Mittwoch, August 04, 2010

மெய்நிகரது மேன்மை

விடுதலையெனுங் கருத்தால்
விடு பேயர்களாக்கப்பட்ட தமிழினம்


சிவசேகரம் குறித்துத் தமிழரங்கத்தில்-இனியொருவில்பின்னூட்டு இடுபவர்கள்- கருத்தாடுபவர்கள் மிக நீண்ட புலியினது அரசியற் பாத்திரத்தை மிக இலகுவான தெரிவுகளோடு விவாதிக்கின்றனர். விட்டால்,புலியை ஸ்ரீரங்கனா அழித்ததெனக் குதர்க்கஞ் செய்கின்றனர்.இதுவரையான புலிவழித் தேசியப் போராட்டமானது தகவமைத்த அரசியலானது ஒரு தலைமுறையையே பாழடித்துக்கொண்டது மட்டுமல்ல அத்தத் தலைமுறையில் எஞ்சியவர்களையே"காயடித்து"தன் முனைப்புடைய நபர்களாக்கி விட்டுள்ளது.

தமிழ்பேசும் சமூகத்தின் இருப்பே இல்லாதாக்கிய இந்தப் போராட்டத்துள் இதுவரையான அழிவு,சமூகசீவியச் சீர்குலைவு குறித்து எந்த மதிப்பீடும்-பொறுப்புணர்வுமற்ற வாசகப் பாரம்பரியம் நமது சமூதாயத்தினது பாரம்பரியமாகத் தொடர்கிறது.குண்டி மண்ணைத் தட்டிச் செல்வதுபோல் மக்களது அழிவு-இழி நிலை குறித்து இயங்குகின்றனர்.எங்கே-எப்படி நமது மக்கள் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்,அவர்களைக் காட்டிக்கொடுத்து அழித்தவர்களே மீளத் தம்மைத் தகவமைத்து மக்களது "விடிவுக்கு"அரசியல் செய்வதாக இந்திய-இலங்கைப் பாசிசத்தோடு கைகோர்க்கும்போது,அதை அப்படியே கிடப்பில் போட்டபடி நமக்கு அரசியலுரைக்கும் அதே புலி மனதுக்கு, இந்தப் பாசிசத்தின் எச்சங்கள் குறித்து எந்தக் கவனமும் இருக்க முடியாதுதாம்.நாமும் அதற்காக அவர்களது நிலையிலிருந்து ஒரு சமூகத்தை நோக்க முடியுமா?
புலியை எவர்கள் அழித்தார்கள்-தோற்கடித்தார்களென ஓராயிரம் முறைகள்தமிழரங்கத்தில் சொல்லப்பட்டதை மீளப் படித்துத் தொலையுங்கோ. புலியைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி,அவர்களது அழிவு யுத்தத்தை"ஆக்க யுத்தமாக"க் கருத்திட்டவர்களும்,அதற்குச் சிந்தாந்த வலுக்கொடுத்தவர்களும் மிகவும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.அவர்கள் எமது மக்களது அனைத்து வாழ்வாதாரத்தையுஞ் சிதைத்தபோது,அதை மௌனித்து மக்களை மொட்டையடிக்க விட்டவர்கள் இதே வகைத் தண்டனைக்குட்பட்டவர்களில்லை!ஆனால்,இத்தகைய சந்தர்ப்பவாதிகள்(சிவசேகரம் போன்ற புரட்டுக் கவிஞர்கள்-மார்க்சியர்கள்) அரசியல் நீக்கஞ் செய்யப்பட வேண்டியவர்கள்.

புரட்சிகரக் கட்சியெனப் பெயர் சூடுவதால்மட்டும் அக்கட்சியும் அதன் உபயக்காரர்கள்-உறுபினர்கள் புரட்சிகரமாகச் சமூகத்தை அணுகுவதாகவும்,செய்யவேண்டிய சூழலில் செய்ய வேண்டியதைச் செய்ததாகவும் அர்த்தமாக முடியாது.
இது,சிவசேகரத்துக்கு,சிவத்தம்பிக்கு,சண்முகரெத்தினத்துக்கு- இன்னுமேன், அனைத்துப் பல்கலைக்கழகப்"பேராசிரியர்கள்-விரிவுரையாளர்கள்"அனைவருக்கும் பொருத்திப் பார்க்கத் தக்க அரசியலைப் புலிகளிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது.

இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்தில்,தம்மைக் "கல்வியாளர்கள்-பேராசிரியர்கள்"எனத் தம்பட்டம் அடித்தவர்களும்-அடிக்காதவர்களும் இணையும் பாதை தமிழ் பேசும் மக்களது உரிமையெனும் ஒரு முட்டுச் சந்தியில். இதைக் குறித்தான தேடலோடு அணுகியுள்ள ஒவ்வொரு அரசியல் நகர்விலும், புலியினது ஆதிக்கத்துக்குட்பட்ட அரசியல் நடாத்தையே தமிழ்பேசும் மக்களது உரிமை போராட்டத்தில் மையமுற்று முழுத் தேசியவின ஒடுக்குமுறைகளுக்கெதிரான வினாக்களைப் புலியிடம் தேடவேண்டிய நிலையில், புலிகளது அந்நியச் சேவை-அடியாட் பாத்திரத்தை புரிந்தவர்கள்- புரியாது நடித்துப் புலிக்கு அங்கீகாரத்தை-சித்தாந்த வலுவைக் கொடுத்திருக்கின்றனர்.

இங்கே,புரட்சிகரச் செயற்பாட்டோடு தன்னை இனங்காட்டும் சிவசேகரம் எந்தத் தர்மத்தின் அடிப்படையில் புலிகளது அழிவுப் போருக்கு எதிர்ப்பிடாது அல்லது மக்களிடம் உண்மையினை எடுத்துச் சொல்ல முடியாது மௌனித்தார் என்பதை வெறும் தனிநபர் செயற்பாட்டால் அளவிடமுடியாது.

சிவசேகரம் தன்னை இனங்காட்டும் கட்சியுடன் சேர்த்து, அவரை அணுகுவதில் எமது கருத்துக்கள் இருக்கிறது.தனிப்பட்ட சிவசேகரம் எப்போதோ காணாது போய்த் "தமிழ்த்தேசிய" அரசியலுக்கு முன்னால் தவிடுபொடியாகிக் கிடந்தார். அவருக்கு, அவரது தொழிலினது அழுத்தம்-அச்சம் சமூக ஆவேசத்தை அப்போது கொடுக்காதிருந்திருக்கலாம். இது,தனிநபர் பாதுகாப்புணர்வின் ஒரு அங்கமாகவும்-கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத அரசியலின் தொடர்ச்சியாவும் இருக்கலாம். என்றபோதும்,சிவசேகரம் தற்போதைய சூழலில் "புலி செய்த போராட்டத்தை விமர்சித்துப் புலியினது போராட்டம் அழிவுப் போராட்டமென்றும்,அது அந்நியச் சேவையில் மக்களைப் பலிக்கடாவாக்கிறதென்றும் உண்மையை மக்களிடம் எடுத்தியம்பிப் புலியினது ஆட்பிடிப்பு"குழந்தைக் கடத்தல்"அரசியலை அம்பலப்படுத்தியவர்களைச் சாடுவதில்" கவனமுற்ற சிவசேகரம்- ஏன், அன்று புலிக்குமுன் மௌனித்தார்?(இங்கே,மறுபக்கமென்ற அவரது பத்தி எழுத்துக்களுக்குட்கூட புலியினது விதேசியப் போராட்டங்குறித்தும்-புலியினது பாசிசச் சேட்டை-கொலை அரசியல் குறித்தும் எதையுமே இனங்காணமுடியாது!மக்கள் புலிகளிடம் அனைத்து ஆதாரத்தையுங் பறிகொடுத்தபடி, ஒரு புறம் புலிப் பாசிசத்திடமும்,மறுபுறும், பெருங்கொடிய இனவாத அரசிடம் தமது அனைத்துவுரிமைகiயும் இழந்து கொத்தடிமைகளாக இருந்தபோது இவர்கள் மெளனித்துக் கிடந்தனர்.)

இந்தச் சந்தர்ப்பத்தை ஒழுங்காக இனங்கண்ட புலியினது பினாமிச் சிந்தனையாளர்கள்,குறிப்பாக, எஸ்.கே.விக்கினேஸ்வரன்,சேரன் போன்ற கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் புலிகளது போராட்டத்தை தேசிய விடுதலைப் போரெனச் சொல்லி,அதற்கான பாரிய சித்தாந்த வலுவைக் கொடுத்தனர்.

இவர்களது இந்தச் சிந்தாந்த வலுவானது புலிகளது பாசிசத்தை மேலும் தமிழ்ச் சமுதாயமெங்கும் வலுவாகப் பத்திப்படர வைத்தது அன்றும்-இன்றும்!அனைத்துமே-புலிசெய்த அனைத்துமே தமிழ்த் தேசிய விடுதலையின் அங்கமாக இனங்காட்டினர். இதில் விக்கியினது பங்கு மிக அதிகமாக இருந்தது. விக்கினேஸ்வரன்-சேரன் குழுவானது புரட்சிகரமான சிந்தனைப் போக்கைச் சிதைத்து நிர்மூலமாக்கியதற்கான எல்லா நியாயமும் சிவசேகரத்துத் தெரிந்தே இருந்தது. எனினும்,இந்த மனிதர் மௌனித்து அங்கீகரித்தார்.

இப்போது,தங்களுக்கும் புலிகளது பாசிசச் சிந்தாந்தப் போக்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையெனச் சேரனும் அவரது மைத்துனருமான விக்கியும் எல்லாக் கோவில்களிலும் கற்பூரம் அணைத்துச் சத்தியஞ் செய்கின்றனர்.அதே, நோய்தாம் சிவசேகரத்துக்கும்.இதில்,என்ன மாற்றமென்றால்-சிவசேகரம் புரட்சியெனப் பிதற்றியபடி, "அன்று புலிக்கும்-அரச பாசிசத்துக்கும் எதிராகப் போராடிய முகாமை வலிந்து சாடியபடி"தனக்கு இருப்புத் தேடுவது. இதுவொரு வகையில் பண்பாட்டுச் சேட்டைதாம்.

இதை அம்பலமாக்குவதென்பதும் மக்களைச் சார்ந்தியங்கும் சக்திகளது கடமையே!

மௌனித்தவர்கள், முன் வைத்து இயங்கும் அரசியலை விமர்சிப்பதென்பது அந்தச் சிவசேகரத்தின் தனிநபர் நடாத்தையை அல்ல. சிவசேகரம் உருவாக்க முனையும் அரசியல்-கட்சிசார் அரசியலின் நியாயவாதமானது காலவதியானது. அதற்கு எவ்விதத்திலும் தமிழ்பேசும் மக்களது விடுதலை-அரசியலுரிமை பற்றிப் பேசும் அருகதை -திறன் கிடையவே கிடையாது. ஏனெனில்,இலட்சக்கணக்கான மக்களைப் பலியெடுத்தபடி தமிழ்ச் சமூதாயத்தையே ஒட்ட மொட்டையடித்த புலிப்பாசிசத்தின் தொடர்ச்சியைக் குறித்து இன்னும் எந்த மன்னிப்போ-பொறுப்போ எடுக்காத கயவர்களான மேற் சொன்ன புலிப் பினாமிகள் குறித்து இன்னும் மௌனிக்கும் இக் கயமைமிகு சிவசேகரம் கோஷ்டி,புலிகளை அன்றிலிருந்த அம்பலப்படுத்திய தளத்தை நஞ்சுத்தனமாகவும்-விஷமத்தனமாகவும் விமர்சிப்பதென்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். இன்றைய அந்நியச் சேவையில் போட்டிபோடும் புலிகளது பினாமிகள்-முகாங்களை இயங்க அனுமதித்துவிட்டு,மயிரைப் பிடுங்கும் கிண்டலும் -நஞ்சு வைக்கும் குள்ள அரசியலையுந் தொடரும் சிவசேகரம் மக்களுக்கான அரசியலைத் தட்டிக்கழிப்பதன் தொடர்ச்சியாகவே இது தொடர்கிறது.

அன்று,"மரபு மார்க்சியர்கள்"புலிக்குத் தாரைவார்த்துக் கையளித்த அனைத்துவகைச் சந்தர்ப்பவாதமும் இன்று, அந்த மக்களைப் பலியெடுத்து ஓயந்துபோனதும் மீளத் தகவமைக்கும் சந்தர்ப்வாதப்"புரட்சி"க் கோசத்தையும் அதன்வழி தம்மை முன்வைத்து அரசியல் பேச முனையும் கெடுதியான நோக்கையும் எவரும் மௌனித்து ஏற்க வேண்டியதில்லை!

இன்றைய சூழலில் எவர் மக்களைப் பற்றி நின்றும், புலியினது பாசிசச் சேட்டையை அன்று அம்பலப்படுத்திப் புலியிடமிருந்த கொடும் வதைகள் பெற்றார்களோ, அவர்களேதாம் மக்களோடு இனியும் அரசியல் செய்வதற்கும்-போராடுவதற்கும் அருகதையுடையவர்கள்! சந்தர்ப்ப வாதிகளும்-சதிகாரர்களும் இனியும் எமது மக்களை மொட்டையடிக்க விடுவதற்கு இது, புலிப் பாசிசத்தின் காலமல்ல. மாறாக, இது,மகிந்தா குடும்பத்துப் பாசிசச் சர்வதிகாரக்காலம். இங்கே,இலங்கையில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சிறுபான்மை இனங்களுடன் கைகோர்த்து, அவர்களது விடுதலைக்கான புரட்சிகரப் பாதையையும்-கட்சியையும் உருவாக்கும் பொறுப்பு அந்த மக்களிடம் இருக்கிறதென்பதும்,அதையொட்டி அவர்களைத் தகவமைப்பது புலிப்பாசிசத்துக்கும்-சிங்கள இனக்வொடுக்குமுறைகளுக்கும் எதிராகத் தமது ஆயுள்வரை போராடியவர்களுக்கே உண்டு.

சந்தர்ப்பவாத அரசியலைப் புரட்சியின் பெயர்கொண்டழைக்கும் சிவசேகரம்போன்ற கடைந்தெடுத்த மக்கள் எதிரிகளுக்கு எந்த அருகதையுமில்லை - மக்கள்,புரட்சி குறித்துப் பேசுவதற்கு!
இவர்கள் தகவமைப்பது மீளவுமொரு சந்தர்ப்பவாத அரசியலுக்குள் மக்களைத் தள்ளிப் இலங்கைக்கான ஐக்கிய மக்கள் புரட்சியைக் காயடிப்பதற்க்கே!
இந்தவுண்மையை நாம் இனங்கண்டதன் பயனாகவே,மேற்சொன்ன முகாங்களை,அவர்களது சந்தர்ப்பவாத-சதி அரசியலை அம்பலமாக்குகிறோம்.இது,மீளவும் ஒரு விக்கி-சேரன் கூட்டு நமது மக்களுக்குத் தேசிய விடுதலை-புரட்சி பேசிப் புலிகளது எச்சங்களை மக்களுக்குள் திணிக்காதிருப்பதற்கே!இதை உணரும் எல்லாச் சந்தர்ப்பத்திலும் சிவசேகரம்போன்றவர்கள் சந்தர்ப்பவாத அரசியலோடு மக்கள் கவனத்தைத் திசை திருப்பிச் சதிகாரர்களை நமக்குள் ஊன்றுகிறார்கள்.இது,தமிழ்த் தேசிய அரசியலது அறுவடையிலிருந்து நமது மக்களை மீண்டெழ முடியாதவாறு அந்தச் சேற்றுக்குள் மக்களை மூழ்கடித்துத் தம்மைத் தகவமைக்கும் சதி அரசியலோடு சம்பந்தப்பட்டது.

சிவசேகரமும்,அவரது அனுதாபத்துக்குட்பட்ட புதிய ஜனநாயகக் கட்சியும் இதுவரை மக்களுக்கும் புலிக்குமிடையிலான அரசியலையும்,அதன் வழியாக விளைந்த சமுதாயச் சீர்குலைவையுங் குறித்து எந்த மதிப்பீடும் செய்யவுமில்லை,அதற்கெதிரான சித்தாந்தப் போராட்டத்தையும், அதன் வழியில் மக்களைப் புரட்சிகரமாக அணிதிரட்டும் தந்திரோபாயமுமின்றிச் சப்பைக் கட்டும் பாராளுமன்றச் சகதிக்குள் கிடந்து பிற்போக்கு அரசியலைத் தொடருகிறது. இது,ஒரு வகையில் எஞ்சிய புலிகளுக்குப் புரவலர்களாக இருக்கும் மேற்சொன்ன புலிப் பினாமிகளை மீளப் புனரமைக்கும் அரசியலின் வியூகமென்பது எனது பணிவான கருத்து.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
04.08.2010

Montag, August 02, 2010

இனியொரு திசையில்சிவசேகரம்கவிமழை பொழிய...

இனியொரு திசையில்சிவசேகரம்கவிமழை பொழிய...

"முற்றத்து வாழை குலையீன
முத்தனும் பெண்டிலுங் கூத்தாட"



னியொரு இணையத்தின் அரசியல்இளித்த வாயர்களுக்கானதா, இல்லை,மக்களது அவலத்தைப் போக்குவதற்கானதாவென நான் எனக்குள் புரிய முனைகிறேன்.எல்லாம், சிவசேகரம் அவர்களது கவிமழைப் பொழிவினது காரணகாரியத் தொடர்ச்சியின் வினைதாம்.

இன்றைய காலத்தில் எவரது கருத்தையும் "எங்கேயும்" தடை செய்ய முடியாது!இவ்வளவு வளர்ச்சியடைத்த தகவற் தொழிற்நுட்பப் புரட்சியில் கரையொதுங்கியுள்ள இன்றைய தகவற் பரிமாற்றத்தைப் புரியாதவர்கள், புரட்சியை கட்டி வளர்ப்பதென்பது எந்தவுலகத்திலிருந்தென்றுதாம் எனக்குப் புரியவில்லை!

சிவசேகரம் கவிதை எழுதுவார்.அது,எல்லோருக்கும் தொப்பியை அளவாகத் தைத்து மெல்ல நயவஞ்சகத்தோடு விஷம் பருக்கும்.இது, நடக்கும் தருணம் "புரட்சி"யின் பெயரால்.இப்போது,"புரட்சி" பேசுபவர்கள் அனைவரும், மற்றவர்கள் மந்தைத் தெருவில் நாலு மந்தைகளை மேய்ப்பதென்ற தோரணத்தில்"மார்க்சியம்"படிப் பிக்கின்றனர்.

காலந்தாம்!

இந்தவுலகத்தின் திசைவெளிகளெல்லாம் ஏதோவொரு புனைவுக்கும்-நிஷத்துக்கும் இடையில் காட்சிப்படுத்தும் நிஷம், எங்கோ ஒரு "அறிவாளியின்"வீட்டுக் கோடியில் அடை காப்பதாக இவர்கள் கருதுவதாகவிருந்தால் அஃது, நிஷமாகவே காலக் கொடுமைதாம்.

விஷமக் கருத்துக்களை கட்டிக் கவிதையெனக் கோர்க்கும் சிவசேகரத்திடம் நிஷமாகவே புரட்சி குறித்த எந்த மதிப்பீடும் இருப்பதற்கில்லை!அப்படி இருந்திருப்பின் புலியினது பாசிசச் சேட்டைக்கெதிராகப் பாரிய மக்கள்திரள் போராட்டத்தை இலங்கையில் நடாத்திக் காட்டியிருக்க முடியாதுபோயினுங் குறைந்தபட்சம் புலிகளது அழிவு யுத்தத்தை நேர்மையாக அம்பலப்படுத்தியிருக்க முடியும்.தன்னந்தனியர்களாக நாம் அம்பலப் படுத்தியபோது தலையைப் புதைத்துத் தமிழ்த்தேசியப்பால் குடித்தவர்கள், இப்போது, புரட்சிபேசி மற்றவர்களைச் சீண்டுகிறார்கள்.இவர்களெல்லாம் நீதியாகச் செயற்பட்டிருந்தால் தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு அழிவைப் புலிப் பாசித்தின் வழி சந்தித்திருக்க முடியாது!



மக்களைப் புலிகளும்,சிங்கள ஆளும் வர்க்கமும் மொட்டையடிக்கப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இன்று, புரட்சிக் கோசமெனப் புலம்பும்"கவிதை" தனிநபர்வாதமாக மற்றவர்களுக்கு "ஒழுங்கு"கற்பிக்கிறது!புலிகளது அராஜகத்தின்வழி, கேடுகெட்ட பாசிசம் கோலாச்சியத்திற்கு இந்த மனிதர்கள் எங்ஙனம் காரியம்-ஒத்திசைவாகவிருந்தார்களென நாம் பல் நூறு கட்டுரை எழுதியுள்ளோம்.என்றபோதும்,இன்றைய "புரட்சிகர-மார்க்சிய"ப் புதிய புரவலர்கள் கட்டியமைக்க முனையும் கருத்துக்களோ அவர்களது பின் தங்கிய புரிதலை நன்றாகவே நமக்குப் புரியவைக்கிறது. எல்லாக் காலத்துக்கும் அடிப்படையான புரிதல் பொருந்திவிடுவதாக இவர்கள் புசத்துகிறார்கள்.

புலிப்பாசிசத்தின்"(வி)தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு" மார்க்சியத்தின்வழி மரபுரீதியாகக் கருத்துச் சொல்லிக்கொண்டு மௌனித்திருந்த இந்த மகான்களெல்லாம் இப்போது கிணற்றுக்குள்ளிருந்து வெள்ளமேற வெளியல் வந்த தவளைகளாகக் கத்திக் கொள்கின்றனர்.அத்தக் கத்தலைப் புரட்சியின் தெரிவில்"புரட்சி" இலக்கியமெனப் புரட்டும் சிவசேகரம் தனது கடந்த கால மௌனத்தைக் குறித்துக் கிஞ்சித்தும் எந்த வருத்தத்தையுஞ் சொன்னதாக வரலாறில்லை!

பாசிசம் கோலாச்சியது எதன் பெயரால்?எவரது துணையோடு தமிழ்த் தரகு முதலாளிகள் இலட்சக் கணக்கான மக்களைக் கொன்று குவித்தார்கள்? எவரது மௌனம் புலிகளுக்கு விதேசியச் சிந்தாந்தப் பலம் கொடுத்தது?

இன்று, இத்தனை இலட்சம் மக்களது வாழ்வை வேட்டையாட ஒத்துழைத்த இந்த நரிகளெல்லாம்"புரட்சி-புரட்சி"என ஊளையிடுகின்றன. இது, குறித்து விமர்சனம்-எதிர்வினையாற்றும்போது நேசமிகு அஷோக்கோ அதை வெளியிட முடியாது தவிர்த்துத் தனது கரசேவையை ஒழுங்குற நடாத்துகிறார்.

இதெல்லாம் "புரட்சிக்காரர்களுக்கு" உரிய கோலந்தாம்!நாமும் கடந்த கால் நூற்றாண்டாக இந்தப் "புரட்சிக் காரர்களை"ப் பார்த்தே வருகிறோம்-இணைவதும்,பிரிவதுமாக...

இயக்க வாத மாயை,அந்நியச் சேவை-அடியாட் பாத்திரமென எல்லா வகைத் துரோகத்தையும் ஒழுங்குற நமது மக்களது தலையிற் சுமத்தி,அவர்களது வாழ்வை நாசமாக்க"அவர்களுக்கு விடுதலை"வகுப்பெடுத்த இந்தக் கடைந்தெடுத்த கபோதிகள்தாம் தம்மையும் "பேராசிரியர்கள்-புரட்சிக்காரர்கள்"எனப்பசப்பு மொழி பேசுகிறார்கள்! என்றோ நமது மக்களது உரிமைகளை அந்நியர்களுக்கு ஏலம்விட்ட இத்தகைய மனிதர்கள் இன்றும்"புரட்சி" பேசுவதும்,கட்சி கட்டுவதும்,மக்களை ஏய்த்து அரசியல் செய்வதென்ற திசையில்தம்மைத் தகவமைத்துக்கொண்டதன் பயனென இவர்களே தமது நடத்தையின் மூலம் நமக்குரைக்கின்றனர்!

புலிப்பாசிசத்தின் தோல்வியில்,படிப்பினைகளைச் செய்து, மக்களது அரசியலைப் பேச வக்கற்ற இத்தக் கோமாளிகளுக்கு "மார்க்சியம்" குறித்தென்ன மதிப்பீடு இருக்கிறது? புதிய உலகவொழுங்கமைப்பின் இன்றைய புரட்சிகர நிலவரங்கள் என்ன? பாட்டாளிய வர்க்கத்தின் இன்றைய வர்க்கவுணர்வினது தீர்மானகரமான இருப்பு என்ன? புதிய தலைமுறையை நோக்கிய புரிதலில் எத்தகைய மனித மாதிரிகளை இனங்காண்கின்றனர்?தொழிற்சாலைக்கும் மூலதன இயகத்துக்கிடையில், உற்பத்திச் சக்திகளுக்கும்,உறவுக்கும் இடையிலான இன்றைய பண்பு என்ன?இது குறித்து எந்தப் புரிதலை தமிழ்ச் சூழலில் முன்வைத்திருக்கிறீர்கள்? இன்றையவுற்பத்தியில் பங்குறும் பல்கலைக்கழகங்களுக்கும் பாட்டாளிய வர்க்கப் பண்புக்குமிடையிலான முரண்பாடென்ன? இது குறித்தெல்லாம் புரிதலற்றவர்கள் எதிர்காலப் "புரட்சி" குறித்து வகுப்பெடுக்கின்றனர்.அதையும், அதே பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கருத்து நிலைகளோடு...

இவர்களிடம்,எதிர்வினையாற்றும்போது,அதை மறைத்து மதிலமைக்க முடியுமெனக் கருதும் கருந்துளைகளுக்கு"ஈர்ப்புச் சக்தியினது சுழற்சிக் கணம்"எத்தகைவொரு நிலையில் எத்தகைய எதிர்த் தாக்குதலைத் தருமெனப் புரிவதுகூடப் பொருந்தாத தருணந்தாம். இல்லையென்றால், எதிர்வினைகளை-பின்னூட்டங்களை வெளியிட்டு,ஆரோக்கியமானவொரு உரையாடலைக் கட்டியமைத்திருப்பார்கள்.

இவர்களது தெரிவில், கடந்தகால இயக்கவாதக் கொள்கை வழியான பரிதலே மேன்மையான கோட்பாடாகவிருக்கலாம்.இல்லையென்றால் அங்காலவொருவன் கட்சி கட்டுகிறான்.இங்காலவொருவன் தெரிந்தெடுத்த கருத்துக்களை வைத்து அரசியலமைக்கின்றான். இவர்கள் மார்க்சியமெனக் கத்தும் மந்தைக் கருத்துகளோ மார்க்சியத்தின் அரிச்சுவடியையே கற்காத இவர்களது மேதமையை வெளிப்படுத்துகிறது!

என்ன மேதைமை!

போங்க சிவசேகரரே-போங்க அஷோக்கு யோகன் கண்ண முத்துப் புரட்சித்தோழரே! புதுமையாய் ஏதாவது வழியில் கருத்துக்கு மதிலிட முனையுங்கோ...


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.08.2010


இட்ட பின்னூட்டமும்,சிவசேகரத்தின் கவிதையும்:


"இருந்த இடத்து வேலையென்றால் எங்க வீட்டு அவரையுங் கூப்பிடுங்கோ..."

சிவசேகரம் அவர்களது இக் கவிதையை

மீள-மீளப் படித்துப் பார்த்தேன்.அவர், போடுகின்ற இக்கோலத்தை அவரது கடந்தகாலச் செயற்பாட்டை வைத்து அளவிடும்போது,புலிகள் பலமாக இருந்து, தமிழ்ச் சமூகத்தின் அனைத்து வளங்களையும் துஷ்பிரயோகஞ் செய்து, மனிதவுயிர்களுக்கு எல்லையில்லாத் தொல்லைகள் கொடுத்தபோது இவர் என்ன செய்தார்(?),எப்படிப் போராடினாரென எனக்குள் கேள்விகள் எழும்போது,பேராசிரியர்கள் புலியினது அழிப்புப் போருக்குத் தேசியக் குஞ்சம் தயாரித்துக் கட்டி அழகு பார்த்த உண்மையை மறக்கமுடியாதிருக்கு! ஒரு கொடிய பாசிசத்தின் முன் மௌனித்துக்கிடப்பதென்பது அந்தப் பாசிசத்துக்கு உடந்தையாகவே இருக்கிறது.


இப்போது,சிவசேகரம் அவர்கள் பரவலாக வாய் திறக்கின்றார்.இஃது,அழகானது!புரட்சி குறித்து நிறைய வகுப்பெடுக்கிறார்,அதுவும் தப்பு இல்லை!என்றபோதும்,இவர் போட்டுத் தாக்கும் தளமிருக்கே அது இறுதிவரைப் புலிப் பாசிசத்துக்கும்-இலங்கையினது இனச் சுத்திகரிப்புக்கும் எதிராகப் போராடியிருக்கிறது.இதை, மறுத்துவிட்டு எந்த மடையனும் இப்போது புரட்சியுரைக்க முடியாது!


புலிகளது கொடிய அழுத்தங்களையும்-கொலைவெறித் தாக்குதலையும் மீறிப் புலி பாசிசத்தை அம்பலப்படுத்தி,அவர்களது அழிவு யுத்தத்துக்கு எதிராகப் போராடிய வரலாறு மிக இலகுவாக நிராகரிக்கக் கூடியதல்ல!இதை, மௌனித்து இருந்தவர்கள்-புலிகளது போராட்டத்தில் தேசியவொடுக்குமுறைக்கெதிரான கூறுகள் இருப்பதால்-அதைத் தூக்கித் தாலாட்டியபடி, புலிகள் செய்த அனைத்து மனிதவிரோதப் போக்கையுங் கண்டுங்காணாதிருந்த நம்ம "பேராசிரிய!ப்பெருந்தகைகள் இப்போது புரட்சிக் கொடியுயர்த்துவதற்கு முன்னிலையில் நிற்கும்போது,இவர்தம் செயற்பாட்டின்மீது பெருத்த சந்தேகங்கொள்கிறேன்!


ஒரு கட்டத்தில்- 2000 க்கு பின்பான காலத்துள், முற்று முழுதாகப் புலிக்கு எந்த எதிர்ப்பையுமே செய்யாதவர்கள், மௌனித்துப் புலிகளது கொடியவொடுக்கு முறைகளுக்கு அங்கீகாரஞ் செய்தவர்கள்.இப்போது,இத்தகைய பெருந்தகைகள் மக்களரங்கு வருகிறார்கள்.அவர்கள், தமது கடந்தகாலக் "காய் அடிப்பு "அரசியலுக்குப் புது விளக்கமுரைத்துப் புரட்சிப் பாடல் கட்டும்போது "இவர்களது" கொடிய மௌனத்தின் விளைவு, இன்றைய நிலைக்கு எங்ஙனம் களமமைத்ததெனப் புரட்டியெடுத்துப் பதிலுரைப்பது எமக்கொன்றும் கடினமான பணியல்ல!ஆனபோதும்,இவர்களை எண்ணும்போது-எனக்கு ஐயன் ஸ்ரையினது புகழ்வாய்ந்த வாசகமே ஞாபகத்துக்கு வருகிறது.


>>Die Welt ist viel zu gefaehrlich,um darin zu leben-nicht wegen der Menschen,die Boeses tun,sondern wegen der Menschen,die daneben stehen und sie gewaehren lassen.<<

-Albert EINSTEIN


"இவ்வுலகமானது ரொம்ப அபாயகரமானது, அதற்குள் வாழ்வதற்கு-இந்நிலை மனிதர்களாலோ, போக்கிரிகளாலோ அல்ல,மாறாக,மனிதர்கள் இவைகளுக்கு அருகினிலிருந்து அவர்களை அநுமதித்து விடுவதாலேயே."

-அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி 02.08.10


புரட்சிக்கான மெய்நிகர் கொமிசார்

-சி.சிவசேகரம்

எங்கள் மெய்நிகர் கொமிசார் இவ்வுலகு
எவ்வாறு உருவாகி இவ்வாறாய் எவ்வாறு
ஆனதெனவும்― அதை
எவ்வாறாய் மாற்றல் ஏற்குமெனவும் அறிவர்
அதை
அவ்வாறாய் மாற்றல் எவ்வாறெனவும்
எதையும் எங்கே எப்போது எவ்விதம்
மாற்றலாம் எனவும்
எல்லாரும் அறியுமாறு எவருக்கும் ஏவவும்
மாற்றற்குரிய
பொருள் இடங் காலம் விதம் என அனைத்தையும்
வேண்டிய போது வேண்டியவாறு மாற்றவும்
பொறுப்பும் அதிகாரமும் உரிமையும் கடமையும்
பிறவும் உடையர்
ஆதலின்
பிறர் எவ்வாறு இவ்வுலகை மாற்றலாம் என
அவர் தனது
சாய்மனைக் கதிரையிற் சாய்ந்து சுவரை நோக்கியும்
படுக்கையிற் கிடந்து முகட்டை நோக்கியும்
உருளு நாற்காலியில் அமர்ந்து திரையை நோக்கியும்
ஆணைகள் பிறப்பிப்பர்
அவர் எதுவுமே செய்யாரென்பதுடன்
எவர் இவ்வுலகை மாற்றுவர் எனவும் அறியார்
ஆயினும் இவ்வுலகை
மாற்றத் தகாதோர் எவரென
அவர் அறுதியாயும் உறுதியாயும் இறுதியாயும்
அறிவர் ஆதலின்
அனைவரும் அறிமின்―
அவரை மீறி உலகை மாற்ற முனையும் எவரையும்
அவர் என்றென்றுங் கண்காணித்துச்
சாய்மனைக் கதிரையிலும்
படுக்கையிலும்
உருளு நாற்காலியிலுமிருந்து
கண்டன அறிக்கைகளைப் பிறப்பித்தவாறே
இறுதி வரையிலும் இருப்பர்

http://inioru.com/?p=15700