Samstag, April 18, 2009

புலிகள் மீளவும் புத்துயிர்ப்புப் பெறுவார்களா?

புலிகள்
மீளவும் புத்துயிர்ப்புப் பெறுவார்களா?


கிடையாது!

ஏனெனில்,
துரோகஞ் செய்யாது
புலிகள் போராடி மடிந்தால்
மீளவும் புலிகள் புத்துயிர் பெறமுடியாது...


எங்கே?


வன்னிக்குள்ளதான்!


அப்ப கிழக்கில கருணா?...


சீச்சீ,
அது,புலியல்ல
தேசியப் பூர்ச்சுவாதம்
எதிர்ப் புரட்சிக்காரன்.


ஈழத்தை
விட்டு எத்தியோப்பியாவில்தான்
கிழக்கு மாகாணமே இருக்கா?


ஓம்!


புலிகளென்றால் பிரபா
வன்னியைச் சுற்றித்தாம்
துரோகக் குழு இனி உருவாகவேண்டும்
அங்ஙனம் வந்தால் நீடிப்பார்கள்
கூலிக் குழுவாக...


இப்போது
தேசியவிடுதலை இராணுவம்
தேசியச் சக்தி
அந்நியச் சேவை அறியாத
ஏகாதிபத்திய எதிர்ப்புப் படை
அதுதான்
தேசியச் சக்தி
வலதுசாரத்தில்...







தமிழர் பூமியை
பிரதேசமாகப் பிளந்தவர்கள்
கிழக்கைப் பிளந்தபோது
புலியையும் பிளந்தனரா?


கருணா துரோகியாக நீடிப்பது புலி அல்ல
யாழ்ப்பாணம் பறிபோய்
அதற்கும் டக்ளஸ் தலைமைகொண்டாலென்ன?
அவரும் ஒட்டுக் குழு


தலைவரென்பது பிரபா
புலிகள் என்பது பிரபா
பிரபா என்பதும் புலிகள் என்பதுமே
வன்னிகொள் தமிழர்-அதுவே தமிழ்ச் சமுதாயம்!

அங்கே,
புலிகள் பலியானால்
இலட்சியங்கொள் தியாகம்
அறிக,
புலிகள் அழிந்திடுவர்
இஃது துரோகமிழைக்காத இலட்சியம்!


ஏலவே
புலிகள் கற்பித்த"கருணாத் துரோகம்"
துரோகமெனச் சொல்லுதலும்
துரத்தி அழிக்கப்படும் தலைவருக்குப்
பட்டுடுத்தப் போதுமானதுதாம்


தலைவரை அழிப்பது
நிச்சியமெனும்போது
தியாகத்தைச் சொல்பவர்கள்
வன்னிக்குள் மட்டுமே புலிகளைக்காண
கிழக்கிலும் முன்னம் இருந்தனர்
கருணாவழி நீடிக்கவில்லை-கொல்லப்பட்டனர்?


எனினும்,
எஞ்சியவர்கள் ஓட்டுக் குழுக்கள்
வன்னிக்குள் ஒரு கருணா முளைத்தால்
புலிகள் இனிமேல்தாம் துரோகியாவார்கள்


ஏனெனில்,
தலைவரே இலட்சியப் புருஷர்!
இதுவரை புலிகளாகப் போரிடுபவர்
தமிழ்த் தேசம் வன்னிக்குள்ளதான்
வர்க்கச் சமுதாயமும் அதற்குள்ளதாம்
தத்துவஞ் சொல்லுகிறோம் தத்துவம்...


ஆதலால்,
வன்னிக்குள்ளிருந்து
வருபவர் மட்டுந்தாம் துரோகமிழைப்பார் எதிரியுடன்கூடி
கருணா-பிள்ளையானா?
ஓ,அவர்கள் மட்டக்களப்பார் ஒட்டுக் குழுவல்லோ அது!
கிழக்கிலும் தமிழர்கள் வாழ்கிறார்களா?


அங்கே,
அரசியல் வெளிகள் இருப்பதில்லை
அதனால் புலிகள்
நீடிப்பதென்பது தத்துவத்துக்குப் பொருந்தாது


புரட்சியின் அடிப்படை விதிகொண்ட
இலட்சியப் புருஷர் வன்னிக்குள்
அதை மறுத்த கிழக்குப் புலிகள் ஒட்டுக் குழுக்கள்
புரட்சி நிலவரம்
வன்னிக்குள் தியாகங்கள் தோன்ற உருவாகிறது
புரட்சியின் புறவய நியதி இஃது!


வன்னிக்குள்
புலிபோராடிச் சாவதால்
வடக்குத் தமிழரை எதிரி வென்றிட முடியுமா?
இல்லையில்லை!
வடக்குப் புலி அரசிடம் சேர்ந்து
துரோகம் இழைக்காததால்
அது தன் வர்க்கத்துக் இன்னும் துரோகஞ் செய்யவில்லை
அதனது வர்க்கம் வன்னிக்குள் மட்டுந்தான்...


தன் வர்க்க சாரத்தில்
குட்டிப் பூர்ச்சுவா வர்க்கத்தின்
எதிர்ப்புரட்சிக்காரன் கருணா ஆதலால்
ஒட்டுக்கு குழு-அது புலியல்ல எலி.


எனவே,
புலிகள்தம் பாசிச வழிகளில்
நின்று
வன்னிக்குள் இருக்கும் வலது சாரிய நிலைக்குத்
துரோகமிழைக்காது போராடி மரணிக்குங்கால்
தமிழர்தம்(வன்னித்தமிழர்)பிரதான எதிரியான அரசு
தமிழ் மக்களிடம் தோற்றுவிடும்!

அப்பாடா,
அருமை.

ப.வி.ஸ்ரீரங்கன்
17.04.09

2 Kommentare:

ttpian hat gesagt…

உலகமே நம்மை திரும்பி பார்க்கிரது!
நாம் வெல்வோம்!

Anonym hat gesagt…

http://www.youtube.com/watch?v=p4BeBYXGHaI&eurl=http%3A%2F%2F