Donnerstag, Juni 29, 2006

வீணவன் :புலித் தலைவன்!

வீணவன் :புலித் தலைவன்!


அல்லும் பகலும் ஆர்த்தெழும் உணர்வு மேவ
முன்னும் பின்னும் பேரி னப்-சிற்றின,ஈனப் படைகள் சூழ
கையடைப் பொருளாய்ப் போனவீ ழம்
குருதியால் நிலங் கழுவி கண்ணீர் மல்கும்.


தாய்மைப் பெருந் தாலாட்டு குரல்வளை தெறித்தொ துங்கும்
கருவில் குண்டடி, காலில் மிதிவெடி-
காணுமி டமெல்லாம் மனிதத் துண்டம்!
சொன்னால் செய்வதற் கொரு சாவுக் கூட்டம்,
சகதியாய் குருதிச் சேற்றில் மக்கள் கூட்டம்!!


இதைப் பார்கொள்ளாது,பரதவிக்கும்.
ஈழவர் நள்ளார்,தினம் நலிவர்.
ஊனின்று றங்கும் பச்சிளம் பாலகர்கள்,
பாதைகளி ன்றிக் காடுடை யானார்.


போர் வினை செய்யப் பெற்ற நாட்டில்
கண்கொடு ஜனநாயகம் பிறப்பின் கடை.
விழிவிற்று கோலாச்சும் வீணவன் தன் புகழ்
பாடிடும் துன்னலர் கூட்டமாய்ச் சில தமிழ்ப் பாலகர்



இதுள் எம்மவர் சிலருக்கு பாரத-அமெரிக்க நலனில்
காதல் முதிரக் கருத்து அழிந்தார் ஆம்!
அன்னார்கள் சுனாமியில் சேர்த்ததையும் சுத்தி,
தீர்வுப் பொதியையும் தின்று, போரைத் தொடர்ந்தாலும்-
நள்ளாதி ந்த ஈழ நானிலம்!!


மொழியிழந்து துப்பாக்கியடைப் பொருளாய்
வாழ்வி ழந்து வனப்பி ழந்து-வரும்
பாதகர் வால் பிடித்து பிழைத்திடவோ போர் வாழ்வு?
புலிகளின் தாகம் இதுதானோ எம் புண்ணிய தேசம்?


தமிழர்கள் பார் அளிப்பார் ஆவதெ ப்போ?
புகல் தமிழர் நாடு உறைவார் ஆவதெ ப்போ??
அன்னை பொங்கிய சோறுண்டு அகம் மலர்ந்து-
துகில் வதெ ப்போ???
எம் அக விளக்கு ஒளியெ ழுப்பி நிமிர்வதெ ப்போ????

ஜனநாயகம்
29.04.06

எதற்காகப் பெண்ணே?

எதற்காகப் பெண்ணே?

தாய்மையின் சோகத்தை
தனதாக்கிய தேசம்
தரையில் தலையைத் தெறிக்க வைத்தது!

கற்பையில் குண்டெறிந்து
தேசமொன்று விடுதலைக்குப் போராடுகிறதாம்.

தேசத்தின் விடியலொன்று
தாய்மையைக் காவெடுத்து
கருகிச் சாம்பலாகிய உடலோடு சல்லாபித்தது!

தேசியம்,
தேசம்,
மொழி,
பண்பாடு,
இனம்...

பிணம்
புசித்துப் பசியாறும் பொழுதுகளாய்
பொய்யுரைத்துப்
பதுங்குழிகளுக்குள் தாயொருத்தியின்
கருப்பையில் இவற்றைத் திணிக்க
தேசமெங்கும் குருதியாறு
குழந்தைகளின் குரல்வளைவரை
நிறைந்து வழியும்.

எப்போதோ ஓர் நாள்
அவர்களின் மூச்சை முழுமையாகக் காவுகொள்ளும்
இன்னொரு
சுனாமியாகக் குருதி அலைகள்
என் தேசத்தை மூழ்கடிக்கும்!

எந்தப் பொழுதினும்
உயிர் வாழாதிருக்க எவராவது விரும்புவாரோ?

இது எப்படி?

மண்டையைப் பிளந்து
பிழிந்தெடுத்த மூளையை உலர்த்தி,
பிசாசுத் தனமான
விசமத்தனங்களை வினையாக்குவதும்,
விடுதலையல்ல!

வேதனை!

தாய்மையைக் கொச்சைப்படுத்திய
தேசியம்
சூறையாடப்பட்டவொரு வெளியில்
உன்
சிதைவுகளுக்குள்
ஓராயிரம் கேள்விகள் எழலாம்!

கூர்மைப்பட்ட குரல்களாய்
மக்கள் விழிதிறந்து
கரங்களைப் பிணைப்பதற்காகவேனும்
உன் சிதைந்த சிரசுபற்றிக் கதைத்தாக வேண்டும்.

எதற்காக?

பொய்மைப் பொழுதுகளால்
போர்த்தப்பட்ட யுத்த தேசம்
விடுதலை,
சுதந்திரமென்பதெல்லாவற்றையும்
தேசியத்தின் கோவணத்துள் வீசியெறிந்தது.

ஒவ்வொரு தமிழரும்
கோவணத்தைக் கட்டியதும்
தன்னளவில் தேசியம் அரிப்பெடுத்து
மனிதத்தைச் சொறிந்தது!

தேசம் நடுத்தெருவில்
தாய்மையைப் பறிக்க
புதல்வர்களைத் துப்பாக்கியுடன் நிறுத்துகிறது!

ஜனநாயகம்
27.04.06

தமிழீழம்:மாகாணமாகிறது!

தமிழீழம்:மாகாணமாகிறது!

இன்றைய நமது அரசியல் வாழ்வு ரொம்பத்தான் கேணைத்தனமாகப் போச்சு!எவனெவனோ தமிழ் மக்கள் நலம்,விடுதலை பற்றியெல்லாம் பேசுகிறார்கள்,எழுதுகிறார்கள்.தமிழ் மக்களுக்காகச் சிங்கக் கொடிகளோடு ஊர்வலம் எடுக்கிறார்கள் சிலர்.பலர் எழுக தமிழ்-பொங்கு தமிழ் எடுக்கினம்.பாதிக்கப்படும் மக்களோ ஒரு நேரக் கஞ்சிக்குப் பேயாய் அலையும் நிலையில். என்னதான் இந்தச் சனத்துக்கு விடிவு தரும்?

தமிழீழம்!-புலிகள் அப்பப்பச் சொல்வதும்,பின்பு அடக்கி வாசிப்பதும்.


மாநில சுயாட்சியும்-மத்தியில் கூட்டாட்சியும்!-டக்ளஸ் உரைக்கிறார்.


இந்தியாவோடு பஜனை பாட புலிகள் உட்படக் காத்திருக்கும்போது,இந்தியாவோ இன்னும் மாகண சபைக்குள் கனவு காணுது.அதுக்காக ஐயா ஆனந்தசங்கரி பலமாகக் காய் நகர்த்துகிறார்.இந்தியா ரொம்பத்தான் தெம்படைகிறது.

புகலிடத் தமிழர்களைப் புலிகள் ஒருபுறம் சுரண்ட மறுபுறம் இலங்கைச் சிங்கள அரசும்,இந்தியாவும் கூடவே அவர்களின் நம்பகமான கூட்டாளிகளும் மூளைச் சலவை செய்வது கண்கூடாக நடக்கிறது.

அப்பாவி மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பலி கொடுத்துவிட்டுக் கண்ணீரோடு அவர்களின் கல்லறையில் கட்டுண்டு அழுதபடி...

இவர்களுக்கு வாழ்வு பற்றிய எதிர்பார்ப்பு.

அரசியல் நடத்துபவர்களுக்குத் தமது பதவி,சுகம்,பணம் இயக்கம்-கட்சி என்ற எதிர்பார்ப்பும் மக்களை அடக்கி ஆட்சி புரியும் கனவும்.


இதை எப்படி அனுமதிப்பது?

இன்றைய இலங்கை அரசியலில் பற்பல சக்திகளின்,வர்க்கங்களின் நலன்கள் முட்டிமோதுகின்றன.இங்கே பிராந்தியத் தரகு முதலாளித்துவ நலன்கள் ஒவ்வொரு வழிகளில் தத்தமது நலனின் பொருட்டுப் புதிய புதிய கூட்டைப் பெறுகின்றன.அவை தமிழ் பேசும் மக்களின் இனப் பிரச்சனையைத் தமக்குச் சாதகமான முறைகளில் பயன் படுத்தித் தமது நலனைப் பெறத் துடிக்கின்றன.

அன்றாட வாழ்வில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அராஜகச் சூழலை-இயக்கப் பயங்கரவாதத்தை,புலிகளின் தனிகாட்டு ராஜாங்கத்தை,மற்றைய ஆயுதக் குழுக்களின் அட்டகாசத்தைப் பாரிய அளவில் தூண்டிவிட்டுச் சிங்கள அரசு தமிழ் மக்களின் உண்மையான பிரச்சனையை நீற்றுப்போக வைத்துள்ளது.இன்றைய உடனடிப் பிரச்சனையானது இனப்பிரச்சனையல்ல,சுயநிர்ணயப் பிரச்சனையல்ல மாறாகப் புலிகளின் அடக்குமுறையே தமிழ் மக்களின் பிரச்சனையென்று உலகத்துக்குக் காட்டும் இராஜதந்திரத்தில் இந்தியாவும்,இலங்கையும் மெல்ல வெற்றி பெற்று வருகின்றன!

வடக்கும் கிழக்கும் தமிழரின் தாயகமென்ற கோட்பாட்டை எப்பவும் நிராகரித்த இலங்கையின் ,இந்தியாவின் ,அமெரிக்காவின் விருப்பமானது தமிழ் மக்களைப் பிரதேசவாரியகப் பிரித்தெடுத்துவிட்டது.ஒவ்வொரு தமிழ் மாவட்டங்களிலும் பற்பல ஏற்ற தாழ்வுகள் உண்டு.தமிழ்ச் சமுதாயத்தில் பாரிய பிளவுகள் சாதியாகவும்,பிரதேச ரீதியாகவும் நிலவுகிறது.அதைப் பெரும்பாலும் சரிவரப் பயன்படுத்தும் இந்தியாவின் இராஜதந்திரமானது முதல் தடவையாகப் புலிகளின் படையணியைப் பிரித்தெடுத்து இதை வலுவாகச் சாதித்துள்ளது.இந்த வெற்றியானது புலிகளின் இயக்க நலனை பாரிய முறையில் சிதைத்து அவர்களை வெறும் குறுங்குழுவாக்கும் தந்திரத்தைக் கொண்டது.இந்தத் தந்திரத்தை வெகுவாகக் கடைப்பிடிக்க முனையும் இந்தியா வருங்காலங்களில் இந்தப் பிரச்சனையைத் தூண்டி வளர்த்தெடுத்துக் காய் நகர்த்தும்.தமிழ் பேசும் மக்களின் அடிப்படையான பிரச்சனையை முற்றுமுழுதாகப் புதைத்துவிடும் அரசியல் காய் நகர்த்தலே இனிமேல் வலுவடையும்.அதற்காக இந்தப் பிரச்சனை இன்னும் இழுத்தடிப்புக்குள் கொண்டு செல்லப்பட்டு வருடங்கள் பல கடக்கப்படலாம்.இப்படிக் காலம் கடக்கும்போது புலிகளின் மறைவு நிச்சியமாகும்.இன்றைய சூழலில் மங்குகாலத்தில் இருக்கும் புலிகளின் அமைப்பாண்மை காலம் செல்லச் செல்ல இன்னும் மங்கும்.

இதைத் தடுப்பதற்கான புலிகளின் எந்த இராஜதந்திரமும் உலக அரங்கில் செல்லுபடியாகாது. போரைத் தொடங்கி,தமது அமைப்பாண்மையையும்,படையணியின் உளவியலையும் தெம்படைய வைப்பதற்குப் புலிகளுக்கு அவசியமாகும்.ஆனால் இந்த உபாயம் அவர்களின் தற்கொலைக்கு வழி சமைப்பதில் முடியும்.எனவே இந்த வழியும் இறுக மூடிக்கிடக்கும்போது அவர்களிடம் பேரம் பேசல் மட்டுமே மிஞ்சிக்கிடக்கிறது.

இந்தப் பேரம் பேசலுக்காக முந்திய பாதை போன்ற திடகாத்திரமான சூழல் அவர்களுக்கக் கிடையாது.கருணாவின் பிளவுக்கு முன்னிருந்த அந்த ஆளுமை புலிகளுக்குக் கிடையாது.இந்த இறுக்கமான சூழலானது புலிகளின் இயக்க நலனை முதன்மைப் படுத்தும் எந்தக் காய் நகர்வையும் அவர்களுக்குச் சாதகமாக்கமுடியாது போகும்.இதைப் புலிகளின் பின்னாலுள்ள அவர்களது எஜமானர்கள் நன்றாக உணரத்தலைப்பட்டுள்னர்.எனவே நோர்வேயிடம் பணத்தை வேண்டித் தமிழ் மக்களின் உரிமைகளை அடைவு வைத்து அமெரிக்காவின்,மேற்குலகத்தின் நம்பகமான அடியாளாகப் புலிகள் மாற்றப்பட்டு வருவதில் இனிவரும் காலம் தொடரும்.இந்தியாவைப் புலிகளோ அன்றி இந்தியா புலிகளையோ ஒருபோதும் நம்பத் தயாராக இல்லை.இந்த நிலையில் மேற்குலகைச் சாரும் புலிகளை தமிழ் மக்களிடம் அம்பலமாக்கித் தமிழ் மக்களுக்குள் பழைய பெரிச்சாளிகளை ஜனநாயகச் சக்திகளாக்க முனைகிறது இந்தியா.இதில் இந்தியாவின் இந்த வியூகம் வெற்றி பெறும் தறுவாயிலுள்ளது.

இத்தகைய அரசியல் காய் நகர்வில் புலிகளின் கோரிக்கைகளை ஆளும் இராஜ பக்ஷ அரசு ஒருபோதும் செவி சாய்க்காது.இந்தியாவின் இலக்குப்படி இதை இழுத்தடித்துவருவதற்காக பேச்சு வார்த்தை அங்கே-இங்கே என்று நகரும்.இத்தகைய தரணங்களில் சிங்கள இனவாதச் சக்திகளைக்கொண்டு புலிகளுக்கும் அவர்களது கோரிக்கைகளுக்கும் எதிராகத் தூண்டிவிட்டு பாரிய எதிர்ப்பைச் சிங்கள மக்கள் மத்தியில் தூபமிடும் இந்தியா! தமிழ் மக்களுக்கு அற்ப சலுகையும் கிடைக்காத சூழலை உருவாக்கி விடும் இந்தியா, புலிகளையின்னும் பலவீனப் படுத்தும் பாரிய கருத்தியல் போரும்,மென்மை யுத்தமும் நடத்தும்.இதில் புலிகளின் முக்கிய பினாமிகள் கொல்லப்பட்டும்,கைதுகள் செய்யப்பட்டும்,புலிகளின் பொருளாதார வலு முடக்கப்படும்.இது சாத்திய மாகும் தறுவாயில் அவர்களது இருப்பு மிக மிக அரவமாகவேயிருக்கும்.இங்கே இந்தியாவின் மாகாண ஆட்சித் தீர்வுப் பொதியூடாக வன்னியிலும் யாழ்பாணத்திலும்,மட்டக்களப்பிலும்,திருகோணமலையிலும்,அம்பாறையிலும் ஒவ்வொரு எடுபிடிகள்' மாகாண ஆட்சியை' நடாத்துவார்கள்.அதில் வன்னிப் புலிகளின் பங்கும் உண்டு.சிங்கள மக்கள் இதற்கே வழிவிடும் நிலையில்லை.எனவே இதைப்பெறுவதே மேலென கருத்தியல் விதைக்கப்பட்டு அதை சாதிப்பதில் இந்தியா வென்றுவிடும்.


அப்பாவி மக்கள் மீளவும் கொட்டாவி விட்டு,இவர்களிடம் பிச்சை எடுக்கவேண்டியதுதான்.

இதுதான் புலி அரசியல் தந்திரம்.இதை மீறிய வாழ்வு தமிழ் பேசும் மக்களுக்கு இனி வருவது பகற்கனவே.மாநிலமும் இல்லை,தமிழீழமும் இல்லை!மாறாக மாகாணமென்பதே இந்தியாவினதும்,அமெரிக்காவினதும் விருப்பாகும்.இங்கே இதைச் சாதிக்க சிங்கக் கொடிகளுடன் தமிழ்க் கூலிகள் தயாராகி வருகிறார்கள்.புலிகளும் தனது கூலியை நோர்வேயூடாகப் பெற்று> தனது வாலை மேற்குலகுக்கு ஆட்டுவதில் கரிசனை காட்டுவதால் இனிவரும் காலம் இந்தியாவுக்கே வெற்றியைத் தேடித் தரும்.இதுவே பூகோள அரசியலின் விதி.இதைத்தாண்டி மேற்குல எஜமானர்கள் புலிகளுக்கு விமோசனமிட முடியாது.

ஜனநாயகம்.

18.10.05

அம்பலத்தாவது!

அம்பலத்தாவது!


இப்போதெல்லாம் உறவகள்
திடீர்,திடீரெனப் பிறக்கும்-இது
உயர்ந்த அன்பளிப்போடு
விழிபார்த்துப் புன்னகைத்து
உருகி மொட்டவிழ்க்கும் இதயங்களோடு
கசிந்து கண்ணீர் மல்கும்

நேற்றையவுறவும்
இன்றைய கூட்டும்,கும்மாளமும் புதிதல்ல
ஆடுகள் எருதுகளோடு இணைவதில்லை
நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை

இது
இங்கு புதுமையாக
அங்கும் புதுமையாக...

அம்பலப்படுவது
அவர்களில்லை
இவர்களது தாகம் ஒப்பற்ற விடுதலையானால்
ஒருக்காலும்
ஒய்யாரமிக்கதான'சொகுசுப் பயணத்துக்கு'
எதிரியின் காலில் எச்சிலூறும் நாவைப் பதித்திருக்கார்

அப்போதெல்லாம்
நோட்டீசு ஒட்டியதுகளும்
உணவு பரிமாறியதுகளும்
பயங்கரவாதிகளெனப் பிடித்து விலங்கிட்ட அரசு

உலங்கு வானூர்த்திகளில்
உருவப் பருமனுடைய பெருக வாழ்ந்து
வெளியுலகைத் தரிசித்தவர்களையும்
கைகோர்த்துக் கொண்ட கண்ணிய வா(ள்)ன்களையும்
விலங்கிடாது வழிவிட்டது சிங்கள நண்பர்களாக

ஸ்ரீலங்கா ரத்தனா
இப்படியாக நம்மவரை
வந்தடைந்தது-
கொடுத்ததை
அப்படிக் கொட்டியது அரசு


கூட்டத்திலிருந்த
குரங்கொன்று வெளிக்காற்றால் அள்ளுண்டு போக
சுகத்தைக் குறைத்ததாய்ச் சில கிழங்கள்
கடைவாய் கிழித்து முனகியது அப்போ!

பாருங்கள்
இவர்களுக்கு
பசிப்பது தேசிய நலனாம்
மற்றவர்களுக்குப் பசிப்பது துரோகமாம்!
தூ...

எழுக பிணங்களே,எழுக!

எழுக பிணங்களே,எழுக!

குருதிச் சேற்றில் புதையுண்டுபோகும் ஈழம் ,
தெருவேராத்துக் கம்பங்களில் தொங்கிய-தொங்கும்
தேசத்துச் செல்வங்கள்,

அடர்ந்த காடாய்ப்போன ஆத்தை படுத்துறங்கிய
அடுப்படியும் >முத்தமும்
அமைதி துறந்த அப்புவின் சாக்குக் கட்டிலும்
மானுடத்து எச்சமாக
எந்தத் துரும்புமற்ற ஈழத்துக் கிரமங்களும்,

போராளிக்குச் சோறுபோட்ட குற்றத்துக்காகவும்
நோட்டீசு ஒட்டியதற்காவும்
கூட்டத்துக்குப் போனதற்காகவும்,
போராடப் போனதற்காகவுமாக
சிறைகளில் இன்னும் இருண்டு பட்டுக் கிடக்கும்
ஈழத்து மனிதர்களும்
வாழ்விழந்து வதைபடுகையில்...

புறுசிலிலோ
கோவிலுக்குக் காவடி தூக்கிய பழக்கதோசத்தில்
ஒரு சிலரின் கரங்களில்
ஒரு முகமூடியும்
சில கோவணத் துண்டுகளுமாகத் தமிழரின் உரிமை
தெருவில் உலாவிக் கொண்டிருக்க,


சில தலைகள் மட்டும்
எதையோ தவப்பயனாய்ப் பெறுவதாகச் சொன்னர்கள்
தேசத்தின் கோவணம்
நாளைய தினம் (உலகக்) கம்பத்தில் பறக்கமுனையுமாம்


எந்தப் பொழுதிலும்
நமது கனவுகளுக்குக் கால் முளைக்கவில்லை!
இறக்கையேந்தித் தலை குத்தி வீழ்ந்த
ஈழத்துக் கனவு
மெல்ல இடம்பார்த்து மூலையைப் பிடித்தது.



இருவேறு குகைகளுக்குள் இடறிவிழும்
சில நடைபுணங்கள்
எல்லைகளில் எரிச்சலைக் கொட்டுகின்றன
இதுக்காகப் பல வர்ணக் கோலங்களுடன்!


இந்த இடருக்குள்
தலைகளைத் தறித்துச் சாக்கிலிட்டவனே
மக்களின் குரலாகத் தன்னையும்
விழிகள் முன் நிறுத்துகிறான் பல் முனைகளில்!


ஏகத் தலையோ உலகத்து வீதிகளில் உலா வந்தபடி...
மக்களின் சில்லறைகளைத் தட்டிப் பறித்த சில அண்டங் காகங்களோ
எழுக புண்ணாக்கு,ஏந்துக தவைர் படம் என்றபடி
தெருவோரப் பிணக்குவியல்களோ
ஏதோவொரு கனவான்(ள்)கள் படையலாக
துர் நாற்றமெடுத்துத் துயில்கின்றன ஈழமெங்கும்!


இப்போது
ஏதோ எழுவதுதான் பாக்கியாம்!
மிச்சசொச்சத் தலைகளையும்
உருட்டியபடி.


கொட்டிய குருதி உலர்வதற்குள்
வழித்து நக்கும் நாய்கள்
நாக்கைத் தொங்கப்போட்டு
நடுச் சந்தியில் காத்திருக்கிறது
ஈழத்தின் பெயரால்...


26.ஒக்டோபர் '05

(வி)தேசியப் பண்

(வி)தேசியப் பண்

மக்களின் கழுத்தை நெரித்து
நாவைச் சுருக்கிய
துன்னலர்
துன்பமில்லாக் காலத்தைத்
துரத்திய கையோடு
பொங்கியெழும் தேசத்தவரை
தேடியழிப்பதும்,
தட்டிப்பறிப்பதும் உச்சத்தைத் தாண்ட
ஈழத்துப் பண்ணில் மக்களின் பங்கைத் தேடுகிறாராம்!

ஓரத்தே மூட்டிய தீயில்
தினம் வேகும் தேசத்து மனிதர்களுக்கு
தேசத்தின் பெயரால் 'தேசியப் பண்'!
தேசம்,தேசம்,
விடுதலையாச்சு!
ஈழமென்ற கனவின்
நனவாய்'தமிழீழம்'தேசியப் பண்ணோடு
தெருவெங்கும் 'தேசியத் தலைவராய்' தோரணமிடும்

இத்தனை நூற்றாண்டுப் புரிதலும்
இந்தத் தமிழரை எட்டா!

கட்டை விரலை வெட்டச் சொன்னால்
மறுபேச்சுப் பேசா எகலைவன்போல
மட்டற்ற மயக்கம்
மக்களில் சிலருக்கு.

சொல்வாருக்குப் புத்தியும் போச்சு
கேட்பாருக்குச் சிரிப்பும் ஆச்சு!


உலகத்துப் பண்களில் ஆய்வும்வேறு


அற்பர்கள் அழித்தவை தேசத்து
மக்களை
வாழ்வை
பண்பாட்டை
பொருள் ஆதாரத்தை மட்டுமல்ல
அவர்தம்
ஆன்மாவையும்தான்.

இத்துணை'பொய்மை'இவர் இறைத்திடினும்
எத்துணை'கொலைகள்'இவர் கரஞ்செய்கினும்
ஈழத்தின் பெயரால்
இடர் மறந்து
இறந்தனர் மக்கள்!

இதயத்தைத் தொலைத்த
துன்னலர்
துயரக் கொடூவாள்தாங்கி
'தேசியப் பண்'ஒலித்திடும்
கனவை மக்களின் மனதினில் விதைத்தும்
வழிகளில்'வெடிகளைப்'புதைத்து
பணத்துடன் ஓட
பொழுதுகள் பார்த்து...