Dienstag, November 21, 2006

பேரப்பூச்சி.

பேரப்பூச்சி.


ஆச்சி அமுக்கிய இறுகிய நெற்றியும்
அப்பு அணைத்த பிஞ்சு நெஞ்சும்
ஆத்தை முலையின் கனவொடு சேர்ந்து
நெடுக அழிந்தது பேரப்பூச்சி


அழலிக்கையோடு அமர்ந்திருந்தவர்கள்
அடக்கிப் பழகிய அர்த்த பொழுதுகளில்
அப்பனின் சாக்குக் கட்டிலுக்குத் தீ வைத்தவர்கள்
அவன் நாட்டிய பயிரரிந்து அப்பால் அள்ளிச் சென்றதும்
அம்மாவின் முலையில் பல்லைப் புதைத்து
அல்குல்லில் துப்பிய இச்சைக் கழிவு
இதயம் சிதைத்துக் கொன்றது அவளை


கச்சை வலிக்கக் கடுந்தவமிருக்கும்
அப்பனின் அசையாத பொழுதுகள்
அள்ளிய சிறு நீர் கைகளில் வற்ற
முகம் தொலைத்தான்
முந்தைய வினையில்


மூப்பாகிய எனது உணர்வுகளுக்கு
அன்னை மண்ணின் அபலைக் கோலம்
ஆத்தையின் கனவில் அள்ளிச் சென்ற
அவள் இதயத்தின் துடிப்பாய்
அடி மனதெங்கும் குடிதுவங்க
வெடிச் சத்தம் ஒடித்தது முகத்தை!


பேரப்பூச்சி பாதியில் இழந்த முகத்தை
இன்னொரு பொழுதுகளில் எங்கோ புதுப்பிக்க
இடியிடியாய் வான் அதிரும் சிங்கக் கனவில்
ஆச்சி காலில் எண்ணை தடவிக் கண்ணை மூடி
மெல்லச் சிதறியது

அல்லகண்டம் தொலையா இலங்கை
இழவோலை வரையும் ஈழம்
அவகடமுடையச் சிங்களச் சினம்
அழிகடை எல்லாம்!


என்ன நம் இழுதை!


ஏங்கிக் கிடக்கும் எம் தாய் முலையும்
எண்ணை பிசிறும் ஆச்சியின் கரமும்
வான் முட்டும் அப்பர்களின் ஏரும்
இன்னொரு வினைக்கும்
மீள் வருகைக்கும் நேரம் குறிக்க
மீண்டும் உருளும் "கொமிசன்" கண்ட குண்டுகள் எங்கும்.

ஊழகம் கண்ட மேனிச் சிலிர்ப்பும்
மெல்ல விரிந்த சில்லறைச் சிரிப்பும்
கபாலத்து வெடிலில்
ஒளியின் வேகத்தோடு மறையும்
யுத்தப் பொழுதாய் மேவிய விடியல் எங்களது!


இன்னொரு பொழுதில்
ஆச்சியின் காலில் மெல்லக் கிடந்து
மேனி வளர்க்கும் பேரப்பூச்சி
ஆத்தையின் முலையில் அருவி கொட்டும்
அப்பன் அடைக்கும் அந்த வெள்ளம்
அள்ளித் தரும் வெள்ளைச் சோற்றை
அடுப்பில் அமரப் பூனையின் தவமும்
கனவில் தொடரும் அகதியின் முகத்தில்.


ஜனநாயகம்
21.11.2006

Sonntag, November 12, 2006

நாட் குறித்தல் நமனைக் கேட்டு!

நாட் குறித்தல்
நமனைக் கேட்டு!


என்னமாய்ப் போகிறது உலகு
இருப்பவருக்கும் இறப்பவருக்கும்
இடையிலிருக்கும் ஒரு நூலிழை
காற்றில் ஒன்றும் ஒரு விசை

கடுமனங்கொண்ட கண்ணீரும்
கற்பதற்கு மறுக்கும் தலைமை விசுவாசமும்
தற்குறியாய்ப் போகும் தலைமுறையும்
தன் நம்பிக்கையிழக்கும் எதிர்காலமும்

தாமரை இலை நீராய் உருண்டுபோகும்
உயிரும், உடலும், உள்ளம் தொலையும் கணமுமாய்
ஒரு நொடிப் பொழுதையாவது இந்தவீழத்தார்
இனிதே நுகரக் கொடுப்பனவற்ற குறையை நீபாடு!


கடுமழையில் கிளையுடையும் வேம்புபோல்
கொடு யுத்தத்தில் சிரசுடையும் சின்னதுகளையும்
கூன் விழுந்த குமரியளையும் பல்லுப்போன பாலகர்களையும்
பாழுமிந்த அரசியல் விட்டு வைக்கா

பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு ஒரு புறமும்
பாடைகளால் பாசறைக்குப் படைகள் சேர்த்தல் மறு புறமுமாய்
இந்தப் பாழுமிலங்கையில் பண்பாடாய்ப் போக- பாருக்குள்
வலியவொரு குருதியாற்றை வடியவிடுமிலங்கை மண்

மெல்லப் பாடும் தென்றலும்
மேனிசிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்
மெட்டு விரிக்கும் முல்லையும்
மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுதுகள்

கண்ணைத் திறந்து வைத்துக்
கப்பல் கட்டும் தம்பியும்
கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும்
அடுப்பில் நெருப்பு வைக்கும் அம்மாவும் நிர்க்கதியாய் நினைவில்

நில்லாது போன நிரந்தர யுத்தம்
நினைவைத் துரத்தும் மரணவோலம்
இதுவெல்லாம் வாழ்வென்று
வேளாவேளைக்கு சங்குகொலிக்கும்

சலிப்புத்தான் சாவையும் ஜனனத்தையும்
சகஜமாக்கும் நாட்பொழுதில்
சருமத்தில் நரைபட்ட உரோமம் மேவினும்
சின்னக் குழந்தையாய் ஈழத்தெருவில் குத்தி விழும் மனம்

எல்லாத்தையும் இப்படியே வாழ்ந்து
மெல்ல விலகும் வாழ்வோடும்
வேளைக்குக் கிழடுபடும் மேனியோடும்
மெஷினில் சிறைப்பட்டு மெல்வுடையும் வாழ்வு!


உருத்தெரியாத உறவுகளாய்
ஊரே தெரியாத வம்சங்களாய்
உதிரக் காத்திருக்கும் பெற்றோருடன்
உறவு முறிக்கும் சிறுசுகளாய் ஈழத் தலைமுறை

ஊனுருக்கி உறவறுத்து
ஒருத்தி-ஒருவனோடு உறவுவைத்து
சுற்றம் தறித்து சும்மா வாழும்
அகதித் தமிழர் சுதந்திரமாய் சாவார் நாளை

வேருமில்லை விழுதுமில்லை
வேஷம்போடும் சந்ததியும்
உணர்வு முளைக்கும் ஒரு பொழுதில்
உப்புக்கும் மதியாது பெற்றோரை

புலப்பெயர்வு வாழ்வு
புதுவாழ்வு புகழ் வாழ்வு அல்ல
புலம்பித் திரியும்
பட்ட மரமாய் நலிந்த முகங்கள்

நாங்கள் இன்னுஞ் சில காலத்தில்
நடுத்தெருவில் நிற்பதற்கு
நாலு பெற்று வளர்ப்பதிலும்
உழைப்பதிலும் உலகை மறந்து...

நாலு சகாப்த்தம் நடக்குமிந்த
நாடுகேட்ட "நல்ல யுத்தம்"
நாட் குறிக்கும் நமனைக் கேட்டு
நல்ல வழி நாமடைய!


ஜனநாயகம்

12.11.2006

Samstag, November 11, 2006

மழலைகளைக் கொல்லும்...

மழலைகளைக் கொல்லும்
மந்தைத் தேசம்!


மந்தைகளின் விந்தை மிகு தேசம்
உயிர்த்திருப்பவரை தறித்தெறியும் எந்தப் பொழுதிலும்
இருப்பவரென்றும் இழப்பவராய்
இதயம் தொலைக்கும் இலங்கை மகாவம்சம்


இதற்கும் மக்களாண்மை
மனிதாபிமானம் ஜனநாயகம்
அதன் முதுகில் சோஷலிசக் குடியரசு வேறு
விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம்போன்று...


நாற்று நட்ட விரல்கள் நன்னீரில் விரல் நனைப்பதற்குள்
நட்ட பயிர் களைந்தெறியப்பட்ட வயற்பரப்பைப்போல்
தறித்தெறியப்படும் ஒவ்வொருவுயிரும்
இந்தத் தேசத்தின் எதிர்காலக் கனவுகளன்றோ?


எந்தப் பக்கம் திரும்பிடினும்
மானுடரைப் புசித்திடும் நரிகளாய் அரசியல் மாபியாக்கள்
நல்ல மனிதர் வேடமிட்டு
நடுத்தெருவில் குருதி குடிக்கும் கனவோடு


கொடுங் கரங்கள்
நல்ல வேடமிட்டு நற்கரங்களாயும்
தேசத்தின் அதியுத்தமத்துக்கும்
நன்றிக்கும் பாத்திரமுடையதாகப் பேசப் படுகிறது!


பக்கம் பக்கமாய் வரும் நாளிதழ்களும்
பக்குவமாகப் பரப்பப்படும் வார்த்தைகளும்
பாதகஞ் செய்யுமிந்தத் தேசத்தைப் பார்போற்றும்
தேனொழுகும் தேசமாயும் சொல்லச் சில வானொலிகளும்
போதாக் குறைக்கு மக்களின் விழிகளைச் செவிகளைப் பாழாக்கியபடி


ஒரு தேசத்தைத் தாகமாக்கிய தம்பிமார்களும்
தவறிப்போன மந்தைகளில் ஒன்றாய்த் தடுமாறிய பொழுதொன்றில்
எவரிடமோ ஏந்திக்கொள்ளும் ஒரு நிகழ்வாய்
சமாதானம் பேச யுத்தத்தில் மூழ்கிக் கிடக்க


மூச்சுவிட வழியற்ற நிலப்பரப்பில்
ஒன்றாய்ப் பத்தாய் நூறாய்த் தினமும்
குண்டடிபடும் அந்த"மக்கள்"
எந்தத் தேசத்தையும் கனவுகண்டதாக எவருமுரைக்கார்


சொல்லச் சொன்னபோது சொன்னதைத் தவிர
அடிக்கச் சொன்னபோது அடித்ததைத் தவிர
வேறெந்த விசேஷமும் கைக்கெட்டாத
தரித்திரத்தின் வாரீசுகள் வதைபடும் தேசமிது


இருந்தும்,


புத்தன் வந்த புவியென்பார்கள்
புடுக்கர்கள் செய்யும் போருக்கு
புத்தரின் போதனையும் நன்னாட் குறித்தொதுங்கும்
பொல்லாத தேசமிது!!



ஜனநாயகம்

10.11.2006, மணி:23.58

Dienstag, November 07, 2006

அன்று சொன்னதை இன்றும் சொல்வது...

அன்று சொன்னதை இன்றும் சொல்வது...


நமக்கிருக்கும் ஒரு பெரும் குறையானது நமது சமூகத்தில் அரசியல் அறிவென்பது மிக மிகத் தாழ்ந்த நிலையிலிருப்பதே.இது நமது தமிழ் பேசும் மக்களை ஒரு இனமாகவும்,ஒரு வர்க்கமாகவும்,ஒரே சாதியாகவும் பார்க்கிறது.

இது தப்பு!

நாம் தமிழ் பேசுவதால் ஒரே இனத்தவர்களில்லை.

நம்மிடம் இஸ்லாமிய,மலையகத் தேசிய இனங்கள் இருக்கின்றன.


நம்மிடம் வர்கங்களாகப் பிளவுண்ட மகள் சமூகமாகவும்,சாதி ரீதியாகப் பிரிந்த மக்கள் சிறு,சிறு இனக்குழுக்களாகவும் இருக்கிறார்கள்.



எங்களை இணைக்கும் தமிழ் எனும் மொழியானது அடிப்படையில் நம்மைக் கழுத்தறுக்கிறது.


இது ஒடுக்குமுறையை ஏவி விடும்,துரோகி சொல்லி அழித்துவிடும்.


இந்த நிலையில் நம்மை இன்னொருவினம் அடிமை கொண்டு பல தசாப்தமாகிறது.நாம் நமது மக்களையே பற்பல பிரிவினைகளுக்குள் தள்ளிவிட்டு,அதைக் கூர்மைப்படுத்தி மேய்த்து வந்திருக்கிறோம்.

இந்த நிலையில் நமது மக்களை இனவழிப்புச் செய்து வந்த சிங்கள இனவாத அரச பயங்கரவாதமானது நம்மைக் காவுகொண்ட வரலாறு நீண்டபடியேதான் செல்கிறது.

எதிரி ஆயுதத்தை ஒரு நிலையிலும் பல நிலைகளில் அரசியல் விய+கத்துக்கூடாக நம்மை வெறும் கையாலாக இனமாக்கிவிடுகிறான்(ள்).



இதை எதிர் கொள்வதற்கான எந்த விய+கமும் தமிழ் பேசும் மக்களிடமில்லை.தமிழ் "தேசிய விடுதலை இயக்கமென்ற புலிகள்" தமிழ் எழக-பொங்கு தமிழ் செய்வதால் இந்தப் பொறியை உடைக்க முடியாது.

நம்மக்கள் அனைத்திலும்"தியாகி தர துரோகி"எனப்பார்க்கப் பழக்கப்பட்டுள்ளார்கள்.இது ஆபத்தான உளவியலைத் தோற்றியுள்ளது.


எமது மக்களின் அனைத்துத் தளைகளும் அப்படியேதான் இருக்கின்றன.

அவற்றைக் களைந்துவிடும் புரட்சிகரமான அரசியல் நம்மிடமிருந்து முன்னெடுக்கப் படவில்லை.

சிங்கள இனவாதத்துக்கு எதிராகத் தமிழ் இனவாதம் தூக்கி நிறுத்தப்படுகிறது.இது நமக்கு வெற்றியைத் தரமுடியாது.சிங்கள இனவாத்தை சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல அங்கீகரிக்கப்பட்ட அரசுகளும்,அவைகளின் வர்த்தக-வர்க்க நலன்களும் முன் நகர்த்துகிறது.இத்தகைய நலன் நம் இனத்தின் மத்தியிலுள்ள ஓட்டுக்கட்சி அரசியல் வாதிகளை,இயங்கங்களை தமக்குச் சார்பாக அணைத்தெடுத்து நமக்கு எதிராக முன் நிறுத்துகிறது.


இங்கே புலிகளை ஒருபகுதியும்,மறுபகுதி ஆயுதக் குழுக்களையும் அவர்களின் ஊடககங்களையும்,கூட்டணிபோன்ற ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிக் கட்சியையும் பயன் படுத்துகிறார்கள்.

தமிழ் மக்களின் சுயநிர்ணயவுரிமை ப+ண்டோடு அழிக்கப்பட்டுவருகிறது.இதற்காக இந்தியா முன்னெடுக்கும் "விய+கமானது"ஆனந்த சங்கரியின் வடிவில் நம்மிடம் வருகிறது.நாங்கள் இந்தியாவின் மாநில சுயாட்சி(!?) முறைகளைப் பின் பற்றவேண்டுமாம்.

இந்தியாவில் இனப்பாகுபாடின்றி மக்கள்"அந்தமாதிரி"வாழ்கிறார்களாம்.மிசாரம்,திக்கம்,காஸ்மீரி,

நாகலாந்து,சீக்கியர்களின் தனிநாட்டுப் போராட்டங்கள் எல்லாம் மக்களின்"ஓற்றுமையை"நன்றாகவே எங்களுக்கு எடுத்துரைக்கின்றது.


இந்தியவென்றவொரு நாடு சிறுபான்மைத் தேசியினங்களின் சிறைக்கூடமென்று திரு பணிக்கர்,அசீஸ் நந்தி போன்ற இந்திய சமூவியலாளர்கள் எப்பவோ கருத்துக் கூறியுள்ளார்கள்.இதைக்கூட நாம் நமது அரசியல் பிழைப்புக்காக ஒழித்து மக்களைக் கருவறுக்கத் தயாராகிறோம்.இதை இந்திய நலன் தன்னாலான அனைத்து வழிகளிலும் கச்சிதமாகச் செய்கிறது.


அதன் ஒரு வடிவமாக ஆனந்த சங்கரியை, ஈ.என்.டீ.எல்.எப்பை(ரி.பீ. சீ.வானொலிக்காரர்கள்)மற்றும் புளட்,போன்ற ஆயுதரீதியாக வலுவிழந்த அமைப்புகளையும் கட்டுப்படுத்தித் தமிழ் மக்களின் நலன்களுக்கும்,புலிகளின் நலனுக்கும் எதிராக இந்தியா செயல்படுத்துகிறது.


இந்தி இந்தியாவின் "விருப்பானது" ஆனந்த சங்கரிய+டாக இப்படி நமக்குள் வருகிறது.அந்த மனிதரின் அரசியல் குழிப்பறிப்புகள் இப்படி வருகிறது படியுங்கள்.


நம்மை நடாற்றில் தள்ளிவிட்ட புலிகளின் அரசியல் விய+கமற்ற ஆயுதப் போராட்டம் இந்தியாவின் இந்தச் சதியை ஒருபோதும் வெற்றிகொள்ளமுடியாது தத்தளித்துக்கொண்டேயிருக்கும்.இனியாவது மக்களை ஜனநாயக வழிகளில் இயங்க அனுமதித்து அவர்களை வெகுஜனப்படுத்தி மக்கள்திரள் போராட்டுத்துக்கு வழிகோலட்டும்.

மக்கள் போராட்மின்றி இந்த விய+கத்தை உடைக்க முடியாது.இதற்காகப் புலிகளின் கட்டமைப்பே மாறியாகவேண்டும்.அதன் வெற்றுத் தலைமையே அறிஜீவிகளை,ஜனநாயக வாதிகளை,நிபுணர்களை உள்வாங்கி அவர்களைப் பயன்படுத்தியாகவேண்டும்.உட்கட்சி ஜனநாயத்தைத் தோற்றுவித்து கட்சியை மறுசீரமைப்புச் செய்யவேண்டும்.இதனூடாகப் புரட்சிகரமான அரசியல் முன்னெடுக்கப்படவேண்டும்.

எங்களுக்குள் பல நிபுணர்கள் உள்ளார்கள்,பல தியாகஞ் செய்யும் உளப்பாங்கு இருக்கிறது.எமது வாழ்வு இனவாத,உலக நலன்களுக்காக இனியும் பாழாக முடியாது.


புலிகளே உங்கள் அழிவில் மக்கள் அழிவதும் நிகழும்!

எனவே முந்துங்கள் கட்சியை மக்கள் ஸ்தாபனமாக்குங்கள்.

மக்கள் படைகளாக இராணுவப் படையணி மாறியாகவேண்டும்.தலைமையைப் பாரிய நெறிமுறை வழிப்படுத்தவேண்டும்.

மக்கள் தங்கள் அணிதிரட்சிய+டாக வெற்றியை நிலைநாட்ட முடியும். இது புரட்சிக்கான அறைகூவல்.இதைத் தமிழ் தரப்புத் தரகு முதலாளியம் ஏற்காது.

ஏனெனில் நாம் தமிழைப் பேசினாலும்
பிளவுண்ட மக்கள் இனம்.

நம்மிடம் வர்க்கங்கள் இருக்கு.நம்மிடம் சிறுசிறு தேசியினங்கள் இருக்கு.நம்மிடம் சாதிகள் இருக்கு.

இவற்றையெல்லாம்விட வாக்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படை என்பதைத் தமிழ்த் தேசியப் போராட்டம் தினமும் நிரூபித்தே வருகிறது.


ஜனநாயகம்.