Samstag, März 16, 2013

தமிழகத்து மாணவர்கள் போராடுகிறார்கள்!

மெரிக்கா  இலங்கையில் ஏற்பட்ட "மனிதவுரிமை மீறல் -யுத்தக் குற்றம்" போன்றவைக்கு எதிராக மனிதாபிமானஞ் சார்ந்து  யெனிவாவில்[United Nations Commission on Human Rights (CHR) ] இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரும் தீர்மானத்தைத் தமிழர்களில் பலர் ஆதரிக்கிறார்களென்பதற்காக நாமும் ஆதரிக்கமுனைவது அமெரிக்கா உலகும் பூராகவுஞ் செய்யும் கொலைகளை நியாயப்படுத்திவிடுதென்பது போலவேதாம்  நமது மக்களது பெயரால் அமெரிக்க அரசியல் ஊக்கத்தை நாம் திறம்பட நடாத்தி முடிப்பதன் ஒரு சூழலை நமக்குள் மெல்ல உருவாக்குகிறோம்.இதை ,அமெரிக்க லொபி என்று சொன்னால் தப்பு என்றாகும்.ஆனால் ,உண்மை அதுதாம்.இதுதாம் புதிய வகையிலான அரசியல்!

கொலைகாரனே இன்னொரு கொலைகாரனைக் கையை நீட்டி நீ , கொலையாளியெனச் சொல்லித் தனது கொலையை நீதியாக்கி மறைப்பது.இதைத்தாம் நாம் அமெரிக்காவுக்காகச் செய்து முடிக்கின்றோமென்பது எவர் சொல்லி ,என்ன ஆவது?




சாதாரணமாகத் தமிழ்நாட்டில் அதிகமான இளைஞர்கள் மிகவிரைவாகவே கட்சிசார் அரசியலுக்குப் பலியாவதுண்டு.ஈழத்தில் இயக்கவாத மாயைக்குப் பலியாவது போன்று. இன்று, நடைபெறும் மாணவர் கலகமெல்லாம் இலங்கையிலுஞ்சரி இல்லைத் தமிழ் நாட்டிலுஞ்சரி ஏதோவொரு ஒத்திகைக்குப்பின்னெழுவதற்கானவொரு தயாரிப்பாகவே இனம் காணப்படவேண்டும்.இது ,தயாரிக்கப்பட்ட ஊக்கத்தின் கூறுகளாகவே அமுக்கங்கொள்கிறது.இதன் சூத்தரிதாரிகள் பல இரூபத்துள் எங்கும் நீக்கமற இருக்கின்றனர்.

இவர்களாற் தயாரிக்கப்படும் அரசியலானதை எவரும் இலகுவில் புரியமுடியாதளவுக்கு மிக நேர்த்தியாக மக்களது பிரச்சனைகளுடன் பிணைந்து அந்நியவூக்கங்கள் நமது அரசியலோடெழுகிறது.அரேபியாவின் அரசியல் முரண்பாடானது எப்பவும்போலவே பரந்தபட்ட மக்களுக்கான சனநாயகத்தோடு சம்பந்தப்பட்டது.அதன் சாயலிலெழுந்த சேர்யா பொப்போவிச்சின்[Srđja Popović_Otpor!    ] முகாமைத்துவப் புரட்சியானதற்கு அமெரிக்காவின் தலைமையில் மேற்குலகம் கொட்டும் தொகையானது வருடமொன்றுக்கு 700 பில்லியன் டொலர்களென்பது எவரும் அறியாத சூத்திரம் அல்ல!





பொறுத்திருங்கள்!

ஒவ்வொன்றாக முடிச்சுகள் தென் கிழக்காசியாவில் அவிழ்படப்போகிறது.

இது, மகிந்தாவுக்கான எதிரான அரசியல்-கலகமல்ல!மாறாக,பிளவுப்பட்ட புவிகோள அரசியல்சார் பொருளாதார ஆதிக்கத்துக்கான இறுதிப்போர்.

இதன் வடிவம் பல மாதிரிகளில் மையங்கொள்வதைப் புரிய மறுப்பது ஆபத்தானது.

நமக்குள் அரசியல்-பொருளாதார மற்றும் இனஞ்சார் முரண்பாடுகள் பலாத்தகாரமாக ஊதிப்போய் இருக்கிறது.பிளவுப்பட்ட  தலைமைகளது அராயகம், அரசில் ஆதிக்கமானது அதிகமான சந்தர்ப்பத்தில் மேற்குலக அரசியல் நலன்களுக்குத் தோதான  நிலவரத்தது சூழலை இத்தகைய வலயங்களில் ஏற்படுத்துகிறது.

தமக்குள் நிலவும் முரண்பாடுகளை முன்வைத்துப் பரந்துபட்ட மக்களது தலைமையில் எழும் போராட்டமெல்லாம் ஏதோவொரு வடிவில் அந்நியச்சக்திகளால் கையகப்படுத்தப்பட்டு இறுதியில் ,அவர்களது இலக்கை வென்றெடுக்கும் போராட்டங்களாக மக்களது தியாகமெல்லாம் மேற்குலகத் தேசங்களது நலனுக்காகவே மாற்றப்படுகிறது.

கடந்த, கிழக்கைரோப்பியக் கலகம் மற்றும் சமீபத்து அரபேிய வசந்தமெல்லாம் இப்படியே போயின.

இதன் ,இன்னொரு முகாம் தென்கிழக்காசியாவில் உச்சம் பெறுவதற்காகத் தென்னாசியப் பிராந்தியத்துள்  பல வடிவத்துள் பரீட்சிக்கப்படுவதற்குத் தமிழ்பேசும் மக்களது " இலங்கைக்குள் நிலவும் முரண்பாடுகள்-அவர்களது உரிமைசார்ந்த போராட்டமெல்லாம் "அவர்களது ,நலனுக்காகவெனப் பேசப்பட்டு யாருக்காகவோ அறுவடையாகும் தொடுப்பு அரசியலொன்று மிக நேர்த்தியவுருவாகிறது.

இது, பெரும் மயக்கமானகாலம்.




அவசரப்படும் ஒவ்வொரு தருணமும் நாம் அப்பாவிகளைச் சாக வைக்கும் அரசியலோடு நெருங்குகிறோம்.இதைத்தாம் இப்போதைக்கு மாணவர் கலகத்தின்மீதான பார்வையாகவும் வைக்கப்பட முடியும்.அமெரிக்கத் தீர்மானமெல்லாம் நமக்கான விடிவில்லை!

ஈராக்கிலும் .அவ்கானித்தானிலும். சிரியாவிலும் இன்னும் உலகமெல்லாம் அமெரிக்கா கொன்றுபோடும் மக்கள்மீது காட்டாத கருணையை, நமக்குக் காட்டுவதென்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.இந்தியாவோ நம்மைக் கொன்று போட்டிருக்கும்போது அத்தேசத்தைப் போய் ஐ.நா.வில் ஈழத்துக்கான ஆதரவுக் கோரிக்கையை வைக்க வேண்டுமென்பது இந்தியாவின் ஆளும் வர்கத்தைப்பற்றியே அறியாத அரசியல் வேடிக்கையல்ல.அதுதாம் நுட்பமான சாணாக்கியம்.

அதன் உள்ளீடு வடிவத்தின் வழியாகப் பொசிவது, இந்திய ஆளும்வர்க்க நலனுக்கே!புரிந்துகொள்வது அவரவர் அநுபவத்துக்கான தெரிவைப் பொறுத்தது.ஆனால் ,அப்பாவிகளை அண்மித்துப் போராடுங்கோ-இரத்தம் சிந்துங்கோ என்று தூண்டுவதற்கு எவருக்குத்தாம் உரிமை உண்டு?அது மெரிக்காவாக இருக்கட்டும்.

ப.வி.ஶ்ரீரங்கன்
15.03.2013

Keine Kommentare: