Samstag, Oktober 02, 2010

தேசம்-தமிழரங்கம் போன்ற குழுக்களிடம் ...

"மாற்றுக் கருத்தாளர்களென"ச் சொன்ன நம்மில்பலர் புரட்சி செய்வதென்று கட்சிகள் கட்டினர்.அவை காலத்துக்கு முந்தியது.குழுவாதத்தில் நிலைக்க முடியாததெனச் சொன்னோம்.

தத்தமது இருப்புக்கான தெரிவுகளில் குழுக்கட்டல் தோன்றியது.

இக் குழுக்களால் முன் தள்ளப்பட்டொவ்வொரு இணையத் தளங்களும் தமக்கான தெரிவுகளில் அரசியலை முன்னெடுக்கின்றன.

அவையாவும் அப்பாவித் தமிழ் மக்கள் நலனை முதன்மைப்படுத்திக்கொண்டன.அந்த நலன்களை அடையும் வழிகளைக் காணாது அற்பத் தனமாகத் தமது விருப்புக்காக அவற்றைப் பாவனைசெய்வதில் இத்தைகய இணையத் தளங்கள் முந்திக்கொண்டன.

சமீபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு "இவரைத்தாம்" துணைவேந்தராக்கவேண்டுமென அறுதியிட்டு மனிப்புளேஷன் (Psychological manipulation)செய்யத் தேசம் நெற் கட்டுரை-ஆய்வு,பாலியற் புலானாய்வெனச் செய்து, Prof.Dr.இரத்தின ஜீவன் கூலுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறது நட்ஷத்திரன் செவ்விந்தியன் மூலம்.

தமிழரங்கம் படுபிசியாகத் தீபச் செல்வனெனும் "பாரிய" தமிழ்ப் படையாளியை-கவிஞரை புலிகளது விதேசியத்தில் உரைப்பதென்று தமது புலிச் சேவையின் தொடரை மறைத்துக் கட்டும் தொடரில் நாவலன்-குகநாதன் சமாச்சாரத்தில் ஆருக்கு ஆப்பு வைக்க முனைந்ததோ அந்த ஆப்பில் தமது பிடரிக்கு ஆப்பு வைத்திருக்கிறது.

ம.க.இ.க தமிழரங்கத்தின் மீதான தமது விமர்சனத்தை வினவுவில் போடுவதற்குள் அது இனியொரு தளத்தில் மீள் பதிவேற்றப்படுகிறது!

தமிழ்பேசும் மக்களுக்குத் தனிநாடு-விடுதலைப் பாடம் நடாத்துபவர்களில் கணிசமானவர்கள் இந்தவூடகங்களில் ஏதாவதொரு கட்டுரையையேனும் படித்திருக்க முடியும்.

அப்பட்டமான சுய நலங்களை முதன்மைப்படுத்தும் தேசம்-தமிழரங்கம் போன்ற குழுக்களிடம் இந்த மக்கள் நலன் வேறு சிக்கெடுக்கும்படியாக...

அவர்களே தமக்குத்தோதான சிக்கல்களைத் தொடர்ந்து கையிலெடுத்து நமக்கு விளக்கம் தருகிறார்கள்.

இந்தச் சூழலில் ம.க.இ.க.தமிழ்நாட்டில் நிகழ்ந்த குகநாதன் மேட்டரில் இரயாகரனது "தீர்ப்பு"க்கு மறுப்புரை எழுதுகிறது.நியாயமாக நாவலன்மீதான சேறடிப்பை எதிர்த்து எழுதப்பட்டாலும் பகிரங்கமான விவாதத்தைத் தொடரும்படி கேட்பதில் அதன் வலுவான நம்பிக்கை தெரிகிறது.இந்த நம்பிக்கையானது இனியொருவின்மீதானதும்,சபா நாவலன்மீதானதென்றுமில்லாது உண்மைகளை எவரும் புதைக்க முடியாதென இரயாகரனுக்கு உணர்த்துவதாகவே எடுக்க முடியும்.

ஒருவரையொருவர் சேறடித்து இல்லாமற் செய்யும் நடாத்தையில் இத்தகைய குழுவாதம் மலிந்திருந்தபோது, ம.க.இ.க.வின் வருகையும் அதன் பகிரங்க வேண்டுகோளும் விவாதிக்கத்தக்க பொதுவரங்கில் நாவலன்போன்ற மார்க்சியர்கள்மீதான அவதூறாகச் சுட்டிக்காட்டப்ட்டு,இரயாகரனது "அம்பலப்படுத்தல்"பொய்த்துப் போகுமிடத்தில் தமிழரங்கத்தின் அரசியல் புரியத் தக்கதான எனது மதிப்பீட்டை மேலும் வலுப்படுத்தும்.

அவ்வண்ணம் நாவலன் குற்றமுடையவரென்று நிருபிக்கப்பட்டால், இரயாகரன் நாவலன்மீது முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டும் நியாயமானதென்றும் இரயாகரனது குழுவாத்துக்கு அது அவசியமான இருப்பையும் கொடுக்கும்.எனவே,தொடர்ந்து தமிழரங்கம் மீதான எனது விமர்சனமானது அவர்களது அரசியல்மூலத்தின்ஆதிக்கத் தெரிவுகளைக் கேள்விக்குட்படுத்துவது.

அவர்களோடு நாம் இணைந்து உருவாக்க முனைந்த "புகலிடச் சிந்தனை மையம்" திடீரெனக் கட்சியாக மாறவேண்டுமென்ற இரயாவினது சுயவிருப்பில் அஃதிப்போது,"புதிய ஜனநாயக மக்கள் முன்னணி"யாக மாறிய தெரிவில் நடந்தேறும் அதீதகக் குழிதோண்டலில் எவர் வீழ்ந்து மாள்வாரோ அவர்களது அரசியல் மட்டுமல்ல இதுவரையான தமிழ்ச் சூழலதும் "புரட்சி"க் காவடியும் சிதைந்து சின்னாபின்னமாகும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.10.2010