Sonntag, August 14, 2011

தமிழர்கள்: "அழகற்ற அழுக்கானவர்களே!"

தமிழர்கள்: "அழகற்ற அழுக்கானவர்களே!"

ன்பார்ந்தவர்களே,வணக்கம்!

அமெரிக்கப் பயங்கரவாதம் குறித்து உலகமே அறிந்திருக்கிறது.பட்டியலிட்டு,இன்னதெனக் கூறவேண்டியதுமில்லை!என்றபோதும்,இந்த வீடியோவில் உள்ள உரையைக் கேட்டுப்பாருங்கள்.அமெரிக்கா தனது சொந்தக் குடிகளுக்கே மோசஞ் செய்யும் பணக்காரர்களுக்கான தேசம். பணக்காரர்களுக்காவே உலகத்தைச் சுடுகாடாக்கும் தேசம் அமெரிக்கா, என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள்.

இலூயீஸ் ஃப்றாக்கான்[Louis Farrakhan-Leader of the Chicago-based Nation of Islam (NOI).] மிகச் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல,மல்கோம் எக்ஸின் பரம்பரையிலிருந்து எழுந்தவர்.மால்கோம் எக்ஸ் பின்னாளின் புதிய இஸ்லாமிய நேசனைத் தழுவியிருந்தார் என்பதையும் நாம் அறிவோம்.அப்பாதையில் நடக்கும் இந்தப் பேச்சாளர்,ஒடுக்கப்படும் மக்களுக்காகத் தொடர்ந்து போராடுபவர்.எனது விழிகள்முன் மால்கோம் எக்ஸீன் மறு அவதாரமாகவே இந்த இலூயிஸ் ஃப்றாக்கான் தென்படுகிறார்.

எங்கெங்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கே தனது எதிர்ப்பைச் செய்பவர்களே உண்மையான மானுட நேசிப்பாளர்கள்.அதைக் குறித்துச் சந்தேகமென்ன?

அமெரிக்கா,சொந்த மக்களையே திட்டமிட்டு அழிக்கும்போது,பிற நாட்டு மக்கள்மீது கருணைகாட்டுமெனக் கருது முடியுமா?

அமெரிக்கத் தூவராலயப் பெண் தமிழ்நாட்டில் வைத்துத் தமிழரை"அழகற்ற அழுக்கானவர்கள்"என்று அகங்காரத்தோடு ஒப்பீடு செய்வதெல்லாம் இந்த ஒடுக்கு முறை மனோபாவத்தின் தொடர்ச்சிதாம்.அதையும்விட, பல் நூறாண்டுகளாகத் தமிழ்பேசும் மக்களை மொட்டையடித்து, அவர்களை அடிமைப்படுத்திய ஆரியக் குடியேற்றம்,காலனிய ஆதிக்கம்,பார்ப்பனிய ஒடுக்குமுறைகள்-ஆதிக்கமானது இன்று திராவிடக் கட்சிகளுடாகத் தமிழ்பேசும் மக்கள் மிகத் தாழ்ந்த சமூகச் சூழலில் கற்கால வாழ்க்கை நடாத்தும்போது, உலகத்தோடு ஒப்பிட முடியாத சமூகச் சீரின்மைக்குள்ளும்-சமத்துவமற்ற கல்வி ஏற்ற தாழ்வுக்குள்ளும் இருக்கிறார்கள்.



இந்த வீடியோ உரையாடல், மிக முக்கியமான சூழ்ச்சிகளைப் புட்டுவைக்கிறது.செவிமடுத்துத்தாம் பாருங்களேன்.

இறுதியாக: தமிழர்களாகிய நாம் "அழகற்ற அழுக்கானவர்களே"தாம்,எமது அரசியல்வாதிகள்-கட்சிகளால் நாம் இந்த நிலைக்கே வந்துவிட்டோம்!இதிலிருந்து நாம் மேலெழுவது நமது கைகளிற்றாம் உள்ளது.அதைத் தீர்மானிக்க வேண்டிய தருணங்களைத் தவறவிட்டால் இந்தப் பூமிப்பந்தில் நாம் வாழ்வதற்கே இலாயக்கு அற்றவர்கள்.

நட்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்.
14.08.2011

Keine Kommentare: