Donnerstag, Dezember 27, 2012

நாம் "தமிழீழம்" கண்ட பரம்பரை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,மக்கள் கிளர்ச்சி,மாணவர் கலகம்,கைது,புனர்வாழ்வு-சில குறுக்குவெட்டுக் குரங்குப் பார்வைகள் குறித்துக் " குழந்தைகள் கண்ட குடியரசுக் கூத்தில்"  எனது குரலும்...

லகத்தில் விடுதலை கோரிப் போராடும் தேசங்களையும் அத்தகைய விடுதலைக்காகப் போராடும் இயக்கங்களைப் பிளந்து நரவேட்டையாடும் இன்றைய உலக நலன்களை அறிய இலங்கையே நல்ல உதாரணமாகிறது.எவர் எந்த அந்நியச் சக்தியின் கைக்கூலியென்று அறியமுடியாதளவுக்கு நமது வாழ்வில் அவர்கள் இரண்டறக் கலந்துள்ளார்கள்.இவர்கள் அனைவருமே மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார்கள்.புரட்சி கரக் கட்சியையும் கட்டிக்கொண்டு"புதிய ஜனநாயகம்"பேசுகின்றனர்-தமிழர்களது சுய நிர்ணயம் உரிமைதாம் என்கின்றனர்.

முள்ளி வாய்க்காலில் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தியபடி புலிகளும், அதே மக்களை விடுதலை செய்வதாக இலங்கை அரசும் வியூகமமைத்துக்கொண்டு, ஒரு இனப்படுகொலையை இந்திய-அந்நிய நலன்களுக்கொப்ப இலங்கை யுத்த ஜந்திரஞ் செய்து முடித்துக்கொண்டிருந்தபோது,கிழக்குப் பகுதித் தமிழ் மக்களோ அன்றி வடபகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் பல்லாண்டு வாழ்ந்து வந்த வடபகுதி மக்களோ "எதுவுமே நடக்காத ஒரு தேசத்துள் வாழ்வதுபோன்று" வாளாதிருந்தனர்.

"வன்னியில் மக்களை விடுதலை செய்"

"புலியை அழிப்பதெனும் போர்வையில் தமிழ்பேசும் மக்களை நரவேட்டையாடும் அந்நிய-இலங்கை அரசுகளே யுத்தத்தை உடனே நிறுத்து"

"யுத்தத்தின் மூலம் தமிழர்கள் உரிமையை நசுக்காதே"

"புலிவழிப் போராட்டத்தைக் காரணங்காட்டி எம்மைத் திறந்தவெளிச் சிறையில் பூட்டி வைக்காதே"




எனும்,குறைந்தபட்ச மனிநேயக் குரலைக்கூடக் கொடுக்கமுடியாது வடபகுதி மக்களும்,அவர்களது பல்கலைக்கழக மாணவர்களும் நல்லூர்க் கந்தனுக்குத் தேரிழுத்து இலங்கை இராணுவவாதத்துக்குமுன் மண்டியிட்டுக்கிடந்தனர்.வன்னியிலோ இலங்கையிலென்றும் நடந்தேறாத பெரும் இனப்படுகொலை நடந்தேறியபடி இருந்தது-புலிப் பாசிசமானது "அதை"  இலங்கையரசு நடாத்திமுடிக்கும்வரை தனது கயமையான அரசியலை விட்டொதுக்க முடியவில்லை!

ஆனால்,இவ்வளவு பெரிய இனப்படுகொலையை உணர்வுரீதியாகக்கூட உள்வாங்க மறுத்து, ஏதோ செவ்வாய்க் கிரகத்துள் வாழ்ந்ததுபோன்று வாளாதிருந்தவொரு வடபகுதித் தமிழர்கள் சமீபத்து "மாவீரர் தினக் கொண்டாட்ட-நினைவுகூருரிமைக்காக " மட்டும் தமது வாரீசுகளைக்கொண்டு பல்கலைக் கழகத்துள் ஆர்பாட்டஞ் செய்தனராம்.இது யாருடைய காதில் பூச் சுத்தும்(ஒரு அந்நிய நல-இலங்கை இராணுவாத) அரசியல்?

முள்ளி வாய்க்கால் படுகொலைக்குடந்தையாக மௌனித்திருந்தவொரு மக்கட்டொகுதி,அதன் பிறகாவது இனப்படுகொலை அரசியல்-யுத்தங் குறித்து"விசாரணைக்கான"ஆர்ப்பாட்டத்தையோ அல்லது அதன் விளைவால் தமது உரிமைகள் அழிக்கப்படுவதையோ சுட்டிக்காட்டி, அடிப்படையுரிமைக்கான குரலைத் தன்னும் பொதுவெளியில் எடுத்துவர முடியாது,இராணுவத்தின் தேவைக்கேற்பவொரு ஒட்டுச் சமுதாயமாகக் கிடந்து சீரழிந்தது.இந்தச் சமுதாயத்துள் வியூகங்களை அமைத்துத் தொடர்ந்து தமிழ்ப் பிரதேசமெங்கும் இராணுவவாத ஆதிக்கத்தின் இருப்புக்குச் சாதகமாகப் பல்கலைக் கழகத்து மாணவர்கள் "மாவீரர்-நினைவு" உரிமைக்க்காகக் குரலெடுத்துக் கலகஞ் செய்கின்றனர்.அதன் போராட்ட முன்னோடிகளென இலங்கை-இந்திய நலனுக்குப் பலியானவர்களை மெல்லக் காவலில் வைத்துக்கொண்ட இலங்கையின் வியூகமானது அவர்களை வெளியல் விடாது,புனர் வாழ்வெனத் தன்னைக் காத்துக்கொண்டது.

மாணவர்களுக்குப் புனர் வாழ்வளித்துவிட்டு விடுவிப்பதென்பதன் அர்த்தம்,தமது வியூகம் அம்பலப்படுவதைத் தடுப்பதென்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

அப்பாவி மாணவர்களை வைத்து நடாத்தப்படும் தமிழ்பேசும் மக்களுக்கெதிரான அந்நியச் சதியரசியலானது மீளவும்,தமிழ்பேசும் மக்களை மொட்டையடிக்கும் போலி புரட்சி வாதிகளால் "மக்களது-மாணவரது" எழுச்சியாகக் காட்டப்படுவது அவர்களது எஜமானருக்கான வொரு சேவைதாம்.

இப்படியாகத் தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடிக்கும் இந்த விபரீதமான புரட்டுப் புரட்சிப் பரப்புரைகள் யாவும் தமிழ்பேசும் மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிற்கும்வரை அந்நிய வேட்டையை-இனவொடுக்குமுறையையெவரும் புரிந்து அணித் திரட்சியடைந்து மக்களை அண்மித்த அரசியலை நிலத்திலும்-புலத்திலும் முன்னெடுப்பது நடைபெறாது.

உலகில் எந்தவொரு இனமும் இப்படித் தனது சொந்த அரசியலால் பலியிடப்பட்டது கிடையாது.இது தமிழர்கட்குரிய பிழைப்புவாத அரசியலாக நாறிக்கிடக்கிறது.

எங்கும்,எதிலும் பிழைப்பை நடாத்தியவொரு இனம் தனது சொந்த மக்களையே பலியிட்டுப் பண-நிதி மூலதனத்தைப் பெருக்கி உலகெல்லாம் முதலாளிகளாக வர்த்தகஞ் செய்கிறது.இதற்காகப் பலியிடப்பட்ட மக்களது உயிரானது எவ்வளவு தூரம் துஷ்ப்பிரயோகஞ் செய்யப்பட்டதென்பதைப் புரிய புலிகளது உயிராயுதக் கூத்தைக் கண்முன் நிறுத்துங்கள்.ஒரு டக்ளஸ் தேவா நந்தாவைக்கொல்ல எத்தனை மனித வெடிக் குண்டைத் தயார் செய்தனர்?ஒரு பெண் கமராவுக்குள் பிடிபடும் தற்கொலைக் காட்சியானது உலகத்துள் நமது வக்கிரமான கொலையரசியலது சாட்சி அல்லவா?இங்கே,மனித விழுமியம்-மகத்துவம்,ஜனநாயகப் பண்பு, என்பனவற்றின் அர்த்தங்கள் என்ன?புரியவே முடியாதவொரு காட்டுமிராண்டித்தனமான அராஜக அரசியல், திரை மறைவில் நிகழ்த்தும் வெளிப்படையற்ற சதிகளை முகமூடி மனிதர்கள் புரட்சிகாரர் போர்வையில் நடாத்தும் இந்தச் சூழலினுள் ஜனநாயகங் குறித்துப் பேசித்தான் ஆகணுமா?

இன்றய தேச அரசுகள் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கவில்லை.மாறாக, முதலாளித்துவத்தின் போலி ஜனநாயகம் அம்பலமாகி வருகிறது.ஜனநாயகமெனப் பொத்தாம் பொதுவாகவுரையாடும் இது எத்தகைய மதிப்பீடுகளுக்குப் புரிதற்பாட்டுக்குள் நம்மை வைத்திருப்பதென்பதில் குழப்பமான திசையிலேயொவ்வொருவரும் ஜனநாயகமெனக் கூக் குரலிட்டுக்கொள்கிறோம்.

மேற்குலகம் ஜனநாயகமெனச் சொல்லிக்கொண்டதும்,புரியவைத்ததும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கதையாகி வந்தும் இதுவரையெந்தத் தேசத்துள்ளும் மக்கள் சுயாதீனமாக வாழ்வதாகத் தெரியவில்லை!நமக்குள் ஜனநாயகங் குறித்துப் பரவலாக வகுப்பெடுக்கப் பலர் முனைந்துகொண்டே இருக்கின்றனர்.எனினும்,மக்கள் ஏதோவொரு தளைக்குட்பட்டுத் தமது ஆன்மாவையிழந்து உழைப்பிலிருந்தும் ,துய்ப்பிலிருந்தும் அந்நியப்படுத்தப்பட்டுச் சதா சாகடிகப்படுகிறார்கள்.இந்தச் சாவு பௌதிகவிருத்தலை மறுக்காத புதிய போக்காக மாறுவதிலிருந்து மனிதர்களைக் கட்டிப்போடும் வாழ்வுப் போக்குகளிலிருந்து இந்த ஜனநாயத்தைப் புரிந்துகொள்வது படு சிரமமானதாகவே இருக்கிறது.





பூர்ச்சுவாக் கட்சிகளின் சமூக ஆதிக்கமானது மனிதவுரிமையை இன்னும் மட்டுப்படுத்தி அவற்றை மூலதனத் திருட்சிக்குத் தங்கு தடையற்ற உலகைத் திறந்துவிடுவதற்கான சட்டவுருவாக்கத்தை நிறைவேற்றப் பாடுபட்டுவருதில் அதன் மக்கள் விரோத அரசியல் தௌ;ளத் தெளிவாகத் தெரிகிறது.இவற்றைத் திசை திருப்பப் பற்பல வர்ணக் கட்சியுருவாக்கங்கள்,அவை மக்கள் நலன்,மனிதவுரிமை,பயங்கரவாதம் எனும் முகமூடிகளை அணிந்தபடி அணிவகுக்கின்றன.இலங்கையில்,ஆளுங்கட்சிகள்,எதிர்க்கட்சிக் கூட்டணிகளெனவொரு பரந்துபட்ட மக்களது நலனைச் சொல்லிப் பிழைக்கும் அரசியல் யுத்தத்துக்குப் பின்பான இன்றைய சூழலில் உருவாகிவருகிறது.


தொடர்ந்திருத்தி வைக்கப்பட்டிருக்கும் இராணுவ ஆதிக்கமானது அதிகாரத்தை மக்கள் நம்பும்படி ஏற்க வைப்பதில் பிரயத்தனஞ் செய்கிறது.இது நிலைப்பட்டு,மக்கள் சமுதாயத்தைக் காவுகொள்ளுமொரு அரசியலூக்கத்தை இலங்கைச் சிறுபான்மை மக்களுக்குள் தொடர்ந்திருத்தி வைக்கப்படும் தறுவாயில் மக்களது எதிர்புக் குரல்களைத் திட்டமிட்டு ஆரம்பத்திலேயே நசுக்குவதற்கேற்றவாறு அந்நியச் சகத்திகள்-இலங்கை அரச கூட்டுத் தமிழ்ப் பகுதியில்பல்கலைக் கழகங்களையும் பயன்படுத்தி வருகிறது.


அதற்கேற்ப யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமானது தனது பாரம்பரிய "போராட்ட வரலாற்றை" இதன் குறியீட்டு வியூகத்துக்குப் பயன்படவும் வரலாற்றில் அதன் மாணவர்களது வர்க்கவுணர்வும்,சிறுபிள்ளைத்தன போராட்டப் பாரம்பரியமும் உடைந்தையாச்சு.


புரட்சியை பல்கலைக்கழகத்துக்குள் எதிர்ப்பார்ப்பவர்களும் புரட்சிக்கான புறநிலைகள் குறித்து வகுப்பெடுப்பதும் நமது காலத்தின் கோலம் ஆகி வருகிறது.

இப்படியாக நாம் மக்களைக்கொன்று தின்றுகொண்டே புரட்கரத்"தமிழீழம்"கண்ட பரம்பரை!

ப.வி.ஸ்ரீரங்கன்
26.12.2012

Montag, Dezember 24, 2012

தாலி அறுப்பார் பேசும்"புரட்சி"-புரட்டென்பதேவுண்மை!

மது போராட்டவாழ்வில்,கடந்த 25 ஆண்டுகளாக நமது சமுதாயம் தனது ஆற்றலை,சமூக இருப்பை,படைப்பாற்றலை,மனித வளத்தைப் பரவலாக இழந்துவிட்டது.போராட்டத்தாலான சமூகச் சிதைவு மனித சீவியத்தைத் தொலைத்துப் பூர்வீக வாழ்விடத்திலிருந்தே தமிழ்பேசும் மக்களைத் துரத்தியடித்துவிட்டுள்ளது.புலம்பெயர்ந்து நாடோடிகளாகவே அலைந்து அந்நிய மண்ணில் அடிமையானோம். இதையொருத்தன் பொருளாதார அகதிகளென்றும், "ஈழப்போராட்டத்தை "முன்னெடுக்காத தீயவர்களென்றும் புலி வழியில்-புலியின் பெயரால் திட்டுகிறன். 2009 வரை அவன் மௌனித்துப் பாசிசத்தின் முன் நின்றான்.அவனும் புலம்பெயர்ந்த பொருளாதார அகதியில் உட்படாதது "பாதிகப்பட்டவன்" என்பதாக?...


இன்னொருவன்,தானே புரட்சிவாதி,மாணவர் போராட்ட முன்னோடியென வகுப்பெடுத்துப்புலம்பெயர் தளத்திலுள்ள மாற்றுச் சக்திகளைப் புலிக்குப் போட்டுக்கொடுத்த கையோடு புரட்சி பேசிப் பிளந்தெறிந்த தமிழ் நியாயவாதங்கள் அனைத்தையும் பாசிசத்துக்குமுன் அடிபணியவும்,அதற்குள் அமிழ்ந்துபோகவும் புரட்டுப்பேசிக் கொண்டான்.அதன் தொடரில் இன்றும், நமது மக்களைக் காட்டிக்கொடுத்தபடி  இலங்கையில் ";இதோ புரட்சி"யென மக்களிடம் இராணுவாதவொடுக்குமுறையை நிலைப்படுத்தும் இந்த இரயாகரனோ  புலிகள் செத்த அடுத்த ஒரு சில மாதத்துள் சொந்த வீட்டைப் பாரிசில் வாங்கிக் குடி புகுந்தபடி, "புரட்சிக்குத் தயாராகிறார்கள் மக்கள்"என்று நிலத்து மக்களை எவருக்கோ காட்டிக்கொடுக்கவொரு கட்சியைக் கண்டபடி கட்டிக் கயவர்களைச் சேர்த்துக் காசு பார்கக்கிறான்.




நல்லது.


இயக்க-அரச ஆதிக்கத்தின் விளைவாக நிகழ்ந்த இவ் நடாத்தைகள் ஏலவே இலட்சம் முஸ்லீம்களில் ஆரம்பிக்கப்பட்டு இன்று, அந்த மக்களை விரட்டியடித்த பொதுமைப்பட்ட சமூகவுளவியலுக்குச் சொந்தக்காரர்களான தமிழ்பேசும் மக்களையுமே மெல்ல வாழ்விடங்களைவிட்டுத் துரத்தியடித்துள்ளது.


தமிழீழம் என்ற அரசியல் சூதாட்டம் எத்தனை ஆயிரம் தலைகளை உருட்டியும் தனது தவறைக்குறித்து மிதப்பாகவே பதிலளிக்கிறது.இதன் பின்னாலிருந்து மீளவும் அரசியல் செய்யமுனையும் தமிழ் தேசியத்தின் போலி முகங்கள் தமது வர்க்கத்தின் நலனைப் பிரதானப்படுத்தித் தமிழ்பேசும் மக்களைக் குறித்தான எல்லாவகை நியாயங்களையும் தமிழ் தேசத்தின் விடுதலை என்ற பதத்துக்குள் விளக்க முனைகிறது.



புரட்சியென்கிறது,
புதியஜனநாயகமென்கிறது.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்கிறது!
சிங்கள மக்களுடன் உரையாடலென்கிறது.


இராணுவத்துள் இணைந்த பெண்களது உரிமையென்றெல்லாம் காதில் பூவைக்கும் இந்த இரயாகரன்கூட்டு சொந்தவீடு,சொந்தக் கடைகளெனச் சொத்தை வைத்துப் புரட்சி செய்கிறதாம்.


விட்டால் அவையெல்லாம் கட்சி நிதியெனச் சொல்லவும் ஒரு பெயர்ப்பலகைக் கட்சியையும் தயார் நிலையில் வைத்திருக்கிறது!


பாருங்கள்,பிழைப்புவாதிகள் புலிவடிவில் மட்டுமல்ல அப்புலிகளால் புரட்சி வேடம்போடவைத்த தமது புரட்டு வாதிகளையும் புரட்சிக்கரர்களாகக்காட்டிப் பிழைப்புவாதம் புரட்சியென்றும் வரலாறு எழுதப்படுகிறது.


இப்படி, இவர்கள் செய்த போராட்டமெல்லாம் மக்கள் சொத்தை இலங்கையின் வங்கிகளுக்குள் கொள்ளையடித்ததும் அதைக் கையக்கப்படுத்த ஒருவனையொருவன் போட்டுத் தள்ளியதும் புரட்சிக்குரிய குணாதிசயங்களாக நமது வரலாறு எழுதப்படுகிறது.


நமது மக்களைப் பலவடிவில் சிதைத் இந்தப் பரதேசிகள் மக்களை ஏமாற்றித் தமக்குச் சொந்தக் குடிமனைகளைக்கட்டியும்-கொள்முதல் செய்தும் வாழும்போது எதற்காக மீளவெஞ்சிய தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து சிங்களவரசின் இராணுவவாதத்துள் முடக்கும் சதியைப் போராட்டம்,உரிமை,புரட்சியென்று சொல்லிச் செய்கின்றனர்?


நமது காலத்தின் பீடைகள் இந்தக் கள்வர்கள்!


புரட்சி பேசியே ஒரு இனத்தைப்புலிப்பாசிசத்திடமும்,அந்நியச் சக்திகளிடமும் மண்டியிடப்பண்ணியவர்கள்,உண்மையான போராளிகளைக் கைகாட்டிப் பாசிசத்தால் அழித்தவர்கள்,விஸ்வா நந்ததேவனது கொலையோடு கோடிக்கணக்கான கற்றன் நசனல் வங்கிக் கொள்ளைப் பணத்தை-நகைகளைத் தமக்குள் புதைத்துக்கொண்டனர்.


இவர்கள் யாருடைய சொத்தை வங்கிக்குள் கொள்ளையடித்தனர்?


சிங்கள அரசினது செல்வத்தை?


இல்லை-இல்லவேயில்லை!


அப்பாவி யாழ்ப்பாண விவசாகிகளது சிறுகச் சிறுகச் சேர்த்த தங்கத்தைப் பணத்தைக் கொள்ளையிட்டனர்.அதைவைத்துச் சொத்துச் சேர்த்தனர்.அதற்காக எத்தனை பேர்களைப் பாசிசத்துக்குப் போட்டுக்கொடுத்துப் போட்டுத் தள்ளி வித்தனர்.


தலை மறைவில் திரை விரித்துக் குடியிருப்பவர்கள் கொல்லைப் புறத்தால் கோடி சொத்துடன் சுத்தல் புரட்சி செய்யும்போது சுத்தமான விடிவு நமது மக்களுக்குக் கிடைத்த மாதிரியே!


தாலியறுப்பார்!!!


இது, கடந்தகாலத்துத் தவறுகளின் அறுவடையாக நிகழ்த்தப்படும் இன்றைய நயவஞ்சக அராஜகவாத அழிப்பாரைக்குறித்துப் பேசமுற்படுவது புரட்டுப் புரட்சிக்காரர்கள் அந்நியச் சக்திகளது கைக் கூலிகள்மட்டுமல்ல மக்களது செல்வத்தைக் கொள்ளையிட்ட கொடிய கொள்ளைக் கூட்டமென்றும் எச்சரிப்பதற்கே-இவர்கள் சதிகாரர்கள்,நமது மக்களைத் தொடர்ந்து அந்நியருக்குக் காட்டிக் கொடுத்து அடிமைப்படுத்தும் அந்நியத் தரகர்கள்என்பது வெளிப்படையாகப் பேசப்பட வேண்டும் என்பதற்கே!


இந்த இரயாகரன் கூட்டு, பெரும்பாலும் அரசியல்-புரட்சி-மக்கள் நலன்எனும் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் நியாயமான கருத்தியலோடு மெல்லத் தமது நலன்களையும், அதுசார்ந்த அழிவு அரசியலையும் நியாயப்படுத்துவதில் மற்றவர்களைச் சொல்லித் தப்பிக்கிறது.


இதைக் குறித்துக் கேள்விகளைக் கேட்டாக வேண்டும்

ப.வி.ஸ்ரீரங்கன்
24.12.2012

Mittwoch, Dezember 05, 2012

மனோ கணேசன் வரைத் தொடரும் இரயாகரன் குழுவினது சதி!

//இலங்கையில் இனப்பிரச்சனையைத் தீர்க்க, மனோகணேசனிடம் உள்ள அரசியல் வழிமுறை தான் என்ன? மக்களைச் சார்ந்து போராடும் அரசியல் வழிமுறையைக் கொண்டிருக்கின்றாரா? இல்லை. மாறாக ஊடகத்தைச் சார்ந்து இனவாத அறிக்கைகள் விடுவதும், தர்க்கங்கள் மூலம் தன்னை வேறுபடுத்திக் காட்டி, தேர்தல் மூலம் பிழைப்பு அரசியல் நடத்துவதை குறிக்கோளாக கொண்டவர். இனப்பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்றால், ஆளும் மக்கள் விரோத கூட்டத்தைச் சார்ந்து நிற்பதைத் தாண்டி, மக்களை சார்ந்து வழிகாட்ட எதுவும் அற்றவர். இதைவிட இது போன்ற இனவாதிகளிடம் வேறு மாற்றுவழி எதுவும் கிடையாது.//  -பி.இரயாகரன்

ன்னத்தைச் சொல்ல? இரயாகரனுக்குத் தொடர்ந்து தமிழ்பேசும் மக்களது அழிவிலும்,பாசிசத்துக்குள் அவர்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதிலும் ஒரு வசதியான வாழ்வு கிடைத்திருக்கிறது. தொடர்ந்ததைத் தக்க வைத்தாகவேண்டுமானால் தமிழ்பேசும் மகளுக்கெதிராகச் செயற்பட்டாகவேண்டும்.இதைத்தாம் இரயாகரனது எஜமானர்கள் விரும்புகிறார்கள்."இதைத் தொடர்ந்து மிக நுணுக்கமாகச் செய்யும் இரயாகரன், பலதரப்பட்ட அரசியல் முறைமைகளில் தன்னைப் புரட்சியாளனாகவும்,மார்க்சியவாதியாகவும் காட்டிக்கொள்வதற்குப் படாதபாடு பட்டுக்கொண்டு மக்கள் விரோத அரசியலைத் தொடருகிறார்" என்று, அடித்துக் கூறுவதற்கு மனோ கணேசன் மீதான அவரது காட்டிக்கொடுப்பு-குலைப்பு அரசியல் சாட்சியாகிறது. இத்தகைய, மக்கள் விரோத அரசியலை இவர் கைவிடாதவாறு இவரை வழி நடாத்தும் அந்நிய முகவர்கள் மிக நுணுக்கமாகவே புரட்டுப் புரட்சியை இரயா மூலம் அவிழ்த்து விடுகின்றனர்.இப்போது,இலங்கையில் தோன்றியவொரு "அடுத்த பெயர்ப் பலகை", முன்னிலை சோசலிசக் கட்சியென்ற லொபிக்குழுவை ஆதரித்துக்கொண்டு புதிய முகமூடி தரிக்கும் இராயாவை வினவுதளம் சரியாகவே எடைபோட்டுக்கொண்டதும் வரலாறு.

இதையவர், தொடராத பாதைகளின் வழியெல்லாம் வலிந்து உட்புகுந்துகொள்வதற்கேற்ப எவரையெல்லாம் சிதைக்கவேண்டுமோ சிதைத்துப் புரட்டுசீ பண்ணுவது தொடர்கதையாகிறது.





தமிழ்பேசும் மக்களை ஒடுக்குபவர்களுக்கு ஒட்டுரஞ்சிக்கொண்டு "புரட்சி" பேசிய இந்த அரசியலானது 1986 இல் ஆரம்பமானது. புலிகளால் கைது பண்ணிக் காவலில் இருந்து தப்பியதென்ற ரீல் படச் சுருளோடு இந்த மனிதன் வெகுவேகமாகவே தமிழ்பேசும் மக்களது எதிர்கால விடுதலைக்கெதிரானவொரு பாத்திரத்தைத் தேர்ந்துகொள்கிறார்.அதைத் தொடருவதற்கேற்ப அவரிடம் ஒதுங்கிய பல கோடி இரூபாய் சொத்தானது, யாழ்ப்பாண மக்களது சிறுகச் சேர்த்த செல்வத்தைக் கற்றன் நசனல் வங்கிக் கொள்ளையாகக் கொண்ட "இவரது" இயக்கச் ஸ்ரான்ட்!

கட்ட நசனல் வங்கிக் கொள்ளையின் வழி யாழ்ப்பாண அப்பாவி மக்களது இந்தப்பணத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தந்திரத்தின் வழியாகவொரு காட்டிக்கொடுப்பு அரசியல் புலிகளது பேரத்துள் உருப்பெற்றது.இதன் தொடர் நிகழ்வானது அனைத்தையும் குலைத்தல்,முடியாதபோது உள்வாங்கிச் சிதைத்தலெனும் மரபுக்குட்பட்டது.புலம் பெயர் வாழ்வில் நாம் இவரது அரசியலை வைத்துரைக்கும்போது அதன் இருண்ட பக்கங்களை நாம் பலமாகக் கட்டுரைகளில் சுட்டிக் காட்டியுள்ளோம்.

இரயாகரனுக்கு நிகராகத் தமிழ்ச் சமூகத்தில் மிகுதியாகப் "புரட்சி" பேசிய பல சுத்துமாத்துப் பேர்வழிகள் இரயாவைக் குறித்து மௌனித்திருப்பது தமது சொந்த நரகல் வாழ்வினது அச்சமாகவே!





இன்று,மாற்றுக் கருத்து,மண்ணாங்கட்டியெனவும்,புரட்சியெனவும் பசப்பும் இந்தக் கூட்டமானது புலம்பெயர் வாழ்வில் சீரழிந்து சின்னா பின்பட்டு நிற்கும் அரசியலுக்குப் பாத்திரமானது.இந்தப் பிசாசுகள் செய்யும் மக்கள் விரோத அரசியலின் அதியுச்ச வடிவமானது இரயாகரனது "புரட்சி" வேசத்துக்குள் மையங்கொள்வதென்பது பலமிழந்து ஒடுங்கிக்கிடக்கும் தமிழினத்துக்கான குரலாகத் தென் இலங்கையில் ஒலிக்கும் ஒரே குரலான மனோ கணேசனைப் பதம்பார்ப்பதிலிருந்து மிக யதார்த்தமாகப் புரியத் தக்கதாகும்.

கடந்த 25 ஆண்டுகளாக இரயாகரனெனும் குறியீட்டுப் பெயருக்குள் ஒளிந்திருக்கும் பெருஞ் சதிகாரக் கூட்டமானது ஒரு தனிநபரை முன்தள்ளிக்கொண்டு தமது ஒற்றன்-குழுச் சதியை மறைத்து வருகிறது.தனிநபர்களது அரசியற் தன்னார்வத்துள் முடுக்கிவிடப்படுவதுமாதிரியானச் சதி அரசியலானது உலக ஒடுக்குமுறை ஜந்திரங்களது ஒரு உறுப்பாகவே இருக்கிறது.இது பேசும் புரட்சியானது வெறும் புரட்டு."தமிழீழ" ப் போராட்ட வரலாற்றுள் ஒடுக்குமுறையாளர்களால் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட ஒற்றர்களது நயவஞ்சக வலையே இந்த இரயாகரன் எனுங் குறியீடாகும்!இஃது,தன்னால் தூற்றப்பட்டவர்களையே பின் தூசு தட்டிப் புரட்சியாளர் "தோழர்" என்று கயிறு திரிக்கும்.சமீத்து உதாரணம்: "பேராசிரியர்" சி.சிவசேகரம் என்று நான் குறிபிடத் தேவையிருக்காதென்று எண்ணுகிறேன்.

கிழக்கைப் பிரிக்கக் கருத்தியல் வலுக்கொடுத்த ஞானத்தையோ அல்லது, தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து சாதி வெறியர்களாக் காட்டித் தமிழ்பேசும் மக்களுக்குள் நிலவிய-நிலவும் சாதி முரண்பாட்டைக் கூர்மைப்படுத்திய தேவதாசன்,சோபாசக்தி போன்றவர்களையோ இதற்கும் மேலாக இரயாகரனையோ அம்பலப்படுத்தி, மக்கள் நலன்சார்ந்த அரசியலைச் செய்யும் தகுதி எந்த " மாற்றுக் கருத்தாளருக்கும்" இல்லாதிருப்பது தற்செயல் நிகழ்வல்ல!

புலம் பெயர்ந்த மாற்றுக் கருத்தாளர்களாகவிருந்தாலுஞ்சரி அல்லது தேசிய விடுதலைப் போராட்டஞ் செய்த புலிப் பாசிசமானாலுஞ்சரி மக்களுக்கு விரோதமாகவே தமது அரசியலை வகுத்துக்கொண்ட புள்ளில் ஒன்றுபடும்போது எவரை,எவர் அம்பலப்படுத்த? இதுதாம்,இன்றைய அனைத்து மோசமான சூழலுக்கும் காரணமானது.





நமது மக்கள் இலட்சக்கணக்காக இவர்களாலும்,சிங்கள இனவாத அரசாலும் அழிந்து நாசமான பின்பும் இவர்கள் செய்யும் குழுவாத அரசியலும் அதுசார்ந்த கயமைக் காட்டிக்கொடுப்பும்,குழப்புதல்-குலைத்தல் எனும்அந்நியச் சக்திகளது நரித்திட்டமாகும்.இது, நமது மக்களைத் தொடர்ந்து அநாதைகளாக்குவதாகும்.இவர்கள்,எங்கு திரும்பினாலும் "புரட்சி,புரட்சி,புதிய ஜனநாயகயகம் " என்பதெல்லாம் மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் அந்நியச் சக்திகளது லொபி அரசியல் நிகழ்ச்சிக்குட்பட்டதென்று நாம் கணித்தாகவேண்டும். எனவேதாம், தமிழகத்து மக்கள் கலை இலக்கியக் கழகமானது இவர்களது உறவைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி, இவர்களைத் தள்ளி வைத்திருக்கிறது.ஆனால்,புலம் பெயர் தளத்தில் அத்தகைய அரசியலைச் செய்யுந்தறுவாயில் எவரும் இல்லாதிருப்பதென்பது எல்லோருமே, மோசமான இயக்க வாதத்துக்குட்பட்ட மாபியாத் தனமான அரசியலுக்கும், அந்நிய ஆர்வங்களது அரசியல் நிகழ்ச்சிக்கும் உட்பட்டுக் கிடப்பதனாலாகும்.இவர்களே,தொடர்ந்து மாறி மாறிப் புரட்சி புடலங்காயென வகுப்பெடுத்து, நிலத்து மக்களைத் தொடர்ந்து இலங்கையரசின் இராணுவக் காட்டாட்சிக்குள் இருத்தி வைக்க முனைகின்றனர்.

இந்தப் புள்ளியை உடைக்கும் அரசியலை மனோ கணேசன் மிக நிதானமாக நகர்த்துகிறார் என்றே இன்றைய சூழலுள் நம்பியாக வேண்டியிருக்கிறது.வெளிப்படையானவொரு அரசியலை அவர் மட்டுமே வெளிப்படுத்துகிறார்.நேரடியான எதிர்புக் குரலை இராணுவ ஒடுக்குமுறைக்குட்பட்ட மக்களது அடிப்படையுரிமையின்வழி தொடரும்போது எங்கே இனவாதம் வருகிறது?





அந்நிய நலன்களது தெரிவில் முள்ளி வாய்க்காலில் இனவழிப்புச் செய்து, ஒருவினத்தையொடுக்கிய அரசின்மீது எத்தகைய கோசத்தின்வழி அரசியல் புரிந்தாகவேண்டுமெனத் தீர்மானிப்பது நிலத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களது அரசியற்றலைவர்களுந்தாம்.தென் இலங்கையின் பிரதான இனவாதக் கட்சிகளோடு ஒடுக்குமுறைக்குட்பட்ட மகள் நலன்சார் நிகரொத்த விமர்சனத்தை வைத்து, இலங்கை மண்ணிலிருந்துகொண்டே ஆளும் மகிந்தாவுக்கும் அவரது இராணுவ வாதத்துக்குமெதிரானவொரு அரசியலை முன்னெடுப்பதென்பது அவசியமானது.தொடர்ந்து மக்களது குரலையும்,அவர்களது குடிசார் அமைப்புகளது வருகைக்குமானவொரு பரந்த நியாயத் தன்மையை உலகுக்கு எடுத்துரைக்கும் குரலாகவே மனோ கணேசனின் பாத்திரம் போருக்குப் பின்னான இன்றைய இலங்கைச் சூழலுள் இருக்கிறது.அவர் பரந்துபட்ட மக்களை அண்மித்துக்கொள்வதென்பது இவர்களது நரித்தனமான திடீர் புரட்சிகர வர்க்கஞ்சார்ந்ததல்ல!அந்நியச் சக்திகளாலும்,சிங்கள இனவாத அரசாலும் பாதிப்படைந்த பலதரப்பட்ட வர்க்கத்தின் நலன்களும் இதுள் கலந்தே இருக்கும்.இத்தயைவொரு சூழலானது யுத்தத்துக்குப் பின் பல தேசத்துள் நாம் பார்த்ததுதாம்.இரயாகரன் போன்றவர்களது எஜமானர்கள் இப்போது அச்சமடைகின்றனர்.இந்த மனோ கணேசனது அரசியலானது பிளவுபட்ட உலக மூலதனத்துள் எந்தப் பக்கஞ் சாயுமென்பதிலுள்ள நெருக்கடியே இப்படிப் "புரட்டுசீ" பேசி அவரை விமர்சிக்கிறது.

மனோ கணேசனுக்குப் புரட்சிகர முகம் அவசியமில்லை. சமவுடைக் கோட்பாட்டுத் தத்துவமும் தேவையில்லை!அதற்கவர் உட்பட்டாகவேண்டுமென விரும்புபவர் மனோ கணேசனது வர்க்கவுணர்வையும் ,அவரது அரசியல் வருகையையும் புரியாதவராகவே இருப்பர்.

என்றபோதும்,ஒடுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மையினங்களது குறைந்த பட்சக் குரலாகவிருக்கும் மனோ கணேசனது அரசியற் பாத்திரமானது இன்றைய சூழலில் அதி முக்கியமானதென்பது பாதிக்கப்பட்ட-பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்களது தெரிவாகும்.இந்தப் பாத்திரம் அதே மக்களுக்கெதிராகவும் மாறிக்கொள்ளும் அல்லது மக்களைச்சார்ந்து முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்கட்காக நகர்ந்து கொள்ளும்.இதைத் தீர்மானிப்பது மக்களது குடிசார் அமைப்பாண்மைக்குட்பட்ட பொருண்மிய வாழ்வாகும்-அதன் நிலையாகும்!பஞ்சப் பரதேசிகளான தமிழ்பேசும் மக்கள் தமது வலயத்துள் அனைத்து வாழ்வாதாரத்தையுமிழந்து, தொடர்ந்திருக்கும் பல்லாயிரம் இராணுவத்துக்கேற்ப உற்பத்தியைச் செய்து, அதை இராணுவத்துக்கே தாரவார்க்கும் "உறுப்புகளாக" வைத்திருக்கும் இலங்கையின் அரச ஆதிக்கத்துள் மக்களது வாழ்நிலை "இராணுவப் பொருளாதாரவுற்பத்திச் சக்திகள்-உறவுகளெனும் நிலைக்குள்" முதலாளிய வர்க்க விளக்கம்-உணர்வு-உறவுகள் குறித்த உரையாடல்கள் புரட்டுத் தவிர வேறென்ன? இது, கடைந்தெடுத்த கயமைத்தனம்.

புலிகளது அழிவுவாத அரசியலது தெரிவில் இலங்கையரசானது பல மடங்கு அராஜகவாதக் கட்சியாதிக்கத்தை இலங்கைக்குள் சாத்தியமாக்கியது.புலி வழியான போராட்டமானது இலங்கைக் கட்சி, அரசியல் வரலாற்றில் அனைத்துப் பூர்ச்சுவாக் கட்சிகளையும் பெரும் நிதி மூலதனதைக்கொண்ட கட்சிகளாக்கி விட்டது.ஆயுதக் கொள்வனவிலிருந்து போராட்ட-எதிர்ப்போராட்ட அரசியல்வரைப் பல பில்லியன் இரூபாய்கள் வருமானமிக்க அரசியலாக இலங்கை அரசியல்நிலவரம் மாற்றப்பட்டபின் அனைத்துக் கட்சிகளும்,அமைப்புகளும், பிளவுபட்ட உலக நிதி மூலதனத்தோடான தமது சமரசத்துக்குட்பட்ட அரசியலது தெரிவில் தொடர்ந்து மக்களை ஒட்ட மொட்டையடிக்கும்போது மனோ கணேசனது பாத்திரம் எங்ஙனம் அமைய வேண்டுமெனப் புலம் பெயர் மண்ணிலிருந்து புரட்சி, நிதிவைத்துப் பிரசுரங்கள்,கட்சி நிதிகளெனச் செய்துவரும் ஒரு மாபியாக் கூட்டமானது வகுப்பெடுப்பது எவ்வளவு மோசடியானது?





இலங்கைப் பாசிச இராணுவத்தால் சூழப்பட்ட இலங்கை மக்களது குறைந்த பட்ச ஜனநாயத்துக்கான குரலாகவும்,அவர்களது நலன்களையுயர்த்திப்பிடிப்பதற்கான தெரிவில் அன்றாட நெருக்குதலைத் தடுத்து, உலகுக்கு அம்பலப்படுத்தும் சிறு பொறியாவிருக்கும் மனோ கணேசனைப் பிழைப்புவாதியெனப் பாயும் இரயாகரனை என்னவென்பது?

 இப்படி எத்தனை மனிதர்களைக் குலைத்துச் சிதைத்துத் தமது எஜமானர்களுக்காகத் தமிழ் பேசும் மக்களது எதிர்காலத்தையே நாசமாக்கினர்?, இந்தக் கூட்டம் புலியினது சதி அரசியலுக்கு மகுடஞ் சூட்டவில்லையா?,முள்ளி வாய்க்காலில் புலி - அரச போர் ஜந்திரங்கள் மக்களை வேட்டையாடியபோது அதைத் தியாகமெனப் பறைகொட்டிய பிழைப்புவாதிக்கு நிகராக இன்னொருவர் உண்டா?

முட்டாள்த்தனமாக மார்க்சியத்தைப் புரிந்துகொண்டு,இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் பொருளாதாரப் பொறிமுறைகளையும் அதன் உட்பிரிவுகளுக்குள் இருக்கும் படைப்பாற்றலையும் புரியாதவொரு பின் தங்கிய புரட்டல்வாதிக்குத் தனது எஜமானர்களது கட்டளைக்கேற்ப இயங்குவது அவசியமாகிறது. மக்களுக்கான குரலை-மக்களது இயலாமைச் சூழலின் முன் நகர்த்தும் நிலத்து அரசியற் சிறு பொறிகளையும் சீரழித்துச் சிதறிடிப்பது அவசியமாகவிருக்கிறது.இந்த இரயாகரனது பினாமித்தனமான செயற்பாடானது மக்களைத் தொடர்ந்து அடிப்மைப்படுத்தும் அந்நிய வியூகங்களால் வழி நடாத்தப்படுவதென்பதை நாம் எப்போது புரியப்போகிறோம்.

இன்னும்,எத்தனை விதமான வேட்டைகள் மூலம் நமது மக்களது குறைந்த பட்ச அரசியற் குரல்களை இந்த இரயாகரன் வேட்டையாடப் போகின்றார்?

புலிவழி நிர்க்கதியாக்கப்பட்ட நிலத்து மக்களும்,புலத்து மாற்றுக் கருத்தாளர்களென்ற இயக்கவாத மாபியாக்களால் பழிவாங்கப்பட்டுச் சிதறடிக்கப்பட்ட புலத்து அகதித் தமிழர்களும் திடீர் புரட்சிக்குத் தயாராகி, மகிந்தாவைச் சாய்க்க வேண்டுமோ?புலத்தில்,அனைத்தையும் குழப்பி, அதி வேகத்தில் குழுவாதப் பெயர்ப் பலகைக் கட்சிகட்டிய( புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ) தேவையே அந்நிய எஜமானர்கள் தம்மைத் தொடர்ந்து ஏஜென்டுகளாகக் கருதிக்கொள்வதற்கும், எதிர் புரட்சிக் கோட்டாவைத் தம்மிடமே தந்து நம்பியிருக்கவுமென்பது நாம் அறியாததா?

30 ஆண்டுகால நரவேட்டைக்குட்பட்டவொரு இனமான தமிழ்பேசும் மக்கள் தம்மை நிலைப்படுத்திக் குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களையே தரிசிக்கவிடாது புரட்சி, யுத்தம் எனப் படம் காட்டி இலங்கைப் பாசிச இராணுவத்தின் இருப்புக்காகக் காரியமாற்றும் இந்தக் கபோதிகள் மனோ கணேசனைக் குறித்துப் பேசும் அரசியல் தார்மீகந்தாமென்ன?

இரயாகரனால் பிழைப்புவாதிகளெனச் சொல்லப்பட்டவர்கள் பலர். குறிப்பாகப் பேராசிரியர் சிவசேகரம் இப்போது, இரயாகரனது நிதி வழங்கலுக்குட்பட்டவொரு தோழராகியுள்ளார்.அவரோ இரயாவின் எஜமானர்களுக்கு " இரயாகரன் தொடர்ந்து செய்யும் சதி அரசியாலானது பலரை உட்கொண்டு சிதைக்கும் தொழிலை (இரயாகரன் குழுவினது எதிர்ப் புரட்சி ) மிகச் சாதுரியமாக நடாத்துகிறார்" என்று, அந்த எஜமானர்கள் நம்புவதற்கானவொரு குறியீடாகிப்போனார். இதன்வழி, இரயாகரன் குழுவினது எஜமானர்கள் தொடர்ந்து தமது சதி அரசியலைச் செய்ய இராயாவுக்குத் தொடர்ந்து பட்டயமெழுதிக்கொடுத்திருப்பதற்கு மேலாக இவர்களென்ன புரட்சியா செய்யப் போகின்றனர்?அதே குலைப்புச் சிதைப்பு-மக்கள் விரோதச் சதி அரசியல்!,பாதி வழிவரை கூட்டிச் சென்று கொலை செய்யும் இந்தக் கூட்டமா புரட்சிக்குரிய புற நிலவரத்தைப் புரிந்து நடக்கும்?

"மக்கள் விரோதிகளைத் தொடர்ந்தும் மௌனிப்பதால் நாம் வளர்த்து வடிவமெடுக்க விடுகிறோமென்பதைப் புரியும்போது அனைத்தும் ஓர் நாள் அம்பலத்துக்கு வரும்.அப்போது,வரலாற்றில் இத்தகைய சதியாளர்கள்,மக்களைக் காட்டிக்கொடுப்போர் இருந்த இடமே தெரியாது மறைந்து போவார் " களெனச் சொல்லும் காலமும் தொலைந்தே போச்சு-இதுதாம் இன்றைய அவலம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
05.12.2012
   

Sonntag, Dezember 02, 2012

புலம் பெயர் தமிழரது "புரட்சி,தலித்துவம்,கிழக்கியம்"- மறுவாசிப்பு!

புலம் பெயர் தமிழரது "புரட்சி,தலித்துவம்,கிழக்கியம்"- மறுவாசிப்பு!

ன்று மீளவும், சிந்தித்துப் பார்க்கிறேன்.கடந்த காலத்தில் நாம் பெருவாரியாக மக்களை அண்மித்த அரசியலையே செய்து வந்திருக்கிறோம்.

1986 இல் இருந்து நீண்ட இந் நோக்கானது மக்களது இன்னல்களுக்குக் காரணமான இலங்கைப் பாசிச அரசு,இயக்கவாத மாயை மற்றும் புலிகளது மாப்பியாத்தனமான அந்நிய அடியாட்படைச் சேவையென்று ஒரு நிதானமான அரசியற் கருத்தாக்கத்தைக் கண்டடைந்தோம்.

பல இயக்ககங்கள், இந்தியாவின் தயவில் மக்களை வேட்டையாடிக்கொண்டு புலிகளுக்கு நிகராகவே மக்களையொடுக்கியபோது எதிரியான சிங்களவரசு அவர்களைத் தனது உறுப்பாக மாற்றியுங்கொண்டது.



புலிகள் மாறி மாறி வந்த அரசுகளுடன் சமரசம்-பிடிவாதமெனச் செய்துகொண்டு தமது இருப்புக்காகப் போராடியபோது புலத்தில் மிக எளிமையான மனிதர்களாகக்காட்சிப்பட்ட பல நண்பர்கள் மக்களை அண்மித்த அரசியல் செயற்பாட்டுக்குட்பட்டனர்.

அவர்களுடன், உடன்பாடுகொண்டு"இந்த இலக்கியச் சந்திப்பும்"ஒரு உரையாடலுக்கான மாற்றுத் தளத்தை இயக்கும் கருவியாக நமக்குள் மலர்ந்துகொண்டது.

ஆக்கதாரர்கள்,சஞ்சிகை வெளியீட்டாளர்களின்றி இலக்கியச் சந்திப்புக்கிடையாது.பீட்டர் ஜெயரெத்தினமோ இல்லைப் பார்த்திபனோ அல்லது அறுவைச் சீனி லோகனோ,சிந்தனைப் பராவோ இதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது.இதைச் சாத்தியமாக்கப் பரவலாகப் பலர் தமது உழைப்பை நல்கினர்.இதுள்,எனது ஊரவளான விக்கினா பாக்கியநாதன்கூட முக்கியமாகச் செயற்பட்டவளே.




இப்போது தொடர்ந்து யோசித்துக்கொண்டிருக்கும்போது, இலங்கைக்குச் சென்று மாதக்கணக்காகத் தங்கி ,மகிந்தா அரசுக்கிணக்கமான அரசியலைப் பலர் செய்கின்றனர்.இதுள்,ஞானம் எனும் எம்.ஆர்.ஸ்டாலின்,தேவதாசன்,சுகன்,கீரன்,இராகவன்,ரெங்கன்,புளட் ஜெகநாதன்,சிவராசா,சீனி லோகன்,கொன்சன்ஸ்ரையன்,தேசம் குழு போன்றோர் மிகக் கணக்கிடத்தக்க புலம்பெயர் தமிழர்கள்.

இவர்களோடு, சோபாசக்தி மாதக்கணக்காவும் இந்தியாவில் தங்கி அரசியல் செய்வது கண்கூடு(இரயாகரன் குறித்தும் ஒரு கணிப்பீட்டுக்கு நாம் வரவேண்டும்.மேற்சொன்னவர்கள் இலங்கை,இந்தியாவென்று செல்லும்போது இரயாகரன் இங்கே செல்வதில்லை.அதற்கான முழுக்காரணமும் கட்டன்நசனல் வங்கியின் கோடிக்கணக்கான பணத்தின் கொள்ளையில் பெருந்தொகை பணத்தை வைத்திருக்கும் இரயாவுக்கு இலங்கைக்கு என்றுமே செல்லமுடியாது!இலங்கை சட்டவாதத்துக்குட்பட்டவொரு அரசாகவும்,நியாய தர்மத்துக்குட்பட்ட அரசாகவிருக்கும்வரை. அது,இலங்கைக்குப் பொருந்தாதென்பதால் இரயாகரன் வருங்காலத்தில் கொழும்பில் "புதிய ஜனநாயக மார்க்சிய லெனியக் கட்சி" என்ற பெயர்ப் பலகைக் கட்சியினது நிகழ்வில் பங்கு பெறலாம்.ஆனால்,இரயாகரனோ புலி செத்த அடுத்த, ஆண்டில் புதிய வீடும் கொள்முதல் செய்திருக்கிறார்.ஒரு அச்சகத்துள் கூலியாக வேலைக்கிருக்கும் நண்பருக்கு இலங்கையிலிருந்து நிகழ்வுக்காகப் பெரியவர்களைப்,பேராசிரியர்களைச் சீடர்களை அழைக்க முடிகிறது.அவர்களுக்கும்,அவர்கள் சார்ந்த புதிய ஜனநாய மார்க்சிய லெனியக் கட்சிக்குப் பல இலட்சம் நிதியும் வழங்கக் சுடியதாகவிருக்கிறது!எப்படி,இஃதெல்லாம் சாத்தியமாகிறது?ஒரு அச்சகக் கூலிக்கு?).




அவ்வண்ணம், தம்மைத்தாமே புத்திசீவிகளாக வர்ணிக்கும் சுசீந்திரன்,மு.நித்தியாநந்தன் போன்றவர்களும் ஊரெல்லாம்-உலகெல்லாம் பறந்து நிகழ்வுகளில் உரை செய்கின்றனர்.இந்த அனைத்துச் செயற்பாடுகளும் சிங்கள வல்லாதிக்த்தால் இலங்கையில் ஓடுக்கப்படும் மக்களுக்கான அரசியல் அல்ல!இவர்கள்,அனைவருமே எங்கும் தொடர்ந்து பணியிலிருப்பதாகவோ,ஒரு பொறுப்பான பணியில் வருடக்கணக்காகவிருந்து செயற்பட்டவர்களோ கிடையாது.

சீசீந்திரனுக்கு,அவரைத் தத்தெடுத்த ஜேர்மனிய முது தம்பதினரால் வீடுவளவு இனமாக வந்தது.அந்தத் தம்பதியினர் தமது சொந்த உறுவுகளுக்கே-குழந்தைகளுக்கே அந்த முதிசத்தைக் கொடுக்காது இவருக்கு வழங்கிச் செத்தனர்.அதன் பெறுமதி அண்ணளவாக அரை மில்லியன் யூரோக்களைக் கொண்டது.இந்தச் சுசீந்தரனுக்குச் சொத்து வந்திருப்பினும் அதைப் பராமரிக்கும் செலவெனப் பல நூறு யூரோக்கள் மேலதிகமாகவும்,குடும்பச் செலவெனவும் மாதம் 2000€  யூரோத் தேவையாகவே இருக்கிறது.எந்த வேலை வெட்டியுமற்ற இந்த வெட்டிப் பயல், இந்தப் பணத்தை எவர் மூலம் பெறுகிறார்.?-எனக்கு ஆச்சரியமாகவிருக்கிறது.மொழி பெயர்ப்பாளரென்பது வெறும் குசும்பு!இப்போது எவருக்கும்,எவரும்"முழி" பெயர்க்கலாமே தவிர மொழி பெயர்க்கத் தேவையில்லை!




அண்ணன் நித்தியாநந்தன் தன்னைப் பேராசிரியர்,டாக்டர் என்றழைக்கும்போது உச்சி மகிழ நிகழ்வுகளில் உட்கார்ந்திருக்கிறார்.ஒரு சாதரண விரிவுரையாளன்,எங்கும் டாக்டர் பட்ட ஆய்வைச் செய்து உச்ச தொழிலில் ஈடுபடாத இவருக்குக் கனடாவரை சென்று உரை நிகழ்த்த  எப்படிப் பணம் புரளுகிறது?எங்கே-எந்த நிறுவனத்தில் வேலை புரிகிறார்.மாதக் கணக்கில் இந்தியாவில் தவங் கிடந்து மீண்ட இந்த மனிதருக்கும் வசதிகள் பெருகுகிறது?-எப்படி?

ஞானத்தையும்,சுகனையும்,தேவதாசனையும்,சோபாசக்தியையும் விட்டு விடலாம். இவர்கள் நேரடியாக ஒடுக்குமுறையாளர்களது சம்பளப் பட்டியலில் இருந்துகொண்டு நம்மையும்,நமது மக்களையும் முட்டாளாக்குபவர்கள்!



ஆனால்,இத்தகைய குள்ள நரிக் கூட்டமானது புலம்பெயர்ந்து வாழும் தேசத்தில் குருதியாறைத் திறக்குமொரு அரசியலைச் சந்திப்புக்கள்,இலக்கியவுரையாடல்களெனச் செய்யும்போது இவர்களது வீட்டிலும்,மண்டபங்களிலும் தவழ்ந்து குடித்துக் கொட்டமடிக்கும் இளைய தலைமுறைப்"படைப்பாளிகள்"சிந்தனைச் சிற்பிகளுக்கு என்ன வகைமாதிரியான கணிப்பீடுருவாகிறது?

இவர்கள்,சிங்கள அரசுக்குச் சாமாரஞ் செய்யும் துஷ்டர்களோடும், இந்தியவரசின் உளவு நிறுவன முகவர்களோடும் கூடியுண்டு,குடித்துக் கும்மாளமிடும்போது இவர்களது"மக்கள்"நலக் கருத்தாடல்-அரசியலது உண்மை வடிவமென்ன?


தொடர்ந்தும்,எமது மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

ஒரு புறம் புலி மாபியாக்கள்"தேசியம்-தேசியம்"என்று சொல்லிச் சொத்துச் சேர்ப்பதைத் சமீபத்தில் சாத்திரி என்ற புலிவால் அம்பலப்படுத்தியதுபோல் இவர்களும் மக்களுக்கு விரோதமாகவே செயற்படுகின்றனரென்று  எவன் உண்மையாகப் பேசுவான்?- இவர்களோடு கூடிக் கூத்தடிக்கும் முன்னாள் புலி விசுவாசத் தம்பிகள் இதற்குத் தயாரா?

நீங்கள், மக்களை அண்மித்து இயங்கினால் அதை நோக்கிச் செயற்படுங்கள்!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.12.2012