Sonntag, Mai 19, 2013

இந்தத் தமிழினம் வாழுமா?

"ஈழத் தமிழனுக்கு" விடுதலை ஒரு கேடா?-தூ!


மிழர்கள் படு மோசமானவர்கள்.உலகத்துள் எப்போதும் ,தமது பிழைப்புக்காக மற்றவர்களது கண்ணீரையும்,தேசவழிப்பையும் நியாயப்படுத்தித் தமது எசமானர்களிடம் தமக்குப் பங்கு கேட்பவர்கள்.

ஈராக்கில் ,இலிபியாவில் ,யுக்கோஸ்லோவியாவில் எத்தனை இலட்சம் மக்களை அமெரிக்க -மேற்குலக ஏகாதிபத்தியங்கள் கொன்றன?

அந்த மக்களது இன்றைய அவலத்தை ,நியாயப்படுத்தும் இந்தத் தமிழர்கள் தமக்கு நியாயம் வேண்டுமெனப் பாசிச ஏகாதிபத்தியவாதிகள் செய்த கொலைகளை நியாயமென அட்டை தூக்கி வீதிக்கு வருவது வேடிக்கையானது.





உலகத்துள்  அமெரிக்க -மேற்குலகப் பாசிச வாதிகளால் அடிமைப்படுத்தப்படும் ஈராக்க, இலிபிய, யுக்கோஸ்லோவிய மக்களையெல்லாம் இந்த ஏகாதிபத்தியத்துக் காட்டிக்கொடுக்கும் தமிழர்கள் ,விடுதலை பெறுவதென்பது பாவமான செயல்!

இவர்கள் ,இந்தப் புவிப்பரப்பில் வாழ்வதே கொடுமையானதென இந்த அட்டைகள் பேசுகின்றன!

இதனாற்றான் இத்தகைய மோசாமான ஏகாதிபத்தியத்துக்கு துணைபோகும் தமிழர்களது அரசியலுக்கும்-போராட்டத்துக்கும் எந்த முற்போக்குத் தேசமும் தலை சாய்ப்பதே இல்லை!

குறிப்பாகக் கியூபா மற்றும் வெனிசூலா , தேசங்கள் கூடத் தமிழர்களது பிழைப்பு வாதத்துக்கெதிராகவே நமது மக்களது அழிப்பைக் கண்டுகொள்ளவில்லை!

பல இலட்சக் கணக்கான மக்களை அரபுத்தேசத்தில் அழித்துவரும் ஏகாதிபத்தியங்கள் ,பொய்யைச் சொல்லி அவர்களது தலைவர்களைக் [Saddam Hussein,Muammar Muhammad Abdassalam Abu Minyar al-Gaddafi,Slobodan Milošević ]கொன்றுபோட்டத்தை நீதியென்று உதாரணப்படுத்தும் தமிழ் அரசியல் பிழைப்புவாதிகளையும் ,அவர்களது பின்னே தலையசைக்கும் புலம்பெயர் இளைய மந்தைக் கூட்டத்தையும்  எந்த அறமும் மன்னிக்கவே மாட்டாது.

இந்தவினம்  ஏகாதிபத்தியங்களது தயவில் பிழைப்புக்காகக் கொலை செய்யவும் ,மற்றைய இனங்களது அழிவைப் பார்த்து மகிழவுமே பழக்கப்பட்டது.

ஆரோக்கியமான-புரட்சிகரமான சமுதாயத்தை இலங்கையில் கட்டியெழுப்புவதையே மேன்மையான நோக்கமாகக் கொண்டு,மக்கள் திரள் எழிச்சியை-இனங்களுக்கிடையிலான தோழமையுடன் கட்டி வழி நடாத்திச் சிங்களச் சியோனிசத்தை வீழ்த்வேண்டிய வரலாற்றுத் தேவையை இந்த மக்களினங்கள் தவறவிடும் துர்ப்பாக்கிய நிலையையும்,பாரிய மனித அவலங்களையும் இத்தகைய ஏகாதிபத்தியங்களுக்குக் கூஜாத் தூக்கும் கயமைத்தனமான அரசியில் ஏற்படுத்தி விடுகிறது.

இதற்கு, எந்த ஆன்மீக - அரசியல் அறமும் ஒரு பொருட்டே இல்லை.

"யாரு செத்தாலும் பறுவாயில்லை அள்ளுவதற்குச் சில்லறைகள் இருந்தால் போதும்"என்று, ஏகாதிபத்தியங்களை அண்டி உலகத்தை வேட்டையாட முனையும் அந்த அழிவுவாதிகளை நியாப்படுத்திப் பிற தேசங்களது இறைமைக்கு ஆப்பு வைக்கும் இந்தத் தமிழினம் வாழுமா?






அழிவார்-அறுப்பார்"தமிழீழ விடுதலை" சொல்லிப் பிழைப்பு வாதிகளாகவும் ,அந்நிய அடியாட்படையாகவும் இருந்தபடி சொந்த மக்களை இலட்சக்கணக்காய் அழித்ததும் இந்தக் கண்ணோட்டத்தாற்றாம்.

தமிழ் மக்களுக்குத் "தமிழீழம்"எடுத்துத் தருகிறோம் எனப்போராடியவர்கள்,இறுதியில் தமிழ் மக்களையே வேட்டையாடிவிட்டு-இலட்சம் மக்களை கொன்று குவித்து,சிங்கள அரச ஆதிகத்துக்கு அடிமையாக்கிவிட்டு,தமிழ் பேசும் மக்களது பாரம்பாரிய பூமியைச் சிங்கள-அந்நிய அரசுகளுக்கு அடிமைப் படுத்திய கையோடு,இன்று அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும், மேற்குலகுக்கும் தமிழ் பேசும் மக்களைத் தொடர்ந்து காட்டிக்கொடுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளது கேவலமான பண மோகமும்-வியாபாரப் புத்தியும் மக்களது உயிரிலிருந்தும்-உழைப்பிலிருந்தும் பெற்ற செல்வங்களைத் தமக்குள் ஏப்பம் விட்டதும் போதாமல்,கருணாவென்றும்-கே.பி.என்றும்,விநாயகன்-நெடியவன் என்றும்மக்களது பணத்துக்காக அடிபட்டுச் சாகும் சந்தர்ப்பத்தில்,அதிகாரம் குறித்துக் கட்டுப்பெட்டித்தனமாக விமர்சிக்கும் உங்களுக்கு விடுதலை ஒரு கேடா?

பிறதேசங்களது அழிவை நியாப்படுத்தும் நீங்கள் ,அழிவதை மற்றவர்களும் நியாப்படுத்தும் தருணங்களை நீங்களே உருவாக்குகிறீர்கள்-நாசமாய்ப்போவார்!

ப.வி.ஶ்ரீரங்கன்
19.05.2013

Keine Kommentare: