Sonntag, Mai 12, 2013

ஜேர்மனியப் பாட்டாளிய வர்க்கத்தின் புதல்வன்

ஜேர்மனியப் பாசிசத்திடமிருந்து பல மில்லியன் மக்களை விடுவித்ததும்,பாசிசத்தை ஒட்ட வேரறுத்ததும் சோவியத்தின் செம்படைகளே!அந்த நாள் மே 8 -9.05.1945.

ஜேர்மனியப் பாசிச ஆளும் வர்க்கத்தின் அடியாள் கிட்லரது நாசியப் படைகளது சரணடைவும்-சாவும் பல மில்லியன் மக்களது உயிர் காப்போடு முடித்து வைத்தவர் தோழர் ஸ்டாலின்.

அன்று,தோல்வி கண்ட சில பாசிஸ்ட்டுக்களைக் காத்து, தன்னோடு அழைத்துச் சென்ற அமெரிக்கா இன்று, மிகப் பெரும் பாசிச அரசாக நிலைபெற்று உலகை வேரறுக்கும்போது நம்மிடம் ஒரு சோவியத்து அரசும்-செம்படையும் இல்லை!






இதுவே,உலகத்து மக்களது மீள் தோல்வியாக இருக்கிறது.

எனினும்,மக்கள் மீளச் செம்படைகளாக மேலெழுவர்.

பாசிசத்துக்கெதிரான புரட்சிகர நடவடிக்கைக்கு ஆதாரவாக எழுதப்பட்ட இக் கவிதையைத் தமிழ்ப்படுத்துவதும் ,பாசிசத்தை வீழ்த்தும் அவசியத்துள் பல மில்லியன்கள் மக்கள் கட்டுண்டு போன அன்றைய சூழலைப்போலவே இன்று ,உலகம் ழுமுதும் கிடப்பதைப் புரிவதும் ,புரட்சியின் அவசியம் முன்னெப்போதையும் விடத் தற்போதே அவசியமானதென்றுணருவதும் எனக்குச் சாத்தியமாச்சு.

-ப.வி.ஶ்ரீரங்கன்
09.05.2013


அன்று,செம்படைக்கு நன்றி தெரிவித்து, அவர்களால் காக்கப்பட்டவொரு பாட்டாளியக் கவிஞன் இப்படிக் கவிதை வடித்தான்:


இதயமொப்பிய நன்றி,
சோவியற் செம்படைகளுக்கு...

கிட்லரது பாசிசத்தின் முன்
அடிமையாய்-கட்டாயத்துக்குள்
நிர்பந்திக்கப்பட்டு "வேலை செய்யும்வரை"
உயிர் வாழலாமெனக் கிடந்த நம்மை
அனைத்துக் கஷ்டங்களுக்கும் முகங்கொடுத்து
விடுவித்தவர்கள் எவர்கள்?
அவர்களேதாம் சோவியத்தின் செம்படை வீரர்கள்,
சோவியத்தின் மாவீரர்கள்.
சோவியற் செம்படைகளே,உங்களுக்கு நன்றி,
நீங்களே,சோவியத்தின் மகாப்பெரும்தியாகிகள்!





அனைத்திலும் சிறப்புடையதும்
அழகானதுமான ஜேர்மனியப் பாட்டாளிய வர்க்கத்தின் புதல்வன்
நன்றியென்ற ஒன்றைச் சொல்வதாகவிருந்தால்
யாருக்குச் சொல்ல முனைவான்?
அவன் நன்றியுரைப்பான்
சிந்தப்பட்ட குருதிக்குச் சொந்தமான புதல்வனுக்கே,
அவனே புரட்சியின் புதல்வன்!
செம் புதல்வர்களது குருதியை மறந்திடாதே,
அவர்கள் புரட்சியின் புதல்வர்கள்!



புரட்சி ஒளி வெள்ளத்தால்
உலகம் சூழ்ந்து கிடந்திருக்க-
நாம் அஃதை, ஏலவே உணர்ந்திருந்தோம்:
அனைத்து மகிழ்வுக்காவும் குருதி சிந்தப்பட்டது
இதுவே சோவியத்தின் இதயம்.
சோவியத்து வீரப் புதல்வன் உனக்காகவும்
தன் குருதியைச் சிந்தினான்,
இஃதுதாம் சோவியத்தின் புரட்சி இதயம்!

இதைக் கண்ட நட்ஷத்திரங்கள்
முடிவின்றிப் பிரகாசித்தபடி கீதமிசைகின்றன:
சோவியத் புதல்வன் தன் குருதியால்
உலகைத் தழைக்கை வைத்தான்,
அந்த வீரக் குருதியானது  சோவியத்துக்கே உரியது.
அவன் உலகைச் சமாதானத்துக்கும்,
அமைதிக்கும் உள்ளாக்கினான்
அந்தப் பலத்தை அவனுக்கு அருளியது
சோவியத்தின் பலமான மக்கள் அரசே!


-ஜொஹானெஸ் ஆர்.பெக்கர்

( இவர், ஜேர்மனியில் ஒரு அழுத்தமான குறியீட்டுக் கவிஞரும்,கிழக்கு ஜேர்மனிய முன்னாள் கலை-பண்பாட்டுத்துறை மந்திரியுமாவர்.கூடவே,கிழக்கு ஜேர்மனியின் தேசிய கீதத்தையும் இவரே எழுதினார்.)



    8. Mai - Tag der Befreiung vom Nazi-Faschismus


Dank Euch, Ihr Sowjetsoldaten

Wer hat vollbracht all die Taten
Die uns befreit von der Fron?
Es waren die Sowjetsoldaten,
Die Helden der Sowjetunion.
Dank Euch, Ihr Sowjetsoldaten,
Euch Helden der Sowjetunion!

Wem dankt all das Gute und Schöne
Der deutsche Arbeitersohn?
Er dankt es dem Blut der Söhne,
Der Söhne der Revolution!
Vergeßt nicht das Blut der Söhne,
Der Söhne der Revolution!






Die Welt vom Licht überflutet -
Wir wußten es immer schon:
Für aller Glück hat geblutet
Das Herz der Sowjetunion.
Es hat auch für dich geblutet,
Das Herz der Sowjetunion!

Sterne unendliches Glühen
Lieder singen davon:
Es brachte die Welt zum Blühen
Das Blut der Sowjetunion.
Es brachte der Welt den Frieden
Die Macht der Sowjetunion

Von Johannes R. Becher  [ Johannes Robert Becher (* 22. Mai 1891 in München; † 11. Oktober 1958 in Ost-Berlin) war ein deutscher expressionistischer Dichter und Politiker, Minister für Kultur sowie erster Präsident des Kulturbundes der DDR. Bekannt ist er auch als Verfasser des Textes der Nationalhymne der DDR. http://www.dhm.de/lemo/html/biografien/BecherJohannes/    ]

Keine Kommentare: