Dienstag, Januar 17, 2012

கையெழுத்திட்ட நபர்கள் எவரென்பதா பிரச்சனை?

71 நபர்கள் கையெழுத்திட்ட அறிக்கையுள்: கையெழுத்திட்ட நபர்கள் எவரென்பதா பிரச்சனை?

வளர்மதியின் முகநூல் நிலைத்தகவற்பகுதியில் நிர்மலா தலைமையின் கீழ், 71 நபர்கள் கையெழுத்திட்ட அறிக்கை குறித்த விவாதம் நடக்கிறது.அதுள், பெரும் பாலும் நமக்குத் தெரிந்தவொரு அன்பர் கையெழுத்திட்ட சமாச்சாரம் குறித்துப் பெரும்பாலும் கேள் விகள் எழுகிறது.அறிக்கையின் பின்னாலிருக்கும் அரசியலையும்மீறி , தனிநபர்சார்ந்தியங்கும் சூழலும்,தனிநபர் நடாத்தையும்சார்ந்து இந்தக் கேள்வி முக்கியமடைவதால் அது குறித்த சிறு குறிப்பாக இதை எழுதுவது அவசியமாகிறது.

இதுள் யாரு கையெழுத்திட்டார்கள் என்பதல்லப் பிரச்சனை.பிரச்சனை, அந்த அறிக்கைபேசும் அரசியல்.அதன் பின்னாலுள்ள வியூகம்.இதை நகர்த்துவது நிர்மலாவோ அல்லது அந்த 70 நபர்களுமோ அல்ல.அந்த நபர்கள்சார்ந்தியங்கும் தளம்,அது முன்தள்ளும் அரசியல்,அதனுடாகவிருத்தியாகும் அமுக்கக் குழுக்கள்,இவற்றை முன்தள்ளும் அதிகார வர்க்கம்.

இவையூடாகத் தமிழ்பேசும் மக்களது இன்றைய அரசியற்றலைவிதியையும்,அவர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவழிப்பையும் மெல்ல நீர்த்துப்போக வைக்கும் இந்தத் திசை திருப்பும் வியூகத்தைக் குறித்தே சிந்தித்தாகவேண்டும்.

இதற்குப்பின் பாரிய அழிவுச் சக்தியும்-பிராந்திய ஆதிக்கமும்,அதுசார்ந்தியும் உள்ள நாட்டுப் பெரும்பான்மை இன நலன்நோக்கிய அரசியலும் இருக்கிறது.அது,இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஒன்றுடனொன்று மோதவைத்தலூடாகவொரு அரசியலை முன் தள்ளுவதால்,இதுவரை அழிப்பு அரசியலை செய்த பிரதான எதிரியான இலங்கை அரசையும்,அந்த அரசுக்குப் பின்னால் இருக்கும் ஆளும் வர்க்கத்தையும் திட்டமிட்டுக் காக்க முனைகிறது இந்த அறிக்கை.

யாழ்ப்பாண மக்களிடம் விடப்படும்கோரிக்கையைக் குறித்து மேலோட்டமாக விளங்க முனையும் எந்த நபரும் இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்குத் திட்டமிட்டுச் சூது நிரம்பிய அரசியலைக் கொண்டியக்குகின்றனர் என்பது இங்கிருக்கும் உண்மையாகும்.

வன்னியுள், கொத்துக்கொத்தாக மக்களை இரண்டு அரச ஜந்திரங்களும் வேட்டையாடியபோது,யாழ்ப்பாண மக்கள் அப்படியொரு உலகத்தைக் கேள்விப்பட்டதாகவோ அன்றி வன்னியென்பது தமக்குப்பக்த்தில்தாம் இருக்கிறதாகவோ உணரத்தலைப்பட்டார்களா?

தமது மக்களில் கணிசமானவர்களை இனவாதச் சிங்கள அரசும்,புலியும் மாறி மாறி வேட்டையாடியபோது,அதைக் குறித்துக் கவனத்தைக் குவிக்கவோ அதற்கெதிராக அணிதிரளவோ முடியாதவொரு இராணுவக் காட்டாச்சிக்குள் இருத்தி வைக்கப்பட்ட யாழ் மாவட்ட மக்களிடம்போய், "இஸ்லாமியர்களது மீள் குடியிருப்பு,இசைந்து வாழ்தல்-நல்லிணக்கம்" என வகுப்பெடுப்பது மிகத் தந்திரமானதென்பதை எந்தச் சிறிய பாலகர்களும் அறிய முடியும்.

இங்கு எந்த நபர் கையெழுத்திட்டாலும்,அது குறித்த விவாதமாக இதை நகர்த்துவது விவேகமில்லை!

அதன் பின்னாலுள்ள அரசியலைக் குறித்தே விவாதித்து அம்பலப்படுத்தியாகவேண்டும்.

ஒவ்வொரு நபரும் தனத்து வர்க்கவுணர்வுக்கொப்பவே உலகக் கண்ணோட்டத்தை வளர்த்திருப்பார்.அதைத் தாண்டியவொரு பரந்துபட்ட மக்களது நலனை முன்தள்ளுவதென்பது வர்க்கச் சமுதாயத்தில் இயலாதகாரியம்.எனவே,இனவொடுக்குமுறை நிகழும் ஒரு நாட்டில்-திட்டமிட்டு இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டவொரு நாட்டில், இத்தகைய பின்புலத்தை அடியோடு மறைத்துக்கவனத்தைத் திசை திருப்பும் இந்த அரசியலைக் கேள்விக்குட்படுத்துங்கள்.

வன்னியிலும்,தமிழர் தேசமெங்கும் இனவழிப்பைக் கட்டவிழ்த்துவிட்ட இலங்கை அரசானது, அனைத்து அழிவுவாத அரசியலுக்கும்(வடபுலத்திலிருந்து முஸ்லீம்கள் துரத்தப்பட்டதற்கும்) காரணமானது.இந்த இலங்கையினது அதிகாரத் திமிரைத் தனக்கேற்ற வகையில் பயன்படுத்த விரும்பிய இந்தியப் பிராந்திய நலனும்-மேற்குலக-அமெரிக்க நலன்களும் இலங்கை வாழ் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமக்கேற்பப் பயன்படுத்தி வருகின்றன.இதன் உச்சக்கட்டமே,இப்போது நிர்மலா தலைமையில் திசை திருப்பும் அரசியலாக மேலெழுகிறது.

தமிழ்பேசும் மக்களுக்கெதிராக நிகழ்ந்த வன்னிப்படுகொலைக்குத் தார்மீக பொறுப்பேற்க வேண்டிய இலங்கை அரசு,தமிழ்பேசும் மக்களிடம் மன்னிப்பும்,அவர்களது உரிமைக்கு உத்தரவாதமும்-பலகோடி நஷ்ட ஈடும் செலுத்தித் தமிழ்பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வை க் கொடுக்குவேண்டிய நிலையில்-அப்படித் தள்ளப்பட்டவொரு நிலையில்-அதை மறைத்துக் கவனத்தையும்,அரசியல் நகர்வையும் திசை திருப்பிச் சிறுபான்மை இனங்களைத் தமக்குள் அடிபட வைக்கும் இந்தப் பெரும்பான்மை இன நலன்சார்ந்த வியூகத்தை அறியாத புள்ளியைத்தாம், தனிநபர்களது கையெழுத்துப்பற்றிய உரையாடலில் நகர்த்திக் கொண்டிருக்கிறீர்கள். இதைவிட்டு மேலே செல்லுங்கள் கற்றறிந்தோரே!

அவர் கையெழுத்திட்டாலென்ன அல்லது இவர் கையெழுத்திட்டாலென்ன அதனூடாக நகர்த்தப்படும் அரசியல் நலன்கள் என்ன,அவை எந்த வர்க்கத்துக்குச் சார்பானது என்பதிலிருந்து,இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைக் கவனப்படுத்திக்கொள்வதுதாம் அவசியமாகிறது.இந்தியாவாலும்,உலக தேசங்களாலும்,பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள் சிங்கள இனவாத அரசால் இனப்படுகொலைக்குட்பட்டார்கள்.அந்தப் படுகொலைக்கு எதிரானவொரு அரசியலையும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தையும் வழங்க முடியாதவொரு சூழலில்,பாதிக்கபர்பட்ட மக்களிடமே சென்று அவர்களால் இஸ்லாமியர்கள் துரத்தப்பட்டார்கள்-அழிக்கப்பட்டார்கள் என்று வகுப்பெடுத்து,அவர்களாலேதாம் முஸ்லீம்கள் அரசியல் விழிப்புணர்வடைய வைக்கவேண்டுமென்பதும்,பின் தமிழர்களும்,இஸ்லாமியர்களும் சேர்ந்து இலங்கை அரசிடம் தமதுரிமைக்காகப் போராடுவதென்பதும் திட்டமிட்ட சதி.

அரசு என்ற மிகப்பெரிய அடக்குமுறைக் கருவியானது இங்கு தப்ப வைக்கப்பட்டுச் சிறுபான்மை இனங்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இலங்கை அரச ஆதிக்கமானது தமிழ்ப் பிரதேசமெங்கும் நிலைப்படுத்தப்படும்போது,தமிழ்பேசும் மக்களுக்குள் நிகழ்வது அதிகாரமென்பதா?

பூப்காவை அண்மித்துச் சிந்திப்பவர்களுக்கு இஃது:

பூப்காவை மீளக்கொணர்ந்தால், அதிகாரம் என்ற ஒன்றை விசாலமாக்க முடியாது.அல்லது, கறாராக விளங்கப்படுத்த முடியாதது.அது,நிலவாதது.அதிகாரம் என்ற ஒன்றில்லை!மாறாக, வித்தியாசமான வியூகத்துள்-மூலோபாயத்துள் தொடந்தியங்கும் அதிகாரத்துவ நிலைதாம் உண்டு.ஆக,பூப்காவின் கருத்துப்படி: "பொதுமையான அதிகாரமென்பது கிடையாது.அதிகாரத்துவ முறைமையும் இல்லை! அரச ஆதிக்கம்-அதிகாரமோ அன்றி அதன்வழியாகவியங்கும் நிறுவனப்பட்ட அதிகாரத்துவ மையமோ இல்லை. இதற்கெதிராக, பன்மைத்துவத்துக்குட்பட்ட பலப்பரீட்சையின் எல்லைக்குள் இயங்கும் மக்கள் கூட்டம்,இயக்கங்களே நிலவ முடியும்.

மீளவும்,இதை இலகுவாகச் சொடுக்குவோமானால்:"நிறுவனப்பட்ட அதிகாரம் என்பது இல்லை.அதிகாரம் என்பது ஒரு கட்டமைவும் இல்லை.அல்லது ஒரு சர்வ வல்லமைக்குட்பட்ட சர்வ வல்லமையாளனும் இல்லை. அதிகாரம் என்பதன் பெயர்,ஒரு சமுதாயத்துள்குழப்பமுடைய வியூகங்களாகவும்-சூழல்கள் ஆகவுமே அது இயங்குகிறது. இதற்குள்,எந்த அதிகாரத்தை எவர் கொண்டிருக்கிறார்? இது பூப்காவை அண்மித்தியங்குபவர்கள் பதில் சொல்லவேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.01.2012

Sonntag, Januar 15, 2012

நாசார் என்ற "பெருமனிதனின்" பொங்கலுக்கான அறைகூவல்!

நாசார் என்ற "பெருமனிதனின்" பொங்கலுக்கான அறைகூவல்!

இந்தக் குரல் பரவலாகவேண்டும்.

நாசாரது குரல், பரவலான தென்மாநில மக்களது சமுதாய ஆவேசமாகும்.

குறிப்பாக,இந்திய மத்திய அரசின் தாரளவாதப் பொருளாதார இலக்கால்-அந்நியப் பெரு பகாசூரக்கம்பனிகளால் பழிவாங்கப்பட்ட விவசாயிகளின் குரல் இது.

இஃது, முழுமொத்த மக்களதும் உரிமைக்குரலாகிறது.

உணவு உயிர்வாழ்வுக்கு அடிப்படை.அந்தவுணவுக்கு உழவு-விவசாயம் அடிப்படை.அந்த விவசாயி-உழவன் தன் விளைச்சலுக்குக் காரணமான சூரியனுக்கும்,வானுக்கும் நன்றி செலுத்தும் இன்றைய நாளை, நான் பெரிதும் மதிப்பவன்.


அந்த நன்றி செலுத்தும் விழாவுக்கு நானும் சொந்தக்காரனுங்கூட.எனது தந்தை சிறு விவசாயி.அந்த விவசாயமே நமக்கு அடிப்படை.

தமிழகச் சினிமா இயக்குநர்-நடிகர் நாசாரது குரல் இன்றைய தமிழகச் சூழலில் மிகவும் பெரிதான விடையம்.

பாராமுகமாக இருக்கும் தமிழக நடுத்தரவர்க்கச் சூழலில், நாசார் மக்களோடும்,மண்ணோடும் ஒன்றித்திருந்து, தன்னை மண்ணிலிருந்து பிரிக்காதவொரு மகத்தான கலைஞனாகக் காட்டிக்கொண்டிருகிறார்.


தான்- மக்கள் கலைஞன்தான் எனச் சொல்லிக்கொள்ளும் தகமையை இதன்மூலம் நிரூபித்திருக்கிறார்.உலக மகாக் கலைஞன் சார்லிச் சாப்பிளினின் சமுதாய ஆவேசமானது, இரண்டாம் உலக யுத்தத்துக்கெதிராகவும் பாசிசக் கிட்லருக்கு எதிராகவும் மகத்தான எதிர்ப்புக்குரலாகச் "சர்வதிகாரி" எனும் படம் மக்களிடம் அழிவைப் பேசிப் பாசிசத்தை நகைப்புடைத்தது.இதைக் கவனப்படுத்தும்போது,நாசார் அவர்களது இந்தக் குரல் தமிழகத்தைச் சூழ்ந்துவரும் பார்ப்பனியக் காவி நிறப் பாசிசத்தையும்,அதன் விபரீதங்களையும் நாம் கவனத்துள் கொள்ளவேண்டியவொரு புள்ளியை மறுமுனையூடாகக் காவி வருகிறது.

அவரது இந்த உரையாடலானது தொடும் புள்ளி, மக்களை அக்கறை கொள்ள வைக்கும் அரசியலது முன்நிபந்தனை"பார்ப்பனியப் பாசிச ஆபத்தை உணருங்கள்"என்பதே!



இதுவேதாம்(நவலிபரல்ப் பார்ப்பனியம்) உழவையும்,உழைப்பையும் வேட்டையாடிப் பாசிசத்தைக் கட்டமைக்க அந்நியப் பெரு நிறுவனங்களுக்கு விவசாயிகளைக் காட்டிக்கொடுத்தும் போதாதெனப் பொங்கலுக்கு நரித்தனமாக ஆதரவாகவும்,வாழ்த்துவதெனும் போர்வையில் மக்களை வேட்டையாடுகிறது.

இந்த நவலிபிரல் பார்ப்பனியப் பாசிசமானது மேற்குலகின் ஐரோப்பிய மையவாதத்துக்குச் சார்ப்பான இந்திப் பார்ப்பனியச் சாதிகளையெல்லாம் அணிதிரட்டிக்கொண்ட பார்ப்பனியப் பெரு நிறுவனத்தின் மையத்தைப் புதிய பாணியில் தகவமைத்து, அதை நோக்கிய அரசியலை விதைக்கிறது.எனவே,இதற்கு எதிரான குரல்கள் இந்தவகை கேள்விகளுடாகவே விசும்பு நிலையடையமுடியும்.எனவே,நாசாரது குரல் முக்கியமானது.

இதைப் பரவலாக்குங்கள் நண்பர்களே(நண்பர்களுக்கு ஆண்பால்-பெண்பால் கிடையாது)!

இது,மண்ணின் குரல்-மகத்தான விவசாயத்தின் இருப்புக்கான உரிமைக்குரல்.அந்நிய தேசப் பெரும் கொம்பனிகளது ஈனத்தனமான செயலுக்கு-விவசாயத்தின்மீதான அவர்களது அப்பட்டமான இலாபவேட்கையின் கயமைக்கு எதிரானது.எனவே,எமது விடுதலை என்பது,இங்கிருந்துதாம் ஆரம்பமாகிறது.

இதைவிட்டுத் தமிழகத்தை ஆளும் பார்ப்பனிய ஜெயலலிதா தலைமையானது பார்ப்பனியத்தை மீளத் தகவமைக்க விரும்புகிறது.அதன் நிகழ்வுத் தன்மைக்கொப்ப அனைத்து உரிமைகளையும் மெல்ல வேட்டையாடும் பார்ப்பனியமானது இன்று துக்ளக் "சோ" இராமசாமி தலைமையில் துக்ளக்கின் 42 ஆண்டு விழாவைக்கொண்டாடுவதாகச் சொல்லி, அகில இந்தியா தழுவிய பார்ப்பனியச் சாதியின் ஒருமைப்பாட்டை வலியுறுத்திப் பரந்துபட்ட மக்களை அடக்கக் கைகோர்கிறது!

அது,மீளத் தன்னைத் தகவமைக்கிறது.மிக இருண்டவொரு காலத்தைத் தமிழகத்தில் செயற்படுத்தத் துக்ளக் சோவென்ற பார்ப்பான் விரும்புகிறான்.

இது ஒரு தனிப்பட்ட பார்ப்பானின் விருப்பு அல்ல.

இந்தவிருப்பினது துரும்பே சோ.

இந்த விருப்பமானது வளர்ந்து, பெரு நச்சு விருட்சமாக நிற்கும் பார்ப்பனிய நிறுவனத்தின் இருப்புக்கான வியூகத்திலிருந்து எழுவது.இந்தப் பார்ப்பனியமே இந்திய ஆளும் வர்க்கத்தின் விசுவாசமான கருத்தியல் கட்டுமானமாகும்!.இது, வன்முறை சார்ந்தும்,சாரமலும் கருத்தியற் பயங்கரவாதத்தைப் பார்ப்பனிய மதமான இந்து மதத்துக்கூடாக மக்கள்மீது அதிகாரமாகக் கட்டித் தகமைத்துள்ளது.இரண்டாயிரம் ஆண்டாக நம்மீது நிகழ்தப்படும் அடிமைத்தனம்இது.


இதை முறியடிக்கவேண்டிய அவசியத்தை சோவினது சொற்பொழிவே எமக்கு உணர்த்துகிறது:

"தமிழகத்தை,குஜராத்தைப்போலவும் அதை ஆளும் ஜெயலலிதாவை மோடியைப்போன்று அல்லது அவரைவிடவும் மேலாக உயர்த்தவேண்டும்" என்கிறார், துக்ளக் 42 வது ஆண்டு நிறைவு விழாவில்!

அதாவது,குஜராத்தில் இந்துமத வெறியைக் கிளறி 3000 இஸ்லாமிய மக்களை வேட்டையாடியதுபோன்று, தமிழக்கத்தில் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுப் பார்ப்பனியத்தை நிலைப்படுத்த விரும்புகிறது பார்ப்பனியக் கும்பல்.இந்த பெரு அபாயத்தை நாம் எல்லோரும் உணர்ந்தேக ஆகவேண்டும்.

கோடம்பாக்கச் சினிமாத்துறையுள் ரஜனிகாந் போன்ற தமிழகத்தின் எதிரிகள்,நேரடியாகவே பார்ப்பனியத்தோடு சமரசமாகித் தமது சொத்துக்களையும்,சுகத்தையும் காக்கும்போது,நாசார் என்ற தமிழன் இந்த மண்ணின் மகத்துவத்துக்காகக் கரிசனைப்படச்சொல்லிக் குரல் கொடுக்கின்றான்.அவனது குரலை நாம் அனைவரும் நியாயத்தின் குரலாக எடுத்துக்கொண்டு,அதையொட்டிச் சிந்தித்தே ஆகவேண்டும்.

தமிழகத்தை ஒட்ட மொட்டையடிக்கும் பார்ப்பனியக்கூட்டானது அந்நியப் பகாசூரக்கம்பனிகளோடு கூட்டுவைத்தத் தமிழக வளங்களைக் கொள்ளையிட்டதும் அல்லாமல் முழுமொத்தத் தமிழகத்தின் குடிகளையே கொடிய வன்முறை-சாதியவொடுக்குமுறைகளால் வேட்டையாட முனைகிறது.இதன் கட்டியமே துக்ளக்கின் 42 ஆண்டு நிறைவு விழாவும்,அதன் நிகழ்வுக்குத் தமிழ்நாட்டுக்குப் படையெடுக்கும் பாசிச இந்து அத்வானி-மோடிக் கும்பலும் அதன் பண்டாரப் பாசிசக் கூட்டுக்களும்.

ஆர்.எஸ்.எஸ்.போன்ற நாசியக் கட்டமைவு-கருத்தமைவுக் கட்சிகளையே பார்ப்பனியம் உருவாக்கிவைத்துத் தமிழகத்தை வேட்டையாடும் தலைமையை ஜெயலலிதாவுக்கு வழங்கியிருக்கும்போது, அதையே முழுமொத்த இந்தியாவுக்குமாக உருவாக்குவதில் தமிழ்நாட்டுப் பர்ப்பான் சோவுக்கு அவசியமாக இருக்கிறது.

ஜெயலலிதாவின் தலைமையில் இந்தயா பூராவுக்கும் உள்துறை மந்திரியாகத் தான் இருந்து, மீள வர்ணாச்சிரம அடிமைத்தனத்தை நிலைப்படுத்துவதில் கவனம் உருவாகியுள்ளது.மக்களே!,இது ஆபத்தானவொரு காலத்தை உங்களுக்கு உணர்த்துகிறது. பிளவுபட்ட இந்திய ஆளும் வர்க்கத்தின் முரண்பாட்டைப் பார்ப்பனியமானது தீர்த்து வைக்கும்பொருட்டு எடுக்கும் நிலைகள் யாவும் பாசிசத்தை நோக்கி நகர்வதாகும்.இந்தியாபோன்ற சாதிய அடிமைச்சமுதாயங்களில் இந்தப் பாசிசத்தின் உச்சக்கட்டமானது சாதியப் போராட்டங்களாகவும்,மதவாதப் போராட்டங்களாகவும் எழுந்து மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கிறது. ஜெயலலிதா தலைமையில் இது மீளவும் தலையெடுக்கிறது. இதையொட்டித் தமிழகம் என்ன செய்யப் போகிறது?

இதிலிருந்து மீள்வதாயின் குறைந்தபட்சமாவது பார்ப்பனிய சூட்சியைப் புரிந்தாகவேண்டும்.அதை,பெரியாரது வரலாற்றிலிருந்து புரிந்துகொண்ட தமிழக மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதை உரைத்துப் பார்க்கவாவது நாசாரது அடிப்படையான கோரிக்கை வழி செய்யட்டும்.

நாம்,நாசாரது அறிவிப்பை,பிரேரணையை,குறைந்தபட்ச அறைகூவலைப் புரிந்துகொள்வோம்,அத்தகைய புரிந்துகொள்வதனூடாகப் பலகோடி நாசார்கள் தமிழகமெங்கும் உதிக்கட்டும்!


அவர்களால்,தமிழகத்தின் தலைவிதி மாற்றி எழுதப்படட்டும்!இல்லைத் தமிழகத்தைப் பார்ப்பனியப் பாசிஸ்டுக்கள் குருதியாற்றில் மிதக்க விடட்டும்!எல்லாம் தமிழக்கத்து இளைஞர்களது கைகளிலேயே உண்டு!

வாழ்க,உரிமைக்கான குரல்கள்,வளர்க உரிமைப்போராட்டம்!-இதுவே,பொங்கலுக்கான எனது அறைகூவலும்-வாழ்த்து நோக்கிய ஒலிப்பும்!!

ப.வி.ஸ்ரீரங்கன்.
ஜேர்மனி
15.01.2012

Mittwoch, Januar 11, 2012

பி.பி.சி.யில் நிர்மலா அக்காவினது குரலும்,அந்த 71 ஆட்டுக்குட்டிகளும்!

உரைத்துப் பார்த்தலுக்கான சில கருத்துக்கள்.

ண்டுதொட்டு தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.சிங்கள இனவாத அரசினது ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் இலங்கைச் சிறுபான்மை மக்களது உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.

இந்த ஈனத்தனத்தை எல்லாக் காரியவாதத் தமிழர்களும்திறம்படச் செய்துமுடிக்கிறார்கள்.

நிர்மலா தலைமையில்,71 புத்தி சீவிகள் என்பவர்கள் குறியீடாகிய தருணம் என்ன?

அவர்களுக்குப் பின்னே கட்டியமைக்கப்பட முனையும் கோரிக்கைகளது அரசியல் என்ன?

அந்த அரசியலின் வழி நலமடையமுனையும் வர்க்கம் எது?

இவை கேள்விகள்.

பதில்களுக்கு இன்னுஞ் சிலகாலம் பொறுத்திருந்தே தீரவேண்டும்.எனினும்,சில குறிப்புகளை இங்ஙனமும் பார்த்தே ஆகவேண்டும்.இவர்களது விபரீத அரசியலை பரவலாக அறிக்கைகள் மூலம் புலத்தில் பிளவுண்ட இடதுசாரி முகாங்கள் அறிவித்திருக் கின்றன.இந்த விபரீத அரசியலைப் பற்றிய புரிதலுக்கான நிபந்தனைகள்,இலங்கையினது இனவாத அரசியலுக்குள் தொடர்ந்து வியூகமிடும் அந்நியப் பிராந்திய நலன்களைக் குறித்துப் புரிந்துகொள்வதைக் கோருவதேயாகும்.அந்தக் கோரிக்கையானது பிராந்திய நலனுள் பின்னப்பட்ட தமிழ்பேசும் மக்களதும்,ஏனைய இலங்கைச் சிறுபான்மை மக்களதும் அரசியல் தலைவிதியைக் குறித்துப் பேசுவதற்கானவொரு வெளியைத் தேடிக்கொள்வதன் பொருட்டு மேலும் சில குறிப்புகளைக் குறித்துக்கொள்வதென்று...

"...இரவு மட்டுமல்ல
இந்த மண்ணின் இருப்பும்
அச்சத்தைத் தருகிறது

கிழட்டுப் பலாமரத்தில்
பச்சோந்தியொன்று.
வண்ணத்துப் பூச்சிகள்
சிறகடிக்கின்றன..." -செழியன்.

முள்ளிவாய்க்கால்வரை இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம் இன்று!

80 களில் ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும், இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள்.

முள்ளி வாய்க்காலில் பல பத்தாயிரம் மக்கள் புலிகளோடு சேர்த்துக்கொல்லப்பட்டார்கள்.அப்போது,கொல்லப்படும் மக்களைப் புலிகளைக் காப்பதற்காக தேசியவாதிகள் எவருமே கண்டுகொள்ளவில்லை!இந்தக் கண்டுகொள்ளாத சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாக்கிய இலங்கை அரசு,மக்களைக்கொன்று குவித்து அவர்களுக்குள் மறைந்திருந்த புலிகளைப் பூண்டோடு வேட்டையாடியது.

இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு புத்திசீவிக்குழுக்கள் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் சமர்பிக்கும் 71 பேர்கள் அடங்கிய கையெழுத்து அறிக்கை என்பதும்- ஆலோசனைகள் என்பதும், அதுசார்ந்த நிர்வாக அலுகுகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம்.


புலியை அழித்து முடித்துவிட்ட-இப்போதைய-நிலைமைகளில், இலங்கை இராணுவம் பரவலாகத் தமிழ்ப் பிரதேசமெங்கும் தனது முகாங்களை நிறுவிப் பலாத்தகாரமான இராணுவ அதிகாரத்தை நிறுவித் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்து வாழ்வு முன்னெடுப்பையும் தீர்மானிக்கும்போது, இந்திய ரோவினது ஆலோசனைக்கொப்பப் புலிகளால்துரத்தப்பட்ட இஸ்லாமிய மக்களை வைத்து எழுதப்படும் கோரிக்கைகள் இலங்கை அரசிடமே விடப்படவேண்டிய நிலையில் நாடு இருக்கும்போது,அதைத் தமிழ் தரப்பை நோக்கி எறிவதென்பதும் சாணாக்கியத்தனமானதுதாம்.

இப்போதும் நாம் சொல்வது, தமிழ் பேசும் மக்களின் முதற்தரமான எதிரிகள் இலங்கை அரசும்,அந்த அரசைத் தூக்கி நிறுத்துவதற்காவும்,சிங்கள அரசுக்கெதிரான- இனவொடுக்குமுறைக் கெதிரான தமிழ்பேசும் மக்களின்போராட்டத்தையே சிதைத்துச் சின்னாபின்னமாக்கிய இந்திய அரசுமே தமிழ்பேசும் மக்களின் அதிமுதல் எதிரிகள்.


யுத்தம் செய்தும்-இராணுவ ஆட்சியைக் கட்டமைக்கும் எந்தவொரு சமுதாயமும் தனது வலுவுக்குள் எந்தவொரு கட்டமைப்பையும் கொண்டிருப்பதில்லை . இது அரசியல் விஞ்ஞானத்தில் மிகத் தெளிவாக நாம் உணரத்தக்கது.இந்தச் சூழலில் இலங்கைபோன்ற மிகவும் பின் தங்கிய-எந்தச் சமூகவுற்பத்தியையும் தனது சொந்த முயற்சியால் முன்னெடுக்காதவொரு நாட்டில் "எந்தச் சுயாண்மையும்" நிலவ முடியாது.


இதுதாம் இன்றைய இலங்கையில் நிலவுகின்ற அரசியற்சூழல்.

இந்தச் சூழலைத் தகவமைக்கும் புறதேசங்களது அரசியல் ஆர்வங்களானது, இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையைத் தொடர்ந்து நீறுபூத்த நெருப்பாகவே வைத்திருக்க விரும்புகின்றன.இதன் உச்சக்கட்டமாகவே,இப்போது இனங்களுக்கிடையில் பிளவுவாதத்தையும்-வரலாற்றுப்பழியையும் மீளவுருப்போட்டு நகர்த்தப்படும் அரசியலாக இந்த 71 நபர்களது பெயரோடு உலாவரும் கோரிக்க்குப்பின் நிலவும் அரசியல்"யாழ்பாணியம்-தேசியம்,தமிழர்கள்" என்று குறியீடுகளுக்குள் உந்தித்தள்ளப்பட்டு,அங்கே பிரதேச வாதம் மூப்படைய வைக்கப்படுகிறது.

இந்தத் தகவமைப்புக்கு உந்துதலாக இருப்பதும் இந்திய அரசியல் ஆர்வமென்பதுதாம் உண்மையாகும்.

இலங்கையென்பது இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட நிலப் பிரதேசம் என்பதும்,இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சமூகவுறுகளின் இறமைக்கு அதி முக்கிய பாத்திரம்பெறும் வலையமென்பதும் உண்மையாக இருப்பதால்,பண்டுதொட்டு இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் முடிவுகள்,விருப்பங்கள்,ஆர்வங்கள்,ஆதிக்கங்கள் சங்கிலித் தொடராகப் பின்னப்பட்டு வருகிறது.


இந்த இந்தியாவென்ற ஒரு தேச அரசியல் கட்டுமானமானது பிராந்திய ஆதிக்கத்தின் வெளிப்பாட்டோடு முன் நிறுத்தப்படும் பாரிய யுத்த ஜந்திரத்தோடு"உலகின் பாரிய ஜனநாயக நாடு"என்று பிரகடனம் பெறுகிறது.இந்த நாட்டைப்பற்றிய அரை குறைப் புரிதலின் வெளிப்பாடே முள்ளி வாய்க்காலுக்குப்பின் பலரிடம் அரசியல் கருத்தாக வருகிறது.

இந்தியாவைப் பகைக்காமல்தமிழ் மக்கள் அரசியலை முன்னெடுக்கவேண்டும்.இந்தியாவின் உதவியோடு பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டுமென்பதும் ஒரு திசைவழியில் 71 பேர்கள் அடக்கமுறும் கோரிக்கையென்பதும் ஏதோவொரு சிலரின் விருப்புக்குட்பட்ட பார்வைகள் அல்ல.


அவை,பிராந்திய நலன்களது நீண்டகால நோக்கின் ஒரு பகுதி வியூகமாகும்.

உதாரணமாக: புலிகளால் இதுவரை நடாத்தப்பட்ட இந்தப் போராட்டம்,அதாவது, ஈழத்துக்கான போராட்டம் என்பது சாரம்சத்தில் காலவதியாகிவிட்டது.இதைக் காலவதியாக்கிய ஜனநாயகத்துக்கான-இயல்பு வாழ்வுக்கான கோரிக்கைகள், புலிகளின் உள்ளார்ந்த அராஜகத்தின்-பாசிச அடக்கு முறைகளிலிருந்து மக்களின் குரல்களாகவும்,உரிமையாகவும் இனம்காணத்தக்கவொரு அரசியற் கோரிக்கையின் அதிமுக்கிய வெளிப்பாடாக முகிழ்த்தபோது,மக்களின் உரிமைகளை அழித்தொதுக்கும் சிங்களப் பாசிச இனவொடுக்குமுறையரசே தன்னை மக்களின்-தமிழ் பேசும் மக்களின் நண்பனாகக் காட்டிக்கொள்ளும் கபடம் நிறைந்த அரசியல் நகர்வுக்கு இஃது பாத்திரமாகியது.இந்தச் சூழலை மிக நுணுக்கமாக இனம்கண்ட இந்தியப் பிராந்திய நலனானது தன்னைத்தொடர்ந்து நாம் பின்தொடரும் காரியத்தில் கனாக் காணும் அரசியலது தொடரே இப்போது தமிழ்பேசும் மக்களக்குள் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு"விடிவு"குறித்து வகுப்பெடுக்கிறது.இது,ஏமாற்றப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தின் அரசியலது அடுத்த கட்டத்தைக் குழப்பிக்கொள்வதையும்-குட்டையைக் குழப்பி பிடிக்க முனையும் மீனையும் இனங்கண்டாக வேண்டும்.

இலங்கையின் அரசமைப்பில், இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்கள் தம்மை மிக மிகத் தந்திரமாகத் தக்க வைத்துக்கொண்ட வரலாறு மிகவும் கொடியது.இது கடந்த காலத்தில் சிங்கள-தமிழ்-முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் தரப்பில் சுமார் 300.000.அப்பாவி மக்களையும் கொன்று தள்ளியுள்ளது.


இன்றுவரையும், இழுபட்டுப்போகும் இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்களின் அத்துமீறிய கொடிய இராணுவ ஒடுக்குமுறையால் மனிதவுரிமைகள் துளியளவும் இல்லாது போய்விட்டது. இந்த இலட்சணத்தில் தமிழ் பேசும் மக்களினதும்-முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் எதிர்காலமானது வெறும் இருண்ட வெளிக்குள் நகர்கிறதென்பதைத் தட்டிக்கழித்து விட்டு, இந்த 71 நபர்கள் செய்யும் மோடி வித்தையானது பெருத்த சந்தேகத்துக்குரியது.இதற்குப் பின் நகர்த்தப்படும் அரசியலது வீரியம் என்னவென்பது குறித்து நீண்ட ஆய்வுகள் தேவையாகிறது.

இலங்கையரசானது ஸ்த்தூலமான ஒடுக்குமுறையரசாகும்.இது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனநாயகபூர்வமான அரசுகிடையாது.

இதுகாறும் தமிழர்களின் பிரதான எதிரியான சிங்களப் பேரினவாதமானது இனியும் பிரதான எதிரியாக இனம் காணப்படவேண்டிய சூழலில், தமிழ்ச் சமுதாயம் தள்ளப்பட்டுள்ள நிலையில் இத்தகைய சதிகாரக் கும்பல் தமது அற்ப பதவி-பண ஆசைக்காக முழுமொத்த தமிழ் மக்களுக்கும் ஈனஞ் செய்வது மிகவும் வருந்தத் தக்கது.புலிகள் வேறு,தமிழ்பேசும் மக்கள் வேறென்று அன்று கூறியவர்கள்-ஏன் தமிழ்பேசும் மக்களை இலங்கை-இந்திய அரசிடம் காட்டிக்கொடுக்கிறார்கள்?

எப்படித் தமிழ் பேசும் மக்களினது வாழ்வில் காலாகாலமாகத் தீங்கிழைக்கும் சிங்கள இனவாத ஆளும் வர்க்கத்தை, முழுமொத்த இலங்கை மக்களது நண்பர்களாக்கித் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்?


இந்தியாவினதும்,இலங்கையினதும் ஆளும் வர்க்கங்களது அழிவு அரசியலுக்கு முகவர்களாக மாறிய இந்த 71 நபர்களும்,அரசியல் சாக்கடைகள்-மக்கள் விரோதிகள்! மீதமுள்ள அப்பாவி மக்களின் சொத்தை சட்டப்படி கொள்ளையிடவும் தமது ஏவல்-கூலிப்படைச் சேவைக்காக நிர்வாகப் பலத்தைத் தேடுவது முஸ்லீம்மக்களின் உரிமையல்லவே.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
11.01.2012



The report signed by 71 Tamil elite intellectuals:

An appeal to the Tamil Community and its civil and political representatives.


Since the end of the war in May 2009, it has become important for all ethnic communities of Sri Lanka to re-examine and reevaluate their past. It is through this process of self-reflection that some of the major issues that confront state and civil society today can be meaningfully reconceived and reconfigured for the future.

While the war has drawn to a decisive close, the ethnic conflict is far from over and demands solutions short- and long-term. The quest for a viable political solution from a majoritarian state is a primary concern for the Tamil community today. Continued insecurity in the face of militarisation is an urgent matter. Armed militancy and a political culture of violence have further eroded into the democratic fabric of society. Resettlement and rehabilitation remain unresolved problems. Distribution of land, access to state and social networks, language parity, devolution of power, inter-ethnic reconciliation and the continued presence of gender, class and caste stratifications are a part of the political landscape today.

It is in this regard we raise the question of the eviction of the Northern Muslims 21 years ago. In October 1990, the LTTE evicted roughly 80,000 Muslims from the north in the wake of increasing hostilities and armed conflict in the north and east. The LTTE, which was militarily dominant in the north at that time and controlled large swathes of territory, ordered an entire community to leave the province in two days. In the Jaffna peninsula they were given just two hours’ notice. Subsequent to the eviction, several attempts were made by institutional mechanisms to facilitate the return of the communities to their original lands. During the Ceasefire Agreement (CFA), there were renewed attempts, particularly through the Secretariat for Immediate Humanitarian and Rehabilitation Needs (SIHRN), to negotiate the return of the Muslims with the Sri Lankan state and the LTTE.

In the current political landscape, the eviction of Muslims from the north and their return and resettlement pose a distinct political challenge to civil and political societies of the Tamil community. While from the time of the CFA, Muslims had been trickling back to their homelands in the north, the conditions for their return had not been congenial. Those who have returned have received hardly any state support for resettlement, and have been met with a certain level of bureaucratic hostility. The erasure of Muslim culture and institutions in the north in the last twenty years has made return less acceptable to the host community, and especially fraught for the returnees.

While recognising that the Tamil community has been under intense stress during and after the war, it is important to remember the plight of the forcibly evicted Muslim community in the north who were subjected to similar privations. The Tamil community’s sufferings and hardship cannot become reasons to sideline the issue of Muslim eviction. As much as we struggle for our survival in the face of external and internal pressures, it is paramount that we re-examine the politics of our own actions, assertions and silences.

The eviction represents one of the worst instances of the narrow, exclusivist thrust of the Tamil nationalist political campaign of the past thirty years. The failure of our civil and political leadership to understand and acknowledge this has prevented us from dealing with our own past, and with our own moral and political responsibility towards minority communities that live amidst us. An examination of how we have contributed to the polarisation of relations between our two communities has not been forthcoming even after the end of the thirty-year war. We must realise at least now that there is no exclusive political solution for the Tamil community, and that the question of political power sharing and equal rights confronts all minority communities. Inter-ethnic reconciliation and dialogue between communities, in particular the Muslim and Tamil communities, are essential processes to arrive at a sustainable political solution. The document The Quest for Redemption: the Story of the Northern Muslims, prepared by the Citizens’ Commission on the expulsion of Muslims by the LTTE recently made a most damning pronouncement about the silence of the Tamil community on the eviction. We need to break through this silence if we are to move toward a genuine process of reconciliation.

Today, as we are compelled to forge new paths of activism for our own survival, we need to formulate responses that are borne out of dialogue with different communities. This is essential if we are seeking a just and democratic political solution. As a step toward this, there has to be a public disavowal of the eviction. We shall wholeheartedly say that never again will such a heinous act as the eviction take place amidst us. Never again shall we condone such acts of ethnic cleansing. Importantly, it is necessary for us as a community, while revisiting this event and its continuing legacy, to set up an inter-ethnic mechanism to bring about dialogue and facilitate an easy return and resettlement process of the Muslims in the north.

Tamil society can no longer be isolationist and act on its own without paying heed to the concerns of other communities. We shall engage in questions of marginalisation, discrimination and injustice touching upon any community. And we shall unreservedly pledge our support to promote the pluralist character of society at all levels in our midst, and embrace a politics of inclusivity in the interests of democracy, justice and equality.

Signatories:

1. Mr. P. Ahilan
2. Dr. Darshan Ambalavanar
3. Ms. Jovita Arulanantham
4. Ms. Kundhavi Balachandran
5. Mr. Sivakolunthu Buvanakumar
6. Dr.GodwinConstantine
7. Dr.KumarDavid
8. Mr. R. Devarajan
9. Ms. Cayathri Divakalala
10. Dr. S. Ganesan
11. Mr. Shaseevan Ganeshananthan
12. Mr. P.B. Gowthaman
13. Dr. Rajan Hoole
14. Ms. Sithiravel Ithaiyarani
15. Mr. T. Antony Jeganathan
16. Ms. Vasuki Jayasankar
17. Dr. T. Jayasingam
18. Mr. D.B.S.Jeyaraj
19. Mr. Theliwattai Joseph
20. Mr. Ahilan Kadirgamar
21. Mr. Silan Kadirgamar
22. Ms. Niyanthini Kadirgamar
23. Ms. Sarvam Kailasapathy
24. Ms. Dushiyanthini Kanagasabapathipillai
25. Dr. S.V. Kasynathan
26. Mr. Thirukovil Kaviyuvan
27. Mr. Sathy Kulasingam
28. Mr. Prithiviraj Kulasingham
29. Prof. Vijaya Kumar
30. Ms. Maha Luxmy Kurushanthan
31. Mr. K.C. Logeswaran
32. Mr. S. Manisegaran
33. Mr. Chandrasekaran Manimaran
34. Mr. P. Muthulingam
35. Mr. V. Nandakumar
36. Ms. Malini Paramaguru
37. Ms. Nirmala Rajasingam
38. Ms. Vasuki Rajasingam
39. Mr. Sanjayan Rajasingham
40. Mr. C. Rajeshkumar
41. Ms. A. Renu
42. Ms. Kumudini Samuel
43. Ms. Rani Samuel
44. Dr. Paikiasothy Saravanamuttu
45. Dr. Muthukrishna Sarvananthan
46. Ms. Ambika Satkunanathan
47. Mr. Shyam Selvadurai
48. Rev. Jothini Seenithamby
49. Dr. T. Shanaathanan
50. Ms. M. Mangaleswary Shanker
51. Ms. C. Shanthini
52. Mr. Shobashakthi
53. Mr. P.N. Singham
54. Ms. Vasuki Sivakumar
55. Mr. K.S. Sivakumaran
56. Dr. Sumathy Sivamohan
57. Mr. Subramaniam Sivathasan
58. Mr. Balasingam Skanthakumar
59. Mr. M. Sooriyasekaram
60. Dr. K. Sritharan
61. Rev. M. Jude Sutharshan
62. Mr.H.D. Thampoe
63. Ms. Priya Thangarajah
64. Mr. Kandiah Thanikasalam
65. Mr.R. Thevamaran
66. Prof. S.Thillainathan
67. Dr.Sharika Thiranagama
68. Mr.M.Thiruvarangan
69. Mr.UmaVaratharajan
70. Mr.GodfreyYogarajah
71. Mr.RonnieYogarajah


71 “புத்திசீவிகள்” கையெழுத்திட்ட அறிக்கை:

தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்


2009ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவுற்ற பின்னணியில், இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனக் குழுக்களும் தமது கடந்த காலத்தை மீள்பார்வை செய்வதும், மீள்மதிப்பீடு செய்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விடயங்களாக விளங்குகின்றன. எமது கடந்த கால செயற்பாடுகளின் மீதான ஒரு விமர்சன ரீதியான சுய பார்வையின் மூலமாகவே அரசின் முன்னும் சிவில் சமூகத்தின் முன்னும் இன்று தீர்வை வேண்டி நிற்கும் பிரதானமான விடயங்கள் பற்றி எதிர்காலத்தில் கருத்தாழம் மிக்க வழிமுறைகளில் நாம் சிந்திக்க முடியும்.
யுத்தம் தீர்க்கமாகமுடிவுற்ற போதிலும், இனப்பிரச்சினைக்கான முடிவு இன்னமும் தென்படவில்லை. இனப்பிரச்சினையானது குறுகிய மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை வேண்டி நிற்கிறது. பெரும்பான்மைவாத அரசிடமிருந்து ஒரு நீடித்திருக்கக் கூடிய தீர்வைப் பெறுவதற்கான தேடுகையில் தமிழ்ச் சமூகம் இன்று பிரதானமாகக் கரிசனை கொண்டுள்ளது. இராணுவ மயமாக்கத்தினாற் தொடரும் பாதுகாப்பற்ற நிலைமை ஓர் உடனடிக் கவனமாக அமைந்துள்ளது. ஆயுதப் போராட்டமும், வன்முறை நிறைந்த அரசியற் கலாசாரமும் சமூகத்தின் ஜனநாயகக் கட்டமைப்புக்களை மேலும் சிதைவுக்குட்படுத்தியுள்ளன. மீள்குடியமர்வு, மீள்நிர்மாணம் போன்ற விடயங்கள் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. காணிப் பகிர்வு, அரச மற்றும் சமூக வலையமைப்புக்களினைத் தொடர்புகொள்ளுதல், மொழி சமத்துவம், அதிகாரப் பகிர்வு, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், பால், வர்க்க, மற்றும் சாதி அடிப்படையிலான அடுக்கமைவுகளின் தொடரும் இருப்பு போன்றன இன்றைய அரசியல் நிலவுருவின் பகுதிகளாக விளங்குகின்றன.
இந்த வகையில் 21 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தொடர்பான விடயத்தை நாம் இங்கு எழுப்புகின்றோம். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் யுத்த நடவடிக்கைகளும், ஆயுதப் போராட்டமும் வலுப்பெற்று வந்த சூழலில், தமிழீழ விடுதலைப் புலிகள் ஏறத்தாழ் 80, 000 முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றினார்கள். அன்றைய காலத்தில் ஆயுத ரீதியாகப் பலம் மிக்க அமைப்பாக, வட பகுதியின் பெருமளவிலான நிலப்பரப்பை தன்வசம் வைத்திருந்த விடுதலைப் புலிகள் ஒரு சமூகம் முழுவதையுமே இரண்டு தினங்களுக்குள் வட மாகாணத்தில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் அவர்களுக்கு 2 மணி நேர அவகாசம் மாத்திரமே வழங்கப்பட்டது. இந்த வெளியேற்றத்தின் பின்பு, வெளியேற்றப்பட்ட சமூகங்கள் தமது சொந்த நிலங்களுக்கு மீளவும் திரும்பிச் செல்வதற்கு உதவும் வகையில் பல்வேறு அமைப்புக்களாலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. போர் நிறுத்த உடன்படிக்கைக் காலப்பகுதியில், உடனடி மனிதாபிமான மற்றும் மீள்கட்டுமாணத் தேவைகளுக்கான செயலகம், இலங்கை அரசுடனும், விடுதலைப் புலிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்துவதன் ஊடாக, முஸ்லிம் மக்களின் மீள்திரும்புதலுக்கு வழிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டது.
இன்றைய அரசியல் சூழலில், வட புலத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையும், அவர்களின் மீள்திரும்புகையும், மீள்குடியமர்வும் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சிவில் சமூகங்களின் மீதான தெளிவான ஒரு சவாலாக உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த காலப்பகுதியில் இருந்து முஸ்லிம் மக்கள் வடக்கில் உள்ள தமது தாயகங்களுக்கு படிப்படியாகத் திரும்பத்தொடங்கியிருந்த போதிலும், அவர்கள் மீளத்திரும்புவதற்கு உகந்த சூழல் அமைந்திருந்திருக்கவில்லை. மீளத்திரும்பியவர்கள் அரசிடமிருந்து குறைந்தபட்ச உதவிகளைக்கூடப் பெறமுடியவில்லை. மேலும் அவர்கள் நிருவாக மையங்களின் விரோதப் போக்குகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் பண்பாடு மற்றும் நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாமற் போனமை அவர்களின் மீள்வருகையினை வட பகுதியில் உள்ள சமூகங்கள் குறைந்த அளவிலேயே ஏற்றுக்கொள்கின்ற தன்மையினை ஏற்படுத்தியிருப்பதுடன், திரும்பி வரும் மக்களுக்கு இடராகவும் அமைகின்றது.
போரின் போதும், போரின் பின்னரும் தமிழ் சமூகம் மிகுந்த உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றது என்பதனை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அதே போன்ற இடர்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட வட பகுதியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் நிலையினை நாம் நினைவில் நிறுத்துவது அவசியமானது. தமிழ் சமூகம் அனுபவித்த வேதனைகளையும், இன்னல்களையும் காரணங்காட்டி முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட விடயத்தை ஓரங்கட்ட முடியாது. வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் பிரயோகிக்கப்படுகின்ற அழுத்தங்களின் முன் எமது இருப்புக்காக எந்த அளவுக்கு நாம் போராடுகிறோமோ அதே அளவுக்கு நாம் எமது செயல்களின், எமது உறுதிக்கூற்றுக்களின், எமது மௌனங்களின் அரசியலினை மீளாய்வுக்குட்படுத்துவது அவசியமாகும்.

முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை கடந்த முப்பதாண்டு காலத் தமிழ்த்தேசிய அரசியற் பிரசாரத்தின் குறுகிய நோக்குடைய, பிற சமூகங்களினை ஒதுக்கித்தள்ளும் பாங்குடைய உந்துகையின் மிகவும் மோசமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். எங்களுடைய சிவில் மற்றும் அரசியற் தலைமைகள் இதனை விளங்கிக் கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ தவறியமை, கடந்த காலத்தினையும், எம்மத்தியில் வாழும் சிறுபான்மையினர் தொடர்பாக எமக்கு உள்ள தார்மீக மற்றும் அரசியற் பொறுப்புக்களையும் நாம் நியாயபூர்வமான முறையில் அணுகுவதிலிருந்து எம்மை தடுத்துவிட்டது. தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இடையிலான உறவுகள் துருவப்பட்டுப்போவதற்கு நாம் எவ்வாறு காரணங்களாக இருந்திருக்கிறோம் என்பது பற்றிய ஒரு சுயவிசாரணை முப்பது ஆண்டு காலப் போரின் முடிவின் பின்னரும் கூடஎம்மத்தியில் உருவாகவில்லை. அரசியல் அதிகாரப் பகிர்வு, சமவுரிமை என்பன அனைத்து சிறுபான்மை சமூகங்களுக்கும் உரித்தான விடயங்கள் என்பதனையும், தமிழ் சமூகத்துக்கு மாத்திரமே உரித்தான ஏனையோரைக் கருத்திற் கொள்ளாத ஒரு அரசியற் தீர்வு இல்லை என்பதனையும் நாம் இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

நீடித்திருக்கக்கூடிய ஓர் அரசியற் தீர்வினை அடைவதற்கு இனங்களுக்கு இடையில்– குறிப்பாக தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே– நல்லிணக்கமும், உரையாடலும் அவசியமான செயற்பாடுகளாகும். விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீதான பிரசைகளின் குழுவினால் தயாரிக்கப்பட்ட “மீட்சிக்கான தேடுகை: வடக்கு முஸ்லிம்களின் கதை” என்ற ஆவணம், முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப் பட்டமை தொடர்பாக தமிழ் சமூகத்தின் மௌனம் பற்றி கண்டனம் மிக்க வெளிப்படுத்தல் ஒன்றை அண்மையில் மேற்கொண்டுள்ளது. நல்லிணக்கம் பற்றிய ஓர் உண்மையான செயற்பாட்டினை நோக்கி நாம் நகர வேண்டுமாயின் நாம் இந்த மௌனத்தைக் கலைக்க வேண்டும்.

எங்களது இருப்புக்காக நாம் புதிய செயற்பாட்டியற் பாதைகளை உருவாக்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இன்றைய காலப்பகுதியில், ஏனைய சமூகங்களுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல்களிலிருந்து உதயமாகும் பதில்களை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். நாம் நீதியானதும், ஜனநாயக பூர்வமானதுமான ஒரு அரசியற் தீர்வைத் தேடுகையில் இது மிகவும் பிரதானமானது. இதற்கான ஒரு படியாக முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக பகிரங்கமான எதிர்ப்பு வெளியிடப்படல் வேண்டும். இந்தப் பலவந்தவெளியேற்றம் போன்ற ஒரு வெறுக்கத்தக்க செயல் எம்மத்தியில் இனிவருங் காலங்களில் ஒரு போதும் நிகழமாட்டாது என நாம் முழுமனதுடன் கூறவேண்டும். இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை நாம் ஒரு போதும் குற்றம் எனக்கருதாது இருக்கமாட்டோம் எனக் கூறவேண்டும். இந்த சம்பவத்தையும், அதன் தொடர்ச்சியையும் மீள்நோக்க வேண்டிய அதேவேளை, உரையாடல்களை ஏற்படுத்தவும், வடக்கில் முஸ்லிம் மக்களின் இலகுவான மீள்திரும்புகைக்கும், மீள்குடியமர்வுக்கும் உதவும் வகையில் பல்லின சமூகங்களை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துதல் அவசியமானது.

ஏனைய சமூகங்களின் இடர்களையும், நலன்களையும் கருத்திற் கொள்ளாது, தமிழ் சமூகம் தன்னிச்சையாகவும், மற்றைய சமூகங்களிலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கியும் தொடர்ந்து செயற்பட முடியாது. எந்தவொரு சமூகத்தினையும் பாதிக்கும் அநீதிகள், ஒடுக்குமுறைகள், வேற்றுமைப்படுத்தல்களினை நாம் அக்கறையுடன் அணுக வேண்டும். எல்லா மட்டங்களிலும் சமூகத்தின் பன்முகத்தன்மையினை எம்மத்தியில் ஊக்குவிப்பதற்கும், ஜனநாயகம், நீதி, சமத்துவம் என்பவற்றின் நலனை மையமாகக் கொண்ட பல்வேறு சமூகங்களையும் இணைத்துச் செயற்படுகின்ற ஓர் அரசியலினைப் பற்றிக் கொள்ளவும் நாம் எதுவித தயக்கமும் இன்றி உறுதி பூணுவோம்.

Montag, Januar 02, 2012

தமிழீழத் தேசியச் சின்னங்களை...

தமிழீழத் தேசியச் சின்னங்களை வேண்டி விடியலை விரைவுப்படுத்துங்கள்!

ன்பார்ந்த தமிழீழக் குடிகளே,நீங்கள் புலம் பெயர்ந்தபோதும் தாயகத்தை விடுவிக்கும் போராட்டத்துக்கு இறுதிவரை உழைப்பவர்கள்.அந்தவகையில் மீளவும்,உங்கள் ஒத்துழைப்பை நல்கி, நமது தேச நிர்மாணிப்பைத் தொடர்ந்து விரைவாக்கும் பணிக்கு, உங்கள் ஒத்துழைப்பைக் கோருகிறது தமிழீழ நாடு கடந்த அரசு.பிரதமர் உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க தபாற்றலைகளைப் பிரான்ஸ் அரசின் அனுமதிபெற்று வெளியிட்டுள்ளோம்.

கடந்த வாரம், தமிழீழத்தின் தேசியச் சின்னங்களை,பிராஞ்சு அரசின் அனுமதியோடு தபாற்றலைகளாக நாம் வெளியிட்டிருக்கின்றோம்.அவைகளை நீங்கள் வேண்டிப் பயன்படுத்துவதனூடாக ,தேசத்தின் விடிவை விரைவாக்க எமக்கு உதவுங்கள்.இது புலம்பெயர்ந்த ஒவ்வொரு தமிழினின் கடமையுங்கூட-எல்லாஞ் சரிதாம்!


புலிப் பினாமிகளும்,அதந்தப் பினாமிகளை ஆட்டிப்படைக்கும் புலிகளது மேல் நிலைத் தலைவர்களும் இப்போது தமது ஆயுதத் தலைமையை அழித்துவிட்ட கையோடு இலங்கை அரசுக்கு ஒத்தூதித் தமிழர்களது செல்வத்தைக் கொள்ளை அடித்துச் செல்வந்தர்களாகினார்கள்.

அதை மேலும், நிலைப்படுத்தும் நிர்வாக-அதிகாரத்துக்கான கோதாவில் மீளவும்,பிரஞ்சு அரசின் அனுமதியுடன் தபாற் தலைகள் வெளியிடுவதாகவும்,அவை தமிழ்த் தேசியத்தின் குறியீடெனவும்,கூறி எஞ்சியிருந்த அனைத்தையும் காசாக்கிக் கொள்கின்றனர்.

மக்களது பிள்ளைகளைக்கொன்று,அவர்களது பிணத்தைக் காட்டிக் காசாக்கிய கயவர் கூட்டம்,இப்போது,இவற்றைத் தமிழ்த் தேசியச் சொத்தெனச் சொல்லி ,மக்கள் மனதில் விதைத்த கருத்துருவாகக் குறியீட்டுப் பொருட்களையும்,அதன் குறிப்பான்களையுஞ் சொல்லிக் கூவி விற்றுப் பணம் பண்ணும் வியாபாரத்தை எப்படி அனுமதிப்பது?

தமிழ் மக்கள் மீது சிங்கள அரசை ஏவி,அவர்களைத் தொடர்ந்து அழிக்கக்கொடுத்த அரசியலில் எவர் செல்வந்தர்களானார்கள் என்பதை இப்போதாவது புரியமுடிகிறதா?


இந்த வியாபரப்புத்தியானது தொடர்ந்து செய்யும் அரசியல் துஷ்ப் பிரயோகமானது தமிழ் மக்களது உரிமைகளையே ஏலம்போட்டு விற்கும் ஒரு செயலின் உச்சம்தாம் இந்த முத்திரைகள் வியாபாரம்.

அது கூவி ஏலம் விடும் குறியீடுகள், ஒரு இனத்தின் உரிமையினது வெளிப்பாட்டு அலகாகக் காட்டப்பட்டு,வியாபாரமாவதில் அதன் பின்னே கொல்லப்பட்ட பாலகர்களதும், தமிழ் மக்களதும் உயிர்களே இந்தக் கூறியீட்டுக்கு உயிர்ப்புக்கொடுத்தவை என்பதால்,இக் குறியீடுகளின்வழி ஏமாற்றி வியாபாரமாகப்படும் முத்திரைகள், தமிழ் மக்களது உயிர்களை ஏலம் விடுவதன் உச்சமாகவே பார்க்கப்படவேண்டும்.

இது,இனத் துரோகம்.ஒரு மக்களினத்தின் உயிர்த் தியாகத்தைக் கொச்சைப்படுத்திக் காசு சேர்க்கும் கடைக்கோடித்தனமாகும்.

தமிழ்ர் உரிமை எனவும் பொய்யுரைத்துத் தமக்குள்ளே போட்டியிட்டுக் கொள்ளையிலும்,கொலையிலும் ஈடுபட்டது பத்தாதென்று ஒருவருக்குள் ஒருவர் தொடர்ந்து மோதிக்கொள்வதுவரை காசுக்காக அனைத்துத் தமிழ் பேசும் மக்களதும் ஆன்மாவையே ஏலம்போட்டுவிற்பதற்குத் தயாரான புலிப்பினாமிக்கூட்டம்,தமது தலைவனது மரணத்தையே மறைத்து அவனது படத்தைக்கூட முத்திரையாக வெளியிட்டு,அதைத் தமிழ் தேசிய அலகென்று பிரச்சாரப்படுத்திக்கொண்டு காசுக்காக வியாபாரமாக்கும் அனைத்துக் காரியங்களும்,தமிழ் மக்களை விற்பதாகவே நான் இனம் காண்கிறேன்.

ஒருபுறம், அரசியல் தலைவர்களெனப் புலிப்பினாமிகள் இலங்கை அரசோடிணைந்து மக்களை ஒட்ட மொட்டையடிப்பதும்,அந்தப் போக்கிரிகளது வால்கள்,தமது பங்குக்கு இந்த வடிவங்களில் அனைத்தையும் காசாக்க," முத்திரை,கொடி" பண்பாட்டு வடிவங்களது நுகர்வென அனைத்தையும் நுகர்வுச் சந்தைக்குள் கொட்டிவைத்துக் காசாக்கிச் செல்வத்தைக் குவிப்பதில் ஒரு இனத்தையே சிங்களப்பாசிச அரசுக்கு இரைக்யாக்கி விடுகின்றனர்!


அவர்களது இச் சமூகவிரோத்தச் செயற்பாட்டின்வழி, ஆபாசமான வக்கிரத்தோடு கொலை அரசியலைக் காசுக்காச் செய்து கொள்கின்றனர். இதை,தமிழ்த் தேசியத்தின்மீதான பாசமுடைய குழந்தைகள் மெல்ல,மிக இலகுவான மொழிகளால் கடிந்துகொள்கின்றனர்.அல்லது, தேசியத்தின் பெயரால் இவற்றை நுகர்வது தமிழ்பேசும் மக்களது கடமையெனச் சொல்லித் துரோகத்தனத்தைத் தியாகமாக்கிப் புனிதமாக்குகின்றனர்.இதுவே,புலிவழித் தேசியமாக மக்களும் நம்ப வைக்கப்பட்டுச் சரியானதைக் கண்டடைவதைத் தடுத்துப் பணத்தைக் குவிப்பதற்கான மனத்தைத் தேசிய உரையாடல்வழி தயார்ப்படுத்திக்கொண்டு வருகின்றனர்.இது மிகப் பெரும் துரோகமாகும்.

பிளவுபட்ட இயக்கவாதப்புலிக்குழுக்களுக்குள் நிலவுஞ் செல்வமானது தொடர்ந்து நிலைப்படுத்தப்படவும்-பெருக்கவும் இத்தகைய வடிவங்களுடாக ஒரு பாதுகாப்பான அத்திவாரத்தை நோக்கி மக்களைக் காயடிக்கிறது.

தமிழ்பேசும் மக்களிடம் கறந்த செல்வமானது பல வடிவங்களில் முதலீடாக்கிய தெருச் சண்டியர்களுக்குப் புலிகளால் "வலுகட்டாயமாகப் பிடித்துக் களப்பலியாக்கப்பட்ட" அடிமட்டப் போராளிகளது தியாகம் தேவைப்படும்போது,அதைத் தினமும் தமிழ் தேசிய அபிலாசையூடாக அனுமதிக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் களப்பலியான ஏழைகளது குழந்தைகளது மரணத்தைக் கொச்சைப்படுத்துவதுமல்லாது அதை வியாபாரமுமாக்கி விடுகின்றனர்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.01.2012