Samstag, März 06, 2010

நினைவிலித் தவிப்பில்

>Podium<


சுரமென மொழிதலும் வரைநிலை யின்றே.


பயன்தகு முட்டாள்கள் "nuetzlichen Idioten"(Lenin).

Motto:"lifelong learning" ...வாருங்கள்,brave new world...and "Totaler Krieg"-BLA BLA and Action ...The court takes a serious view of this(...) matter(0-1).புதிதாய்ப் பிறப்பெதன்ற நிலையெடுப்பு...இப்படியுமொரு ஊகம்.ஒவ்வாததன் அருவ இயக்கத்தின் எங்கோ தஞ்சம் கிடைக்கும்?இருக்கலாம்!வார்த்தைகளின் இயல்வில் வழிந்துருகும் உணர்வுதனைச் சொல்லித் திரிவதற்கானவொரு வெளியாகப் பதிவைத் தெரிவதில் பயம் ஒன்றில்லை!அது கடந்த பாதையின் ஏதோவொரு அதிர்வில் சுமையிழக்கும் நெஞ்சு.நினைத்துப் பார்க்கிறேன்... எதற்காக இது?


ஒரு வடிவத்தில் நின்று,நிலைமறுக்க.


முடிந்தால் ஓலத்தில் கிழிப்பதற்கானவொரு வெளியைத் தெரிவது நோக்கு.


"கடவுள் செத்துவிட்டான்" என்றான் கஞ்சன் நீட்சே.Nietzsche

"நீட்சே செத்து விட்டான்"என்றது காலம்.(Volksmund >Pop-Star



காலத்தில் வாழ்கிறேனா?

...ம்

சரியானவொரு"தெரிவு"என்னவாக இருக்கும்?



மனிதர்களாய்,மிருகமாய்-சடப் பொருளாய்,வெளியாய்?


அன்னியர்கள், உளப்பரப்பில் "அகதி"விண்ணப்பத்தைச் செய்தபடி.


"அதுவா-அல்லது இதுவா?"கீர்கேகோர்ட் (Kirrkegaard)அல்லல்பட்டதன் தொடர்ச்சி சமீபத்துச்"சொல்லி"கள்>Demokratischer Repraesentation< வரை . இறைவனின் நிர்மாணம்-கட்டுமானம் இன்றைய பல்தேசிய வர்த்தகத் தொடர்ச்சி" ஓட்டோ கால்சொய்யர்(Otto Kallscheuer)


"கடவுளே படைப்பாளி"அவனுக்காய்க் காத்திருக்கும் கைய்த் வார்ட்(Keith Ward)


"நான் இறைவனாகவே முனைவேன்,ஏனெனில்,அவனே என்னை விகாரமாகப்படைத்தான்.சங்கங்கள் மிருக வதையை எதிர்த்துத்தான் வழக்குப் பதிந்து கொள்ள முடியும்" கையினே(Heine)


"கடவுளே உலகத்தைப்படைத்திருந்தால்,நிச்சியம் நான் கடவுளாக இருக்கமாட்டேன்:பர்க்கும்போது அவனது கொடுமை இதயங்களைச் சிதைத்திருக்கிறது"சொப்பன்கவ்வர்(Schopenhauer);


"இதயங்களைச் சிதைப்பதற்கு வெளியில் எதுவுமில்லை-உள்ளே இருக்கும் உன்னைப் பார்!" வேதாந்தம்.



அன்னியத்தில் அன்னியமானவர்களே!,அருவத்தில் அலைந்து-உடைந்து அலைந்தோயும் ஒரு பொழுதில் நிலையிழந்த"நினைவு"கள் மீண்டுமொரு "உருவ"வாழ்வுக்கு வழி இயலுமாக்கின் புதிய "வரவு"நிலைமறுத்துத் தொடர் இழப்பில் நிலையெடுக்க...(Minima Moralia-Adorno).



(Alister McGrath )எலிஸ்ரர் மெக்கிறத்தின் திருச்சபையில் விளக்கமெடுத்த அந்தக்காலத்தின் கிழிவில் எச்சில் வீணீயாய் இழுபடும் நினைவோடு நிமிர்ந்தெழு-அப்போது...


நினைவிலித் தவிப்பில் உதிரும் உனது காலத்தில் கையளவு பொய்யும்,கடுகளவு "நீயும்"கலந்ததே உலகு.



மூக்கு வழி வளி வெளியும் உள்ளும் இயல்வது"நான்"ஒலிக்கும் எனக்குள் விரியும்"விந்து"முகிழ்க்கும் இன்னும்.பீலா விடுதலும்,ரீல் காட்டுவதும் எமது மரபின் தொடர்ச்சியாய் என்னையும்...கோமாளிக்குக் கோமாளியாக்கிக் கடைந்தேற்றும்"பழுதில்சொல் புகழால் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்"...



Keine Kommentare: