Donnerstag, Juni 29, 2006

வீணவன் :புலித் தலைவன்!

வீணவன் :புலித் தலைவன்!


அல்லும் பகலும் ஆர்த்தெழும் உணர்வு மேவ
முன்னும் பின்னும் பேரி னப்-சிற்றின,ஈனப் படைகள் சூழ
கையடைப் பொருளாய்ப் போனவீ ழம்
குருதியால் நிலங் கழுவி கண்ணீர் மல்கும்.


தாய்மைப் பெருந் தாலாட்டு குரல்வளை தெறித்தொ துங்கும்
கருவில் குண்டடி, காலில் மிதிவெடி-
காணுமி டமெல்லாம் மனிதத் துண்டம்!
சொன்னால் செய்வதற் கொரு சாவுக் கூட்டம்,
சகதியாய் குருதிச் சேற்றில் மக்கள் கூட்டம்!!


இதைப் பார்கொள்ளாது,பரதவிக்கும்.
ஈழவர் நள்ளார்,தினம் நலிவர்.
ஊனின்று றங்கும் பச்சிளம் பாலகர்கள்,
பாதைகளி ன்றிக் காடுடை யானார்.


போர் வினை செய்யப் பெற்ற நாட்டில்
கண்கொடு ஜனநாயகம் பிறப்பின் கடை.
விழிவிற்று கோலாச்சும் வீணவன் தன் புகழ்
பாடிடும் துன்னலர் கூட்டமாய்ச் சில தமிழ்ப் பாலகர்



இதுள் எம்மவர் சிலருக்கு பாரத-அமெரிக்க நலனில்
காதல் முதிரக் கருத்து அழிந்தார் ஆம்!
அன்னார்கள் சுனாமியில் சேர்த்ததையும் சுத்தி,
தீர்வுப் பொதியையும் தின்று, போரைத் தொடர்ந்தாலும்-
நள்ளாதி ந்த ஈழ நானிலம்!!


மொழியிழந்து துப்பாக்கியடைப் பொருளாய்
வாழ்வி ழந்து வனப்பி ழந்து-வரும்
பாதகர் வால் பிடித்து பிழைத்திடவோ போர் வாழ்வு?
புலிகளின் தாகம் இதுதானோ எம் புண்ணிய தேசம்?


தமிழர்கள் பார் அளிப்பார் ஆவதெ ப்போ?
புகல் தமிழர் நாடு உறைவார் ஆவதெ ப்போ??
அன்னை பொங்கிய சோறுண்டு அகம் மலர்ந்து-
துகில் வதெ ப்போ???
எம் அக விளக்கு ஒளியெ ழுப்பி நிமிர்வதெ ப்போ????

ஜனநாயகம்
29.04.06

Keine Kommentare: