Samstag, Mai 05, 2012

களத்திலிருந்து இவர்கள் இறுதிவரை விலகுவதேயில்லை!

"உழைப்பவர்கள் தம்மை விடுவித்துக்கொண்டு சுதந்திரமாக உலாவருவதற்கான விடுதலைப் போராட்டம் என்பது முதலாளித்துவத்தைப் பற்றி உழைப்பவர்கள் கொண்டுள்ள சிக்கலான உற்பத்தி - ஆன்மீக உறவுகளின் உயர்ந்த மட்டப் பிரகடனமாகும்.அதற்கு மற்றெல்லா உறவுகளையும்விட உழைப்பு என்ற ஒரு படைப்பே பொதுவானது."



இங்கு,எவர்கள் என்ற பிரச்சனையை விட்டுவிட்டு,எப்படி விலகுவார்கள்?எஜமானர்கள் விட்டு விடுவார்களா?என்று மட்டும் கேட்டு மேலே செல்லலாம்.

"" உலகத் தமிழாராய்சி மாநாடு, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் இளைஞர் பேரவைஇ தமிழ் மாணவர் பேரவை என்று நீளும் பதிவுகள்… அதேவேளை இந்த நூலில் குறிப்பிடப்படும் சிலருடன் பின்னாட்களில் நெருக்கமாகவும் சிலருடன் ஒரு குறிப்பிட்ட அளவிலான உறவுடனும் இருந்திருக்கிறேன். இன்றும் கூட சிலருடன் நெருக்கமான உறவுண்டு. இவர்களுடன் வாழ்ந்து, பழகியபோது இவர்கள் ஒவ்வொருவரின் துக்கத்தையும் அருகிருந்தே பார்த்திருக்கிறேன். தாங்களும் மரணத்துடன் விளையாடி, சனங்களையும் மரணத்துடன் விளையாட விட்டிருக்கிறோம் என்ற துக்க உணர்வு சிலரிடம் மேலோங்கியிருந்தது.

அதனால், இந்தப் பதிவை வாசிக்கும்போது இந்தக் காலகட்டத்து நிகழ்ச்சிகளின் போக்கை மிகத் தெளிவாகவே அடையாளம் காண முடிகிறது. கூடவே இந்த நிகழ்ச்சிகளின் பாற்பட்ட  வரதராஜப்பெருமாள், அன்னலிங்கம் ஐயா, வே.பாலகுமாரன், கி.பிரான்ஸிஸ், கே. பத்மநாதன்  போன்ற ஆளுமைகளையும், அவர்களின் குணவியல்புகளையும் அவர்களாற்றிய பங்களிப்புகளையும் அவற்றின் விளைவுகளையும் அடையாளம் காண முடிகிறது."""


ஆல்பிரேட் துரையப்பா முதல் கந்தசாமி,இராஜினி திரணகம,விஜிதரன்,கிருஷ்ணானந்தன்,செல்வி இப்படி இந்தத் "துரோகிகள்" பட்டியல் நீளமானது!இத்தகைய பட்டியலை வாசித்தவர்களே இப்போது தியாகிகள்,போராளிகள் பட்டியலையும் வாசிக்க முனைகிறார்கள். களத்திலிருந்து இறுதிவரை விலகாதவர்கள் குறித்துக் களத்திலிருந்து இந்தியாவுக்கு, இராணுவத்துக்கு தகடு கொடுத்த புலிக் கவிபாடிகளோ நீண்டவொரு தகட்டைச் சொருகிக்கொண்டிருக்கின்றனர்.தமிழ்ச் சமுதாயத்தின் ஆணிவேரையே ஒட்டக் கருவறுத்த இந்தக் கரையான்களைக் கண்ட கவிஞை சிவரமணி தன்படைப்பே இந்தச் சமூகத்தில் நிலைத்திருப்பதில் விருப்பமற்றுத் தன்னையும் தன் படைப்பையும் நெருப் பிலிட்டுக் கொண்ட சமூகக் கலகத்தை நாம் மறந்து விட்டால் நம்மை அந்த ஆண்டவன்தாம் காப்பாற்ற வேண்டும்.


புலித் தகடு கருணாகரன் கோஷ்ட்டி சாம்பல் பூத்த தமிழ்க் குறுந்தேசியத்தை ஊதிப் பார்க்கிறது.இதற்குச் சர்வதிகாரியாகிப் போன பிரபாகரனது போராட்டம் நினைத்தே பார்க்க முடியாத வேகத்தில் தலைகீழாகப் போய்விட்டதாம்.வரலாற்றில் புலிகளது வரவுக்கும்,பிரபாகரனது பாத்திரத்துக்குமான சரியான புரிதல் இங்ஙனம் குறுக்கப்பட முடியாது.நமது மக்களது சுயநிர்ணயப் போரைச் சிதைப்பதற்குப் பிரபாகரனுக்குப் பின்னால் நின்றவர்கள், இப்போது பிரபாகரனை அழித்துவிட்டுத் தம்மை எம் மக்களது மேய்ப்பர்களாக்குவதில் மையமுறும் அரசியலை"கவிஞர்"கருணாகரன-நிலாந்தன் எழுத்துக்களுக்குள் இனங்காண்பது ஒன்றுஞ் சிரமமான காரியமில்லை!


இவர்கள்தாம் கடந்தகாலத்தில்"ஆய்வாளர்கள்"-அறிவுமேதைகள். தேசியச் சக்திகள் குறித்துக் கரிகாலன் காதை நமக்குச் சொன்னவர்கள்.இன்று,புலிகளது அழிவு திடீரென நிகழ்ந்துவிட்டதாம். சிந்திப்பதற்குள் நடந்த "தலைகீழ்"வரலாறாகிறதாம்.இந்தக் கருத்துக்களை காலச் சுவட்டில் பதிந்த கருணாகரனோ இப்போது புலிகள் செய்த விட்டேந்தி விடுதலை"ப்போரை-கைக்கூலி அடியாட்படைச் சேவையை மொழுமொத்த தமிழ் மக்களது போராட்டமாகத் தோல்வியாகக் காண்பிப்பதன்வழி,மக்களை மீளக் காயடிக்கும் நயவஞ்சகத்தைக் கொண்டிருக்கின்றார்.


புஸ்பராணியின் நூலுக்கான புண்ணியவானின் முன்னுரையோ மக்களது கடைசி நம்பிக்கையையும் தோல்வி கண்ட புலிகளோடு பொருத்தி அவர்களைச் செய்பாடற்று இருக்கும்படியும்,"உங்கள் போர்" தோற்றுவிட்டதாகவும் காட்டும்போது, அந்நிய அரசுகளது கைக்கூலிகளான தமது ஏஜெண்டு வேலைகளை மூடி மறைக்கின்றனர்.






அவர் கூறுகிறார்: " சிதைந்து போயிருக்கும் ஈழப்போராட்டம் இன்று யுத்தக் குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. அந்தச் சாட்சியங்களின் அடிப்படையில் அது விசாரணையைக் கோருகிறது. அந்த விசாரணையின் மூலம் அது தனக்கான நீதியைப் பெற முயல்கிறது. பொறுப்புக் கூறலும் விசாரணை செய்தலும் என்ற விவகாரங்கள் இன்று கூடுதற் பேசுபொருளாகியுள்ளன. ஆனால் இந்த விசாரணையானது வெளியேஇ எதிர்த்தரப்பின் மீதேஇ இலங்கை அரசின் மீதே  மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான போராட்டக்காரர்களின் நிலைப்பாடு.  இதற்கான நீதியும் வெளியே இருந்து கிடைக்க வேண்டும் என்றே அவர்கள் நம்புகிறார்கள். இதில் நியாயமுண்டு. ஆனால்இ இது மட்டும் ஈழத்தமிழர்களின் போராட்டச் சிதைவைச் சீர்ப்படுத்தி விடாது. அவர்களுடைய சமூக - அரசியல் விடுதலையைச் சாத்தியப்படுத்தாது. இத்தகைய ஒற்றைப் படையான சிந்தனை எவ்வளவுக்கு நியாயமானதுஇ எவ்வளவுக்குச் சரியானதுஇ எவ்வளவுக்கு நடைமுறைக்குப் பொருத்தமானது ?"- டLTTE கருணாகரன்

புலிகளது தோற்றத்திலேயே அஃது, அழிவு யுத்தத்தைச் செய்வது குறித்துப் பேசியவர்களை எல்லாம்"துரோகி"எனச் சொல்லிக் கொன்ற கூட்டம், இலட்சம் மக்களை அழித்துவிட்டுத் தமிழ்பேசும் மக்களை உலக எஜமானர்களுக்கும் உள்ளுர் தமது பங்காளிக்களுக்கும் அடிமையாக்கிவிட்டுப் பிரபாகரனே இவற்றுக்குப் பொறுப்பென்று தம்மை தமிழ்மக்களது மீட்பர்களாகக் காட்டியது  முள்ளி வாய்க்காலுக்குப்பின்.


இப்போதோ, இந்தக் கூட்டம் புலிவழியான போராட்டத்தை முழுமொத்த தமிழ் மக்களது போராட்டாமாகக் காட்டி பல்முனை நாடகத்தை அரங்கேற்ற முனைகிறது.புலியினது கைக்கூலி அடியாட்படைச் சேவையை ஈழத்தமிழர்களது போராட்டச் சிதைவாகக் காட்டுவதனூடாகப் புலிகளது அந்நிய அடியாட்படை வரலாற்றை மறைத்துத் தமது அந்நிய எஜமானர்களைக் காக்கவிரும்புகிறது-தொடர்ந்து தமது எஜமானர்களைத் தமிழ்பேசும் மக்களது மீட்பர்களாக்குங் கைகாரியத்தில் தமது பணியை முடுக்கி விடுகிறார்கள்.இதன்வழியேதாம் இந்தியாவைப் பகைக்காத தமிழரது போராட்டம் அமையவேண்டுமெனவும் பாடம் புகட்டுகின்றனர்.இதைச் சமீபகாலமாக நிலாந்தன்,கருணாகரன் போன்றவர்ர்கள்மட்டுமல்ல யாதீந்தரா வென்ற புனைபெயருக்குள்ளும் தலை புதைத்துப் பரப்புரையாக்கிக் கருத்துமட்டத்தில் அதையொரு அரசியலாகவும் முன் தள்ளுகின்றனர்.


இந்தச் செயற்பாடு மிகக்கொடுமையானதொரு இன்னொரு அரசியல் நாடகத்தை-துரோகத்தைத் தமிழ்பேசும் மக்களுக்குள் திணிக்கிறது.

" போராட்டம் சிதைந்திருக்கிறது அல்லது சிதைக்கப்பட்டிருக்கிறது என்றால்இ அதற்குக் காரணம் போராட்டத்தினுள்ளே தவறுகளும் குற்றங்களும் குறைபாடுகளும் நிரம்பியுள்ளன என்றே அர்த்தமாகும். வெளியிலிருந்து ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகள்இ சிதைப்புகளுக்கு நிகராக உள்ளரங்கில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களும் விடப்பட்ட தவறுகளும் போராட்டத்தைச் சிதைத்துள்ளன. வெளிநோக்கி விரிந்திருக்க வேண்டிய போராட்டம் உட்சுருங்கியுள்ளமைக்கு இவையே காரணம். அவ்வாறெனில் அதனுள்ளே இருக்கும் குறைபாடுகளையும் தவறுகளையும் குற்றங்களையும் விசாரணை செய்ய வேண்டும். அந்த விசாரணைக்கு சாட்சியங்கள் அவசியமானவைஇ முக்கியமானவை. இந்த விசாரணை வெளியே இருந்து செய்யப்படுவதையும் விடஇ அமைப்புகளின் உள்ளேஇ கட்சிகளின் உள்ளேஇ போராட்டத்தில் ஈடுபட்ட - ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரின் உள்ளேயும் நடக்க வேண்டும்.  விருப்பு வெறுப்புகள்இ உடனடி இலாப நட்டங்களுக்கு அப்பால்இ அப்படிச் சுய விசாரணைகளைச் செய்தாற்தான் தவறுகளைக் களையலாம். பிரிவுகளுக்கும் சிதறல்களுக்கும் காரணமான பகைக் கூறுகளைத் தவிர்க்கலாம். நம்பிக்கையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தலாம். பின்னடைவுகளைக் கடக்கலாம்."  -LTTE  கருணாகரன்



புலிகளது தோல்விக்குத் தமது கைக்கூலிச் செயற்பாடுகளும்,அந்நிய அரசுகளுக்குக் காட்டிக் கொடுக்கப்பட்ட தமிழ் மக்களது போராட்ட நியாயத்தைக் குறித்தும் மௌனிக்க வைக்கும் இந்த ஈனத்தனமானது, புலிகளது கீழ்மட்டப் போராளிகளைத் தாம் எங்ஙனம் அந்நியப் படையணியாக்கியதென்பதை வரலாற்றிலிருந்து மறைப்பதன் உள் நாடகமாகும்.இதன்வழி மீளவும், தமிழ்பேசும் மக்களது பெயரைச்சொல்லி அவர்களைக் காயடிக்கும் கபடம் நிறைந்த இந்திய அரசினதும்,உளவுப்படையினதும் இன்னொரு சுற்றைக் காவிவரும் இந்தக் கருணாகரன்கோஷ்டி மிக ஆபத்தான பேர்வழிகள் என்பதை நான் மீளச் சுட்டுகிறேன்.


இத்தகையத் தகட்டுப் புலிகள் தமது இராணுவத்தையும்,அதன் தலைமையையும் உலக எஜமானர்களோடு சேர்ந்து அழித்தபின் நடாத்தும் அரசியல்சதியே நமது மக்களை மேலும் மொட்டையடிப்பதாகும்.


இவர்கள் இலங்கையில் புரட்சிகரமான உணர்வு அரும்புவதற்கே தடையாக இருக்கின்றார்கள்.அல்லது, அங்ஙனம் விடப்பட்டு,அவர்களது எஜமானர்களால் கண்காணிக்கப்பட்டு ஊதியம்-உபயம் பெற முனைவதில் இன்னொரு சதிவலை பின்னுகிறார்கள்.இவர்களது அன்றைய எதிர்ப்புரட்சிப்பாத்திரத்தில்"ஈழமென்றும், தமிழ்க் கலாச்சாரமென்றும்,தாம் உலகில் "அதியுன்னத"மக்கள் பிரிவென்றும் ஆலவட்டம் பிடிக்கும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமெனத் தம்மை சொல்லி வந்த புலிகள் இயக்கத் தலைவர்கள்,பதவிக்காகவும்,சுகத்துக்காவும் நாயாய்ப் பேயாய் அலைந்தும், சரணடைந்தும்-வார்தைகளினால்  தமது வேசத்தைக் கலைத்தபோது"அவற்றை முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களது பெயரால் பொதுமைப்படுத்தி,உள்ளே ஏற்பட்ட தவறுகளாகக் காட்ட முனைவதில் எந்த அந்நிய அரசைக் காக்க முனைகின்றனர்?


முழு மக்களதும் தவறாகப் புலி இயக்க வாதத்தையும் அதன் கைக்கூலிப் போராட்டப்பாத்திரத்தையும் தணித்துக் கருத்துக்கட்டியபடி தம்மைக் குறித்து மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களாகப் புலிப் பினாமிகள் ஊளையிடுவது மக்களை மேலும் இனவாதிகளாக்கி அவர்களைத் தொடர்ந்து அழிக்கவே.இதை அனுமதிப்பதென்பது தற்கொலைக்கு நிகரானது.


"குருதியின் நெடில் மூக்கைத் துளைக்கும்
 அகோரமான பொழுதுகளின் நெடிய காற்றோ
மூளையை விறைப்பாக்கிறது,
 இந்தக் கொடிய காற்றுள் அள்ளுண்டு போகாதிருக்க
உனக்காகவும்
 எனக்காகவும்-எமக்காவும்
நாம்,எதையேனும் செய்தே ஆகவேண்டும்!


இருள் சூழ்ந்த நாளிகையிலே
 பலரைத்தின்றுவிட்டு
இந்தியாவிலும்,கிளிநொச்சியிலிருந்தும்
 இரை மீட்கிறாய்" இன்று.



"குற்றங்களாலும் தவறுகளாலும் குறைபாடுகளாலும் நிரப்பப்பட் டுப் பெரும் சிதைவைச் சந்தித்திருக்கும் ஈழப்போராட்டத்தில்இ  பத்துக்கும் உட்பட்ட சிறிய எண்ணிக்கையைக் கொண்டவர்கள் மட்டுமே தங்களின் போராட்ட சாட்சியங்களை முன்வைத்திருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட நிலைப்பாட்டில் இருந்தே இந்தச் சாட்சியங்களை முன்வைத்திருக்கின்றனர். அல்லது தாம் இயங்கிய அமைப்புகளில் இருந்து விலகிய நிலையில்இ செயலாற்றும் விசைப்பரப்பிலிருந்து விடுபட்ட நிலையில் இருந்தே தங்களின் இந்தச் சாட்சியங்களை அளித்துள்ளனர். தனிப்பட்ட முறையில் சுயவிசாரணைக்கும் சாட்சியமளித்தலுக்கும் இவர்கள் இன்று தம்மைத் தாமே உட்படுத்தியுள்ளனர்."


முதலில் புலிகள் செய்த போராட்டத்தைக் கருணாகரன்"ஈழப்போராட்டம்"(சுயநிர்ணயத்துக்கான)என்று பொதுமைப்படுத்துவதில் மிகக்கவனமாக இருக்கிறார்.இதன்வழி சுயநிர்ணயத்துக்கான தமிழ்பேசும் மக்களது போராட்டம் என்பது காலவதியாகியது என்ற இந்திய மேலாதிகக்கக் கருத்தியலை மெல்ல மக்கள்மத்தியில் மொழிகிறார்.அதை எவரூடாக மொழிகிறாரென்றால் அங்கென்றுமிங்கொன்றுமாக வரலாறெனக் கொட்டப்படும் வெறும் அநுபவவயப்பட்ட கருத்துக்களைச் சொல்லும் நபர்களது தயவிலிருந்து, இவற்றைச் சொல்கிறார்.இதுவரை புலியினது மர்மத்தையே கலைக்முடியாதிருக்குமொரு சூழலுக்காக முழுமொத்த உறுப்பினர்களையும் கொன்று குவித்த அந்நியக் கைக்கூலிகள், அந்தத் துணிவிலிருந்தே வரலாற்றைக் குறுக்கும் நெடுக்குமாக வெட்டியொட்ட முனைகின்றனர்.


இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில்தம்மால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்களை தமது நோக்கத்தை ஓரளவு தகவமைத்துபோது வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.

இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் சுயநிர்ணயத்துக்கான-சிங்கள இனவாதவொடுக்கு முறைக்கெதிரான போராட்ட ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம். அன்று,இந்திய அரசால் ஆயுத இயக்கங்களாகத் தோற்று விக்கப்பட்ட அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் எஞ்சிய கைக்கூலி அமைப்பினால்நடாத்தப்பட்ட எதிர் புரட்சிப் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது,அந்நிய அரசினது நலனுக்குட்பட்டும், இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும், இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த  முனைந்த சதிமிக்க அரசியலால் இலங்கையின் அனைத்து மக்களும் அழிவுற்றார்கள்.இதற்கு நல்லவுதாரணமானது: அநுராதபுரப்படுகொலையும்,யாழ் முஸ்லீம் மக்கள் மீதான இனவாதத் தாக்குதலும்-கட்டாய வெளியேற்றமு மாகும்.


முஸ்லீம் மக்கள மட்டுமல்ல முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களும் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள்.இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு கைக்கூலிக்குழுக்கள் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் செய்யும் போலி வரலாறே இந்தப் புலிகளது அழிவை முழுமொத்த மக்களது தவறாக வர்ணிக்கும்ஆலோசனைகள்-அரசியல்கள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம்.


நமது தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும்அந்நியச் சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளை வென்றெடுக்கும் ஒன்றுபட்டவொரு புரட்சிகரமான கட்சியின் வரவை அவர்கள் எப்போதும் அநுமதியளிக்கத் தயாராகவில்லை!


இந்த நிலையில் நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி, நமது போரிடும் ஆற்றலைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள்.இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.இவர்களே இன்று கிழக்கில் ஞானமாகவும்-கருணாவாகவும்,பிள்ளையானாகவும் உருபெற்றபோது வடக்கில் கருணாகரன் நிலாந்தன் போன்றோர்கள் கல்வி மட்டத்தில் இறங்கி விளையாடுவது மிகத் தந்திரமானது. முள்ளி வாய்க்காலுக்குப் பின்பான வரலாற்றுக் கட்டத்திலெழும் அனைத்து ஆக்கங்களிலும்,அறிவுசார் எழுத்துக்குள்ளும் இவர்கள் திடிரெனப் பிரவேசிக்கின்றனர்.அந்த எழுத்துக்களது திசையையே மாற்றியமைக்கும் வியூகத்தோடு திறம்படவியங்கும் இவர்களை மெல்ல உள்வாங்க வேண்டிய நிர்பந்தத்துள் மக்கள் இருத்தி வைக்கப்படுவது கெடுதியானது.


"அப்படியாயின் தொடர்ந்தும் தோல்விகளும் அழிவும் பின்னடைவும் சிதைவுந்தானா? இந்த நிலையில் எவ்வாறு போராட்டத்தை மேலும் முன்னெடுக்க முடியும்? விடுதலையைப் பெற முடியும்? சுதந்திரத்தை அனுபவிக்க இயலும்? சுயவிசாரணை என்பதும்இ சாட்சியமளித்தல் என்பதும் பொறுப்புக் கூறுதல் என்பதும் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் செயற்பாடுகளாகும். இதைச் செய்யாமல் ஏற்பட்டிருக்கும் இந்தப் பெருந்தேக்கத்திலிருந்து போராட்டத்தை எப்படி முன்னகர்த்துவது? எப்படி விடுதலையைப் பெறுவது?

இந்தக் கேள்விகள் இன்று பகிரங்கத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படவேயில்லை. கவனிக்கப்படவும் இல்லை. இதுதான் மிகமிகச் சோகமானது. இந்தப் பின்னணியிற்தான் இங்கே இன்னொரு சாட்சியாகஇ ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகிய புஷ்பராணி  தன்னுடைய சாட்சியத்தை அளிக்க முன்வந்துள்ளார். அவருடைய சாட்சியமாக ‘அகாலம் : ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்’ என்ற வரலாற்றுப் பதிவு இங்கே முன்வைக்கப்படுகின்றது."


புலிகள் நமது வரலாற்றில் "தடார் புடாலெனத் தோன்றிய ஒரு சக்தியல்ல.அது, நமது மக்களின் தேசிய அபிலாசையின் விளைபொருளென்று கொள்வது" பலரிடம் உண்டு.எனினும், அஃது சிங்கள அடக்குமுறைக்கெதிரான தமிழ் தரகு முதலாளியத் தினதும், இந்திய ஆளும் வர்க்கத்தினது பிராந்தியக் கனவினதும் விளை பொருளாகத் தன்னை வெளிப்படுத்தி இறுதியில், மேற்குலகிடம் சரணடைந்தது.இந்தப் புலிகள் தமிழர்களது உரிமைப்போராட்டத்தில் திடீரென வந்தவர்களே!இது இலங்கையில் அந்நியர்களது அடியாட்படையாகவே தோற்றம்பெற்று இறுதியில் எதிர்ப்புரட்சிகரச் சக்தியாகவே மக்களை யுத்தத்தில் கொன்று புரட்சிகரப் போராட்டத்தை அழித்தது.இந்த வரலாறு எழுதப்பட்டேயாகவேண்டும்!
இத்தகையொவொரு அமைப்பை முள்ளிவாய்க்கால்வரை தேசியச் சக்தியாவும்,மக்கள் படையாகவும் வர்ணித்த கருணாகரனோ இன்று புஷபராணியினுடைய"போராட்ட"அநுபவதைக் குறித்து முகவுரைவெழுதும்போது யாருடைய சேவையில் இதுவரை இவர்களது போராட்ட அநுபவங் மையங்கொண்டிருந்தனவெனக் கேட்டுத் தொலைத்தால்"நாய்கள் பூனைகளோடு கூடுவதில்லை"என்ற மொழிவழி இவர்களது கரச் சேவையின் கூட்டுப் பொதுத் தளத்தில் புரியத் தக்கதே!

யாருடைய தோல்வியையும்,போராட்டத்தையும் குறித்து சுய விசாரணைக்கு அழைக்கின்றார்.எவருடைய இரத்தத்தைச் சுத்திகரிக்கும் மருத்துவத்தை கருணாகரன் மச்சான் பேசுகிறார்?மக்களே பங்குபெறாத புலிவழிப் போராட்டத்தில் எந்த மக்களது தோல்வியைப் பேசச் சொல்கிறார்?


அதைத்தானே நீங்கள் இதுவரை செய்து முடித்தீர்கள்?


மக்களைத் தோற்கடித்த பின்புதானே புலிகளது இருப்புச் சாத்தியமாச்சு?பின்பு,நீங்கள் தோற்கடித்த மக்களது கதையை நீங்கள் பேசுவதுதானே நியாயம்.அதை நீங்களே பேசுவதைத் தவிர வேறுயாரால் செம்மையாகச் செய்யமுடியும்?.


எப்படிப் புலிகளான அந்நியக் கைக்கூலி அமைப்பு மக்களைத் தோற்கடித்ததென்பதை அதன் உச்ச பரப்புரைக் கவிஞர் நீங்கள்தாம் பேசியாகவேண்டும்.எப்படி அந்நியக் கூட்டை இயகத்துக்குள் உள்வாங்கி, அந்நியர்களது நலனுக்காகச் சிறார்களைக் களத்துக்கு அனுப்பிக் கொன்று குவித்தீர்களென்று கூறுவதிலிருந்து தொடருங்கோ.அதுவே,நியாயமான முறையில் நமது மக்களால் விசாரிக்கப்பட முடியும்.


"எச்சங்களில்
 "எந்த எலும்பு" உனது உறவினனதென ஒருநாள் நீ அலைவாய்!
இவையெல்லாம்
 எதன் பெயரால்,
எதன் பெயரால்,
எதன் பெயராலெனப் பிதற்றுவாய்.
அன்று,
உன் பிதற்றலுக்குச்
செவியெறிய நானோ அல்ல உன் வம்சமோ
இல்லாதிருக்கக் காண்பாய்!"

இதை எழுதிய எனது மை உலர்வதற்குள்ளேயே,உனது பிதற்றல் எனது செவியோரம் வந்து தொலைகிறது.காலம் எவ்வளவு  வேகமாக நகர்கிறது!



"உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது”  என்ற புஷ்பராணியின்  வார்த்தைகளின் உள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஆற்றாமை சாதாரணமானதல்ல. அது ஆழ் அனுபவத்திற்குரிய – ஆழ் புரிதலுக்குரிய ஒன்று. இன்னுமே தணியாத இலட்சியத்தோடிருக்கும் ஓர் ஈழ விடுதலைப் போராளியின் அனுபவமொழி இப்படித்தான் கூர் வாளாக இதயத்தில் பாயும். எத்தனையோ முயற்சிகளுக்குப் பிறகும்இ எவ்வளவோ தியாகச் செயல்களுக்குப் பின்னரும் இன்னுமே முடியாத இந்த அவலப்பரப்பு இதயத்தில் தீயைத்தான் மூட்டும். இலட்சியப் பிடிப்போடு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு முன்னோடியின்  முதுமைக்கால அனுபவங்களும் நிலையும் ‘உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது’ என்று உணர்வதைத் தவிர வேறு எப்படி இருக்க முடியும்!"


இலங்கையில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியில்,சந்தித்த முரண்பாட்டில் தமிழ்பேசும் தரகு முதலாளியத்தின் தனியான நில வரையறையைக் கொண்ட தனித் தமிழ் நில ஆதிக்கத்துக்கும் சந்தை வாய்புக்குமான கனவும்,இந்திய-மேற்குலக அந்நிய நலன்களது புவியியற்அரசியல் ஆதிக்கத்தின் நலனை இலங்கையில் விஸ்த்தரிக்கும் நோக்கத்தின் கூட்டு வடிவாகத்தாம்தமிழர் மகா சபையாக இருந்தாலுஞ்சரி  தமிழரசுக் கட்சியானாலுஞ்சரி அல்லது அதன் தொங்கு சதைகளான தமிழ் இளைஞர் பேரவையாகவும் இருந்தாலுஞ் சரி தோன்றிக்கொண்டன.இவை சுயமாக பரந்துபட்ட தமிழ் மக்களது பிரச்சனையிலிருந்து புரட்சிகரமாகத் தோற்றங்கண்ட கட்சிகளோ,அமைப்போ கிடையாது.மொழிவாரியாகவும்,பிராந்திய வாரியாகவும் மட்டுமல்ல நமது தமிழ்ச் சமுதாயம் சாதியரீதியாகவும் பிளவுண்டு கிடந்தபோது அவற்றைப் புரட்சிகரமாக அணிதிரட்ட வக்கற்ற இந்த நவலிபரல் பொருளாதாரத்தின் கள்ளக் குழந்தைகளான கட்சிகள் எவருக்காகவோ உணர்ச்சி அரசியலூடாகப் பரந்துபட்ட மக்களைக் கவரும் மொழிவாரி வெறியைக் கிளறி அரசியல் செய்தனர்.அந்த அரசியல் பேரத்தில் தோற்றுக்கொண்டிருந்தபோது"தமிழீழம் " கோசமாகிறது. அதையே இந்தியப் பிராந்திய நலனானது மிக நுணுக்கமாகக் கையகப்படுத்தி இலங்கையில் தனது கைவரிசையை இன்றுவரை தொடரும்போது"உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தான் செய்கிறது"என்பது எவருக்கான இலட்சியம்?எதற்கான கண்ணீர் என்பதைக் களத்தில் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களது குழந்தைகளது உடல்களில் உரைத்துப் பார்த்துப் பரிசோதித்துக்கொள்ளுங்கள்!


"இந்த நிலைஇ போராட்டம் சிதையத் தொடங்கிய காலப்பகுதியிலிருந்து தொடர்ந்திருக்கிறது. ஈழப்போராட்டம் எப்பொழுது சிதையத் தொடங்கியதோ அப்போதிருந்து இந்தத் துக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று துக்கப் பெருங்காடாகியுள்ளது. ஆனால்இ இந்த அடிப்படையான உண்மையைப் பெரும்பாலான ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை. அல்லது உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பான்மைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளின் வீழ்ச்சியும் முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சியுமே தோல்வியாகவும் துக்கமாகவும் தெரிகின்றது."


இன்று,இவர்களது வர்க்க ஊசாலாட்டம் மேற்குலகச் சார்ப்பு-இந்தியச்சார்பு என எல்லா வகை ஊசாலாட்டைத்தையும் தமது வர்க்க நலனிலிருந்து அறுவடையாக்கிப் பிரபாகரனைச் சர்வதிகாரியாக்கி "ஈழப்போரை"இலட்சம் மக்களைக் கொன்று-கொலையாக்கி முடித்துள்ளது.இவர்களைத் தண்டிப்பார் எவர்?புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம்,அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள்,போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க முடியாமல் மேலும் தவறுகளையே நியாப்படுத்தும் கூட்டமாகப் புலிகளது பினாமிகள் இன்று "ஈழப் போராட்டம்"என்று தமிழைத் தவிர்த்துக் தகடு கொடுக்கின்றனர்.கருத்தியல் பரப்பைப் பாருங்கள்.தமிழீழம் என்றனர் பின்பு ஈழமென்று ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பான நபருக்கேற்பக் கோடுகளை வரைகின்றனர் புலிகள்.

இந்தப் புலிப்பினாமிகளின் காரியவாத அரசியலானது "ஈழப்போராட்டத்தின் தோல்வி" சிதைவு குறித்துப் பொதுப்படையாகத் தமிழ் மக்களை அழைத்துக் கருத்துக்களை உருவகப்படுத்துகிறது.ஈழப்போராட்டத்தின் சிதைவுகுறித்த துக்கம் குறித்த உண்மையைத் தமிழர்கள் உணரவில்லையாம்.தமிழ்பேசும் மக்கள் அதை ஏன் உணர்ந்தாகவேண்டும்?அவர்கள் தம்மிடமிருந்து தட்டிப் பறித்த தமது குழந்தைகளது அழிவின் துக்கத்திலே மூழ்கிக் கிடக்கும்போது அவர்களைக் குறித்துக் கிஞ்சித்தும் கவலையுறாத ஈழப்போராட்டம் குறித்து எவர் துக்கிக்க வேண்டும்?அதையும் தமது எஜமாருக்கேற்ப கருணாகரனே தீர்மானித்தும் விடுகிறார்.தமிழைப்பேசுவதால் தமிழர்கள் யாவரும் ஒன்றல்ல- ஒரு தரப்பாக முடியாது-ஒரே தளத்திலுமில்லை! தமிழ் மக்கள் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளார்கள்-சாதியின் பெயரால் ஒருவரொருவர் எந்தத்தொடர்வுமற்று இன்றும் பிளவுண்டு "அடக்கப்பட்டவரும் ஆள்பவர்களுமாக"க் கிடக்கிறார்கள்.இங்கே, ஒவ்வொருவரும் தத்தமது வர்க்கம் சார்ந்து சிந்தித்தல் சாத்தியமாகிவிடுகிறது. நாம் புலிகளையும்,அவர்களுக்குப் பின்னால் நின்ற தமிழ் மேட்டுக்குடி அதிகார வர்க்கத்தையும் வெறும் விருப்பு வெறுப்புக்குட்பட்டு ஆராய்ய முடியாது. அது, விஞ்ஞானபூர்வமற்று வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பான திராவிட அரசியல் மாதிரித்தாம் முடியும்.


"புஷ்பராணி தனது சாட்சியத்தை இவ்வாறு ஆரம்பிக்கின்றார்: “மிகுந்த நம்பிக்கையுடனும் எண்ணிலடங்கா அர்ப்பணிப்புகளுடனும் தொடக்கப்பட்ட ஒரு நியாயமான போராட்டத்தை நாங்கள் தோற்றுவிட்டு நிற்கின்றோம். எங்களது நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் இன்று ஆயுதம் தரித்த இராணுவத்தினர் உலாவிக்கொண்டிருக்கிறார்கள். நாம் நேற்றிருந்த வீட்டில் இன்று புதிதாக ஒரு புத்தர் சிலையை யுத்தத்தில் வென்றவர்கள் நாட்டி வைத்திருக்கிறார்கள். போராளிகளின் கல்லறைகள் உடைத்து நொருக்கப்பட்டு அடையாளங்களற்ற கற்குவியல்களாக்கப்படும் காட்டுமிராண்டித்தனங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமி இப்போதும சாம்பல் மேடாயிருக்கிறது.”


தமிழ் பேசும் மக்களது நலன் அவர்தம் "சுயநிர்ணய உரிமை,வரலாறுதொட்டுவாழ்ந்த பூமி அவர்கள் வாழும் மண்ணாகவும்,அவர்களுக்கென்ற அரசியல் பொருளாதாரப்-பண்பாட்டு வாழ்வுண்டுடெனும் உறுதிப்படுத்தலுடன் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தலும்" அவர்தம் நலனாகிவிட முடியாது. வர்க்கபேதமற்ற மனித வாழ்வுக்கான எந்த முன்னெடுப்புமற்ற எந்தக் கோசமும் வெறும் வெற்றுவேட்டாகும்.

இது சிங்கள முதலாளிகள் அவர்களை அடக்கு வதற்குப் பதிலாகத் தமிழ் முதலாளிகள்அடக்குவதில் போய் முடியும். எனவேதாம் அவர்கள் நலனை முன்னேடுக்காத ஈழப்போர் என்ற அழிவுயுத்தத்தை ஒருசில தமிழ்த் தரகு முதலாளியத்தின் அபிலாசையென்றும்,அந்நிய அடியாட்படை ஊழியம் என்றும் அன்றே வரையறுத்துப் புலிகள் அழிவார்கள் என்று குறித்துரைத்தோம்! ஈழவிடுதலை இயக்கங்களின்  எழிச்சிகள் அந்நியச் சக்திகளால் பாழடிக்கப் பட்டு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமைக்கு வேட்டு வைப்பதில் இந்தியாவும்-அமெரிக்காவும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் செயற்பட்டுள்ளன. இயக்கங்களின் சுயவளர்ச்சியை மட்டுபடவைத்து  தத்தம் உதவியால் அவற்றை வீங்க வைத்து பின் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தது உண்மை.ஆனால், தமிழ்பேசும் மக்களை சிங்கள சியோனிச பொளத்தமதவாதமும்,அவர்தம் தரகு முதலாளியமும் மிகக் கொடுரமான முறையிற்றடக்கியபோது, அந்த ஒடுக்குமுறைக் கொதிரான தமிழ்பேசும் மக்களின் தார்மீகப்போரைப் புலிகளை வைத்துக்காட்டிக்கொடுத்த இந்தியாவும்,மேற்குலகமும் இன்று தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதைகளாக்கியதற்குப் பொறுப்பானவர்கள்.இதைப் புஷ்பராணி அநுபவமாகப் பேசியிருந்தால் நிச்சியம் இந்தக் கருணாகரனிடம் முன்னுரை வேண்டிக் குஞ்சங் கட்டியிருக்கமாட்டார்.

தமிழ் பேசும் மக்களை இரத்த வெள்ளத்தில் நீந்தவைத்த அந்நியக் கைக்கூலிப் புலிப் பிரமுகர்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்கும் இந்திய-மேற்குலக அநுதாபிகளும்இன்றும் "ஈழத்தை" சொல்லித் தாம் தப்புவதற்கான அரசியலைச் செய்யப் பற்பல புனைவுகளைச் செய்கின்றார்கள்.இதைக் குறித்து மௌனித்திருக்க முடியுமா?

தமிழ்ச் சமுதாயத்தின் முழுத் தோல்வியாகப் பகரப்படும் இந்த அந்நியக் கைக்கூலிகளது தமிழ்ச் சமுதாயத்தின் உரிமை மீதான காட்டிக்கொடுப்பை,ஈழப்போராட்டத்தின் பெயரால் தோல்வியென வகுப்பெடுக்கும் இத்தகைய கயவருக்கு ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டும்:

தமிழ்ச் சமூகத்தை இத்தகைய முறையில் மொட்டையடிக்கும் வலு புலிகளுக்கும் அந்நியச் சக்திகுளுக்கும் வாய்க்கப் பெற்றதற்கு,தமிழ்ச்சமுதாயத்துள் நிலவிக்கொண்டிருக்கும் பழைய ஏற்றதாழ்வுகளும்,விரோதங்களும் காரணமல்ல.மாறாக,இஃது தமிழ்ச் சமுதாயத்துள் உருவாகிய ஒரு உத்தேச ஆளும் வர்க்கத்தின் துரோகத்தனமான காரியத்தின் விளைவாகும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

05.05.2012

Sonntag, April 29, 2012

மேற்குலகினுள் புலம்பெயர்ந்து வாழும் முற்போக்கு சக்திகளுக்கு...

மேற்குலகினுள் புலம்பெயர்ந்து வாழும் முற்போக்கு சக்திகளுக்கு...

வரும் மே 1-2012  ஊர்வலத்துள்பாசிச இலங்கையை அரசை அம்பலப்படுத்துவதோடு ,மதம்,இனஞ் சார்ந்து ஒடுக்கும் இலங்கை ஆளும் வர்க்கத்தையும் அதன் கூட்டணிகளையும் மேற்குலக மக்கள் முன் அம்பலப்படுத்துவது அவசியமானது.

இன்று, இலங்கைத் தீவெங்கும் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தின் அத்துமீறிய ஒடுக்குமுறைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்குள் இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் அநாதவராக விடப்பட்டுள்ளனர்.

மாறிவரும் ஆசியப் பொருளாதாரச் சூழலுள்ஆசியப் பொருளாதாரக் கூட்டணியோடு சிங்கள ஆளும்வர்க்கம் கண்ட சமரசங்கள்,விட்டக்கொடுப்பு,வெற்றிகள் என்பது இலங்கைச் சிறுபான்மை இனங்களை வெறி கொண்டு, ஒடுக்கும் வழி முறைகளைச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு " இலங்கையை தென்னாசியாவில் இன்னொரு இஸ்ரேலாக" மாற்றும் சகல உரிமையையும் வழங்குகிறது.

இந்த வழங்கலை இந்தியா-சீனா,இருஷ்சியா போன்ற நாடுகள் சங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்ற  "Shanghai Cooperation Organisation or SCO" கூட்டணித் தலைமை வழங்கி விடுகிறது.

அண்மைக் கிழக்கு வலயத்துள் மேற்குலக-அமெரிக்க " NATO "ஒத்துழைப்போடு இஸ்ரேல் எங்ஙனஞ் செயற்படுகிறதோ அங்ஙனமே இலங்கையும் செயற்படுகிறது.இதுவொரு ஆபத்தான சூழலுக்குள் இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தள்ளி விட்டிருக்கிறது.


இன்று தம்புள்ளப் பள்ளி வாசல் பிரச்சனைக்கு முன்னமே முஸ்லீம் மக்கள் தொடர்ந்து சிங்கள மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.எனவே,இன்றைய முஸ்லீம் மக்களது இலங்கைப் பாசிச அரசுக்கெதிரான இந்த எதிர்ப்புப் போராட்டத்துக்கு துணை நிற்பது இலங்கையின் பிரதான சிறுபான்மை இனமான தமிழ்பேசும் மக்களுக்கு அவசியமானதும்-தார்மீகக் கடமையாகவும் இருக்கிறது.

வரலாற்றுத் தவறுகளைத் தள்ளி வைத்து, நாம் ஒன்றுபடும் நேரம் நெருங்குகிறது.இந்தச் சூழலுள் புலம் பெயர் முற்போக்கு சக்திகள் கருத்தரங்குகளை நடாத்தும்படி கோருகிறோம்.அதுசார்ந்து அடையாளப் போராட்டங்களைச் செய்வதும்,இதன் வாயிலாகச் சிங்கள ஆளும் வர்க்கத்தை வரும் மே 1 இல் உலகு தழுவி அம்பலப்படுத்துமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

இந்த அறைகூவல் ஒடுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மை இனத்துள் அதிகமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள் நாம் என்ற அடிப்படையிலேயே நாம் முன்வைக்கும் உரிமையோடும், அவசியத்தோடும் விடப்படுகிறது.

தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
29.04.2012

Montag, April 09, 2012

குருபரனுக்கும்,இந்த ரா.சு.நல்ல பெருமாளுக்கும் வித்தியாசம் என்ன?

//"கருணா-புலிகள் என்ற முரண்பாட்டின் கோரத்தன்மையைப் பார்க்கிற எவருக்கும் இது எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி எழவே செய்யும். ஆனால் இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விடையம் என்னவெனில் தமிழர்களின் அரசியல் மற்றும் விடுதலை இயக்கங்கள் யாவும் தமது அகமுரண்பாடுகளின் போதும் தமக்கிடையேயான முரண்பாடுகளின் போதும் புலிகள் மற்றும் கருணா குழுவினர் வெளிப்படுத்தியதைப் போன்ற வன்முறையான அணுகுமுறைகளையே வெளிப்படுத்தி இருந்தனர் என்பதையும் நினைவுகூரவேண்டும் இதற்கான ஆதாரங்களைத் தமிழர்விடுதலைக்கூட்டணி காலத்தில் இருந்தே காணமுடியும். எனவே இந்த வன்முறையுணர்வின் வேர்களை நாங்கள் எங்கள் கலாசாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டிலும் தேடவேண்டும் என்பது தெளிவாகிறது"//


ரொம்ப மெலினப்படுத்தப்பட்ட கருத்து.

குருபரனது மௌனம் கலைகிறது தொடர் இயக்க அராஜகவாதம்-உட்கட்சி ஜனநாயகமின்மைசார்ந்த படுகொலை அழிவு, அரசியலை இவ்வளவு மெலினப்படுத்திப்பார்பது மிகக் குறுகிய பார்வையாகும்.

உண்மையாக? பரம்பரைக் காரணிகள்,பண்பாட்டுணர்வு,ஐதீகம்தாம் படுகொலை-அராஜகத்தைத் தொடர்ந்து தீர்மானிப்பது?

புத்தர் அனைத்துக்கும் ஆசைதாம் காரணமென்கிறார்.ஆசை,பொருள் சார்ந்த உணர்வாகிறது.புறம் இல்லையெனில் அகவுணர்வு படிமமாக முடியாதென்பதில் புத்தர் பெருமையான சிந்தனையாளர்.ஆகையால் அவர் சொன்னார்"மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்"என.

சமீபத்து மார்க்ஸ் உரைத்தார்: "வாழ்நிலையே சமூகவுணர்வைத் தீர்மானிப்பது"என.

"வன்முறையுணர்வின் வேர்களை "எமது "கலாச் சாரத்திலும், ஐதீகங்களிலும்,பண்பாட்டிலும் தேடவேண்டும் என்பது தெளிவாகிறது" இத்தகைய கருத்தைக்கொண்டிருக்கும் ஒருவர் போராட்ட வரலாறு சொல்லும் அவலம் நமக்கு."பண்பாடு-கலாச்சாரம்" இரண்டும் முதலில் வெவ்வேறானதாகப் புரிந்தும் கொள்கிறார்;விளக்கவேண்டும் குருபரன்!

இதைத் தொடர்ந்து(அவரது கலைந்த மௌனத்தை) வாசித்தபோது, குருபரன் ஒரு பத்திரிகையாளனாகப் பலதரப்பட்ட தளத்தில் அநுபவப்பட்டிருப்பது புரிகிறது.அந்தத் தளம் அனைத்துமே அராஜகத்தால் நிரம்பிய தளங்கள்.இவை, அனைத்துமே பல அந்நியச் சக்திகளது கைகளுக்குக் கட்டுப்பட்ட தளங்களாக இருந்திருக்கிறது.

சுகமாக அவற்றைக் கேள்விகளோடு விலத்திச் சென்றுவிடும் குருபரன் பண்பாட்டிலும்,ஐதீகத்திலும் பழியைப்போட்டு விட்டுக்  கலைக்கப்படும் மௌனம் வெறுஞ் செய்திதாம்.




அஃது, அராஜகத்தின் பக்ககங்களையும்,அதன் நிகழ்வுகளையும் தொகுப்பதுதாம்.ஆனால்,நாம் அனைவருமே அறிந்த இலங்கை அரசியற் போக்குகளில் இந்திய-அமெரிக்க உளவு நிறுவனங்களது கைங்காரியம் எங்ஙனம் ஒரு இனத்தின் தலையை இயக்கங்களால் மொட்டையடித்தனவென்பதை "வரரலாற்றில் தடுக்கிக்கொண்டு" குருபரன் இங்ஙனம் பண்பாட்டில்-ஐதீகங்களில் பழி போடுதல் இந்தியப் பார்ப்பனியப் புனைவுக்கு ஒப்பானது சார்!

சுமார் 25 ஆண்டுகளுக்குமுன்,அதாவது 1987 ஆம் ஆண்டு ஒரு நாவல் வாசித்தேன். ரா.சு.நல்லபெருமாளது நாவல் அது.

பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் இந்த ஆசிரியரது "கல்லுக்குள் ஈரம்" நாவலை வாசித்துப் பெரும் மதிப்பு வைத்திருந்த நாவலாசிரியர் அவர்.அந்த ஆர்வத்தில் அவரது அனைத்து எழுத்துக்களையும் வாசிக்க ஆரம்பித்தபோது அவருக்கு நாவல் எழுதத்தெரியாதென்பதை உணர்ந்துகொள்ளும் நிலைக்குள் நான் வந்தேன்!; கூடவே,அவர் பெரு நிறுவன பார்ப்பனியத்தின் கோடியில் சாணாக்கியத்தைப் புரட்டும் நாவலாசிரியர் என்பதைப் புரிந்தும் வைத்தேன்.

ரா.சு.நல்லபெருமாளது கயமைமிகு "உணர்வுகள் உறங்குவதில்லை" என்னும் நாவலை 1987 ஆம் வருடம் வாசித்துக்கொண்டிருந்த காலத்தில்அந்த நாவலூடாக, பிரமாணனது நச்சு நாக்கை உணரத்தலைப்பட்டேன்.

உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களைச் சிதைத்து அவர்களது பரம்பரைக்குணமாகக் கொலையையும்-திருட்டையும்,அராஜகத்தையும் கற்பித்த நல்லபெருமாள்,எவ்வளவுதாம் இந்த மக்கள் கல்வி கற்று உயர்ந்தாலும் அவர்களது பரம்பரைக் குணம் அகலாது.அது, ஒரு பொழுதில் மேலெழுந்து கொலை-கொள்ளையில் ஈடுபடுமென முத்திராமன் என்ற பார்த்திரத்துக்கூடாக வெளிப்படுத்துவார்.அத்தோடு நிற்காது,உயர்ந்த பிரமணர்களால் போராடிப் பெற்ற சுதந்திரத்துக்குப் பின், இந்தியாவானது இழி நிலையடைந்ததற்குக் காரணம் இத்தகைய பரம்பரைக் குணமுடைய-ஜீன்ஸ்சுகள் அரசியலுக்கு வந்ததே காரணமெனவும் கூறுகிறார்.

அமைப்பைக் காப்பதற்காகச் சில அரசியல் வாதிகள்மீது பழிபோடும் சினிமாக்கள் நமக்குள் அதிகம்."நல்லவர்கள்-வல்லவர்கள்"ஆட்சிக்கு வந்தால் அகிம்சையும்,அரவணைப்புமே நிலவுமெனவும்,அமைப்பில் குழப்பமில்லையெனவும் வகுப்பெடுக்கும் இந்தியக் கருத்துநிலைகள் உலகு தழுவியதிலிருந்து பின்னப்பட்டதெனினும் பார்ப்பனியத்துக்கான சில சிறப்புக் கூறுகளும் உண்டு.அந்த"நல்லவர்கள்-வல்லவர்கள்"யாரென்று அவர்களே சொல்லும்போது பிரமாணனது பரம குருவான யக்ஞவல்க்கீயனும்-பிரவாஹானும் நம்முன் பிர்மவாதஞ் சொல்வது புரிகிறது.

குருபரனுக்கும்,இந்த ரா.சு.நல்ல பெருமாளுக்கும் வித்தியாசம் என்ன?;கண்டுபிடித்துச் சொல்லுங்கோ!

குறைந்த பட்சமாவது ஒரு இனத்தின் போராட்ட வரலாற்றின் தகவல்களைச் சொல்வதற்கு முன்னாவது, சில நூல்களைக் கற்றாய்ந்து பார்த்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

"சத்தியத்தின் உரை கல் மூளையல்ல,பொருள்கள்-இயற்கைதாம் அந்த உரைகல்".

இனியாவது,இந்த மௌனம் கலைகிற தொடரைத் தொடர்வதற்குமுன் இராகுல சாங்கிருத்தியானின்"வால்காவிலிருந்து கங்கைவரை" வரலாற்று நூலை-கதைகளைக் கருத்தூன்றிக் கற்றுத் தொடர்வது செழுமையாக இருக்கும் குருபரன்.சமூகத்தின் இயக்கத்தைப் புரிவதற்கு இந் நூல் பெரிதும் உதவுவது.

நிலவுகின்ற சமூக வாழ்நிலைதாம் சமுகவுணவைத் தீர்மானிக்கிறது.புறநிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டிவிடுகிறதென்பதெல்லாம் தற்போது நவகால சமூக-பொருளாதரவியல்-அரசியல் உளப்பகுப்பாய்வில் கெட்டிக்காரரானவர்களுக்குப் புரிந்து போவதில்லைதாம்.எனினும்,நமக்குள் பல ரா.சு.நல்லபெருமாளது சாதியக் கருத்தாளர்கள் நிறையவே உண்டு.

சமூகத்தை வரலாற்றுப் பொருள்முதல் வாதக் கண்ணோடு பார்ப்பது காலவாதியாகிப் போய்விட்டதாகப் புசத்தும் "தும்பி"களது இறைக்கை அடிப்பில்மகிழ்வுற்ற சிறார்கள், அந்தத் தும்பிகளுக்குப் பின்னே அணிவகுத்தோடுகிறார்கள்.

முத்துராமன் ஒரு நல்ல-தலைசிறந்த புதுக்கவிதை புனைவாளனாகவும், புரட்சிகரமாகக் கருத்தாடுபவனாகவும்,புரட்சிகரவாதியுமாகக் காட்டப்பட்டு இறுதியில், பரம்பரைக்குணத்தால் கொலைக்காரனாகவும், கள்வனாகவும், அராஜகவாதியாகவும் அவன் தொடர்ந்து-தொடர்ந்து இயங்குவது அவனது பரம்பரை இரத்தத்திலுள்ள குணமே-ஜீன்ஸ்சுகளே காரணமென்று பார்ப்பனிய வேதம் உரைத்த இந்திய அரசியலை குருபரனது கருத்தோடு உரைத்துக்கொண்டால் எங்கோவொரு லிங்கு கண்ணுக்குப் புலப்படுகிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்
09.04.2012

Donnerstag, April 05, 2012

முள்ளிவாய்காலிற் தோற்றது பிரபாகரனது பேதமை மட்டுமல்ல.

" நாம் புலியோடு சமரசஞ் செய்து புரட்சி நடாத்தக் கனவுகண்டால் அது எமது தற்கொலைதாம்"


ன்று நிலத்திலுள்ள மக்கள் மிகக்கெடுதியான அரசியல் சூழ்ச்சிக்குள் தனித்து விடப்பட்டுள்ளனர்.முள்ளிவாய்க்கால்வரை "தமிழீழ விடுதலை"போராட்டமெனும் சதிப் போராட்டத்தை நடாத்திய அந்நியச்சக்திகளது கைக்கூலிகள்,பிரபாகரனையும் அவரது கோரிக்கைகளையும் ஏமாற்றிக்கொண்டிருந்தபோது அதை ஊகித்துணரமுடியாத பிரபாகரனது புத்திக்குக் கிடைத்த தோல்வியல்ல இந்தச்சதி. இது முழுமொத்த இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கும் கிடைத்ததோல்வியாகிறது.இலங்கைச் சிறுபான்மை இனங்கள் யாவும் பன்முகத்தன்மையில் ஒடுக்கப்படும்போது இலங்கையின் ஆளும்வர்க்கம் மற்றும் அந்நியக் கூட்டணியோடு இலங்கையின் முழுமொத்த உழைப்பாளர்களும் இனங்கடந்து இன்னொரு தளத்தில் மிக நேர்த்தியாகவும் ஒடுக்கப்படுகின்றனர்.இதைக் கடந்து சிந்திக்கும் தமிழ் தேசிய அரசியலானது,பழிவாங்கப்பட்ட கட்சி-இயக்க நலன்களை மீளப்பெறவே தமிழீழ விடுதலை குறித்த அதே பழைய அரசியல்போக்குகளிலிருந்து தன்னைத் தகவமைக்கிறது.இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைபுக்குள்ளும்,புலிகளது அரசியலிலிருந்து புரிந்துகொண்டு புலிவிசுவாசத்தின் வெளிப்பாட்டுத் தன்னார்வத் தமிழ்ச் சேர்க்கையின் இன்றைய அரசியலுக்குள்ளும் உணர்ந்துகொள்ளமுடியும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது வழமையான புலியினது அந்நியக் கைக்கூலிகளால் நாடத்தப்படும் ஒரு மடம்.அதைத் தாண்டி இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து அரசியல்ரீதியாகவும்,ஆன்மீக ரீதியாகவும் சிதைக்கும் விபரீதமான அந்நியக்கைக்கூலிகள் மக்களது அனைத்து வாழ்வு முன்னெடுப்புகளில் தம்மைப் பிணைத்து அந்த மக்களை அரசியல் ரீதியாகக் காய் அடிக்கின்றனர்.1990 களுக்குபின்"புத்திஜீவிகள்-பத்திரிகையாளர்கள்-சமூக ஆய்வாளர்கள்" என்போர் புலிகள் ஆயுதரீதியாக மக்களைக் காயடித்தபோது அதற்கெதிராகப் போராடவும்,புலிகளைக் கேள்வி கேட்பதையும் தவிர்த்து,புலிகளது அந்நியக் கைக்கூலி அரசியல் நடாத்தையை அநுமதித்தனர்.

இத்தகைய அநுமதித்தலூடாகத் தமிழ்பேசும் மக்களது வாழ்சூழலைத் தொடர்ந்து தமிழீழத்தின் பெயரால் அராஜகமயப்படுத்திக்கொண்டனர்.இதன் கட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றதென எவராவது கருதுவோமானால் நாம் மீளவும் தவறிழைப்பதில் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுச் செல்வோம்.

முள்ளிவாய்க்கால் அழிவுக்குள் அழிக்கப்பட்டது பிரபாகரனது பேதமை மட்டுமல்ல.அங்கே அழிக்கப்பட்டது அந்நியச் சக்திகளுக்கெதிரான விவேகமும்தாம்.அந்த விவேகத்தை மெல்ல மெல்ல அழித்த இந்திய-இலங்கைக் கைக்கூலிகள் புலிகளது மேல் நிலை ஆலோசகர்களாகவும்-தளபதிகளகவும் இருந்து வந்தனர்.அவர்களை,இன்று கே.பி. என்றும் தளபதி கருணாவென்றும் இனங்காணும் நாம் இவர்களது இன்னுமொரு பகுதியையும் இனங்காணுவதில் பாராமுகமாக இருக்கிறோம்.இதை இனங்கண்டு நிலத்திலுள்ள மக்களுக்குச் சரியான திசைவழியில் போராடும் உண்மைகளைப் பறையாதிருப்போனால்,மீளவும், அதே அந்நியக் கைக்கூலி அமைப்புகளே மக்களைக் கொலைக்குத் தயாரிப்பதில்"தமிழ்பேசும் மக்களது உரிமை"சொல்லி அந்நிய நலன்களுக்கானவொரு[Indian platform] அடியாட்படை-ஆட்டு மந்தைக்கூட்டத்தைத் தொடர்ந்து தயாரித்துக்கொள்வர்.இதைத் தடுக்காத எந்த உரையாடலும் இனிமேல் அர்த்தமற்றது.இது,அரசியல்-இலக்கியம் என்ற அனைத்து மட்டத்திலும் எடுத்துச்செல்லப்பட்டு மக்களுக்குள் பகிரப்பட வேண்டும்.

புலியை ஒரு உதாரணத்துக்கு எடுத்தோமானால்(ஏலவே, அந்நியக் கைக்கூலி அரசியல்-இயக்கச் சேவையில் பல ஆயுதக்குழுக்கள் மறைமுகமாகவும்,நேரடியாகவும் ஈடுபட்டு அம்பலப்பட்டபோது இந்த அமைப்புகளை ஒரு தளத்திலும்,இன்னொரு தளத்தில் புலிகளை மிக நுட்பமாகத் தமது கைக்கூலியாக்கியது இந்திய-இலங்கை-மேற்குலக அரசுகள்.எனவே,ஏனைய அமைப்புகளைக்கடந்து, புலிகளது அமைப்பை உதாரணத்துக்கு எடுப்போம்.)அந்த அமைப்பு ஒரு கட்டத்தில்(2000க்கு பின்)சரியான திசைவழியில் செல்வதாகவும்,அவர்களே மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாகவும் மேற்குலகில் புலம் பெயர்ந்த தமிழ்ச் சிந்தனையாளர்களில் பலர் எமக்கு வகுப்பெடுத்தனர்.இவர்களால் ஏமாற்றப்பட்ட விவேகமான போராளிகள் அழிவது உறுதியென ஆக்கப்பட்ட பெரு வன்னி யுத்தமானது இறுதிவரைப் பிரபாகரனுக்குப் புலப்படாத அரசியலாகவே இருந்ததென்பதற்கு அவரது சரணடைவு-கொலையே நமக்கான சாட்சி!

இந்தத் திசையில் அந்நியச் சக்திகள் தற்போது கட்டிவைத்திருக்கும் அரசியற்றளம் (Political Platform ) என்பதை மிக நுணுக்கமாகக் கவனிக்க மறுக்கும் எந்தத் தமிழீழ விசுவாசியும் மீளத் தோற்பது மக்களது உயிரோடு விளையாடும் விளையாட்டே!புலிகள் அமைப்பை மிக நேர்த்தியகத் தமக்கான மறைமுகமான கைக்கூலியாக்கிய அந்நியச் சக்திகள் அவர்களைத் தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களது உண்மையான போராட்டத்தலைமையாகவும் ஆக்கிக் காட்டினர்.அதுள் பிரபாகரனது இருப்பே அவர்களுக்குக் கைகொடுத்தது.பிரபாகரனது மாயையே இந்த அந்நிய வியூகத்தை மறைத்து அந்த அமைப்பை முள்ளிவாய்க்கால்வரை விடுதலை அமைப்பாகப் பலரை நம்ப வைத்தது.ஆனால்,பிரபாகரனுக்கு அடிபணிவதாக நடித்தபடி அந்த அமைப்பின் தளபதிகள்-அரசியல் மேல் நிலை ஆலோசகர்கள் பிரபாகரனது மலட்டுத் தனத்தைக்கொண்டு புலிகளை அந்நிய அடியாட்படையாக்கிக்கொண்டது.

இங்கே,இனம் காட்டப்படுவது மிக நேர்த்தியான அரசியல்சதி:

மேற்குலகத்தின் கைக் கூலியாக இருந்தவர்களுள் முக்கியமானவர்கள்:

  • 1: அன்ரன் பாலசிங்கம்,அடோல் பாலசிங்கம்,
  • 2: தமிழ்ச் செல்வன்-இவர்கள் இறுதிவரை அம்பலப்படாதிருப்பினும்பாலசிங்கம் ஏலவே அம்பலப்பட்டுப் பிரபாகரனால் பின்தள்ளப்பட்டு இந்தியக் கைக் கூலிகள்அந்த இடத்துக்கு வந்தனர்.அதையும் பிரபாகரனால் இனங்காண்பது அரிதாகவே இருந்தது.

இந்தியாவின் எடுபிடிகளாக புலிகளுக்குள் இருந்த மாத்தையா குழுவுக்குப்பின்பான கூட்டு:

  • 1: கருணா கூட்டு,
  • 2: கே.பி.கூட்டு. முள்ளி வாய்க்காலுக்கு முன்னும்,பின்னருமாக இவர்கள் வெளிப்படையாகிவர்கள்,

வெளிப்படாததும்,இன்னும் மக்களுக்காகச் சிந்திக்கும்,உழைக்கும் கூட்டாக இருக்கும் இந்தியக் கைக்கூலிகள்:

  • 1: திருநாவுக்கரசு-கருணாகரன்,நிலாந்தன் கூட்டு,
  • 2:மேற்குலகில் புலிப்பிரமுகர்களாக இருக்கும் நபர்கள்வரிசையில் முரளிதரன்

புலம் பெயர்ந்து மேற்குலகில்வாழும் தமிழ்பேசும் இலங்கையருள் அதிகமாகத் குறுந்தேசிய வாதத்துக்குள்மூழ்கியவர்களும்-புலிகளது பரப்புரையால் காயடிக்கப்பட்டவர்களும் இன்றைய மேற்குலகப் புலிப்பினாமிகளின் அதிகார நகர்வில் மேற்குலக லொபிகளாகவே இருக்கின்றனர்.ஐரோப்பியக் கூட்டமைப்பின் அதீத விசுவாசத்துக்குரியவர் புலிப் பினாமிகளில் முக்கியமான உலகத் தமிழர் பேரவை நிறுவனர் எஸ்.ஜெ.இமானுவெல் அடிகளார்.

இங்கே,நாம் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி குறித்து கவனத்தைக் கொண்டோமானால்,அந்த மக்கள் முதலில் இனம்கண்டு அரசியல் நீக்கஞ்செய்யப்படவேண்டியவர்கள் இந்தியக் கைக்கூலிகளாக[A political platform is not only that typically widely distributed, with journalists and commentators being encouraged to quote from it when they analyze candidates and upcoming elections.] இருக்கும் "வெளிபடையாக" இனம் காட்டாதவர்களையே. இவர்கள்ரொம்ப ஆபத்தானவர்கள். முள்ளிவாய்க்காலில் புலி தோத்துக்கொண்டிருந்தபோது அடிக்கடி புலிகளது பரப்புரை ஊடகங்களால் கருத்தொன்று பரவியது.அந்தக்கருத்தானது புலிகளது அரசியல்வியூக வகுப்பாளர் திருநாவுக்கரசால் கருத்தியற்றளத்துக்கு எடுத்து வரப்பட்டது."தமிழீழத்தின் திறவுகோல் தமிழ்நாட்டில்தாம் உண்டு"என்பது அந்தத் திரு மந்திரம்.இவர்களேதாம் இப்போது கிட்டத்தட்ட மறைமுகமான இந்திய ஏஜன்டுகளாகத் தமிழ் பகுதியெங்கும் தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றனர்.

இவர்கள் இந்தியாவின் நலன்களை இலக்கைக்குள் தொடர்ந்து பதியம்போடும் மக்களோடு மக்களான கலைஞர்களாகிறார்கள்.இந்த மனிதர்களே சமீபத்தில் இலக்கிய வெளியீடுகள்-மதிப்பீடுகளெனச் செய்து தமது அரசியலை மிக நுணுக்கமாக முன்னெடுக்கின்றனர்.இந்த நடாத்தைகளை மிக நுணுக்கமாகக் கவனிப்போமானால்இந்தியா தனது எடுபிடிகளைப் பலமட்டத்தில்-பல வடிவங்களில் வைத்து இயக்கிவருகிறது.இவர்கள் அனைவருமே புலிகளது மேல்மட்டத் தலைவர்களாகவும்-கலைஞர்களாகவும் இருந்தவர்கள்.இவர்களுக்கு வெளியிலும் இந்தியக் கைக்கூலிகள் இலக்கிய வாதிகளாகவும்,தலித்தியவாதிகளாகவும் இருக்கின்றனர்.அவ்வண்ணமே,இந்தியா முன்னைய ஆயுத-அராஜகக் குழுக்களையும் இதுள் இன்னொரு தளத்தில் வைத்து இலங்கையின் ஆளுங்கட்சி-எதிர்க்கட்சிக்குள் கட்டி வைத்திருக்கிறது.இதன் பின்னணியுள் நடந்தேறும் அரசியல் நமது மக்களுக்கு ஆபத்தானது.

"தமிழீழ"ப் போராட்டத்துள்புலிகளது பாத்திரம் நேர்மையாப் பேசப்பட வேண்டும்:

புலத்து-நிலத்துத் தமிழ்பேசும்மக்களுக்கு அரசியல் உரைத்தலென்பது மிகக்கடினம்.அவர்கள் அதிகமாகப் புலிகளது பொய்யான கருத்துக்களால் கடந்த கால் நூற்றாண்டாகக் காயடிக்கப்பட்டவர்கள்.இவர்களே,தொடர்ந்து கருணாகரன்,நிலாந்தன்,திருநாவுக்கரசு போன்ற இந்தியத் தாசர்களைப் புலிகளது விசுவாசத்துக்குரிய தோழர்களெனப் புரிந்து அணைத்துக்கொள்கின்றனர்.இந்தத் துணிவுதாம் அவர்களும் சாம்பற்றத்துவமுரைக்கும் நிலைக்கும் மேலாக இப்போது இலங்கை தழுவிய முறையில் கலா நிகவுழ்வுகளுக்குத் தலைமைதாங்கித் தமிழ் மக்களது ஊடக அறிவுக்கு ஆப்பு வைக்கும் காரியத்தில் முழுமையாக இறங்கி இந்தியச் சார்புக் கருத்துகளைத் தினமும் மக்களுக்குப் பழக்கப்படுத்துகின்றனர்.இங்கிருந்து நாம் தொழிற்படவேண்டிய கட்டாயமான பணி என்ன?

புலிகளது வரலாற்றுப் பாத்திரத்தைப் புனையும் புலம்பெயர் ஈழமக்களது இருண்ட அரசியல் குறித்தும் இந்தச் சந்தர்ப்பதில் உரைத்தே ஆகவேண்டும்.சமீபத்தில் புலிகளது அமைப்பில் பட்ட அநுபவங்களைப் புலிகளது ஆரம்பகால தன்னார்வக் கோஸ்டியின் உறுப்பினர் கணேசன் ஐயர் இனியொருவில் எழுதியிருந்தார்.அந்தத் தொடர்களை நூலாகியவர்கள், வெளியீட்டு விழாவின் மூலம் பலதரப்பட்ட வர்க்கத் தளத்தவர்களையும் உள்ளிழுத்து விமர்சனத்தைப் பகிர்ந்துகொண்டனர்.விமர்சனம் என்பது வெறுமனவே நிலவுகின்ற பெரு மக்கட்டொகையின் எண்ண அலைக்கொப்ப கப்பலோட்டுவதாகவே அனைவரும் செய்து முடித்தனர்.உண்மையில் புலிகளது வரலாற்றை நாம் தலைமுறை தலைமுறையாகச் சொல்லிக்கொடுக்கப்படவேண்டியவர்கள்.புலிகளென்ற அமைப்பின் வரலாற்று உள்ளடக்கத்தையும் அதன் போராட்டப் பாத்திரத்தையும் நமது வருங்காலச் சிறார்கள் கற்றறியவேண்டும்.இதன் அவசியத்தை உரைப்பதற்கு 1980 களுக்குப் பின் இலங்கையிற் பிறந்த தமிழ் இளையோரை மிக நிதானமாக உற்றறிந்தால் பொய்யினதும்,காயடிப்பினதும் பலம் பொருந்திய வினை, நமக்கு புரிந்து பேகும்.

80 களுக்குப் பின்பிறந்தவர்கள் புலியினது அனைத்துப் பாத்திரத்தையும் மறுத்துப் புலிகளது தலைவனது ஒளிவட்டத்துக்குள் மாட்டுப்பட்டுக்கிடந்தவர்கள்.அவர்களே,புலியினது அழிவுவரைப் புலிகள் தலைவனையும்,அந்தத் தலைவனது போராட்டச் செல்நெறியையும் மக்கள் போராட்டமாகவும்,"கரிகாலன் காலத்துள் தமிழீழம் சாத்தியமென" அனைத்து ஜனநாயக பூர்வமான கோரிக்கைகளை-கருத்துக்களையெல்லாம்ஜீரணிக்கும் வலுவின்றி "எட்டப்பர்-துரோகி"என்றபடி தமிழ்பேசும் மக்களது தலையில் யுத்தத்தின் சுமையை ஏற்றினார்கள்.இவர்களுக்குப் புலிகளது ஒட்டுணித்தலைமையானது அந்நியச் சக்திகளால் இயக்கப்படுவதென நாம் உரைத்தபோது ,அவற்றைத் தட்டிகழித்தார்கள்.நம்மீது அவதூறு பொழிந்தார்கள்.நாம் மீளவும்,"புலிகள் தோற்பார்கள்"என்றபோது எம்மைப் பார்த்து,"எழுதி வைத்துக்கொள்ளுங்கள் புலிகள்சிங்கள இராணுவத்தை வென்று தமிழீழத்தை விடுவிப்பார்கள்"என்று எழுதிக் குவித்தனர்? இந்த வினை எங்ஙனம் உருவாகியது?எப்படி இந்த இளைஞர்கள் காயடிக்கப்பட்டார்கள்? வேள்விக்கு வளர்த்த கடாவாகவே இந்தக் கூட்டம் இதுவரை இருக்கிறது.இவர்களேதாம் இப்போது நமது மக்களது யுத்த வாழ்வையும்-வலியையும் புனைவு இலக்கியமாக்கிறார்கள்.இத்தகையவர்களது அரசியல்-வரலாற்றுத் தெளிவே இந்த இலட்சணத்தில் இருக்கும்போது, இவர்களால் ஆற்றப்படும் அனைத்து நடவடிக்கைகளும் ஏதோவொரு விசுவாசத்துக்குக் கட்டுப்பட்டு, உண்மைகளை இனங்காண்பதில் அநுபவக் கோளாறுடன் உரை அமைக்கின்றனர்.எனவே,புலியினது உண்மையான பாத்திரம் மிக நேர்த்தியாக எழுதப்படவேண்டும்.பொதுவெளியில் உரையாடப்படவேண்டும்.

சிங்கள ஆளும் வர்கத்தினது இனவாத ஒடுக்குமுறை நிகழ்வை வலிவுப்படுத்தியதும்,அதைத் தொடர்ந்து இலங்கைக் கூலிப்படையைத் தேசிய இராணுவமாகவும்,ஆக்கிய போராட்டச் செல்நெறியும்,வரலாற்றில் மிதவாதத் தமிழ்த் தலைமைகளது மேற்குலகச் சார்பு அரசியலது வினையின் பலாபலாத்தால் புலிகளென்றவொரு அமைப்புச் சுயவளர்ச்சியை மறுத்து முழுக்முழுக்க அந்நியச் சக்தியின் தயவில் தங்கி வைக்கப்பட்டதும் தற்செயல் நிகழ்வல்ல.இனவாத அரசியலுக்கெதிரானதும்,அந்த அரசியலது வினையால் மேற்கொள்ளப்பட்ட இனவொடுக்குமுறை வீரியத்துக்கெதிராகவும் போராடுவதென்ற பேர்வையில் அந்நிய நலன்களுக்காகப்பாடுபட்ட ஈழப்போராட்ட ஆயுதக்குழுக்களும்-கட்சிகளும் நமது மக்களை இலட்சக்கணக்காகக் கொன்றும்,சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் துஷ்பிரயோகஞ் செய்தும் தமிழ்பேசும் இனத்தை இலங்கையில் ஒட்ட மொட்டையடித்துச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்குக் காட்டிக்கொடுத்து, அடிமையாக்கியக் கொண்ட வரலாறு பேசப்படவேண்டும்-பகிரங்கமாக நாம் எமது மக்களுக்கு உரைக்கும் முதற் செய்தியானது,புலிகள் அந்நியக் கைக்கூலிகள். புலி இயக்கத்தின் மேல் நிலைத் தலைவர்களது இன்றைய அரசியல் சார்பே சாட்சியென்பதல்ல.அந்த அமைக்குள் நிலவிய போராட்டச் செல்நெறியும்,அவர்களால் அணுகப்பட்ட அரசியலுமே ஆழமாகப் பேசப்படவேண்டும்.அங்கே,இவர்கள் எப்படி அந்நிய அடியாட்படையாக உருவாகி வந்தனர் என்பதை மிக நேர்த்தியாக உரைத்தாகவேண்டும்.

இதைத் திட்டமிட்டு மறைக்கும் எந்தவுரையாடலும் புலிகளைத் தேசியப் போராட்டத் தலைமையாகவும்-மாவீரர்களாக்குவதும் மீளவும் நமது மக்களைத் தப்பான பாதைக்கு அழைத்துச் செல்லவே.அந்த வகையிற்றாம் இன்று, இந்தியக் கைக் கூலிகள் மீளவும் நமது மக்களுக்குள் வந்து திடமாக அரசியலை முன்னெடுக்கின்றனர்.

இவர்கள், இரண்டு இலட்சம் மக்களது அழிவுக்குப் பதிலுரைப்பதைத் தவிர்த்துவிட்டுப் புதிய தத்துவம் போதிக்கும் நிலை எப்படியுருவாகிறது?,திருநாவுக்கரசும்,கருணாகரனும்,நிலாந்தனும் எப்படித் தமிழ்ச் சமூகத்தின் முன் தலை நிமிர்ந்து நிற்கின்றனர்?,எப்படி இவர்களால் மீளமீள இந்தியாவுக்குச் சார்பான கருத்துக்களைப் பேச முடிகிறது?.எமது மக்களை கெடுதியாக வருத்தியவொரு கூட்டம்.மக்களது அனைத்து வளங்களையும் திருடிய கூட்டம்,குழந்தைகளைப் போருக்குள் புதைத்தவொரு கூட்டம் இன்னும், மக்களது நலனுக்காகவே அரசியல் பேசுவதாகப் பசப்பும் சூழ்நிலை உருவாகிறதென்றால் புலிகளது பாத்திரத்தை மக்கள் சரியாகப் புரியவில்லை என்பதே உண்மை!

புலியினது அமைப்பிலிருந்து போராட்ட அநுபவங்களைப் பேசமுனைபவர்கள் குறைந்தபட்சமாவது புலிகளது அந்நியக் கைக்கூலி அரசியலையும் பேசியே தீரவேண்டும்.மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிடுவோமெனப் பயந்து விமர்சனத்துள் நாசுக்காகச் சொல்வதென்பது சிலருக்கு அவசியமாகலாம்.ஆனால்,பெரும் பகுதி மக்களது விடுதலையை விரும்புபவர்கள் உண்மைகளைக் கறாராகப் பேசவேண்டும்.ஒரு கைக்கூலி அமைப்பால் எத்தகைய வரலாற்றுத் துரோகம் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்து விடப்பட முடியுமென்பதற்குப் புலிகளே உதாரணமாக இருக்க முடியும்.இவ்வளவு பெரிய இழப்பும்,அற்பணிப்பும் அந்நிய அரசுகளது அரசியல்-பொருளியல் நலனுக்கேற்பப் பயன் படுத்தப்பட்டதென்றால் அது உண்மையிலேயே மன்னிக்க முடியாத குற்றம்.இங்கே, புலிகளது பினாமிகள் இப்போதும் இந்திய-மேற்குலகக் கைக்கூலிகளாகவும்,மகிந்தாவின் விசுவாசிகளாகவுமிருக்கின்றனரென்றால் அவர்களை மக்கள் மத்தியல் அம்பலப்படுத்தி அரசியல் நீக்கஞ் செய்யத் தூண்டியாகவேண்டும்.ஆனால்,நிலாந்தன்,கருணாகரன்,திருநாவுக்கரசு போன்றவர்களோடு அரசியல் நடாத்தும் புரட்சிக்கரத்"தோழர்களை"என்னவென்பது?புலிகளது அந்நியக் கைக்கூலிப்படைப் பாத்திரத்தை மறைத்துக்கொண்டு,அவர்களைத் தேசியவிடுதலைப் போராளிகளெனச் சொல்லப்படும் வரலாறானது மக்கள் விரோதமாகும்.அதற்கெதிரான பெறுமிதிமிக்க உண்மைகள் பகிரங்கமாகப் பதியப்படவேண்டும்.அவை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று புலிகளது மாயை தகர்க்கப்படும்போதுதாம் இத்தகைய இந்திய-மேற்குலகக் கைக் கூலிகளை முiறியடிக்க முடியும்.அதுவரையும் நாம் புலியோடு சமரசஞ் செய்து புரட்சி நடாத்தக் கனவுகண்டால் அது எமது தற்கொலைதாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
05.04.2012





Sonntag, April 01, 2012

ஜனநாயகம்,பன்முகத்தன்மை பேசும் புலிப்பிரமுகர்கள்.

[இக்கட்டுரையானது பரவலாகப் பேசுவது அரசியல்-அராஜகம் குறித்து,இயக்கஞ்சார்ந்த தனிநபர்களது பயங்கரவாதச் செயற்பாடானது கருத்தியல்ரீதியாகவும் புரியப்படவேண்டியது.ஆயுதமெடுத்துப் பயங்கரம் புரிவதென்பதும்,பேனாவெடுத்து அத்தகைய பயங்கரத்தை-அராஜகத்தை நியாயப்படுதுவதென்பதும் வெவ்வேறானதில்லை.இரண்டினது வினையும் அழிவு அரசியலே.இங்கே,புலத்தில் அதிகமாக ஜனநாயக வகுப்பெடுக்கும் புலிப் பிரமுகர் நடராஜ முரளிதரனது கபடி விளையாட்டிலிருந்து ஓரளவு பேச வேண்டிய தார்மீகக் குரலாகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது.]


புலத்தில்,முன்னாள் சுவிஸ்ட்சர்லாந்து-இந்நாள் கனேடியப்புலிப்பிரமுகர் முரளிதரன் நடராஜா அவர்கள்,இப்போது ஜனநாயகம் குறித்தும்,பன்முக உரையாடல்குறித்தும் நிறையவே கூக்குரலிடுகிறார்.நிலத்தில்புலிப் பிரமுகர்களாக இருந்து மக்களைத் துவசம் செய்த கருணாகரன்,திருநாவுக்கரசு,நிலாந்தன் வகையறாக்களும் அவர்களது சர்வதேசத் தலைவர் கே.பி.யுங்கூட ஜனநாயகங் குறித்து நிறையவே பேசுகின்றனர்.இத்தகைய புலிப்பினாமிகளது கடந்த காலப் புலிப்பிரச்சாரகப் பரப்புரைகளையும் இப்போது விறாக்கியிலிருந்து தூசுதட்டிப் படிக்கிறேன்.ஈழநாதம் ஒலித்தவர்கள், அதை மூடி வைத்துவிட்டு மக்களுக்குள் மக்களாக ஜனநாயகத் தாகமெடுத்துத் தொடர்ந்து அழுகின்றனர்.எல்லாம் கருப்பு-வெள்ளை,சாம்பலெனவும் அவர்களால் நிறப் பகுப்புஞ் செய்து பேசப்படுகிறது.இவர்களது கடந்தகால அரசியல்-அந்நியச் சேவையும்,இந்நாள்வரைத் தொடர்ந்து உயிரோடு உலாவும் இவர்களது இருப்பினது அரசியலும் மிகுந்த சந்தேகத்துக்குரியது.

எட்டாம் வகுப்புக்கு அண்மித்த பாலகர்களெல்லாம் புலியாகப்பட்டத்துக்கும்,இவர்களுக்கும் பாரிய தொடர்புண்டு.வன்னிப் படுகொலையுள் அத்தகைய பால்குடிப் போராளிகளெல்லாம் பயங்கரவாதிகளெனக் கூறப்பட்டு, இலங்கைப் பாசிச இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.ஆனால்,இந்த முதிர்ந்த-முற்றிய புலிப் பிரமுகர்களெல்லாம் முன்னைவிடவும் துடிப்பாக நிலத்தில் உலாவர முடிகிறது.பாலகப் போராளிகளைக்கொன்ற சிங்கள-இந்திய அரசுகளுக்கு அந்தப் பாலகர்களைக் களத்துக்கு அனுப்பிக்கொண்டிருந்த இந்தப் பிரமுகர்களைக் குறித்துச் செஞ்சோற்றுக் கடனுக்கான நன்றியை மீளவும் எதிர்பார்த்து இயங்க, அனுமதிப்பதில் வெட்கமோ-வேதனையே இல்லை!அப்பாவிகளது குரல்வளைகளை நசித்த கயவர்கள் கருத்தியல்ரீதியாவொரு இனத்தைக் காயடித்தவர்கள் இப்போது நிறப்பிரிப்புத் தத்துவஞ் செய்கின்றனர்.

என்னவொரு அநியாயமான உலகம்!

இதுவரை தாம் சொல்வதே சரியானது.தாம் மட்டுமே தூய போராட்ட அமைப்புவெனக் கூறிக்கொண்டு,மாற்று அமைப்புகளைத் தடைசெய்து "துரோகிகள்"என்று கொன்று குவித்தார்கள்-இரயர் போட்டுக் குவியலாகக் கொல்லப்பட்ட தமிழ்ப் போராளிகளை எரித்தார்கள்.அதையும்,தமிழீழத்தின்பெயரால் ஜனநாயகத்தன்மை என்றார்கள்.

யாழ்ப்பாண முஸ்லீம்களை, அவர்களது பிறந்த மண்ணைவிட்டு ஓடோட வெருட்டியடித்தார்கள்-கொன்றார்கள் புலிகள்!இதையும், நாம் புலம் பெயர்ந்து வாழும் மேற்குலகில் "சரியானது,முஸ்லீம்கள் சிங்கள அரசின் கைக்கூலிகள்"என்றும், அதையும் ஜனநாயகத்தின்பாலானதெனச் சொன்னார்கள் புலிகள்.

முரளிதரன் இவற்றை 2009 ஆம் ஆண்டுவரை நியாயப்படுத்தி, மக்களுக்குள் பிரச்சாரஞ் செய்தவர்.இப்போது,இவர்கூறும் "ஜனநாயகம்"இந்த வகையிலானதெனப் புரிந்துகொள்வதைத்தவிர வேறெதுவையும் முரளிதரனுக்கு வகுப்பெடுக்க முடியாது!

தமது காலடியில் அதிகாரம் இருந்தபோது,தாம் சொல்வதே "ஜனநாயகம்" என்ற புலிப்பிரமுகர் முரளிதரன் போன்றோர் இன்னும், மற்றவர்களுக்கும் இதைப் போதிப்பது அபத்தமானது.இவரே வலிந்து தமது புலிப் பாசிசச் சேட்டையை ஆதரித்த பால்குடிகளது(குறிப்பாகச் சயந்தன் கதிர்) தற்போதைய"நாவல்-சிறுகதை" தொகுப்புகளைத் தமது செலவில் பிரசுரஞ்செய்து, பினாமிப் பெயர்களுடாக அவற்றை தனிப்பட்ட நிறுவனத்தின் பதிப்பாகக் காட்டியபடி,அவற்றை வெளியீடு செய்வதென மக்களுக்குள் மீளப் புலிப் பாசசத்தை மென்மையான முறையில் தொடர்ந்து நகர்த்துகிறார்கள்.மக்களிடத்தில் தமது பாசிசச் சேட்டையை குறித்து விளக்கமளிக்கமுடியாத பாசிசப் புலிகள்-தம் வரலாற்றுப் பழியை,தவறை ஓத்துக்கொள்ள மறுத்தபடி தியாகமாக்கும் முயற்சியின்வழியில்,தற்போது மக்களது வாழ்வைத் தமது எழுத்துக்கேற்ப நீட்டியும்,முடக்கியம் இயற்கைவாதத் தன்மையுடன் நொந்தவர்களது விழிகள்முன்னே நகர்த்திக்காட்டித் தொடர்ந்து புலிமீதான ,அநுதாபத்தை வளர்த்துத் தம்மைத் தக்கவைக்கும் வியாபாரத்துக்குப்பெயர்"ஆறா வடு"மசிர்!

இது,மிக வலுவாக இனங்காணவேண்டிய நிகழ்ச்சி நிரல்.இதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்த மக்கள்பாரா முகமாக இருந்து அநுமதிக்கும்போது,புலிகள்மீது செய்த அதே தவறைத்தாம் இந்த மக்கள் செய்து முடிக்கப் போகின்றனர்.

புலிகளது புதிய-புதிய போலி வடிவங்களை இனங்கண்டு,இவர்களை ஓடோட வெருட்டி அடிக்க வேண்டும்.இவர்கள் ஆபத்தானவர்கள்.

தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடித்துச் சிங்கள-அந்நிய அரசுகளுக்குக் காட்டிக்கொடுத்த கயவர்கள். இவர்களால் நமது மக்கள் இழந்த இலட்சக்கணக்கான பாலகர்களின்"ஆன்மா"நம்மை இன்னும் புலிகளை மன்னிக்காதே எனக் கூறிக்கொண்டே இருப்பதற்காக, அவர்களது பெற்றோரது கண்ணீரோடு நம்மெல்லோரையும் இறந்தவர்கள் அண்மிக்கின்றனர்.

எவரை மன்னித்தாலும் பாசிச ஈழ அராஜக இயக்கங்களையும்,குறிப்பாகப் புலிகளையும் எவரும் மன்னிக்கமாட்டார்கள்.அப்படி மன்னித்தால் தமிழ்பேசும் மக்களும்,இலங்கைச் சிறுபான்மை இனங்களும் இறுதியில் இலங்கை வரலாற்றிலிருந்து துடைத் தெறியப்பட்டுவிடுவர்!

புலிப் பிரமுகர் முரளிதரனைக் குறித்து மிகக் கவனமாக இருக்கவேண்டிய கட்டத்துள் புலம்பெயர்ந்த தமிழர்கள் வந்துள்ளனர்.ஏனெனில்,கடந்த காலத்தில் புலிகளையும்,அந்த அமைப்பையும்,ஜனநாயகப்படுத்திப் புரட்சிகரமான அமைப்பாக மாற்ற நாம் எடுத்த அனைத்து நடவடிக்கைகளையும்,எழுத்துக்களையும் "துராகிகள்-எட்டப்பர்கள்"எனக்கூறியபடி அந்த அமைப்பைத் தொடர்ந்து பாசிச அமைப்பாகவும்,மக்களது சுய நிர்ணயப்போரை,அராஜகப் போராட்டமாகவும் மாற்றியபடி, அந்நியத் தேசங்களுக்கும் ,சிங்கள அரசுக்கும் காட்டிக்கொடுத்த புலிப் பிரமுகர்கள் இவர்கள்.

இவர்களே, அந்த அமைப்பின் அப்பாவிப் போராளிகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்க உடைந்தயாகச் சிங்கள-இந்திய அரசுகளுக்குள் இருந்துவிட்டு இப்போது,இந்திய-சிங்கள அரசுகளால் கண்டும் காணாமற் விடப்பட்டுள்ளனர். இவர்களே,கருணாகரன்,திருநாவுக்கரசு, நிலாந்தன்,முரளிதரன் போன்ற முகமூடிகளாவர்.இந்த மோசமானவர்கள்,புலியமைப்பை ஜனநாயகப்படுத்தும் எம்மெல்லாரதும் முயற்சியையும் எட்டப்பர் செயலெனப் பிரபாகரனுக்கு வகுப்பெடுத்தபடி அந்த அமைப்பையும்,பல்லாயிரக்கணக்கான தேசபக்த புலி அடிமட்ட இளைஞர்களையும் திட்டமிட்டுக் கொன்று குவித்த நயவஞ்சகர்கள்.

இவர்களை வரலாறு மன்னிக்குமா?

ஒரு கட்டத்துள் புலியமைப்பை தமது கைக்குள் வைத்துச் சிதைத்த திருநாவுக்கரசு,கரணாகரன்,கே.பி. , நிலாந்தன்,நடராஜா முரளிதரன் போன்ற பிழைப்புவாதக் கயவர்கள் (இவர்களது பட்டியல நூற்றுக்கணக்கானது.தலை மறைத்தபடி மக்கள் சொத்தோடு முதலாளிகளாகியவர்கள் பலர்.அவர்களை இனங்காட்டத்தக்க சூழலொன்று மிக விரைவில் வரும்.உண்மைகளை எவரும் மறைக்கமுடியாது!) ஒன்றுந் தெரியாத மனிதர்களாக உலாவருவது எவ்வளவு கபடமானது!

நாம்,முக்கியமாகக் கவனிக்கவேண்டியது என்னவெனில்,சிங்கள அரசினது பாசிச இராணுவமானது எதுவுமே சரியாகத் தெரியாத பச்சைப் பாலகப் போராளிகளையெல்லாம் படுகொலை செய்தது. அந்தப் பாலகர்கள், வேள்விக்கு வளர்த்த கடாவாகப் புலி அமைப்பின் கட்டளைக்கமையப் போராடியவர்கள்.அவர்களே, சிங்கள இனவாதவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்துள் கணிசமாக எதிர்ப்புக் குணாம்சமுடையவர்களாக இருந்தார்கள்.இவர்களே களத்தில் அநியாயமாகப் பலிகொடுக்கப்பட்டவர்கள்.அதுபோன்றே சரணடைந்தபோதும்,இத்தகைய கயவர்களால் காட்டிக்கொடுக் கப்பட்டுச் சித்திரவதைக்குட்பட்டுக் கொல்லப்பட்டவர்கள்.

ஆனால்,புலியினது பிரமுகர்களாக வலம்வந்த இந்தக் கே.பி. திருநாவுக்கரசு, கருணாகரன்,நிலாந்தன்,நடராஜ முரளிதரன் போன்றோர் இலங்கை அரசால் கண்டுகொள்ளாதவர்களாக விடப்படும் மர்மத்தைப் புரிவது கடினமானதா?

எனவே,இவர்களது தயவில் இலக்கியம்-ஜனநாயகம் வளர்ப்பதென்பது மீளவும் எமது மக்களை அந்நியச் சக்திகளுக்காகப் பலியாக்குவதாகவே எடுக்கப்படவேண்டும்!அதைப் பல முனைகளில் நிகழ்த்தும் விசும்பு நிலையுள் இவர்கள் இருக்கின்றனர்.

இவர்களது,இன்றைய குரல் மக்களது எதிர்ப்புணர்வை மீளத் தமது பக்கம் தொடர்ந்து தகவமைப்பதற்கே!இதன்வழி தொடரும் அந்நியச் சேவையை திறம்பட நடாத்தி முடிக்க முனையும் முரளிதரன் போன்ற பெரும் புலிப்பிரமுகர்களைப் பார்த்து " கேடு கெட்ட கயவர்களே" நமது மக்களைவிட்டு தள்ளிப்போங்கள் என்கிறேன்.

உங்களுக்கென்ன அருகதையுண்டு "ஜனநாயகம்-பன்முகத் தன்மைகள்" குறித்துப்பேசுவதற்கு?

உங்களது பாசிச அதிகாரம் சிதைந்து சின்னாபின்னமாகும் இந்தத் தருணத்தில் அரும்பும் மக்களது சுய மேலாண்மையைத் தொடர்ந்து அவர்களது குரலாக வெளிப்படுவதைத் தட்டிப்பறித்து உங்களுக்குள் உருவகப்படுத்தி, உங்களையும் மக்களது குடிசார் அமைப்புகளாக்கும் முயற்சியா இது?

நீங்கள் யார்?

மக்களையும்,அவர்களது குழந்தைகளையும் தொடர்ந்து "தமிழீழம்"சொல்லிக் கொலை செய்தவர்களல்லாவா?

இறுதிவரை மக்களைச் சுயமாகச் செயற்பட முடியாது தண்டித்த அராஜகவாதிகள் நீங்கள்!உங்களுக்கும் பன்முகத் தன்மைக்கும்,ஜனநாயகத்தும் என்ன தொடர்பு?

புலிப் பாசிஸ்டுக்காளாகிய உங்கள் அகராதியில், ஜனநாய வாடையே இல்லையே?

இரத்தம் படிந்த உங்கள் கரங்களையும்,பிழைப்பைக் குறித்தே இயங்கும் உங்கள் மூளைகளையும்,வஞ்சகத்தையே சுமக்கும் உங்கள் இதயங்களையும் காலம், ஒரு நாள் நிறுத்தியே தீரும்!

உங்களை,அநியாயமாகக் கொல்லப்பட்ட மக்களும்,உயிராயுதமெனக் கண்டிப்பாகக் கொலைக்கு அனுபப்பட்ட அப்பாவி இளைஞர்களது துஷ்ப் பிரயோகஞ் செய்யப்பட்ட உயிரும் சும்மா விடாது!அந்த ஆன்மா உங்களது பரம்பரைகளையே தண்டிக்க முனையும்.

இஃது, சத்தியத்தின்பார்ப்பட்ட வரலாற்று நியதி, முரளிதரன் நடராஜா!


ப.வி.ஸ்ரீரங்கன்
01.04.2012


Donnerstag, März 15, 2012

சனல் 4: ஆவண விவரணமும்,மறைக்கப்படும்அரசியலும்-என்ன?

சனல் 4: ஆவண விவரணமும்,மறைக்கப்படும்அரசியலும்-என்ன?


லங்கையைவிட்டுப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும்நாம் யார்?, தமிழர்கள்?, போதுமா இந்த அடையாளம்-" புலிகளுக்குப் பின்னால் கோசம் போடுவதுகூட எமது மக்களுக்கானதாகாதா?" - கேட்பீர்கள்!

அப்போ, நிறுவனங்களின்,இயக்கங்களின்,அரசுகளின் அடிமைகளா?

அல்லது, நம்மைப் புரிந்துகொண்டு நமது விடுதலைக்குகந்த கல்வியின்,கேள்வியின்மூலம் நம்மை வளர்த்தெடுத்து ,இத்தகைய நிறுவனங்களுக்கெதிராகப் போராடப் போகின்றோமா?

இவை கேள்விகள்.ஆனால், நாம் சிந்தித்துச் செயற்படும் காலமே நமது விழிகள்முன் நிழலாடுகிறது.

சனல்4 மிக நேர்த்தியாகப் போர் குற்றத்தைக் குறித்தான அனைத்து வழிகளிலும் சேகரிக்கப்பட்ட தரவுகளை நமக்குமுன் கொட்டியுள்ளது.அப்பாவி மக்களது துயருள் சம்பந்தப்பட்ட இரண்டு இராணுவ ஜந்திரங்களுக்கிடையிலான பலப்பரீட்சையில் தோற்கடிக்கப்பட்ட தமிழ்ப் பாசிச இராணுவமானது சிங்கள இராணுவ ஜந்திரத்தால் நிர்மூலஞ்செய்யப்பட்டபோது,சிங்கள இராணுவமானது ஜனநாயகப் படுகொலையைச் செய்துள்ளது.சுமார் 60 ஆண்டுகால அரச நிர்வாகக் கட்டமைப்புடைய இலங்கைப் பாராளுமன்றச் சட்டவாதிக்கமானது இவற்றைத் திட்டமிட்டு நியாயப்படுத்தும் சந்தர்ப்பத்தில் சனல் 4 ஆவணப்படமாக இலங்கைப் படுகொலைக் களத்தையும் மீள,மீளக் கொணர்கிறது!


வழமைபோலவே,புலி அநுதாபிகளுக்கு இது ஏற்புடையதாக இருக்கவில்லை!தமது மதிப்புமிக்க சேனைத் தலைவரது மூளையைக் குடைந்து பரிசீலிக்கும் சிங்கள வன்கொடுமை இராணுவத்தின் திமிரை உள்வாங்குவதில் அவர்களுக்கு மனத்தளவில் பல தடைகள் இருக்க முடியும்.அதுவும்,அவமானமாகவும் இருப்பதற்கானவொரு புள்ளியில் பிரபாகரனது பிணத்தை அவர்கள் அம்மணமாக்கியும் வைத்திருக்கிறார்கள்.இது,சிங்கள வரலாற்று மனவியல்புக்கொப்ப நிகழ்ந்தவொரு பாசிசச் சேட்டையாகவே இருக்கிறது."கனக விஜயனின் முடித் தலை நெரித்துக் கல்லினை வைத்தான் சேர மகன்" என்றும்,"அநுராதபுரத்துள் சிங்களத்து உச்சி பிளந்து எல்லாளனைக் காட்டினேன்"என்றும் தமிழ்த் தரப்பு வீரம் பேசியது. இது மாற்றுச் சமுதாயத்தோடு இசைந்து வாழத் தகமையற்ற உச்சாடனங்களாகவே மேலும் விரிந்துகொண்டன. இத்தகைய உச்சாடனங்களுக்குப் பின்னால் நிகழ்ந்த ஊக்கமானது உயர்தட்டு வர்க்கத்தின் அதிகாரப் போட்டிக்கேற்க மக்களைத் தயார்ப்படுத்தும் மிகக் குறுகிய நலன்களைக் கொண்டியங்கிக் கொள்கிறது. இது,புலிகளது கடந்தகால ஆயுதப்போராட்டத்திலும் கணிசமாகவே இனங்காணத் தக்கதாகவிருந்தது!புலம் பெயர் மக்களிடத்திலும் இது தொடர்கதையாகவேண்டுமா?

புலிகள் தோற்றுக்கொண்டிருந்தபோது,அது சொந்த மக்களுக்குச் சவக்குழிவெட்டி ஓய்ந்தபோனவொரு அராஜகக் குழுவாக மங்கிக்கொண்டிருந்ததை வரலாற்றின் வெளிச்சத்தில் உரசிப்பார்த்தால் தெளிவு பெறலாம்.இந்தச் சனல் 4 வெளிப்படுத்தும் ஆவணப்படங்கள், காட்சிகள் அனைத்தும் ஏலவே நாம் பார்த்தவை.எனினும்,அதையிட்டுப் புலிவிசுவாசிகள் நம்பத் தயாரில்லாதிருந்தார்கள்.எனவே,தமது சரிவுகளை நியாயப்படுத்தும் முகமாகப் புலிகளது பேரவாவாகப் புலிகளின் தலைவனை உயிருடன் காத்துப் பதுக்கி வைத்திருப்பதாகவும்,அத்தகைய படங்கள் போலியானவையென்றும்கூறி இலங்கைப் பாசிச அரசின் படுகொலை அரசியலை வெளியுலகில் நியாயப்படுத்தும் காரியத்தில் அறிந்தே செயற்பட்டனர்.

இப்போதைய இந்த ஆவணப்படமானது இலங்கையில் இனவழிப்பு நிகழ்ந்துள்ளதென்பதைச் சொல்லாமற் சொல்கிறது. அதுள்,சரணடைவுகொண்ட புலித் தலைமை யுத்த விழுமியங்கட்கு அப்பால் படுகொலை செய்யப்பட்டுக் கடலில் வீசி எறியப்பட்ட மிகப் பிற்போக்குச் செயலையும் கண்டிப்பதில் மக்களைக் கைகோற்கக் கோரிக்கொள்கிறது.

தமிழர்கள் புலம் பெயர்ந்து மேற்கில் ஒரு ஒட்டுண்ணிச் சமூகமாக வாழும் இந்தச் சந்தற்பத்தில் கருத்துக்களைக் காவிக்கொள்ளும் தனிநபர் தனது வளர்ப்பு முறைமைகளை அறியாதிருக்கும்வரை இன்றைய நிறுவனங்களின்,அரசியல் இயக்கங்களின்-கட்சிகளின் பொய்மைகளைக் காவும் சுமை காவியாகவே வலம் வருகின்றார்களென்பதற்கு நமது புலி அரசியல்-போராட்ட நம்பிக்கைகளை-இயக்கவாதமாயைகளை,தனிநபர் துதிகளை,போலித்தனமாகத் தனிநபரைத் துதித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் செயலூக்கத்தை ஆதரிப்பவர்களை வைத்தே புரிந்து கொள்ளமுடியும்.இவர்கள் வழமைபோலவே பிழைப்புவாத அரசியலுக்கேற்பச் சனல்நான்கினது ஆவணப்படத்தைக் கண்டுகொள்ளாதிருக்கின்றனர்.அல்லது, அதை அங்ஙனம் தவிப்பதால்(அது குறித்துப் பொது வெளியில் உரையாடாது)தமது புலிகளது எச்சங்களுக்கு மீளவுமொரு முண்டுகொடுத்துப் புலம்பெயர் தேசத்தில் மக்களை முட்டாளுக்கும் அரசியல் சதிக்கு உடந்தையாகிக்கொள்கின்றனர்.

புலியினது அப்பட்டமான மக்கள் விரோதக்கருத்துக்களைக் காவிக்கொண்டு திரிகின்ற "கருத்தின்பால் உந்தப்பட்ட" மனிதர் தமது இருப்பின் விருத்தியாகவுணர்வது மொழிசார்ந்து சிந்திப்பதையும் அதனூடாகப் புரிந்துகொண்ட பண்பாட்டுணர்வையுமே.இங்கே, நெறியாண்மைமிக்க உள வளர்ச்சி மறுக்கப்பட்டு, செயற்கையான-இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம் பிரதியெடுக்கப்படுகிறது.இவர்களுக்குப் புலிவழி புனையப்பட்ட அல்லது இட்டுக்கட்டபட்ட "தமிழ்சமுதாயம்-விடுதலை" என்பது தமது விருப்பத்தின் கருவாக இருப்பதை எப்பவும்போலவே"தமிழீழ விடுதலை"என்று, கனவுலகத்தைத் தயார்ப்படுத்தி உண்மைகளை ஏற்பதில் சிக்கலாகிறது!இது ஒருவகை உள நோய்!

ஈழத்து அரசியலில் ஒவ்வொருவரும் ஏதோவொரு இயக்கஞ்சார்ந்து உரையாடுவதும்,எழுதுவதும் அவரவர் உணர்திறனுக்கொப்பவே நிகழ்கின்றது.உதாரணமாக:அன்று,புலிகள்மீது பாரிய நம்பிக்கை வைத்தவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் ஆதிக்கத்துக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் கட்டுண்டபோது,அந்தச் சூழலுக்குள் வளர்வுற்றவர்களே.இவர்களே,புலிகள் தோற்றுக்கொண்டிருந்தபோது வயிற்றிலடித்து,புலித் தலைவனைக் காக்க வீதிக்கு இறங் கினார்கள். அப்போதும், மக்களைச்சாட்டி ஒரு விவேகமற்ற கபட அரசியல் வீதிக்கு வந்தது.அது,உண்மையற்ற புலிக் கூட்டத்தின் அரசியலென்பதை உலகம் உணர்ந்தபோது தோற்றுக் கொண்டது.

இப்போ,இந்தவுலகம் தனது நலங்கட்கு அமைய இந்த ஆவணப்படங்களது மூலமாக இலங்கை அரசின் பாசிசத்தை வெளிசமிட்டுக் காட்டுவதற்கு எங்கள் மக்கள்மீது இலங்கை அரசு-புலிப்பாசிசம் ஏவிய இராணுவ யுத்தம் காரணமாகிறது.இந்த யுத்தக் குற்றமானது இலங்கை அரசு மேற்குலகத்தைச் சார்ந்திருந்தபோது எப்பவும்போலவே மறைக்கப்பட்டிருந்தது.இப்போது,ஆசிய-மேற்குலகப் பொருளாதாரச் சந்தைப் பிளவுகளது நெருக்கடியுள் தோற்றமுறும் புதிய முரண்களுக்கமையத் தமது நலன்களது தெரிவாக நமது மக்களது அழிவுகள் அரசியலாகிறது.இதை வெளிப்படையாக இனங்கண்டு, அதன் உண்மைகளது திசைவழியில் நாம் பயன்படுத்தும் அரசியல் என்ன?

இது, குறித்து விரிவாக விளங்கிக்கொள்வது அவசியமில்லையா?

அல்லது,வழமைபோலவே இந்த மேற்குலகச் சார்பு அரசியல் வழித் தனிநபர் இலாபங்களுக்கமைய எமது மக்களது அழிவையும்,அந்த அழிவின்வழி பெறப்பட்ட அடிமை வாழ்வையும் பயன்படுத்திச் சொந்த இலாபங்களைக் கண்டடையப் போகின்றோமா?

சனல்4 ஆவணமாகத் தயாரித்த எமது மக்களது யுத்தவாழ்வு கற்பிக்கும் பாடமென்ன?புலிகளது வரலாற்றுக் கொடுமையிலிருந்து வெளிப்படும் குருதிக்குச் சரியான-நியாயமான அரசியல் அர்த்தம் உண்டா? இக் கேள்விகளைத் தட்டியுதைத்தெறிந்துவிட்டு,மீளத் தலைவருக்கு ஆலவட்டம் காட்டும் மனப்பாங்கானது தனித்தன்மை அபிவிருத்தியை(உண்மைகளைக் கண்டடையத்தக்க ஆய்வு மனம்) வெறும் ஒத்தூதும் கும்பல் மனப்பாண்மைக்கு இட்டுச் செல்கிறது.இங்கே, நடக்கின்ற ஒவ்வொரு கருத்துக் கட்டுமானம், பரப்புரைகளும் தனிநபரது தனித் தன்மையைக் காவு கொள்கின்றபோது, அந்தச் செயலூக்கம் பொதுவான தளத்தில் ஒரு பாசிச அமைப்பை முன்நிறுத்தும் கைங்காரியத்தை இந்தச் சமுதாயத்துள் எந்தக் குறுக்கீடுமின்றிச் செய்கிறது.

அமைப்பாண்மையுடையவொரு இயக்கமாக வளரும் குறிப்பிட்டவொரு நலன்-அது சார்ந்த வர்க்கம் இத்தகைவொரு வெற்றுச் சூழலைத் தக்கபடி உபயோகிக்கும்போது அங்கே மனித மூளை,மனம் காய் அடிக்கப்படுவதாக நாம் பல முறை கூறுகிறோம்.இதுவே இன்றைய புலிகளின் புரளிகளை நம்பும் தனிநபர் விருப்பாகவும்-அறிவாகவும் உருவாக்கப்படுகிறது.இந்த இயக்கப்பாட்டில் தமிழ்பேசும் மக்கள் தமது வரலாற்றுப்பூர்வமான ஜீவாதாரவுரிமைகளை இயக்க நலனுக்குத் தாரவார்ப்பதில் போய்முடிகிறது! சனல் 4 காட்டும் ஆவணமானது இத்தகையவொரு சூழலில் மேற்குலக அரசியலுக்கேற்ப,அவர்களது நலனுக்கானதெரிவுகளில் சில வினையாற்றல்களைக் கோரிக்கொண்டிருக்கிறதேயொழிய நமது மக்களது அழிவுக்கும்,அதுசார்ந்த நியாயமான அரசியல் தீர்வுகளுக்கும் இதைச் சாத்தியமாக்கும் வலு நமது புலம் பெயர்ந்த மக்களாற்றாம் முடியும். இதைப் பயன்படுத்தும் முறைமைகளில் புலிகளைக்கடந்தவொரு மகள்திரள் அமைப்பு உருவாகுமானால் அதுவே, பாசிசப் புலிப் புரளிகளைப் பின் தள்ளி நிலத்திலுள்ள மக்களுக்காக உண்மையாக அரசியல் செய்யும் ஒரு அறத்தை நமக்கு வரலாற்றில் தரும் சந்தர்ப்பத்தைக் காலம் கனிய வைக்கும்.

எனவே,புலம்பெயர் மக்கள் பிழைப்புவாதப் புலிகளைத் தவிர்த்து இயங்கும் தேவை அவசியமானது.

ஏனெனில்,புலம்பெயர் பினாமிப் புலிகளுக்கும்,பாசிசத்துக்குமான நெருக்கம் இந்த முறைமையிலேயே விளங்கிக் கொள்ள முடிகிறது.இங்கே நிறுவனப்பட்ட புலிச் சிந்தனைப்பொறிமுறையானது தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும்தமது இயக்க நலனுக்காகக் கட்டுப்படுத்துவதும்,அதன் சாரம்சமாக இருக்கும் பன்மைத்துவ நிகழ்வுப்போக்குகள் புலம்பெயர் மக்களை அடிமைப்படுத்தும் தறுவாயில் (சுயமாக மக்களை இயங்க அனுமதிக்காமை) அந்த அமைப்பில் பிரத்தியேகமான எந்தக் கருத்தியல் மற்றும் முறைமைகளும் ஜனநாயகப் பண்பைக்கொண்டிருப்பதற்கு வாய்பே இல்லை.எனவே,புலிகளது பரப்புரைகளைக்கடந்து பிரபாகரன் மரணத்தையும்,அவர் கொலை செய்யப்பட்டதையும்விட,மக்களது அழிவுகளைக் குறித்து வெளிப்படையாகப் பேசப்பட்ட இந்தச் சனல் 4 ஆவணத்தின்வழி ஒரு மக்கள் திரள் அரசியலூக்கம் கருக்கொண்டு,வெளியுலக மக்களரங்குக்கு வருமானால் அதுவே,தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கானவொரு அரசியல் உந்துதலையும், போராட்டவுணர்வையும் மீளத் தகவமைத்துக்கொள்ளும். இது,நிலத்திலுள்ள மக்களே தமது அடிமை விலங்கை ஒடிக்கும் எழிச்சிக்கு உந்துதலாகவெழவும் முடியும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
16.03.2012

Sonntag, März 04, 2012

சலிப்பூட்டும் இவ்விடியதிர்வின் தாலாட்டில்....

வாசு,இன்று எனது காரினது இரயரை ஆணி பதம்பார்த்துவிட்டது.அதை மாற்றியாகவேண்டும்.காசு பெரும் முடை, நான்கு இரயர்களையும் மாற்றியாகவேண்டிய நிலையிலேயே வின்ரர் இரயரது நிலை.அதை இணையத்தில் மலிவாகத் தேடுவோமென வந்தால் உனது மொழியாக்கம் பெரும் தாக்கத்தையும்,பொருத்தப்பாட்டுடன் தரும் வலியும்-உண்மையும்,எதையோ எழுதிவிடத் தூண்டுகிறது.

எனது நிதி நிலையோ கிரேக்கத்தைவிட மோசம்.பட்ட காலிற்படும் என்பது என்வாழ்வில்சரியாகக் கிடக்கிறது.

இந்த நிலையுள்ளும் உனது மொழி எவ்வளவு உண்மையாக இருக்கிறது!அஃது,மூலத்தின் வீச்சைவிட வலிமையானது.இதை எவரால் உண்மையாகப் பொருத்த முடியுமெனில்-அஃது,நம்மாற்றாம்!புலம் பெயர்ந்த நம்மால் மூலத்தைவிட மொழியாக்கத்துள் பல வலிமையான உணர்வுகளைப் பெறமுடியகிறது.

அதையும் பார்த்தோமானால்:
>> குளிர் மண்டிய கொடுமிருளுள்
விரைவில் நாம் அமிழ்ந்து விடுவோம்,
குறுகிச் சென்றுவிட்ட எம் கோடைகளின்
வெயில் ஒளியே சென்று வா !
கொல்லைப் புறத்தின் கல்லுப்பாதையில் சாவின் அதிர்வுகளுடன்
பேரிரைச்சலிடும் மரம் சாய்து வீழ்வதை இப்போதே கேட்கிறேன்.<<
" குளிர் மண்டிய கொடுமிருளுள்..." மூலத்தை உருவகப்படுத்தியவனுக்கும் எமக்குமான பொருத்தப்பாடு வேறாகவிருப்பினும்,ஒரு நிலையுள் அவை பொருத்தமாகியும் விடுகிறது.


ஊரைவிட்டு,தேசம் தொலைத்து,கொடுமிருள் குவிந்து போர்த்திருக்கும் இருண்ட ஐரோப்பாவுக்குள் நுழைந்தோம்.இந்தக் குளிர் தின்றக் கொடுமிருளில் நாம் அமிழ்ந்தே போய்விட்டோம்.இப்படியாகவின்று கால் நூற்றாண்டைத் தொலைத்தோம்-கண் இமைக்கும் நேரத்துள்!

"குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள்..." ஆம்!நமது கோடைகள் எப்பவுமே நீண்டவை!அவை இதப்பானவை!இனிமையானவை.எமது முகற்றில் வந்தமரும் மணல் கலந்த சோழகத்துள்(தென்காற்றுச் சோழகம்) சொல்லாத சூரியக்கதிர்கள் தொலைந்து போனதிசையுள்- " வெயிலொளியே சென்றுவா"என்பதைத்தவிர வேறெதுவும் விசும்ப முடியாது தத்தளிக்கும் நமது புகலிட வாழ்வில், கொல்லைப் புற கல்லுப்பாதையாய் வாழ்வில் வடிவமைப்புச் சந்தித்துக்கொள்கிறது.

ஜந்திரமயமான உற்பத்திச் சக்திகளுக்குள் மாட்டிய நமது உறவானது சாவின் அதிர்வுடன்பேரிரைச்சலிட்டு ஈனக்குரல் ஒலித்தபடி சாய்ந்து போவதை நாம் தினமும் சந்திக்கிறோம்.நேற்றுப் பூராகவும் இந்த வலி என்னைத் துரத்தியபடி...
>> சினம், வெறுப்பு, நடுக்கம், பயங்கரம் கடினமானதும் தவிர்க்கமுடியாததுமான உழைப்பு என, குளிர்காலம் முழுவதுமாக என்னிருப்பினுள் நுழையப்போகிறது.
தன் துருவ நரகத்துள் துலங்கும் சூரியன்போல்என்னிதயமும் உறைந்ததோர் செந் தசையாகவேயிருக்கும் <<
கடினமானதும்,ஆன்மாவைக் கொல்லுவதுமான இந்த ஐரோப்பாவினது அவசரத்தனமான படைப்புருவாக்க எல்லை தினமும், புதியதைக் கேட்கிறது-புதுமைப்படுத்தலையும்,புத்திப் பிழிவையும் கோருகிறது.
முடியவில்லை!

நேர அழுத்தம்,நினைவில் வைத்துக்கொள்ளமுடியாத உழைப்பினது அநுபவத்தை மறுந்துபோக வைக்கிறது.மறு நாள் விட்ட குறையை நிதானமாகத் தொடரமுடியவில்லை!

என்ன செய்ய?

எனக்குச் சினம்,வெறுப்பு,நடுக்கம்.இதனால் எனது உழைப்பும்,அதை நல்கப்பட நான் உறவுகொண்ட உற்பத்திச் சக்தியும் அழகானதும்,சந்தோஷமானதுமான நாட்களை எனக்கும்,என்னைச் சுற்றியிருப்பவருக்கும் எப்பவுமே தரவில்லை!அதனால்,அந்த உழைப்பு எனக்கும் உண்மையிலேயேவொரு கொலைக்களமாக இருக்கிறது.எனினும்,அந்த உழைப்பை நிராகரிக்க முடியவில்லை!


நான் கூலியுழைப்பில் தங்கி உயிர்வாழ்வதாலும்,என்னைச் சுற்றி இன்னுஞ் சிலவுயிர்கள் தங்கியிருப்பதாலும் இந்தப் "பயங்கரமானதும்,கடினமானதுமானதும் என்றான தவிர்க்கமுடியாதானாகிப் போன இந்தக் கூலி உழைப்பு, கோடையென்ன குளிரென்ன அனைத்துப் பொழுதுகளிலும் எனக்குள் நுழைந்து எனது சுயத்தை அழித்தே விட்டது.நான் சுயாதீனமுள்ள உயிர் ஜீவியா உலாவரவில்லை!

எனது விலங்கே,எனது உடலாகிப்போனது.அது,உழைப்பான எனது படைப்பாற்றலைக் கொள்ளையிடும் இந்த ஜந்திரோத்தோடு பொருத்தப்பட்ட தற்செயல் நிகழ்வால் அது நரகமாகிப் போய்விட்டது!ஆன்மா நித்தியத்தைத்தேடுகிறது.திரண்ட திசையெங்கும் தேங்கிப்போன ஆன்மாவினது வலியுள் மூப்படையக் காத்திருக்கும் காலத்தை மறுத்து, என் ஆன்மா சிதைந்து போகிறது.அது, தனது காலத்தைத் தேடியபோது இருப்பை இழந்த காலத்துள் நித்தியத்திலிருந்து விலிகிக்கொண்டது! இந்த அந்நியப்பாடே எனக்கு இதயமொன்றிருப்பதென்று சொல்லிக்கொண்டிருக்கிறது.

இந்த நரகத்துள்இதயமிடும் ஓலம் இருப்பற்ற பொருளின்றியமைந்த ஏதோவொரு இயக்கமாய் உலாவுறும் மூலதனச் சுழற்சியுள்சிக்கிப் பிழியப்பட்ட வலிகளால் துருவ நரகத்துள் துலங்கும் சூரியன்போல்(கவனிக்க அது இன்னும் சூரியனே) என் இதயமும் உறைந்து ஓர் செந் தசையாகவே இருக்கிறது.அதனிடம் அனைத்தும் தொலைந்து போய்விட்டது!ஈய்வு,இரக்கம்,பரிவு-பாசம் என்பதெல்லாம் அதனிடம் பொய்த்துப் போய்விட்ட பொழுதில் அது வெறும் உறைந்துபோனவொரு செந் தசையாகவே இருக்கிறது.

அற்புதவமான வரிகள் வாசு!
>> விறகின் ஒவ்வொரு துண்டும் வீழ்வதை
அச்சத்துடன் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
நாம் நிர்மாணிக்கும் தூக்குமேடைகூட இத்தனை
செவிடான ஒலி கொண்டதல்ல.
கொழுப்பேறிய செம்மறியாட்டின் களைப்பற்ற இடிகளால்
சாய்ந்து வீழும் கோபுரம் போலிருக்கிறது என் மனம்.<<
வாசு,நானும் இந்தப் பொழுதுவரை விறகின் ஒவ்வொரு துண்டின் வீழ்ச்சியிலும் எனது கவனத்தைப் புதைத்தே வந்திருக்கிறேன்.இந்த வீழ்ச்சி பேரிரைச்சலானது.அஃது,வீழும்போதும் பெரு விருட்சத்திலிருந்து பட்டுப்போய் விறகாகி வீழ்வதாகவே இருக்கிறது.சமீபத்துள் பதினான்கு வயதுப் பாலகன் விறகாய் வீழ்ந்து போனதன் ஒலி பேரிரைச்சலை எனக்குள் தந்தபடியேதாம் இருக்கிறது.எனக்குள் இது அச்சத்தைத் தருகிறது.எனது குழாம் நிர்மாணித்த தூக்குமேடைகூட இத்தனை செவிடானதும்,வலிமைகொண்டதுமான ஆன்மக்கொலையை இட்டுக்கொண்டதல்ல.அதுவொரு வெளியுள் விடிவெனக்கொண்டவொரு பாதையுள் இன்னொரு கொழுப்பேறிய செம்மறியாட்டின் களைப்புற்ற இடியாகவும்இருந்து வருவதை நாம் புரிந்தபோது வீழ்ந்து சிதைந்த விறகுகள் ஏராளம்.அதன் செவிட்டொலியோ சொல்லிய சேதிகள் என்ன?

நான் அறியேன்-புரியேன்!

என் திறப்பு என்னிடம் இல்லை!என்னைப் பூட்டிவைத்துச் சித்திரவதை செய்யும் காலத்தை நான் வென்றுவிடப்போவதில்லை.எனினும்,எனது மனம் சாய்ந்து வீழும் கோபுரம் போலிருப்பதில் எனது ஆன்மா நித்தியத்தைத் தேடியதால் மட்டுமே காலத்துள் தோற்கிறது.அதிலிருந்து அது நித்தியத்திலிருந்து விலகுகிறது.
>> சலிப்பூட்டும் இவ்விடியதிர்வின் தாலாட்டில்
மிக அவசரமாய் எங்கோவொரு சவப்பெட்டிக்கு
ஆணியடிப்பதுபோல் எனக்குக் கேட்கிறது.
யாருக்கு ? நேற்று கோடையாயிருந்தது. இதோ இலையுதிர்காலம்.
இந்த மர்மச் சத்தம் ஒரு புறப்படலுக்கான மணியாக அடிக்கிறது.<<
அவலம் மிக்கதும்,அருவருப்பானதுமான இந்த உழைப்பு விடியல் எனக்கும் சலிப்பூட்டுகிறது.இந்தச் சலிப்பூட்டும் விடியதிர்வானதன் தாலாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே காலம் என்னைக் கழுமரத்துக்கழைத்துச் செல்லும்போது எனக்குமுன் இன்னொருவன்-இன்னொருவள் அதில் தொங்கவைக்கப்பட்டுச் சவப்பெட்டியுளிட்டு ஆணியடிக்கும்போது நானும் இடைவிடாத அந்த ஒலிக்குத் தீனிபோட இரையாக்கப்படுகிறேன்.எனது இந்த ஊனத்துள் வரும் காலமாற்றம் எல்லாம் ஒரு சுழற்றிசைவெளியுள் சந்திக்கும் கணமாகிக்கொண்ட மாயையுள் நேற்றுக் கோடையாகிய கணமோ இதோ இலையுதிரும் இன்னொரு கணத்தைப் புதைக்கிதே இது மர்மமானதும்,மகத்தானதுமானவொரு பயண ஆயத்தத்தின்தேவையைச் சொல்லிக்கொண்டிருப்பதாற்றால்தாம் இஃது,மர்மச்சத்தமாகி ஒரு புறப்படலுக்கான மணியொலியாக ஒலிக்கிறது!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
04.03.2012

Dienstag, Januar 17, 2012

கையெழுத்திட்ட நபர்கள் எவரென்பதா பிரச்சனை?

71 நபர்கள் கையெழுத்திட்ட அறிக்கையுள்: கையெழுத்திட்ட நபர்கள் எவரென்பதா பிரச்சனை?

வளர்மதியின் முகநூல் நிலைத்தகவற்பகுதியில் நிர்மலா தலைமையின் கீழ், 71 நபர்கள் கையெழுத்திட்ட அறிக்கை குறித்த விவாதம் நடக்கிறது.அதுள், பெரும் பாலும் நமக்குத் தெரிந்தவொரு அன்பர் கையெழுத்திட்ட சமாச்சாரம் குறித்துப் பெரும்பாலும் கேள் விகள் எழுகிறது.அறிக்கையின் பின்னாலிருக்கும் அரசியலையும்மீறி , தனிநபர்சார்ந்தியங்கும் சூழலும்,தனிநபர் நடாத்தையும்சார்ந்து இந்தக் கேள்வி முக்கியமடைவதால் அது குறித்த சிறு குறிப்பாக இதை எழுதுவது அவசியமாகிறது.

இதுள் யாரு கையெழுத்திட்டார்கள் என்பதல்லப் பிரச்சனை.பிரச்சனை, அந்த அறிக்கைபேசும் அரசியல்.அதன் பின்னாலுள்ள வியூகம்.இதை நகர்த்துவது நிர்மலாவோ அல்லது அந்த 70 நபர்களுமோ அல்ல.அந்த நபர்கள்சார்ந்தியங்கும் தளம்,அது முன்தள்ளும் அரசியல்,அதனுடாகவிருத்தியாகும் அமுக்கக் குழுக்கள்,இவற்றை முன்தள்ளும் அதிகார வர்க்கம்.

இவையூடாகத் தமிழ்பேசும் மக்களது இன்றைய அரசியற்றலைவிதியையும்,அவர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவழிப்பையும் மெல்ல நீர்த்துப்போக வைக்கும் இந்தத் திசை திருப்பும் வியூகத்தைக் குறித்தே சிந்தித்தாகவேண்டும்.

இதற்குப்பின் பாரிய அழிவுச் சக்தியும்-பிராந்திய ஆதிக்கமும்,அதுசார்ந்தியும் உள்ள நாட்டுப் பெரும்பான்மை இன நலன்நோக்கிய அரசியலும் இருக்கிறது.அது,இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஒன்றுடனொன்று மோதவைத்தலூடாகவொரு அரசியலை முன் தள்ளுவதால்,இதுவரை அழிப்பு அரசியலை செய்த பிரதான எதிரியான இலங்கை அரசையும்,அந்த அரசுக்குப் பின்னால் இருக்கும் ஆளும் வர்க்கத்தையும் திட்டமிட்டுக் காக்க முனைகிறது இந்த அறிக்கை.

யாழ்ப்பாண மக்களிடம் விடப்படும்கோரிக்கையைக் குறித்து மேலோட்டமாக விளங்க முனையும் எந்த நபரும் இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்குத் திட்டமிட்டுச் சூது நிரம்பிய அரசியலைக் கொண்டியக்குகின்றனர் என்பது இங்கிருக்கும் உண்மையாகும்.

வன்னியுள், கொத்துக்கொத்தாக மக்களை இரண்டு அரச ஜந்திரங்களும் வேட்டையாடியபோது,யாழ்ப்பாண மக்கள் அப்படியொரு உலகத்தைக் கேள்விப்பட்டதாகவோ அன்றி வன்னியென்பது தமக்குப்பக்த்தில்தாம் இருக்கிறதாகவோ உணரத்தலைப்பட்டார்களா?

தமது மக்களில் கணிசமானவர்களை இனவாதச் சிங்கள அரசும்,புலியும் மாறி மாறி வேட்டையாடியபோது,அதைக் குறித்துக் கவனத்தைக் குவிக்கவோ அதற்கெதிராக அணிதிரளவோ முடியாதவொரு இராணுவக் காட்டாச்சிக்குள் இருத்தி வைக்கப்பட்ட யாழ் மாவட்ட மக்களிடம்போய், "இஸ்லாமியர்களது மீள் குடியிருப்பு,இசைந்து வாழ்தல்-நல்லிணக்கம்" என வகுப்பெடுப்பது மிகத் தந்திரமானதென்பதை எந்தச் சிறிய பாலகர்களும் அறிய முடியும்.

இங்கு எந்த நபர் கையெழுத்திட்டாலும்,அது குறித்த விவாதமாக இதை நகர்த்துவது விவேகமில்லை!

அதன் பின்னாலுள்ள அரசியலைக் குறித்தே விவாதித்து அம்பலப்படுத்தியாகவேண்டும்.

ஒவ்வொரு நபரும் தனத்து வர்க்கவுணர்வுக்கொப்பவே உலகக் கண்ணோட்டத்தை வளர்த்திருப்பார்.அதைத் தாண்டியவொரு பரந்துபட்ட மக்களது நலனை முன்தள்ளுவதென்பது வர்க்கச் சமுதாயத்தில் இயலாதகாரியம்.எனவே,இனவொடுக்குமுறை நிகழும் ஒரு நாட்டில்-திட்டமிட்டு இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டவொரு நாட்டில், இத்தகைய பின்புலத்தை அடியோடு மறைத்துக்கவனத்தைத் திசை திருப்பும் இந்த அரசியலைக் கேள்விக்குட்படுத்துங்கள்.

வன்னியிலும்,தமிழர் தேசமெங்கும் இனவழிப்பைக் கட்டவிழ்த்துவிட்ட இலங்கை அரசானது, அனைத்து அழிவுவாத அரசியலுக்கும்(வடபுலத்திலிருந்து முஸ்லீம்கள் துரத்தப்பட்டதற்கும்) காரணமானது.இந்த இலங்கையினது அதிகாரத் திமிரைத் தனக்கேற்ற வகையில் பயன்படுத்த விரும்பிய இந்தியப் பிராந்திய நலனும்-மேற்குலக-அமெரிக்க நலன்களும் இலங்கை வாழ் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமக்கேற்பப் பயன்படுத்தி வருகின்றன.இதன் உச்சக்கட்டமே,இப்போது நிர்மலா தலைமையில் திசை திருப்பும் அரசியலாக மேலெழுகிறது.

தமிழ்பேசும் மக்களுக்கெதிராக நிகழ்ந்த வன்னிப்படுகொலைக்குத் தார்மீக பொறுப்பேற்க வேண்டிய இலங்கை அரசு,தமிழ்பேசும் மக்களிடம் மன்னிப்பும்,அவர்களது உரிமைக்கு உத்தரவாதமும்-பலகோடி நஷ்ட ஈடும் செலுத்தித் தமிழ்பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வை க் கொடுக்குவேண்டிய நிலையில்-அப்படித் தள்ளப்பட்டவொரு நிலையில்-அதை மறைத்துக் கவனத்தையும்,அரசியல் நகர்வையும் திசை திருப்பிச் சிறுபான்மை இனங்களைத் தமக்குள் அடிபட வைக்கும் இந்தப் பெரும்பான்மை இன நலன்சார்ந்த வியூகத்தை அறியாத புள்ளியைத்தாம், தனிநபர்களது கையெழுத்துப்பற்றிய உரையாடலில் நகர்த்திக் கொண்டிருக்கிறீர்கள். இதைவிட்டு மேலே செல்லுங்கள் கற்றறிந்தோரே!

அவர் கையெழுத்திட்டாலென்ன அல்லது இவர் கையெழுத்திட்டாலென்ன அதனூடாக நகர்த்தப்படும் அரசியல் நலன்கள் என்ன,அவை எந்த வர்க்கத்துக்குச் சார்பானது என்பதிலிருந்து,இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைக் கவனப்படுத்திக்கொள்வதுதாம் அவசியமாகிறது.இந்தியாவாலும்,உலக தேசங்களாலும்,பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள் சிங்கள இனவாத அரசால் இனப்படுகொலைக்குட்பட்டார்கள்.அந்தப் படுகொலைக்கு எதிரானவொரு அரசியலையும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தையும் வழங்க முடியாதவொரு சூழலில்,பாதிக்கபர்பட்ட மக்களிடமே சென்று அவர்களால் இஸ்லாமியர்கள் துரத்தப்பட்டார்கள்-அழிக்கப்பட்டார்கள் என்று வகுப்பெடுத்து,அவர்களாலேதாம் முஸ்லீம்கள் அரசியல் விழிப்புணர்வடைய வைக்கவேண்டுமென்பதும்,பின் தமிழர்களும்,இஸ்லாமியர்களும் சேர்ந்து இலங்கை அரசிடம் தமதுரிமைக்காகப் போராடுவதென்பதும் திட்டமிட்ட சதி.

அரசு என்ற மிகப்பெரிய அடக்குமுறைக் கருவியானது இங்கு தப்ப வைக்கப்பட்டுச் சிறுபான்மை இனங்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இலங்கை அரச ஆதிக்கமானது தமிழ்ப் பிரதேசமெங்கும் நிலைப்படுத்தப்படும்போது,தமிழ்பேசும் மக்களுக்குள் நிகழ்வது அதிகாரமென்பதா?

பூப்காவை அண்மித்துச் சிந்திப்பவர்களுக்கு இஃது:

பூப்காவை மீளக்கொணர்ந்தால், அதிகாரம் என்ற ஒன்றை விசாலமாக்க முடியாது.அல்லது, கறாராக விளங்கப்படுத்த முடியாதது.அது,நிலவாதது.அதிகாரம் என்ற ஒன்றில்லை!மாறாக, வித்தியாசமான வியூகத்துள்-மூலோபாயத்துள் தொடந்தியங்கும் அதிகாரத்துவ நிலைதாம் உண்டு.ஆக,பூப்காவின் கருத்துப்படி: "பொதுமையான அதிகாரமென்பது கிடையாது.அதிகாரத்துவ முறைமையும் இல்லை! அரச ஆதிக்கம்-அதிகாரமோ அன்றி அதன்வழியாகவியங்கும் நிறுவனப்பட்ட அதிகாரத்துவ மையமோ இல்லை. இதற்கெதிராக, பன்மைத்துவத்துக்குட்பட்ட பலப்பரீட்சையின் எல்லைக்குள் இயங்கும் மக்கள் கூட்டம்,இயக்கங்களே நிலவ முடியும்.

மீளவும்,இதை இலகுவாகச் சொடுக்குவோமானால்:"நிறுவனப்பட்ட அதிகாரம் என்பது இல்லை.அதிகாரம் என்பது ஒரு கட்டமைவும் இல்லை.அல்லது ஒரு சர்வ வல்லமைக்குட்பட்ட சர்வ வல்லமையாளனும் இல்லை. அதிகாரம் என்பதன் பெயர்,ஒரு சமுதாயத்துள்குழப்பமுடைய வியூகங்களாகவும்-சூழல்கள் ஆகவுமே அது இயங்குகிறது. இதற்குள்,எந்த அதிகாரத்தை எவர் கொண்டிருக்கிறார்? இது பூப்காவை அண்மித்தியங்குபவர்கள் பதில் சொல்லவேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.01.2012

Sonntag, Januar 15, 2012

நாசார் என்ற "பெருமனிதனின்" பொங்கலுக்கான அறைகூவல்!

நாசார் என்ற "பெருமனிதனின்" பொங்கலுக்கான அறைகூவல்!

இந்தக் குரல் பரவலாகவேண்டும்.

நாசாரது குரல், பரவலான தென்மாநில மக்களது சமுதாய ஆவேசமாகும்.

குறிப்பாக,இந்திய மத்திய அரசின் தாரளவாதப் பொருளாதார இலக்கால்-அந்நியப் பெரு பகாசூரக்கம்பனிகளால் பழிவாங்கப்பட்ட விவசாயிகளின் குரல் இது.

இஃது, முழுமொத்த மக்களதும் உரிமைக்குரலாகிறது.

உணவு உயிர்வாழ்வுக்கு அடிப்படை.அந்தவுணவுக்கு உழவு-விவசாயம் அடிப்படை.அந்த விவசாயி-உழவன் தன் விளைச்சலுக்குக் காரணமான சூரியனுக்கும்,வானுக்கும் நன்றி செலுத்தும் இன்றைய நாளை, நான் பெரிதும் மதிப்பவன்.


அந்த நன்றி செலுத்தும் விழாவுக்கு நானும் சொந்தக்காரனுங்கூட.எனது தந்தை சிறு விவசாயி.அந்த விவசாயமே நமக்கு அடிப்படை.

தமிழகச் சினிமா இயக்குநர்-நடிகர் நாசாரது குரல் இன்றைய தமிழகச் சூழலில் மிகவும் பெரிதான விடையம்.

பாராமுகமாக இருக்கும் தமிழக நடுத்தரவர்க்கச் சூழலில், நாசார் மக்களோடும்,மண்ணோடும் ஒன்றித்திருந்து, தன்னை மண்ணிலிருந்து பிரிக்காதவொரு மகத்தான கலைஞனாகக் காட்டிக்கொண்டிருகிறார்.


தான்- மக்கள் கலைஞன்தான் எனச் சொல்லிக்கொள்ளும் தகமையை இதன்மூலம் நிரூபித்திருக்கிறார்.உலக மகாக் கலைஞன் சார்லிச் சாப்பிளினின் சமுதாய ஆவேசமானது, இரண்டாம் உலக யுத்தத்துக்கெதிராகவும் பாசிசக் கிட்லருக்கு எதிராகவும் மகத்தான எதிர்ப்புக்குரலாகச் "சர்வதிகாரி" எனும் படம் மக்களிடம் அழிவைப் பேசிப் பாசிசத்தை நகைப்புடைத்தது.இதைக் கவனப்படுத்தும்போது,நாசார் அவர்களது இந்தக் குரல் தமிழகத்தைச் சூழ்ந்துவரும் பார்ப்பனியக் காவி நிறப் பாசிசத்தையும்,அதன் விபரீதங்களையும் நாம் கவனத்துள் கொள்ளவேண்டியவொரு புள்ளியை மறுமுனையூடாகக் காவி வருகிறது.

அவரது இந்த உரையாடலானது தொடும் புள்ளி, மக்களை அக்கறை கொள்ள வைக்கும் அரசியலது முன்நிபந்தனை"பார்ப்பனியப் பாசிச ஆபத்தை உணருங்கள்"என்பதே!



இதுவேதாம்(நவலிபரல்ப் பார்ப்பனியம்) உழவையும்,உழைப்பையும் வேட்டையாடிப் பாசிசத்தைக் கட்டமைக்க அந்நியப் பெரு நிறுவனங்களுக்கு விவசாயிகளைக் காட்டிக்கொடுத்தும் போதாதெனப் பொங்கலுக்கு நரித்தனமாக ஆதரவாகவும்,வாழ்த்துவதெனும் போர்வையில் மக்களை வேட்டையாடுகிறது.

இந்த நவலிபிரல் பார்ப்பனியப் பாசிசமானது மேற்குலகின் ஐரோப்பிய மையவாதத்துக்குச் சார்ப்பான இந்திப் பார்ப்பனியச் சாதிகளையெல்லாம் அணிதிரட்டிக்கொண்ட பார்ப்பனியப் பெரு நிறுவனத்தின் மையத்தைப் புதிய பாணியில் தகவமைத்து, அதை நோக்கிய அரசியலை விதைக்கிறது.எனவே,இதற்கு எதிரான குரல்கள் இந்தவகை கேள்விகளுடாகவே விசும்பு நிலையடையமுடியும்.எனவே,நாசாரது குரல் முக்கியமானது.

இதைப் பரவலாக்குங்கள் நண்பர்களே(நண்பர்களுக்கு ஆண்பால்-பெண்பால் கிடையாது)!

இது,மண்ணின் குரல்-மகத்தான விவசாயத்தின் இருப்புக்கான உரிமைக்குரல்.அந்நிய தேசப் பெரும் கொம்பனிகளது ஈனத்தனமான செயலுக்கு-விவசாயத்தின்மீதான அவர்களது அப்பட்டமான இலாபவேட்கையின் கயமைக்கு எதிரானது.எனவே,எமது விடுதலை என்பது,இங்கிருந்துதாம் ஆரம்பமாகிறது.

இதைவிட்டுத் தமிழகத்தை ஆளும் பார்ப்பனிய ஜெயலலிதா தலைமையானது பார்ப்பனியத்தை மீளத் தகவமைக்க விரும்புகிறது.அதன் நிகழ்வுத் தன்மைக்கொப்ப அனைத்து உரிமைகளையும் மெல்ல வேட்டையாடும் பார்ப்பனியமானது இன்று துக்ளக் "சோ" இராமசாமி தலைமையில் துக்ளக்கின் 42 ஆண்டு விழாவைக்கொண்டாடுவதாகச் சொல்லி, அகில இந்தியா தழுவிய பார்ப்பனியச் சாதியின் ஒருமைப்பாட்டை வலியுறுத்திப் பரந்துபட்ட மக்களை அடக்கக் கைகோர்கிறது!

அது,மீளத் தன்னைத் தகவமைக்கிறது.மிக இருண்டவொரு காலத்தைத் தமிழகத்தில் செயற்படுத்தத் துக்ளக் சோவென்ற பார்ப்பான் விரும்புகிறான்.

இது ஒரு தனிப்பட்ட பார்ப்பானின் விருப்பு அல்ல.

இந்தவிருப்பினது துரும்பே சோ.

இந்த விருப்பமானது வளர்ந்து, பெரு நச்சு விருட்சமாக நிற்கும் பார்ப்பனிய நிறுவனத்தின் இருப்புக்கான வியூகத்திலிருந்து எழுவது.இந்தப் பார்ப்பனியமே இந்திய ஆளும் வர்க்கத்தின் விசுவாசமான கருத்தியல் கட்டுமானமாகும்!.இது, வன்முறை சார்ந்தும்,சாரமலும் கருத்தியற் பயங்கரவாதத்தைப் பார்ப்பனிய மதமான இந்து மதத்துக்கூடாக மக்கள்மீது அதிகாரமாகக் கட்டித் தகமைத்துள்ளது.இரண்டாயிரம் ஆண்டாக நம்மீது நிகழ்தப்படும் அடிமைத்தனம்இது.


இதை முறியடிக்கவேண்டிய அவசியத்தை சோவினது சொற்பொழிவே எமக்கு உணர்த்துகிறது:

"தமிழகத்தை,குஜராத்தைப்போலவும் அதை ஆளும் ஜெயலலிதாவை மோடியைப்போன்று அல்லது அவரைவிடவும் மேலாக உயர்த்தவேண்டும்" என்கிறார், துக்ளக் 42 வது ஆண்டு நிறைவு விழாவில்!

அதாவது,குஜராத்தில் இந்துமத வெறியைக் கிளறி 3000 இஸ்லாமிய மக்களை வேட்டையாடியதுபோன்று, தமிழக்கத்தில் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுப் பார்ப்பனியத்தை நிலைப்படுத்த விரும்புகிறது பார்ப்பனியக் கும்பல்.இந்த பெரு அபாயத்தை நாம் எல்லோரும் உணர்ந்தேக ஆகவேண்டும்.

கோடம்பாக்கச் சினிமாத்துறையுள் ரஜனிகாந் போன்ற தமிழகத்தின் எதிரிகள்,நேரடியாகவே பார்ப்பனியத்தோடு சமரசமாகித் தமது சொத்துக்களையும்,சுகத்தையும் காக்கும்போது,நாசார் என்ற தமிழன் இந்த மண்ணின் மகத்துவத்துக்காகக் கரிசனைப்படச்சொல்லிக் குரல் கொடுக்கின்றான்.அவனது குரலை நாம் அனைவரும் நியாயத்தின் குரலாக எடுத்துக்கொண்டு,அதையொட்டிச் சிந்தித்தே ஆகவேண்டும்.

தமிழகத்தை ஒட்ட மொட்டையடிக்கும் பார்ப்பனியக்கூட்டானது அந்நியப் பகாசூரக்கம்பனிகளோடு கூட்டுவைத்தத் தமிழக வளங்களைக் கொள்ளையிட்டதும் அல்லாமல் முழுமொத்தத் தமிழகத்தின் குடிகளையே கொடிய வன்முறை-சாதியவொடுக்குமுறைகளால் வேட்டையாட முனைகிறது.இதன் கட்டியமே துக்ளக்கின் 42 ஆண்டு நிறைவு விழாவும்,அதன் நிகழ்வுக்குத் தமிழ்நாட்டுக்குப் படையெடுக்கும் பாசிச இந்து அத்வானி-மோடிக் கும்பலும் அதன் பண்டாரப் பாசிசக் கூட்டுக்களும்.

ஆர்.எஸ்.எஸ்.போன்ற நாசியக் கட்டமைவு-கருத்தமைவுக் கட்சிகளையே பார்ப்பனியம் உருவாக்கிவைத்துத் தமிழகத்தை வேட்டையாடும் தலைமையை ஜெயலலிதாவுக்கு வழங்கியிருக்கும்போது, அதையே முழுமொத்த இந்தியாவுக்குமாக உருவாக்குவதில் தமிழ்நாட்டுப் பர்ப்பான் சோவுக்கு அவசியமாக இருக்கிறது.

ஜெயலலிதாவின் தலைமையில் இந்தயா பூராவுக்கும் உள்துறை மந்திரியாகத் தான் இருந்து, மீள வர்ணாச்சிரம அடிமைத்தனத்தை நிலைப்படுத்துவதில் கவனம் உருவாகியுள்ளது.மக்களே!,இது ஆபத்தானவொரு காலத்தை உங்களுக்கு உணர்த்துகிறது. பிளவுபட்ட இந்திய ஆளும் வர்க்கத்தின் முரண்பாட்டைப் பார்ப்பனியமானது தீர்த்து வைக்கும்பொருட்டு எடுக்கும் நிலைகள் யாவும் பாசிசத்தை நோக்கி நகர்வதாகும்.இந்தியாபோன்ற சாதிய அடிமைச்சமுதாயங்களில் இந்தப் பாசிசத்தின் உச்சக்கட்டமானது சாதியப் போராட்டங்களாகவும்,மதவாதப் போராட்டங்களாகவும் எழுந்து மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கிறது. ஜெயலலிதா தலைமையில் இது மீளவும் தலையெடுக்கிறது. இதையொட்டித் தமிழகம் என்ன செய்யப் போகிறது?

இதிலிருந்து மீள்வதாயின் குறைந்தபட்சமாவது பார்ப்பனிய சூட்சியைப் புரிந்தாகவேண்டும்.அதை,பெரியாரது வரலாற்றிலிருந்து புரிந்துகொண்ட தமிழக மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதை உரைத்துப் பார்க்கவாவது நாசாரது அடிப்படையான கோரிக்கை வழி செய்யட்டும்.

நாம்,நாசாரது அறிவிப்பை,பிரேரணையை,குறைந்தபட்ச அறைகூவலைப் புரிந்துகொள்வோம்,அத்தகைய புரிந்துகொள்வதனூடாகப் பலகோடி நாசார்கள் தமிழகமெங்கும் உதிக்கட்டும்!


அவர்களால்,தமிழகத்தின் தலைவிதி மாற்றி எழுதப்படட்டும்!இல்லைத் தமிழகத்தைப் பார்ப்பனியப் பாசிஸ்டுக்கள் குருதியாற்றில் மிதக்க விடட்டும்!எல்லாம் தமிழக்கத்து இளைஞர்களது கைகளிலேயே உண்டு!

வாழ்க,உரிமைக்கான குரல்கள்,வளர்க உரிமைப்போராட்டம்!-இதுவே,பொங்கலுக்கான எனது அறைகூவலும்-வாழ்த்து நோக்கிய ஒலிப்பும்!!

ப.வி.ஸ்ரீரங்கன்.
ஜேர்மனி
15.01.2012

Mittwoch, Januar 11, 2012

பி.பி.சி.யில் நிர்மலா அக்காவினது குரலும்,அந்த 71 ஆட்டுக்குட்டிகளும்!

உரைத்துப் பார்த்தலுக்கான சில கருத்துக்கள்.

ண்டுதொட்டு தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.சிங்கள இனவாத அரசினது ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் இலங்கைச் சிறுபான்மை மக்களது உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.

இந்த ஈனத்தனத்தை எல்லாக் காரியவாதத் தமிழர்களும்திறம்படச் செய்துமுடிக்கிறார்கள்.

நிர்மலா தலைமையில்,71 புத்தி சீவிகள் என்பவர்கள் குறியீடாகிய தருணம் என்ன?

அவர்களுக்குப் பின்னே கட்டியமைக்கப்பட முனையும் கோரிக்கைகளது அரசியல் என்ன?

அந்த அரசியலின் வழி நலமடையமுனையும் வர்க்கம் எது?

இவை கேள்விகள்.

பதில்களுக்கு இன்னுஞ் சிலகாலம் பொறுத்திருந்தே தீரவேண்டும்.எனினும்,சில குறிப்புகளை இங்ஙனமும் பார்த்தே ஆகவேண்டும்.இவர்களது விபரீத அரசியலை பரவலாக அறிக்கைகள் மூலம் புலத்தில் பிளவுண்ட இடதுசாரி முகாங்கள் அறிவித்திருக் கின்றன.இந்த விபரீத அரசியலைப் பற்றிய புரிதலுக்கான நிபந்தனைகள்,இலங்கையினது இனவாத அரசியலுக்குள் தொடர்ந்து வியூகமிடும் அந்நியப் பிராந்திய நலன்களைக் குறித்துப் புரிந்துகொள்வதைக் கோருவதேயாகும்.அந்தக் கோரிக்கையானது பிராந்திய நலனுள் பின்னப்பட்ட தமிழ்பேசும் மக்களதும்,ஏனைய இலங்கைச் சிறுபான்மை மக்களதும் அரசியல் தலைவிதியைக் குறித்துப் பேசுவதற்கானவொரு வெளியைத் தேடிக்கொள்வதன் பொருட்டு மேலும் சில குறிப்புகளைக் குறித்துக்கொள்வதென்று...

"...இரவு மட்டுமல்ல
இந்த மண்ணின் இருப்பும்
அச்சத்தைத் தருகிறது

கிழட்டுப் பலாமரத்தில்
பச்சோந்தியொன்று.
வண்ணத்துப் பூச்சிகள்
சிறகடிக்கின்றன..." -செழியன்.

முள்ளிவாய்க்கால்வரை இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம் இன்று!

80 களில் ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும், இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள்.

முள்ளி வாய்க்காலில் பல பத்தாயிரம் மக்கள் புலிகளோடு சேர்த்துக்கொல்லப்பட்டார்கள்.அப்போது,கொல்லப்படும் மக்களைப் புலிகளைக் காப்பதற்காக தேசியவாதிகள் எவருமே கண்டுகொள்ளவில்லை!இந்தக் கண்டுகொள்ளாத சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாக்கிய இலங்கை அரசு,மக்களைக்கொன்று குவித்து அவர்களுக்குள் மறைந்திருந்த புலிகளைப் பூண்டோடு வேட்டையாடியது.

இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு புத்திசீவிக்குழுக்கள் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் சமர்பிக்கும் 71 பேர்கள் அடங்கிய கையெழுத்து அறிக்கை என்பதும்- ஆலோசனைகள் என்பதும், அதுசார்ந்த நிர்வாக அலுகுகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம்.


புலியை அழித்து முடித்துவிட்ட-இப்போதைய-நிலைமைகளில், இலங்கை இராணுவம் பரவலாகத் தமிழ்ப் பிரதேசமெங்கும் தனது முகாங்களை நிறுவிப் பலாத்தகாரமான இராணுவ அதிகாரத்தை நிறுவித் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்து வாழ்வு முன்னெடுப்பையும் தீர்மானிக்கும்போது, இந்திய ரோவினது ஆலோசனைக்கொப்பப் புலிகளால்துரத்தப்பட்ட இஸ்லாமிய மக்களை வைத்து எழுதப்படும் கோரிக்கைகள் இலங்கை அரசிடமே விடப்படவேண்டிய நிலையில் நாடு இருக்கும்போது,அதைத் தமிழ் தரப்பை நோக்கி எறிவதென்பதும் சாணாக்கியத்தனமானதுதாம்.

இப்போதும் நாம் சொல்வது, தமிழ் பேசும் மக்களின் முதற்தரமான எதிரிகள் இலங்கை அரசும்,அந்த அரசைத் தூக்கி நிறுத்துவதற்காவும்,சிங்கள அரசுக்கெதிரான- இனவொடுக்குமுறைக் கெதிரான தமிழ்பேசும் மக்களின்போராட்டத்தையே சிதைத்துச் சின்னாபின்னமாக்கிய இந்திய அரசுமே தமிழ்பேசும் மக்களின் அதிமுதல் எதிரிகள்.


யுத்தம் செய்தும்-இராணுவ ஆட்சியைக் கட்டமைக்கும் எந்தவொரு சமுதாயமும் தனது வலுவுக்குள் எந்தவொரு கட்டமைப்பையும் கொண்டிருப்பதில்லை . இது அரசியல் விஞ்ஞானத்தில் மிகத் தெளிவாக நாம் உணரத்தக்கது.இந்தச் சூழலில் இலங்கைபோன்ற மிகவும் பின் தங்கிய-எந்தச் சமூகவுற்பத்தியையும் தனது சொந்த முயற்சியால் முன்னெடுக்காதவொரு நாட்டில் "எந்தச் சுயாண்மையும்" நிலவ முடியாது.


இதுதாம் இன்றைய இலங்கையில் நிலவுகின்ற அரசியற்சூழல்.

இந்தச் சூழலைத் தகவமைக்கும் புறதேசங்களது அரசியல் ஆர்வங்களானது, இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையைத் தொடர்ந்து நீறுபூத்த நெருப்பாகவே வைத்திருக்க விரும்புகின்றன.இதன் உச்சக்கட்டமாகவே,இப்போது இனங்களுக்கிடையில் பிளவுவாதத்தையும்-வரலாற்றுப்பழியையும் மீளவுருப்போட்டு நகர்த்தப்படும் அரசியலாக இந்த 71 நபர்களது பெயரோடு உலாவரும் கோரிக்க்குப்பின் நிலவும் அரசியல்"யாழ்பாணியம்-தேசியம்,தமிழர்கள்" என்று குறியீடுகளுக்குள் உந்தித்தள்ளப்பட்டு,அங்கே பிரதேச வாதம் மூப்படைய வைக்கப்படுகிறது.

இந்தத் தகவமைப்புக்கு உந்துதலாக இருப்பதும் இந்திய அரசியல் ஆர்வமென்பதுதாம் உண்மையாகும்.

இலங்கையென்பது இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட நிலப் பிரதேசம் என்பதும்,இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சமூகவுறுகளின் இறமைக்கு அதி முக்கிய பாத்திரம்பெறும் வலையமென்பதும் உண்மையாக இருப்பதால்,பண்டுதொட்டு இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் முடிவுகள்,விருப்பங்கள்,ஆர்வங்கள்,ஆதிக்கங்கள் சங்கிலித் தொடராகப் பின்னப்பட்டு வருகிறது.


இந்த இந்தியாவென்ற ஒரு தேச அரசியல் கட்டுமானமானது பிராந்திய ஆதிக்கத்தின் வெளிப்பாட்டோடு முன் நிறுத்தப்படும் பாரிய யுத்த ஜந்திரத்தோடு"உலகின் பாரிய ஜனநாயக நாடு"என்று பிரகடனம் பெறுகிறது.இந்த நாட்டைப்பற்றிய அரை குறைப் புரிதலின் வெளிப்பாடே முள்ளி வாய்க்காலுக்குப்பின் பலரிடம் அரசியல் கருத்தாக வருகிறது.

இந்தியாவைப் பகைக்காமல்தமிழ் மக்கள் அரசியலை முன்னெடுக்கவேண்டும்.இந்தியாவின் உதவியோடு பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டுமென்பதும் ஒரு திசைவழியில் 71 பேர்கள் அடக்கமுறும் கோரிக்கையென்பதும் ஏதோவொரு சிலரின் விருப்புக்குட்பட்ட பார்வைகள் அல்ல.


அவை,பிராந்திய நலன்களது நீண்டகால நோக்கின் ஒரு பகுதி வியூகமாகும்.

உதாரணமாக: புலிகளால் இதுவரை நடாத்தப்பட்ட இந்தப் போராட்டம்,அதாவது, ஈழத்துக்கான போராட்டம் என்பது சாரம்சத்தில் காலவதியாகிவிட்டது.இதைக் காலவதியாக்கிய ஜனநாயகத்துக்கான-இயல்பு வாழ்வுக்கான கோரிக்கைகள், புலிகளின் உள்ளார்ந்த அராஜகத்தின்-பாசிச அடக்கு முறைகளிலிருந்து மக்களின் குரல்களாகவும்,உரிமையாகவும் இனம்காணத்தக்கவொரு அரசியற் கோரிக்கையின் அதிமுக்கிய வெளிப்பாடாக முகிழ்த்தபோது,மக்களின் உரிமைகளை அழித்தொதுக்கும் சிங்களப் பாசிச இனவொடுக்குமுறையரசே தன்னை மக்களின்-தமிழ் பேசும் மக்களின் நண்பனாகக் காட்டிக்கொள்ளும் கபடம் நிறைந்த அரசியல் நகர்வுக்கு இஃது பாத்திரமாகியது.இந்தச் சூழலை மிக நுணுக்கமாக இனம்கண்ட இந்தியப் பிராந்திய நலனானது தன்னைத்தொடர்ந்து நாம் பின்தொடரும் காரியத்தில் கனாக் காணும் அரசியலது தொடரே இப்போது தமிழ்பேசும் மக்களக்குள் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு"விடிவு"குறித்து வகுப்பெடுக்கிறது.இது,ஏமாற்றப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தின் அரசியலது அடுத்த கட்டத்தைக் குழப்பிக்கொள்வதையும்-குட்டையைக் குழப்பி பிடிக்க முனையும் மீனையும் இனங்கண்டாக வேண்டும்.

இலங்கையின் அரசமைப்பில், இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்கள் தம்மை மிக மிகத் தந்திரமாகத் தக்க வைத்துக்கொண்ட வரலாறு மிகவும் கொடியது.இது கடந்த காலத்தில் சிங்கள-தமிழ்-முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் தரப்பில் சுமார் 300.000.அப்பாவி மக்களையும் கொன்று தள்ளியுள்ளது.


இன்றுவரையும், இழுபட்டுப்போகும் இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்களின் அத்துமீறிய கொடிய இராணுவ ஒடுக்குமுறையால் மனிதவுரிமைகள் துளியளவும் இல்லாது போய்விட்டது. இந்த இலட்சணத்தில் தமிழ் பேசும் மக்களினதும்-முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் எதிர்காலமானது வெறும் இருண்ட வெளிக்குள் நகர்கிறதென்பதைத் தட்டிக்கழித்து விட்டு, இந்த 71 நபர்கள் செய்யும் மோடி வித்தையானது பெருத்த சந்தேகத்துக்குரியது.இதற்குப் பின் நகர்த்தப்படும் அரசியலது வீரியம் என்னவென்பது குறித்து நீண்ட ஆய்வுகள் தேவையாகிறது.

இலங்கையரசானது ஸ்த்தூலமான ஒடுக்குமுறையரசாகும்.இது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனநாயகபூர்வமான அரசுகிடையாது.

இதுகாறும் தமிழர்களின் பிரதான எதிரியான சிங்களப் பேரினவாதமானது இனியும் பிரதான எதிரியாக இனம் காணப்படவேண்டிய சூழலில், தமிழ்ச் சமுதாயம் தள்ளப்பட்டுள்ள நிலையில் இத்தகைய சதிகாரக் கும்பல் தமது அற்ப பதவி-பண ஆசைக்காக முழுமொத்த தமிழ் மக்களுக்கும் ஈனஞ் செய்வது மிகவும் வருந்தத் தக்கது.புலிகள் வேறு,தமிழ்பேசும் மக்கள் வேறென்று அன்று கூறியவர்கள்-ஏன் தமிழ்பேசும் மக்களை இலங்கை-இந்திய அரசிடம் காட்டிக்கொடுக்கிறார்கள்?

எப்படித் தமிழ் பேசும் மக்களினது வாழ்வில் காலாகாலமாகத் தீங்கிழைக்கும் சிங்கள இனவாத ஆளும் வர்க்கத்தை, முழுமொத்த இலங்கை மக்களது நண்பர்களாக்கித் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்?


இந்தியாவினதும்,இலங்கையினதும் ஆளும் வர்க்கங்களது அழிவு அரசியலுக்கு முகவர்களாக மாறிய இந்த 71 நபர்களும்,அரசியல் சாக்கடைகள்-மக்கள் விரோதிகள்! மீதமுள்ள அப்பாவி மக்களின் சொத்தை சட்டப்படி கொள்ளையிடவும் தமது ஏவல்-கூலிப்படைச் சேவைக்காக நிர்வாகப் பலத்தைத் தேடுவது முஸ்லீம்மக்களின் உரிமையல்லவே.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
11.01.2012



The report signed by 71 Tamil elite intellectuals:

An appeal to the Tamil Community and its civil and political representatives.


Since the end of the war in May 2009, it has become important for all ethnic communities of Sri Lanka to re-examine and reevaluate their past. It is through this process of self-reflection that some of the major issues that confront state and civil society today can be meaningfully reconceived and reconfigured for the future.

While the war has drawn to a decisive close, the ethnic conflict is far from over and demands solutions short- and long-term. The quest for a viable political solution from a majoritarian state is a primary concern for the Tamil community today. Continued insecurity in the face of militarisation is an urgent matter. Armed militancy and a political culture of violence have further eroded into the democratic fabric of society. Resettlement and rehabilitation remain unresolved problems. Distribution of land, access to state and social networks, language parity, devolution of power, inter-ethnic reconciliation and the continued presence of gender, class and caste stratifications are a part of the political landscape today.

It is in this regard we raise the question of the eviction of the Northern Muslims 21 years ago. In October 1990, the LTTE evicted roughly 80,000 Muslims from the north in the wake of increasing hostilities and armed conflict in the north and east. The LTTE, which was militarily dominant in the north at that time and controlled large swathes of territory, ordered an entire community to leave the province in two days. In the Jaffna peninsula they were given just two hours’ notice. Subsequent to the eviction, several attempts were made by institutional mechanisms to facilitate the return of the communities to their original lands. During the Ceasefire Agreement (CFA), there were renewed attempts, particularly through the Secretariat for Immediate Humanitarian and Rehabilitation Needs (SIHRN), to negotiate the return of the Muslims with the Sri Lankan state and the LTTE.

In the current political landscape, the eviction of Muslims from the north and their return and resettlement pose a distinct political challenge to civil and political societies of the Tamil community. While from the time of the CFA, Muslims had been trickling back to their homelands in the north, the conditions for their return had not been congenial. Those who have returned have received hardly any state support for resettlement, and have been met with a certain level of bureaucratic hostility. The erasure of Muslim culture and institutions in the north in the last twenty years has made return less acceptable to the host community, and especially fraught for the returnees.

While recognising that the Tamil community has been under intense stress during and after the war, it is important to remember the plight of the forcibly evicted Muslim community in the north who were subjected to similar privations. The Tamil community’s sufferings and hardship cannot become reasons to sideline the issue of Muslim eviction. As much as we struggle for our survival in the face of external and internal pressures, it is paramount that we re-examine the politics of our own actions, assertions and silences.

The eviction represents one of the worst instances of the narrow, exclusivist thrust of the Tamil nationalist political campaign of the past thirty years. The failure of our civil and political leadership to understand and acknowledge this has prevented us from dealing with our own past, and with our own moral and political responsibility towards minority communities that live amidst us. An examination of how we have contributed to the polarisation of relations between our two communities has not been forthcoming even after the end of the thirty-year war. We must realise at least now that there is no exclusive political solution for the Tamil community, and that the question of political power sharing and equal rights confronts all minority communities. Inter-ethnic reconciliation and dialogue between communities, in particular the Muslim and Tamil communities, are essential processes to arrive at a sustainable political solution. The document The Quest for Redemption: the Story of the Northern Muslims, prepared by the Citizens’ Commission on the expulsion of Muslims by the LTTE recently made a most damning pronouncement about the silence of the Tamil community on the eviction. We need to break through this silence if we are to move toward a genuine process of reconciliation.

Today, as we are compelled to forge new paths of activism for our own survival, we need to formulate responses that are borne out of dialogue with different communities. This is essential if we are seeking a just and democratic political solution. As a step toward this, there has to be a public disavowal of the eviction. We shall wholeheartedly say that never again will such a heinous act as the eviction take place amidst us. Never again shall we condone such acts of ethnic cleansing. Importantly, it is necessary for us as a community, while revisiting this event and its continuing legacy, to set up an inter-ethnic mechanism to bring about dialogue and facilitate an easy return and resettlement process of the Muslims in the north.

Tamil society can no longer be isolationist and act on its own without paying heed to the concerns of other communities. We shall engage in questions of marginalisation, discrimination and injustice touching upon any community. And we shall unreservedly pledge our support to promote the pluralist character of society at all levels in our midst, and embrace a politics of inclusivity in the interests of democracy, justice and equality.

Signatories:

1. Mr. P. Ahilan
2. Dr. Darshan Ambalavanar
3. Ms. Jovita Arulanantham
4. Ms. Kundhavi Balachandran
5. Mr. Sivakolunthu Buvanakumar
6. Dr.GodwinConstantine
7. Dr.KumarDavid
8. Mr. R. Devarajan
9. Ms. Cayathri Divakalala
10. Dr. S. Ganesan
11. Mr. Shaseevan Ganeshananthan
12. Mr. P.B. Gowthaman
13. Dr. Rajan Hoole
14. Ms. Sithiravel Ithaiyarani
15. Mr. T. Antony Jeganathan
16. Ms. Vasuki Jayasankar
17. Dr. T. Jayasingam
18. Mr. D.B.S.Jeyaraj
19. Mr. Theliwattai Joseph
20. Mr. Ahilan Kadirgamar
21. Mr. Silan Kadirgamar
22. Ms. Niyanthini Kadirgamar
23. Ms. Sarvam Kailasapathy
24. Ms. Dushiyanthini Kanagasabapathipillai
25. Dr. S.V. Kasynathan
26. Mr. Thirukovil Kaviyuvan
27. Mr. Sathy Kulasingam
28. Mr. Prithiviraj Kulasingham
29. Prof. Vijaya Kumar
30. Ms. Maha Luxmy Kurushanthan
31. Mr. K.C. Logeswaran
32. Mr. S. Manisegaran
33. Mr. Chandrasekaran Manimaran
34. Mr. P. Muthulingam
35. Mr. V. Nandakumar
36. Ms. Malini Paramaguru
37. Ms. Nirmala Rajasingam
38. Ms. Vasuki Rajasingam
39. Mr. Sanjayan Rajasingham
40. Mr. C. Rajeshkumar
41. Ms. A. Renu
42. Ms. Kumudini Samuel
43. Ms. Rani Samuel
44. Dr. Paikiasothy Saravanamuttu
45. Dr. Muthukrishna Sarvananthan
46. Ms. Ambika Satkunanathan
47. Mr. Shyam Selvadurai
48. Rev. Jothini Seenithamby
49. Dr. T. Shanaathanan
50. Ms. M. Mangaleswary Shanker
51. Ms. C. Shanthini
52. Mr. Shobashakthi
53. Mr. P.N. Singham
54. Ms. Vasuki Sivakumar
55. Mr. K.S. Sivakumaran
56. Dr. Sumathy Sivamohan
57. Mr. Subramaniam Sivathasan
58. Mr. Balasingam Skanthakumar
59. Mr. M. Sooriyasekaram
60. Dr. K. Sritharan
61. Rev. M. Jude Sutharshan
62. Mr.H.D. Thampoe
63. Ms. Priya Thangarajah
64. Mr. Kandiah Thanikasalam
65. Mr.R. Thevamaran
66. Prof. S.Thillainathan
67. Dr.Sharika Thiranagama
68. Mr.M.Thiruvarangan
69. Mr.UmaVaratharajan
70. Mr.GodfreyYogarajah
71. Mr.RonnieYogarajah


71 “புத்திசீவிகள்” கையெழுத்திட்ட அறிக்கை:

தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்


2009ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவுற்ற பின்னணியில், இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனக் குழுக்களும் தமது கடந்த காலத்தை மீள்பார்வை செய்வதும், மீள்மதிப்பீடு செய்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விடயங்களாக விளங்குகின்றன. எமது கடந்த கால செயற்பாடுகளின் மீதான ஒரு விமர்சன ரீதியான சுய பார்வையின் மூலமாகவே அரசின் முன்னும் சிவில் சமூகத்தின் முன்னும் இன்று தீர்வை வேண்டி நிற்கும் பிரதானமான விடயங்கள் பற்றி எதிர்காலத்தில் கருத்தாழம் மிக்க வழிமுறைகளில் நாம் சிந்திக்க முடியும்.
யுத்தம் தீர்க்கமாகமுடிவுற்ற போதிலும், இனப்பிரச்சினைக்கான முடிவு இன்னமும் தென்படவில்லை. இனப்பிரச்சினையானது குறுகிய மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை வேண்டி நிற்கிறது. பெரும்பான்மைவாத அரசிடமிருந்து ஒரு நீடித்திருக்கக் கூடிய தீர்வைப் பெறுவதற்கான தேடுகையில் தமிழ்ச் சமூகம் இன்று பிரதானமாகக் கரிசனை கொண்டுள்ளது. இராணுவ மயமாக்கத்தினாற் தொடரும் பாதுகாப்பற்ற நிலைமை ஓர் உடனடிக் கவனமாக அமைந்துள்ளது. ஆயுதப் போராட்டமும், வன்முறை நிறைந்த அரசியற் கலாசாரமும் சமூகத்தின் ஜனநாயகக் கட்டமைப்புக்களை மேலும் சிதைவுக்குட்படுத்தியுள்ளன. மீள்குடியமர்வு, மீள்நிர்மாணம் போன்ற விடயங்கள் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. காணிப் பகிர்வு, அரச மற்றும் சமூக வலையமைப்புக்களினைத் தொடர்புகொள்ளுதல், மொழி சமத்துவம், அதிகாரப் பகிர்வு, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், பால், வர்க்க, மற்றும் சாதி அடிப்படையிலான அடுக்கமைவுகளின் தொடரும் இருப்பு போன்றன இன்றைய அரசியல் நிலவுருவின் பகுதிகளாக விளங்குகின்றன.
இந்த வகையில் 21 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தொடர்பான விடயத்தை நாம் இங்கு எழுப்புகின்றோம். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் யுத்த நடவடிக்கைகளும், ஆயுதப் போராட்டமும் வலுப்பெற்று வந்த சூழலில், தமிழீழ விடுதலைப் புலிகள் ஏறத்தாழ் 80, 000 முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றினார்கள். அன்றைய காலத்தில் ஆயுத ரீதியாகப் பலம் மிக்க அமைப்பாக, வட பகுதியின் பெருமளவிலான நிலப்பரப்பை தன்வசம் வைத்திருந்த விடுதலைப் புலிகள் ஒரு சமூகம் முழுவதையுமே இரண்டு தினங்களுக்குள் வட மாகாணத்தில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் அவர்களுக்கு 2 மணி நேர அவகாசம் மாத்திரமே வழங்கப்பட்டது. இந்த வெளியேற்றத்தின் பின்பு, வெளியேற்றப்பட்ட சமூகங்கள் தமது சொந்த நிலங்களுக்கு மீளவும் திரும்பிச் செல்வதற்கு உதவும் வகையில் பல்வேறு அமைப்புக்களாலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. போர் நிறுத்த உடன்படிக்கைக் காலப்பகுதியில், உடனடி மனிதாபிமான மற்றும் மீள்கட்டுமாணத் தேவைகளுக்கான செயலகம், இலங்கை அரசுடனும், விடுதலைப் புலிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்துவதன் ஊடாக, முஸ்லிம் மக்களின் மீள்திரும்புதலுக்கு வழிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டது.
இன்றைய அரசியல் சூழலில், வட புலத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையும், அவர்களின் மீள்திரும்புகையும், மீள்குடியமர்வும் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சிவில் சமூகங்களின் மீதான தெளிவான ஒரு சவாலாக உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த காலப்பகுதியில் இருந்து முஸ்லிம் மக்கள் வடக்கில் உள்ள தமது தாயகங்களுக்கு படிப்படியாகத் திரும்பத்தொடங்கியிருந்த போதிலும், அவர்கள் மீளத்திரும்புவதற்கு உகந்த சூழல் அமைந்திருந்திருக்கவில்லை. மீளத்திரும்பியவர்கள் அரசிடமிருந்து குறைந்தபட்ச உதவிகளைக்கூடப் பெறமுடியவில்லை. மேலும் அவர்கள் நிருவாக மையங்களின் விரோதப் போக்குகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் பண்பாடு மற்றும் நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாமற் போனமை அவர்களின் மீள்வருகையினை வட பகுதியில் உள்ள சமூகங்கள் குறைந்த அளவிலேயே ஏற்றுக்கொள்கின்ற தன்மையினை ஏற்படுத்தியிருப்பதுடன், திரும்பி வரும் மக்களுக்கு இடராகவும் அமைகின்றது.
போரின் போதும், போரின் பின்னரும் தமிழ் சமூகம் மிகுந்த உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றது என்பதனை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அதே போன்ற இடர்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட வட பகுதியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் நிலையினை நாம் நினைவில் நிறுத்துவது அவசியமானது. தமிழ் சமூகம் அனுபவித்த வேதனைகளையும், இன்னல்களையும் காரணங்காட்டி முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட விடயத்தை ஓரங்கட்ட முடியாது. வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் பிரயோகிக்கப்படுகின்ற அழுத்தங்களின் முன் எமது இருப்புக்காக எந்த அளவுக்கு நாம் போராடுகிறோமோ அதே அளவுக்கு நாம் எமது செயல்களின், எமது உறுதிக்கூற்றுக்களின், எமது மௌனங்களின் அரசியலினை மீளாய்வுக்குட்படுத்துவது அவசியமாகும்.

முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை கடந்த முப்பதாண்டு காலத் தமிழ்த்தேசிய அரசியற் பிரசாரத்தின் குறுகிய நோக்குடைய, பிற சமூகங்களினை ஒதுக்கித்தள்ளும் பாங்குடைய உந்துகையின் மிகவும் மோசமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். எங்களுடைய சிவில் மற்றும் அரசியற் தலைமைகள் இதனை விளங்கிக் கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ தவறியமை, கடந்த காலத்தினையும், எம்மத்தியில் வாழும் சிறுபான்மையினர் தொடர்பாக எமக்கு உள்ள தார்மீக மற்றும் அரசியற் பொறுப்புக்களையும் நாம் நியாயபூர்வமான முறையில் அணுகுவதிலிருந்து எம்மை தடுத்துவிட்டது. தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இடையிலான உறவுகள் துருவப்பட்டுப்போவதற்கு நாம் எவ்வாறு காரணங்களாக இருந்திருக்கிறோம் என்பது பற்றிய ஒரு சுயவிசாரணை முப்பது ஆண்டு காலப் போரின் முடிவின் பின்னரும் கூடஎம்மத்தியில் உருவாகவில்லை. அரசியல் அதிகாரப் பகிர்வு, சமவுரிமை என்பன அனைத்து சிறுபான்மை சமூகங்களுக்கும் உரித்தான விடயங்கள் என்பதனையும், தமிழ் சமூகத்துக்கு மாத்திரமே உரித்தான ஏனையோரைக் கருத்திற் கொள்ளாத ஒரு அரசியற் தீர்வு இல்லை என்பதனையும் நாம் இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

நீடித்திருக்கக்கூடிய ஓர் அரசியற் தீர்வினை அடைவதற்கு இனங்களுக்கு இடையில்– குறிப்பாக தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே– நல்லிணக்கமும், உரையாடலும் அவசியமான செயற்பாடுகளாகும். விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீதான பிரசைகளின் குழுவினால் தயாரிக்கப்பட்ட “மீட்சிக்கான தேடுகை: வடக்கு முஸ்லிம்களின் கதை” என்ற ஆவணம், முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப் பட்டமை தொடர்பாக தமிழ் சமூகத்தின் மௌனம் பற்றி கண்டனம் மிக்க வெளிப்படுத்தல் ஒன்றை அண்மையில் மேற்கொண்டுள்ளது. நல்லிணக்கம் பற்றிய ஓர் உண்மையான செயற்பாட்டினை நோக்கி நாம் நகர வேண்டுமாயின் நாம் இந்த மௌனத்தைக் கலைக்க வேண்டும்.

எங்களது இருப்புக்காக நாம் புதிய செயற்பாட்டியற் பாதைகளை உருவாக்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இன்றைய காலப்பகுதியில், ஏனைய சமூகங்களுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல்களிலிருந்து உதயமாகும் பதில்களை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். நாம் நீதியானதும், ஜனநாயக பூர்வமானதுமான ஒரு அரசியற் தீர்வைத் தேடுகையில் இது மிகவும் பிரதானமானது. இதற்கான ஒரு படியாக முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக பகிரங்கமான எதிர்ப்பு வெளியிடப்படல் வேண்டும். இந்தப் பலவந்தவெளியேற்றம் போன்ற ஒரு வெறுக்கத்தக்க செயல் எம்மத்தியில் இனிவருங் காலங்களில் ஒரு போதும் நிகழமாட்டாது என நாம் முழுமனதுடன் கூறவேண்டும். இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை நாம் ஒரு போதும் குற்றம் எனக்கருதாது இருக்கமாட்டோம் எனக் கூறவேண்டும். இந்த சம்பவத்தையும், அதன் தொடர்ச்சியையும் மீள்நோக்க வேண்டிய அதேவேளை, உரையாடல்களை ஏற்படுத்தவும், வடக்கில் முஸ்லிம் மக்களின் இலகுவான மீள்திரும்புகைக்கும், மீள்குடியமர்வுக்கும் உதவும் வகையில் பல்லின சமூகங்களை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துதல் அவசியமானது.

ஏனைய சமூகங்களின் இடர்களையும், நலன்களையும் கருத்திற் கொள்ளாது, தமிழ் சமூகம் தன்னிச்சையாகவும், மற்றைய சமூகங்களிலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கியும் தொடர்ந்து செயற்பட முடியாது. எந்தவொரு சமூகத்தினையும் பாதிக்கும் அநீதிகள், ஒடுக்குமுறைகள், வேற்றுமைப்படுத்தல்களினை நாம் அக்கறையுடன் அணுக வேண்டும். எல்லா மட்டங்களிலும் சமூகத்தின் பன்முகத்தன்மையினை எம்மத்தியில் ஊக்குவிப்பதற்கும், ஜனநாயகம், நீதி, சமத்துவம் என்பவற்றின் நலனை மையமாகக் கொண்ட பல்வேறு சமூகங்களையும் இணைத்துச் செயற்படுகின்ற ஓர் அரசியலினைப் பற்றிக் கொள்ளவும் நாம் எதுவித தயக்கமும் இன்றி உறுதி பூணுவோம்.