் தடுத்தபடி, வானத்தைப் பார்க்கும் சிறுவர்களை இலங்கைத் தேசம் இன்று உருவாக்குகிறது.


அன்று, தைப்பொங்கல் வெடிகளில் மகிழ்ந்த சிறுவர்களை, இன்று குண்டுகளால் அச்சப்படுத்தும் ஒரு தேசமாயும்,சொக்லேட் தந்த பொலிசே இன்று தோட்டாவால் துளைக்கும் எதிரியாகவும் போனது எதனால்?

ப.வி.ஸ்ரீரங்கன்

Montag, Dezember 24, 2007

Asyl இந்த வார்த்தை...

அகதி!



கதி என்றே தெளிவாக-உரமாகப் பிரகடனப்படுத்து!!இதிலிருந்துதாம் மற்றெல்லாவுரிமைகளும் வென்றெடுத்தாகவேண்டும்.உலகத்தின் திமிர்த்தனமான யுத்தங்கள் தினமும் பல நூறு மக்களைக் கொன்றும்,பல்லாயிரம் மக்களை அகதியாக்கியும் வருகிறது.



எனினும் மக்கள் உயிர்வாழப் போராடியும்,கண்டம் தாண்டிக் கையில் பிடித்தவுயிருடன் அகதி நாமம் தேடிக் கொள்வதும்,துரத்தப்படுவதும் நிகழ்கிறது.



அகதியால் அகதிகளின் கதைகள் தொகுப்பதும்,அதன் வாயிலாக மானுடவுரிமையென்பதைக் கேவலமாக்கும் பாரிய தொழிற்கழகங்கள், சட்டம்,நிர்வாகம்,அரசுகள்-அமைப்புகள் பற்றித் தெரிந்திருப்பதும்,அநுபவமாக்கிப் போராடக் கற்பதும் நமக்கு அவசியமானது.



நாமே நமது விலங்கொடிப்பதைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை!


எதற்காக நான் அகதியானேன்?



இது கேள்வி மட்டுமல்ல!-தேசத்தின் இருப்பையும் அதன் தன்மானத்தையும் பேசுவது.




இந்தச் சூழலை மறுதலித்துவிட்டு எனது ஜேர்மனியப் பிராஜாவுரிமையோடு என்னைக் கழுவிக் கொள்வதில் நாட்டமில்லை.நம்மில் பலர் தம்மை அகதிகள் என்பதைக் கேட்கச் சகிக்க மாட்டார்கள்.




என்றபோதும் பத்துத் தலைமுறை தாண்டினாலும் நானும் எனது தலைமுறைகளும் அகதியே!-இது பிரகடனம்.




தேசம் தொலைத்தவனின் வயிறு எரியும் மனப் போராட்டம்.தான் வளர்ந்து மண்ணளைந்த பூமியைப் பார்க்க முடியாது தவிக்கும் வாழ் சூழல் இந்தவுலகத்தின் அனைத்து ஒடுக்கு முறையிலும் மிகக் கொடியது.இந்தவுணர்வைத் தேசத்தில் உழையாது,பிறர் பணத்தில் உண்டு ,ஏப்பமிட்டுத் தனக்கு பக்கத்தில் உடல் உழைப்பை நல்கும் மனிதர்களைச் சாதி சொல்லித் திட்டும் ஏப்பத்தால் உணரமுடியாது.-இது ஒரு தேச அவமானம்.தேசம்!...



உயிர் வாழும் வலையம்:



மனித அவலம் தொடர்கிறது.



பல்லாயிரம் மக்கள் இடம்பெயரப் பூமியின் பெரும் பகுதி அகதிகளின் பெருக்கத்தைக் காண்கிறது.



இன்றைய மதிப்பின் படி புவிப்பரப்பெங்கணும் 370 கோடிகள் மக்கள் அகதியாகியுள்ளார்கள்.




இந்தப் பெரும் மனித அவலமானது மனிதவுயிர்வாழும் சூழலுக்கானவொரு போராட்டமாக வெடித்துக்கொண்டிருக்கிறது.இந்தப்போரில் நம்மிடம் நவீனச் சுடு கருவிகளோ அல்லது தாங்கிகளோ,ஆட்லெறிகளோ கிடையாது.அல்லது நம்மிடம் மதமோ இல்லை எந்த மொழிவாரி,இனவாரிக் கோசங்களோ கிடையாது.மாறாக நம்மை உயிர் வாழ-உழைத்துண்ண விடு,என்ற தார்மீகக் கோசமே ஆயுதமாக இருக்கிறது.இதைக் கண்டு அஞ்சும் நிலை ஆளும் வர்கங்களின் விழிகள் முன் வருகிறது.வாழும் சூழல் இல்லாதாகும்போது மனிதர்கள் வாழக்கூடிய சூழலை நோக்கி இடம் பெயர்வது சாத்தியமே!




இது உலகத்தில் உயிர்கள் தோன்றிய காலத்திலிருந்தே தொடங்கி விட்டது.வலுவுள்ளது மட்டும் வாழுமென்பது உயிரியலுக்கும் அன்றையச் சமூகவாழ்வுக்கும் பொருந்தட்டும்.ஆனால் இன்றைய நவீன மனிதர்களுக்கு இது பொருந்தத் தேவையில்லை.



நாம் இன்று பின் நவீனத்து சமூகக் கட்டமைப்புக்குள் வாழ்கிறோம்.இன்றைய சமூகப் பொருளாதார உற்பத்தித் திறனாது மனிதர்களின் எந்த நிலையானவர்களுக்கும்(ஊனம்,பலமற்றவர்கள்...)சமூகக் காப்புறுதியையும் தீவனத்தையும் உயிர் வாழும் தகுதியையும் கொடுக்க முடியும்.இதுதாம் இன்றைய பின்தேசிய அடையாளமாக(postnationalen Identitaet) விரியும் உற்பத்தித் திறன்மிக்க இனங்களுக்குள் முகிழ்க்கும் பொதுவறித் தளமாக விரிகிறது.



இதை எமது முன்னோர்களின் அறிவே நிலை நாட்ட உதவுகிறது.சதா தன்னைச்(சுய சோதனைக்குள் தம்மை ஈடுபடுத்திய விஞ்ஞானிகள்) சிதைத்து கண்டுபிடிக்கப்பட்ட அறிவியலறிவு குறிப்பிட்டவொரு இனத்துக்கோ அல்லது தேசத்துக்கோ-தொழிற்கழகத்துக்கோ சொந்தமில்லை.இது முழுமொத்த மனித இனத்துக்கும் பொதுவான சொத்து.இங்கே மானுடம் உயிர்வாழப் போராடும் இழி நிலை.




வாழும் இருப்பிடம்,கிராமம்,நகரம்;-பயிர் விளையும் மண் நாசமாகிறது!-நஞ்சாகிறது.நீர் நிலைய+ற்றுக்குள் வற்றி வரண்டுபோகிறது.நதி நீர் நஞ்சாக்கப்படுகிறது.இங்கே மீளவும் கனிவளங்களை வேட்டையாடிக் கொள்ள மேற்குலகத் தொழிற்கழகங்கள் யுத்தம் நடாத்தக் குண்டுகள் வெடிக்கின்றன.வாழும் வலையம்(Lebensraum)சிதைக்கப்படுகிறது.இதற்கு நல்லதொரு உதாரணம் நர்மதா அணைக்கட்டு விவகாரம்.இதுகுறித்துப் பேசும்போது, நாம் நமக்கு அருகினில் பிரச்சனையிருப்பதை இன்னும் அதிகமாகவே உணர்கிறோம்.




யாருக்காக
யார் வாழும் இடங்களைப்
பறிகொடுப்பது?




"Laenger als ein halbes jahrhundert haben wir geglaubt,dass die grossen Staudaemme die Bewohner Indien von Hunger und Armut befreien wuerden.Das Gegenteil ist eingetreten."-(Arundhati Roy,indische Schriftstellerin)





"இந்தியக் குடிமக்களின் பசியையும்,பட்டுணியையும் நர்மதா அணைக்கட்டு போக்கிவடுமென அரை நூற்றாண்டுக்கு மேலாக நம்பிக்கொண்டோம்.ஆனால் நடந்ததென்னவோ எதிர் நிலைதாம்."என்கிறார் அருந்ததி ரோய்.




மனிவுரிமைச் சங்கத்தின் 2000 ஜுனிக்கான(ஜுனி என்பதை ஜுன் என்று வாசிக்கவும்,ஜேர்மனிய மொழிப் பயன்பாட்டின் வெளிப்பாடது.) மனிதவுரிமைக்கான கோரிக்கையின் அறிவுப்பு நர்மதா மனித அவலத்தை மேத்கா பட்டர் மூலம் அறிவிக்கிறது.அது பொருளாதாரத்தின்மீதே கோரிக்கைகளை முன்வைத்துச் செல்கிறது.(ISBN 3-89290-044-2 என்ற சர்வதேச நூற்சுட்டியின் மூலம் இவ் நூலைப் பெறமுடியும்.)



1.5 மில்லியன் மக்கள் குஜராத்,மகாரிட்ஷ்ரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அகதிகளாகப்பட்டு வருகிறார்கள்.இவர்கள் தமது வாழ்விடங்களைப் பறி கொடுப்பதும்,அகதிகளாக உருப்பெறுவதும் பாரிய தொழிற்சாலைகளின் மின்சாரத் தேவைக்காவேதாம்.1993 ஆம் ஆண்டளவில் நர்மதா அணைக்கட்டுக்கு உலக வங்கி உதவி வழங்கி மக்களை அகதிகளாகத் திட்டம் தீட்டியது!அது தனது வாலைச் சுருட்டிப்பதுங்கும் நிலைக்கு மக்கள் நலக் குழுக்களின் தீவிரமான போராட்டம் காரணமானது.எனினும் 2000 க்குப் பிறகு அதே உலக வங்கி 450 மில்லியனகள்; டொலர் நிதி உதவியை வழங்கி மீளவும் தனது வலுக்கரத்தை இந்த அப்பாவி மக்கள்மீது வைத்து,அவர்களை அகதிகளாகி அநாதையாக்கிறது.இது நர்மதாவின் கதை.



ஒரிசா மாநிலத்தில் 1993 இலிருந்து ஆதிவாசி மக்கள் துரத்தியடிக்கப்பட்டும்,கொல்லப்பட்டும் அவர்களது நிலங்கள்-வாழும் வலையங்கள் பல் தேசியக் கம்பனிகளின் கால்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்படுகிறது.இந்தியாவிலேயே ஒரிசா மாநிலமானது மிகவும் தனிச் சிறப்பான தாதுப் பொருட்கள் நிரம்பிய-கனிவளமிக்க மாநிலமாகும்.இந்த மாநிலத்தை அந்நியத் தொழிற்கழகங்கள் வேட்டையாட ஆதிவாசி மக்கள் தமது வாழ்வைப் பறிகொடுப்பதில்போய் முடிகிறது.பாலங்கள்,கட்டுமானங்கள்,தொழில் முன்னெடுப்பு என்று, பல்வகைக் காரணங்களால் இவ் மாநிலம் மக்கள் வாழும் உரிமையைப் பறிக்கிறது.உட்கால் அலுமெனியம் (Utkal Alumina) எனும் பாரிய தரகு முதலாளிய நிறுவனம் ஒரிசாவை அந்நியக் கம்பனிகளான நோர்வே நாட்டு நோஸ்க் கைட்ரோ(Norsk Hydro)மற்றும் கனேடிய அல்கான் அலுமெனியம்(Alcan Aluminium) தொழிற்கழகங்களோடு சேர்ந்து ஒரிசாவின் தாதுப் பொருட்களைத் திருடிக்கொண்டிருக்கிறது. இதற்கு இந்திய அலுமெனியம்(INDAL Ltd.)உதவி வழங்கிக் கொழுத்து வருகிறது! லார்சன் அன்ட் ரூப்புரோ(Larsen &Toubro)என்ற மாபெரும் தொழிற்சாலை இந்தியாவின் மிகப் பெரும் ஜந்திரத் தொழிற்சாலை.இது அந்நியக் கம்பனிகளின் கூட்டுக்கொள்ளை நிறுவனமாகும். இந்த நிறுவனங்கள்தாம் போராடும் மக்களை அரச மற்றும் தனியார் படைகளை வைத்துக் கொல்கிறது.அப்பாவி மக்களின் வாழ்விடங்களைப் பலாத்தகாரமாகப் பறிக்கிறது.இந்திய மத்திய அரசோ அந்நியக் கம்பனிகளால் நிர்வாகிக்கப்பட்டு மக்கள் நல அரசியலைப் பறி கொடுத்து அந்நியக் கம்பனிகளின் தயவில் வாழ்கிறது.இதை ராபி மிஸ்ரா போன்றோரின் கைதுக்கும்,விடுதலைக்குப் பின்பும் அவர்களே ஒப்புக்கொண்டு கருத்துக் கூறினார்கள்.தாம் கைது செய்யப்பட்டது தனியார் படையின் மூலமாகவும்,அது உட்கால் அலுமெனியத்தின் அடியாட்படையென்பதாகவும்.(Persecuted for challenging injustice,Human rights defenders in India.)



இதைப்போன்றோதாம் இன்று ஆசிய, ஆபிரிக்க,மத்திய ஆசிய மற்றும் பாரசீக வளைகுடாவெங்கும் மக்கள் வாழும் வலையங்களைப் பறி கொடுத்து, அகதிகளாக்கப்படுகிறார்கள்.




உலக வர்த்தகக் கழகத்தின்(;(WTO)சேட்டில் மாநாட்டில் மனிவுரிமைச் சங்கம் வாய்கிழியக்கத்திய"Multinationale Investoren haben die Verpflichtung zum Schutz der Menschenrechte,unabhaengig davon, in welchem Lande sie taetig werden" சுலோகத்தை இவர்கள் மதிப்பதுமில்லை,காப்பதும் இல்லை!



"எந்த நாட்டில் பல்தேசிய நிதியீட்டாளர்கள் இயங்கினாலும் மனிவுரிமையைச் சுதந்திரமாகக் காத்து இயங்குவது அவர்களது கடமை"என்பதெல்லாம் நீரில் எழுதப்பட்ட எழுத்துக்களாகும்.



கடந்த 45 ஆண்டுகளாக நடைபெறும் சூடானிய யுத்தத்தால் 2.5 மில்லியன்கள் மக்கள் கொல்லப்பட்டு,5 மில்லியன்கள் மக்கள் உள் நாட்டில் அகதியாகியும் அந்நியத் தொழில் நிறுவனங்களின் எண்ணை வேட்டை தொடர்கிறது.மக்கள் வாழ்விடங்களைப் பறிகொடுத்து அகதியாக அல்லல்படும் இழி நிலை! ஒரு மில்லியன் மக்களுக்கு மேலாக மேற்குலகத்துக்குள் அநாதைகளாக நுழைந்துள்ளார்கள்.செல்வம்(கனிவளம்) கொழிக்கும் நிலத்தின் மக்கள் அதை அநுபவிக்க முடியாது,அநாதைகளாகி-அகதியாகி...



1956 ஆம் ஆண்டளவில் சூடானில் யுத்தம் வெடித்தது.இது உள்நாட்டு யுத்தமாகவே வர்ணிக்கப்பட்டது.ஆனால் அதன் கதை கனிவளங்களை-எண்ணையை மையப்படுத்தியே போர் ஆரம்பமாகியது.



அங்கு கேட்கப்பட்ட கேள்வியானது:



"யார் எண்ணையை-அந்த ஊற்றை சொந்தமாக வைத்திருப்பது,எவர் அதனால் இலாபம் அடைவது"என்பதே!



அந்நியக் கம்பனிகளின் கனிவளச் சுரண்டலால்,அவர்களுக்காக நடாத்தப்படும் யுத்தத்தால் சுடுகாடாக மாறிப்போனது சூடான்!




இங்கே சூடான்மட்டுமல்ல சமீப ஆவ்கானிஸ்த்தான் முதல் ஈராக்வரை இது தொடர்கதை!





எனவே "அகதி" என்பது சர்வதேச அரசியல் முரண்பாட்டின் அதியுச்ச அரசியற் கோசமாகிறது.இது நமக்குக் கடந்த கால் நூற்றாண்டாகப் புதுப்புது அர்த்தங்களைச் சுட்டிக் கொள்கிறது!




(2)




"ASYLUM"-Asyl , இந்த வார்த்தைகள் உலகத்தில் பிரபலமான அளவுக்கு மற்றெந்த வார்த்தைகளும் பிரபலமடைந்திருக்க முடியாது!அவ்வளவுக்கு மனிதர்களின் இடப்பெயர்வு நிகழ்ந்து வருகிறது.இன்றிந்தக் கோணத்தில் இடப்பெயர்வு நிகழுந் தறுவாயில்,இத்தகைய இடப் பெயர்வுக்குக் காரணமான ஐரோப்பிய-அமெரிக்க அரசுகள் தமது எல்லைகளை இறுக மூடிவைத்துவிட்டு,அசூல் எனும் வார்த்தைக்குப் புதுப்புது அர்தங்களை அள்ளி வழங்குகிறார்கள்.அகதி எனும் கோசம் "அரசியல் கோரிக்கையாக-உயிர்வாழ்வை காத்து,எம்மை வாழவிடு"என்ற மிக வலுவான மனிதாபிமானக் கோரிக்கையாக,மனிதவாழ்வின் அடிப்படையுரிமையாக விரிந்து செல்லும்போது,இத்தகைய நாடுகள் அதை மிகக் கேவலமாகத் தமது மக்களுக்குப் பரப்புரை செய்கிறது.



"Schein Asylanten."பொய் அகதிகள் என்று ஜேர்மனிய ஊடகங்களும் அரசியல் வாதிகளும் இந்த மனித அடிப்படையுரிமையைக் கேலிக்குள்ளாக்குகின்றனர்.இவர்களே தமது தேவைக்காகவும்,வசதிக்காகவும் உலக யுத்தங்களை நடாத்தியபோது,இவர்களுக்கு இந்த அரசியல் சட்டவுரிமைக் கோரிக்கை அவசியமானதாக இருக்கிறது.இவர்கள் தமது நாடுகளை மீளக்கட்டியமைக்கும் தேவைக்காக தமக்குள் உடன்பாட்டுடன்-சமாதானத்துடன் மற்றைய கண்டங்களிலுள்ள நாடுகளை யுத்தத்தால்-கொடும் சுரண்டலால் அழிக்கும்போது,உயிர்ப்பலியெடுக்கும்போது,யுத்தத்துக்குள் சிக்கி உயிர்காக்கப் புலம்பெயரும் மக்கள் வெறும் பொய் அகதியாகி விடுகிறார்கள்,இந்த ஐரோப்பியத் திமிருக்கு.




27.08.06 இல் கரீபியன் தீவுகளில் கால்பதிக்க முனைந்த ஆபிரிக்க அகதிகள் கடலில் படகு கவிழ நீரில் மூழ்கிப் பலியானார்கள்.இதுள் பல பத்துப் பேர்கள் பலியானதை மேற்குலக ஊடகங்கள் செய்தியாக அறிவித்தன.இந்தப் படகுப் பயணமானது ஐரோப்பாவை நோக்கி வாழ்சூழல் பாதிப்படைந்த ஆபிரிக்கக் கண்ட மக்களால் தினமும் நடாத்தப்படுகிறது.தமக்குமுன் போன பல படகுகள் கவிழ்ந்ததையறிந்தும் இந்தப் பயங்கரமான கடற் பயணம் தொடர்கிறது.எனினும் ஐரோப்பா தனது கதவுகளை இறுக மூடிக்கொண்டு மனிதாபிமானம் பேசுகிறது.மொரோக்கோவுக்கும் இஸ்பெயினுக்குமான "போடர்"புலம்பெயரும் மக்களுக்கு மூடப்பட்டபின்,ஆபிரிக்க மக்கள் இத்தகைய விபத்துகளில் தினமும் பலியாகி வருகிறார்கள்.இந்தாண்டுக்குள்-இதுவரை அண்ணளவாக15.000.அகதிகள் இப்படி வந்து,மரணித்தும், அடித்தும் விரட்டப்பட்டுமுள்ளார்கள்!மொரோக்கோவுக்கு வரும் கருப்பின அகதிகளை மொரோக்கோ இஸ்பெயினுக்குள் நுழையவிடாது அடித்து விரட்டுவதற்காக ஐரோப்பிய ய+னியனானது பல மில்லியன்கள் யுரோவை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.இது ஏலவே பேர்ளின் போடரை மூடுவதற்கு அன்றைய கிழக்கு ஜேர்மனிக்கு மேற்கு ஜேர்மனி வழங்கிய தொகையைவிட அதிகமானதென அகதிகளைப் பராமரிக்கும் பொது அமைப்புக்;(Wohlfahrtspflege fuer Fluechtlinge e.v) கூறுகிறது.



இன்றைக்கு இந்த ஐரோப்பா தனது தொழிற்சாலைகளை நல்லபடியாக இயக்கிப் பொருள்களை உற்பத்தி செய்து வருகிறது.அதற்கான மூலப் பொருள்களை 90வீதம் ப+ர்த்தி செய்யும் கண்டம் ஆபிரிக்கக்கண்டமே.இந்த நிலையில் இவர்களே அகதிப் பெருக்கத்துக்கான மூலகாரணமாக இருந்தும்,தம்மால் இயற்றப்பட்ட அரசியல் தஞ்சக் கோரிக்கைச் சட்டங்களை மதிப்பதில்லை.அந்தச் சட்டம் தமக்குத் தேவையென்றால் மட்டுமே நடைமுறைக்கு உகந்ததாகக் கணிக்கும் மேற்குலகம்,அதை மதிப்பதில் இரட்டைவேஷம் போடுகிறது.



இத்தகைய சட்டங்களை எதற்காக ஐ.நா.முன்மொழிந்து வரைந்தது?அதன் உள்நோக்கம் எதுவாக இருந்தது?



முன்னாள் நாசிய ஜேர்மனி 20ஆம் நுற்றாண்டுகளில் இரண்டு உலகயுத்தங்களில் சுமார் 80 மில்லியன்கள் அப்பாவி மக்களை வேட்டையாடியது.இந்த ஈனத்தனத்திற்குப் பின் ஐரோப்பிய மனிதவுரிமை ஆணையகம் மற்றும் ஜெனிவா அகதிகள் ஆணையகமும் சில வரைவுகளை -ஒப்பந்தங்களை செய்துள்ளார்கள்இஇந்த வரைவுகள் 'சட்டத்தின் முன் சகலரும் சமனம்'என்றபடி எதையுரைத்ததோ அஃது இவ்வைரோப்பியரசுகளால் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது.



அரசியல் தஞ்ச உரிமை சட்மாக்கப்பட்ட வரலாறானது 1946 இல் ஆரம்பமாகிறது,ஐ.நா.சபையின்
பொதுக்கூட்டம் சர்வதேச அகதிகள் கழகத்தை மேற்கூறிய ஆண்டில் ஆரம்பித்தது. இக்கழகமானது முதலில் நான்கு வருடங்களும் அதன்பின் மீள இரண்டாண்டுகளும் தொடர்ந்தியங்கியது,ஆரம்பத்தின் நோக்கம் உலகயுத்தத்திற்குப் பின்பான சமூகப்பிரச்சனையை
ஓரளவு தீர்க்கக்கூடியமாதிரி இது இலக்கு வைத்து மீள் குடியேற்றம் மற்றும் புதிய குடியேற்றங்களை யும் அதுசார்ந்த தேவைகளுக்காக இயங்கிக் கொண்டது.




எனினும் முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் யுத்தத்தை இரண்டாவது உலக யுத்தத்தோடு நிறுத்தி விடவில்லை,மாறாகத் தனது குருதிதோய்ந்த வலுக்கரத்தை உலகம் பூராகவும் விரிகத் தொடங்கியது.இதன் போக்கால் இந்த அகதிகள் பிரச்சனை ஒரு தொடர் இயக்கமாக இயங்கிக்கொள்ள ஐ.நா.சபை அகதிகளுக்கான உயர் ஸ்தானிக சபையை உருவாக்கிச் சட்ட வரைவைச் செய்தது.



பொதுவான மனிதவுரிமை விளக்கப்படி 10.12.1948ஆம் ஆண்டு ஆக்கப்பட்ட சட்டம்:Art.14 Abs 1"Jeder Mensch hat das Recht, in anderen Laendern verfolgungen Asyl zu suchen und zu genießen."(வேறொரு நாட்டுக்குச் சென்று அரசியல் தஞ்சம் கோருவதற்கும்,அதை அனுபவிப்பதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.) இந்த அழகான வார்த்தை ஜாலம் அதை குடிசார் சட்டவாக்கத்திற்குள் அடக்காது நாடுகளினது கடமையாக -அவர்களே அதை நிறைவேற்றும்படி அரசியல் யாப்புச் சட்டத்தில் அடக்கியதன் விளைவு இப்போது ஒவ்வொரு நாடுகளும் தாம் நினைத்தபடி தார்ப்பார் காட்டிக்கொள்கிறது.


இந்தத் தவறைச் சரிக்கட்ட 1951ஆம் ஆண்டு யூலாய் 28 பிரேரிக்கப்பட்டு 22.04.1954 இல் அமூலுக்கு வந்த 'அகதிகளுக்கான சட்ட அமூலாக்க ஒப்பந்தம்' ஜெனீவா ஒப்பந்தமாக அறியப்படுகிறது.இதுவே அரசியல் தஞ்சம் கோருபவரின் காரணத்தைக் குறித்து இந்திந்தக்காரணம் மட்டுமே அரசியல் தஞ்சம் கோர உரித்துடையதென வகுத்து வைத்துள்ளது.



இதன்பிரகாரம் ஒரு தனிநபர் தனது மதஇஇனஇபிரைஜாவுரிமை இவைகளின் பொருட்டு அல்லது தனது அரசியல்இசமூகக் காரணிகளால் பாதிக்கும்போது வேறு நாட்டிற்குள் சென்று புகலிடம் கோர உரித்துடையவராகிறார்.



ஆனால் இன்று நடப்பதோ அனைத்தும் தலைகீழ்! 29.08.2006 செவ்வாய்க் கிழமை, கிழக்கு ஜேர்மன் மாநிலமான சக்ஷன் மாநிலத்தின் உள்துறை மந்திரி போட்டலா கூறுகிறார்:"இணைந்து வாழ்வதென்பதற்குப்பதில் வதிவிடவுரிமையற்ற வெளிநாட்டார்களைப் பிடித்து அவர்களது தாய் நாட்டுக்கு அனுப்புவதுதாம் சரி.அதைவிட்டு இணைந்து வாழ்தல்,கலந்து வாழ்தல் என்றபடி சட்டங்கள் இயற்றுவது தப்பு.குடும்பமாக இருப்பவர்களுக்கு,அவர்களது குழந்தைகளுக்குப் பாடசாலை செல்ல ஒழுங்கு செய்து கொடுப்பது நல்லது"என்று சக்ஷன் மாநிலத் தினசரி ஒன்றுக்குப் பேட்டியளிக்கிறார்(Volkszeitung vom 29.08.2006).




எனது மகன் ஒரு பேப்பர் கட்டிங்கோடு பதறியடித்து வந்தான்.அவனது வகுப்பு மாணவனின் பெற்றோர்கள் அந்தப் பத்திரிகை நறுக்கை இவனிடம் கொடுத்து,"இதை தமிழ் இணையங்களில் பிரசுரிக்கவும்"என்று.அவர்கள் ஜேர்மனியப் பெற்றோர்.மிகவும் பொறுப்பானவொரு காரியத்தை செய்திருந்தார்கள்.



அந்தப் பத்திரிகையில் இருந்த வாசகம்:



Abschiebung:Tamile fuerchtet um sein leben.



Vimalathas Kurunathpillai hat Angst."Ich weiss nicht, was passieren wird,wenn ich aus dem Flugzeug in Clombo steige."sagt der junge Mann.(Wuppertaler Zeitug)




நாடுகடத்தல்:தனது உயிருக்கு ஆபத்தென்று தமிழர் அச்சம்.விமலதாஸ் குருநாதபிள்ளைக்கு அச்சம்." நான் விமானித்திலிருந்து இறங்கிக் கொழும்பில் கால்வைக்கும்போது,எனக்கு என்ன நடக்குமென்றே புரியவில்லை."இந்த இஞைர் இங்ஙனம் கூறுகிறார்.




விமலாதாஸ்(வயது 23) வூப்பெற்றாலில் இருப்பவர்.1997 இல் ஜேர்மனிக்குள் கால் வைக்கும்போது 14 வயது.இந்த நகரத்தில் அவரது சகோதரர்,சகோதரி இருந்தும் அவரைக் காப்பாற்ற முடியாது சட்டம் சதிராடுகிறது.இப்போது இவர் பொதுத் திருச்சபை நிறுவனம் ஒன்றால் மறைத்து வைக்கப்பட்டுள்ளார்.




(3)



இனவாதமும்;,இணைவின்மையும்:


தினமும்,பொழுதும் அகதிகள் பெருக்கமும்,பட்டுணியும்,மரணவோலமும்,நோயும் நொடியும் மனித வரலாற்றில் ஒரு செயலூக்கமிக்க நிகழ்வாக மாறி வருகிறது.இது ஒருபுறத்தே இங்ஙனம் நிகழும்போது,மறுபுறமோ இந்த நிகழ்வால் அரசியல் இலாபமடையும் ஐரோப்பிய ஓட்டுக்கட்சிகள்,வலதுசாரிய-இனவாதக் கட்சிகள் யாவும் இந்த அகதிகளை மனித சமநிலையிலிருந்து துண்டித்து விடுவதிலும்,துரத்தியடிப்பதிலும் மும்மரமாகச் செயற்படும்போது, அதைவைத்து மக்களின் மனங்களைத் தம் பக்கம் இழுத்துக் கட்சிகளுக்கு ஆள்பிடிக்கும் வேலையில் இந்த ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் ஊடகங்கள் செற்படுகின்றன.இதனால் சாதரண மக்களிடமிருந்து நாளாந்தம் அந்நியப்படும் நாம் சமூகக் கூட்டு மனப்பான்மையை இழந்தும்,இந்தத் தேசத்தின் ப+ர்வீகக் குடிகளோடு கலந்தும்,இணைந்தும் வாழமுடிவதில்லை.



இது மனிதப் பண்பாட்டிற்கு மிகவும் முரணானது.வளர்ச்சியடைந்த நாடுகளில் மக்கள் தமது வலுவுக்குள் உட்பட்ட செயலூக்கத்தை கண்டிப்பாக இந்த ஐரோப்பிய உற்பத்திச் சக்திகளுக்கு வழங்கியாகவேண்டும்.இத்தகைய செயலூக்கத்தை மிகுதியாக வழங்கிவரும் அகதிகளின் அதீத உழைப்பானது மூன்றாந்தரமாக மறைக்கப்பட்டு,அவர்கள் ப+ர்வீகக் குடிகளின் வரிப்பணத்தை தின்று ஏப்பம் விடுபவர்களாக இந்த உடகங்கள், அரசியல் வாதிகள் கருத்துக்களைத் தமது மக்களிடம் பரப்புகிறார்கள்.இங்கே சமூகக் கூட்டுணர்வின்றிக்கிடக்கும் ஒரு பகுதி மக்களை தம்மால் தாங்கிக் கொள்ளப்படுவதாகச் சொல்லுப்படும் பொய்,புரட்டை இந்தப் ப+ர்வீகக் குடிகள் நம்பி விடுவதாலும் சமுதாயத்தில் ஒரு கொதி நிலையைத் தூண்டிவிடும் அரசியல் அமுக்கத்தை ஐரோப்பிய ஆளும் வர்க்கம் தோற்றுவித்துத் தமது பொருளாதார முரண்பாட்டைத் திசை திருப்பித் தம் ஆட்சியை நீடிக்கிறார்கள்.



இத்தகைய நீடிப்பில் ஆட்சியாளர்கள் தவிர்க்கமுடியாது அகதிகளுக்கான அனைத்து எதிர் நடவடிக்கைகளையும் ஒரு அட்டவணைக்குள் திணிப்பதுபோன்று(...Durch Kategorisierugen...z.B."die Auslaender","die Schein Asylanten"...usw..)" வெளிநாட்டார்கள்"பொய் அகதிகள்"என்று அட்டவணையிடுதல் கருத்தியலாக வளர்தெடுக்கப்பட்டு,மக்கள் சமூகத்தில் அதுவே அந்நிய எதிர்ப்புச் சமூக உளவியலாக ஊன்றப்படுகிறது.இது மனிதாபிமானத்தையும்,ஜனநாயக அடிப்படைப் பெறுமானத்தையும் மிகவும் பலவீனப்படுத்தி,மக்களிடம் ஒருவித சாத்வீக இனவாதமாகவும்;("passiver"Rassismus)வளர்த்து விடுகிறார்கள்.இத்தகைய சாத்வீக இனவாதமானது அடிப்படையில் செயலூக்க இனவாதிகளுக்கு("aktiver"Rassismus) பெரும் உந்துதலையும்,பொருட்பலத்தையும் மற்றும் தார்மீக வலுவை,ஆட்படையையும் கூட்டிவருகிறது.ஏலவே காலனித்துவப் பார்வையுடைய ஐரோப்பிய மனோபாவமானது மிக விரைவாக இனவாதத் தீயில் விழுந்தவிடுகிறது.



இதன்பலாபலனே ஆயிரம் தடவைகள் அகதிகளுக்கான சட்ட மாற்றங்களையும்,புதிய சட்ட வகுப்புக்களையும் அரசியல் ரீதியாகச் செய்யும் நிலைக்கு இந்த மக்களின் ஒப்புதல் மிக இலகுவாகக் கிடைக்கிறது.



இன்றிருக்கும் ஐரோப்பியச் சந்தைப் பொருளாதாரத்தின் நிலையானது மிகவும் கொடிய மனித விரோதச் சட்டங்களை இயற்றுவதிலும்,தமது மூலதனத்தைப் பெருக்குவதற்கும்-அதைக்காப்பதற்குமாக வெறிகொண்டலைகிறது.இதற்கு முரண்பாடாக ஐரோப்பியத் தொழிலாளர்களினதும்,அகதிகளினதும் ஒன்றிணைவு இவர்களுக்குக் குறுக்கே கோடுகிழிக்க முனைவதால் இந்தச் சாத்வீக இனவாதம் மேன் மேலும் வளர்தெடுக்கப்படுகிறது.இது தொழிலாளர்களின் முரண்பாட்டையொடுக்கும் ஐரோப்பாவின் புதிய குடிசார் சட்டவுருவாக்கத்துக்கு முதற்கல்லை எடுத்துப்போட்டபோது மக்களால் எந்த எதிர்ப்பும் வராது காத்திருக்கிறது.இந்தப் "பொது ஐரோப்பியச் சட்டம்;"(Europaeischen Verfassung und Grundgesetz)ஐரோப்பிய மக்களின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் மட்டுப்படுத்தி அவர்களை வெறும் நுகர்வோர் ஆக்கும் சட்டம் என்பதையுணர்ந்த ஓட்டுக்கட்சிகள்,அதை மறைப்பதற்காக இந்தச் சாத்வீக இனவாதத்தை பரப்பி வந்தார்கள்-வருகிறார்கள்.



உதாரணமாக இன்றைய நோர்த்தன் வெஸற்;பாலின் மாநிலத்து(Nordrhein-Westfalen)முதல்வர் திரு.யுர்கன் றுட்கார் கடந்த 2001 மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு சாத்வீக இனவாதக் கோசத்தை முன்வைத்துப் பிரசாரம் செய்தார்."."Kinder statt Inder"(இந்தியர்களுக்குப் பதில் குழந்தைகள்)எனும் தேர்தல் கோசம் பட்டி தொட்டியெல்லாம் ஒட்டப்பட்டன.இது ஜேர்மனியை நோக்கிப் படையெடுக்கும் இந்தியக் கணினி மென்பொருள் வல்லுனர்களை எதிர்த்து முன்வைக்கப்பட்ட கோசமாகும்.இந்தியர்களுக்குப்பதிலாக "நமது குழந்தைகளை-அதுவும் நீல விழிகளும் பொன்னிறத் தலைமுடியும் கொண்ட வெள்ளைக் குழந்தைகளை இப்போதே படிக்க வைத்துத் தயார்படுத்து" என்பதே அதன் பொருளாக இருந்தது.இதன் பின்பு ஜேர்மனிய நாசியக் கட்சிகள் யாவும் இத்தகைய வெளிநாட்டார்-அகதிகள் எதிர்ப்பை மிகவும் வலுவாகச் சட்டப+ர்வமாக முன்னெடுத்தார்கள்.



ஏலவே பற்பல படுகொலைகளைச் செய்திருந்த இனவாதிகளுக்கு இத்தகைய ஓட்டுக்கட்சிகளின் அடவாடித்தனம் மிகவும் பயனுள்ள செயலாகத் தெம்ப+ட்டியது.(நாங்கள் தமிழ்பேசும் மக்கள்.இலங்கையின் இனவாத அரசியலிலும்,அதன் இனவாதக் கருத்தியலிலும் அநுபவம் பெற்றவர்கள்.எமக்குள்ளும் மாற்று இனங்கள் குறித்த இந்த சாத்வீக இனவாத்தின் ஆதிக்கம்-அநுபவம் இருப்பதை உணரவேண்டும்.இதுவேதாம் செயலூக்க இனவாதிகளை யுத்தத்தில் உருண்டு பிரண்டு கிடக்கத் தூண்டுவதையும் நாம் மறக்கப்படாது.)இவர்கள் அகதிகளுக்கு-வெளிநாட்டார்களுக்கெதிரான தாக்குதல்களைத் தொடுத்துத் தினமும் மனிதர்களைக் காயப்படுத்தியும்,கொன்றும்,அகதிகளின் வதிவிடங்களைத் தீ மூட்டியும் அகம் மகிழ்கின்றார்கள்.



கடந்த 26.05.1993 ஆம் ஆண்டு அகதிகளுக்கான சட்டம்(Art.16 des Grundrecht auf Asyl)ஆர்ட்டிக்கல் 16 ஐ மாற்றிய மூன்றே நாளில் 29.05.1993 ஆம் ஆண்டு ஜேர்மனியின் இரும்பு நகரான சோலிங்கனில்(29.Mai 1993 wurden in Solingen fuenf tuerkische Frauen ermordet.) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து துருக்கியப் பெண்மணிகள் நித்திரைப்பாயில் அவர்களின் வீடெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.அடுத்த சில மாதங்களில் இன்னும் இரண்டு குழந்தைகள் மோல்ன்(;(Moelln)எனும் கிராமத்தில் தீ மூட்டிக் கொல்லப்பட்டார்கள்.இத்துடன் இத்தகைய அகதிகள்-வெளிநாட்டார்கள் வெறுப்புத் தணியவில்லை.அது தொடர்ந்து, நாளும் பொழுதும் பெரும் தீயாய் பரவி அகதிகளை அடித்துக் கொல்கிறது-மரணப்படுக்கையில் கிடத்துகிறது.கிழக்கு ஜேர்மனியில் நாளொன்றுக்கு இருவராவது நாசிகளால்-சாமானிய ஜேர்மனியர்களால் உடற் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள்.



மிகச்சமீபத்தில்,16.04.2006 அன்று கிழக்கு ஜேர்மன் சக்ஷன் மாநிலத்தின் தலைநகரமான பொட்ஸ்டாமில்(;(Potsdam)இஒரு நைஜீரிய அகதிப் பொறியியலாளர் அடித்துக் கோமாவில் கிடத்தப்பட்டார்.இத்தாக்குதல் குறித்து நாடு தழுவியவரையில் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே பேர்ளினிலிருந்து தினமும் அகதிகள் தாக்கப்படுவதை"முதலாம் தேதியிலிருந்து முப்பத்யோராம் தேதிவரையும்" ஆவணமாகத் தொகுத்தது "Konkret"எனும் இடதுசாரியச் சஞ்சிகை.இவற்றுக்கு ஜேர்மனியப் பொலிசாரே உடந்தையாக இருப்பதையும் அது அம்பலப்படுத்தியது.இங்ஙனம் நிர்வாகத்துறையிலும்,அமைப்பு நெறியாண்மைக்குள்ளும் இடையாக இந்த"சாத்வீக இனவாதக் கட்டமைப்பு வேரோடியுள்ளது((Besondere Aufmerksamkeit werden wir auf rassistische Strukturen innerhalb des Verwaltung-und Organisationapparates...z.B. wie Sri Lanka/Tamil Eelam.).




இவையெல்லாம் இந்தப் பொருளாதாரத்தின் மறுபக்கச் செயற்பாடாக விரிகிறது.அகதிகள்மீதான ஐரோப்பிய இனவெறியாளர்களின் தாக்குதலைப்பட்டியல் போடுவதற்கு ஒரு ஆயுள் போதாது.தினமும் ஒருவராவது ஒரு நகரத்தில் உடல்ரீதியாகத் தாக்கப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது,ஜேர்மனியில்.


இந்த நிலையில் யுத்தங்களால் மக்கள் புலம் பெயர்ந்து அகதியாகும் கீழ்வரும் அறிக்கையைப் பார்த்தால் உலகம்ப+ராக மக்கள் அகதியாகி மடிந்துவிடுவார்களோவென அஞ்சவேண்டியுள்ளது.உலகத்தில் நடைபெறும் அனைத்து நாசகார யுத்தங்களும்,உயிர் கொல்லி ஆயுதத் தளபாடங்களும், நிதி மூலதனமும்,பாரிய தொழிற்சாலைகளும் மனிதர்களை அகதியாக்கி வரும் இந்த அட்டவணை மிகவும் அச்சமூட்டுகிறது.



"2003 ஐக்கியநாட்டுச் சனத்தெகை பற்றி அறிக்கை ஒன்றில் ,உலகத்தில் 17.5 கோடிகள் மக்கள் தத்தமது நாட்டுக்கு வெளியில் வாழ்வதாகக் கூறியுள்ளது. 10 பேர்களுக்கு ஒருவர் சொந்த நாட்டடை விட்டு வெளியேறுகின்றார். முன்னேறிய நாட்டை நோக்கிப் பன்தங்கிய நாட்டைச் சேர்ந்த 23 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் புலம் பெயர்கின்றனர். 1975க்குப் பின் மூன்றாம் உலகநாடுகளில் இருந்து வெளியேறியவர்களின் புலம் பெயர்வு இரண்டு மடங்காகியுள்ளது.



இந்த புலம் பெயர்வு வட அமெரிக்காவி;ல் 5 கோடியும், ஐரோப்பாவில் 4.1 கோடியும், ருஷ்சியாவில் 5 கோடியமாகும். முன்னேறிய நாடுகளில் ஒவ்வொரு 70 பேருக்கு ஒருவர் வெளிநாட்டவராகியுள்ளனர். 1995-2000 இடையிலான 5 வருடத்தில் 1.2 கோடி பேர்கள் முன்னேறிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். மொத்தம் 23 இலட்சத்தால் அதிகரிக்கும் வெளி நாட்டவாகளில் 18 சதவீதம் பிறப்பினால் உருவாகின்றது. மொத்தில் வட அமெரிக்கா 14 இலட்சமும,; ஐரோப்பாவில் 8 இலட்சமுமாக அதிகாரிக்கின்றது. மொத்தில் 9 வீதம் பேர்கள் அகதி அந்தஸ்தைப் பெறுகின்றனர்.


வருடந்தம் 2000 முதல் 2050 வரையான காலத்தில் வெளிநாட்டவரின் புலம் பெயர்வு சராசரியாக:

அமெரிக்காவை நோக்கி 11 லட்சம்
ஜேர்மனி 2.11 லட்சம்
கனடா 1.73
இங்கிலாந்து 1.36
அவுஸ்ரேலியா 0.83


வருடாந்தம் அகதிகளின் புலம் பெயர்வு இலட்சத்தில்:


சீனா 3.03
மெக்சிக்கோ 2.67
இந்தியா 2.22
பிலிப்பைன்ஸ் 1.84
இந்தோநேசியா 1.8
- (புள்ளி விபரக்குறிப்புக்கு நன்றி:தமிழரங்கம்)"


மேற்காணும் இந்தப்பட்டியல் சொந்த நாடுகளில் அகதிகளானவர்களின் பட்டியலை இணைக்கவில்லை.இன்றைய நிலவரப்படி வெளிநாடுகளிலும்,சொந்த நாடுகளிலுமாக "உலக மக்கள் தொகையில் 50வீதமானவர்கள"; அகதிகளாக வாழ்கிறார்கள்-வதைபடுகிறார்கள்.




(4)



நாடுகளும்,யுத்தமும்- உதவியும்.


லெபானானுக்கான நிதி வழங்கும் கூட்டம் இன்று இஸ்ரொக்கோல்ம் சுவீடனில் நடைபெறுகிறது.அறுபது அரசுகளும்,அமைப்புகளும் பங்குபெறும் இக்கூட்டத்தில் ஜேர்மனி 22மில்லியன்கள் யுரோவை லெபனானுக்கு உதவுவதாக உறுதிகூறியிருக்கிறது.கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுமாக 500.மில்லியன்கள் டொலர்களை உதவியாக வழங்குவதாகச் செய்தியொன்று கூறுகிறது.


இன்று ஈரானுக்கான காலக்கெடு முடிவுக்கு வருகிறது.



அணு குண்டைத் தயாரிப்பதற்கான"Uran-235(யுரேனியம-;235, வெடிப்புச்சக்தி பிளப்பு மூலமானது!(Explosionsenergie aus der spaltug von Uran -235 oder Plutonium-239)இதனாலான குண்டு கீரோசீமாவின் மீது கொட்டப்பட்டுப் பரிசோதித்த அமெரிக்கா ஓப்பன்கைமர்,சினைடர்(goldene Liste) பயங்கரவாதிகளால் உலக அணுவல்லரசானது.)Plutonium- 239(இந்த மூலகத்தால் வெடிக்க வைக்கப்பட்ட குண்டு நாகசாகிமீது விழுந்து வெடித்தது.இதையும் அமெரிக்கா பரீசீலித்துக் கொண்டது.கீராசீமாவில் யுரேனியம-;235 ம்,நாகசாகியில் புளுட்டோனியம்-239 ம் குண்டுகளாக வெடிக்க வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.)போன்றதைப் பெற்று அணுக்குண்டைத் தயாரித்துவிட ஈரான் முயல்கிறது.



இதைத் தடுத்துவிட உலக வல்லரசுகள் முயல்கின்றன.(1939 இல் கோதாரி பிடித்த நீல் போரும்,ஜோன் ஆர்ச்சிபெல் வீலரும் அணுப்பிளப்புத் தியரியை விளங்க முற்படும்போது,ஓப்பன்கைமரும் அவனது கூட்டாளிகளும் அணுக்குண்டைத் தயாரித்துக் கொடுக்கும் வேலையில் அமெரிக்க அரசோடு முனைந்தான்.கீரோசீமாவிலும்,நாகசாகியிலும் பல்லாயிரம் மக்களைக் கொன்று பரிசீலிக்கப்பட்ட அணுக் குண்டுகளால் வேதனையடைந்த திரு.வீலர் சொல்கிறார்:"நான் அதை மீளத் திரும்பிப் பார்ப்பேனானால்-அதாவது நானும் போரும் இணைந்து உருவாக்கிய அணுப்பிளப்புத் தரவுகளை-எனக்குள் நான் கவலை கொள்கிறேன்."ஓப்பன் கைமர் கூறுகிறான்:"யுத்தம் செய்யும் உலகுக்கு அணுக்குண்டு புதிய ஆயுதமாக ஆயுதக்கிடங்குக்குள் இருக்கும்,அல்லது ஆயுதக்கிடங்கிலிருந்து நாடுகள் யுத்தத்துக்குத் தயாராவார்கள்,அப்போது லோஸ் அலாமோஸ் எனம் பெயரும் கீரோசீமாவின் சபிப்பும் மனித கணங்களுக்குள் வரும்."-லோஸ் அலோமாஸ் விஞ்ஞானிகள் சந்திப்பின்(16.10.1945) உரை.)



ஈரானிய ஜனாதிபதி அமாடினெட்ஷா கூறுகிறார்:"நாங்கள் எங்கள் வரலாற்றுத் தேவையை தவிர்க்க முடியாது.நாம் அணுத் தேவையை யாருக்காகவும் தவிர்ப்பதற்கில்லை."



அமெரிக்கப் பயங்கரவாதி புஷ் உடனடியாக பதறியடித்துக் கத்துறான்:"நாங்கள் ஈரான் அணுக்குண்டு தயாரிப்பதை அநுமதிக்க முடியாது."



நல்லது!



லெபனானுக்கு 500 மில்லியன்கள்,
ஈரானுக்குப் பொருளாதாரத்தடை?



சமீபகாலத்தில் சதாமின் ஈராக்குக்கு வழங்கப்பட்ட பொருளாதாரத் தண்டனை ஐந்து இலட்சம் பாலகர்களைப் பாடையில் அனுப்பியது.வைத்தியர்களின் விழிகள்முன்னே நோய்க்கிருமி தாக்கிய பாலகர்கள் சிறிது சிறிதாகச் செத்து மடிந்தார்கள்.இக் குழந்தைகளுக்கு "அன்ரிபாற்றிக்"(எதிர்ப்பு நுண்கிருமி)கொடுப்பதற்கு ஒரு துளியும் ஈராக்கில் இருக்கவில்லை.


தலை சுற்றுகிறது.


ஈரான் எவ்வளவு குழந்தைகளை இழக்கும்?


இன்றைய ஆளும் வர்க்கங்கள் தத்தமது முரண்பாடுகளையும் யுத்தச் சம நிலைகளையும் அணுவால் சம நிலைப்படுத்த முனைகின்றன.உலகிலுள்ள மனிதர்கள்தம் நலன்களை மையப்படுத்திய எந்த நோக்கு நிலையும் நிதி மூலதனத்துக்கும் அதன் இலாபத்துக்கும் கிடையாது.அங்கே யுத்தங்களே மனிதர்களைக் கொல்வதற்கான கருவியாகப் பயன்படுகின்றன.இவை முற்றுமுழுதாகப் முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறையின் அடிப்படையான தேவையாக இருக்கிறது.


லெபனானைக் அடித்து நொருக்கிறது அமெரிக்காவின் அடியாள்.பின்பு அதே அமெரிக்கக் கூட்டு அபிவிருத்தியுதவியாகச் செயற்பட முனைகிறது.


எதற்காக இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டார்கள்?


இவ்வளவு பெருந்தொகையாக மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக மாறியது எதற்காக?


எல்லாம் கனிவளத்தின் "பாதுகாப்பு-எடுத்தல்-சொந்தமாக்கிக்கொள்ளல்-தடங்கலற்ற கடற்பாதை."என்று மூலப்பொருள்களுக்கான தொடர் வினைகளே இவ்யுத்தத்துக்குக் காரணமாக இருக்கிறது.இங்கே லெபனானுக்குள் வந்திறங்கவிருக்கும் தத்தமது இராணுவத்துக்கான செலவுகளுக்கே இவ் உதவி வழங்கப்படுகிறது.ஆனால் பெயரென்னவோ மீள்கட்டுமானத்துக்கான உதவி.இந்த உதவியை லெபனான் வட்டியுடன் கட்டியாகவேண்டும்.அதாவது ஐ.நா.துருப்புகளின் செலவுக்கு ஒரு நாடு கடன்படுகிறது.


ஜேர்மனி சொல்கிறது.:"Die Bundesregierung stelt 22 millionen Euro fuer den wiederaufbau des Lebanon.das Geld solle fuer die Verbesserung von Grenzkontrollen und den wiederaufbau der wasser vorsorgug eingestzt werden.-N.TV Nachrichten.""ஜேர்மனிய அரசு 22மில்லியன்கள் யுரோவை லெபனானின் மீள்கட்டுமானப்பணிக்காக இடுகிறது.இப்பணத்தை லெபனானின் எல்லைப் புறங்களை சிறப்பாகக் கண்காணிப்பதற்கும் குடிநீர் விநியோக மீள் கட்டுமானத்துக்கும் பயன்படுத்துவதற்கு ஒதுக்கப்பட வேண்டும்."



ஆதிக்கவாதிகள் தமது நலன்களை மெல்ல இத்தகைய வார்த்தைகளுக்கூடாகவே வெளிப்படுத்தி விடுகிறார்கள்.லெபனானின் கடல் குடா 250 கி.மீ.தூரம்.இது மத்திய கடலுக்குள் இருக்கிறது.இதைக் கண்காணிக்கும் பொறுப்பு ஜேர்மனியக் கடற்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.உலகத்தில் அதி நிவீன நீர்மூழ்கிக் கப்பலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 600 மில்லியன்கள் யுரோவுக்கு உருவாக்கிய நாடு ஜேர்மனி.இப்போது புரிகிறதா?எவரிடம் எதைக் கொடுக்கவேண்டுமென அமெரிக்க மாமாக்களுக்குப் புரிந்தே இருக்கு!"G3,MP5,HK21"(Heckler&Koch) இவைகளின் தாய் நாடல்லவா!இவர்கள்தாம் பணத்தைத் தமது கடற்படையின் செலவுக்கு வழங்கிவிட்டு,அதையே வட்டியுடன் அறவிடப் போகிறார்கள்.நல்ல வியாபாரம்.


மக்கள் தொடர்ந்து யுத்தங்களால் தமது வாழ்வைப் பறிகொடுப்பதும்,அதை மீளப் பெறுவதற்கும்,உயிர்வாழும் உத்தரவாதத்துக்கும் சதா அகதி முகாங்களில் தவமிருப்பதும் இன்றைக்கு அன்றாட,இயல்பு நிலையாக மாற்றப்பட்டுள்ளது.


தொடரப்போகும் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தாக்குதல்-யுத்தம் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொள்ளப் போகிறது.கூடவே பல இலட்சம் மக்கள் அகதியாகி உள்நாட்டிலும் வெளி நாடுகளிலுமாக அவதிப்படப் போகிறார்கள்.


அண்மைய எண்ணைக்கான யுத்தமும்,போர்த்துக்கீசிய கொலனித்துவச் சுரண்டல் போரும் அங்கோலா((Angola)என்ற எண்ணை மற்றும் வைரம் நிறைந்த நாட்டைச் சுடுகாடாக்கியுள்ளது.1992-1994 இருவருடமாக நடந்த யுத்தில்மட்டும் மூன்று இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.சிறார் இராணுவம்,மிதிவெடிப்பலி,அகதிகள்,அவநம்பிக்கை,மற்றும் எல்லா வகைச் சமூக விரோதங்களும் மலிந்த இந்த அங்கோலாவில் ஒருவர்கூட யுத்தத்தைத் தவிர வேறெதையும் வித்தியாசமாக அநுபவிக்கவில்லை.இது போர்த்துக்கீசிய கொலித்துவத்தின் முடிவுவரைத் தொடர்ந்தது.இப்போதும் அந்த நாட்டுக்கு இதே கதைதாம்.


இங்கு நடந்த யுத்தங்களெல்லாம்(1961 இல் காலனித்துவ வாதிகளுக்கு எதிரான யுத்தமும் சேர்க்கப்பட வேண்டும்.ஏனெனில் பல் வகை காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்கள் தோன்றி அவை தமக்குள் அடிபட்டுக் கொண்டதும் வெளி நாடுகளுக்காகவே- அங்கோலா மக்களுக்கான விடுதலைக்கல்ல.) எண்ணைக் கச்சாப் பொருளான மசகு எண்ணைக்கும்,வைரத்துக்குமானதாகும்.



எவரொருவர் யுத்தத்தின் கொடுமையை உணரவேண்டுமானால் அங்கோலாவைப் பார்க்கவேண்டும்!



வீதியல் செல்லும்போது ஒவ்வொரு நான்காவது மனிதரும் ஒற்றைக்காலுடன் அல்லது கையுடன் நடப்பதைப் பார்க்கலாம்.குண்டு துளைக்காத சுவர்களோ கிடையாது.இப்படி முழுமொத்தத் தேசமும் மதிவெடிகளால் விதைக்கப்பட்டு,மனித நடமாட்டத்துக்கு உதவாத மண்ணாக அங்கோலா மாற்றப்பட்டுவிட்டுது.


இது யாரால்?


இதே ஐரோப்பிய தொழிற்சாலைகளால்!


90களில் அமெரிக்க உளவுப்படையானது அங்கோலாவின் எதிர் புரட்சிப்படைகளுக்குப் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை வழங்கிப் போலிச் சோஷலிச இராணுவத்துக்கெதிராகப் போராட வைத்தது.MPLA-அரசு எதிர்த்துப்போராடி அனைத்தையும் அடக்க முடியவில்லை.இறுதியாக ஐ.நா.வின் கூற்றுப்படி மூன்றாவது யுத்தத்துக்குக் காரணமானது யுனிற்ரா.எல்லாமாக அங்கோலா தனது மக்களை அகதியாகக் கண்டது.


இதுவரை இருபது இலட்சம் அகதிகள் உலகம் ப+ராகவும் இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.நாடு மதி வெடிகளால் நிரம்பி வழிகிறது.சிறார்களின் கைகளில் பழைய குண்டுகள் விளையாட்டுப் பொருளாகக்கிடக்கிறது.தனிமையில் சற்று நடந்தால் மிதிவெடி வெடித்து மக்களைப் பலிகொள்கிறது.உள்நாட்டில் பல இலட்சம் மக்கள் அகதியாகிப் பட்டுணியுடன் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.


அனைத்துக்கும் அந்நிய ஆர்வங்களின் யுத்தமே காரணமாகிறது.


கொங்கோ:


அமெரிக்க,ஐரோப்பிய மற்றும் சீனாவின் வேட்டைக்காடாகிய கொங்கோ என்ற கனிவளமிக்க இந்த ஆபிரிக்கத் தேசத்தில் இதுவரை 35 இலட்சம்(இலங்கைத் தமிழர்களின் மொத்தச் சனத்தொகை.)மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்!சிறு இனக்குழுக்களுக்குள் பற்பல போராட்டங்கள்.ஒவ்வொரு பகுதிகளையும் ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரான்ஸ்,ஜேர்மனி,அமெரிக்கா,என்று கூறுபோட்டு ஆளுகின்றன.பெயருக்கு ஒரு கபிலா கொங்கோ ஜனாதிபதி.கண்துடைப்புத் தேர்தல்,ஐ.நா.துருப்புகள்...என்னவொரு வேட்டைக்காடு இந்தக் கொங்கோ! கேக்கைப் பங்கிட்டதுபோன்று ஒவ்வொரு ஐரோப்பியத் தொழிற்கழகங்களும் அந்தத் தேசத்தைப் பங்கிட்டுவிட்டென.இதற்கு ஐ.நா.ஒரு சடங்கு நிகழ்த்தி ஐ.நா.துருப்புகள் என்ற போர்வையில் ஒவ்வொரு நாடும் தத்தமது தேவைக்கேற்ற கனிவளங்களைத் தோண்டியெடுத்துத் தமது நாடுகளுக்குப் பத்திரமாக அனுப்பியபடி.தொடர்ந்து கனிவளம் மிக்க பகுதிகளைத் தத்தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நாய் அடிபாடு.



இந்தத் தேசத்துக்கு எல்லையும் இல்லை.மக்கள் தொகை பற்றிய சரியான தகவலும் இல்லை.கிட்டத்தட்ட ஐந்து கோடிப் பேர்கள் வாழ்வதாகக் கொள்ளலாம்.உகண்டா,ருவண்டா என்று வேறு இத்தேசத்தில் கனிவளங்களைத் திருடித் தமது அமெரிக்க எஜமான்களுக்குத் தள்ளியபடி. கேமா((Hema)லெண்டு(Lendu) இனக் குழுக்கள் கிழக்குக் கொங்கோவில் ஒருவரையொருவர் விழுங்கியபடி...பேய்கமேன்( Mambuti-Pygmaen) என்ற இனக்குழு மனிதர்களைப் பிடித்து உண்பதும் இந்தத்தேசத்து மனிதர்களிடம் இடம்பெறுவதுண்டு.இந்த மம்புட்டி-பேய்மேன்களின் இருதயம் இற்றுறிப்(Ituri-Region) பகுதியிலுள்ள காடுகளைப்பற்றிச் சிந்தித்து துடிப்பதுமட்மல்ல.மாறாக பெரும் சக்தியையும் மற்ற மனிதர்களுக்கு வழங்குவதாக நம்பப்பட்டு,இந்த இனக்குழுவை வேட்டையாடி,அவர்களின் இதயத்தை உண்டு உருசிப்பதும் நிகழ்கிறது.இத்தகைய மூட நம்பிக்கையோடு கொங்கோ.



அவ்வளவு பின் தங்கிய மனிதக் குழுக்கள் இங்கேதாம் வாழ்கிறார்கள்!



"...Der Osten Kongo ist wahrscheinlich der schlimmste Platz auf Erden fuer Fraun."-bedrohte Voelker.seite:15.



"கொங்கோவின் கிழக்குப் பகுதியானது பெரும்பாலும் பெண்களுக்கு ஆபத்தான பகுதியாகும் இப்புவிப்பரப்பில்."அச்சுறுத்தப்படும் மக்கள்.பக்கம்:15.


அதாவது கொங்கோவின் கிழக்கு மாகணத்தில் எண்பது வீதமான பெண்கள் பாலியற் பலாத்தகாரத்துக்குட்படுத்தப்பட்டு,பால்வினை நோய்களினால் சாகும் நிலையிலுள்ளார்கள்.உதாரணத்துக்கு: பெம்பாசின்;"Mouvement de la Libe´ration du Congo" போராளிகள் கடந்த 29.10.2002 ஆம் ஆண்டு 65 பெண்களையும்,சிறுமிகளையும் வல்லுறுக்குட்படுத்தினார்கள்.117 மனிதர்களைக் கொன்றார்கள்.(அதே நூல்.)இது தொடர்கதை.


இந்த நிலையில் மக்கள் பெரும் அவலத்துள் வாழ,ஐரோப்பிய-அமெரிக்க வல்லூறுகள் வளத்தைத் திருடியபடி.


கொங்கோவின் கனிவளம்தாம் இந்தத் தேசத்தின் அழிவுக்கும் காரணமாகிறது.


யுரேனியம்,


தங்கம்,


வைரம்,


கொல்ரன் எனும் கைத் தொலைபேசி உருவாகத்துக்குரிய மூலப்பொருள்.



பெற்றோலுக்கான மசகு எண்ணை.



கடந்த ஜுலை மாதம் ஜேர்மனி 560 துருப்புகளை ஐ.நா.துருப்பெனும் போர்வையில் கொங்கோவுக்கு அனுப்பித் தனது கம்பனி(Bayer-Tochter H.C) நிலைகொண்டிருக்கும் கனிவளப்பகுதியைக் காத்து வருகிறது.பெயரென்வோ தேர்தலைக் கண்காணிக்க-பாதுகாப்பு வழங்க,என்றபடி...




ப.வி.ஸ்ரீரங்கன்

09.2006




(மீள்பதிவு)

Sonntag, Dezember 23, 2007

போரையும் அது சார்ந்த அரசியலையும்...

பிற்போக்கு அரசியலும்,அறிவு நிலையும்



இன்றளவும் தமிழ்பேசும் மக்கள் இலங்கையில் ஏமாற்றப்படுகிறார்கள்.இவர்களின் வாழ்வாதாரங்களையும் ,உயிர் வாழ்வையும் ஈழதேசமென்ற கோசத்தின் வாயிலாகப் பறிக்கப்பட்ட அரசியல் குழிப்பறிப்பானது, தமிழ்பேசும் மக்களின் சமூக சீவியத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியபேர்து அந்த மக்களின் சமுதாய ஆவேசமானது ஆயுதக் குழுக்களுக்கு எதிரானதாக- வீரிய வலுவோடு மேலெழும்ப முடியவில்லை.இத்தகைய இறுகிய பலாத்தகார அரசியல்-உளவியற்போக்கால் நமது மக்கள் சமூகத்தில் மேலாண்மை செய்யும் ஆயுதக் கலாச்சாரமானது அந்தச் சமுதாயத்தை மிகவும் பின் தங்கிய மக்கள் குழுவாக்கி விட்டுள்ளது.இந்த மக்களின் பொருள் வாழ்வானது இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு நிகரானது கிடையாது.இது மக்களின் மனங்களை நுகர்வுச் சந்தைக்கு இசைவாக வளர்த்தெடுக்கும் தரகு முதலாளியத்துக்குப் பண்பான நிலமாக மாற்றப்பட்டுள்ளது.நிலம் பதப்படுத்தப் பட்டுள்ளபோது விதைப்பதற்கேது தடை?


நமது சமுதாயமானது குறிப்பிட்டெழுதக்கூடியளவு முக்கியம் பெற்ற மக்கள் இனமாக வளர்வதாவில்லை.இந்த மக்களின் அறிவார்ந்த வலுவானது வெறும் "மனனம் பண்ணும்"கல்வி, அநுப வாழ்வாகவே இதுவரை முன்னெடுக்கப்படுகிறது.எமது இனத்துக்குள் விஞ்ஞானிகள்,நிபுணர்கள்,ஆய்வாளர்கள்,கண்டுபிடிப்பாளர்கள் எவருமில்லை.இருந்த சிறு கல்வியாளர்களையும் நாம் போட்டுத் தள்ளிவிட்டோம்.புதியவற்றைக் கண்டுபிடிப்பதற்கான அரசியல்,மற்றும் பொருளாதாரச் சுயாண்மை இலங்கைச் சமுதாயத்திடமில்லை.அது சிங்களவர்களாகவிருந்தாலென்ன அல்லது தமிழர்களாகவிருந்தாலென்ன, இந்த நாட்டின் சுயாதிபத்தியம் அந்நிய தேசங்களால் புதிய வடிவில் பறிக்கப்படுகிறது!எங்களிடம் சுய நம்பிக்கையும் அதை மையப்படுத்திய சுய பொருளாதார முன்¦னுடுப்புகளும் கிடையாது.எங்கள் மனங்கள் 18ஆம் நூற்றாண்டு வாழ்நிலைகளோடு ஐக்கியமாகியதாகவே நகருகிறது.இந்த மனதானது நமது உயிராதாரமான இன அடையாள அரசியலை-சுய நிர்ணயத்தின் அவசியத்தை-எமது பொருளாதார வலயத்தை,கட்டியெழுப்புவதை மறுத்து அதற்குக் குறுக்கே நிற்கிறது.எமது வாழ்வாதாரங்களையே அடைவு வைத்துத் தத்தம் அரசியல் பிழைப்பைச் செய்வதற்கு ஒவ்வொரு தமிழ்,சிங்கள இயக்ங்;களையும்,அரசியல் கட்சிகளையும் உலக அரசியல் தூண்டி விடுகிறது.எங்கள் பிரச்சனைகளின்பால் நாமே தீர்மானகரமான முடிவுகள் எடுப்பதற்கு வக்கற்று அந்நிய நாடுகளும்,வெள்ளைக்காரர்களும்தாம் எம்மை வழிநடத்தும் எஜமானர்களாகப் பண்டுதொட்டு இருந்துவருகிறார்கள்.குரங்குகளாக நாம் அடிபட்டுக்கொண்டு வெள்ளையனிடம் மண்டியிடுகிறோம், எம்மைச் சமாதனஞ் செய்துவிடுவென!என்ன கொடுமையிது?எம்மைத் தூண்டிவிட்டு, எமது வலுவை,அறிவைச் சிதைப்பதற்காகவே நாம்,நமக்குள் அடிபடுவதைச் செய்தவனிடமே நாம் சமாதானஞ் செய்யக் கோருகிறோம்.நாம் இருபத்தியோராம் நூற்றாண்டிலா வாழ்கிறோம்?இங்கே எங்கள் அரசியல் வாழ்வானது வெறும் இனத்துவ அடையாளத்தின் எல்லையை விட்டகல முடியாது, அந்த எல்லைக்குள் முடங்கிக்கிடக்கிறது.


இதனால் எமது சமுதாயத்தின் வலுவானது அடையாள இழப்பைச் செய்த படி வெறும் இனவாதத் தளத்தில் மக்கள் விரோதக் கருத்தியலை உருவாக்கிறது.இதை உலக அரசியலின் உதவியோடே நமது இயக்கங்கள்,அரசியல்; கட்சிகள் செய்து முடிக்கின்றன.இதனால் நாம் தேசிய இனமாக உருவாக முடியாது வெறும் இனக் குழுவாகவே உலக அரங்கில் பார்க்கப்படுகிறோம்.அதுதாம் உண்மையுங்கூட.இங்கே தமிழர் தேசியம்,சுயநிர்ணயம்,தனித் தமிழீழம் பற்றிய கருத்தாக்கங்களின் நியாயத்தன்மைகளைப் பார்ப்பதும்,கூடவே நமது வாழ்வின் அதீத அழிவுக்கு எவர்கள் காரணமாகின்றார்களென்பதையும் நாம் இனங்காணவேண்டும்.இத்தகைய இனம்காணுதலின்றி எமது சிதைந்த வாழ்வு மேம்படமுடியாது.தொடர்கின்ற உயிரிழப்புகள் பாலியல் துன்புறத்தல்கள் எந்த நிலையிலும் இனியும் தொடர முடியாது.இவற்றை நாம் தடுத்தாவேண்டும்.ஆனால் எப்படி?-இதுதாம் கேள்வி!


பிற்போக்கு அரசியலும்,அறிவு நிலையும்:


தமிழ் மக்களின் கடந்த கால அரசியலானது "வர்க்க அரசியலில்"படுபிற்போக்குவாத நிலையெடுத்துத் தமிழர்களைக் காட்டிக்கொடுத்தது.தமிழினத்துக்கு விசுவாசமற்ற வெறும் ஜந்திரத்தனமான பிழைப்புவாதத் தமிழர் விடுதலைக்கூட்டணியானது தனது ஏகாதிபத்தியச் சேவக்கத்தால் நமது நாட்டில் இனவொடுக்குமுறை அரசியலில் முக்கியமான-தீர்மானகரமானவொரு பாத்திரத்தை அமெரிக்க-ஐரோப்பியக் கூட்டணிக்கு வழங்கியுள்ளது.இந்தச் சதிக்குடைந்தையான தமிழ்த்தலைமைகள் பலவர்ண முத்திரைகளோடு நமது மனங்களில் சஞ்சரிப்பவர்கள்.தந்தையென்றும்,அடாங்காத் தமிழன்,மாபெரும் சட்டமேதை பொன்னம்பலம் என்ற பொற்காலக் கனவுகளாக நமது மனங்களில் தரித்திருப்பவர்கள் செய்த தமிழின விரோத அரசியலானது, இன்று வெறும் ஆயுதக் காட்டாட்சிக் காலமாகவும்,சர்வதிகாரத்தை நிலைப்படுத்தும் காலமாகவும் விரிந்துகிடக்கிறது.இத்தகைய அதிகாரத்துவ அரசியலைப் பங்கிட்டுக்கொள்வதற்காகக் கூச்சல் போடும் குறுங் குழுக்களும் தம்மை மாற்றுக் கருத்தாளர்களாகவும்,ஜனநாயகப் போராட்டச் சக்திகளுமாகக் காட்டிவரும் பாசாங்கு அரசியல் நம் மக்களையின்னும் அடிமைகொள்ள முனைவது கண்கூடானது.


எம்மிடமுள்ள அறிவு நெருக்கடியைப் பயன்படுத்தி நமது மனங்களை அடிமைகொள்ள வைத்த அரசியலானது,வெறும் வோட்டு வங்கியைக் குறித்த அரசியலையே எமக்கு வீரவசனம் பேசி எமது விடிவுக்கானதெனப் பறைசாற்றிய அந்தக் காலத்தை மீளவும் தொடரும் அற்பத்தனமான அரசியலொன்று எம்முன்னே தொடரப் போகிறது.இந்த உளுத்துப்போன நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எப்படியெல்லாம் உலகம் மக்களை ஏமாற்றிவிடுகிறது.ஆளும் வர்க்கங்கள் இன்றும் உழைப்பவர்களை ஏமாற்றி வருவதற்கு இந்த இன,மொழி,மத அடையாளங்கள் நன்றாகவே பயன்படுகின்றன!இத்தகைய நரகல்களைப் பயன்படுத்தி இலட்சக்கணக்கான மனிதவுயிர்களோடு விளையாடிவரும் தமிழ்-சிங்கள அரசியலானது இந்த நூற்றாண்டிலும் மக்களின் துயரத்தோடுதாம் தனது குவிப்புறுதி இலக்கைக் கொண்டியங்குகிறது.


ஈழப் போராட்ட யுத்தத் திணிப்பானது தமிழ்மக்கள் மத்தியில் எந்த நம்பிக்கையுமற்ற இரண்டுங்கெட்டான் வாழ்வு நிலையே மீதமாக்கி வருகிறது.இது சமூக எண்ணவோட்டமாகி மக்களை வாழ்வின்மீதே அவநம்பிக்கைகொள்ள வைத்துவிட்டது.இந்த எண்ணவோட்டத்தைச் செம்மையாகப் பயன்படுத்த முனையும் தமிழ்ப் "பொறுக்கி" அரசியல்-பெருச்சாளிகள் தம்மை யுத்தத்திற்கு எதிரானவர்களாகவும்,சமாதன விரும்பிகளாகவும்,ஜனநாயகக் காவலர்களாகவும் காட்டும் அதே நேரம்,தம்மால் மக்களின் விடிவுக்கான அரசியலை முன்னெடுக்க முடியுமென அரசில் பரப்புரை செய்கிறார்கள். இவர்கள் யார்?அதே ஆயுதக் கலாச்சாரத்தின் பிதாமக்கள்தாம்-அன்று உட்கட்சிப் போராட்டத்துக்குள் சிக்கிய தலைமைகள்,தளபதிகள் அப்பாவிப் போராளிகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த இயக்கங்களின் அதே கொலைக் கரங்கள், இன்று ஜனநாயகக் கீதம் இசைக்கின்றார்கள்.இவர்கள் புலிகளை அம்பலப்படுத்துவதாகவும்,அவர்களின் அராஜகத்தை எதிர்த்துப் போராடுவதாகவும் ஒப்பாரி வைப்பதே தமது அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும,; மக்களைத் தமது பங்குக்கு அடிமைகொள்ளும் தந்திரத்தோடு காரிய மாற்றுவதற்கும்தாம்!இதுதாம் உண்மையான எதிர்பார்ப்பு.இலண்டன் ரீ.பீ.சீ.வானொலிக்கும் அதில் வேஷம் போடும் அரசியல் பிழைப்புவாதக் கூட்டத்துக்கும் என்ன அருகதையுண்டு தமிழ் பேசும் மக்களின் உரிமைகள்பற்றிக் கருத்தாட?அன்றும்,இன்றும் புலிகளைப்போலவே(புலிகள் அமெரிக்க-ஐரோப்பியக் கூலிகள் இன்று.)இந்தியாவினதும்- சிங்கள அரசினதும் கைக்கூலிகளாக இருப்பவர்கள், எடுத்து வைப்பதோ "நாம் மக்களின் நலத்தைக் குறித்துப் போராடுகிறோம்" என்பதே!நல்ல வேடிக்கைதாம் இது.-இது குறித்துப் பிறகு பார்ப்போம்.


தமிழ்பேசும் மக்களின் சமூக அறிவுத் தளமானது மிகவும் பின் தங்கியது.இந்த அறிவு நெருக்கடியானது அந்தச் சமுதாயத்தின் எதிர்கால அரசியல்,சமூக வாழ்வைப் பெரிதும் பாதிக்கப் போகின்றது.வெறும் தமிழ்க் கோசக் காட்டுக்கூச்சலால்,ஜனநாயகத்துக்கான மற்றும் அராஜகத்துக்கெதிரானது எனும் கோசங்களால் நாம் பிழைத்துக் கொள்ளமுடியாது.நமது சமுதாயத்தின் அரசியல்,வாழ்வாதார மற்றும் பொருள் உற்பத்தி நெருக்கடிகள் வெறுமனவே வெற்றுச் சவடால் மொழிவுகளால் தீர்க்கப்படமுடியாதவை!இவற்றைக் கருத்திலெடுக்காத அரசியலானது இயக்க,தரகு மூலதனத்தின் நலனை மையப்படுத்திய அரசியலாக நம்முன் விரிந்து கிடக்கிறது.இலங்கையின் சரித்திரத்தில் முன்னெப்போதையும்விட இனிவரும் காலங்களே அகோரமான அரசியல் குழிபறிப்புக்களை நமது இனத்துக்கு வழங்கும்.அதைக் காரிய வாதத் தலைமைகளின் இயக்க,பதவி வெறி மிகவும் தந்திரமாகச் செய்வதில் எவருடனும் கூட்டுச் சேருகிறது.இந்தச் சேர்க்கையானது இலங்கைமீது கடந்த காலங்களின் காத்திரமான தாக்கத்தைப் பொருளாதாரத்திலும் சமூக வளர்ச்சியிலும்,அபிவிருத்தியிலும் செலுத்திய அந்நியச் சக்திகளாலேயே உருவாக்கப்பட்டு- வலுவாகப் பின்பற்றப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது.இதற்கேற்றவாறு அரசியல் முன்னெடுக்கப்படும் ஒரு இலங்கையைத் தயார்ப்படுத்தும் வியூகம் கடந்த சில வருடங்களாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.இதன் பின்னணியில் அமெரிக்க-இந்தியக் கூட்டணியின் அரசியல் ஆர்வங்கள் இறுக நிலைகொள்கின்றன.இங்கே மக்களின் ஆர்வங்கள்,அபிலாசைகள்,நம்பிக்கைகள்,இனங்களுக்கிடையிலான பரஸ்ப்பர உறவுகள் செல்லாக் காசாக்கப்படுகிறது.


பொருளாதார வளர்ச்சி குன்றிய குறைவிருத்தியுடைய இலங்கைபோன்ற நாட்டில்,மக்களின் அறிவு வளர்ச்சி மந்தமுடையது.அது அரபு நாடுகளிலுள்ள பின்தங்கிய மக்களினங்கள் போலவேதாம் சமூக வளர்வுமின்றி,அக வளர்ச்சியுமின்றி உலகத்தில் வெறும் நுகர்வடிமைக்கூட்டமாகத் தன்னை வெளிப்படுத்துகிறது.இந்த மக்களின் அகமானது இன்னும் வளர்ச்சியடைந்த பண்பாட்டுக்குச் சொந்தக் காரர்களாக இவர்களை வெளிப்படுத்தவில்லை.இங்கே பாட்டாளிய வர்க்கப் பண்பாட்டின் அவசியமான மனிதப் பண்புகளின் அவசியமானது எமது மக்கள் சமூகத்துத் தேவையாக இருக்கிறது.இத்தகையவொரு பண்பாட்டை நோக்கிய சமூக-அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான அமைப்பு வலு எவரிடமுமில்லை.இ·தே இன்றைய வெற்று நிலைகளுக்கெல்லாம் காரணமாகிறது.இத்தகைய வெற்று நிலையைச் செய்தவர்களே இந்தப் புலிகள்தாம்.அதுவே மக்களின் அழிவுக்கும்,அவலத்துக்கும் காரணமாகி,மக்களின் அறிவை முடக்கி-ஆயுதத்துக்கு முன் மண்டியிட வைத்துள்ளது.


இலங்கையில் ஏகாதிபத்திய-இந்திய நலன்:


அமெரிக்காவின் இலங்கைமீதான "நீண்டகால அரசியல் நோக்கு" நிலையானது தற்காலிக விட்டுக்கொடுப்புகளைத் தனக்குள் செய்வதற்கு உத்தேசிக்கிறது.இது பாரிய கொடுக்கல் வாங்கலை நிதியூடாகக் காய் நகர்த்தும்போது, அங்கே புலிகளின் கரங்கள் வலுவடைகிறது.அமெரிக்காவின் ஆர்வங்கள் இலங்கையில் சமாதானமானவொரு அரசியல் சூழலும்,ஜனநாயக முன்னெடுப்புமிக்க கொந்தளிப்பற்ற சமூக உருவாக்கத்துக்கும் எதிரானது.இலங்கையும் மற்றைய மூன்றாமுலக நாடுகளைப்போன்று அரை நிலப்பிரபுத்துவ அரை இராணுவத்;தன்மை மிக்க நாடாகவே இருத்திவைக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்காவின் பாரிய ஆர்வமே காரணமானது.இங்கு கவனிக்கத் தக்கது என்னவென்றால் "அமெரிக்க ஆர்வமென்பது"சர்வ உலகுக்கும் பொதுவான அரசியல் குழிபறிப்புகளை சி.ஐ.ஏ.மூலம் செயற்படுத்துவது.இந்த ஆர்வமானது இலங்கையின் தேசிய முதலாளியத்தின் அரசியல் தலைவரான பண்டாரநாயக்காவைக் கொன்றது.இந்தியக் கலப்புப் பொருளாதார(இது பம்மாத்துத் தேசியம் பேசியது); கொள்கையைப் பின்பற்றிய ஜ.நேருவைக்கூடச் சகிக்க முடியாமால் "போட்டுத் தள்ளும்" பட்டியலில் சி.ஐ.ஏ. சேர்த்து வைத்திருந்தது.இந்தப் பட்டியலில் பல மூன்றாமுலக மற்றும் ஐரோப்பியத் தலைவர்களும் அடங்கியிருக்கிறார்கள்.அதிலொருவர் முன்னாள் ஜேர்மனியச் சன்ஸ்லர் ஆடானாவ் என்பதுகூட ஆச்சரியமானது! இந்த ஏகாதிபத்திய நாடானது இன்று நோர்வேயூடாக நமது மக்களின் முகங்களில் கரிபூசும் வேலையைச் செய்கிறது.



தமிழ் மக்களின் பாரம்பரிய நிலப்பரப்புகளை (வடக்குக் கிழக்கு)இணைந்த மாநிலமாகக்கூட உருவாகுவதற்கு அமெரிக்கா தடையானது.அதன் நோக்கானது இலங்கையின் இனப்பிரச்சனையானது நீறுபூத்த நெருப்பாக இருக்கவேண்டுமென்பதே.இதன் வாயிலாக இந்த நாடு சுயாண்மையை இழந்து ஆசியாவின் கூட்டுருவாகத்துக்கு முரண்நிறைந்த பகைப்புலத்தைக் கொண்டிருக்கும்.அங்ஙனம் கொந்தளிப்புடைய சுமுதாயத்தின் மத்தியில் பாரிய விவேகமுடைய பொருளாதாரக் கனவுகள் நிசமடையமுடியாது.இது அமெரிக்காவினது நீண்டகாலக் கனவின் முன் நிபந்தனையொன்றைச் சாத்தியமாக்கி இலங்கைக்குள் அமெரிக்காவின் குரல் வானொலியாக வந்தது.இப்போது நிரந்தரமானவொரு இராணுவத் தளமொன்றை நிறுவுவதற்கான சூழல் அமெரிக்காவுக்குச் சாதகமாக இருக்கிறது.அதற்கு இது அவசியமானது.சீனாவின் அகோரமான வளர்ச்சியும்,பொருளாதார ஆர்வமும் அமெரிக்காவை மட்டுமல்ல ஐரோப்பாவையே கதிகலங்க வைக்கின்ற இன்றைய நிலையில்,ஆசியாவின் கைகள் மேலோங்குவதைத் தடுப்பதற்கானவொரு கடற்பிரயாணத் தடங்கல்கள்,மிரட்டல்கள்,குறுக்கீடுகளின்றி ஆசிய- சீனப் பொருட்கள் ஐரோப்பாவுக்குள் உள் நுழைவது உலகு தளுவிய பல்தேசியக் கம்பனிகளையே கலங்க வைக்கிறது.(இதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்வேன்:கடந்த வருடம் 2005 இல் சீனாவின் 3 மில்லியன்கள் உடுபிடவைகள் சுங்கத் தடை மூலம் நாட்கடத்தி உள் நுழைய விடப்பட்டது.அதன் அண்ணளவான பெறுமதி 400 மில்லியன்கள் டொலர்கள் ஆகும்.இதனால் ஆனதென்ன? குறித்த நேரத்தில் பல் தேசியக் கம்பனிகளின் உற்பத்தி நுகர்வுச் சந்தைக்கு வந்து உற்பத்திச் செலவையும்,உபரியையும் ஒருங்கே சுருட்ட முடிந்தது.)எனவே பழைய வியூகங்களின் கனவுகள் மாற்றமுற்றுப் புதுத் தேவைகள் உட்புகுகின்றன.இது இலங்கையின் பூகோள மதிப்பீடுகளையெல்லாம் மாற்றித் திருத்தியெழுதும் நிலையில் அமெரிக்க நலனும், ஐரோப்பிய நலனும் புலிகளைத் தமது விசுவாசிகளாக்க முனைதலும் அதைக் கச்சிதமாக நோர்வே செய்து முடிப்பதற்கு உதவுவதும் வெறும் சமாதானத் தூதல்ல.இத்தகைய நிலையைத் தமிழர்களின் வெற்றியென்று எவராவது கொண்டாடினால் அது புலிகளைத் தவிர வேறு யாராகவுமிருக்கமுடியாது.எண்ணை வளமுடைய அண்மைக் கிழக்கு அரபு நாடுகளுக்குள் அமெரிக்காவால் தூவப்பட்ட விசச்செடி இஸ்ரேலென்றால் இங்கே தென்கிழக்காசியாவில் புலிகளாகவே இருக்கும்.


மறுபுறமோ இந்தியப் பூகோள,கேந்திர அரசியல் ஆர்வமானது இலங்கையை ஏலவே இந்தியச் செல்வாக்குக்கு உட்பட்ட பிராந்தியமாக்கியது.அந்தச் செயலூக்கமுடைய அரசியல் அதிகாரமானது கடந்த கால மேற்குலக- இந்தியப் பொருளாதார உறவில் சில தர்க்கரீதியான முகாந்திரங்களை இந்த உரிமைக்குள் இழுத்துவந்தது.அதன்வாயிலான அரசியல் விட்டுக்கொடுப்புகள் இந்தியாவை வெறும் "சோத்தி" நாடாகத் தமிழரிடம் காட்ட முனைந்த புலிகளுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது.எனினும் இந்தியாவின் இலக்கு வேறுவடிவாக இருந்ததென்பதை அதன் இன்றைய வியூகமான அரசியல் நகர்வில் நாம் நன்றாக உணரமுடியும்.இந்தியாவானது எந்தச் சூழலிலும் இலங்கையை யாருக்கும்,யாரது அதிகாரத்துக்கும் இழக்காது,இழக்கவும் முடியாது.இலங்கையானது இந்திய எடுபிடியாக இருக்காது போனால் அகண்ட பாரதமானது அறுபது துண்டங்களாகப் பிரிவதை எந்த வலுவான இராணுவத்தாலும் தடுக்க முடியாது.இதுதாம் பூகோள அரசியலின்விதி.இந்தக் காரணத்தின் அதீத முன்னெடுப்பானது இந்தியாவை பற்பலக் கூட்டுக்குள் இணைத்துள்ளது.


ஒருபுறம் ஏகாதிபத்தியத் தரகு முதலாளியத்தோடு சமரசம் செய்யும் இந்தியா மறுபுறும் ஆசியக்கூட்டு,சுயயாண்மைப் பொருளாதார முன்னெடுப்பைக் கனவு காண்கிறது.இந்திய ஆளும் வர்க்கம் இரண்டு தளங்களாகப் பிளவுண்டு கிடக்கிறது.ஒரு பிரிவானது(இது தரகு முதலாளியம்) பல்தேசிய கம்பனிகளின் கூட்டோடு இந்திய மூலவளங்களைப் பங்கிட்டு, இந்தியத் துணைக்கண்ட மக்களை வேட்டையாட முனைகிறது.மற்றைய பிரிவோ தேசியப் பொருளாதாரத்தையும்,நடுதர உற்பத்தியையும் ஆசியக் கூட்டோடு முன்னெடுக்க முனைகிறது.இந்த இரு பிரிவும் தங்கி நிற்கும் சந்தையானது சந்தைப் பொருளாதாரப் பண்பையிழந்து பெரும் பகாசூரக் கம்பனிகளின் காட்டுமிராண்டிச் சுரண்டல் சந்தையாகச் சுருங்கியுள்ளது.இதன் இறுகிய பொருளாதார நலனானது இந்திய அரசியல் வியூகத்தை உடைப்பதற்கானவொரு சூழலை இந்தியாவுக்குள் வற்புறத்தி வெற்றி கொள்கிறது.இந்த வெற்றியானது ஆளும் கட்சி களாகவுள்ள மத்திய,மாநில அரசுகளாலும்,எதிர்க்கட்சிகளாலுமே சாத்தியமாகியது.இந்தியத் தேசிய முதலாளியக் கூறுகள் வலுவான கட்சித் தலைமைத்துவமின்றித் தடுமாறிக் கிடக்கிறது மறுபுறம்.இந்தியாவுக்கள்-தமிழகத்துக்குள் கண்களை மேயவிட்டால் நமக்கு இந்தச் சதி புரிந்துவிடும்.மாநிலத்தில் திடீரென இந்தி மொழிமீது ஏற்பட்ட கரிசனை,அந்த மொழி கற்காததன்விளைவாக வேலைவாய்ப்பு இழக்கும் நிலையென ஜெயலலிதாவின் டி.வியும்,அவர்களது பிரச்சாரமும்,அதை எதிர்க்கும் திடீர்த் தலைமைகளும் ஏகாதிபத்தியத்தின் கண்டுபிடிப்புகள்.இத்தகைய போராட்டச் சச்சரவுகள், வரப்போகும் தேசியப் பொருளாதார,தேசிய அலகுகள் பாதுகாப்புப் போராட்டங்களை முளையில் கிள்ளியெறியும் சூழ்ச்சிகளாக விரிவதுதாம் உண்மை.


பெரும் பணத்தைச் சுருட்டி வைத்திருக்கும்ஜெயலலிதா,கருணாநிதிபோன்ற அதிகாரத் தலைமைகள் தாமே பெரும் முதலீட்டாளர்களாக மாறியதன் பின்பு இங்கே ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்வதில் ஒருவருக்கொருவர் போட்டியாகி விடுகிறது.இதுதாம் புலிகளுக்கும் பிரச்சனை.அவர்களும் இத்தகைய முதலீட்டாளர்களாக மாறியபின் தமிழீழக்கோசமும்,போராட்டமும் அவர்களது மூலதனத்துக்கு எதிரானதாகவும் பார்க்கப்பட்டு;,ஏகாதிபத்தியச் சேவை மூலம் தமது அடியாட் படைகளுக்குத் தினிபோட்டுத் தமது கைகளில் உள்ளவற்றை முதலீடாக்குவதில் கவனமாக அரசியல் நடக்கிறது.


இதை நாம் விளங்கிக் கொள்வதற்குத் தமிழ் நாட்டை உதாரணமாகப் பார்க்கலாம்.இலங்கை அரசின் இன்றைய ஆசியப் பொருளாதார,மற்றும் சுய பொருளாதார முன்னெடுப்புகளைச் சாரும் மகிந்தாவின் வரைவுகள் மற்றும் அரசியல் நகர்வுகள் தமிழக ஏகாதிபத்தியச் சேவகர்களுக்கு விருப்புடையதாக இல்லை.ஏகாதிபத்திய கைக்கூலிகளான ஜெயலலிதா,கருணாநிதி குடும்பங்களுக்கும,; அவர்களது நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியத்தால் வழங்கப்பட்ட கட்டளைகள் இலங்கை அரசியல் பற்றிய தமிழகத்துத் தலைவர்களின் அதிருப்தியாக விரிகிறது.இவர்கள் உதிர்க்கும் இலங்கை பற்றிய எதிர்ப்பைத் தமிழகத்தின் "ஈழப்போராட்டத்துக்கான" ஒத்துழைப்பாகவும் புலிகள் பிரச்சாரமிடுவதைக் கண்கொண்டு பார்க்க முடியாது.ஜெயலலிதாவும் கருணாநிதியும் மட்டுமில்லை ராமதாசு,கோபால்சாமிகள்கூட ஏகாதிபத்தியத்தின் குறிப்பாக சி.ஐ.ஏ.முகவர்கள்தாம்.இவர்கள் நம்ம ஆண்டன் பாலசிங்கத்துக்கு முன்னமே சி.ஐ.ஏ. பட்டியலில் போய் சேர்ந்தவர்கள்-நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைப் போல!


இந்தியாவும்,தமிழ் குறுங் குழுக்களும்:


தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயப் போராட்டமானது,தமிழ்த் தரகு முதலாளிய அரசியல்-பொருளியல் வாழ்வு நெருக்கடியால் எழுந்ததாகும்.பேரினவாதச் சிங்களத் தரகு முதலாளிய மேலாதிக்கமானது தமிழ் தரகு முதலாளியத்தோடு முரண்பட்டபோது- அது இனவொடுக்குமுறைகளைத் தமிழ் தரகு முதலாளியத்துக்கு எதிராக வற்புறுத்தியபோது சிங்கள அரசே தலைமை வகித்துத் தமிழர்களைக் கொன்றுபோட்டது.இத்தகைய கையறு நிலையில் தமிழ்த் தரகு முதலாளியமானது தனக்கான ஆயுதமாக எடுத்தாண்ட வியூகமே தமிழீழக் கோசமானது.ஆனால் தமிழ்பேசும் மக்களின் நலன் முற்றுமுழுதாக வேறாகவிருந்தது.அவர்களின் அரசியல் வாழ்வைச் சீரழித்துத் தமது இருப்பை நிலைநாட்ட முனைந்த தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கமானது சரணடைந்த நாடானது முதலில் இந்தியாவே.அனைத்து இயக்கங்களின்(புலிகள் உட்பட) தோற்றங்களும் இந்திய ஆசியோடும,; பொருளாதார ஒத்துழைப்போடும் மற்றும் அரசியல் ஆலோசனையோடுமே சாத்தியமானது.



இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் தேசிய இன அடையாளமானது பொருளாதாரத்தின் சுயசார்பால்,வரலாற்று ரீதியாக வாழ்ந்த பகுதிகளின் பொருளாதார வலுவால் அது சார்ந்த பண்பாட்டு மதிப்பீடுகளால் தோன்றியது கிடையாது.தமிழகத்தின் இறக்குமதி மதிப்பீட்டுகளாலும்,பண்டுதொட்டுப் பேசிய மொழியாலும் ஒரு தேசிய இன அடையாளம் நிலவமுடியாது.தமிழர்களின் சமூகவாழ்வானது சிங்கள அரசின் தயவில் காலத்தையோட்டியதும்.சிங்களவர்களுக்குள் சந்தைகளைக் கண்டடைந்த தமிழ் முதலாளிகளின் சிங்களப் பகுதிகளின் வாசங்களும், தமிழர்களின் பாரிம்பரிய நிலத்தின் பொருளாதார வலுவைச் சார்ந்திருப்பதைக் காட்டவில்லை.இத்தகையவொரு சூழலில் இலங்கைத் தமிழர்களின் தேசிய வாதமானது வெறும் குறுந்தேசிய நரகலாகும்.இதை மிகத் தெளிவாக விளங்கிய நாடு அமெரிக்காவாகும்.அந்த நாடு ஒருபோதும் இந்தியாவை எதிர்க்க விரும்பாதபோதும் இலங்கையின் அரசியலில் மறைமுகமான பாரிய தாக்குதலைச் செய்தே வந்தது.அதை மேலே பார்த்தோம்.



இன்றோ இந்தியாவானது மிகக் காத்திரமானவொரு பாத்திரத்தைத் தென்கிழக்காசியாவில் வகிக்கிறதென்பதை நாம் மறுக்க முடியாது.இந்தியாவென்பது பல் தேசிய இனங்கிளின் ஒடுக்குமுறைக் கூடாரம்,அது ஒரே தேசமில்லை,பல தேசங்களின் கொடியகூட்டு வடிவம்!;அது தனது தொங்குசதை நாடுகளில் பண்பாட்டு ஒடுக்குமுறையிலிருந்து சமூக ஏகாதிபத்தியமாக உருவாகிவருகிறது.இந்தியாவுக்கென்றொரு பிரத்தியேக அரசியல் அலகுகளுண்டு.அதை எந்த மேற்குல வியூகங்களோடும் நாம் ஒப்பீடு செய்யமுடியாதது.அது சாணாக்கியனின் தொட்டில்லவா!அங்கே நடக்கும் அரசியலானது மேற்குலகுக்கே தப்படி போடுவதற்கானது.ஆனால் அதன் தலைமையானது தரகு முதலாளியத்தின் நலனை முதன்படுத்தவேண்டிய நிலையில் சொந்த நோக்குக்கே குறுக்க நிற்கும் இன்றைய நிலைமை தற்காலிகமானது.இதை விளங்க இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி,நகர்வு,ஆசியச் சந்தை,மற்றும் இந்தியாவின் பண்பாட்டு ஏற்றுமதியை உள்வாங்கும் அரபு நாடுகளின் "இந்திக் கலை" அநுபவிப்பு அதை மேல் நிலைக்கு உயர்த்தும்.இதை ஐரோப்பிய ஜந்திரத்தனமான பண்பாட்டால் வெற்றி கொள்ள முடியாது.



இத்தகைய இந்தியாவின் காலடியில் ஒரு சிறு பருக்கையாகக் கிடக்கும் இலங்கையின் அரசியல், அதைமீறிப் போவதற்கு அது என்ன கேணைத் தனமான நாடா?இந்தியா பிராந்திய வல்லரசு.அது அகண்ட பாரதக்கனவுடைய அதிகார வர்க்கத்தினது கனவுகளுக்குட்பட்ட அரசைக் கொண்ட நாடு.அந்த நாட்டின் அரசியலானது மிகவும் விருப்புடையதன்று.இந் நாட்டை தென்கிழக்காசியாவின் ஒடுக்குமுறையாளானகப் பிரகடனப்படுத்தாத எந்தச் சக்தியாலும் அதை வெற்றி கொள்ள முடியாது.இலங்கை அரசியலை மட்டுமல்ல அதன் பொருளாதார-சமூக வளர்ச்சியில்கூட இந்தியா ஆதிக்கஞ் செய்கிறது.இலங்கை ஒருவகையில் இந்தியாவின் மறைமுகமான மாநிலமே.இதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் அரசியல் அறிவைப் பொருத்தது.



இன்றைய நமது அரசியல்,சமூக நெருக்கடிகள் எம் மக்களின் வெகுஜன எழிச்சியைக் கோரி நிற்பவை.இது விசும்பு நிலையில் இருந்து இப்போது மேலும் படர்வதற்கானவொரு சூழலில் புலிகளாலோ அல்லது இந்தியக் கனவினாலோ தாக்குப் பிடிக்க முடியாது.எனவே அவசியமானவொரு தீர்வு வற்புறத்தப்படுவது நிசமாகும்.மக்களின் வெகுஜனவெழிச்சியைப் புலிகளோ அல்லது இந்திய மேலாதிக்கமோ விரும்பவில்லை.இங்கே இந்தியாவினது நிலை புலிகளைப் பலவீனர்களாக்குவதே.அவர்களைப் பலவீனர்களாக்குவது ஆயுதத்தைக் களைந்தல்ல.மாறாக அவர்களது நிர்வாக அலகை வன்;னிக்குள் முடக்குவதே.யாழ்பாணத்தையும்,கிழக்கையும் நிரந்தரமானவொரு பகைப் புலமாக்கி அங்கே புலிகளின் மேலாதிகத்துக்குச் சமாதி கட்டுவதே இந்தியாவின் முதல் வேலையாக இருக்கிறது.இதை இந்தியாவும் செய்து முடிக்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கிப் பலகாலமாச்சு.இங்கேதாம் கருணா பிளவு இந்தியாவின் இருப்பின் வலுவைப் பறைசாற்றுவது.இதன் பின்பு பறிபோன கிழக்குப் பிரதேசம் புலிகளை அப்பிரதேசத்திலிருந்து மெல்ல அப்புறப்படுத்தும் மெல்லிய தாழ்நிலை யுத்தத்தையும், கருத்தியல் போரையும் வலுவாகவும்,விவேகமாகவும் முன்னெடுத்து வருகிறது.அதைப்போலவே யாழ்மாவட்டத்தின் நிலையும்,பல்லாயிரம் இலங்கை இராணுவத்தால் நிறைக்கப்பட்ட யாழ்பாணத்தில் தடுக்கி விழுந்தாலும் ஒரு இராணுவத்தான்மேல்த்தாம் விழவேண்டும்.இங்கேதாம் நம்ம மாற்றுக்குழுக்களெனும் நொண்டிக் குதிரைகள் ரீ.பீ.சீ,இதயவீணையென நம்மக்கள் அரங்குக்கு வருகின்றன.இவையின் வருகையும்,வந்தவாக்கில் அவர்களிடும் ஓலமும்"வெள்ளாடு நனைய வேங்கைப் புலி அழுதுவடியும்"கதைதாம்



இந்தியாவானது மக்களைச் சாராத இயக்கங்களாகவே ஈழப்போராட்ட இயக்கங்களை வளர்த்தெடுத்தது.மக்களின் அடிப்படையுரிமைகளை ஆயுதத்தின்மூலம் பறித்தெடுத்து மக்களைப் பார்வையாளர்களாக்கி,வெறும் அச்சமூட்டும் படையாகவே இவ்வியக்கங்களை வளரவிட்டது.புலிகள் இவ்வளவு வளர்ந்த இயக்கமாகவிருந்தும் மக்களைச் சாராத மக்கள் விரோதிகளாகமாறியது தற்செயல் நிகழ்வல்ல.புலிகள் மக்களின் சுய எழிச்சிகளைக் கண்டே அச்சப்படுபவர்கள்.தமது இருப்பை அசைக்கக் கூடியவர்கள் மக்களென்பது புலிகளுக்குத் தெரிவதுபோலவே இந்தியாவும் மக்களைக் கொண்டே புலிகளுக்குச் சமாதிகட்டும் கருத்தியல் போருக்குத் தயாராகிவிட்டது.



உதிரி இயக்கங்களை,அதன் பழைய பெருச்சாளிகளை,கொலைக்காரர்களை,மற்றும் அரசியல் விபச்சாரன்கள் ஆனந்த சங்கரியை,டக்ளஸ் தேவாநந்தாவை,தமிழ் மக்களுக்குள்ளும்-ஜே.வி.பி.யை மற்றும் சிங்களப் பிக்குகளை,சிங்கள இனவாதக் குறுங் கட்சிகளை சிங்களச் சமுதாயத்துக்குள்ளும் கருத்தியல் போரை முன்னெடுக்கத் தூண்டுகிறது இந்தியா.இத்தகைய எதிர்ப்புகளைக் காரணமாகக் காட்டித் தமிழ் பேசுபவர்களின் சுயநிர்ணயப் போரைக் கிள்ளியெறிந்து, அற்ப சலுகைகளோடு மக்கள் உரிமைகளைக் குழிதோண்டிய அரசியலே தமிழ் மக்களுக்கு இனிமேல் கிடைக்கும்.இந்தச் சலுகைகளுக்காக நாவில் எச்சிலூறக் காய் நகர்த்தும் மாற்றுச் சக்திகளென வேடம் பூண்ட ரீ.பீ.சீ.வானொலிக் கூட்டமும் தம்மாலான கருத்தியல் போரைப் புலம் பெயர் மக்கள் மத்தியில் திட்டமிட்டுச் செய்கிறது.இதற்கு இந்தியாவின் மறைமுகமான நிதி,ஆலோசனையெல்லாம் உண்டு.இத்தகைய நிலையில்தாம் அந்த வானொலி இலங்கையின் இன்றைய அரசை எதிர்ப்பது போல் நடித்து,"பாசிச அரசு,முதலாளித்துவ அரசு" என்றெல்லாம் பூச்சாண்டி காட்டுகிறது.அது மட்டுமல்லாது தம்மை மக்கள் உதவியோடே வளர்ப்பதாக நடித்து, மக்களிடம் உதவி கோருவதாக நடிக்கும் இராமராஜன் மக்களை முட்டாள்களெனக் கருதுவதை என்ன சொல்ல?இந்தப் பருப்பு புலம் பெயர் மக்களிடம் எடுபாடா.ஆனால் புலிகளின்மீதான மக்களின் எதிர்ப்பானது இவர்களிடம் ஏமாறவதற்கானவொரு சூழலும் இல்லாமாலில்லை.இதைக் கண்ணுற்று, இந்த வானொலிகள் அந்த தார்மீக எதிர்ப்பைத் தமக்குச் சாதகமாக்கி இந்தியாவின் கனவை நிறைவேற்றித் தமது வரும்படியைத் தக்கவைக்கின்றார்கள்.



இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் அரசியல்,அபிலாசைகள்,வாழ்வாதார அலகுகள்,சுயநிர்ணய அடையாளம் எல்லாம் இத்தகைய பாழும் அரசியலால் நிர்மூலமாக்கப்பட்ட பின்பு, எஞ்சுவது வெறும் அடிமைத் தனத்தின் அற்ப சொற்பச் சலுகைகளே.இதற்குத்தாம் ஒரு இலட்சம் மக்கள் செத்தார்கள்?



இந்தியாவின்,அமெரிக்காவின்-ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு நாம் என்ன செய்தாகவேண்டும்?:



1):தமிழ்ப்பிரதேசத்திலிருந்து இலங்கை இராணுவம் வெளியேறவேண்டும்.1975களின் நிலைக்குள்ளிருந்த முகாங்களுக்குள் இராணுவம் முடங்கவேண்டும்.இலங்கை அரசை மக்களின் வாழ்வாதாரங்களைக் காக்கும் நிலைக்கு மாறும்படி கோரிக்கையூடாக வற்புறுத்தவேண்டும்.உடனடிப் பேச்சு வார்த்தையூடாக முதலில் மக்களின் வாழ்வாதாரங்களைக்காக்கும் நல்லிணக்கத்துக்கு அரசைக் கைச்சாத்திடத் தூண்டவேண்டும்.அதனு}டாக அனைத்து யுத்த முகாந்திரங்களும் அகல வேண்டும்.


2):புலிகள் பன்மைத்துவ அரசியலை ஏற்றுத் தமது வலுவைத் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தின் பாலும் அவர்களின் நல் வாழ்வுக்குமான அரணாக்கவேண்டும்.மக்களின் வெகுஜனப் போராட்டத்தை எக்காரணமும் அடக்கியொடுக்காது அவர்களைச் சுயமாகச் செயற்படவிடவேண்டும்.அந்நிய சக்திகளிடம் செய்யும் அரசியல் பேரத்தை மக்கள் முன் பகிரங்கமாக விவாதிக்கவேண்டும்.


3):வடக்கும் கிழக்கும் இணைந்த நிர்வாகக்கட்டமைப்பை "பன்மைத்துவ அரசியலால்" தமிழ் மக்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.அதற்கான அரசியல் பேச்சு வார்த்தைகளை இரண்டாங்கட்டமாகவே முன்னெடுக்கப்பட வேண்டும்.முதலில் செய்வது மக்களின் உயிராதாரப்பிரச்சனைக்கு இருதரப்பும் இணங்குவதே.அதைச்சாத்தியமாக்கும்போதே இந்த அரசால் மற்றப்படி நோக்கி நகர முடியும்.இதை அந்த அரசு உலகுக்கு செய்து காட்டியாகவேண்டும்.இல்லையேல் அதன்முகம் எதுவென்பது புரிய முடியும்.



4):மக்களின் குடியிருப்புகளை உடனடியாக மீளக் கையளித்து அவர்களுக்கு நஷ்டஈட்டை இலங்கையரசு உடனடியாக வழங்கி மீள்கட்டுமானத்தை உடனடியாக வற்புறத்துவது



5)தமிழ் மக்கள் சிங்கள முற்போக்குச் சக்திகளிடம் பகிரங்கமான வேண்டுகோளைச் செய்து, தமது வாழ்விடங்களை மீளப்பெறும் வெகுஜனப் போரைத் தொடக்குவது.



6):போரையும்,அது சார்ந்த அரசியலையும் மக்கள் வற்புறுத்தி நிராகரிக்கும் அரசியல் முன்னெடுப்புகளை செய்வதற்கு உடனடி மக்கள் மன்றங்களை, கிராமம்,நகரம் தோறும் அமைத்து அமைப்பாண்மை பெறுவது-யுத்த எதிர்ப்பை வெகுஜனப் போராட்டமாக்குவது.



7):தமிழ் மக்களின் உயிர்வாழ்வுக்கான அனைத்துப் பொருள் உற்பத்திக்குமான உற்பத்திமுறைமைகளை இலங்கைத் தேசிய உற்பத்தி வலுவுக்கேற்ற முறையில் சுய பொருளாதாரப் பொறிமுறைமைகளைத் தகவமைத்துக்கொள்ள வலியுறுத்தல்-காத்தல்.



8):மக்களின் இயல்பு வாழ்வைப் பாதிக்கும் அந்நிய ஆர்வங்களை இலங்கைத் தீவில் நிலைப்படுத்தும் இயக்கங்களை,அரசைத் தூக்கியெறியும் வலுவை மக்கள் போராட்டமாக வளர்த்தெடுக்க முற்போக்கு சக்திகள் தம்மை ஒரே குடைக்குள் இலங்கை-இந்தியாவுக்குள் திரட்டியாக வேண்டும்.அதன் துணையுடன் பல் தேசியக் கம்பனிகளுக்கெதிரான போராட்டங்களை முழு இலங்கை தழுவிய வெகுஜனப் போராட்டத்தைத் தமிழ் மக்களின் உரிமைக்கான போரோடு இணைத்தல்-தோழமை பெறுதல்.


9):புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கை அரசையும்,புலிகளையும் அம்பலப்படுத்துவதும் கூடவே அவர்களது கள்ளக்கூட்டுக்களையும் உலக மக்களுக்குத் தெளிவுபடுத்தி "எம்மை வாழவிடுங்கள்!எங்கள் அகதி வாழ்வுக்கு முடிவுகட்டுங்கள்"எனும் கோசங்களை வெகுஜனப் போராக்கவேண்டும்.



இங்ஙனம் உடனடியாக தமிழ்பேசும் மக்கள் தமது நகர்வைச் செய்வார்களேயானால் இந்தியா மட்டுமல்ல உலக வல்லரசுகளும் அவைகளின் ஏவல் நாய்களான நமது எடுபிடிகளும் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்தையும் அவர்களின்(எமது); நல் வாழ்வையும்(அது இருந்தால்தானே)இனியும் சிதைக்கமுடியாது.இதுகூடப் பகற்கனவுதானே தவிர நிசம் இல்லை.போங்க போய் வேலையளப் பாருங்க.



ப.வி.ஸ்ரீரங்கன்

Freitag, Dezember 21, 2007

மேழியர் கூத்து

மேழியர் கூத்து



"நாடா கொன்றோ
காடா கொன்றோ
அவலா கொன்றோ
மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர்-ஆடவர்
அவ்வழி நல்லை
வாழிய நலனே."


அகதிக் காண்டம்:


ங்கெல்லாம் வாழ்வு சுதந்திரமானதாக இருக்கிறதோ வேலைகள் செய்யப்படக்கூடியதாக இருக்கிறதோ அங்கேதாம் "எங்களது நாடு" இருக்கின்றதென்று ஜீல்ஸ் நொடாஸ்க்கி கூறிக்கொண்டான்.அவன் புறநானூறை நிச்சியம் படித்திருக்கமாட்டான்.ஆனால் நான் அக நானூறில் புரண்டு அமுங்கிப் போவதாகக் காலம் பின்னிச் செல்கிறது.பாரீஸ் கம்யூன் போராளிக்கும் ஈழவிடுதலைப் போராளிக்கும் எதோவொரு விதத்தில் தொடர்பாடத்தக்க ஒரு பொறி கிடைத்தால் அது பெரும்பேறான வாழ்வமைதிப் பேரவா எனக்கு.


இடப்பட்ட பெயர்:இராஜன் கந்தசாமி.


பிறப்பு:1960


"யார் அப்பாவென்ற உறுதிப்பாடு-ஒழுங்கான உறுதிப்பாடு உனக்குத் தெரியாது.என்மூலமாவது சில தகவல்களை நீ பெற்றுவிடுதல் உன் தவறான பிறப்புக்கு என் உத்தியோடுகூடிய தெரியப்படுத்தல்".-அத்தான்


கொஞ்சக் காலத்துக்கு முந்திய பொழுதொன்றில் நான் தெருவோரப் பொந்துக்குள் காலத்தைக் கழித்தபோது,யாருமே உறவுகொண்டாட-முறைகள் சொல்ல முனைந்ததாக எனக்குகெட்டியவரை ஞாபகமில்லை.இப்போதுள்ள நிலைமையில் கடைந்தேற்றச் செயல்கள் வரம்பின்றி என் தலையில் கொட்டப்படும்போது நான் அந்த எல்லையிலிருந்து எங்கோவொரு தொலைவில்-ஏதோவொரு தொடைச்சதையில் உறவைப் பலப்படுத்தியபடி.


இராஜன் கந்தசாமி என்ற இயற்பெயரிலும் ராகவன் என்ற மாணவர் பேரவைப் பெயரிலும் தோழர் சன்னதிக்குச் சவாரிசொல்லிக் கொடுத்தவன் நான்.என்னுடைய பராமரிப்பில் ஒரு பகுதியிருந்தபோது நானே நடுத்தெருவில் சில தலைகளை உருட்டியவன்.சம்பேதுருவார் கோவிலிலும் அந்தக்கூடுதூக்கும் சம்பவத்திலும் ஞானப்பிரகாசரின் தோட்டாவுக்கு டாட்டா காட்டியவனின் தோளில் ஏறி நிற்க ஆசைப்பட்ட என் அக்காளின் அருமைப் புருஷனுக்கு என் ஆதாரா சுருதி அறியக்காலமுமில்லை,நேரமுமில்லை.கோவில் திருவிழாவில் யாரோ பற்றியெறிந்த சிகரட்டை ஊதியிழுத்த இராஜனாகவே அவரது மதிப்பீடு.ஓரிரவில் மடைதிறக்கும் நீரோட்டமாக நானும் சமைந்தபோது எங்கோவொரு தெருமுனையில் ஊர் சுற்றும் பொடிசுவென்ற என் வீட்டார் மதிப்போடு நான் கோலாச்சிய வரலாறுதாம் கதை சொல்வதற்கான தளமாகும்.


கருக்கட்டிய வரலாறு:


போன ஜென்மத்தில் முக்காலத்தின் முதுமையானவொரு இடைவேளையில் சில நல்ல காற்றுக் கருப்புகளில் வேள்வி செய்யப்பட்ட பொழுதொன்றில் சூரியனையிழந்துபோன புவிப்பரப்பில் பினாட்டுக்கூடையை இழைத்துக்கொண்டிருந்தவளின் தொடைக்களுக்கு நடவே கூரிய ஆயுதம் செங்குத்தாகப் பாய்ந்தபோது அஞ்சல் செய்யப்பட்ட நீர்த்துளியின் பிணைவுடன் கொண்ட பங்கீட்டுப் பிணைவு,உருப்பெற்றதும்-வெளிப்பட்டதும் காலத்தில் வாழும் ஒரு நிலையென அன்று எதிர்வு கூறிய பாதிரியார் சிங்கராஜருக்கே வெளிச்சம்.நாரந்தனையைச் சுற்றிக் கோழிகளை வளர்த்துக்கொண்ட ஒரு கோமான் பாதிரியாகி,பிசப்பான கைங்காரியம் லேசுப்பட்டதல்ல.சின்ன வயதில ஆத்தையின் சேலைத் தலைப்பில் தொங்கியபடி அவரின்ர பிரசங்கத்தால் தமிழில் ஒரு படி நிறைகூடிய மண்டைக்கனத்தை எனக்குள் திணித்த என் தாய்க்கும் வித்தியாசம், வெள்ளை அங்கியில் மட்டுமென்றே நான் கருதுவதும் ஒரு வம்பு நிலைதாம்.


நேற்றைய அல்லது அதற்குமுன்னைய இதையும் மீறிய"எப்பவோ"என்ற நிலைமைக்குள் அறுபட்டுப்போனவொரு அநாதையுணர்வுக்குள் நாவடிய நனைந்து, நுழைவதென்பது ஒரு யுகத்தின் பல மில்லியன் பிளவுக்குள் புகுவது போன்ற சங்கடமான சமாச்சாரம்.ஆனால் என்னைச் சுற்றியவொரு மிதப்பான உறவுக் குழுமத்துக்கு இஃது அவல் தின்னக் கூலியாவென்ற கதைதாம்.அம்மாவுக்குத் தீச்சட்டி தலையில் வைத்தபோது, எனது அப்பாவினது பெயருக்கும்,அடுத்வொரு பெயருக்கும் இடைப்பட்ட வெளிகளுக்குள் என் சுயம் கருக்கொண்டிருக்க நான் வெளிக் கிளம்பியது காலத்தின் கோலமானதாகவே பட்டது.


அப்பனுக்கு ஆடடிச்சுக் குத்தரிசியில் சோறுகாச்சி,மேற்சோறை அள்ளிப் போட்டவளை அம்மணமாய்ப் பார்த்ததாய் அத்தார் அதட்டியபோது,அடங்கிப்போவது நான் என்பதாக அவன் உணராதிருப்பினும்,நோக்கத்திலொரு நீண்ட கனவிருந்தது.எனது கூட்டைப் பிய்த்தெறிவதும்,பேருக்கு முன்னாள் அவலத்தைக்காவுவது என்பதாகவும் அவன் போட்ட முடிச்சுகளை அவிழ்த்துப் பார்ப்பதில் அம்மாவைக் கருவிலிருந்தே கருவறுப்பதாகப் பட்டது!



அகதிக் காண்டம் தொடர்வது...


தேசத்தின் குறிப்பை எழுதுவதில் பலரின்று பிரபலமானார்கள்.பாதியோ மீதியோ, படைப்பாக்குவதில் "பன்னைக்காரன் பொண்டில் பணியக்கிடந்து செத்தாள்"என்றமாதிரி, செவிட்டு இராஜனுக்குமொரு சிங்காரக் கனவு குடைந்தபோது,கை கொடுத்த காலம்தாம் கடைதெடுத்த வம்புத் தனங்களாகிக் கிடந்தது.முற்றிலுமொரு மொன்னைத்தனமான முயற்சியில் கால் வைப்பது "தனக்கெடா வேலை தன் பிடரிக்குச் சேதம்"என்றடிக்கடிக் குறித்துரைத்த சபாரெட்னம் வாத்தியை நான் கிழங்கர் சபாரெத்தினமென்று கரம்பொன் சண்முகநாத வித்தியாசாலைக்குள் வைத்துத் திட்டியதும்,அவரென்ர "இயக்க ஸ்தானத்தில்" கண்டும் காணாததாய் இருந்தபோது நடுத்தெருவில் தலை தெறிக்க நான் "உசக்கப் போய்" ஓவராய் கண்டவர் நிண்டவரெல்லாரையும் கடிச்சுக் குதறியவொரு பொழுதில் கால்முறியுமொரு காலத்தை அருளாநந்தசிவம் மாஸ்டரின் கடைப்பொடி"இது எங்கட இயக்கத்தால் கட்டாயம் நடக்கும் மச்சான்.கெதியாய் மாறு"எண்டபோது சன்னதிக்கு ஆப்பு வைத்தால் எனக்கென்ன!தலை தப்பினது தம்பிரான் புண்ணியமென சித்தப்பாவின் முகத்துக்கு முன்னால் நீட்டிய கரம் "பலதைப்பார்த்த அநுபவத்தை" அவருக்குக் கற்றுக் கொடுத்தபோது நானும் ஜேர்மனியை வந்தடைந்தபோது, எனக்கு அவமானமாக இருந்தது,"தோழமைக்கு இதுவா இலக்கணமென்பது"எப்படியோ சன்னதியைக் குத்திய கத்தி குடலை வெளியில் இழுத்தெறிந்த போது, நாரந்தனை மொட்டை வேளாளரின் மகிழ்ச்சியாய் இருந்ததும்- எனக்கு உயிராபத்திலிருந்து விடுதலைக்கு வித்திட்டதாகப்பட்டது.


தொடைகளுக்கு நடுவில் கோவணம் கட்ட மறுத்தபோது ஜேர்மனியின் "அழகு" நடுச் சாமத்திலும் அந்தமாதிரியாய் இருந்திருந்து அநுபவமாகியது.அப்போதெல்லாம் அக்கம் பக்கதைப் பார்த்து, அப்பனின்ர தங்கச்சி மோளை"தந்தனத் தந்தனத் தாளம் வரும் சந்தன..."எண்ட பாட்டோடு பிழிந்தெடுத்த சில பொழுதுகளின் அவஸ்த்தை வந்தே தொலைந்தது.ஆப்பு வைத்த மாதிரி "அகதி"நாமம் சூடிக் கொண்ட பொழுதுகளுக்குள் என்னென்ன ஆறுதலை மாற்றாக்க முடியுமோ அதையெல்லாம் தேடியபோது,இடையில் வந்தவொரு பீடையைக் இன்றுவரை மறப்பதற்கில்லை.


வைத்தியனிடம் போய் "எய்ட்ஸ்"பரிசோதனையில் "நெக்கடீவ்"என்ற அத்தாட்சிப் படிப்பில் நிம்மதி வந்தாலும்,சில நேரத்தில் மனதில் நிம்மதி குலைகிற பொழுதுகளாகவும் சில "குறிப்புகள்"உடலிலும் உள்ளத்திலும் தோன்றி மறையும்போதுதாம் அத்தானைப் பரிகாசிப்பது வெறும் தேவையில்லாதவொரு சமாச்சாரம்.கிராமத்தின் எல்லைகள் பற்பல மறைப்புகளில் கிழிபட்டே கிடக்கிறதென்பதையும்,அதன் மறைப்புக்குள் வேறொரு உலகம் முருகன் கோவில் இரவு உடுக்கை அடியில் அமிழ்ந்து போனதையும் நான் பல பொழுதுகளில் அறிந்திருந்தேன்.இந்தச் சூழலில் சாமி ஆடுபவனின் தொடைகளின் நடுவில் ஆடிய பாம்பு எத்தனை குமரிகளுக்குப் பேய் ஓட்டினதை சீதனத்தில் உரைத்துப் பார்த்தையும் நினைத்தபோதுதாம் என் பிணக்கைத் தீர்க்காத மனதின் "துரத்தல்களை"சிக்மன் ப்பொரைட்டின் ஒளியில் கழுவிவிடுவதில் நான் கஞ்சல்தனம் காட்டவில்லை!


கருச்சுமந்தவளின் கனவு:


அன்று,"தம்பி பசிக்குக் காரணம் கேட்காமல் காசை அனுப்பிவை"எண்டவளை "பெத்தகையோடு பேதியைக்கண்டபோதும் பெருஞ் சுமையாய் எண்ணாத தாயென்று"நான் உணர்ந்தவொரு பொழுது அரிதாகவே பட்டது!காசென்ற குரலிலும்,எழுத்திலும் கடுப்பெடுத்து உடைபடும் என் "புடைப்புகள்"கழண்டலையும் கோவணத்தில் சுழன்றுகொண்டபோது,ஆத்தையின் அடுப்பில் பூனைக்குச் சுகமாய் தூக்கம் வந்தது.


இப்போதெல்லாம் காடாத்திக் கருமாரி செய்த அநுபவத்தோடு அம்மாவுக்கு உணர்வு மரத்துவிட்டிருக்கு!"ஆத்தைக்கு ஒரு பேத்தை" போட்டியாகி "எங்களை நடுத்தெருவில் நிப்பாட்டிப்போட்டுப் போமன்"என்ற ஓலத்தை நான் காதுகொடுத்துக் கேட்டதால் நடுரோட்டில் மருந்தோடு அலைய, ஒருவுயிர் அவாவுற்றழிந்தே போனது.ஒரே கருப்பையில் வெவ்வேறு பொழுதுகளில் கிடந்த கருவூலம் குலைந்த பொழுதுகளை அம்மா நொந்தெழுதியும்,அம்மாவின் கனவுகளைக் கரடியின்ர சொறியாகவே கடுப்பாக்கிக் கடிதத்தொடர்பே ஆகாதென்பதாகக் காரணம் கண்டு,"கனவோடு காலத்தைக் காண்"அம்மாவுக்கு இந்தப் பொறுப்பை ஒப்படைத்ததாக நானும் எண்ணுவதில் என்ன சூத்திரமிருக்கு என்ற ஆதங்கம் வந்து துலைந்தபோதெல்லாம் நான் அப்பனுக்கேற்ற பிள்ளையாக இருக்கிறேன்.


அப்பச் சும்மாவா?


"எங்களுக்கு மூன்று நேரம் உண்ணப் போடத் தன்னைத் தறித்தெறிந்தவனை" அம்மா "ஏச்சுப் போட்டாள்"என்றொரு அடிமன ஊழ்,அகத்திலிருப்பதை மெல்லப் புரிவதில் சிக்கல் வருவதுமாதிரியானவொரு எண்ணத்தை இதுவரை தந்திராதபோது "அம்மாவுக்கு வைத்தேன் வேட்டு" என்று மனம் கத்திக் கொண்டாலும்"மகனே நானுனைக் காவி,நாலுகட்டை தொலைவிலுள்ள வைத்திய சாலைக்கு நாயாய் அலைந்தவள்"என்றொரு குறிப்பை அம்மா எழுதாதவரை அவள் மேன்மையானவொரு ஜீவன் என்பதை எந்தத் தரங்கெட்ட அத்தான்களும் அக்காவின்ர கத கதப்புக்காக "அம்மாக்களை அற்ரேக் பண்ணவதும்" அதையே நேரம் பார்த்து வீரம் பேசுவதுமாக கோவணம் கட்டி நின்றாலும்... நான் கண்ட கதைதாம்!


ஏழு பிள்ளைகள் நல்லதங்காள் கதையில எங்களைக் கட்டிப்போட்டவொரு அம்மா, இப்போதெல்லாம் எந்தக் குறிப்புகளையும் அம்மா என் மனதில் விட்டுவிடுவதில்லை.


"இந்தியாவை அடிச்சுத்தான் இலங்கையைப் பிடிக்க முடியுமென்று"கிராமத்தில் அடிக்கடி "பெரிசுகள்" பேசிக்கொள்வார்கள்.அப்போததெல்லாம் நான் "குஞ்சாமணி பிடித்துப் பெய்த்தெரியாத"(பெரிசுகளின் பார்வையில்)பால்குடி. முளைத்து முன்றிலையெறியாதுபோனாலும் அந்த "இந்தியாவை அடிச்சு... "என்றதின் அர்த்தத்தை இவர்கள் ஏன் கதைக்கிறர்கள் என்று,எனக்குள் ஒரே ஏக்கமிருந்தது.


எங்கட ஊரிலொரு பெரும் பணக்காரியை ஸ்ரீமா என்றொரு "சுட்டல்" பெயரோடு ஊரார் மரியாதை வைத்தழைப்பதுண்டு.அவாவும் ஸ்ரீமா மாதிரியே நல்ல தோற்றமும்,பொன்னிறமும்கூடிய-"தன்னழகையே தான் இரசிக்கும்"சிங்காரி.அவர் கணவர் பாதியில் போய்சேரும்போது வருஷம்1970.அப்போதைய சொத்துமதிப்பு இரண்டு கோடியைத் தொட்டதென்பது என் அத்தாரின் வாயிலிருந்து நான்கேட்டுத் தெரிந்தவுண்மை.கொழும்பில் வியாபார நிறுவனக் கட்டடம் சொந்தமாகவும் அவர்களுக்கிருந்தது.லொறியும்,முப்பத்தியாறு ஸ்ரீயும்கொண்ட இலக்கத்தில் புத்தம் புதிய ரக்ரறும் அவர்களின் பெயரில் ஓடியது."நான் சுண்டுவிரலை அசைச்சால் இப்பவும் பையன்கள் என்ர பின்னால தவழுவான்கள்"என்பார் ஸ்ரீமா.அந்தளவுக்கு அவர் அழகாக இருந்தபோதுதாம் ஸ்ரீமாவின் மோளை லொறிரைவர் ஒரு அதிகாலையில் லொறியோடு கூட்டிக் கொண்டோடியதாகத் தகவல்.அப்போதிருந்து இந்த"இந்தியாவை அடிச்சு இலங்கையைப் பிடித்தல்"பெரும் பிரபல்யமாகப் பேசப்பட்டது.இது நடந்த வருஷம் 1974.அன்றிலிருந்து கிராமத்தில் பலமுறைகள் இந்த"இந்தியாவை அடிச்சு இலங்கையைப் பிடித்தல்கள்"நடந்தேறின.எனது வீட்டிலொரு இந்தியாவை அடித்தே இலங்கையைப் பிடித்தாகப் பலர் பறையக்கேட்டிருக்கிறேன்.அந்தநேரத்தில் எனக்கு இந்தச் சமாச்சாரத்தில் அவ்வளவு நாட்டமிருக்கவில்லை.பின்னாளில்தாம் அதுள் பொதிந்திருந்த அர்த்தம் பிடிபட்டது!அந்த நாள்முதல் நான் பல இந்தியாவைத் தேடியலைந்தபோது எனக்கு எந்த இந்தியாவும் வசப்படவில்லை.என்னவொரு பிறப்பு என்ற ஆதங்கம் தலையைக்குடைந்தபோது அப்பரின் தங்கை மகளே "பழம் நழுவிப் பாலில் விழுந்த" கதையாய் என் பக்கம் விழுந்தாள்.பாடத்துக்குக் கட்டுரை எழுதித் தரும்படி வந்தவளைப் பிழிந்தெடுக்கும் காலமொன்றில் நான் பெரியவனானபோது வருஷம் 1977.இந்தக்காலத்தில்தாம்"குடியரசு கொடிய அரசு"எண்ட சுலோகங்களை நானும் சிலரும் பாடசாலைச் சுவர்களில் தாரினால் எழுதித்திருந்தோம்.அப்போதெல்லாம் திருவாளர் க.பொ:இரத்தினம் என் ஆசான்!அவரது தமிழின் வீச்சிலும் அமிழ்ந்தபோன நான் "மதிமுக இராசாவே மதியிழந்து போகாதே"என்ற கோவையாரின் வீர வசனத்தைப் பற்றிப் பெருமிதம் கண்டு க.பொ.விடம் விளக்கம் கேட்டபோது"வாடா டேய் வந்து இந்த மட்டையைப் பிடி"என்று பனைமட்டையைக் கையிற் தந்தபோது அவரது வீட்டுவேலி ஒருநாளில் பல அடி முன்னேறியதுதாம் மிச்சம்.அதற்குப் பின்பு அவரைக்காணும்போதெல்லாம் சயிக்கள் ஐம்பது மையில் வேகத்தில் கடந்துவிடும்.


"சித்திரைக்குத் தம்பி வருஷம் வருமடி,அம்மாவுக்குப் புதுச்சீலையும் கழுத்துக்குச் சங்கிலியும்,கைக்குக் காப்பும் வேண்டித் தாடி!"என்ற அம்மாவின் கனவுக்கு நான் போட்டேன் ஆப்பு".நீ கெட்டகேட்டுக்கு இதுவொன்றும் குறைச்சலில்லை" என்றும்,ஊரில சனங்கள் படும்பாட்டில் நீ எல்லாம் எங்கே நிற்கிறாய் எண்ட போடலில் அப்பருக்கு நான் தப்பாத பிள்ளையாக இருக்கவேண்டுமென்ற கனவும்,அவரைப் பேய்க்காட்டிய உனக்கு நான் ஏன் உதவ?என்ற கோரமும் எனக்குள் ஓடித்திரிந்தது.இப்பவும் அந்தக் கோரம் போடும் கோலம் கொஞ்ச நஞ்சமில்லை!இதைத்தான் அத்தான் எதிர்பார்த்தானென்றால் இல்லையென்பதே என்பதில்.அவன் போட்ட முடிச்சு வேறானது.அதை நான் உடைப்பதில் எப்பவும் பெரியாரைத் துணைக்கழைத்து என்ர கூட்டைக் காப்பத்திப் போடுவேன்."பெரியாரின் கூற்றுப்படி எனது கூலிக்காறி காரியமாற்றினால் கதை கந்திரிதாம்"எண்ட எண்ணத்தில் மிதந்தபோது நான் "ஐந்தொகையை முடிக்கும் காலம் நெருங்கியது"இந்தவொரு காலத்தை இவ்வளவு விரைவில் நெருங்கியதில் தெம்பின்றிப்போன "ஆத்தையின்மீதான அகோர வாசிப்பு" அர்த்மற்றதாய் மனதில் பிராண்டியபோது, நான் ஏதோவொரு வைத்தியரின் முன் நிணநீர் முடிச்சின் வீக்கத்தில் மூட்டுகளின் வலியையும்,கால்களால் நடக்க முடியாததையும் விளக்கியபடி மௌனமானேன்.


அகதிக் காண்டம் நிறைந்தேக...


"அண்ணே அந்த ஊதுபத்தியைத் தலைமாட்டில் கொளுத்தி வையுங்கோ,இராஜன் அண்ணர் நாட்டுக்காகப் போராடினவர் இப்படி அநாதையாகக் கிடக்கிறாரே!ஐயருமில்லை,இவங்கட சுவாமிமாருமில்லை.இறுதியில் அகதிகளின் பிரேதங்களுக்கு எந்தக் கிரியையுமில்லை.அட ஆரப்பா,தேவாரத்தையாவது பாடித் துலையுங்கோவன்." மரண இறுதி நிகழ்வில் என்னோடு அடிக்கடி ஊஞ்சலாடிய அருமையென்ற அம்மான் கத்திக் கொண்டிருந்தான்.எப்பவெல்லாம் பேசக்கூடாதோ அப்போதெல்லாம் இவன் மட்டுமே பேசுவான்.இப்படி இவன் பேசுவதால்தாம் சில கனத்த நிகழ்வுகள் தடையின்றித் தாமதமின்றி நடக்கிறதென்பதம் உண்மை.


எனக்குள் ஓடித்திரிந்த ஒரு பூச்சி ஓய்வெடுப்பதற்குத் தயாரானபோது நான் கடைந்தேறும் காலத்தை நெருங்காதிருப்பதை எனது பொன்னான மனத்தின் கிளர்ச்சியில் ஊகித்தறிவது பெரும் பிரச்சனையாக இருந்ததில்லை!ஒன்று சண்டையில் செத்திருக்கவேணும்.அது கைகூடாது போனதால் நான்"........."யில் சாவதற்குத் தயாரானபோது நடுத்தெருவில்"அரைகுறை பிய்த்தெறிந்த ஆடையில் பிஞ்சு உடல்களைப்பார்த்து" நாவைத் தொங்கப்போட்டு ஊற்றிய வீணியோடு கரையொதுங்கிய தாய்லாந்துக்காரிக்கு"கண்ணே கலைமானே"என்ற ஜேசுராசாவின் குரல் பிடித்திருந்தது.அந்தப் பாடலை எனக்காகவும் அவள் ஒலியைக் குறைத்துப் போட்டுவிட்டு உடைகளைக் களைந்தபோது, சொர்க்கம் இதுதாம் எனவெண்ணியபோது சுகத்தின் எல்லைக்கு இன்னும் தூரமதிகமென நான் எண்ணியதும், அவள் ரகுமானின் "தையைத் தையைத்..."பாடலை ஒலிக்க வைத்தபோது"இதுவெப்படிக் கிடைத்ததென"அவளைக் கொஞ்சிக்கொண்டேன்,உன் நாட்டான் ஒருவன் தந்ததென்றாள்."நீ என்ன பாடலைப் பரிசாய்த் தருவாய்?"என்றபோது நான் அடுத்த நாள் ஊஞ்சல் பாட்டில் ரகுமான்போட்ட உடற்பரிசங்களை அவளின் செவிக்கு விருந்தூட்டியபடி எனது மார்ப்புக்குள் அவளைத் திணித்தபோது நான் பட்ட பரவசம் நேற்றைய எனது பிணத்தின்(கனவுதாம்) ஒரத்தில் சத்தம்போட்ட அம்மான் அருமையின் வலுக்குரலால் அழிந்தே போனது.



ப.வி.ஸ்ரீரங்கன்

அழிவே இறுதியில் மெய்மையைக் காக்கிறது

நான் அழிவதை'நான்' தீர்மானிக்க...


எந்தப் பதிலுமின்றி ஓரிரு தினங்களாக நான் மௌனித்திருந்தேன்.காலத்தில் வாழ்கிறேனாவென்பதும்,வரலாற்றின் வெளியில் என் பாத்திரமென்னவென்பதும்,எனக்குக் குழப்பமானதாகவே இருக்கிறது.இதுதாம் ஒரு நிலை.புரிந்துகொள்வதும்-புரிவதிலும்,புரியப்படாததற்கும் முந்திய நிலை முழுமைத்துவ முனகலாகவும்,அறிவின்மீதான-அறிதலின்மீதான நெருக்கடியாகவும் இருந்திருக்கிறது.நான் இருக்கிறேன்.ஆனால் இல்லாதிருப்பதால் மட்டுமே இந்த 'நான்'இருந்தாகவேண்டும்.இது சிக்கலை மீளவும் தந்துகொண்டேயிருக்கிறது.முழுவதுமான மனிதத்துவ மாட்சிமைகள் மனத்தின் வெளியிலுலாவும் மென்மைமறுத்த உணர்வுக்கோர்வையில் வேறொரு மனிதனைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்க ,இந்த 'நான்'இருக்கிறேன்.முடியுந்தறுவாயில் 'நான்'எனக்கு முன் அழிந்து-என் இருப்பை அசைத்திடும்போதும் 'நான்' இருந்தபடியேதாம்.


எனக்குள் நான் எடுக்கும் சுதந்திரத்துக்கான முடிவானது எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்குமா?வாழ்வின் தேர்வுகளுக்கும் சுதந்திரத்துக்குமான 'வாழ்வுக் கடைந்தேற்றத்துக்கும்' தொடுப்புத்தாம் என்ன?சரியாகச் சொன்னால் மனிதவாழ்வானது மனிதரைக் கடந்துவிட்டது.காவுகொள்ளத்தக்க கனவுகளுக்கும்,வளமற்ற விருப்புக்களுக்கும்'தோற்றுவாய்'வேறொரு வகையினில் என்னுள்ளே தோன்றி மறையும்போது எனது இருப்பினது அத்தியாவசியமற்ற மனிதத் தேர்வானது என்னை முழுமையாக விழுங்கி விடுகிறது.எனக்கு முன் இருப்பதெல்லாம் திமிர்த்தனங்களின் கூட்டுக் கலைவைதாம்.இது என் மனதைக் காவுகொள்வதால் 'நான்' அழிந்து போவதும்-முகிழ்ப்பதும் வரலாற்று மாய்மாலம்.


அறிவின் பிரச்சனையே தற்கொலைதாம்!


எதைப்பற்றிக்கொண்டு எழுந்து நிற்பது.திமிர்த்தனமான-எதேர்ச்சையான இந்தப் பேரண்டம் எந்த உறுதிப்பாட்டைத் தந்தது- இந்த ஊனப்பிறவிக்கு தந்துகொண்டது? தயங்கிக்கொண்ட மனமும்,தவித்துத் திரியும் உணர்வுத் தொடர்ச்சியும் வரலாற்றோட்டத்தில் எந்தப் பாத்திரத்தை எய்கிறது? நிலவுகின்ற மலட்டுத்தனமான இந்தப் படுபயங்கர'விருப்புறுதி' வெறும் பிம்பத்தை மட்டும் வாழ்வாக்கிவிட்டால் -சுதந்திரமென்பது மரணமா?சடுதியில் முடிகின்ற பயணத் தொடர்ச்சி பண்டுதொட்டு நிலவுகின்ற ஊழீயாகும்போது 'நான்'என்பதன் சுட்டலுக்கு ,இருப்புண்டா-பொருளுண்டா?


என்னை உருவாக்க 'நான்'துணையின்றி முடிந்திருக்காது.என்னுள் அமுங்கும் 'நானை' நானே தீர்மானிப்பதால் உணர்வுத் தடத்தில் புதியவொரு உலகை நானே தயார்படுத்துகிறேன்.இதனால் எனக்குச் சிக்கல்கள் வருவதில் என் இருப்பைக் கவனிக்க 'நான்' வருகிறேன்.இதுவே என்னை அழிப்பதிலும் 'நான்'எனச் செயற்படுகிறது.


இந்தப் புலத்தை எனக்காகச் செய்வதில் என் சுதந்திரமே இயங்கிக் கொள்கிறது.இதன்போது உலகத்தை நான் படைக்கிறேன்.அல்லது தூண்டப் படுகிறேன்!எப்படி உருவாக்கிக் கொண்டாலும் எனக்குமுன் விரிந்துகிடக்கும் அண்டம் வரலாற்றுத் தொடர்ச்சியாக ,என்னைக் கட்டிப்போட்டுள்ளது.பொருள் வாழ்வைப் புலப்படுத்தும்போது 'நான்' நேர்மாறாகக் காரியஞ் செய்கிறதே,இதுதாம் என்னை உருப்படவிடுகிறதில்லை.


புறவுலகில் ஒரு அங்கமாக உலாவரும் எனக்குச் சுதந்திரமுண்டா?


சூழ்நிலைகளால் உண்டாக்கப்படும் பொருளுலகமும்,அதன் சமூகக்காரணிகளும் தீர்மானிக்கின்ற உணர்வுக்கூட்டத்தால் 'நான்'முடிவற்ற சூறாவளியாகிறது.இந்தப் பெருநெருக்குதலில் எஞ்சிக்கொள்வதற்கென்றொரு அனுமானம் புலப்படாதபோது,எனக்கு-நான் தடை.இதிலிருந்து மீள்வதற்கு எனக்குத் தெரிந்த பாதை-என்னளவில் தற்கொலைதாம்.இது எனது சுயத்தின் மதிப்பீடாக இருப்பதில்லை!மாறாக என்னைத் தூண்டுகிற பொருள் வாழ்வும்,புறநிலைகளின் உந்துதலுமே -என்னைத் தீர்மானித்துக்கொள்ள 'நான்'பலவீனமாக இருந்திருக்கிறேன்.


எனக்கு இதன் தாக்கத்தால் விமோசனமில்லை!ஆகையினால் எனது சாரமாக 'நான்' வருவதில் சிக்கல்.நான் அற்ற 'நான்' பொய்யன்.பொய்யானது மெய்மையை அழிக்கிறது.அழிவே இறுதியில் மெய்மையைக் காக்கிறது.


இன்னொரு விதத்தில் கூறினால் மனிதர்களுக்கு(எனக்கு) முந்தியது எதுவுமேயில்லை.வெறுமையேதாம் எனக்குமுன் கருத்தரித்தது.எனது இருப்பே எனக்கு அடிப்டையாக வருவதும்,அதையே 'நான்' அடிப்படையில்லாத அடிப்படையாக்கி விடுகிறேன்.இந்த மகாகெட்டித்தனம் எனக்கு வழிகாட்டாது.நிச்சியமாக என்னைப் படுகுழியில் தள்ளிவிடப்போகுமிந்த 'நான்' சுதந்திரத்தைப் பயன் படுத்தமாட்டேன்.ஏனெனில் அது என்னிடத்தில் இல்லை.எனவே எனக்கு -நான் அடிமைதாம்.இந்த இழி வாழ்வு ஏற்புடையதில்லை.நான் அழிவதை'நான்' தீர்மானிக்க மௌனித்திருங்கள் மற்றைய 'நான்கள்'.


ப.வி.ஸ்ரீரங்கன்


Sonntag, Dezember 16, 2007

கேசல்(Silvio Gesell): சுதந்திர பணம் வட்டியற்ற நிதி

தேசியப் பொருளாதாரம்:


பைத்தியக்காரத்தனமும்,குழப்பமும்,இன்னுமிது ஆரம்ப நிலையிலேயே உருவகிக்கிறது.


பொருளாதாரக் காரணிகள்-சூழ்நிலைகள்,சுமைகள்-அதிர்வுகள் ஒரு சுவையான சம்பவங்களாக மாறிப்போகிறது.இது குறித்த அறிவானது பலரிடமும் ஆரம்ப நிலையைவிட மோசமாகவே காணக்கிடக்கிறது. இதனால் எந்த உற்பத்திப் பொறிமுறையானது மானுடர்களுக்குப் பொருத்தமானது-எதுதாம் பலமானதாகவும்,இறுக்கமாகவும்,தளராதாகவும் இருக்கும்?எந்தப் உற்பத்திப்பொறிமுறை அமைதியையும் மகிழ்வையும்-சீரையும்,சிறப்பையும்-நியாயத்தையும் அளிக்கும்? ஏதாவது விருப்பத்துக்குரிய பொருளாதாரக் கட்டமைப்பு உலகிலுண்டா,அல்லது மீள மீளக் கதையாடும்-எதிர்ப்பிடும் தத்துவார்த்தங்கள்,பொருளாதாரக் கண்ணிகள் ஒன்றையொன்று முட்டிமோதிக்கொண்டு ஒரு நாகரீகப் போக்கைக் கடைப்பிடிக்க உதவுகிறதா?

பொருளியலாளர்கள் இது குறித்து எதைக்கொண்டிருந்தார்கள்?

பொருளாதாரப் பாடமானது உலகில் மிக,மிகப் பழமையானதல்ல. இயற்பில்,மருத்துவம்,கணிதத்துக்கு உள்ளதுபோன்று பழமையான அறிவுப்பரப்பு பொருளியல் அறிவுக்கு இல்லை.இது வளரும் நிலையிலேயே இன்றும் இருக்கிறது.இப்படிக் கூறாதிருந்தால் சமூகத்தின் வளர்ச்சிக்கட்டம் முடிவடைந்திருக்கணும்.இஃது சாத்தியமின்றியிருந்தால் வளரும் தன்மையில் பொருளாதாரவாழ்வு இருக்கிறது.

பொருளாதாரம் வளர்ந்த நிலையென்பது தனியார் தத்தமது பண இருப்பைக் கட்டடங்களாகக் கொண்டிருப்பதால் ஏற்படுவதல்ல.மாறாக மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவுசெய்யவும்,உழைப்பு நேரம்குன்றிய பொழுதில் அனைத்தையும் பெறும் இயங்கு நிலையே வளர்ச்சி நிலையாகும்.இங்கு மக்கள் தேர்வானது சுதந்திரமான வாழ்வாகவும்,சமாதானமான உற்பத்தியுமாகவிருக்கும்.

தேசியப் பொருளாதாரம்-பொருளாதாரம் எனும் வார்த்தையானது முதன்முதலில் 1776 ஆம் ஆண்டளவிலேயே உருவாகிறது.இந்தக்காலக்கட்டமானது கொலனித்துவத்தின் உச்சக்கட்டமாகும்.உலகின் அனைத்து வளங்களையும் பிரிடிஸ் ஏகாதிபத்தியம் சுரண்டிக் கொண்டிருந்த காலத்தில் தேசியப் பொருளாதாரம் குறித்த கருத்தமைவானது இந்த ஆளும் கும்பலுக்கு அவசியமாகவிருந்தது.இதை உந்தித் தள்ளிய மிகையான செல்வக் குவிப்பானது அதன் இருத்தலுக்கும்,பாதுகாப்பக்கும் அவசியமான உற்பத்திப் பொறிமுறைகளைவேண்டிக் கொண்டது.அன்றைய தேவையைக் குறித்த சிந்தனையானது'தேசியச் செல்வத்தின் காரணியும் இயற்கைக்கூடான ஆய்வும்'எனும் தலைப்பில் ஆடம் சிமித்தை(1723-1790) சிந்திக்கத்தூண்டியது.1776 வருடம் மேற்காணும் தலைப்பில் வெளியிட்ட அவரது பொருளியல் நூலானது இன்றுவரையும் முதலாளியத்தின் பாடத்திட்டத்தில் முடிசூடா மன்னனாக இருக்கிறது. ஆடாம் சிமித்தும் அவரது முன்னோர்களின் எண்ணங்களும் 'சுதந்திரப் பொருளாதார அரசியலை'வலியுறுத்துகிறது.இது கண்டம்விட்டுக் கண்டத்தைச் சுரண்ட தனிநபர்களைத் திரட்டும் அரசியலைப் பரிந்துரைக்கிறது.தனிப்பட்ட ஏகாதிபத்திய முதலாளி தனது அடியாட்படையுடன் உலகத்தைக் கொள்ளையிட இது கோரிக்கைவிடுகிறது.இதன் அர்த்தமானது'சுதந்திர வர்த்தகம்','போட்டி','தனித்துவ நிறுவனங்கள்',தனியார் செல்வம்'ஆகியவற்றைப் பலப்படுத்துவதும்-பெருக்கிக் கொள்வதாகும்.இதனை அரசு ஏற்கும் பட்சத்தில் அனைவருக்கும் மகிழ்வான வாழ்வுகிட்டுமென்பது ஆடமின் பொய்யுரையாகும்.இதன்படி உலகம் போரையும் அதீதசுரண்டலையும் இன்றுவரை கடைப்பிடிக்கின்றது.இதற்கு 'மான்சிஸ்டர் லிபிரால்கள்'19ஆம் நூற்றாண்டில் மிகக் கேவலமான சமூகச்சமமின்மையையும்,அடிமைத்தனத்தையும் தந்து நிரூபித்தார்கள். அப்போ இதன் மாற்று யாது?

ஆடம் சிமித்தும்,கார்ல் மார்க்சும்:

மூலதனத்தின் தனியுரிமைக்கும்,எதுவமற்ற தொழிலாளர்களுக்குமான காரணியை ஆடம் சிமித்துக்கு நேரெதிராகக் கண்டவர் கார்ல் மார்க்ஸ்(1818-1883)'கூலியானது செய்த வேலைக்கான பெறுமானமல்ல,மாறாகத் தொழிலாளி அரைவயிற்றை நிரப்பிக் கொண்டு மறுநாள் வேலைக்கு வருவதற்கான-உயிர்ப்புக்கிடும் பிச்சை'என்றார்.இதன்மூலம் முதலாளி தனக்குச் சொந்மில்லாத-தொழிலாளியின் உழைப்பைச் சுரண்டி மிகையான உபரியை செல்வமாக்கிறான் என்ற விஞ்ஞானத்தைக் கண்டடைந்தார்.இதனால் சமூகத்தில் ஏற்றதாழ்வும்,வர்க்கப்பிரிவினையும் நிதர்சனமானது.இது காலாகாலத்துக்கும் நீடித்தபடியே வர்க்கச் சண்டையைக் கொண்டு மக்களையும்,உலகத்தையும் நாசமாக்கும்.எனவே பாட்டாளிய வர்க்கமானது பலாத்தகாரமாக தனியுடமை முறைமையைத் தூக்கியெறிந்துவிட்டு,உற்பத்திச் சக்திகளை பொதுவுடமையாக்கியாகவேண்டும்.இதன்மூலம் வர்க்கபேதமற்ற மனித வாழ்வை எய்திட முடியும்.மார்க்சின் கருத்தானது இன்றுவரையும் எந்தக் கொம்பனாலும் முறியடிக்க முடியாத விஞ்ஞானமாகும்.
மார்க்சும்,ஆடம் சிமித்தும் வெவ்வேறான சமுதாயத்தையும்-பொருளாதார உறவுகளையும், முறைமைகளையும் கண்டடைந்தபோது-இவர்களுக்கருகில்(இடையில்?) உருவாக்கப்பட்டதுதாம் சில்வியோ கேசலின்(Sivio GESELL 1862-1930)நியாயப் பொருளியலும்(Die Natuerliche Wirtschafts Ordnung இயற்கையான பொருளியல் ஓழுங்கு),ஜோண் மைனார்ட் கெய்னெஸ்டின்(John Maynard Keynes 1883-1946) 'பற்றாக்குறை கிடப்பு'திட்டவாக்கமாகும்.

கேசலும் கேய்னெஸ்சும்:

கேசலின் Silvio Gesell (1862 - 1930)பொருளாதாரவிதிகள் இன்று மிகப் பரிச்சியமான எடுகோளாக மாற்றப்பட்ட நிலையிற்றாம் நம்மில் பலர் மாக்சியத்தைக் கெட்டிதட்டிய தத்துவமாகவும்,காலப் பொருத்தமற்ற கற்பனாவாத-உடோப்பிசமெனச் சொல்கிறார்கள்.இவர்களிடம் நியாயமிருப்பதற்கான எந்தத் தரவுமில்லை.ஏனெனில் இவர்களின் ஆசான் கேசலிடமும்,கெய்னெஸ்சிடமும் இந்த விவகாரம் குறித்த விஞ்ஞானமில்லை.

சில்வியோ கேசலின் பிரச்சனை என்னவென்றால்,சமூகத்தின் வறுமைக்கு-ஏற்றதாழ்வுக்கு மார்க்சியக் காரணிகளான 'உற்பத்திச் சக்திகளின் தனியுடமை' காரணமில்லை என்பதே.இஃது திட்டமிட்ட தவறென்பதை கேசல் முன்வைத்தபோதே அவர் தவறுசெய்வதாக அன்றே பல ஆய்வாளர்கள் சுட்டியும்,இதை இன்றுவரை சந்தைப்பொருளாதார வாதிகள் அழுங்குப் பிடியாய்ப் பிடித்துள்ளார்கள்.சமூகத்தின் வறுமைக்கு'நிலத்தின் தனியுடமையும்'பணத்தின் சழற்சியுமே' காரணமாகக் கேசல் முன்மொழிகிறார்.பணம் தனிநபர்களை செல்வந்தர்களாக்கும்போது ,அப்பணமானது கருப்புப் பணமாக நிலவுரிமையைக் கைப்பற்றும்.இஃது எப்பவோ பதுக்கப்பட்டு,பணமுடக்கத்தைச் செய்து- பின் வெளிவரும்போது பொருளாதாரச் சுற்றோட்டத்தை தேங்க வைக்கிறது,இதனால் மீளவும் பற்றாக் குறையானது கடன் பளுவைச் செய்யத்தூண்டும்.கடனின் வட்டியும்-வட்டிக்குவட்டியும் பெரும்பாலான உற்பத்திச் செலவை உயர்த்தும்.இதன்போது நிகழும் தாக்கமானது சமூக ஏற்றதாழ்வையும்,வறுமையையும் ஏற்படுத்துவதாகவும் கேசல் முன்வைக்கிறார்.சமூகவுற்பத்தி தாழ்ந்த நிலையிலும், அரச கடன் பளு உயர்ந்தும் சமுதாயத்தை வறுமைக்குள் தள்ளுவதாகக் கூறினார்.இங்கே அவர் உற்பத்திச் சக்திகளின் தனியுடமையானது உபரியை ஏற்படுத்துவதை திட்டமிட்டு மறுத்தார். பொருளாதாரத்தின் அதீத வளர்ச்சியானது சமூக உற்பத்தியைவிட பன்மடங்கு உயரும்போது கூடிவளரும் பங்கீடானது.இது கீழிருந்து(தொழிலாளர்களிடமிருந்து) மேல்நோக்கி(உடமையாளர்களுக்கு) பங்கீட்டைச் செய்வதாகவும்,இதன் வேகம் அதிகமாகும்போது நிலமையை அரசு கட்டுப்படுத்த முடியாததாகவும் முன்மொழியப் படுகிறது.
இதைக் காரணமாகக்கொண்டு கேசல் 'சுதந்திர பணம்,வட்டியற்ற நிதி'(Umlaufgesichertes Geld – Idee und Rationalisierung)பாதுகாப்பான பணச் சுற்றோட்டம் மற்றும் எண்ணம்-நியாயத்தன்மை) என்னும் மாய மானைத் துணைக்கழைக்கின்றார்.இதை இன்றுவரை முதலாளிகள் செய்யவுமில்லை.நிலவுரிமையை அரசிடம் கையளிக்கவுமில்லை.அந்தோ கேசல் மரணப்படுக்கையில்.மயிலே,மயிலே இறகிடுவாயா என்பதே கேசலின் நிலைமை.கேசலின் மொழிவானது 'சுதந்திர நிலம்'மக்களின் சொத்தாக அரசிடமிருந்து வட்டியற்ற குத்தகையாகவும் இருக்கின்றது.கெய்னெஸ் ஆடம் சிமித்தைப் பின் பற்றும் மனிதர்.இவரின் திட்டத்தை செயற்படுத்தவிரும்பிய மூலதனவாதிகள் இன்று போரினினூடு ஜனநாயகம் பேசுவதில் வல்லவர்களானார்கள். அதாவது பொருளாதாரச் சுற்றோட்டத்தில் அரசு சமூக உற்பத்திகளை-அரச ஒப்பந்தங்களை தனியாரிடம் கையளித்து,உற்பத்தியாளருக்கு வரிச் சலுகை செய்யும்போது பொருட்களின் விலை குறைந்து நுகர்வாண்மை பெருகுமென்பது கெய்னெசின் கூற்று.இன்று நம்முன் விரிந்துகிடக்கும் தவறுகளை இவர் பெயரால் சொல்லித்தப்ப பொருளியலாளர் முனைகிறார்கள்.


இருபதாம் நூற்றாண்டின் இறுதியரைப்பகுதிபூராகவும் கேய்னிசம்(Keynesianimus) பொருளாதாரத்திலும் அரசியலிலும் மாபெரும் செல்வாக்குச் செலுத்திய பொருளாதாரத் தத்துவமாகும்.கடன் நிதிமூலதனத்தினால் நிதியிட்டுக்கொள்ளப்பட்ட அரசநிதிப் பொறிமுறையானது மேற்குலகப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தித் தெம்பிட்டது.ஜேர்மனி இந்தப் பொறிமுறையை ஐம்பதுகளில் அச்சொட்டாகக் கடைப்பிடித்தது.இதன் தாக்கம் இன்று பெரும் அரச கடன் சுமையாக இருக்குமென அன்றைய கேய்னிசின் விசிறிகள் கனவும் கண்டிருக்கவில்லை.ஆரம்பத்தில்பொருளாதார வளர்ச்சியும்,சமூக அமைதியும் இதன்மூலம் கிட்டியதுண்மை.இதை நீண்டகால நோக்கில் பெரும் வருவாய்யாக்கிக்கொண்ட பெருமுதலாளிகள் வர்க்கம் வங்கிகளை இடைத் தரகர்களாக்கிக் கொண்டு அரசையும்,மக்களையும் ஒட்டச் சுரண்டிக் கொழுத்தது.இதன் தாக்கத்தால் இன்றிந்தக்காரியத்தை மூடிமறைக்க அரசும்,அரசிலாளர்களும் பெரும் பிரயத்தனப்பட்டு மக்களைத் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்தப் பொறிமுறையானதோ மேற்குலகப் பொருளாதாரத்தைப் படுகுழியில் தள்ளிய அநுபவத்தைப் பாடமாக்கிய உலக வங்கியானது இலத்தீன் அமெரிக்க-ஆபிரிக்க,இந்தியத் துணைக்கண்டத்துக்கு இந்தப் பொறிமுறைமூலம் கடன் நிதிமூலதனத்தைக் கொடுத்துத் தனது வளத்தைப் பெருக்கி, தன்பின்னால் ஒழிந்திருக்கும் முகமூடித்திரடர்களுக்குப் பெரும் இலாபத்தை அள்ளிக் கொடுத்தபோது மேற்கூறிய நாடுகளும் திவாலாகி, அந்தந்த நாட்டுக் குடிகள் பட்டுணிச்சாவை எதிர்கொள்கின்ற பரிதாப நிலையை நாமின்று காண்கிறோம்.

சுதந்திரப்(நியாய) பொருளாதார முயற்சி ஆரபத்திலேயே திவால்:

மேற்கூறிய நான்கு பொருளாதாரத் தத்துவங்களில் லிபிரலிசம்,கேய்னிசம்,மார்சிசமாகவே நான்கும் பொதுமைப்படுகிறது.இதில் மூன்றுமே வௌ;வேறு சூழல்களில் முயற்சித்துத் தோல்வியடைந்துள்ளன.இஃது வரலாறு.இதுள் மார்க்சியப் பொருளாதாரச்'சோஷலிசக்'கட்டுமானம் எங்ஙனம் தோல்வியுற்றதென்பதை நாம் இக்கட்டுரையின் பின் பகுதியில் பார்ப்போம்.முதலில் மற்றவற்றைப்பார்ப்போம்.

லிபிரலிசம் பொருளாதாரத்தில் மேற்குறிப்பிட்டபடி சமூக ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி சமதாயத்தைப் பூர்ச்சுவாக்களாகவும்,பாட்டாளிகளாகவும் பிளந்தெடுத்தது.அளவுமுறையற்ற மூலதனவூக்கத்தால் குவிப்புறுதியும் கடும்கூலி ஏய்ப்பும் தொழிலாள வர்கத்தையின்னும் ஓட்டச் சுரண்டிக் கொள்ளத்தாம் இவர்களால் திட்டமிடமுடிந்ததே தவிர பொருளாதார சுபீட்சத்தையல்ல.இதன் காரணமாகவே கடும் சுரண்டலும் வறுமையும் மக்கள் சமூகத்தில் தலைவிரித்தாடியது.இந்தத் தத்துவத்தின் மகிமையை நிராகரிக்கவிரும்பாத ஆளும் வர்க்கமானது 1980களில் நவ லிபரலிசமாக முழுவுலகையும் வலம் வந்து உலகைத்திவாலாக்கிய வரலாறாக நீண்டுகொள்கிறது.இந்தக் கொடுமையானது மனிதாபிமானமற்ற முறைமைகளில் அரசியலையும்,மனிதவுரிமையையும் புண்படுத்தியது.காலாகாலத்துக்கும் மாறாத வடுவாக மனிதர்களைக் கொல்லும் அணுவாயுதங்களாக இதன் திமிர் வளர்ந்துள்ளது.இப்பரிணாம வளர்வானது எக்காலத்துக்கும் முதலாளிய நலன்களை மையப்படுத்தும் கல்வி,கலை,விஞ்ஞானப் பொறிமுறைகளையெல்லாம் இதன் மையவலுவைக்கூட்டும் ஊடகமாகக் குறுக்கப்பட்டுள்ளது.இத்தகைய செல்நெறியானது அரசியலைப் பூhச்சுவாக்களினது நலன் சார்ந்த அரட்டையரங்கமாகவும்,அவர்களது உரிமைகளை-செல்வங்களைக் காக்கும் அடியாட்படையாகவும் வைத்திருக்கிறது.இந்த முறைமைகளை அரசியற்பொருளாதாரத்தில் அச்சொட்டாகக் கற்றுக் கொடுக்கும் கல்வியானது அதன் வன்மமான சொற்சிலம்பத்தால் மக்களையின்னும் அடிமைப்படுத்தும் கல்வியாளர்களை உற்பத்திசெய்கிறது. இத்தகையவர்களே தமக்கத்தாமே 'குட்டிப் பூர்ச்சுவா'என்று சூட்டுமளவுக்கு இதன் உட்கட்டுமானத்தை உருப்படியாக அறியாத நிலையில,; மார்க்சியர்களைக் கேவலமாகச் சாடும் நிலையையெடுக்கிறார்கள்.

இந்த லிபரலிசம் எப்படி தோல்வியான பொருளாதாரச் சுற்றோட்டத்தைத் தந்ததோ அதே மாதிரித்தாம் கேய்னிசமும் மக்கள் நல அரசியலைப் போலிக்கு முன் மொழிந்தாலும் எதையும் செய்யவலுவற்ற சுரண்டல் மூலதனமாகச் சுருங்கியது.இவர்களது பார்வையில் இப்போது சந்தைப் பொருளாதாரமானது மனித முகத்தோடான சந்தைப் பொருளாதாரத்தை முன் மொழிகிறது.இது அப்பட்டமான பொய்யென்பதற்கு இதன் உற்பத்திப் பொறிமுறையும்,உற்பத்திச் சக்களுக்கும்-உறவுகளுக்குமான உறவே அதை அம்பலப்படுத்துகிறது! உபரியென்பது வெறும் பொருள் விற்பனையில் சாதாரணப் பெட்டிக்கடைக்காரன் பெறும் சில்லறையல்ல.எனவே அதன் வீச்சும் குவிப்புமானது உற்பத்திச் சக்திகளின் தனியுடைமையாளனின் கைகளில்தாம் குவிகிறது.அதை வேறொரு கட்டுரையில் விளக்குவோம்.

சில்வியோ கேசலின் திட்டமானது எந்தக் காரணத்தாலும் மனித வதையை நிறுத்தப் போவதில்லை.மத்தியில் குவிக்கப்பட்ட அரசியல் பொருளாதாரக் கட்டமைவுகளை நகர்புறத்திலிருந்து கிராமங்களைநோக்கித் தள்ளுவதும் அதனூடாக அபிவிருத்தித் திட்டங்களும்,பொருளாதாரத் தேவைகளும் புதிய முதலீட்டையும் வேலைவாய்புக்களையும் கூட்டிவரும்போது அதன் சாத்தியத்தால் உற்பத்திச் செலவு மிகமிகக் குறைந்து, புதிய சந்தைகளைத் தேடிக் கொள்வதும் கிரமிய வலுவைக் கொண்டு புதிய சந்தைப் பொருளாதாரத்தில் முழுமக்களும் பங்கு கொள்வதாலும் தனித்த மொனேப்போல் அழிந்து மனிதமுகப் பொருளாதாரம் நிலைப்படுமென கேசல் மொழிகிறார்.

இங்கும் கேசலிடமும்,கேய்னிஸ்சிடமும் இருக்கும் கருத்துக்களானது அரச கடன் பற்றிய கருத்தோட்டத்தைச் செம்மையாகப் புரியவில்லை. அரசகடனும்,நிதிமூலதனத்தின் கடன்களும் அதீத வரிச்சுமைகளை மக்கள்மீது திணிக்கிறது.கடன்களின் வட்டியும்,பின் அந்த வட்டிக்கு வட்டியுமாகப் பல்கிப் பெருகும் கடன் சுமை நாட்டையே திவாலாக்கிறது.இதை கேய்சல் சுதந்திரப் பணச் சுற்றோட்டத்தால் நிவர்த்திக்க முனைகிறார்.இதுதாம் கேய்சலின் மிகப் பெரும் பலயீனமாகும்! கேசலின் மொழிவுகளை வளர்ச்சியடைந்த கிராமங்களும்(மேற்குலகத்தின் கிராமங்கள்) கிராம சபைகளுமே ஏற்றுக்கொள்ளும் பண்பைக் கொண்டுள்ளன!இதை நமது மாட்டுவண்டிக் கிரமத்தோடு பொருத்திக் கொண்டால் அங்கு வேப்பம்பூ,இலுப்பம்பூ வடகம்தாம் உற்பத்திச் சாலைகளில் செய்யலாம்.எனவே இதை மேற்குலக அரசுகள்கூட மிகவேகமாக ஏற்றுக் கொண்டு காரியமாற்றவில்லை.வளர்ந்த நகரங்களான பெரு நகரங்களை குட்டி நிர்வாகத்தோட (மற்றைய பகுதிகளோடு தொடர்பாடாத)யூனியன் பிரதேசமாக வரையறத்து முயற்சிக்கிறார்கள்.அதுவும் வேலையில்லாத்திண்டாடத்தைக் குறைக்கவில்லை.ஜேர்மனியப் பெருநகரங்களான பிறிமன்,கம்பேர்க்,பேர்ளின் இத்தகைய பொறிமுறையில் இயங்குகின்றன.இத்தகைய நிலைமைகளில் தேசியப் பொருளாதார அறைகூவல் அப்பப்ப மேலெழுகிறது.இதுவே இன்று ஜேர்மனிய உற்பத்திப் பொருட்களை மக்கள் வேண்டி வேலைவாய்பைப் பெறும்படி மந்திரமோதுகிறது.நுகர்வுப்பொருட் துறைகளுக்கான மந்திரி திருமதி கூன் முன்வைத்துக் கொள்ளும் கருத்தும் இஃதே.

அனைத்துப் பொறிமுறைகளும் சிதறும்?:

இப்போது உருவாகும் பிரச்சனையானது தத்துவார்த்தம்,எதிர்த்துவார்த்தம் என்ற இரண்டு தளங்களாகும்.இங்கு நிறுவப்பட்ட-நிறுவனப்பட்ட மாபொரும் கருத்தாடலானது பொருளாதாரத்தில் புதியவொரு பொறிமுறையை நிறுவிக்கொள்ள தூண்டுகிறது.இதை வலப்படுத்தும் இன்றைய உலக வங்கியானது மனித முகத்துடனான... என்ற முகமூடியைத் தாங்கிப் பாசாங்கு செய்கிறது.இதன் உச்சக்கட்டமானது மூன்றாமுலகைச் சுற்றியே திரடர்களைக் கனவுகாணத் தூண்டியுள்ளது.இதன் பலாபலன் மினரல் வாட்டர் குடிப்பதற்கும்,சொகுசு வாழ்வு வாழுவதற்கும் பாமரரைத்தூண்டிக் கொள்வதும் அதனூடாக அனைத்து இயற்கைவளத்தையும் கொள்ளைபோடுவதே பொறிமுறையாக விரிகிறது.

சில்வியோ கேசலின் சுதந்திப் பொருளாதாரப் பொறிமுறையானது மூன்றாமுலகப் பொருளாதாரவலுவை முன் வைத்தே தோற்றம் பெறுகிறது.அவரது கனவானது உலகப் பெரும் முதலாளிகளை வலுவிழக்க வைத்து,முதலாளியச் சந்தையை மக்கள் சந்தையாக்கி அனைவரும் பங்குபற்றி மனிதாபிமானமான முதலாளியப் பொறிமுறையைக் கட்டுவதே.எனினும் இதுதாம் உடோப்பிசமாக விரிகிறது.இன்றிருக்கும் 'வர்த்தகக் கொன்சேர்ன்கள்' மட்டற்ற சுரண்டலில் புரண்டுவரும்போது இவர்களிடமிருக்கும் அதிகாரமானது எதார்த்தில் அழிக்கப்பட முடியாத வலுவாகும்.இதைப் பொருளாதார மறுசீரமைப்பால் நிகழ்தப்பட வாய்ப்பேயில்லை.இந்த அதிகாரமானது வளர்ந்து விருட்சமாகிய விஞ்ஞானத்தின் துணையோடு தன்னைப் பிணைத்தே வளர்கிறது.இதன் வலவானது சந்தைகளில் செல்வத்தைப் பொருட்களில் ஸ்தூலமாக்காது வெறும் காற்றில் ஸ்தூலமாகிறது.இது செய்மதிகளின் வளர்ச்சியோடு அதைச் சந்தைப் படுத்தும் பொருள்களின் வடிவங்களாக்கின்றன.கைத் தொலைபேசி,செய்மதித் தொலைக்காட்சி,இணைய-தொலைத்தொடர்புத் துறைக் கம்பனிகளென பொருளாதாரத்தில் 'பொருட்களின் இருப்பு' அழிக்கப்பட்டு காற்றே(அலைகள்?) பொருட்களின் இடத்தைக் கைப் பற்றியுள்ளன.

கேய்னிசமானது நீண்டகாலத்துக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள முடியாது போய்விட்டது.அவ்வண்ணமேதாம் மார்க்சியத்தின் சோஷலிசக் கட்டுமானம் தன்னைக் காத்துக்கொள்வதற்கான உற்பத்தியூக்கத்தையும்,அதைக்காப்பதற்கான வியூகத்தையும் மக்கள் பண்பாக மாற்றாத வடுவைச் சுமக்கிறது.இந்தப் பண்புமாற்றம் கல்வியில்,கலைபண்பாட்டில் வளர்த்தெடுக்கப்படாத போக்கால் மதில்களும் ,கம்பிவேலிகளும் நாடுகளைச்சுற்றி எழுந்தன.இதுவும் மூலதனவாதிகளிடமிருந்து இவ் நாடுகளைக் காக்கவில்லை.இதை நாம் தனியே விவாதிப்போம்.

மூலதனத்தில் ஏற்பட்ட மொனோப்போல் சுழற்ச்சியானது மாபெரும் 'கொன் சேர்ன்களை' உருவாக்கியது.அதுவே உற்பத்தியில் ஆதிக்கத்தையும்,சந்தையில் தீர்மானகரமான பாத்திரத்தையும் கைப்பற்றியது.இதன் மூன்றுகால் பாய்ச்சல் அதிகாரமானது நடுத்தர உற்பத்தியாளர்களைக் காவுகொண்டு,தேசங்கடந்த கம்பனிகளையுருவாக்கி உற்பத்தியின் அனைத்து சாத்தியங்களையும் தனது வலுவுக்குள் திணித்துள்ளது.இதைமீறும் போராட்டமானது தேசங்கடந்தவொரு புதியபாணியிலான கூட்டைத் தொழிலாளர்களுக்கும்,நடுத்தர உற்பத்தியாளர்களோடும் இணைக்கும் காலமானது வெகு தூரத்தில் இல்லை.

இதன் அர்த்தமானது அனைத்துப் பொருளாதாரப் பொறிமுறைகளும் ஒவ்வொரு காலக் கட்டத்தில் சிதிறிவிடுமென்பதே.இதற்கான காரணமானது மக்கள் நலவாழ்வோடும்,தொழிலாளர்களின் உரிமைகளோடும் சம்பத்தப்பட்டது.


இன்றுள்ள பிரச்சனையானது பொருளாதாரம் பற்றிய கணிப்பீடுகள் எதைநோக்கியது என்பதாகும்! பங்குச்சந்தையின் உறுப்பினர்கள்(பங்காளர்கள்) தமது வருமானத்தைக் கட்டிக்காப்பதும்,மூலதனத்தைப் பெருக்குவதா அல்லது நாட்டினதும்,குடிகளினதும் நல்வாழ்வுக்காக உழைப்புப்பிரிவினையகற்றிய சூழலையுருவாக்கி முழு மக்களுக்குமானவொரு பொருளாதாரத்தைக் கட்டிக் கொள்வதா?இந்தச்சிக்கலானதுதாம் மக்கள் நல்வாழ்வைப் பற்றிய கொள்கையுடைய சிந்தனையாளர்களை பெரிதும் பாதித்தது.இவர்களில் முக்கியமானவர் திரு.மார்க்ஸ் அவர்களே, வரலாற்றில் மிக முக்கியமான சிந்தனையைச் செய்தார்.எனினும் இந்த நூற்றாண்டில் மீண்டும் ஆரம்ப நிலையில் பலவற்றைச் சொல்லவேண்டியுள்ளது.கடந்த காலங்களில் பொருளாதார வளர்ச்சியானது பல மடங்கு உற்பத்தித் திறனை வளர்த்துள்ளது.இது பாரிய உபரி வருமானத்தை முதலாளிகளுக்கு அள்ளி வழங்கியும் நாடுகள் திவாலாகிறது.முதலாளிகள் மட்டம் உயர்ந்துயர்ந்து செல்கிறது,இது எங்ஙனம் நிகழ்கிறது?

மார்க்சினதோ அல்ல சில்வியோ கேசலினதோ நோக்கம் வேறுபட்டமாதிரியான முறைமைகளில் மக்களின் அவலத்தை நீக்குவதாக இருக்கிறது.இஃது ஆடம் சிமித்திடம் துளியளவேனுமில்லை.ஆடம் சிமித்துக்கும் மார்க்சுக்கும் குறுக்கால் கோடுகிழித்து புதியவொரு கனவை விரித்திட்ட கேசல் இன்றைய பணமுறைமையையும்,வட்டி-வட்டிக்குவட்டி முறைமையைத்தாம் சமூக ஏற்றதாழ்வுக்குக் காரணமாக முன்நிறுத்துவதால் அவர் இறந்த பின்பும் அவரது கொள்கையை புரட்சிக்கெதிராக முன்நிறுத்தும் புத்திஜீவிகளை இன்றைய பல்கலைக்கழகங்கள் உலகெங்கும் உருவாக்கிவிட்டுள்ளது.இந்தப் புத்திஜீவிகளின் தொந்தரவே நம்மையின்னும் கேவலமாக புத்தியொடுக்குமுறை செய்கிறது.இது சிந்தனையின் அனைத்து முறைமைகளையும் ஒற்றைப் புரிதலோடு பொருத்துகிறது.இது தாரளமாகக் கற்பனையுலகைத் தயார்ப் படுத்துகிறது.இந்த உலகத்தின் பிரதியீடாக நம்முன் எஞ்சி நிற்பது 'ஆளுமையுடையவர்கள்-அறிவாளிகள் 'மேலும்,மேலும் வசதியாக வாழ்வை அமைக்கமுடியும்-அறிவற்ற மூடர்கள்தாம் வறுமையில் கிடதளுந்துகிறார்கள் என்ற வாதம்.இங்கு பல்லாண்டாக-சுமார் 5000 வருடங்களாகக் கட்டியமைக்கப்பட்ட பூர்ச்சுவாக் கருத்தியல் மிகவும் வர்ணந்தீட்டிய பொலிவில் நம்முன் மீளவும் கொணரப்படுகிறது.இத்தகைய மொன்னைப் பேச்சானது இருஷ்சியாவையும்,கிழக்கைரோப்பிய நாடுகளையும் சோஷலிசத்தின் தோல்வியின் முகமாகவும்,சீனாவை அதன் படிப்பினையாகவும் காட்டமுனைகிறது.இது தாம் நவ காலத்து முதலாளியக் கருத்துகளில் புதிய பாணியிலான கருத்தாதிக்கம்.இதைக் கொப்பிபண்ணும் மூன்றாமுலகப் படிப்பாளிகளிடமிருக்கும் கட்டுப்பெட்டித்தனமானது அதைச் சமூகத்தளத்தில் பொருத்திப்பார்க்கும் அறிவற்ற நிலையில் தாம் படிப்பாளிகள் மட்டுமேதாம் புத்திஜீவிகளில்லையென்பதைச் சொல்கிறார்கள்.

இதைக் கடந்து நாம் இக்கட்டுரையின் இறுதியில் விமர்சிப்பதாகக் குறிக்கப்பட்ட மார்க்சியப் பொருளாதார முன்னெடுப்பின் தோல்வியாக முன் மொழியப்படும் இரஷ்சியாவையும் கிழக்கைரோப்வையும் மனதிலிருத்தி-இதன் சரிவு எதைக் குறித்தரைக்கிறதென்பதை நோக்குவோம்.

அடிமட்ட,மேல்மட்ட அமைப்புகள்:

வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலாதென்பதே கம்யூனிச அறிக்கையின் ஆரம்ப வாசகம்.இங்கு மனித சமூகங்கள் வர்க்கங்களாகப் பிரிந்துள்ளார்கள்.நாம் ஒரே மொழியைப்பேசி,ஒரே இனமாக இருப்பினும்-நாமெல்லோரும் ஒன்றல்ல.நமக்குக்குள் வர்க வேறுபாடுண்டு!அடக்குபவர்களாகவும்,அடக்கப்படுபவர்களுமாக இருக்கிறோம்.இங்கே நேரெதிரான வர்க்கங்கள் என்றும் சேர்ந்து ஒரேயினமாக-வர்க்கபேதமற்ற இனமாக இருக்கமுடியாது.அப்படியுண்டென்பது ஒருவித மொன்னைப்பேச்சாகும்.பகைமுரண்பாடுமிக்க இருவேறு வர்க்கங்கள் ஏதோவொரு அரசியலுக்கு தமது உடலை அடிமையாக்குவதற்கு முதலாளிய மேல்மட்ட அமைப்புகள் காரியமாற்றுகின்றன. இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க,பால்-நிறபேதங்களும்,சாதிய-இன,மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல.இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது.ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும்,அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமைiயும் இதற்குள் திணிக்கிறது.இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இங்கேதாம் ஒடுக்குமுறையும்,அவலமும் தோற்றம் பெறுகிறது.

இன்றைக்கு நாம் படும் வேதனையும்,கொடுமையான அடக்கு முறைகளும் வெறுமனவே நல்லது கெட்டதுதெனும் ஒற்றைப்புரிதலுக்கிட்டுச்செல்லும் முதலாளியக் கருத்தியல்ப்பரப்புப்படி நிகழ்வதல்ல.அஃது உடமை வர்க்கத்தின் தனியுடமைகளைக் காப்பதெற்கெடுக்கும் முயற்சியாக விரிகிறது.

இங்கே தனியுடமை வர்க்கமானது சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகளை(உற்பத்திக்கான மூல வளம்,ஜந்திரங்கள்,நுட்பங்கள் இன்னபிற) ஒருசிலரின் உரிமைகளாக்கிய பின் அதைக்காப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துகிறது. இங்கேதாம் 'பொருளாதாரம்' எனும் செல்வத்தைக் கருத்து நிலைக்கு மாற்றும் விந்தையும் பின் அதையே அடித்தளமாகவும்,அந்தத் தளத்தைக் காப்பதற்கான மேல்மட்டக் 'காப்பரண்களாக்' கட்டியமைக்கப்பட்ட தேசவுருவாக்கமும் அது சாhந்த 'வன்முறை-வன்முறையற்ற'வடிவங்கள் தோன்றுகின்றன.இவை பொலிஸ்,இராணுமென்றும்,நீதிமன்றம்-சிறைக் கூடமென்றும் ,சட்டம்-அரசு என்றும் வன்முறையமைப்புகளையும்,கல்வி-மதம்,கலை-பண்பாடு,ஊடகங்களென்று பற்பல ஊடகங்களை வன்முறையற்ற வடிவமாகவும் வைத்துத் தமது பொருளாதாரப் பொறி முறையைக்கட்டிக் காக்கின்றன. இங்கே நாமெல்லோரும் ஏதோவொரு வடிவத்தில் அடக்கியொடுக்கப்பட்ட ஜீவன்களே!ஏனெனில் இந்த உற்பத்திச் சக்திகளோடு நாம் உயிர் வாழ்வதற்காக உறவுகொள்ளவேண்டியே ஆகவேண்டும்.இந்த நிகழ்வுப் போக்கானது உழைப்பிலீடுபடும் எவரையும் சுதந்திரமான முறைமைகளில் இயங்க அனுமதிப்பதில்லை.பேரளவில் சுதந்திராமாக இருப்பதாகக் கருதும் நாம் 'பலவழிகளிலும்' அடக்கியொடுக்கப்படுகிறோம்.

வர்க்கப்போராட்டத்தில் சோஷலிசத்தின் வீழ்ச்சியும்,தொழிலாளர்களின் இன்றைய நிலையும்:

பால்யப் பருவ சோஷலிசக்கட்டுமானது முதலாளியத்துக்கு மாற்றாகவே நிறுவப்படுகிறது.முதலாளியத்தினது முரண்பாடுகளால் அதைத்தூக்கியெறிந்துவிட்டுத் தாழ்த்தப்பட்ட வர்க்கமானது தனக்கான உரிமைகளைக் கையிலெடுக்கும்போது-உரிமையையிழந்த வாக்கத்திடமிருந்து பற்பலச் சதிகள்-வெளிநாட்டுச் சக உடமைவர்க்கக்கூட்டோடு நடப்பதைத் தடுப்பது மிக,மிக அவசியமானவொரு திட்டமாக மாறிவிடுகிறது.இது திட்டமிட்ட மக்கள் நலத் திட்டங்களைக்கூட நிறைவு செய்ய முடியாதளவுக்குக் குறிப்பிட்டவொரு சோசலிச நாட்டைப்பாதிக்கும்.

சமூகம் பகை முரணியல்பான வாக்கங்களாகப் பிளவுபட்ட சூழலையெப்படி முதலாளிம் உருவாக்கியதோ,அதை அந்த வர்க்க நிலையிலிருந்துகொண்டே சோஷலிச முகாமும் எதிர்கொண்டிருக்கவேண்டும்.ஆனால் முதலாளியமோ தனது வாக்கப்போராட்டத்தில் மிகக் கவனமாக இருந்தபோது,சோஷலிச முகாம் மக்கள் நலனையும்,முதலாளியப் பாசிச வர்க்கத்தின் இரண்டாவதுமுறையான உலக மகாயுத்தத்தையும் ஒருங்கே எதிர்கொள்வதில்போய் முடிந்தது.உள்நாட்டு உடமையிழந்த வர்க்கமானது மிகவும் ஆபத்தான வாக்கமாக மாறிக் கொள்வதற்கானவொரு சூழலை இரண்டாவது உலகயுத்தம் ஏற்படுத்தி அதைத் தகவமைத்துக் கொடுத்து.

சோஷலிசம் வெற்றியடைவதும்,தோற்பதும் அதன் வர்க்கப்போராட்டப் பலத்தினதும்,மக்களின் கருத்துநிலைவளர்சியிலிருந்து கூட்டுவுற்பத்தியின் ,உற்பத்தித் திறனிலும் அடங்கியிருக்கிறது.இதைச் செய்யத் தூண்டத்தக்கவொரு தலைமைத்துவத்தை புரட்சிக்கட்சியானது சகல வழிகளிலும் அன்று திடீரென குறைந்த ஆயுளிலேயே இழந்ததும் இந்த முகாமைப் பாதிக்கிறது.

இதன் தாக்கமானது சோஷலிசத் திசையமைவை மிகவுமொரு நெருக்கடிக்குள் தள்ளிவிடுகிறது.இதிலிருந்து மீளக்கூடியவொரு முனைப்பை அந்த முகாம் பெறுவதற்குள் உள்நாட்டுப் பழைய உடமை வர்க்கமானது மிகவும் காட்டமானவொரு போராட்டத்தை உலக முதலாளித்துவத்தோடு சேர்ந்து காரியமாற்றியது.இன்றைய வளர்ச்சியுறும் தொழில் நுட்பமானது முதலாளியத்தைத் தக்கவைக்கத்தக்கவொரு வலையமாக விருந்து மேவுகிறது. இதன் காட்டாமான உந்துதலோடு பெரு மூலதனம் கைக்கோர்க்கும்போது 'புரட்சியின் அவசியம்' முன்னெப்போதையும்விட இப்போது அவசியமாக மக்களிடத்தில் உணர்வுருவாகுமென்று நம்பலாம்.இதுதாம் நிசமான வரலாறாக இன்னொரு லெனினைத் தொழிலாளி வர்க்கம் தகவமைக்கும்,ஆனால் இது ஒரு எல்லைக்குள் உட்பட்டதாக இருக்க வாய்பேயில்லை.

ப.வி.ஸ்ரீரங்கன்